-
29th September 2016, 06:57 AM
#2471
Junior Member
Platinum Hubber
-
29th September 2016 06:57 AM
# ADS
Circuit advertisement
-
29th September 2016, 06:59 AM
#2472
Junior Member
Platinum Hubber
-
29th September 2016, 07:26 AM
#2473
Junior Member
Platinum Hubber
நண்பர் சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வணக்கம் .
அற்புதம், அருமை, அட்டகாசம், அசத்தல், ஆனந்தம் , ஆஹா இப்படி பல வார்த்தைகள் பிரயோகித்து , பாராட்டக்கூடிய அளவில் இருந்தது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் பேட்டி .
அதை மிக அழகாக தொகுத்து, பொறுமையுடன் பதிவிட்டு என் போன்ற பதிவாளர்கள் நெஞ்சை தொட்டதற்க்கு மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.
இந்த மாதிரி பதிவுகள் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழுக்கு மேன்மேலும்
பெருமை சேர்க்கக் கூடியது. ஆகவே, தகுந்த இடைவெளியில் , அவ்வப்போது
இதை போன்ற பதிவுகள் தொடரட்டும் .
ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.
-
29th September 2016, 10:30 AM
#2474
Junior Member
Senior Hubber
நண்பர்கள் ரவிச்சந்திரன், ஆர்.லோகநாதன் உங்கள் இருவரின் பாராட்டுகளுக்கும் நன்றி.
லோகநாதன் சார், புரட்சித் தலைவரின் படங்கள் டிவியில் ஒளிபரப்பாகும் விவரங்கள், பத்திரிகையில் வரும் செய்திகளை ஒன்றுவிடாமல் பதிவிடும் உங்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்.
-
29th September 2016, 10:36 AM
#2475
Junior Member
Senior Hubber
எம்ஜிஆர் இருக்கிறார்(22)::::
தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களை எவ்விதம் பாதுகாத்து, அவர்தம் தேவையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்பதிலும் எம்ஜிஆரே வழிகாட்டியாக இருக்கிறார்.
அவரிடம் பணிக்கு வந்த மேலாளர் ஆர்.எம்.வீரப்பனிலிருந்து, ஸ்டண்ட் நடிகர்கள் ராமகிருஷ்ணன், ஜஸ்டீன், குண்டுமணி உள்ளிட்ட துணை நடிகர்கள், சத்யா ஸ்டுடியாே பத்மநாபன்,குஞ்சப்பன், மேக்கப் பீதாம்பரம், கணக்கர் சாமி,ரத்தினம்,மாணிக்கம்,சின்னசாமி,காரோட்டி கதிரேசன்,கேசவன்,கிருஷ்ணன்,சமையல்காரர்கள், கதைவசனகர்த்தா கே.ரவீந்தர் என்று நூறு பேருக்கும் குறையாமல் இருபதாண்டு்க்கும் மேலாக தலைவர் மறையும் வரை பணிபுரிந்தார்கள்.
அவர்கள் வீட்டு விசேடங்களை தலைவரே பத்திரிகை அடித்து, முன் நின்று ஜானகி அம்மையாராேடு நடத்துவார். துக்கங்களுக்கு முதல் ஆளாக முன்நின்று இறுதிவரை உடனிருப்பார். எல்லாவற்றிற்குமான மொத்த செலவு அவருடையதாகத்தான் இருக்கும்.
வெளியூர் பயணங்களில் அவரது கவனம் தன் டிரைவர்கள், உதவியாளர்கள் பற்றியதாகவே இருக்கும். உறங்குவதற்கு முன், அவர்களுக்கு உணவு, ஓய்வெடுக்க அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பது அறிந்தே உறங்க செல்வார்.
பல ஆண்டுகளாக மாம்பலம் அலுவலகத்தில் காவல்காரராக மகேந்தர் என்னும் கூர்க்கா இருந்தார். ஒர் நாள் தலைவர் பின்வாசல் வழியாக இறங்கியவர் அவர் சமைத்துக்கொண்டிருப்பதை பார்த்து விட்டு தனது காரியதரிசி கேசவனை அழைத்து "இவர் ஏன் சமைக்கிறார்? ஓட்டலிருந்து தருவிப்பதில்லையா?" என்றார்.
கேசவன் "இரவிலே ஒரு சாப்பாடுதான் எடுப்பாேம். மதியம்தான் இரண்டு எடுத்து அவருக்கும் தருவாேம்"
கடுமையான காேபம் வந்தது தலைவருக்கு. "ஏன் இரண்டு சாப்பாடு எடுத்தால் ராமச்சந்திரன் ஏழையாகி விடுவானா? உழைப்பவன் வயித்துக்கு வஞ்சகமில்லாமே பாத்துக்குங்க"
குஞ்சப்பனை அழைத்தவர் அந்த கூர்க்காவிற்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்டார். 150ரூபாய் என்று பதில் வர "இதை வைத்து நேபாளத்தில் இருக்கும் அவர் பெண்டு, பிள்ளைகளை எப்படி காப்பாற்றுவார்?" முன்னூறா போட்டுக்காெடுங்க. இந்த மாதிரி வேலை செய்றவருக்கு கொடுக்கிறதுல இருக்கிற புண்ணியம், பிச்சை காெடுக்கிறதுல இல்லே"
அந்த கூர்க்கா அவர் மறையும் வரை, அங்கேதான் பணிபுரிந்தார்.
நன்றி - அரிமா சந்திரசேகரன் எம். முகநூல் பக்கம்.
-
29th September 2016, 10:43 AM
#2476
Junior Member
Senior Hubber
எத்தனையோ தடைகளை சோதனைகளை சூழ்ச்சிகளை தாண்டிய புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இப்போது உடல் நலக் குறைவால் ஏற்பட்டுள்ள சோதனையையும் புரட்சித் தலைவரின் ஆசியோடு இப்படித் தாண்டி விடுவார்.
-
29th September 2016, 11:50 PM
#2477
Junior Member
Platinum Hubber
மாலை மலர் -29/09/2016
சென்னை மாநகரில் மற்ற அரங்குகளில் வெளியாவதாக , தினத்தந்தி நாளிதழில்
பிரசுரமான விளம்பரத்தின்படி வந்த செய்திகள் உண்மை அல்ல . நிறைய புதிய
படங்கள் வெளியாவதன் காரணமாக , அரங்குகள் கிடைப்பதில் மிகுந்த சிக்கல்
ஏற்பட்டதாக , விநியோகஸ்தர்கள் ரசிகர்களிடம் தெரிவித்தனர் . ஆகவே, கடைசி நேர மாறுதலின்படி , உரிமைக்குரல் மாத இதழ் , மற்றும் அனைத்து ரசிகர்கள்
சார்பாக , இன்றைய மாலை மலர் தினசரியில் சரியான விளம்பரம் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது என்பது பார்வையாளர்களின் கவனத்திற்கு.
-
29th September 2016, 11:56 PM
#2478
Junior Member
Platinum Hubber
மதுரை மாநகரில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் ,"ரிக்ஷாக்காரன் " , அலங்கார்
மற்றும் மீனாட்சி அரங்குகளில் வெளியாவதாக , மதுரை நண்பர் திரு. எஸ். குமார்
தகவல் தெரிவித்துள்ளார்.
-
30th September 2016, 12:05 AM
#2479
Junior Member
Platinum Hubber
வெள்ளி (30/09/2016) முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். (பேரறிஞர் அண்ணாவின் ) "இதயக்கனி " திரைப்படம் தினசரி 3 காட்சிகளில் திரைக்கு வருகிறது .
-
30th September 2016, 01:02 PM
#2480
Junior Member
Regular Hubber
Originally Posted by
puratchi nadigar mgr
மாலை மலர் -29/09/2016
சென்னை மாநகரில் மற்ற அரங்குகளில் வெளியாவதாக , தினத்தந்தி நாளிதழில்
பிரசுரமான விளம்பரத்தின்படி வந்த செய்திகள் உண்மை அல்ல . நிறைய புதிய
படங்கள் வெளியாவதன் காரணமாக , அரங்குகள் கிடைப்பதில் மிகுந்த சிக்கல்
ஏற்பட்டதாக , விநியோகஸ்தர்கள் ரசிகர்களிடம் தெரிவித்தனர் . ஆகவே, கடைசி நேர மாறுதலின்படி , உரிமைக்குரல் மாத இதழ் , மற்றும் அனைத்து ரசிகர்கள்
சார்பாக , இன்றைய மாலை மலர் தினசரியில் சரியான விளம்பரம் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது என்பது பார்வையாளர்களின் கவனத்திற்கு.
மக்கள் திலகத்தின் வெற்றிச் சித்திரம் ரிக்க்ஷாக்காரன் திரைப்படம் 45 வருடங்கள் கழித்து மறுபடியும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Bookmarks