-
10th September 2016, 11:02 PM
#2281
Junior Member
Platinum Hubber
-
10th September 2016 11:02 PM
# ADS
Circuit advertisement
-
10th September 2016, 11:04 PM
#2282
Junior Member
Platinum Hubber
-
10th September 2016, 11:05 PM
#2283
Junior Member
Platinum Hubber
-
11th September 2016, 11:48 AM
#2284
Junior Member
Senior Hubber
Originally Posted by
ravichandrran
எம்.ஜி.ஆருக்கு கர்நாடக இசையில் மிகுந்த ஈடுபாடு உண்டு என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதுமட்டுமல்ல கர்நாடக இசைக்கலைஞர்களை மேடையிலேயே கௌரவிப்பார், அதே போல் அவர்களிடம் அளவுகடந்த பாசமும் , அபரீதமான மரியாதையும் காட்டுவார்.ஒரு சில சமயங்களில் யாருக்குமே சொல்லாமல் கொள்ளாமல் கர்நாடக இசைக்கச்சேரிகளில் பின்னால் தனியே அமர்ந்து ரசித்து விட்டு வருவதுமுண்டு. ஒரு முறை எழுத்தாளர் எல்லார்வின் வீட்டுக் கல்யாணத்திற்க்குப் போயிருந்தார்.அப்போது மணமேடையில் லால்குடி ஜெயராமன் அவர்களின் வயலின் இசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்தது. தலைவர் பந்தலில் நுழைந்ததும் ஏற்பட்ட களேபரத்தில் கச்சேரியை கேட்கலாம் என ஆர்வத்தோடு வந்தவருக்கு பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. அதன் பின் எழுந்து சென்று விட்டார். ஆனால் கச்சேரி முடிவதற்குள் மேடையில் வயலின் வாசித்தவருக்கு ஒரு கடித உறை வந்து சேர்ந்தது உங்களது நயமான இசையை ஒரு ரசிகனாக இருந்து கேட்க வந்தேன். என்னால் கச்சேரியே பாதிக்கப்பட்டுவிட்டது அதனால் குறுக்கிட நேர்ந்ததற்க்கு மிகவும் மனம் வருந்துகிறேன் என்று கூறி எழுதி அனுப்பியிருந்தார். தலைவருடைய இத்தகைய பண்பு எத்தனை பேருக்கு உண்டு செய்த தவறை கூட ஒத்துக் கொள்ள மறுக்கும் இந்த காலத்தில் தான் செய்யவே செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் என்றால் அவர் பத்தரை மாற்றுத் தங்கம் தானே. மனிதராய் வந்த தெய்வம் அவர்.
தலைவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்திலிருந்து.
எம்.ஜி.ஆரின் இசைஞானம்
M.G.R. அபாரமான இசை ஞானம் உள்ளவர். இசையமைப்பாளர்களுக்கே சொல்லித் தரும் அளவுக்கு இசையில் புலமை உண்டு. மெல்லிசை மட்டுமின்றி கர்னாடக இசையிலும் அவருக்கு சிறந்த ஞானம் உண்டு.
நவரத்தினம் படத்தில் கர்னாடக இசையின் பெருமையை உணர்த்தும் வகையில் ஒரு பாடல் உண்டு. மேற்கத்திய, இந்துஸ்தானி, கர்னாடக இசை எல்லாம் கலந்து அந்தப் பாடல் இருக்கும். எம்.ஜி.ஆருக்காக பாலமுரளி கிருஷ்ணா பாடியிருப்பார். படத்தின் இசையமைப்பாளர் பிரபல வயலின் இசைக் கலைஞர் மறைந்த குன்னக்குடி வைத்தியநாதன். கர்னாடக இசையின் சிறப்பை விளக்கும் அந்தப் பாடல் படத்தில் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்பட்டதே எம்.ஜி.ஆர்தான்!
பெங்களூரில் படப்பிடிப்பு நடந்தபோது குன்னக்குடி வைத்தியநாதனிடம், மற்ற சங்கீதங்களுக்கு எல்லாம் அடிப்படையே நமது பாரம்பரியமான கர்னாடக இசைதான் என்பதை விளக்கும் வகையில் பாடல் அமைய வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார். புகழ் பெற்ற ஆங்கில இசைப் பாடலுக்குத் தகுந்த அல்லது அதோடு ஒத்திருக்கும் வகையில் ஒரு கீர்த்தனையை ஒப்பிட்டு காட்டினால் கர்னாடக சங்கீதத்தின் மதிப்பு புரியும் என்றும் சொல்லியிருக்கிறார்.
இவை கூட பெரிதல்ல, ஒரு ஆலோசனைதான். அடுத்து எம்.ஜி.ஆர். கூறியவை குன்னக்குடியை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது. மை ஃபேர் லேடி, சவுண்ட் ஆஃப் மியூசிக் ஆகிய ஆங்கிலப் படங்களில் இருந்து புகழ் பெற்ற பாடகர்கள் பாடிய பாடல்களைக் கூறி, அவற்றோடு ஒத்துப்போகும் தெலுங்கு கீர்த்தனைகளையும் எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார். அவரது இசையறிவைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டார் குன்னக்குடி வைத்திய நாதன். எம்.ஜி.ஆர். கூறிய பாடல்களும் கீர்த்தனைகளுமே படத்தில் இடம் பெற்றன. மேலும், படத்தில் அந்தக் காட்சியில் மிகவும் இயல்பாக தேர்ந்த கலைஞ ரைப் போல எம்.ஜி.ஆர். வீணை வாசித்தார் என்று குன்னக்குடி அளித்த பேட்டியில் பாராட்டினார்.
வீணை என்றில்லை, எம்.ஜி.ஆருக்கு இருந்த இசையறிவு காரணமாக பணம் படைத்தவன் படத்தில் அகார்டியன், கண்ணன் என் காதலன் படத்தில் பியானோ, ஒருதாய் மக்கள் படத்தில் கிடார் என்று பல படங்களில் பல வாத்தியங்களை எம்.ஜி.ஆர். மிகவும் நுட்பமாக கையாண்டிருப்பார். எங்கள் தங்கம் படத்தில் பாகவதரைப் போல வேடமிட்டு கதாகாலட்சேபமே செய்வார். பாடுவது போல நடிப்பதைவிட பாடகரின் பேச்சுக்கு வாயசைத்து நடிப்பது மிகவும் கடினம். இப்போது போல தொழில்நுட்பம் முன்னேறாத அந்தக் காலத்தில் கதாகாலட்சேப காட்சியில், டி.எம்.சவுந்தரராஜனின் பேச்சுக்கு எம்.ஜி.ஆரின் வாயசைப்பு இம்மியும் பிசகாது.
கர்னாடக இசை மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக இசைக் கலைஞர்களை எம்.ஜி.ஆர். மிகவும் மதிப்பார். அவர்களுக்கு உரிய மரியாதை அளித்து கவுரவிப்பார். கர்னாடக இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடிக்கும். முதல்வராக இருந்த போது ஒருமுறை எம்.எஸ். கச்சேரியை முழுவதும் இருந்து ரசித்து கேட்டார். பல கலைஞர்களின் கச்சேரிகளை எம்.ஜி.ஆர். இதுபோல கேட்டிருக்கிறார்.
மன்னாதி மன்னன் படத்தில் இடம்பெற்ற ஆடாத மனமும் உண்டோ?... பாடல் தேவகானமாய் ஒலிக் கும். கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனின் குருவும் நடிகை ஸ்ரீவித்யாவின் தாயாருமான மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்தகுமாரியும், டி.எம்.சவுந்தரராஜனும் பாடிய லதாங்கி ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். ஒரு இடத்தில் தனக்கு முன்னே அரைவட்டமாக சுற்றி வைக்கப்பட்டிருக்கும் தபேலா தரங்கை சுருதிக்கு ஏற்ப எம்.ஜி.ஆர். வாசித்து, கடைசியில் வலது கையை மடக்கி இடது தோள் உயரத்துக்கு சிரித்தபடியே ஸ்டைலாக உயர்த்துவது கண்கொள்ளாக் காட்சி.
நாட்டியப் பேரொளி பத்மினியின் ஆடலுக்கு ஏற்ப, சிறிய வடிவில் இருக்கும் ஜால்ராவை (இதை தாளம் என்று கூறுவார்கள்) எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும் தேவை யான ஒலி அளவுக்கேற்ப தேய்த்து வாசிக்கும் அழகே அழகு. இன் னொரு இடத்தில் தபேலா தரங்கை வாசித்துவிட்டு ஷாட்டை கட் செய்யா மல், வாடாத மலர் போலும் விழிப் பார்வையில்
என்ற வரிகளை மிகச் சரியாக டைமிங் தவறாமல் ஆரம்பித்து எம்.ஜி.ஆர். வாயசைப்பார்.
இதழ் கொஞ்சும் கனிய முதை மிஞ்சும் குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே
என்ற வரி களில் கடைசி எழுத்தான வேயின் நீட்சியாக வரும் ஏ..ஏ.. என்பதில் டி.எம்.எஸ். குரல் மேல் ஸ்தாயியிலும் கீழ் ஸ்தாயியிலும் ஒலிக்கும்போது அதற்கேற்றபடி, முகத்தை உயர்த்தியும் தாழ்த்தியும் பாடுவது போல எம்.ஜி.ஆர். நடிப்பது அற்புதம்! இந்தப் பாடலை இப்போது பார்த்தாலும் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். லாங் ஷாட்டில் காட்டும்போது எம்.ஜி.ஆரின் பாதம் தரையில் தாளமிடும். என்ன ஒரு ஈடுபாடு இருந்தால் இப்படி செய்திருப்பார் என்று நினைக்கும்போது பிரமிக்காமல் இருக்கவே முடியாது.
பாடலில்தான் இப்படி அருமையாக நடித்திருக்கிறார் என்றால், பாடல் காட்சி முடிந்த பின்னும் தனக்கே உரிய நுணுக்கமான நடிப்பை எம்.ஜி.ஆர். வெளிப்படுத்தியிருப்பார். நாமே கூட, காலையில் ஒரு பாடலைக் கேட்டு அது மனதில் பதிந்துவிட்டால் அன்று முழுவதும் அதையே முணுமுணுத்துக் கொண்டிருப்போம். இதை ஆங்கிலத்தில் earworm என்று சொல்வார்கள். பாடல் காட்சி முடிந்த பின் அடுத்து வரும் காட்சியில் நடந்து வரும்போது, ஆடாத மனமும் உண்டோ?... என்று சன்னமான குரலில் எம்.ஜி.ஆர். பாடிக்கொண்டே வருவார். பாடல் எப்படி தன்னை ஈர்த்துள்ளது என்பதை இதன் மூலம் காட்டியிருப்பார். படத்தில் மட்டுமல்ல; இசை ஞானத்திலும் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்.!
இந்தப் பாடலில் எம்.ஜி.ஆருக்கென்றே கவிஞர் மருதகாசியால் வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள் இவை:
நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கொண்ட உமைக் கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ?...
நன்றி - தி இந்து
Last edited by SUNDARA PANDIYAN; 11th September 2016 at 12:06 PM.
-
11th September 2016, 11:58 AM
#2285
Junior Member
Senior Hubber
நன்றி - மயில்ராஜ் முகநூல் பக்கம்
நான்கு நாட்கள் முன் ( செவ்வாய் கிழமை ) ஒரு இனிய அனுபவம்...
காலை 7 மணி சுமாருக்கு... மதுரை... தமிழ்ச் சங்கம் அருகில்... சில கல்லூரி மாணவமணிகளின் நாடித்துடிப்பை அறிந்து கொள்ள சென்றிருந்தேன்... பொன்மனம் பண்பலை தொடர்பாக...
போக்குவரத்து இன்னும் நெருக்கடி ஆகாத அந்த நேரத்தில் 65 - 70 வயதில் ஒரு அம்மா கையில் கூடையுடன்... சாலையை 2 - 3 முறை நான் பார்க்கவே கடந்து கொண்டு இருந்தார்...
ஏதோ தேடுகிறார் அது மட்டும் தெரியுது...?! ஆனால் எதை...?
4 - ஆம் முறை சாலையை கடக்க முயன்ற அவரை நான் தடுத்தேன்... இனி... நானும் அந்த அம்மாவும்...
நான் : என்னம்மா என்ன தேடுறீங்க... ரோட்டை 3 வாட்டி கிராஸ்
பண்ணீட்டீங்க... அட்ரஸ் ஏதும் மறந்துடுச்சா...?
அம்மா : இல்ல கண்ணு... இங்கன... ஒரு எம்.சி.ஆரு படம் இருந்ததா
ஞாபகம்... அதான்...
நான் : ( மெய் சிலிர்க்க... ) என்ன விஷயம் அம்மா... என்றேன்...
அம்மா : நான் பூக்காரி ராசா...
நான் : தெரியுது... கூடைய பாத்தா... நீங்க விவரத்தை சொல்லுங்க...
அம்மா : இந்த ரோட்ல 6 - 7 வருசத்துக்கு முன்ன பூ வித்தேன்... இங்கன
ஒரு எம்.சி.ஆரு படம்...
நான் : அது இருக்கு ... நான் சொல்லுறேன்... நீங்க ஏன் அந்த படைத்த
தேடுறீங்க...
அம்மா : நான் எப்போவுமே மொத பூவ... அந்த மவராசனுக்கு
போட்டுட்டு தான் பொழப்ப பாப்பேன்... இங்கன தான் பாத்தா
மாதிரி இருக்கு மட்டுபட மாட்டேங்குது...
நான் : அம்மா... இங்கே ஒரு பாலம் கட்டுனதால உங்களுக்கு இப்போ
தெரியல... "நம்ம தலைவர்" படம் இங்கன இல்ல... இதே ரோட்ல
அந்த கடைசியில இருக்கு... நீங்க மதுரா கோட்ஸ் வழியா வந்து
இருப்பீங்க... அதான் இப்போ கொழப்பம்... நீங்க இதே ரோட்ல
இன்னும் கொஞ்சம் போங்க... ரைட் சைடுல "நம்ம தலைவர்"
படம் இருக்கு...
நான் "தலைவர்" என ரெண்டு தரம் சொல்லவும்... அந்த அம்மா முகத்தில் பூரிப்பை பார்க்கவேண்டுமே...?!
என் முகம் தடவி... "அந்த மவராசன தலைவர்னு சொல்ற பாரு... அதான் என்னய பாத்து என்னமோ ஏதோனு உதவி செய்யணும்னு தோணி இருக்கு... எத்தன பேரு போறாங்க யாராவது வந்து ஓதவணும்னு தோணுச்சா... அதான்... அதான்..." - என அவராகவே பேசிக்கொண்டு போனார்...
உண்மையில்... இப்போதும் இந்த விபரத்தை உங்களுடன் பகிரும் போதே... என்னால் என் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை...
அதுதான்... நம் "மக்கள் திலகம் ஒரு மஹா சக்தி" என்பது...
இன்னும் இன்னும் எங்கெங்கோ நிறைய உண்மையான மக்கள் திலகத்தின் பக்தர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...
- நெகிழ்ச்சியின் உச்சத்தில் ... மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்
-
12th September 2016, 09:26 AM
#2286
Junior Member
Diamond Hubber
Makkalthilagam, Emperor of Emperors----- Cinema Field All ways ... Digital Versions "Rickshawkaaran". may be screening coming September 30 th. Onwards...
-
12th September 2016, 01:35 PM
#2287
Junior Member
Senior Hubber
11/9/2016 (நேற்று தினமலர் நாளிதழி்ல் வாசகர் கடிதம் பகுதியில் வெளியான கடிதம்
-
12th September 2016, 01:41 PM
#2288
Junior Member
Senior Hubber
காவிரி நீரை நீதி மூலம் போராடி பெற்றுத் தந்த புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி.
தமிழ் மக்கள் தங்கள் உரிமையை காக்க தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பின்னால் ஓரணியில் திரளுவோம்.
-
12th September 2016, 11:54 PM
#2289
Junior Member
Platinum Hubber
சென்னை சரவணாவில் 02/09/2016 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"தாழம்பூ "தினசரி 3 காட்சிகளில் வெளியாகி வெற்றி நடை போட்டது.
இந்த ஆண்டில் (2016) இணைந்த 14 வது எம்.ஜி.ஆர். வாரம் .
கடந்த ஆண்டில் (2015) சரவணாவில் 06/03/2015 முதல் திரைக்கு வந்து ஒரு வாரம்
தினசரி 3 காட்சிகள் நடைபெற்றது .
-
12th September 2016, 11:55 PM
#2290
Junior Member
Platinum Hubber
09/09/2016 முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா ) திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த "ஆசை முகம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
Bookmarks