-
20th August 2016, 06:32 AM
#1851
Junior Member
Platinum Hubber
யாருக்கு வெற்றி?
நாடோடி மன்னன் படத்தின் வெற்றியை ஒட்டி ஒரு மலரைக் கொணரவேண்டுமென்றும், அதில் நானும் என் மனத்தின் அடித்தளத்தில் வைத்துப் பாதுகாக்கும் உண்மைகளில் சிலவற்றை எழுதவேண்டு மென்றும் கூறப்பட்ட நேரத்தில் , எழுதி விட்டால் போகிறது என்று தான் எண்ணினேன் அலட்சியமாக.
ஆனால் எழுத வேண்டுமென்று முடிவு செய்து பேனாவையும் கையில் எடுத்த பிறகுதான் நான் ஏற்றுக்கொண்ட (எழுதும்) பொறுப்பு எனக்குத் தொல்லையைத்தான் தரும்,வெற்றியைத் தராது என்று அறிந்தேன், ஏனெனில் எதை எழுதலாம், எதை மறைத்துவிடலாம், யார் யார் சம்பந்தப்பட்டதை வெளிவிடலாம், நீக்கிவிடலாம், என்ற கேள்விகளுக்கு விடை காண முடியாமல் குழப்பமடைந்த போது தான் மேலே சொன்ன உண்மை புரிந்தது. ஆயினும் பொறுப்பேற்ற பின் எப்படிப் பின்னிடுவது
.
யாருக்கும் மனச் சோர்வோ கோபமோ வருத்தமோ வெறுப்போ தோன்றாதபடி எழுதுவது என்று முடிவுக்கு வந்து எழுத ஆரம்பித்தேன்.
தலைப்பு ஏதாவதொன்று கொடுத்தாக வேண்டுமே?
பொங்கியெழும் அலைகள் போலப் பல நினைவுகள் ஒன்றோடொன்று தொடர்ந்து பின்னியவாறு எழுந்தன.
ஆம் !
படமெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் பலரால் தொல்லை ஏற்பட்ட போது அவர்களிடம், படம் முடியட்டும், உங்களைப்பற்றியெல்லாம் நான் படமெடுத்த கதை என்ற தலைப்பில் எழுதுகிறேன் என்று வேடிக்கையாகச் சொன்னேன்.
அது நினைவிற்கு வந்தது. ஆகவே நான் படமெடுத்த கதை என்ற தலைப்பிலேயே எழுதிவிடலாமா என்று யோசித்தேன். அது சரியாகப்படவில்லை.
வெற்றி மலருக்கு எழுதச் சொன்னால் , நடிகன் குரலில் வெளி வரவேண்டிய எனது கதையை (கதையென்றதும் கற்பனை என்று எண்ணிவிடாதீர்கள் ! ) இதில் வெளியிடுவது சரியல்ல என்று தோன்றிற்று.
பல தலைப்பு வேண்டுமே?
பலமான சிந்தனைப் போராட்டத்திற்குப் பின் கடைசியாக என் மனத்திற்குத் திருப்தி அளித்த ஒரு தலைப்பு கிடைத்தது
.
யாருக்கு வெற்றி என்பதுதான் அது.
நாடோடி மன்னனுக்கு வெற்றி என்கிறார்கள்.
நாடோடி மன்னன் படத்திற்கு வெற்றி
கதை அமைப்பிற்கு வெற்றி
வசன கர்த்தாவுக்கு வெற்றி
பாடலாசிரியர்களுக்கு வெற்றி
இசை அமைப்பாளர்களுக்கு வெற்றி
ஒளிப்பதிவாளர்களுக்கு
ஒலிப்பதிவாளர்களுக்கு-
ஒப்பனையாளர்களுக்கு-
உடை அமைப்பாளர்களுக்கு
வெட்டி ஒட்டி இணைப்பவர்களுக்கு (எடிட்டிங்)
மற்ற தொழிலாளர்களுக்கு
நடிகர், நடிகைகளுக்கு
இயக்குநர்க்கு
அடிப்படைக் கொள்கைக்கு
இப்படிப் பலரும் சொல்லுகிறார்கள், எழுதுகிறார்கள்.
இவைகளைப் பற்றி நான் என்ன சொல்வது என்று சிந்தித்த போதுதான் யாருக்கு வெற்றி? என்று தலைப்பில் எழுதுவது மிகவும் சரியானது என்ற முடிவிற்கு வந்தேன்.
நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம்
-
20th August 2016 06:32 AM
# ADS
Circuit advertisement
-
20th August 2016, 12:20 PM
#1852
Junior Member
Senior Hubber
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கும் சிந்துவுக்கு வாழ்த்துக்கள்.
புரட்சித் தலைவர் முதல்வராக இருந்தபோது விளையாட்டுத்துறையை ஊக்கப்படுத்தினார். விளையாட்டு வீரர்களை கவுரவப்படுத்தினார். 1980-ம் ஆண்டில் முகமது அலி முதல் அமைச்சர் புரட்சித் தலைவர் அழைப்பின்பேரில் சென்னை வந்து குத்துச் சண்டை போட்டிகளில் கலந்து கொண்டார். அவரை புரட்சித் தலைவர் கவுரவப்படுத்தியதுடன், அவர் விருப்பப்பட்ட மீன் குழம்பு விருந்தளித்து திக்குமுக்காடச் செய்துவிட்டார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
http://tamil.oneindia.com/news/tamil...ai-255247.html
முகமது அலிக்கு மீன் கறி விருந்து கொடுத்து நெகிழ வைத்த எம்.ஜி.ஆர்
சென்னை : மறைந்த குத்துச்சண்டை பிதாமகன் 'தி கிரேட்டஸ்ட்' முகமது அலி தமிழகத்திற்கு வந்த போது அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மீன் கறி குழம்புடன் விருந்து கொடுத்து அசத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்னைக் கவர்ந்த குத்துச் சண்டை வீரர் அலி மட்டும்தான் என்று சொல்லியிருந்த, அன்றைய தமிழக முதல்வரும், குத்துச் சண்டைப் பிரியருமான எம்.ஜி.ஆரின் அழைப்பின் பேரில் 1980ம் ஆண்டு சென்னைக்கு வந்திருந்தார் அலி. Muhammad Ali taste MGR house fish curry in Chennai ஆரவாரமாக நடைபெற்ற போட்டிகளின் முடிவில், முகமது அலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர் எங்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் என அலியிடம் கேட்டாராம். அதற்கு முகமது அலி, சென்னையில் மீன் சாப்பாடு சுவையாக இருக்கும் என்கிறார்களேஅது எங்கு கிடைக்கும்? என்றாராம்.
வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு வயிறு நிறைய உணவு கொடுத்து அனுப்பும் வள்ளல் தன்மை கொண்ட எம்.ஜி.ஆரிடம், தான் விரும்பும் முகமது அலி கேட்டால் சும்மா விடுவாரா...அடுத்த நொடியே ராமாவரம் தோட்டத்திற்கு சுட சுட விருந்து தயாரானது. ராமாவரம் தோட்டத்தில் அசைவ உணவு சமைப்பதில் தேர்ந்தவரான மணி என்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஜானகி அம்மையாரின் மேற்பார்வையில் சாதம், மீன் குழம்பு, வஞ்சிரம் மீன் வறுவல், வேகவைத்த முட்டை, இறால் ஃப்ரை, சிக்கன் வறுவல், உடன் பாயாசம் என விதவிதமான உணவுவகைகள் தயார் செய்யப்பட்டு முகமது அலி தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.
உணவு சாப்பிட்டு முடித்த பின்னர் மீன் சாப்பாடு எப்படி இருந்தது என எம்.ஜி.ஆர் கேட்டாராம். அதற்கு முகமது அலி, 'எனக்கு உலகில் எங்கு சென்றாலும் விதவிதமான உணவைத்தர ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அது என்னைக்கவர்வதற்கானதாக இருக்கும். நீங்கள் அளித்த விருந்தில் உணவில் சுவையை விட கூடுதலாக இருந்தது உங்கள் அன்புதான் என்று நெகிழ்வாக கூறினாராம் முகமது அலி. இதைக் கேட்டு எம்.ஜி.ஆர் மகிழ்ச்சியடைந்தாராம். முகமது அலியின் சென்னை விசிட் பற்றி இன்றைக்கும் பலர் நினைவு கூறுகின்றனர் திகட்டத் திகட்ட மீன் குழம்பு சாப்பாடு சாப்பிட்டு சென்னை மக்களிடமும், புரட்சித்தலைவரிடமும் இருந்து அன்போடு பிரியாவிடை பெற்ற முகமது அலி, இன்று உலக மக்கள் அனைவரிடம் இருந்தும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு விட்டார்.
-
20th August 2016, 04:32 PM
#1853
Junior Member
Platinum Hubber
நாளை (21/08/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் "பல்லாண்டு வாழ்க " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
-
20th August 2016, 04:34 PM
#1854
Junior Member
Platinum Hubber
நாளை (21/08/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வழங்கும் "ரிக் ஷாக் காரன் "ஒளிபரப்பாக உள்ளது .
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
-
20th August 2016, 04:48 PM
#1855
Junior Member
Platinum Hubber
-
20th August 2016, 04:56 PM
#1856
Junior Member
Platinum Hubber
-
20th August 2016, 04:57 PM
#1857
Junior Member
Platinum Hubber
-
20th August 2016, 05:07 PM
#1858
Junior Member
Platinum Hubber
-
20th August 2016, 07:52 PM
#1859
Junior Member
Platinum Hubber
-
20th August 2016, 07:58 PM
#1860
Junior Member
Platinum Hubber
தற்போது முரசு டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "நவரத்தினம் " திரைப்படம்
ஒளிபரப்பாகி வருகிறது .
Bookmarks