Page 24 of 400 FirstFirst ... 1422232425263474124 ... LastLast
Results 231 to 240 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #231
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எம் ஜி ஆர் இழிவுபடுத்தியோ அவர் புகழுக்கு கழங்கம் விழவிக்க நினைத்தாலோ அவர்கள் அழிவு அவர்களே தீர்மானித்தது போல்

    வாலியை எதிர்த்தால் எதிர்பவரின் பாதிபலம் வாலி க்கு சென்று விடும் என ஒரு புராணக்கதையுண்டு

    எம் ஜி ஆர் புகழை எதிர்த்தால் எதிராளியின் முழுபலமும் எம் ஜி ஆர் பக்கம் போய்விடும் என்றுஒரு எம் ஜி ஆர் புராணகதை உருவாகிறது

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli, mgrbaskaran liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #232
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெற்றி என்றாலும். கணிசமான சரிவை காட்டி எச்சரித்தபடியே மகுடத்தை தந்திருக்கிறது மக்கள் தீர்ப்பு..

    எம்ஜிஆர் மறைந்து 28 ஆண்டுகளாகியும் இன்றுவரை அவரும் அவரின் இரட்டை இலை சின்னமும் காட்டி வரும் ஆதிக்கம் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு அதிசயமான பக்கம்..

    மக்கள் மத்தியில் எப்போதுமே நேரடியாக நடமாடி மனதில் அகற்றமுடியாதபடி ஆழ்ந்து ஊடுறுவியதுதான் இதற்கு முக்கிய காரணம்.. சொத்துக்களை வாங்கிகுவித்திருந் தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது...

    மக்களுக்காக நான் என்று சொல்பவர், நிஜ தவ வாழ்வுக்கு வந்து ஆட்சி செய்வார் என்று நம்புவோம்...வேற வழி.(!)

  5. Thanks orodizli thanked for this post
    Likes mgrbaskaran liked this post
  6. #233
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சரித்திர சாதனை!

    இதுவரை, தமிழகத்தில் வேறு எந்தக் கட்சியும் செய்திராத அளவிலான விளம்பரங்கள் தி.மு.க.வால் வெளியிடப்பட்டன. அ.தி.மு.க. மீது கடுமையான அதிருப்தி நிலவுவது போலவும், மக்கள் தி.மு.க.வை மாற்றாகக் கருதி அதற்கு ஆதரவு தரும் மனோநிலையில் இருப்பது போலவும் ஊடகங்களின் மூலம் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியும், பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமாரும் கையாண்டதைப் போன்ற கார்ப்பரேட் பாணித் தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. ஈடுபட்டது. இருந்தும்கூட, அந்தப் பரப்புரைகள் மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன.


    மதுவிலக்கை அமல்படுத்துவது, செல்லிடப்பேசி, விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட பல இலவச அறிவிப்புகள் என்று தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தும்கூட தி.மு.க.வால் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதற்குக் காரணம், அடிப்படையில் அந்தக் கட்சிக்கு அ.தி.மு.க.வைப் போலத் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெறும் அளவிலான மக்கள் செல்வாக்கு கிடையாது என்பதுதான்.


    கடந்த அரை நூற்றாண்டு காலத்தில், வலுவான கூட்டணி பலமோ, சூழலோ இல்லாமல் தி.மு.க.வால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடிந்ததே இல்லை என்பதுதான் வரலாற்று உண்மை. 1967-இல் கொள்கையில் ஒன்றோடு ஒன்று முரண்பட்ட எட்டு கட்சிகளின் கூட்டணியும், 1971-இல் இந்திரா ஆதரவு அலையும், 1989-இல் அ.தி.மு.க. ஜெ., ஜா. என்று பிளவுபட்டிருந்ததாலும், 1996-இல் மூப்பனாரால் த.மா.கா. தொடங்கப்பட்டு அதனுடன் தி.மு.க. செய்துகொண்ட கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு கிடைத்ததாலும்தான் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. இந்தக் காரணிகள் இல்லாமல் இருந்திருந்தால், அந்தத் தேர்தல்களில் தி.மு.க. ஆட்சி அமைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.


    2006-இல் அப்போது மத்திய ஆட்சியில் இருந்த பலமான காங்கிரஸ், பா.ம.க., இடதுசாரிகள், முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் என்று பலமான கூட்டணி இருந்துமேகூட, 96 இடங்களில் மட்டுமே தி.மு.க. வெற்றிபெற்று "மைனாரிட்டி' ஆட்சி அமைக்க முடிந்தது எனும்போது, நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்கு வங்கியை முற்றிலும் இழந்துவிட்ட காங்கிரûஸ முக்கியக் கூட்டணிக் கட்சியாகக் கொண்ட தி.மு.க. வெற்றி பெறாதது வியப்பளிக்கவில்லை. அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியும் ஆதரவு பலமும்தான் இந்த முறை வெற்றியை நிர்ணயித்திருக்கிறது.


    232 தொகுதிகளில் 130 தொகுதிகளில் 10,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசம் பெற்று வெற்றியடைந்திருக்கிறார்கள். அதில் 80 பேர் அ.தி.மு.க. வேட்பாளர்கள். 5000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் 28 பேர். 2000 வாக்குகளுக்குக் குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் 20 பேர் மட்டுமே. இதிலிருந்து, மக்கள் தெளிவாகவும், நிர்ணாயகமாகவும் தீர்ப்பளித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.


    தி.மு.க. பலமான எதிர்க்கட்சியாக 89 இடங்களை வென்றதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. தனித்துப் போட்டி என்று அறிவித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளையும், தே.மு.தி.க. தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியையும் மக்கள் மாற்றாக ஏற்றுக்கொள்ளவில்லை. அ.தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் அனைத்தும் வேறு மாற்று இல்லாததால் தி.மு.க.வுக்குக் கிடைத்ததுதான் தி.மு.க. 89 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சிகள் 9 இடங்களையும் வென்றதற்குக் காரணம். இன்னொரு பலமான மாற்று இருந்திருந்தால் தி.மு.க. அணி இந்த அளவுக்கு இடங்களைப் பிடித்திருப்பது சாத்தியமில்லை.


    ஜெயலலிதா வேண்டாம் என்று கருதும் மாற்றத்தை விரும்புகிறவர்களைப் பொருத்தவரை, கருணாநிதி "வேண்டவே வேண்டாம்' என்கிற மனோநிலையில், ஒருவேளை தி.மு.க. மு.க. ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால், அது அந்த இளைஞர்களைத் தி.மு.க.வை ஆதரிக்கத் தூண்டியிருக்கக் கூடும். 93 வயதில் தான்தான் முதல்வர் என்றும், தனக்கு இயற்கையாக பாதிப்பு நிகழ்ந்தால்தான் தனது மகன் மு.க. ஸ்டாலின் முதல்வர் என்றும் கருணாநிதி கூறியதைக் கேட்டுப் பலரும் முகம் சுளித்தனர்.


    தன்னை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து வலம் வந்த அனைவரையும் வாக்காளர்கள் நிராகரித்து விட்டிருப்பது தேர்தல் முடிவுகளின் "ஹைலைட்!' தி.மு.க. மட்டுமல்ல, மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளுக்கும், பா.ம.க.வுக்கும் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய சறுக்கலாகவும் பின்னடைவாகவும் அமைந்திருக்கிறது. அதேநேரத்தில், அவரவர் உயரம் எவ்வளவு என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறது.


    ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.தான் தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாகவும், அதற்கு மாற்று சக்தியாக வேண்டுமென்றால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்தால் மட்டுமே சாத்தியம் என்பதையும் இந்தத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.


    ஐந்தாண்டுகால ஆட்சியின் மீது பொதுமக்களுக்கு நியாயமாக ஏற்படும் சலிப்பையும், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பிரதிபலிக்கக்கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு, பலமான கூட்டணி அமைக்க முற்படுவதுதான் வேறொருவராக இருந்தால் கையாளக்கூடிய தேர்தல் ராஜதந்திரம். ஆனால், துணிந்து தனித்துப் போட்டி என்று அறிவித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 134 இடங்களில் வென்று ஆட்சி அமைப்பது என்பது தனிப்பட்ட முறையில் முதல்வர் ஜெயலலிதாவின் சரித்திர சாதனை.


    ஆறாவது முறையாகத் தமிழக முதல்வராகப் பதவி ஏற்கும் வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அதுமட்டுமல்ல, காமராஜருக்கும், எம்.ஜி.ஆருக்கும் பிறகு இரண்டாவது முறையும் தொடர்ந்து வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த பெருமைக்கும் உரியவராகிறார்.


    ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் இந்த வெற்றிக்கு இன்னொரு சிறப்பும், முக்கியத்துவமும் உண்டு. தனது தலைவராகவும், இதய தெய்வமாகவும் முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டிருக்கும் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நடக்கும் வேளையில், இந்த வெற்றிக் கனியை அவருக்குக் காணிக்கையாக்கி இருக்கிறார் என்பதுதான் அது. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்காமல் போயிருந்தால் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுமா என்பது சந்தேகம்தான்.


    "மக்களால் நான், மக்களுக்காக நான்' என்ற கோஷத்துடன் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்கிற முதல்வர் ஜெயலலிதாவின் துணிவான முடிவும், அவரது அசாத்திய தன்னம்பிக்கையும் மக்களின் நாடித்துடிப்பைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கும் அவரது புரிதலை வெளிப்படுத்துகிறது. அவர் தமிழக மக்கள்மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகவில்லை. ஆறாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் ஜெயலலிதாவுக்கு "தினமணி' நாளிதழின் சார்பில் வாழ்த்துகள்!




  7. Thanks orodizli thanked for this post
    Likes orodizli, mgrbaskaran, oygateedat liked this post
  8. #234
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் நம்மோடு வாழ்கிறார் .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் இன்னமும் தன்னுடைய சாதனைகளை தொடர்கிறார் .

    க்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் மக்கள் செல்வாக்கு , இரட்டை இலை சின்னத்தின் மகிமை ,
    இன்று அதிமுகவை அரியணை ஏற்றியுள்ளது .2011 சட்ட மன்ற தேர்தல் , 2014 நாடாளுமன்ற தேர்தல் , 2016 சட்ட மன்ற தேர்தல் என்று ஹாட்ரிக் வெற்றியை தந்துள்ளார்.

    மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் , செல்வாக்கு , சாதனைகள் யாராலும் வெல்ல முடியாது .அவருக்கு நிகர் அவரே . அவரின் பெயர் , அரசியல் செல்வாக்கு , புகழ் மூன்றையும் முன்னிலை படுத்தியதன் விளைவாகத்தான் இன்று அதிமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகிலும் சரி , அரசியலிலும் சரி நிகழ்த்திய இமாலய வெற்றிகள் , சாதனைகள் எவராலும் ஈடு செய்ய முடியாத வரலாற்று நிகழ்வுகள் . எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆரே .

  9. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  10. #235
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    மக்கள் திலகம் எம்ஜிஆர் நம்மோடு வாழ்கிறார் .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் இன்னமும் தன்னுடைய சாதனைகளை தொடர்கிறார் .

    க்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் மக்கள் செல்வாக்கு , இரட்டை இலை சின்னத்தின் மகிமை ,
    இன்று அதிமுகவை அரியணை ஏற்றியுள்ளது .2011 சட்ட மன்ற தேர்தல் , 2014 நாடாளுமன்ற தேர்தல் , 2016 சட்ட மன்ற தேர்தல் என்று ஹாட்ரிக் வெற்றியை தந்துள்ளார்.

    மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் , செல்வாக்கு , சாதனைகள் யாராலும் வெல்ல முடியாது .அவருக்கு நிகர் அவரே . அவரின் பெயர் , அரசியல் செல்வாக்கு , புகழ் மூன்றையும் முன்னிலை படுத்தியதன் விளைவாகத்தான் இன்று அதிமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகிலும் சரி , அரசியலிலும் சரி நிகழ்த்திய இமாலய வெற்றிகள் , சாதனைகள் எவராலும் ஈடு செய்ய முடியாத வரலாற்று நிகழ்வுகள் . எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆரே .

    திருசெந்தூரில் சரத்குமார் தோல்வி.

    உளுந்தூர் பேட்டை யில் விஜயகாந்த் டெபொசிட் இழந்தார்.

    எல்லா நடிகர்களும் புரட்சி தலைவர் ஆக முடியாது.

    மறைந்தாலும் மக்கள் செல்வாக்கு உள்ள நடிகர் புரட்சி தலைவர் மட்டுமே.

  11. Likes orodizli, mgrbaskaran liked this post
  12. #236
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  13. Likes orodizli, mgrbaskaran liked this post
  14. #237
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு பிழைத்தவர் எல்லாம் போனாங்க

  15. Thanks orodizli thanked for this post
  16. #238
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    20.5.1973

    வெற்றி சரித்திரம்
    இந்திய அரசியல் வரலாற்றில் இப்படியொரு
    இடைத்தேர்தலை யாரும்
    கண்டிருக்க முடியாது என்று சொல்லத்தக்க
    அளவில் நடைபெற்றதுதான்
    1973 -ம்ஆண்டு தமிழகம் சந்தித்த
    திண்டுக்கல் இடைத்தேர்தல் !




    அண்ணா தி மு க .தொடங்கிய ஆறு மாத காலத்துக்குள் 1973-ம ஆண்டு
    மே மாதம் நடைபெற்ற அந்த தேர்தலில் நான்கு முனைப் போட்டியில்
    அண்ணா தி மு க மகாத்தான வெற்றி பெற்றது எம்ஜியாருக்குள்ள
    மக்கள் சக்தியின் மகாத்தான ஆதரவை உலகுக்கு பறை சாற்றியது
    அந்த இடைத்தேர்தல்


    மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த அன்றைய பிரதமர் இந்திராகாந்தி
    தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ்
    மாநிலத்தில் ஆளும் கட்சியாக
    இருந்த திராவிடமுன்னேற்றகழகம் தமிழகத்தின் தனிப்பெரும்
    தலைவராக திகழ்ந்து புகழ்பெற்ற
    பெருந்தலைவர் காமராசர் தலைமையிலான
    ஸ்தாபன காங்கிரஸ் என்ற மும்முனை தாக்குதலை
    எம் ஜி ஆர் தலைமையிலான
    அண்ணா தி .மு .க .இடது சாரிகளின் துணையோடு வெற்றிகண்டது

    இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தி .மு .க மற்றும் இரண்டு காங்கிரஸ் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து
    வீடு வீடாக தெருத்தெருவாக ஒரு சுவரைக்கூட விட்டு வைக்காமல்
    தங்களது சின்னத்தை வரைந்து விட்டனர் .போதாக்குறைக்கு
    மார்க்சிஸ்ட்கமயுனிஸ்ட் கட்சியும் தமது பங்குக்கு
    தோழர் சங்கரையாவை வேட்பாளராக
    அறிவித்து அவர்களின் சின்னத்தையும் வரைய தொடங்கிவிட்டனர் .அதன் பின்னர் தான் ,பி .இராம மூர்த்தியுடன் எம் .ஜி .ஆர் இந்திய கம்யுனிஸ்ட் தலைவராக இருந்த எம் .கல்யாண சுந்தரமும் பேசி
    அ.தி .மு க .வுக்கு ஆதரவு கேட்டனர் .சி .பி. எம் .வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டார் .
    தேர்தலுக்கு மூன்று வாரங்கள் இருந்த நிலையில் தான் அண்ணா தி.மு.க.
    வேட்பாளராக கே.மாயத்தேவர் என்ற வழக்கறிஞரை எம்.ஜி.ஆர். அறிவித்தார் அதன் பிறகு இரண்டொரு நாள் கழித்துதான்
    வெற்றி சின்னமாம் இரட்டை இல்லை சின்னம் அறிவிக்கப்பட்டது
    .


    கட்சி புதியது ,வேட்பாளர் புதியவர் ,சின்னம் புதிது .இந்த நிலையில்
    முழுக்க முழுக்க மக்களையும் ,தொண்டர்களையும் ,மட்டுமே நம்பி
    எம்.ஜி.ஆர்.களம் இறங்கினார்



    டெல்லியிலிருந்து மத்திய அமைச்சர்கள் வந்து குவிந்துவிட்டனர்
    மாநிலத்தின் மொத்த அமைச்சரவை யும் திண்டுக்கல் தொகுதியில்
    முகாமிட்டுவிட்டது எங்கு பார்த்தாலும் புத்தம் புதிய கார்களும் ஜீப்புகளும்
    பறந்து கொண்டிருந்தன .வீதிக்கு வீதி வண்ண விளக்கு அலங்காரங்கள் ,
    கொடி,தோரணங்கள் ,கட் -அவுட்டுகள் ,போஸ்டர்கள் என்று ஆளும்
    தி.மு.க.பணத்தை வாரியிறைத்தது .திண்டுக்கல் நாடாளுமன்றத
    தொகுதியையே கோலாகலமாக்கிக் கொண்டிருந்தது .

    ஆனால் அண்ணா தி.மு.க. வின் நிலையோ ?அறிவிக்கப்பட்ட இரட்டை
    இலை சின்னத்தை வரைவதற்கு கூட சுவர்கள் கிடைக்கவில்லை
    பிரசாரத்துக்கு பெரிய அளவில் வண்டி வாகனங்கள் இல்லை .ஆனாலும்
    தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும தொண்டர்கள் படையெடுத்து
    வந்திருந்தினர் .அவர்கள் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தனர் .வீடு வீடாக சென்று மக்களை சந்தித்தனர்

    திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிலக்கோட்டை ,ஆத்தூர் ,சோழவந்தான் ,உசிலம்பட்டி ,திருமங்கலம் ,திண்டுகல்
    ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் ஆங்காங்கே அண்ணா தி.மு.க.
    தொண்டர்கள் மிரட்டப்பட்டார்கள் ,தாக்கப்பட்டார்கள் .அ.தி.மு.க.கோடிக்
    கம்பங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன .தொழில் துறை ரவுடிகளும் ,குண்டர்களும்,ஆயுள்கைதிகளும் நேரடியாக களத்தில் இறக்கி
    விடப்பட்டு அராஜக நடவடிக்கைகள் தொடர்ந்தன இதற்க்கு மூல காரணமாக
    இருந்தவர் மதுரை முன்னாள் மேயர் முத்து என குற்றச்சாட்டு அப்போது
    எழுந்தது


    இந்த வன்முறை வெறியாட்டத்துக்கு முதல் களப்பலியானவர் தான்
    வத்தலகுண்டு ஆறுமுகம் என்ற அ.தி மு.க.தொண்டர் .திருச்சி சுசிலா ,கோடையிடி முத்துராமன் என்ற அ.தி.மு.க.பேச்சாளர் பங்கேற்ற பிரசரா
    பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இரவு தேர்தல் அலுவலகத்துக்கு வந்த
    அந்த தொண்டனை குத்தி கொலை செய்துவிட்டனர் . அந்த தகவல்
    அறிந்து .ஆறுமுகத்தின் இளம் மனைவி கர்ப்பவதியாக இருந்த சுந்தரியை
    சந்தித்து ஆறுதல் சொல்ல வந்த எம்.ஜி.ஆர்.கண்ணீர்விட்டு அழுதார்
    மே மாதம் முதல் வாரத்தில் இந்தச்சம்பவம் வத்தலகுண்டு நகரில் நடை
    பெற்றது மே 11-ஆம் தேதி எம்.ஜி.ஆரின் மாபெரும் வெற்றி படைப்பான
    உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியானது அன்று திண்டுகல்
    நகரில் வரலாறு காணா வன்முறை கட்டவிழ்ந்து விடப்பட்டது
    பிரசாரத்துக்காக லாரிகளில் வந்த அண்ணா தி.மு.க. தொண்டர்கள் விரட்டி
    அடிக்கப்பட்டனர் .அன்று தான் விளாத்திகுளம் ஒன்றிய அ.தி.மு.க. அமைப்பாளர் யாக்கோப்பு
    ரெட்டியார் வெட்டப்பட்டார்

    இத்தகைய மிரட்டலும் ,மிரட்சியுமான சூழ்நிலையில் தான் எம்.ஜி.ஆரின்
    சூறாவளிப் பிரசாரமும் நடைபெற்றது .அவர் சென்ற வ்ழிஎங்கும்
    மக்கள் கூட்டம் மணிக்கணக்கில் காத்துக்கிடந்து அவரைக்கண்டு
    அவரதுஉரை கேட்டு மகிழ்ச்சி அடைந்தது .எங்கு திரும்பினாலும்
    இரட்டைவிரல் காட்டி அ.தி.மு.க.வெற்றிக்கு கட்டியம் கூறிய அந்த
    மக்கள் கூட்டம் 1973-மே மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற .வாக்குப்
    பதிவின் பொது தங்கள் அமோக ஆதரவை எம்.ஜி.ஆர். மீது தங்களுக்குள்ள அழுத்தமான நம்பிக்கையை வெளிப்படுத்தியது .

    மே மதம் 22-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதிமுக வின் வெற்றி
    தகவல்அறிவிக்கப்பட்டபோது ,தமிழகம் எங்கும் கோலாகலம் ,மக்கள் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி



    ஆறு மாதக் குழந்தையான அண்ணா தி.மு.க..அந்த இடைத்தேர்தலில்
    பெற்ற வாக்குகளின் விபரம்

    மொத்தம் வாக்குகள் ............643704
    பதிவானவை ...........................491553
    அண்ணா தி.மு.க.....................260930
    ஸ்தாபன காங்கிரஸ் ............118032
    தி.மு.க...................................... .... 93496
    இந்திர காங்கிரஸ் ...................11423

    இந்த தேர்தலில் அப்போதைய ஆளும் தி.மு.க மூன்றாம் இடத்துக்கு
    தள்ளப்பட்டது இந்திரா காங்கிரஸ் வேட்பாளர் உட்பட மற்ற
    அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்

  17. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  18. #239
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like

  19. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  20. #240
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    Kalki - weekly
    Last edited by ravichandrran; 20th May 2016 at 09:06 PM.

  21. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •