Page 2 of 2 FirstFirst 12
Results 11 to 13 of 13

Thread: சந்தோஷமே வருக வருக..

  1. #11
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சந்தோஷமே வ்ருக வருக..

    இடர் களையும் பதிகம்

    ஒன்பதாம் பாடல்

    *



    ஆல கால கண்டனாகி ஆடு கின்ற முர்த்தியே
    ஞால முற்றும் நன்மை செய்து நல்வழிப் படுத்துவாய்
    பால பாடம் கற்றல் போல பாவி நானும் இங்குதான்
    வாழும் போது உன்னை நெஞ்சில் பற்றி நின்று வணங்கினேன்
    *
    மகாபலிபுரம் போயிருக்கியோ”

    போயிருக்கேனே மன்ச்சு… ஒரு நல்ல பாட் கூட எடுத்திருப்பாங்கள்ள..என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..ஆமா ஹீரோ பேரும் ஹீரோயின் பேருமே மறந்து போச்சு.வயசாகுது மனசாட்சி..

    |ம்ஹூம் எனக்கு ஆகலை.. பட் அங்க நிறைய பாட் எடுத்துருக்காங்க.. சிலையெடுத்தான் ஒருசின்னப் பெண்ணுக்கு, கல்லிலே கலைவண்ணம்கண்டான், கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா
    ..ச் உன்னப் பார்த்து நானும் கெட்டுப் போயிட்டேன்..

    சொல்ல வந்தது என்னன்னாக்க அங்க உள்ள கோவில்..ஜலசயனப் பெருமாள் கோவில் மாமல்ல புரத்தில இருக்கு..வெகு அழகான கோவில்..அதைப்பத்தி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்ன எழுதியிருக்கார்னாக்க


    செறிந்த பனைபறித்துத் திண் களிற்றை சாடி
    முறிந்து விழப் பாகனையு மோதி - யெறிந்து
    தருக்கடன் மல்லைக் குமைத்தான் தஞ்சமென் நெஞ்சே
    திருக்கடன் மல்லைக்குள் திரி.”

    “சரி..திருக்கடன் மல்லை அதாவது திருக் கடல் மல்லை மாமல்ல புரம்..திடீர்னு எதுக்கு இந்த நூத்தியெட்டுத் திருப்பதி அந்தாதிலருந்து கோட் பண்றே

    விஷயமில்லாம சொல்வேனா இந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம்னு பார்த்தேன்னா..

    கம்சனோட குவாலய பீடம் நு ஒரு யானை அதை ஏவினான் கண்ணன் மேல.. கண்ணன் ஒரு பனைமரத்தைப் பிடுங்கி அதை வீழ்த்தினான்..
    அது யானையின் மீதும் அதன் பாகன் மீதும் விழுந்து இருவரையும் அழித்தது.. அப்பேற்பட்ட தோள்வலிமை கொண்ட கண்ணபிரான் தான் திருக்கடல் மல்லையில் ஸ்தல் சயனப் பெருமாளாகக் காட்சி அளிக்கிறாராம்..அவனையே தஞ்சமென்று திரிங்கறார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்..

    அதாவது அந்தப் போராட்டத்தில் கண்ணன் அந்தக் குவாலய பீடங்கற யானையின் தந்தத்தை ஒடித்துக்கொன்றாராம்.. அப்புறம் பிரம்மன்.அவருக்கு பெருமை வாய்ந்த நான்கு முகங்கள் உண்டு..

    அவர்கள் இருவரையும் பற்றி இந்தப் பாட்டுல வருது..ஸிம்ப்பிள் தான் உள்ளேயே போய்ப்பார்ப்போம்
    *

    வேழவெண்கொம்பு ஒசித்தமாலும், விளங்கியநான் முகனும்
    சூழஎங்கும் நேடஆங்கோர் சோதிஉள்ளாகி நின்றாய்
    கேழல்வெண்கொம்பு அணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்
    நீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்களமே யவனே


    திரு நெடுங்களத்தில் உறைகின்ற ஈசனே.. பார்வதி மணாளா
    கிருஷ்ணாவதாரத்தில் குவாலய பீடம் என்ற யானையின் வெண் தந்தத்தை உடைத்து அழித்த திருமாலும், பெருமை மிக்க நான்முகங்கள் கொண்ட பிரம்ம தேவனும் உனது ஆதியும் அந்தத்தையும் காண எல்லாவிடத்திலும் தேடினார்கள். நீயோ ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ்சோதி ஆயிற்றே..

    மஹாவிஷ்ணு கேழல் எனப்படும் பன்றியின் அவதாரமெடுத்து உன் அடிகாணப் புறப்பட்டார்..அவரால் முடியவில்லை..வெற்றி பெற்றதற்கு அறிகுறியாக அந்த வராஹத்தின் கொம்பொன்றை ஒடித்து அணிகலனாக ஆக்கிக் கொண்டாய் நீ

    அப்படிப்பட்ட நீ உன்னுடைய திருவடி நிழலில் வாழும் அடியவர்களின் இடர்களைக் களைவாயாக..

    *

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சந்தோஷமே வ்ருக வருக..

    இடர் களையும் பதிகம்

    பத்தாம் பாடல்

    *

    *
    பத்தாம் பாடல்

    “தேவதையைக்கண்டேன்காதலில்விழுந்தேன்
    என்உயிருடன்கலந்துவிட்டாள்.
    நெஞ்சுக்குள்நுழைந்தாள்மூச்சினில்நிறைந்தாள்
    என்முகவரிமாற்றிவைத்தாள்.”

    “என்ன ஆச்சு திடீர்னு..”

    “ச்சும்மா பாடக்கூடாதா மன்ச்சு”

    “பாடு..அதுக்குன்னு இடம்லாம் இருக்கோன்னோ..இங்க என்ன ஈசனைப் பத்திப் பேசறச்சே..யாராக்கும் அந்த ஏஞ்சல்..பக்கத்து ஃப்ளாட் தமன்னா மாமியா..உன் வீட்டுக்காரிக்குத் தெரியுமா”

    “ச் நீயே மாமின்னு சொல்லிட்டு இப்படிக் கேட்டா என்ன அர்த்தம்..இருந்தாலும் தாங்க்யூ”

    “எதுக்கு”

    “ஸீ ஆங்கிலத்தில ஏஞ்சல் நா தேவதை.. இல்லியோ.. தமிழ்லயும் ஒரு வார்த்தை இருக்கு துஞ்சல் உனக்குத் தெரியுமோ..ஹா ஆஆவ்..

    ”துஞ்சல்னு சொல்றச்சயே கொட்டாவி விடற.. சரி.. துஞ்சல் நா தூக்கம்..ஓ..இந்தப் பாட்டில வந்துருக்கா”

    “எஸ்.. இதுல மட்டுமில்லை இன்னொரு பதிகத்துலயும் வருது..

    துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்
    நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
    வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
    றஞ்ச வுதைத்தன அஞ்செழுத்துமே.

    நமசிவாயன்னு என்ற ஐந்தெழுத்துக்களை தூக்கம் வரும் போதும் தூக்கமில்லாத பொழுதிலும் மனம் கசிந்துருகி போற்றவேண்டும். பல வழிகளிலும் திரியும் மனத்தைக் கட்டுப்படித்தி இறைவனையே நினைத்து அவனது திருத்தாள்களை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை இறுதியில் கவரவந்த காலதேவனிடமிருந்து மீட்டுத் தந்தது அந்த ஐந்தெழுத்தே ஆகும்

    சரி.. இப்ப என்ன செய்யலாம்..பாட்டுக்குள்ள போகலாமா..

    ஓ.கே..

    *


    வெஞ்சொற்றஞ் சொல்லாக்கி நின்றவேட மிலாச்சமணும்
    தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்
    துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திர நின்னடியே
    நெஞ்சில்வைப் பாரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
    *

    திரு நெடுங்களமேவிய இறைவனே.. எனை ஆட்கொண்ட ஈசனே
    மனதிற்கும் உடலுக்கும் காயம் விளைக்கக் கூடிய தீய கொடுமையான சொற்களையே தம் சொற்களாக்கிக் கொண்டு தாங்கள் கொண்ட வேடத்திற்குப் பொருந்தாமல் இருக்கும் சமணரும் நற்சார்பில்லாத புத்தர்களும் வேதம் சொல்லும் உண்மைப்பொருளை ஒருபொழுதும் உணராதவர்கள்..அவர்களை விடுத்து அழியாத புகழைக் கொண்ட வேதங்களால் போற்றப்படும் இறைவனின் திருவடியை நெஞ்சிலெண்ணி வாழும் அடியவர்களின் துயரங்களைப் போக்குவாயாக

    *

  4. #13
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சந்தோஷமே வ்ருக வருக..

    இடர் களையும் பதிகம்

    பதினொன்றாம் பாடல்
    *



    நானாக நானிருக்க முயன்றி ருந்தேன்
    …நலமுடனே அகந்தையினைக் கொண்டி ருந்தேன்
    தேனாகத் தந்தாரே எனது நண்பர்
    …திவ்வியமாய் ஈசனவன் பாடல் பற்றி
    மானாகத் துள்ளிநீயும் படித்துப் பார்த்து
    …மனதுக்குள் புகுத்தியிங்கு எழுதிப் பார்ப்பாய்
    வீணாகக் கலங்காதே கண்ணா உன்னால்
    …விளங்கவைக்க முடியுமடா என்றே சொன்னார்

    ஏகமாய் நீருண்டு கடலுக் குள்ளே
    … எறும்பினால் அதைக்குடிக்க இயலா தன்றோ
    தாகமாய் இருந்ததாலே சற்றே இந்த
    தாழ்சடையான் நீ\ள்முடியோன் பாடல் கொஞ்சம்
    தேகத்தில் நெஞ்சத்தில் உட்செ லுத்தி
    …தெள்ளியதாய் எழுதுதற்கு முயற்சி செய்தேன்
    ஈசனுக்கும் நண்பருக்கும் நன்றி மீண்டும்
    ..எழுத்தினிலே பிழையிருந்தால் பொறுப்பீர் நீரே..

    *
    இப்படி இந்த இடர்களையும் பாடல்களைப் பாடுவதால் என்ன ஆகும் தெரியுமா மன்ச்சு

    தெரியுமே உன்னோட பாவம்லாம் போய்டும்.. முடிச்சுட்டு நீ ஃப்ரெஷ்ஷா பாவம் பண்ணலாம்..

    யோவ்.. ரொம்ப வாருகிறாய்..

    ச்சும்மாடா செல்லம்.. உன்னைப் பத்திஎனக்குத் தெரியாதா..வா..உள்ளே போகலாம்..
    *

    நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
    சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் ந லத்தால்
    நாடவல்ல பனுவல்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
    பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே

    **:

    நீண்டு வளர்ந்துகொண்டே இருக்கக் கூடிய முடிதரித்த சிவபெருமான் இருக்கும் நெடுங்களத்தைப் பற்றி சீர்காழியில் இருக்கும் பாட்டுடைத்தலைவன் ஞானசம்பந்தன் பாடிய நன்மை தரவல்ல இந்தப் பத்துப் பாடல்களைப் பாடல் வல்லோர்க்கு பாவங்கள் எல்லாம் தொலைந்து போவது உறுதி.

    *

    ஓம் நமசிவாய..

    *

    முற்றும்..

Page 2 of 2 FirstFirst 12

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •