Page 340 of 400 FirstFirst ... 240290330338339340341342350390 ... LastLast
Results 3,391 to 3,400 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #3391
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    Last edited by senthilvel; 4th February 2017 at 04:47 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3392
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like




  4. #3393
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #3394
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy :facebook


    " ஜல்லிக்கட்டு "
    உலகையே சென்னையை உற்று நோக்க வைத்தது ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்,
    கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் என அனைவரும் போராட்டத்தில் குதித்ததனால் வேறு வழியின்றி மத்திய அரசும் மாநில அரசும் தீர்வை உருவாக்கின,
    இப்படி வெற்றி பெற்று இருந்தாலும் கூட இந்த போராட்டம் குறித்து கருத்து கூறும் அறிவு சார்ந்த சான்றோர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள், இளைஞர்கள் இந்த தமிழகத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் மதுவை எதிர்த்து ஏன் போராடவில்லை?
    விவசாயத்தையும் அதன் அவசியத்தையும் வலியுறுத்தி போராட முன் வராமல் போனது ஏன்?
    போன்ற கேள்விகள் எழுப்புகின்றனர்,
    அந்த கேள்விகள் நியாயம் தானே!
    இது போன்ற கேள்விகள் வரும் போது
    நமக்கு 1970 களில் அகில இந்திய சிவாஜி நற்பணி மன்றங்கள் அப்போதைய ஆளும் அரசை எதிர்த்து நடத்திய துனிவான போராட்டங்கள் நினைவுக்கு வருகிறது,
    இப்போதெல்லாம் பெரிய நடிகர்கள் என்றால் வருடத்திற்கு ஒரு படம் நடிப்பதும் அதை பெரிய அளவில் விளம்பரம் செய்வது அதற்காக ரசிகர்களை உசுப்பும் நிகழ்வுகளை மட்டுமே கான முடிகிறது, ஆனால் நடிகர்திலகம் நடிப்பதோடு நின்று விடாமல் ஆளும் அரசு செய்யும் தவறுகளையும், அட்டூழியத்தையும் எதிர்த்து பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து போராடி வந்திருக்கிறார்.
    அப்படி அகில இந்திய சிவாஜி நற்பணி மன்றங்கள் நடத்திய விவசாயத்தை காப்பாற்றவும் விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கிட வலியுறுத்தியும் 1973 ஆம் ஆண்டு அக்டோபர் 13 அன்று நடத்திய அறப்போராட்டம் அன்றைய திமுக அரசை திக்கு முக்காட வைத்தது,
    சுமார் 120000 க்கும் அதிகமான அகில இந்திய சிவாஜி மன்ற உறுப்பினர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் கள்,
    நிலைமையை உணர்ந்து கொண்ட அரசு விவசாயிகளுக்கு தேவையான நல திட்டங்களை அறிவித்தது, கைதான சிவாஜி நற்பணி மன்ற உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

    இதேபோல 1980 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தீவிர பிரச்சாத்தில் ஈடுபட்ட நடிகர் திலகம் அப்போதைய முதல்வரான எம்ஜிஆர் ன் மது ஆதரவு கொள்கையை எதிர்த்தும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் நிறுத்தி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்ததனால் அந்தத் தேர்தலில் எம்ஜிஆர் அவர்கள் 40 ல் 2 என்ற மோசமான தோல்வியை தழுவினார்.
    நடிகர்திலகத்தை வெறும் நடிகர் என்று மட்டுமே சித்தரிக்கும் ஊடகங்கள், அவருடைய பொதுத் தொண்டுகளை மறந்து அரசியல் பேசுவோர் உண்மையான வரலாறு தெரியாதவர்கள் என்பது தான் உண்மை.

  6. #3395
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. #3396
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோபால் சார்,

    சமீபத்தில் தங்கள் விருப்பத்திற்காக நான் 'you tube' ல் தரவேற்றிய தலைவரும், வைஜயந்தி மாலாவும் காதல் ஊடலில் தூள் பரத்தும் 'இரும்புத்திரை' காவியத்தின் காதல் காட்சியை Ermalai Arun என்ற அன்பர் அகம் மகிழ்ந்து பாராட்டியுள்ளார். அவரது பதிவிலிருந்து அவர் எப்படிப்பட்ட மேம்பட்ட ரசிகர் என்பது புரிகிறது. நடிகர் திலகம் அவர் மனதில் எந்த அளவு ஊடுருவி உள்ளார் என்பதும் தெரிகிறது. அவருடைய, அந்தக் காட்சிக்கான கமெண்ட் கீழே. அவருக்கு என் உளமார்ந்த நன்றி.

    this is height of versatility, brilliance, what a performance by SG and VJ. SG you are an incomparable inimitable actor - billion times talented than Kamal - that gives the current moron where they stand. single shot, multitude of expressions, and VJ is giving lovely cute expressions and counter reactions. I dont have words to express my feeling - I cried - this is not an emotional scene, - cute love scene.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #3397
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 162– சுதாங்கன்.





    1968ம்வருடம்தான் சிவாஜியின் 'எங்க ஊர் ராஜா', 'லட்சுமி கல்யாணம்', 'உயர்ந்த மனிதன்' படங்கள் வெளிவந்தன.
    'எங்க ஊர் ராஜா' படத்தை இயக்குநர் பி. மாதவனின் அருண்பிரசாத் மூவீஸ் தயாரித்திருந்தது.
    படத்தை மாதவனே இயக்கியிருந்தார்.
    இந்த படத்தின் கதையை பாலமுருகன் எழுதியிருந்தார். இதில் தந்தை மகன் வேடம் சிவாஜிக்கு!
    `யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க’ பாட்டு இந்த படத்தில் மிகவும் பிரபலம்.
    இந்த படம் சென்னை சித்ரா தியேட்டரில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
    கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.ஸ்ரீனிவாசன் தயாரித்த படம் ` லட்சுமி கல்யாணம்’. என்ன காரணத்தினாலோ இந்த படத்தை எடுப்பதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டார்கள்.
    `ராமன் எத்தனை ராமனடி,’` பிருந்தாவனத்திற்கு வருகின்றேன்,’ `யாரடா மனிதன் அங்கே கூட்டி வா அவனை இங்கே’ போன்ற பாடல்கள் பிரபலமாக இருந்தும் படம் சரியாக போகவில்லை.
    சிவாஜியின் 125வது படமாக ஏவி.எம். தயாரித்த `உயர்ந்த மனிதன்’ வெளிவந்தது.
    அந்த சிறப்புக்கு ஏற்ற முறையில் அமைந்திருந்தது.
    இந்த படத்தை பற்றி அதன் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்த ஏவி.எம்.சரவணன் கூறும்போது, `நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எங்கள் பேனரில் வெகு நாட்களாக படம் பண்ணாமல் இருந்தார். ஒரு சிறிய மிஸ்–அண்டர்ஸ்டாண்டிங் காரணமாக இடைவெளி விழுந்திருந்தது.
    எங்கள் கல்கத்தா (கோல்கட்டா) பங்குதாரர் வி.ஏ.பி. அய்யர் ` உத்தர் புருஷ்’ என்ற வங்காள மொழிப் படம் பற்றி குறிப்பிட்டு ` நல்லா போகுது’ என்று சொன்னார்.
    அந்தப் படத்தைப் பார்த்து, ஜாவர் சீதாராமனை வைத்து அழகாக ஒரு திரைக்கதையை உருவாக்கினோம். பின்னர் அந்த கதையை பெங்களூருவில் வைத்து விவாதித்தோம். யார் ஹீரோவாக நடித்தால் அந்தக் கதைக்குப் பொருந்தி வரும் என்று பேச்சு வந்தபோது நான் சிவாஜி பெயரை வலியுறுத்தினேன்.
    `பழைய மனக்கசப்பை மறந்து விடுவோம். நீங்க போய் சிவாஜியிடம் பேசுங்க’ என்றார் ஏவி.எம். செட்டியார்.
    நான், என் சகோதரர்கள் குமரன்முருகன் ஆகியோர் சிவாஜியின் வீடான 'அன்னை இல்லம்’ போனோம்.
    உடல் நலமின்றி இருந்ததால் அப்போது வீட்டில் ஓய்வில் இருந்தார் நடிகர் திலகம்.
    நாங்கள் அவரிடம் பேசி எங்கள் விருப்பத்தைத் தெரிவித்தோம்.
    `அதற்கென்ன? நடிக்கிறேன்' என்று ஒப்புக்கொண்டார். `யார் டைரக்*ஷன்?’ என்று கேட்டார்.
    `கிருஷ்ணன் – பஞ்சு.’
    `பஞ்சு அண்ணன் டைரக்*ஷன்ல நான் ஆக்ட் பண்ண மாட்டேன். எனக்கும் அவருக்கும் சரிப்பட்டு வராது’ என்றார். இத்தனைக்கும் கிருஷ்ணன் – பஞ்சுதான் சிவாஜியின் முதல் படமான `பராசக்தி’ படத்தின் இயக்குநர்கள்.இரண்டு பேருக்குமிடையே ஏதோ மனத்தாங்கல் அப்போது வளர்ந்திருந்தது.
    `ஒரு நாள் நடிச்சீங்கன்னா எல்லாம் சரியாகப் போயிடும்’ என்று நான் நடிகர் திலகத்தை கன்வின்ஸ் செய்தேன். ` சரி’ என்றார்.
    சிவாஜிக்கு உடல்நிலை சரியானதும் `உத்தர்புருஷ்’ படத்தை போட்டுக்காட்டினோம்.
    `இதில் எனக்கு சரியான ரோல் இல்லையே… அப்பா ரோல் போட்டா `படிக்காத மேதை’யில் ரங்காராவ் போட்ட ரோல் மாதிரி ஆயிடும். அந்த டாக்டர் ரோல் பண்ணலாம். சின்ன ரோல்தான். நான் வேணும்னா கெஸ்ட் ஆர்டிஸ்ட்டா அந்த படத்திலே நடிச்சுத் தர்றேனே’ என்றார் சிவாஜி.
    `இல்லே சார். நீங்க ஹீரோவா பண்ணினாத்தான் நல்லா வரும்’ என்று நான் என்னுடைய கருத்தைச் சொன்னேன்.
    `எனக்கு உடன்பாடு இல்லே சரவணன். ஆனால் உங்களுக்காக வேணும்னா ஆக்ட் பண்றேன்.’
    அந்த டாக்டர் ரோலை பண்ண வேண்டும் என்ற ஆசை அவருக்குள்ளிருந்ததை நான் உணர்ந்தேன். ஆனால் அதை அசோகன் பண்ணவேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தோம்.
    `டாக்டர் ரோலை அசோகன் பண்றார்’ என்ற தகவலை சிவாஜியிடம் சொன்னபோது, அதை அவர் பெரிதாக ரசிக்கவில்லை. அப்போது அவர்கள் இருவருக்கும் `டெர்ம்ஸ்’ சரியாக இல்லை. அசோகன், எம்.ஜி.ஆர். கேம்பை சேர்ந்தவர் என்ற எண்ணம் சிவாஜியிடம் வளர்ந்திருந்தது. சிவாஜி மீது அசோகனுக்கும் சற்று வெறுப்பு இருந்தது.
    ஆனால் நடிகர் திலகமும் சரி, அசோகனும் சரி, இந்த உணர்வுகளையெல்லாம் நடிக்கும்போது வெளிப்படை யாக காட்டிக்கொண்டதில்லை என்பதையும், அது இருவரின் பெருந்தன்மை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
    இருந்தாலும் ரகசியமாக என்னிடம் ஒருவர் பற்றி இன்னொருவர் முணுமுணுப்பார்கள்.
    படத்தில் ஒரு காட்சியில் அசோகன் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போவார்.
    அப்போது எப்படி நடிக்க வேண்டும், முகபாவங்களை எப்படிக் காட்டவேண்டும் என்று அசோகனுக்கு சிவாஜி கற்றுக் கொடுத்தார்.
    சிவகுமார், சிவாஜியின் மகன் என்ற உண்மையை சிவாஜியிடம் சொல்ல அசோகன் வரும்போது அவரால் முடியாமல் இருதய வலி வந்து செத்துப் போவதாக காட்சி.
    இடைவேளையின் போது சிவாஜி தனக்கு கற்றுக் கொடுத்தது பற்றி என்னிடம் மெதுவான குரலில் அசோகன் கேட்டார், ` ஏண்ணே, இந்த ஆள் (சிவாஜி) என்னைக் கவுத்திடலியே?’
    `அடப்பாவி மனுஷா! அவர் எவ்வளவு அக்கறையா கத்துக் கொடுக்கிறார்! ஏன் அப்படி நினைக்கிறீங்க?’ என்றேன் நான்.
    இன்னொரு பக்கம் சிவாஜி ` எனக்கு அவன் (அசோகன்) துரோகி. அவனுக்கு நான் ஆக்*ஷன் கத்துக் கொடுக்க வேண்டியிருக்கு பார். படம் நல்ல வரணும்ங்கறதுக்காக நான் சொல்லித் தர்றேன்' என்று என் காதில் கமெண்ட் அடித்தார்.
    அதே போல இன்னொரு சம்பவமும் இப்போது நினைவிற்கு வருகிறது. ஒரு நாள் ` அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’ பாடல் காட்சி ஷூட்டிங்கின்போது சிவாஜி நடித்துக் கொண்டிருந்தார்.
    சற்று தொலைவில் அசோகன், அவரைச் சுற்றி கூட்டம் கூடியிருந்தது. எம்.ஜி.ஆரை எம்.ஆர் ராதா எப்படி சுட்டார் என்ற விவரத்தை அங்கே அந்த கூட்டத்திற்கு அசோகன் மோனோ ஆக்டிங் செய்து காட்டிக்கொண்டிருந்தார்.
    ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும், அசோகன் இருந்த இடத்திற்கும் இடையே தூரம் நிறைய இருந்த போதும் சிவாஜி
    என்னைக் கூப்பிட்டு, `அவனை மொதல்ல போகச் சொல்லும்’ என்றார்.
    `அசோகன் தூரத்தில்தானே இருக்கிறார்?’ என்று சொல்லிப் பார்த்தேன்.
    `என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றான். ஒண்ணு அவனை பாக் – ஆப் பண்ணு. இல்ல நான் பாக்– அப் பண்ணிக்கிறேன்’ என்றார் சிவாஜி.
    பிறகு அசோகனிடம் நான் சென்றேன். அசோகனுக்கு நான் சொன்ன
    விஷயம் பிடிக்கவில்லை. இருந்தாலும்………..
    (தொடரும்)

  9. #3398
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #3399
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #3400
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாக்கப்பட்டு வந்த பொஞ்சாதி வக்கனையா ஆக்கிப் போட தெரியாதவளா இருந்தாலும் சரி, நல்ல பேச்சு நாலு பேசத் தெரியாதவளா இருந்தாலும் சரி, நாலு பேருக்கு கிள்ளிப் போடாதவளா இருந்தாலுஞ் சரி கட்டிக்கிட்ட புருசன் மனச கல்லாக்கிக்கிட்டு காலத்தைஏதோ ஓட்டிடலாம்.ஆனா மானத்தை தொலச்சவள கட்டிக்கிட்ட புருஷன் தான், வெளியவும் சொல்ல முடியாம உள்ளவே புழுங்கிக்கிட்டு நடைப்பிணமாத்தான் வாழ்ந்துகிட்டு இருப்பான்.இது நல்ல மனுசனுக்குண்டான குணம்.
    ஊருக்கே பெரிய மனுசனா இருந்தாலும், குடும்பம்னு ஒண்ணு இருந்தா அவரு பேச்சை கேட்கிற மாதிரி பொண்டாட்டியும் , புள்ள குட்டிகளும் இருந்தாத்தேன் மனுசனுக்கு படுக்கையிலே தூக்கம் வரும்.இல்லேன்னா அந்த படுக்கை கூட சுமையாத்தான் தெரியும்.ஊருக்குள்ள போயிட்டும், வந்துட்டும் இருக்கும் போது கௌரவத்திற்கு சிரிச்சு தொலச்சு செத்த பொணமா வாழ்க்கைய நடத்தனும்ங்கறமாதிரிதான் அவுக பொழப்பு இருக்கும்.
    இங்க மலைச்சாமியோட கதயும் இதப் போலத்தேன்.மத்த மனுசங்களோட குணத்தோட இந்த மனுசனோட குணத்த இணைச்சுப் பேச முடியாது.அந்த மனுசனோட குணம் பூமிக்குள்ள புதஞ்சிருக்கிற வைரம் மாதிரி.அந்த வைரத்தோட குணம் பொஞ்சாதிக்குத்தான் தெரியாம போச்சு.ஆனா ஊருக்கு நல்லாவே தெரியும்.
    அவுரு பொஞ்சாதியோட கத தான் என்ன?
    கண்ணாலத்துக்கு முன்னயே வேற ஒருத்தனோட உறவாண்டுகிட்டு கர்ப்பமும் ஆகிப்போனா.விதச்சவனோ விதியேன்னு ஓடிப் போயிட்டான்.
    மகளோட சேதி தெரிஞ்ச அப்பனுக்குத்தான் வேற வழி தெரியல.அவனோ மானம், மருவாத கெட்டா தூக்குல தொங்கற ஆளு. அந்த கணம் சாமி மாதிரி தெரிஞ்ச ஒரே ஆளு மலைச்சாமி தான்.மலைச்சாமி கால்ல விழுந்து, நாசமாப் போன மகள நீ தான் கட்டிக்கிடனும். இல்லலேன்னா என் உசுறு என் உடம்புல தங்காதுன்னு கெஞ்சறான்.என் உடம்பு உன் காலுல, என் மானம் உங் கையிலன்னு அழுகறான். பெரிய மனுசன் கால்ல விழும்போது அந்த " சாமி " க்கு எதிர் வார்த்த சொல்ல வரல.
    ஒத்துக்கிறாரு.
    கண்ணாலம் முடிஞ்சாலும் அவ புத்தி மாறல.அது நாய் புத்தி.மலைச்சாமி ஊருக்கு பொண்டாட்டியா காட்டிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள அவள ஏத்துக்கல.
    ஆனாலும் அவுளுக்கு பொறந்த மகள தன் மக மாதிரிதான் பாசம் காட்டி வளர்க்கிறாரு.

    மலைச்சாமிக்கு பாதி நிம்மதி கிடைக்கறது வீட்டுல இருக்குற குயிலு, காட்டுல பாடுற பாட்டு, வயலு, வரப்புதான்.இப்புடியே பொழப்பும் ஓடிட்டிருக்கு.

    மரியாதைன்னா என்னா?அது கடுகளவு கூட தெரியாது அவுளுக்கு.
    ஒரு நா, எச்சப் பாத்திரத்த கழுவறா.கழுவுற எச்சத் தண்ணிய வீசறா.அது மலைச்சாமி மேல வந்து விழுகுது.அதுக்காக அவ வருத்தமா பட்டா? கேக்குறா கேள்வி. எச்சத் தண்ணி வீசறது தெரியாம குறுக்கு வர்றதுக்கு அறிவா கெட்டுப் போச்சு? மத்த புருஷனா இருந்தா அப்பவே அவ கன்னம் வீங்கியிருக்குமே! ஆனா இது ஊருக்கே சாமியாச்சே.
    அந்த ஈரத்தோட வீதில இறங்கி நடந்து வர்றாரு.எதுக்கால வர்றா ஒருத்தி.ஈரம் பாத்து, என்னான்னு கேக்குறா?
    மலைச்சாமி சொல்றாரு.
    " உங்க்கக்கா மஞ்சத்தண்ணி விளையாண்டுட்டா புள்ள ".


    மலைச்சாமிக்குள் இருக்கும் நகைச்சுவை அங்கே தலையெடுக்கிறது.ஒரு சோகம் அங்கே சந்தோசமாய் மாறியது. அந்தப்பேச்சு மலைச்சாமியை பார்த்து வியக்க வைக்கிறது.


    "முதல் மரியாதை "
    -----------------------------------------------------------------------பிடித்தால் தொடரும்.
    Last edited by senthilvel; 11th February 2017 at 08:39 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •