-
23rd November 2016, 11:44 AM
#2591
Junior Member
Senior Hubber
சிவா சார்...
மரணம் என்கிற மகா கொடுமை மனசுக்குத் தருகிற வேதனை சொல்லித் தீராதது.
ஆறுதல் சம்பிரதாயங்களுக்கு அடங்காதது.
நேசமிகு உறவுகளில் ஒன்றல்ல.. இரண்டைப்
பறிகொடுத்து விட்டு சோகித்திருக்கும் தங்களைக்
காலம் விரைவில் கண்டிப்பாகத் தேற்றும் என்பது எமது நம்பிக்கை.
Sent from my P01Y using Tapatalk
-
23rd November 2016 11:44 AM
# ADS
Circuit advertisement
-
23rd November 2016, 03:08 PM
#2592
Junior Member
Newbie Hubber
வாசு,
கிழித்து நாட்டி விட்டாய். குடிகாரன் தன்னுடைய கதை சொல்லும் முறைமையில் நடிப்பின் உன்னதம் வெளிப்படும். நடிகர்திலகம் தான் ஒரு விவரிப்பு செய்யும் போது பங்கு கொண்ட மற்றோர் மனநிலையில் அவர்களின் மொழியில் பேசியே தன்னுடைய மனத்தின் மொழியை பதிவு செய்வார். நீ விரித்து எழுதிய விவரணை ,காட்சியை பார்ப்பதை விட மனத்திரையில் பார்ப்பதை பரவசமாக்கும்.
என்னவோ போடா ,மாதவா, படுத்தி எடுக்கிறாய்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd November 2016, 05:44 PM
#2593
அன்பு வாசு சார்,
உங்கள் பங்குக்கு நீங்களும் பிய்த்து உதறி விட்டீர்கள். எத்தனை பேர் எத்தனை முறை ஆராய்ந்தாலும் புதையல் கிடைத்துக் கொண்டேயிருக்கும் அதிசய சுரங்கம் நம் தலைவர்.
நாடகநடிகன் சிங்காரம்...
தன்னுடைய அறிமுகப்பாடல் முடிந்ததும், சட்டென்று அசிஸ்டன்ட் உடைத்து தரும் சோடாவை ஒரு வாய் குடித்து, சற்று தாழ்ந்த குரலில் "வரச்சொல் வரச்சொல்" என்று உஷார் படுத்தும் அழகு. வழக்கமான நடிகையென்றால் இது தேவையிருக்காது. இவளோ ஒருநாளைக்கு மட்டும் இக்கட்டில் உதவி செய்ய வந்த பெண் என்பதை மறவாமல் சொல்லும் காட்சி இது.
எஸ்டேட் தொழிலாளி....
தன தம்பியின் கதையை சாவித்திரியிடம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் என்ன ஒரு உயிர்த்துடிப்பு. "சுட்டேன் சும்மா சுட்டேன்" எனும்போது குரலிலும் முகத்திலும் தோன்றும் வெறி. பேசிக்கொண்டே எதிரிகள் வருகிறார்களா என்று பார்த்துக்கொள்ளும் கவனம். இறுதியில் முதுகில் குத்தப்பட்ட நிலையிலும், சாவித்திரியை பார்த்து "ஒருத்தன் விடாமல் எல்லாரையும் முடிச்சுட்டேன். நீ இங்கிருந்து ஓடிபோயிடு" என்று சைகையாலேயே கட்டிவிட்டு தண்ணீர் தொட்டியில் விழுந்து துடித்த படியே உயிரை விடுவது....
அட போங்க சார், இவர் நடிப்பையெல்லாம் பார்த்துட்டு..... மற்றவர்களை பார்க்கும்போது.
Last edited by adiram; 23rd November 2016 at 06:02 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd November 2016, 05:56 PM
#2594
ஞாயிறன்று புதிய தலைமுறை சேனலின் 'என்றும் புதிது' நிகழ்சியில் தலைவரின் 'உத்தம புத்திரன்' படத்தை ஆய்வு செய்தனர்.
அதில் குணசித்திர நடிகர் நந்தகுமார் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் சிலிர்க்க வைத்தது. மிகுந்த ரசனையோடு பேசினார். இறுதியில் "நடிகர்திலகம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது எனக்கு பெருமை" என்று சொன்னபோது நெகிழ வைத்தார்.
-
23rd November 2016, 11:03 PM
#2595
Senior Member
Seasoned Hubber
சிவா அவர்களே
தங்கள் நெருங்கிய உறவினர்களை இழந்து வாடும் துயரத்தை ஆறுதல் வார்த்தைகள் அவ்வளவு எளிதில் போக்கி விடாது என்றாலும் சிறிது மறக்கவாவது உதவும். தங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களுடைய ஆன்மா சாந்தியடையவும் இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.
இத்திரியில் பங்கு பெற்று நம்முடைய மக்கள் தலைவரின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில் தங்களுக்கு நிச்சயம் ஆறுதல் கிட்டும். தங்கள் துயரிலிருந்தும் கவலைகளிலிருந்தும் தங்கள் நேரங்களை நடிகர் திலகத்தின் பக்கம் திருப்பி ஆறுதல் கொள்ளுங்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th November 2016, 12:07 AM
#2596
Senior Member
Devoted Hubber
எனது உறவுகளின் பிரிவிற்கு ஆறுதல் கூறிய
நண்பர் செந்தில்வேல்,திரு கோபால் , திருஆதிராம்
திரு வாசு, திரு ஆதவன்ரவி,மற்றும்
திரு ராகவேந்திரா சார் அனைவருக்கும் நன்றி.
திருஆதிராம் திரு ராகவேந்திரா சார் ஆகியோர்
கூறியதுபோல்
நமது தலைவரின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதிலும்
எனது நேரங்களை
நடிகர் திலகத்தின் பக்கம் திருப்பிக்கொள்வதிலும்
ஆறுதல் கிடைக்கிறது.
நன்றி நன்றி நன்றி.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th November 2016, 01:59 PM
#2597
Junior Member
Newbie Hubber
வாசு,
சிவாவின் துயர செய்தியால் ,உனக்கு வாழ்த்து செய்தியை தள்ளி போட்டேன் தவிர மறக்கவில்லை. இப்போது உன் பிறந்த தினத்திற்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
Last edited by Gopal.s; 24th November 2016 at 02:20 PM.
-
24th November 2016, 05:05 PM
#2598
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
கடந்த சில நாட்களாக ஊரில் இல்லாததால் கணினியை இயக்கவில்லை. தற்பொழுது தான் ஓரிரு நாட்களாக வழக்கம் போல் பதிவுகளைப் பகிர்ந்து வருகிறேன். இந்த காரணத்தால் கடந்த 21ம் தேதி தங்களுடைய பிறந்த நாளன்று வாழ்த்துத் தெரிவிக்க வேண்டுமென்று நினைத்தும் வேறு கவன திசை திருப்புதல்களில் கடந்து விட்டது. தாமதமானாலும் தங்களுக்கு உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்., மக்கள் தலைவர் நடிகர் திலகத்தின் ஆசியுடன் தாங்கள் நீடூழி வாழ்ந்து வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
நினைவூட்டிய கோபால் சாருக்கு உளமார்ந்த நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th November 2016, 05:24 PM
#2599
Junior Member
Diamond Hubber
வாசு சார்
என் இனிய நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்
-
24th November 2016, 05:48 PM
#2600
Junior Member
Senior Hubber
தனது திறமைப் பேரொளியிலிருந்து இந்த ஆதவனுக்கு நிறைய இரவல் தரும் ஞான ஒளியாருக்கு வணங்குதலுடன் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
Sent from my P01Y using Tapatalk
Bookmarks