Page 243 of 400 FirstFirst ... 143193233241242243244245253293343 ... LastLast
Results 2,421 to 2,430 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2421
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2422
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. Likes Harrietlgy liked this post
  6. #2423
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. Likes Harrietlgy liked this post
  8. #2424
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. Likes Harrietlgy liked this post
  10. #2425
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. Likes Harrietlgy liked this post
  12. #2426
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  13. Likes Harrietlgy liked this post
  14. #2427
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 149 – சுதாங்கன்.



    ஒரு நடிகனுக்கு மூன்று அம்சங்கள் மிக முக்கியமானவை! நடை – உடை – பாவனை. உடைக்கேற்ற நடை--– நடைக்கேற்ற கம்பீரம் – கம்பீரத்துக்கேற்ற பேச்சு – பேச்சுக்கேற்ற முகபாவனை. இந்த மூன்றிலும் சிவாஜி அதிக கவனம் செலுத்துவார்.
    1986ம் ஆண்டு ஜூனியர் விகடன் பத்திரிகைக்காக அவரை பேட்டி கண்ட போது அந்த பேட்டியில் சிவாஜி இதைச் சொல்லியிருப்பார்.
    எந்த வகை பாத்திரமாக இருந்தாலும் சரி, அவர் ஏற்றுக்கொண்ட வேடத்தை முழுமையாக நியாயப்படுத்தி, மற்றவர்களை திருப்திபடுத்துவதுடன், தானும் திருப்தி அடைய முனைவார் சிவாஜி.
    அந்தப் படம் ஓடுமா ஓடாதா? ஓடுவதற்கு வாய்ப்பில்லாத இந்த படத்திற்கு அதுவும் சாதாரண படத்திற்கு நாம் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டு சிரமப்பட வேண்டுமா என்றெல்லாம் நினைக்கமாட்டார்.
    எடுத்துக்காட்டாக, ஒரு நிகழ்ச்சியை ஆரூர்தாஸ் தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒப்பனை அறையில் நான் அவரிடம் கேட்டேன்.
    `ஏண்ணே! எழுதறதுக்கு எனக்கும், நடிக்கிறதுக்கு உங்களுக்கும் `ஸ்கோப்’ இல்லாத இந்த படத்தை ஒப்புக்கிட்டு நீங்க நடிக்கணுமா ?’
    `நீ ஏன் எழுதறே?’
    `நீங்க சொன்னதனால எழுதுறேன்.’
    `இல்லேன்னா?’
    `நிச்சயமாக எழுத மாட்டேன்.’ இது ஆக்*ஷன் ஓரியண்டட் பிலிம்.
    எம்.ஜி.ஆர்., நடிக்க வேண்டிய படம். இந்த வேஷம் உங்களுக்கு `சூட்’ ஆகவே ஆகாது. அதனால்தான் சொன்னேன்! சிவாஜி தொடர்ந்து, `நீ சொல்றது எனக்குத் தெரியாதுன்னும் நினைக்கிறியா? நல்லா தெரியும். இந்த வேஷம் எனக்கு ஒரு நல்ல மாறுதலா இருக்கும்னு தயாரிப்பாளர் சொல்றாரு. அதோட அவர் எனக்கு எவ்வளவு வேண்டியவர்ன்னு உனக்கு தெரியும். அதனால ஒப்புக்கிட்டு நடிக்கிறேன்.
    ஆரூரான்! ஒண்ணு சொல்றேன் தெரிஞ்சுக்க. இனிமே நான் நடிச்சு பேரு வாங்கணும்ங்கிற அவசியம் இல்லை. அந்த மாதிரி நீயும் எழுதி பேரு வாங்கணும்ங்கிற அவசியம் இல்லை. நம்மள வச்சு வெற்றி படம் பண்ணிக்கவேண்டியது தயாரிப்பாளர் பொறுப்பு. அவர் நமக்கு காசு கொடுக்கிறாரு. வாங்குற சம்பளத்துக்கு வஞ்சகம் இல்லாம கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டியது நம்ம கடமை. அவ்வளவுதான். இதுதான் என் கொள்கை. நீ என்ன வேணும்னாலும் நினைச்சுக்க. அதைப் பத்தி எனக்கு கவலை இல்லை’
    சிவாஜியை அழைத்துக்கொண்டு ஜப்பானுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தியும் கூட அவருக்குச் சிறிதும் பொருந்தாத `கராத்தே வீரன்’ வேடத்தில் நடிக்க வைத்து, 1980ல் வெளிவந்த அந்தப் படம் `தர்மராஜா’. படம் தோல்வியுற்றது. அதன் தயாரிப்பாளர், சிவாஜி ரசிகர் மன்றத்தலைவரும் பதிப்பாளர்களின் முன்னோடியுமான சின்ன அண்ணாமலை. அதற்கு முன்னதாக அதே சின்ன அண்ணாமலை நல்ல குடும்பக் கதையைத் தேர்ந்தெடுத்து சிவாஜி – கே.ஆர். விஜயாவை நடிக்க வைத்து தயாரித்து 1978ம் ஆண்டு வெளியான `ஜெனரல் சக்ரவர்த்தி’ வெற்றிப்படமாக அமைந்தது. ஒரு நடிகனுக்கு நடை, உடை,பாவனை மிக முக்கிய அம்சம்.
    ஆம், கயிலாயநாதரின் நடையை `திருவிளையாடல்’ படத்திலும், காஞ்சி முனிவரின் அந்தத் தளர் நடையை `திருவருட்செல்வர்’ படத்திலும், வீரபாண்டியனின் சிங்கநடையை `கட்டபொம்மன்’ படத்திலும் காவல்துறை அதிகாரியின் கம்பீர நடையை ` தங்கப்பதக்கம்’ படத்திலும் கைரிக்*ஷாக்கார முதியவரின் நடக்க இயலாத நடையை `பாபு’ படத்திலும் ஒரு பெரிய கோடீஸ்வர செல்வந்தரின் மிடுக்கான நடையை `தெய்வ மகன்’ படத்திலும் ரசித்துப் பார்க்கலாம்.
    `தெய்வ மகன்’ படத்தில் மனைவி பண்டரிபாயுடன் பேசிக்கொண்டே மாடிப்படிகளில் அடி மேல் அடி எடுத்து வைத்து நடந்து வரும் அந்த அழகு– ஓர் அடிக்கும் இன்னொரு அடிக்கும் இடையில் `ஸ்கேல்’ எடுத்து வைத்து எடுத்தது போன்ற அந்த அளவு `டைமிங்.’
    இந்த சிறப்புக்கள் எல்லாமே சிவாஜி கணேசன் என்கிற ஒரே ஒரு நடிகருக்கு மட்டுமே உரித்தானவை.
    அடுத்தது உடை!
    ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கு ஏற்ற உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதில் எப்போதுமே மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்.
    இந்த படத்துக்கு இந்த பாத்திரத்துக்கு இந்த உடைதான் என்று இயக்குநர், தையற்கலைஞர் உட்பட எவருமே அவருக்கு எடுத்துச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அனைத்துமே அவருக்கு அத்துப்படி.
    மராட்டிய மன்னன் மாவீரன் ‘சிவாஜி’ முதல் அக்பரின் புதல்வர் `ஜஹாங்கீர்’ வரையில், நாதஸ்வர வித்வான் `ஷண்முகசுந்தர’த்திலிருந்து `மிருதங்க வித்வான்’ வரையில் `பாசமலர்’ படத்தின் கடைசி உச்சக்கட்ட காட்சியில் பழைய கறுப்புக் கோட்டு போட்டிருக்கும் ஏழை ராஜசேகரிலிருந்து ` வியட்நாம் வீடு’ படத்தில் வரும் `பிரஸ்டீஜ் பத்மநாப அய்யர்’ வரை, அத்தனை படங்களின் கதாபாத்திரங்கள் அணிந்திருக்கும் அவ்வளவு உடைகளும், அவருக்கு பொருத்தமான விதவிதமான `தலை’ விக்குகளும் சிவாஜியே தேர்ந்தெடுத்துக் கொண்டவை.
    அவருடைய ரசனையையும், தேவையையும் முழுக்க முழுக்க நன்கு புரிந்துகொண்டு அவருடைய விருப்பத்திற்கு தகுந்தாற்போல் உடைகளை தைத்து கொடுப்பதில் கைதேர்ந்த நிபுணரான பி. ராம கிருஷ்ணன் என்பவர் இருந்தார். பழைய சிவாஜி பட `டைட்டில்களில்’ இவரது பெயரைப் பார்க்கலாம்.
    இவர்தான் சிவாஜி நடித்து, ஆரூர்தாஸ் வசனம் எழுதி, ஏ. பீம்சிங் இயக்கிய `படித்தால் மட்டும் போதுமா?’ படத்தின் தயாரிப்பாளர். சில சமயங்களில் சிவாஜியிடம் நேரில் வாங்கிக் கட்டிக்கொண்டதை ஆரூர்தாஸ் நேரில் கண்டு எழுதியிருக்கிறார். அரை அங்குலம் `லூஸா’கவோ `டைட்’டாகவோ இருந்தால் அவ்வளவுதான்! கோபம் வந்து `ஏண்டா! நீயெல்லாம் துணி தைக்கிறவனா இல்லே தோல் தைக்கிறவனா?’ என்று திட்டுவார். அதையெல்லாம் கண்டு கொள்ளாத `கில்லாடி’ ராமகிருஷ்ணன்,
    ஒரு நொடிப்பொழுதில் எப்போதுமே தன் சட்டையில் குத்தி வைத்திருக்கும் ஊசி நூலை எடுத்து அங்கேயே, அப்போதே ஒரு சிறு தையல் போட்டு சரிசெய்து சிவாஜியின் கோபத்தை போக்கிவிடுவார். படங்கள் அன்றி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனக்குப் பொருத்தமாகவும், ஒழுங்காகவும், தூய்மையாகவும் உடைகள் அணிவதை சிவாஜி வழக்கமாகக் கொண்டிருந்தார். நடிப்பில் மட்டுமல்ல, மடிப்பு கலையாமல் உடைகள் அணிவதிலும் அவருக்கு நிகர் அவரே! படப்பிடிப்புக்கு ஸ்டூடியோவிற்குள் வரும்போது சலவை செய்யப்பட்ட நான்கு முழ கதர்வேட்டி, கதர் அரைக்கைச் சட்டையுடன் எளிமையாக வருவார்.
    அவற்றைப் பூப்போல அலுங்காமல் குலுங்காமல் கழற்றி மடிப்புக் குலையாமல் `ஹேங்கரில்’ மாட்டி வைத்துவிட்டு, லுங்கி கட்டிக்கொண்டு பனியன் கூட இல்லாத வெற்றுடம்புடன் ஒப்பனை செய்து கொள்வார்.
    (தொடரும்)

  15. #2428
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'ஞானஒளி'



    தமிழ் சினிமாவின் மானம் காத்த 'மான' ஒளி.

    சென்ற வாரம் 'சன் லைஃப்' தொலைக்காட்சியில் மீண்டும் காணும் வாய்ப்பு. அமர்ந்த இடத்தை விட்டு எழ இயலவில்லை. நூறு முறைகள் பார்த்திருந்தாலும் அத்தனை காட்சிகளும் அன்றுதான் காண்பது போல அத்தனை ஆச்சர்யங்கள். எது சம்பந்தமான வர்ணிப்பும் அலுத்துப் போகும் சில நாட்களில் அல்லது சில வாரங்களில் அல்லது சில மாதங்களில். ஆனால் 'ஒளி' அப்படியா? உலகிற்கு ஒளி தரும் சூரியன் மங்குவான். இரவில் ஒளி தரும் சந்திரன் மறைவான். ஆனால் 'ஞான ஒளி'யாய் பிரகாசிக்கும் என் ஆண்டனியும், அருணும் மங்குவதில்லை. ஒளிர, ஒளிர பிரகாசம் அதிகமாகுமே தவிர குறைவதில்லை.

    இது எதிலும் சேராத தனி ஒரு அற்புதம். அதியற்புதம். இது சினிமாவா? இல்லை...இல்லை...இது வேதம். இது கீதை அல்ல...இது பைபிள் அல்ல...இது குர்-ஆன் அல்ல. ரிக், யஜுர், சாம, அதர்வணமும் அல்ல. இவையெல்லாம் ஒன்று சேர்ந்த ஒளி வேதம். ஒரே வேதம். இந்த வேதத்திற்கு ஒரே கடவுள். ஒரே இறைவன். நடிப்பின் இறைவன்.

    என்ன காட்சிகள்! என்ன வசனங்கள்! என்ன கதையமைப்பு! என்ன நடிகர்கள்! என்ன இயக்கம்!. நம் எண்ணமெல்லாம் நிறைந்த இயக்கம். ஒவ்வொரு காட்சியும் செதுக்கி செதுக்கி எடுத்த சிற்பம்.

    அந்த மூன்று மணி நேரமும் இரு கண்களின் ஓரமும் ஏன் என் கண்களில் நீர்த்திவலைகள் திரண்டு கொண்டே இருக்கின்றன? எதற்கும் கரையாத கல் நெஞ்சம் 'ஒளித்தேவனை'ப் பார்த்ததும் மெழுகாக உருகுகிறதே! என்ன காரணம்? புகை பிடிக்காமலேயே நெஞ்சடைப்பு ஏற்படுகிறதே! அது ஏன்? மனசெல்லாம் பாரமாய் ஒரு உருண்டை சோறு கூட உள்ளுக்குள் இறங்க மறுக்கிறதே! அது என்ன விந்தை!

    இத்தனைக்கும் காரணம் பாவப்பட்ட அந்த மனிதன். ஆண்டனி..ஆழியளவு அல்லல் பட்டவன். நிம்மதி என்பதை கிஞ்சித்தும் அறியாதவன். அவன் நிம்மதி இல்லாத போது நான் மட்டும் எப்படி நிம்மதி கொள்வது?

    தமிழ் சினிமா மட்டுமல்ல: இந்திய சினிமா மட்டுமல்ல: ஒட்டுமொத்த உலக சினிமாவும் இந்த நடிப்பின் தேவனைப் பார்த்து,

    'தேவனே! எம்மைப் பாருங்கள்... எம் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்' என்று பாவ மன்னிப்பு கேட்டே தீர வேண்டும்.

    அந்த 'ஞான' நடிகனின் நடிப்புச் சிதறல்கள் இப்போது புதிதாய்ப் பட்டவை.... பகிர்ந்து கொள்கிறேன் உங்களுடன்.

    இது கோபாலிற்கு.

    பாதிரியாரிடம் சிறுவன் ஒருவன் இன்ஸ்பெக்டர் அவரைப் பார்க்க வந்திருப்பதாகச் சொல்ல, தன் ஆண்டனி வழக்கம் போல எங்கோ வம்பு வளர்த்து வந்திருக்கிறான் என்று கருதி கீழே அமர்ந்து ஃபாதரின் கையை அமுக்கிக் கொண்டிருக்கும் என் தேவனைப் பார்த்து ஃபாதர்,

    'இன்னைக்கு என்னடா வம்பு பண்ணே? இன்ஸ்பெக்டர் தேடிகிட்டு வந்திருக்காரே...இன்னைக்கு யார் கூட சண்டை பிடிச்சே?'

    என்று கேட்க,

    ஃபாதரின் கையை சின்ஸியராக பிடித்துக் கொண்டிருப்பவர் சிறுவனுக்கும், ஃபாதருக்கும் நடக்கும் சம்பாஷணை அறியாதவராக, அல்லது கண்டு கொள்ளாதவராக ஃபாதர் தன்னை அந்தக் கேள்வி கேட்டவுடன், ஃபாதர் தன்னைத்தான் கேட்கிறார் என்று 'திடு'மென உணர்ந்து, நிலைமைக்கு வந்து, அந்த சிறுவனை அப்போதுதான் பார்ப்பது போல ஒரு பார்வை வினாடியில் பார்த்துவிட்டு, ஃபாதரைப் பார்த்து,

    'என்னை கேக்கிறீங்களா? நல்லா இருக்கே!'

    என்று செய்யாத பழியை ஏற்றுக் கொள்ளாத பாவம் காட்டுவது பட்டையைக் கிளப்பும். சிறுவனுக்கும், ஃபாதருக்கும் நடக்கும் உரையாடலில் அது பற்றி பாதிரியார் மறைமுகமாக தன்னைத்தான் சந்தேகப்படுகிறார் என்பதை செய்யும் வேலையில் உணரத் தவறி, லேட்டாக கிரகித்துக் கொள்ளும் வினாடி நடிப்பை, அதை வார்த்தைகளில் வெளிப்படுத்தும் விதத்தை அள்ளி அள்ளிப் பருகலாம்.


    இதுவும் கோபாலுக்கு.

    இன்ஸ்பெக்டருக்காக சேர் கொண்டு வரச் சொல்லி ஃபாதர் இவரிடம் பணிக்க, இப்போது மேஜர் தன்னை பாதரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள சர்ச் உள்ளே நுழைய, கையில் சேரைக் கொண்டு வரும் நடிகர் திலகம் மிக அழகாக மேஜர் அருகே நாற்காலியை வைத்து விட்டு ரூமிற்குள் செல்வார். இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா?

    தனக்கு அறிமுகமில்லாத நபர் ஒருவர் ஃபாதரைப் பார்க்க வந்தவுன் ஃபாதரின் கட்டளைக்கேற்ப நாற்காலியைக் கொண்டு வந்து போட்டு விட்டு 'யாரோ ஒருவர் பாதிரியாருக்குத் தெரிந்தவர் அவரைப் பார்க்க வந்திருக்கிறார்... நமக்கு அங்கே இனி என்ன வேலை? அவர்கள் ஏதாவது பெர்சனலாக பேசிக் கொள்வார்கள்' என்பது போல நாற்காலியைப் போட்டுவிட்டு ஆண்டனி ஒதுங்கிப் போவது படுஇயல்பு. (கோபால்...நிச்சயம் இந்தக் காட்சியை சிலமுறைகள் பார்க்கவும். நம் திலகம் அவ்வளவு இயல்பாக இந்தக் காட்சியில் வந்து அழகு படுத்தியிருப்பார்.)

    இது முரளி சாருக்காக.

    பிரளயம் நிகழந்து விட்டது. எல்லாம் முடிந்து விட்டது. வாழ வேண்டிய மகள் கெட்டுப் போயாகி விட்டது. வாழை மரங்களும் வெட்டிச் சாய்க்கப்பட்டு விட்டன. ஆண்டனியும் மகளால் வெட்டாமலேயே சாய்க்கப்பட்டு விட்டான். இப்போது குடிசைக்குள் நிம்மதியற்ற அமைதி. தந்தையிடமும், மகளிடமும். குடிசையில் முழங்கால்களின் மேல் கை வைத்தபடி சிலை மாதிரி அமர்ந்திருப்பார்.

    மகள் வந்து,

    'அப்பா! கஞ்சி அப்படியே இருக்கு'



    என்று சொல்ல, அப்படியே சைட் போஸில், க்ளோஸ் -அப்பில் திரும்பி, தன் மகளுக்காக ஆசையுடன் வாங்கி வந்த பூந்திப் பொட்டலம் கீழே விழுந்து சிதறி அதில் எறும்புகள் மொய்ப்பதை பார்ப்பார். மகளின் வாழ்வு அது போல சீரழிந்து விட்டதே என்று அர்த்தம் காட்டுவார். வலது கண்ணின் வழியாக ஒருதுளி நீர் கன்னத்தில் சொட்ட, அதை அப்படியே தோள்ப்பட்டையால் துடைத்துக் கொண்டு, எழுந்து, குடிசைக்கு வெளியே வேகமாக, அட்டகாசமாக நடந்து வருவார். இடது கை அந்தப் பழக்கம் உள்ளவர்கள் போல உடலை விட்டு சற்று தள்ளி தளர்வாக இருக்கும். (இப்படி சில பேரை அப்படியே கண்கூடாகக் கண்டிருக்கிறேன்) இடப் பக்க தோள்ப்பட்டையை விட வலப்பக்கத் தோள்பட்டை சற்று தாழ்ந்திருக்கும். சாரதா கூப்பிடும் போது சரியாக ஏழாவது ஸ்டெப்பில் அப்படியே நிற்பார்.

    'அப்பா' என்று சாரதா மீண்டும் அங்கிருந்து கதறும் போது இடது கையை மார்பின் நடுவில் வைத்து, வார்த்தைகள் வெளிவராத நிலையில் உதடுகள் ஒன்று சேர்ந்து வெதும்பித் துடிக்க, பேச இயலாதவராய், பேசப் பிடிக்காதவராய் மார்பிலிருந்து கை எடுத்து 'இனி நான் உனக்கு அப்பனில்லை' என்ற அர்த்தத்தில் இடக்ககையால் பாவம் காட்டி, அப்படியே கையைப் பின்பக்கம் கொண்டு சென்று பின்னால் தூரத்தே தெரியும் சர்ச்சை சுட்டிக் காட்டுவார். மகளின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார். உடல் நேராக நின்றபடி இருக்க, இடக்கை மட்டும் பின்னால் படுஅற்புதமாக நீண்டு ஆட்காட்டி விரல் சர்ச்சை சுட்டிக் காட்டும். 'இனி உனக்கு...இல்லை இல்லை... நமக்கு எல்லாம் அந்தப் ஃபாதர்தான்...அந்த சர்ச்தான்' என்பதை விரல் அற்புதமாக சுட்டிக் காட்டி உணர்த்தும். ஆத்திரம், கோபம், இயலாமை, முடியாமை, வெறுப்பு, அழுகை அத்தனையையும் துடிக்கும் அந்த உதடுகள் உணர்த்தும்.

    அந்த அற்புத போஸ் முரளி சார் இதோ உங்களுக்காக.



    ராகவேந்திரன் சார்,

    நாளை உங்களுக்காக ஆண்டனி ஒரு காட்சியில் இன்னொரு கோணத்தில் அலசப்படுவா(ர்)ன்.
    Last edited by vasudevan31355; 11th November 2016 at 11:47 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes Harrietlgy liked this post
  17. #2429
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அனைத்து நண்பர்களுக்கும் பண்டிகைக்கால நல்வாழ்த்துக்கள். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  18. #2430
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    சன் லைஃப் தொலைக்காட்சி மட்டுமல்ல, அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் தினமும் ஒளிபரப்பினாலும் ஒளி குன்றாத ஞான ஒளியைப் பற்றிய தங்கள் பதிவு, நடிகர் திலகத்தைப் பற்றிய எங்கள் அறிவு ஒளியை சுடர் விட்டுப் பிரகாசித்து ஒளிரச்செய்கிறது. தங்களுக்கு உளமார்ந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •