-
11th September 2016, 09:23 AM
#2131
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2016 09:23 AM
# ADS
Circuit advertisement
-
11th September 2016, 09:23 AM
#2132
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2016, 09:36 AM
#2133
Senior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2016, 09:38 AM
#2134
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2016, 09:38 AM
#2135
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2016, 09:39 AM
#2136
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2016, 09:40 AM
#2137
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2016, 10:26 AM
#2138
Junior Member
Devoted Hubber
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 143 – சுதாங்கன்.
பச்சை விளக்கு’ வளர்ந்து கொண்டே வந்தது! படம் எட்டாயிரம் அடி வரை வந்துவிட்டது. அப்போதுதான் அந்த சிக்கல் வந்தது. படத்தை ஏவி.எம். செட்டியார் பார்த்தார். படம் பார்க்கும்போதே முகத்தை சுளித்தார். படம் பார்த்து முடிந்தபின் அவருக்கு திருப்தி இல்லை.
`எடுத்த வரையில் ஸ்க்ராப் பண்ணிடுங்கப்பா. இதே பேக்கிரவுண்டில் வேறு கதை தயார் பண்ணிடுங்க’ என உறுதியாக சொல்லிவிட்டார்.
அப்படியே வேறொரு கதையை தயார் செய்து எடுத்தார்கள். அதில் ஏவி.எம். ராஜன் – புஷ்பலதா காட்சிகளை டெவலப் செய்து மீண்டும் எடுத்தார்கள். அத்தனை பாடல்களும் செம ஹிட்! மறுபடியும் கண்ணதாசன் – விஸ்வநாதன் காம்பினேஷன் கொடி கட்டி பறந்தது. இந்த தொடரைப் பற்றி நான் ஏற்கனவே இங்கே சொல்லியிருக்கிறேன். அதாவது நான் சிவாஜி படங்களை வருட வரிசையில் எழுதவில்லை.
அதிக சுவாரஸ்யம் கொண்ட சம்பவங்களை அடக்கிய பின்னணி தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தான் எழுதி வருகிறேன்.
அதனால் இப்போது `பச்சை விளக்*கு’ படத்திற்கு முன்னால் வந்த படத்தை பார்ப்போம். பிரபல கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸின் அருமையான வசனங்களை நாம் `பாசமலர்’ படத்தில் பார்த்தோம். அந்தப் படம் முடியும் தறுவாய்! ஒரு நாள் காலை சிவாஜியின் மேக்–-அப் அறைக்குள் நுழைந்தார் ஆரூர்தாஸ்!
கண்ணாடி வழியாக இவர் வருவதை கவனித்த சிவாஜி, `….. வா, ஆரூரான்’, அப்படித்தான் சிவாஜி ஆரூர்தாஸை அழைப்பார். ‘காலங்காத்தாலே உனக்கு ஒரு சந்தோஷமான சேதி சொல்றேன்.. நம்ம ` காஸ்டி*யூமர்’ ராமகிருஷ்ணனுக்கு சிவாஜி பிலிம்ஸ் ஆதரவோடு ஒரு படம் பண்ணிக் கொடுக்கப்போகிறோம்.
இதே ` பாசமலர்’ யூனிட்டுதான் ஒர்க் பண்றாங்க.` பீம்பாய்’ டைரக்*ஷன். நான், ஜெமினி கணேசன், சாவித்தி*ரி, ராதா அண்ணன் எல்லாம் நடிக்கிறோம். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசை. கண்ணதாசன் பாட்டு. வசனம் எழுதுறதுக்கு நான் உன்னைத்தான் சொல்லியிருக்கேன். நீ சண்முகத்துக்கிட்டே பேசி, அட்வான்ஸ் வாங்கிட்டு எழுத ஆரம்பி. நம்ம சிவாஜி பிலிம்ஸ் ரிலீஸ்தான்.
அத்தனை விரைவாக மீண்டும் சிவாஜி படம் வரும் என்று ஆரூர்தாஸ் நினைக்கவில்லை. (இதையெல்லாம் ஆரூர்தாஸே அவருடைய ‘சிவாஜி கண்ட சினிமா ராஜ்ஜி*யம் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்
அதே சமயத்தில் ஆரூர்தாஸ் நினைக்காத ஒரு சம்பவம் நடந்தது. இரண்டாவது படத்தின் கதையைக் கேட்ட ஜெமினி, சிவாஜியின் அண்ணன் பாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
சிவாஜி, பீம்சிங், சாவித்திரி எல்லோருமே எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள்.
ஜெமினி இசையவில்லை. ஆரூர்தாஸும் ஜெமினியும் நெருங்கிய நண்பர்கள். அதனால் ஆரூர்தாஸ் சொன்னால், ஜெமினி கேட்பார் என்று அவரை அனுப்பினார்கள்.
இவரும் போய் ஜெமினியிடம் விளக்கமாகச் சொன்னார்.
`வாத்யாரே! (அப்படித்தான் ஜெமினி ஆரூர்தாஸை அழைப்பார்) நான் சொல்றதை நல்லா கவனி. சாவித்திரி, வாழ்க்கையில் என் மனைவி. கதைப்படி சிவாஜிக்காக அவளை பெண் பாக்கப் போற நான், அவ மேலே ஆசைப்பட்டு சூழ்ச்சி பண்ணி, என் தம்பியான சிவாஜியை ஏமாத்தி அவளை கட்டிக்கிடறேன். அவ தனக்கு மனைவியா வராததனால தம்பி சிவாஜி வாழ்க்கையில் நிம்மதியில்லாம கஷ்டப்படறான். நான் சாவித்திரியோடு சந்தோஷமாக வாழ்வதாக கதை போகிறது. படத்தில் `பக்கா’ வில்லன் ஆகி, ரசிகர்களோட வெறுப்புக்கு ஆளாக வேணாம். வேண்டாம், இந்த விஷப்பரீட்சை, என்னை விட்டுடு’.
`அண்ணே நீங்க சொல்றது சரிதான். ஆனால் என்னை இங்கே கொண்டு வந்து அறிமுகப்படுத்தினது நீங்கதான். இதே யூனிட்ல இன்னொரு படம் வரும்னு நான் எதிர்பார்க்கலே. அதுல நீங்க ஒருத்தர் இல்லாமப் போனா என் மனசுக்கு வேதனையா இருக்கும். அதனாலதான் சொல்றேன்’ என்றார் ஆரூர்தாஸ்.
`அவ்வளவுதானே… கவலைப்படாதே வெகு சீக்கிரத்துல இதே யூனிட்டோட இன்னொரு படத்துக்கு உனக்கு அழைப்பு வரப்போகுது. அதுல நான் உன்னோடு இருப்பேன்’ என்றார் ஜெமினி.
ஜெமினி நடிக்காத அந்த வேடத்தில் பாலாஜி நடித்தார். அந்த படம் 14.4.1962ம் ஆண்டு வெளிவந்தது. அந்த படம் நூறு நாட்கள் ஓடியது. அந்த படம்தான் ‘டித்தால் மட்டும் போதுமா’.
இப்போது படத்தைப் பார்த்தாலும் ஜெமினி சொன்னது எத்தனை உண்மை என்பது புரியும். காதல் மன்னனாக சிவாஜியின் நண்பராக பார்த்த ஜெமினியை வில்லனாக பார்க்க ரசிகர்கள் விரும்பியிருக்க மாட்டார்கள்.
பாலாஜி அந்த வேடத்திற்கு மிகவும் சரியாக பொருந்தியிருப்பார்.
`படித்தால் மட்டும் போதுமா’ ஒரு வித்தி*யாசமான கதைக்களம்.
இதிலும் கண்ணதாசன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஜோடி கொடி கட்டி பறந்தது.
எப்போதும் போலவே இந்த படத்தின் பாடல்களும் படம் வெளிவருவதற்கு முன்பே இலங்கை வானொலியில் பட்டையை கிளப்பியது.
அதிலும் முதலில் எல்லோரையும் ஈர்த்தது, டி.எம்.எஸ். பி.பி.எஸ். சேர்ந்து பாடிய `பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை. படத்தின் கதையையே கோடி, காட்டியிருப்பார் கண்ணதாசன்.
இந்த படத்தில் `தன்னிலவு தேனிறைக்க வாழைமரம் நீர் தெளிக்க’ ஒரே பாடலை மட்டும் மாயவநாதன் எழுதியிருப்பார்.
இந்த படம் வெளியான போது எனக்கு நான்கு வயது. பின்னாளில் மீண்டும் திரையிடப்பட்ட போது, இந்த படத்தில் வரும் `நல்லவன் எனக்கு நானே நல்லவன்’ பாட்டுக்கு சிவாஜி நின்று கொண்டே ஆடும் ஆட்டத்திற்கும், அவருடை*ய கை அசைப்பிற்கும் தியேட்டரில் எப்போது பார்த்தாலும் விசில் பறந்து கொண்டிருந்தது.
அது சரி!
இதே யூனிட்டில் அடுத்து ஒரு படம் ஆரூர்தாஸுக்கு வரும். அதில் நானும் நடிப்பேன் என்று ஜெமினி சொன்னாரே!
அது என்ன படம்?
ஆரூர்தாஸும் கேட்கவில்லை, ஜெமினியும் சொல்லவில்லை!
`வரவேண்டிய நேரத்தில், வரவேண்டிய ஒன்று, வேண்டியவர் மூலமாக வரவேண்டியவருக்கு வந்தே தீரும்’.
அதுவும் எப்படி வந்தது?
ஒரே சமயத்தில் இரண்டாவது, மூன்றாவது படங்களுக்கும் எழுத வேண்டிய வாய்ப்பு ஆரூர்தாஸுக்கு வந்தது. ஒரு குடுகுடுப்பைக்காரர் சொன்னதைப் போல் ஜெமினி ஆரூடம் சொன்னார். அவர் சொன்னதைப் போலவே நடந்தது.
அந்த மூன்றாவது படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம்.
சிவாஜி. ஜெமினி, சாவித்திரி, சரோஜாதேவி, சவுகார் ஜானகி, குழந்தை கமலுக்கு இரட்டை வேடம் !
இந்த இரண்டு படங்களுமே மூன்று மாத இடைவெளியில் வந்து சக்கை போடு போட்டன.
ஆனால் மூன்றாவது படம் இரண்டாவது படத்திற்கு முன்பே வெளியானது.
காரணம் மூன்றாவது படத்தை தயாரித்தது ஏவி.எம். நிறுவனம்
அவர்கள் எப்போதுமே சரியாக திட்டமிட்டு படத்தை வெளியிடுவார்கள்.
அந்த படம்தான் `பார்த்தால் பசி தீரும்’.
(தொடரும்)
-
15th September 2016, 11:55 AM
#2139
Senior Member
Seasoned Hubber
-
17th September 2016, 01:37 PM
#2140
Junior Member
Diamond Hubber
Bookmarks