-
7th September 2016, 07:49 PM
#2121
Junior Member
Devoted Hubber
Nadai mannan Nadigarthilagam
-
7th September 2016 07:49 PM
# ADS
Circuit advertisement
-
7th September 2016, 10:49 PM
#2122
Server crash - 5 Sep 2016
Hello Hubbers,
We had a major server issue on Monday morning and subsequently the Hub went down for more than a day. We tried hard but in the end we had to resort to retrieving data from backups. However, the latest backup we could successfully retrieve was the one dated Sep 3. (The other backups didn't work as expected, unfortunately). So we lost posts from late Saturday and until Sunday. If you find some recent posts missing, it could be because of this. Sorry about that! We will try to avoid such incidents in future.
The above message is by RR, the administrator of our Hub.
-
8th September 2016, 08:18 AM
#2123
Junior Member
Newbie Hubber
நடிகர்திலகம் விருது பெறப்போகும் வாணிஸ்ரீ,ஒய் .ஜீ .மகேந்திரா ,விஸ்வநாதராய்,சங்கர்-கணேஷ் மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு வாழ்த்துக்கள்.
1)வாணிஸ்ரீ- எந்த சிவாஜி ரசிகரை கேட்டாலும் சிவாஜிக்கு பொருத்தமான மூவரை சொல்லுங்கள் என்றால் கண்ணை மூடி கொண்டு வரும் பதில் பத்மினி ,தேவிகா,வாணிஸ்ரீ.இதில் வாணிஸ்ரீ மிக அதிர்ஷ்டசாலி. அவருடைய மிக சிறந்த காதலி என்று அழைக்க படும் வசந்தமாளிகை லதாவாகும் வாய்ப்பு பெற்றவர். நடிகர்திலத்துடன் உயர்ந்த மனிதன்,நிறைகுடம்,குலமா குணமா ,வசந்தமாளிகை ,சிவகாமியின் செல்வன்,வாணிராணி,வாழ்க்கை அலைகள்,ரோஜாவின் ராஜா,புண்ணியபூமி,இளையதலைமுறை,நல்லதொரு குடும்பம் என்று 11 படங்களில் 1968 தொடங்கி 1979 வரை 11 வருடம் நடித்தவர்,சிவாஜியின் மிக சிறந்த ரசிகை என்று பலமுறை வெளி படுத்தி உள்ளார்.
2)ஒய் .ஜீ .மகேந்திரா ,கெளரவம் (1973) தொடங்கி சுமார் 35 படங்களில் நடிகர்திலகத்துடன் பணி புரிந்தவர். குடும்ப நண்பர். நடிகர்திலகத்தின் மிக சிறந்த பக்தர்களில் ஒருவர். எங்கே நடிகர்திலகத்துக்கு விழா நடந்தாலும் இவர் ஆஜர். இவர்களின் u .a .a .நாடகங்களை அடிப்படையாக்கி நடிகர்திலகத்துக்கு கிடைத்த முத்துக்கள் பார் மகளே பார் (பெற்றால்தான் பிள்ளையா),கெளரவம் (கண்ணன் வந்தான் ),பரீட்சைக்கு நேரமாச்சு(பரீட்சைக்கு நேரமாச்சு). நடிகர்திலகத்தின் மிக சிறந்த நாடகங்களை மீள் உருவாக்கம் செய்வதில் ஆர்வம் காட்டுபவர்.(வியட்நாம் வீடு). மிக குறிப்பிட வேண்டிய படம் பரீட்சைக்கு நேரமாச்சு.
3)விஸ்வநாத ராய்- இவர் நடிகர்திலகத்தின் 14 படங்களுக்கு கேமரா இயக்கம் செய்தவர். முக்கியமாக ஏ.சி.திருலோகச்சந்தர் படங்களில். பாபு (1971)தொடங்கி,பாரதவிலாஸ் ,அவன்தான் மனிதன்,அன்பே ஆருயிரே,டாக்டர் சிவா,ஜெனரல் சக்ரவர்த்தி,ஜஸ்டிஸ் கோபிநாத்,நான் வாழவைப்பேன்,தர்மராஜா,விஸ்வரூபம்,வசந்தத்தில் ஓர் நாள்,குடும்பம் ஒரு கோயில்,அன்புள்ள அப்பா ,தாம்பத்யம்(1987) 14 படங்கள். 16 வருடங்கள்.அவன்தான் மனிதன் குறிப்பிடத்தக்க படம். இவரின் அற்புதமான திறமையை ஆட்டுவித்தால் யாரொருவர் பாடலில் காணலாம்.
4)சங்கர் கணேஷ்- இவர் நடிகர்திலகத்தின் 70 படங்களுக்கு மேல் விஸ்வநாதன்-ராமமூர்த்தி மற்றும் விஸ்வநாதனுக்கு உதவியாக பணி புரிந்திருந்தாலும் ,துணை (1982),ஊரும் உறவும்,நெஞ்சங்கள்,பந்தம்,நீதியின் நிழல்,ஆனந்தக்கண்ணீர்,ராஜமரியாதை,வீரபாண்டியன்,அன்பு ள்ள அப்பா(1987) போன்ற 9 படங்களில் இசையமைப்பாளராக (இவற்றில் 2 சிவாஜி பிலிம்ஸ் படங்கள்)பணி புரிந்தவர்.சிவாஜியால் முன்னேறிய ஜீ.என்.வேலுமணி மருமகன்.
5)வெண்ணிற ஆடை நிர்மலா- நடிகர்திலகத்துடன் லட்சுமி கல்யாணம், தங்கசுரங்கம்,எங்கமாமா,தங்கைக்காக,பாபு, உனக்காக நான் போன்ற படங்களில் பங்கேற்றவர். தாமதத்தால் ,சிவகாமியின் செல்வனை லதாவிற்கு தாரை வார்த்தவர்.ஜோடியாக ஒரே படம் தங்கைக்காக. (உன்னை தேடி வரும் எதிர்காலம்)
முதல் மூவருக்கு நிஜமான மனம் கனிந்த வாழ்த்துக்கள். கடைசி இருவருக்கு வாழ்த்துக்கள்.
Last edited by Gopal.s; 8th September 2016 at 10:10 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th September 2016, 11:04 AM
#2124
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
Gopal,S.
நடிகர்திலகம் விருது பெறப்போகும் வாணிஸ்ரீ,ஒய் .ஜீ .மகேந்திரா ,விஸ்வநாதராய்,சங்கர்-கணேஷ் மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு வாழ்த்துக்கள்.
விருது பெறப்போகிறவர்களைப் பற்றி மிகவும் அருமையாக, அதேநேரத்தில் அனைத்து விபரங்களும் அடங்கியிருந்தாலும், ரத்தினச் சுருக்கமாக ஒரு முன்னோட்டம். அருமை கோபால் சார்.
Last edited by KCSHEKAR; 9th September 2016 at 12:18 PM.
-
10th September 2016, 10:30 PM
#2125
Senior Member
Devoted Hubber
Originally Posted by
sivaa
இங்குள்ள பிரச்சினைதான் என்ன?
Server crash - 5 Sep 2016
Hello Hubbers,
We had a major server issue on Monday morning and subsequently the Hub went down for more than a day. We tried hard but in the end we had to resort to retrieving data from backups. However, the latest backup we could successfully retrieve was the one dated Sep 3. (The other backups didn't work as expected, unfortunately). So we lost posts from late Saturday and until Sunday. If you find some recent posts missing, it could be because of this. Sorry about that! We will try to avoid such incidents in future.
The above message is by RR, the administrator of our Hub.
தகவுலுக்கு நன்றி முரளி சார்
என்னுடைய பதிவுகள் பல காணாமல் போயிருந்தன
விபரம் புரியாமல் இருந்தேன் .
தங்கள் தகவல்மூலம் விபரம் தெரிந்துகொண்டேன் நன்றி.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
10th September 2016, 10:42 PM
#2126
Senior Member
Devoted Hubber
முகநூல் ஒன்றிலிருந்து இப்படத்தை கொப்பி எடுத்தேன்.
அதில் இப்படத்தைபற்றிய விளக்கம் இருக்கவில்லை.
சிவாஜி கணேசன் ,எம் ஜீ ஆர் இருவரையும் அடையாளம் காணமுடிகிறது,
ஏனையவர்கள்பற்றிய விபரம் தெரியவில்லை.
எலலோர் முகத்திலும் ஒருவித சோகத்துடன்,
எதைப்பற்றியோ தீவிரமாக ஆலோசிப்பதுபோல் தெரிகிறது.
விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் தாருங்கள்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th September 2016, 08:59 AM
#2127
Senior Member
Devoted Hubber
திரிசூலம் திரைப்படம்
2 கோடி வசூல் பெற்றதற்கான
பத்திரிகை ஆதாரம்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th September 2016, 09:05 AM
#2128
Senior Member
Devoted Hubber
பாகிஸ்தான் யுத்த நிதிக்காக ஸ்ரீதரும் சிவாஜியும் தமிழகத்தின் ஆறு முக்கிய நகரங்களில் இணைந்து நட்சத்திர இரவுகள் நடத்தினர். அதில் நவீன துஷ்யந்தன் - சகுந்தலை நாடகம் முக்கியமானது. ஜெமினியும் சாவித்ரியும் ஜோடியாக நடித்தார்கள். மேடையில் அவர்கள் இணைந்து அரிதாரம் பூசியது அதுவே முதலும் கடைசியும். கிட்டத்தட்ட 12 லட்சங்களுக்கும் மேல் வசூலானது. அதைப் பெற்றுக் கொள்வதற்காகவே சென்னை வந்தார் பாரதப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி.
அதுவும் போதாமல் சிவாஜி, சாவித்ரி, ஸ்ரீதர் உள்ளிட்டோர் தாங்கள் அணிந்திருந்த ஆபரணங்கள் அனைத்தையும் சாஸ்திரியிடம் கொடுத்தார்கள். பிரதமருக்கு முன்பாக சாவித்ரி தன் காதுகளிலிருந்து கம்மலைக் கழற்றும் புகைப்படம் புகழ் பெற்றது.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th September 2016, 09:09 AM
#2129
Senior Member
Devoted Hubber
61ல் தமிழில் சிவாஜி கணேசன் நடித்த மூன்று படங்கள் டில்லிக்குச் சென்றன. மூன்றுமே பரிசு பெற்றுத் திரும்பின. பாவமன்னிப்பு ‘தங்கப்பதக்கம்’ பெற வேண்டியது. ஏ.பீம்சிங் அதற்காக மெனக்கெட விரும்பாததால் சில ஓட்டுகளில் அதை இழந்தது. அதற்கு இந்தியாவிலேயே சிறந்த இரண்டாவது படம் என்கிற விருதும், கப்பலோட்டிய தமிழனுக்கு வெள்ளிப் பதக்கமும், பாசமலருக்கு சிறந்த படம் என்கிற தரச் சான்றிதழும் கிடைத்தது.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th September 2016, 09:21 AM
#2130
Senior Member
Devoted Hubber
பாசமலரில் ஜெமினியின் வளர்ப்புத் தாயாக ஒரு அம்மா நடித்திருப்பார், அபாரம்...! சிவாஜி ஒரு பென்சிலைச் சீவிக்கொண்டு ஜெமினியிடம் " ஆனந் நீயும் உனது கூட்டமும் பக்டரியை இழுத்து மூடினாலும், ஒரு அகல்விளக்கின் சிறு ஒளியில் ஒரு ஜீவன் அங்கும் இங்கும் ஓடி வேலை செய்துகொண்டு இருக்கும் அதுதான் தொழிலாளி ராஜு " என்று பேசும் வசனம் அன்று எமது பஞ்ச் டயலாக்....!
(வாசகர் ஒருவரது பதிவு)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks