Page 208 of 400 FirstFirst ... 108158198206207208209210218258308 ... LastLast
Results 2,071 to 2,080 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2071
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    There is a screening of Patriatic Films on this occasion of Independance Day arranged by Ministry of Defence&Directorate of Film Festivals arranged from 12th to 18th Aug'2016 at Sirifort Auditoriam,New Delhi. Veerapandiya Kattabomman is chosen to be Screened on 14th Aug'2016 .


    கட்டபொம்மன் ஒவ்வொரு தமிழனின் பூஜா பலன். உச்ச அதிர்ஷ்டம். மேற்கு மக்களுக்கு ஒரு ten commandments ,ஒரு lawrence of Arabia போல கீழை மக்களின் சுதந்திர போராட்ட சரிதம். நிகழ்வுகள் ஓரளவு சரித்திரத்தை ஒட்டியவை ஆனாலும் நம் மக்களின் ரசனையை ஒட்டி அழகு படுத்த பட்ட பிரம்மாண்ட சரித்திரம். கட்டபொம்மனின் சரித்திரம் ,அவன் சுதந்திர காற்றுக்காக ஏங்கி , சிறுமையும் மடமையும் கொண்ட அடிமை கூட்டத்தில் தனித்தியங்கி வீரம் காட்டிய முன்னோடி. இந்த ஒரு அம்சம் போதும் அவனை நடையில்,உடையில்,அந்தஸ்தில்,பேச்சில் மக்களின் எதிர்பார்ப்புகேற்ப தமிழ் புலவர்களின் சங்க கால கவிதை தொடர்ச்சியாக காட்சியமைப்பில், வசனத்தில்,உயரிய நடிப்பில், தமிழகத்துக்கே பிரம்மன் வடித்த தந்த உன்னத நடமாடும் சிற்பத்தால் உரிய உன்னதம் கொடுக்க பட்டு, சிற்றரசன் என்று கீழ் நிலை விமர்சகர்கள் இகழ்ந்தாலும் பெரிய நோக்கம் கொண்ட உயரிய மனிதன், மகாராஜாவாக ஆக்க பட்டான். நிலத்தின் அளவை பொருத்தல்ல ,மனத்தின் திண்மையின் அளவு.கொண்ட நோக்கத்தின் அளவு.

    கட்டபொம்மனின் 1791 முதல் 1799 வரை ஆன கால கட்டமே இந்த படத்தின் காலகட்டம்.ஆற்காடு நவாப் வாங்கிய கடனுக்கு கும்பனியிடம் தனக்குட்பட்ட பாளய சிற்றரசர்களிடம் இருந்து வரி வசூல் உரிமையை கொடுப்பதில் இருந்து கட்டபொம்மன் அதை மறுத்து எதிர் வினை புரிந்தது, வெள்ளையர்கள் மற்றோரை தன் வசப்படுத்தி அடிமையாக்கி கட்டபொம்மனை தனிமை படுத்தி ,அவனுடன் போர் செய்து ,தப்பியோடிய அவனை பிடித்து தூக்கிலிடுவது படத்தின் காலகட்டம். கட்டபொம்மனின் வயதுதான் நடிகர்திலகத்தின் அன்றைய வயது. ஏறக்குறைய முப்பது. கட்டபொம்மனின் நிறம்தான் நடிகர்திலகத்தின் நிறம். அப்பப்பா இந்த படத்தில் அவர் இயல்பான நிறம் காட்ட பட்டதில்,ஒப்பனையாளர் பாதி சாதனை புரிந்து விட்டார்.

    கட்டபொம்மனின் உயரம்? அவன் உயரம் அத்தனை சமகால பாளய சிற்றரசர்களின் உயரம்,ஆற்காடு நவாப் உயரம், அனைத்துக்கும் மேலல்லவா? அந்த உயரமும் கிடைத்து விட்டது ஒரு நடிக மேதை தன் நடிப்பால் மட்டுமே தன் உயரத்தை மேலும் ஓரடி கூட்டி கொண்ட அதிசயம் .அதை நாம் மட்டுமே வியக்கவில்லை ,உலகமும் நாசரும் (எகிப்து அதிபர்)கூடவியந்தனர். தானே தேடி வந்து நடிகர்திலகத்தை பார்த்த நாசர் ,இவரா(?) ,படத்தில் ஆறடிக்கு மேல் தெரிந்தாரே ,என்று மூக்கில் விரலை வைத்தார்.

    இப்போது சொல்லுங்கள் கட்டபொம்மன் அதிர்ஷ்டம் செய்தவரா இல்லை ஒவ்வொரு தமிழனுமா என்று?actors should never feel small என்று சொன்ன Stella Adler கூட இப்படி ஒரு ஏகலைவனை அடைய கொடுத்த வைத்தவர்தானே?

    எனக்கு நமது சாஸ்திரிய சங்கீத கீர்த்தனைகளில் விமர்சனம் உண்டு. அது அவ்ளோ பெரிய விஷயமா ,ராகத்தை ஒட்டி வார்த்தை நிரப்பல்தானே என்று? ஆனால் தஞ்சாவூர் சங்கரன் என்பவர் மும்மூர்த்திகளின் கீர்த்தனை சிலதை எடுத்து விளக்கினார். ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் எப்படி முக்கியத்துவம் பெற்று ராகங்களின் அழகை மிளிர வைக்கிறது என்று.

    அதை போல் தான் நடிகர்திலகத்தின் வசன உச்சரிப்புகளும். தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது? எனக்கு முதல் பரிச்சயம் கட்டபொம்மனுடன் ஒலிச்சித்திரம் (soundtrack ) மூலமே ஏற்பட்டது.பிறகு வசன புத்தகத்தை வாங்கி வசனங்களை மனனம் செய்தேன். அவரை போல் பேச முயன்றேன்.

    listen only to soundtrack and you will realise the timbre ,modulation ,tonal clarity ,subtle and quick flow of variation in octave levels that plucks every known &buried emotional suggestions from the dialogue with its rhythm and beauty(He lived in his voice) .அவருடைய ஆண்மையான குரலில் வசனத்தின் ஒவ்வொரூ எழுத்தும் சொல்லும் அவரின் பாவம், ஏற்ற இறக்கம், தெளிவு, கவிதையின் அழகு,முக பாவத்திற்கேற்ற கை கால் உடல் அசைவுகளுக்கேற்ப மெல்லிய துல்லிய குரல் மாற்றங்கள், நம்மில் அந்த பாத்திரத்தை அதன் உணர்வை மனகண்ணில் காட்டி விடும் வலிமை கொண்டது.

    நான் இந்த குரலுக்கு அடிமையாகி ஐந்து வருடங்கள் கழித்தே படத்தை வெள்ளித்திரையில் கண்டேன்.ஆனால் சமீபத்தில் எனக்கொரு சந்தேகம். நாம் முதலில் வசனம்,பிறகு படத்தோடு வசனம் மகிழ்ந்து அதில் திளைக்கிறோம். ஆனால் உலக அங்கீகாரம் பெற்ற இந்த படத்தில், அந்நிய நாட்டை,மொழியை சார்ந்தவர்களை ,இந்த வசனங்களின் முழு பொருளும் அருமையும் தெரியாமலே அடிமை ஆக்கி ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகராக அங்கீகரிக்க வைத்ததே? எப்படி?



    எனக்கு முதல் அதிசயமே அந்த நடையும், கைகளை,விரல்களை அவர் பயன் படுத்தும் விதமும். நான் ஏற்கெனவே கூறிய படி நிறைய hollywood மற்றும் உலக நடிகர்கள் ,அந்த பாத்திர குணங்களை establish செய்ய ,விலங்குகளின் நடை, குணங்கள் இவற்றிலிருந்து inspiration எடுத்து, சமயங்களில் imitate கூட செய்வார்கள். வால்மீகி ராமாயணத்தில் ,வால்மீகியும் ராமனின் நாலு வித நடைகளை குறிப்பிடுவார். சிங்க நடை தலைமை குணத்தை குறிப்பது. புலி நடை சீற்றத்தையும் கோபத்தையும் குறிப்பது.யானை நடை பெருமிதத்தை குறிப்பது.எருது நடை அகந்தை,அலட்சியம் இவற்றை குறிப்பது.

    இந்த படத்தை நான் பார்த்த போது ,அதிசயித்த விஷயம் வால்மீகியை படிக்காமல் நடிகர்திலகம் இவற்றை உணர்ந்த விதம்.

    அவையிலும், நகர்வலம் செல்லும் போதும், மந்திரி மற்றும் நண்பர்களுடன் இருக்கும் நடை ஒரு சிம்மத்தின் தலைமை குணத்தை குறிக்கும் நடை.ஜாக்சன் தன்னை அவமதித்து கோபப் படுத்தும் போது ஒரு புலியின் சீற்றம் நடையில் தெரியும்.ஜக்கம்மாவிடம் போருக்கு விடை பெரும் போது ஒரு யானையின் பெருமிதம் தொனிக்கும்.கடைசியில் பானர்மன் தூக்கு தண்டனை விதித்ததும் தூக்கு மேடையை நோக்கி நடக்கும் கால்களில் ஒரு எருதின் அலட்சியம் தெறிக்கும்.

    ஒரு சராசரி நடிகனுக்கும், ஒரு மகா நடிகனுக்கும் உள்ள வேறுபாடு காலுக்கும், உடல் மொழிக்கும் ஏற்றவாறு கைகளை பயன் படுத்தும் முறை. ஜாக்சனுடன் ஆரம்ப பேச்சில் கைகளை சிறிது ஒடுக்கி கட்டுபடுத்துவார். எண்ணிக்கை தெரியாத குற்றம் என்னும் போது விரல்கள் எண்ணிக்கையோடு அசையும். போர் விடை பெரும் காட்சியில் வலது கை புறம் காட்டி இடது புற உரையில் கத்தியை சடாரென்று மணிக்கட்டை மட்டும் பயன் படுத்தி தள்ளும் தன்னம்பிக்கை நிறைந்த style .

    Mute பண்ணி பார்க்கும் போதும், ஜாக்சன் உடன் தன்னை கட்டு படுத்தும் ஆரம்ப restlessness நிறைந்த restraint , பிறகு தன் நிலையை உணர்த்தும் force ,வன்முறைக்கு படிப்படியாய் தள்ள படுவது வசனங்களின் உதவி மஞ்சளரைத்து கொடுக்கவே அவசியமில்லாமல் அந்நியர்களுக்கு புரிந்திருக்கும். தானாபதி பிள்ளை ஒப்பந்தத்தை மீறி கொள்ளையிட்ட குற்றத்தின் போது நடுநிலையை எண்ணி, சிறிதே குன்றி போய் பேசும் போதும், ஆனால் வரம்பு மீறும் போது மந்திரிக்கு சார்பாய் நிலை எடுத்து வருவது வரட்டும் என்று முடிக்கும் போதும் ..... வசனம் தேவையே படவில்லை. முகக்குறிப்புகள் போதுமானதே அன்னியருக்கு.
    போரில் தன்னை மீறி செல்லும் நிலைமையில் மகளுக்கு தைரியம் சொன்னாலும் நிலைமையை உணர்ந்து தளரும் நிலை, தானறியாமல் தன்னை மற்றோர் போர்களத்திலிருந்து அப்புறப் படுத்தி தப்பிக்க வைத்ததை எண்ணி மருகுவது இதற்கும் வசனம் தேவையே இல்லை.

    ஆனால் இறுதி காட்சி பற்றி எனக்கே சந்தேகம். அரைகுறை விமர்சகர்கள் குறிப்பிடுவது போல் இது வசனம் சார்ந்த காட்சியா என்று. ஆனால் சங்கிலியால் கட்ட பட்டு முன்னும் ,பின்னும், பக்கவாட்டிலும் நகர்ந்து ,முகக்குறிப்பை பார்க்கும் போது ,எதையும் சந்திக்க தயார் என்ற prime text எல்லோருக்கும் விளங்கி இருக்கும்.ஆனால், காட்டிகொடுத்த கோழைகளை எள்ளும் முறை,தன இனத்தை பற்றி குறிக்கும் பெருமிதம்,இப்போதும் பணிய விரும்பவில்லை என்ற குறிப்பு, என் நிலையே சரி என்ற conviction ,யாராவது வந்து தன் பணியை தொடர்வான் என்ற நம்பிக்கை, சாவின் விளிம்பை தொடும் அலட்சியம் என்று காட்சியின் subtext களும் வசனமின்றியே அந்நியர்களுக்கு புரிந்திருக்கும்.

    ஆனாலும் வசனம் புரியாமலே கூட ,அந்த காட்சியுடன் சிம்ம குரல் இயைந்து நடத்தும் வித்தையை சராசரி அந்நியனும் அதிசயித்து வியந்திருப்பான்.

    வீர பாண்டிய கட்டபொம்மன் காட்சியிலும், நடிப்பிலும் ,பிரம்மாண்டத்தை காட்டும் படம்.

    வசனங்கள் ஒரு கூடுதல் பலமே ,அது இல்லாமலே கூட இந்த படத்தின் வலு குறையவில்லை, என்று அரைகுறை விமர்சகர்கள் முகத்தில் படகாட்சிகளே தூ என்று கட்டபொம்மன் போலவே உமிழ்கிறது. இதை அவர் வேறு விதமாக நடித்திருக்கலாம் என்று சொல்லும் எட்டப்பர்களுக்கு அந்த பணியை நாமே செய்து விடலாம்.


    வீரபாண்டிய கட்டபொம்மனில் இன்னொரு அம்சத்தை நீங்கள் கவனித்தே ஆக வேண்டும். நான் குறிப்பிட்ட ten commandments ,Benhur ,Lawrence of Arabia போன்று multi -agenda கொண்ட வலுவான கதையம்சம்,உணர்ச்சி குவியல்கள்,பல்வேறு வலுவான பாத்திரங்கள் கொண்டதல்ல கட்டபொம்மன். 1791-1799 வரையான வெள்ளையர்களுடன் கருத்து வேறுபாடு,மோதல்,சக சிற்றரசர்களின் துரோகம் ,ஒன்றிரண்டு confrontation ,சமமற்ற போர் ,பிடிபட்ட பிறகு தூக்கு என்று ஒரே பாத்திரத்தை மட்டுமே நம்பிய ஒற்றை agenda கொண்ட படம். நான்கே முக்கிய காட்சிகள். ஜாக்சன் துரை யுடன் வாக்குவாதம்,தானாபதி பிள்ளை சம்பத்த பட்ட காட்சி,தப்பி சென்ற கால காட்சிகள், இறுதி தூக்கு மேடை காட்சி இவ்வளவுதான் முக்கியம். மற்றதெல்லாம் நிரவல். Hyper Rhetoric என்று ஒற்றை அம்ச படம்.

    ஒரு Artist Portfolio Repertoire என்ற ஒரே விஷயத்துக்கு மட்டுமே இவ்வகை படங்கள் தகுதி கொண்டது.

    மேற்கூறிய அம்சத்தை கட்டபொம்மனில் நீங்கள் கவனிக்க கூட முடியாமல் ஒரு cult படமாக,தமிழின் பிரம்மாண்ட படமாக உங்களை இன்று வரை அசை போட வைத்தது இரண்டே அம்சங்கள். நடிகர்திலகம், மற்றும் தயாரிப்பில் பிரம்மாண்டம்.

    இப்படத்தின் வெற்றி ஏற்கெனவே தீர்மானிக்க பட்டது என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். நடிகர்திலகம் இந்த பாத்திரத்தில் நடிக்க படம் தயாரிக்க படுகிறது என்றதுமே ,எல்லாமே முன்முடிவு செய்ய பட்ட ஒன்றாகி விட்டது.

    என் மகனே கூட என்னிடம் இந்த படத்தை பார்த்து , நான் முதலில் கூறிய சந்தேகத்தை கேட்டான்.நான் படத்தின் காலகட்டத்தை சொல்லி, அவனிடம் சொன்னேன். ஒரு சாதாரண சின்ன வியாபார பிரச்சினைகளில் வார கணக்கில் mood out ஆகி, சம்பந்தமில்லாமல் எல்லோரையும் எரிந்து விழுந்து சத்தம் போட்டு ,குடும்பத்தையே gloomy சூழ்நிலைக்கு தள்ளிய நாட்கள் உண்டு. அவனிடன் அதை சொல்லி, பிரச்சினை மிக பெரிது. மான ,சுய கௌரவ,மண் சார்ந்த பிரச்சினை. மோதுவதோ வலுவான ,தன்னை மீறிய எதிரி. சூழ்ந்திருப்பவர்களோ எதிரியுடன் இணைந்து விட்டனர். வெற்றி வாய்ப்பு குறைவு என்றாலும் எதிர்த்து நின்றே ஆக வேண்டும். படத்தில் சித்தரிக்கும் காலகட்டமே எதிர்ப்பு,துரோகம்,அவமானம்,வாக்குவாதம்,போர் ,தோல்வி ,தூக்கு இவ்வளவுதான் என்னும்போது ,எங்கே relaxation ,ease முடியும், படத்தின் agenda hyper rhetoric என்றேன் .புரிந்து கொண்டு மிக மிக ரசித்தான்.

    அடுத்ததாக ஒரு நண்பர் அரசவை சம்பத்த பட்ட காட்சிகளின் cliched formalities பற்றி கேட்ட போது,நான் அவர் கம்பெனி board meeting எடுத்து விளக்கினேன். tie ,suit ,proper assembling ,protocol ,formalities , fixed agenda ,jargonised technical presentation ,explanations ,பிறகு entertainment இதுதானே? அரசவை என்பது இதை விட formal ஆன இடமாயிற்றே? hierarchy என்பது இன்னும் வலுவாக இருந்த முற் காலமாயிற்றே? எப்படி present பண்ண வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?அந்த meeting இல் கூட chairmen ,MD ,VP ,senior managers behaviour ,role play வேறு படவில்லையா? ஒரு லாப நோக்கம் கொண்ட வர்த்தக நிறுவனமே இப்படி என்றால், அரசனை சுற்றி வாழ்வா சாவா பிரச்சினையை சந்திக்கும் அரசவை அதற்குரிய ceremonial procedures ,protocol ,formalities , cliched expressions &Language இருக்காதா என்றேன். நண்பர் தலையாட்டி சிந்தித்தார். புரிந்து கொண்டார் என்று புரிந்து கொண்டேன்.

    நம் பிரச்சினை என்னவென்றால் ,அறியாத கேள்விகளுக்கும் ,முட்டாள் தனமான விமர்சனங்களுக்கும் நாம் ஒரு compromise பாணி சமாதானம் சொல்கிறோமே தவிர, நம் conviction சரியானது என்று அவர்களை convince செய்ய வேண்டும். முக்கியம் நமக்கு அந்த படம் சம்பத்த பட்ட முழு விவரமும் தெரிய வேண்டும் .


    நடிப்பு மற்றும் complexity in character என்று பார்த்தால் ,மிக ஆராய்ந்தால் VPKB நிச்சயமாக அவருடைய Top 10 இல் வர முடியாது. ஆனால் நீங்கள் என்னிடமோ ,அல்லது யாரிடம் கேட்டாலும் இந்த படம் ஒரு பரவச அனுபவம், mesmerism முறையில் கட்டுண்டது போல ஒரு மயக்க ட்ரான்ஸ் நிலை. மற்ற படங்களை பற்றி வேறாக சொல்வோர் சிலர் இருக்க முடியும். ஆனால் VPKB பற்றி கேட்டால் ,அது எந்த தமிழனாக இருந்தாலும் சொல்லுவது ஒரே பதில். நான் சொன்ன மாதிரி single agenda நேர்கோட்டில், hyper ஒரு முகப்பட்ட உணர்ச்சி நிலை, ஒரே நோக்கம், ஒரே மையம் என்று போகும் இந்த படம் எப்படி இதனை சாதிக்க இயலும்?நான் பார்க்கும் போது என் முன்னோர்களுக்கு இருந்த folklore epic image கிடையாதே?அடுத்த தலைமுறையும் இந்த படத்தை சிலாகிக்கிறதே ,எப்படி சாத்தியமானது?எந்த மந்திரம் அதனை சாதித்தது?

    நடிகர்திலகம் Focusreach முறையில் நம் ஆத்மாவுக்குள் நுழைந்து சாதித்த அதிசயம்.

    தன் ஆத்மாவுக்குள் அந்த வீரனை நுழைத்து அவர் சாமியாடியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.Hysteric delirium which mesmerises the audience with psychedelic trip .

    இந்த படம் நடிகர்திலகத்தின் focusreach கொண்டே cult status அடைந்து ,எந்த கலைஞனை கேட்டாலும் இந்த பட காட்சியை நடித்ததே தன் முதல் audition என்று சொல்ல வைத்த அதிசயம்.இதை விரிவாக பார்ப்போம்.

    1)Focusreach முறையின் முக்கியம் அதீத energy level . சக்தியின் உக்கிர வெளிப்பாடு.உடலின் சோர்வு,பசி,துன்பத்தை கருதாது நோக்கத்தை நோக்கி செல்லும் அதீத வெளியீடு.இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், இதுதான் உச்ச சக்தி என்று நாம் கருதும் போது அடுத்தது அதனை மிஞ்சி உச்ச காட்சியில் இமயத்துக்கு மேலும் செல்லும்.

    2)அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் விட மேல் தளத்தில் விரிந்து நாயகனை superhero ஆக உணர்த்தும் விந்தை. இதை செயல்களின் துணையின்றி உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தியிலேயே சாதித்து ,நமக்கு மேலே அவர் என்று உணர வைத்த விந்தை. நாசரே இவர் உயரம் பல அடிகள் மேலே என்று நினைக்க வைத்த சாதனை.அனைத்து தரப்பினரையும்,வயதினரையும் ,தன் கீழ் பட்டவர்களாக படம் பார்க்கும் போது உணர வைத்த சாதனை.

    3)focus focus focus reach a peak ,move to other peaks என்ற முறையில் நடிப்பின் உணர்ச்சி வரைபடத்தில்(Emotional intensity mapping) சிகரம் தொட்டு தொட்டு மேற்செல்லும் முறை.

    4)மெய் வருத்தம் பாராத,தன்னை வருத்திய ஒரு முக சிந்தனை வெளிப்பாடு.
    (ரத்தமெல்லாம் கக்கி துடைத்து கொண்டு தொடர்வாராம்)

    5)வித விதமான வேறு பட்ட முயற்சி,சிந்தனை அதன் வழி செயல் பாடுகள்.

    6)சரி- தவறு என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு ,தான் செய்வதே மிக சரி என்று அனைவரையும் உணர வைக்கும் சக்தி. எடுத்த நோக்கமும் உன்னதமானதாக இருந்ததால் double impact .

    7) Adrenalin Rushes with High Stress levels . இந்த படம் எடுத்து கொண்ட காலகட்டமே stress level கட்டபொம்மனுக்கும் மேலாக இருந்தது. சிவாஜியின் Type A personality கொண்ட வெளியீட்டு முறை ,பார்க்கும் நமக்கும் வாளெடுத்து போர் புரிய வைக்கும் அளவு நரம்புகளை முறுக்கேற்றும்.வசனங்களும் அற்புதமாக இதற்கு இசையும்.

    8)அவர் மட்டுமே அந்த கணத்தில் முக்கியமானவர் என்று அந்த இருட்டின் கணங்களில் கட்டி வைக்கும் ஈர்ப்பு.

    எனக்கு தெரிந்த அளவில் இந்த focusreach அதிசயம் ,இந்த படத்தில் நடிப்பினால் அமைந்த அதிசயம் எந்த இந்திய படத்துக்கும் அதற்கு முன்போ பின்போ நடந்ததே இல்லை.


    வீரபாண்டிய கட்டபொம்மனில் என்னை மிக மிக கவர்ந்தது அவர் வீரத்தை மட்டுமே காட்டாமல் எதிரி தன்னை மீறியவன் என்றுணர்ந்து விவேகம் காட்டுவார். மானத்தை துறக்காமல் சமாதான வாசல்களை திறந்தே வைப்பார். ஜாக்சன் துரை தன்னை அவமதித்து அலைக்கழித்த போதும் ,பொங்கி வரும் கோபம் அடக்கி முடிந்த அளவு பொறுமை காப்பார் .நட்பு நாடி வந்ததை குறிப்பார். பிறகு தானாபதி பிள்ளை தப்பி வந்து இன்னொரு சமாதான முயற்சி குறித்து பேச,பொங்கியெழும் ஆலோசனை குழுவை அணைத்து பேசி, சமாதானத்தை யோசிப்பதில் தவறில்லை என்று மெல்லிய தொனியில் வலிக்காமல் சொல்லுவார். தானாபதி பிள்ளை நெற்களஞ்சியத்தை கொள்ளையிட்டு பாண்டி தேவரையும் கொலை செய்து விட்டது சமாதான கதவுகளை நிரந்தரமாக மூடி விட்டதறிந்து கொதிப்பார். பிறகு வேறு வழியின்றி வருவது வரட்டும் என்று தன் மந்திரியை காத்து ,போருக்கு மனதளவில் தயாராவார். இதில் அவர் மேலுக்கு இலகுவாக இருப்பதாய் வரும் சில காட்சிகளில் கூட சிங்கார கண்ணே, மனைவி, வெள்ளையத்தேவன் கல்யாணம்,குழந்தையுடன் பேசுவது எல்லா சந்தர்ப்பங்களிலும் ,ஒரு கவலை கலந்த சிந்தனை ரேகை (stress )அவர் முக குறிப்பில் தோன்றிய படியே இருக்கும்.போருக்கு தயாராகும் காட்சியில் கூட ஒரு வீரனாக தயாரானால் கூட எதிரி தன்னை மீறிய சக்தி படைத்தவன் , வாய்ப்பு குறைவுதான் என்ற அவநம்பிக்கை கலப்பு நன்றாக அவர் குறிப்பில் தொனிக்கும்.

    மிக சிறந்த காட்சிகள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஜாக்சன் சந்திப்பு, தானாபதி பிள்ளை தவறிழைக்கும் காட்சி,பிடி படும் காட்சி,இறுதி பானர்மென் விசாரணை தூக்கு காட்சி ஆகியவை .

    ஜாக்சன் பேட்டிக்கு உள்ளே வரும் போதே எச்சரிக்கையுடன் அக்கம் பக்கம் பார்த்து நுழைவது, நாற்காலி இல்லாததால் சுற்று முற்றும் பார்த்து பேட்டியில்லை, அவமதிப்பே என்றுணர்ந்தாலும், நாற்காலி பறிப்பதுடன் தன் தாழா நிலையை குறிப்புணர்த்தி , பிறகு சற்றே ஆசுவாசம் கொள்வார் ,கை கால்களில் படபடப்பு கோபம் தெரிய ,சிறிதே தணிவார் .ஆனால் பேச்சு குற்றம் சாட்டும் தொனியில் ஆரம்பிக்க பொறுமை மீறி ,படபடப்புடன் எதிர்ப்பை அதிக படுத்தி கொண்டே போவார்.

    என்னுடைய ஆதர்ஷ காட்சி ,தானாபதி பிள்ளை நெல்லை கொள்ளையிட்டதால் ,அவரை ஒப்படைக்க சொல்லி தூதன் ஓலையுடன் வரும் காட்சி. முகபாவம்,உடல் மொழி, அசைவுகள்,வசன முறை எல்லாவற்றிலும் உச்சம் தொடும் அதிசய காட்சி.குற்றச்சாட்டின் வலிமை அறிந்து ,அதன் தன்மையை மந்திரி உணர்கிறாரா என்று ஆழம் பார்ப்பதும், தன் பதவிக்குரிய விவேகமில்லாமல் பேசும் மந்திரியின் பேச்சினால் நிலை குலைந்து, தன் சுற்றி இருப்பவரிடம் தான்தான் அரசன் என்று குறிக்கும் ஒரு அர்த்த புஷ்டியான ஒரு எச்சரிக்கை குறிப்பை காட்டி ,மந்திரியிடம் நீறு பூத்த நெருப்பாக வஞ்ச புகழ்ச்சியில் ஆரம்பித்து ,படி படியாய் நிலைமையின் தீவிரத்தை குற்றச்சாட்டை உணர்த்தும் பாங்கு இந்த காட்சியை உயரத்தில் வைக்கும்.பிறகு குழுவின் நலன் கருதி மந்திரியை காத்து விட்டாலும் வருவதை தடுக்க இயலாது என்ற விரக்தி கலந்த இயலாமையுடன் தூதரின் மேல் தேவை இல்லாமல் பாய்வார்.

    தன்னை பிடிக்க ஆள் அனுப்பிய புது கோட்டை மன்னருக்கு இவர் சொல்லும் ராஜாதி ராஜ கட்டியம் ஒவ்வொரு செருப்படி போல தொனிக்கும். தன்னை காண விரும்பவில்லை என்றதும் கேலி,ஏமாற்றம் கலந்த எள்ளலுடன் சொல்லும் வாழ்க ,தூக்கு தண்டனைக்கு ஈடானது.

    கடைசி காட்சி "Back to the wall resolution " என்ற catharsis ,venting out anger ரக காட்சி.இதிலே நான் கண்ட சக்தி எந்த படத்திலும் ,எந்த நடிகனிடமும் கண்டதில்லை. இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் , நிலையற்ற அந்நியனிடம் பணிந்த தன் சகாக்களிடம் ஈனமாக வெடிக்கும் கோபம் ,அந்நியனிடம் மூர்க்கம் கலந்த வன்மையான இயலாமை கலந்த வருவது வரட்டும் என்ற கோபம் என்று இவர் வெடிக்கும் காட்சி ஒரு dynamite நம் நாற்காலிக்கு கீழேயே வெடித்த உணர்வில் நாம் பிரமையுடன் வெளியேறுவோம்.
    Last edited by Gopal.s; 15th August 2016 at 10:23 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Thanks Harrietlgy thanked for this post
    Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2072
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    I strongly feel Kappalottiya Thamizhan also should have been chosen to be screened on this occasion.. Centre has not done anything except Tax Exemption given during 1977 for Kappalottiya Thamizhan. Atleast BJP Government should have broken this Jinx.

    இந்தியாவிலேயே Docu -drama என வகை படும் ,biographical படங்களுக்கு முன்னோடி கப்பலோட்டிய தமிழன். அகில இந்திய அளவில் கொண்டாட பட்டு ,உலக அளவில் தூக்கி பிடிக்க பட்டிருக்க வேண்டிய உன்னத சிறந்த படைப்பு. திலக், விபின் சந்திரா, அரவிந்தர், லாலா லஜபதி முதலியோர் வழியில் வந்து இந்திய சுதந்திரத்திற்காக பல தியாகங்கள் செய்த ஒப்பற்ற தமிழன் வ.உ .சிதம்பரம் பிள்ளை. காங்கிரஸ் ,மற்றும் காந்தியோடு முரண் பட்டவர் என்பதாலேயே ,single political agenda கொண்டிருந்த (அதாவது சுதந்திரமே காந்தி,நேரு, காங்கிரஸ் சாதனை. மற்றோர் ஒரு பங்களிப்பும் இல்லை ) அன்றைய அரசாங்கத்திற்கு இந்த படம் உவப்பில்லை.திராவிட கட்சிகளுக்கும், உண்மையான தலைவர்களிடம் ஈடு பாடில்லை. (அது பிள்ளை ஆகவே இருந்த போதும்).ஆனால் உன்னத தேச பக்தர்களான பந்துலுவும்,நடிகர்திலகமும் இந்த தமிழனை தமிழர்களுக்கு கொண்டு சேர்த்தனர்.

    இந்த படம் நடிகர்திலகத்தின் histrionics என்று சொல்ல படும் உன்னத வேறுபட்ட நடிப்புக்கு அதிகம் scope இல்லாதது.உள்ளதை உள்ள படி உரைக்க வேண்டும். பார்த்து பழகிய contemporaries உயிரோடிருக்கும் போது ,இந்த தலைவனை ரத்தமும் சதையுமாக நம் முன் நிறுத்த வேண்டும்.கட்ட பொம்மன் போல அபார நடிப்பு திறமையால் கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று காட்டியது போல் செய்ய முடியாது. கப்பலோட்டிய தமிழன் எப்படி இருந்தார் என்று காட்ட வேண்டும்.

    இந்த மேதை தேர்ந்தெடுத்த நடிப்பு பள்ளி முறை Stanislavsky ,Strasberg method Acting சார்ந்தது. method Acting is not just acting or Reacting but behaving the way character should have done .அந்த பாத்திரமாக வாழ வேண்டும் ,அந்த வாழ்க்கை முறையின் உணர்வுகள் போலி செய்ய படாமல் ,நடிப்பவனின் நினைவில் அடுக்ககளில் இருந்து கட்டமைக்க பட்டு, வ.உ.சி. வாழ்க்கையோடு,பாத்திரத்தோடு பொறுத்த பட்டு இணைவு பெற வேண்டும்.

    நடிகர்திலகம் தேச பக்தி கொண்ட பாரம்பரியத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டு குடும்பத்தை தவிக்க விட்ட தியாகி. சிறை சென்று பல அவதிகள் உற்றவர் .நினைவின் அடுக்குகளுக்கு பஞ்சமில்லாத வகையில் பின்னணி.

    இவ்வளவு அற்புதமான advantage இருக்கும் போது ,உண்மைக்கு மிக மிக அருகில் வந்த அற்புதமான திரைக்கதையும் தயாரான போது ,ஒரு கலைஞனின் அறிவும்,மனமும் ,உணர்வும் அதில் தோயும் பொது ,அதில் தோய்பவன் உலகத்திலேயே மிக சிறந்த நடிகனாக இருக்கும் போது, அந்த magic நிகழத் தானே வேண்டும்?

    கப்பலோட்டிய தமிழனின் நோக்கம், தேசியம், விடுதலைக்காக செய்த உன்னத தியாகங்கள்.ஒரு தனி மனிதன் தன் சொந்த பந்தங்கள் சொத்து சுகங்கள் அத்தனையும் தேசத்துக்காக அர்ப்பணித்த உன்னதம், தேச விடுதலைக்காக பொருளாதார ,வியாபார உத்தியை கையிலெடுத்த துணிச்சல் மிகுந்த enterprenership ,ஒரு முதலாளியாகவே இருந்தும், தொழிலாளர் உரிமைக்காக போராடும் நேர்மை, ஆதிக்கத்தை கண்டு அஞ்சாமை,ஆனால் கடைசியில் நம்பியவர்களால் கை விடப்பட்டதும் அல்லாமல், கண்டு கொள்ளாமலும் விட பட்ட சோகம் இவற்றை முன்னிறுத்திய super -objective கொண்ட உண்மை theme .

    இதில் வ.உ .சி இளமை காலங்கள் சொல்ல படவே இல்லை. ஆரம்பமே கல்யாணமாகி ,pleader பணியில் இருக்கும் நாட்களே. பொது வாழ்வின் ஆரம்ப நாட்களில் இருந்து தொடக்கம். பிறகு அவருடைய அந்நிய பொருள் பகிஷ்கரிப்பு, சுதேசி கப்பல் கம்பெனிக்கான முனைவு, தொழிற்சங்க, அரசியல் போராட்டங்கள் என்று விரியும். பிறகு சிறை வாழ்க்கை, வெளியில் வந்ததும் ஏமாற்றம் நிறைந்த பொது வாழ்வு மற்றும் தனி வாழ்வு. என்று மூன்று கட்டங்களில் விரியும்.

    இதற்காக நடிகர் திலகம் செய்த home work அபாரமானது. முதலில் மொழி. தமிழில் slangs ,ஓட்டபிடாரம் பிள்ளைகளுக்கு உரிய வட்டார மொழி என்பது இருந்தாலும் அது தொட்டு கொள்ள ஊறுகாய் போல ஒரு சில குடும்ப காட்சிகளில் உபயோக படுத்த படுவதோடு சரி.மற்ற படி ஒரு வழக்கறிஞர், பொது வாழ்க்கைக்கு வந்த, இலக்கியம் ,ஆங்கிலம் அறிந்த மனிதர்களுக்கு உண்டாகும் பொது மொழி தேர்ந்தெடுப்பு மிக சரியானது.(நினைத்திருந்தால் மக்களை பெற்ற மகராசி கொங்கு தமிழ் போல பிள்ளை தமிழ் பேசியிருக்கலாம்.).

    அடுத்து personality . ஒரு வசதியான வீட்டு படித்த மனிதர். முதலாளி ,leadership quality உள்ள abnormal enterprener and a practising lawyer .அதற்குரிய constructive arrogance ,மிடுக்கு, அதே நேரத்தில்
    exhibitionist politeness , commitment to the cause ,எதிரில் இருப்பவரின் தரமறிந்து நடக்கும் பழகும் இங்கிதம்,public life outwardly courageous conviction என்பவை கொண்ட முதல் கட்ட பாத்திர குண வார்ப்பு.

    இரண்டாவது கட்ட பாத்திர வார்ப்பு ,அவர் சிறையில் தனக்கு பழக்கமில்லா கடின உடலுழைப்பு, சிறிதே physical abuse , தனிமை சிறை வாசம் என்று உடலை சோர வைத்தாலும் மனதில் உறுதி தளரா நிலைமை.

    மூன்றாவது கட்டமோ , குடும்பம் சிதைந்து, அவர் உருவாக்கிய கம்பனியை வெள்ளையனுக்கே விற்று விட்ட துரோகம்,மக்களின் பாரா முகம், ஒன்றன் பின் ஒன்றாக நண்பர்களின் துயரம் மற்றும் இழப்பு, ஒரு defeatist introverted சுருங்கல், உடலும் மனமும் சோர்ந்து இலக்கிய பணியில் ஒதுங்கி மீதி நாட்களை இறப்பு வரை கடத்துவது என்கிற phase
    படத்தின் துவக்கத்திலேயே எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. எனக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போது class teacher என் அம்மாதான்.டீச்சர் என்றுதான் வகுப்பிலும், பள்ளியிலும் கூப்பிட வேண்டும், அம்மா என்று கூப்பிட கூடாது என்று கண்டிப்பான உத்தரவு. கூப்பிட கூடாது என்ற deliberate consciousness என்னை அடிக்கடி தவற வைக்கும். முதல் காட்சியில் தந்தைக்கெதிராக ஒரு வழக்கில் ஆஜராகும் போது வாய் தவறி அப்பா என்று ஆரம்பித்து மன்னிக்கவும் எதிர் கட்சி வக்கீல் என்பார். சிறிதானாலும் என்னால் மறக்க முடியாது.

    ஒவ்வொருவருடனும் interract பண்ணும் போது அதற்குரிய ஒரு தனி சிறப்பான விசேஷம். சிவாவுடன் ஒரு மதிப்புக்குரிய ஆசிரிய தோழன் ,பாரதியுடன் விளையாட்டு கலந்த புரவல உரிமை, மாடசாமியிடம் மகனை போன்ற ஆனால் வேலையாள் என்ற நிலையும் தலை காட்டும் தோரணை, கப்பல் கம்பனி இயக்குன நிர்வாகிகளுடன் வணிக நோக்கம் கலந்த நட்பு,தொழிலாளர்களிடம் பரிவான ஒரு வாஞ்சை(பரிமாறிய சோற்றை எடுத்து உண்டு தரம் பார்க்கும் ஒரு leadership கலந்த exhibitionist good gesture ), adverse situation போது வெளிப்படும் assertive firmness (கப்பல் தர மறுக்கும் ஷா விடம்),திலக்கிடம் பேசும் போது பணிவும் ,மரியாதையும் கலந்த ஆங்கில(எவ்வளவு நல்ல உச்சரிப்பு) விண்ணப்பம்,ஆஷ் மற்றும் விஞ்ச் இவர்களுடன் விட்டு கொடுக்காத அலட்சிய பேச்சு என்று வ.உ .சி போல behave செய்து பாத்திரமாக வாழ்ந்திருப்பார்.

    சிறையில் தனக்கு பழக்கமில்லாத உடலுழைப்பில் ஈடு படுத்த படும் போது விருப்பமில்லா கஷ்டத்தை வெளியிடும் முறை, மனத்தை உறுதியாக வைத்திருக்க பிரயத்தனம் கலந்த மெனக்கெடல், டாக்டருடன் interract செய்யும் போது அலட்சியம் காட்டினாலும் இதற்கு மேல் என்ன என்ற வகையிலேயே, சிறையிலிருந்து விடுதலை என்றதும் நாட்டுக்கா விடுதலை என்று மேலுக்கு பேசினாலும், வெளியில் வந்ததும் அடையும் சுதந்திர உணர்வை ,அந்த காற்று பட்ட உணர்வை, பறவைகளை பார்த்து அடையும் பரவசத்தை காட்டியும் விடுவார்.

    ஏமாற்றத்தை உணர்ந்தாலும் (ஒருவர் கூட அழைக்க வராததில்), மேலுக்கு சமாதானம். சிவாவை பார்த்து அடையும் அதிர்ச்சி கலந்த பரவசம்,தம்பி மனநிலை பிறழ்வில் தலையில் அடித்து அடையும் தாங்கொணா துயரம், மக்களின் உதாசீனத்தை அனுபவித்து கூட்டுக்குள் முடங்கும் சுருக்கம், இழப்பில் காட்டும் ஏமாற்றம் நிறைந்த தனிமை சோகம் என்ற அளவில் method acting முறையில் மூன்று phases என்று வரும் நிலைகளிலும் பாத்திரத்தை வார்த்ததில் மூன்று முக்கிய compliments .

    முதல் ஒன்று சிவாஜியிடம் இருந்து சிவாஜிக்கு---- நான் நடித்ததிலேயே மிக சிறந்த பாத்திரம் என்று. இரண்டாவது வ.உ.சி மகன் ஆறுமுகத்திடம் இருந்து தந்தையை தத்ரூபமாக கண்டேன் என்றது. மூன்றாவது வ.உ .சி மற்றும் சுப்ரமணிய சிவாவை அனைத்து நிலைகளிலும் நேரில் கண்ட என் தாத்தா வின் பரவச compliment . "வேறு எவண்டா இப்படி பண்ண முடியும்? நடிக்கலைடா. அப்படியே வாழ்ந்துட்டான், நான் நேர்லயே பாத்திருக்கேண்டா அவர்களை எல்லாம். அதை வைச்சு சொல்றேன்". என்ற மனமார்ந்த பரவசம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. Thanks Harrietlgy thanked for this post
    Likes Harrietlgy liked this post
  6. #2073
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வழக்கம் போலவே நமது உயர்ந்த மனிதன் மதுரை மாநகரில் உயர்ந்த சாதனையை நிகழ்த்தி உன்னத வசூலை பெற்று பீடு நடை போடுகிறான். நமது சாதனை நாயகனின் ஆத்மாவும் ,உன்னத தேச பக்தியுடன் இன்று நம்மிடையே வந்து நம்மை ஆசீர்வதித்து செல்லும்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. Likes Harrietlgy liked this post
  8. #2074
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நா.முத்துக்குமாரின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். நம்முடைய இன்றைய கலை இலக்கிய சூழ்நிலை ,நம்மிடையே இன்னொரு கம்பன்,பாரதி,கண்ணதாசன்,வைரமுத்து தோன்ற அனுமதிக்காதெனினும் , தாயை சிறு வயதில் இழந்து,தந்தையின் நூலகத்தில் தவழ்ந்து,ஓரளவு இலக்கிய பரிச்சயத்துடன், தன் முனைப்பில் முன்னேறிய முத்துக்குமார் ,தன்னுடைய தவறான பழக்க வழக்கங்களால் அற்ப ஆயுளில் தன்னுடைய தொழிலில் மேலும் உன்னதம் தொடும் வாய்ப்பை இழந்துள்ளார். ஓரளவு நல்ல கவிதைகளுக்கு முயன்றுள்ளார்.

    ஆழ்ந்த வருத்தங்கள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #2075
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    NEWS

    இந்தியாவின் 70வது சுதந்திரதினம், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் 15-08-2016, திங்கள் காலை 8.30 மணிக்கு, திருவொற்றியூர்-ல் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் கொண்டாடப்பட்டது.

    இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும்,
    நொய்டாவிலுள்ள அவ்வை தமிழ்ச்சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புத்தகப் பையை, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் K. சந்திரசேகரன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை நிர்வாகிகள் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், குபேரன், ராணி, விஜயா, வினோத்குமார், மகேஸ்வரன், பள்ளி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.





    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  10. Likes Harrietlgy liked this post
  11. #2076
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகம் , மிக மிக அழகான பொலிவான ,துறுதுறுப்பான ,உண்மை இளமையான,எந்த பாத்திரத்துக்கும் பொருந்தும் தோற்றம், சுறுசுறுப்பான நடிப்பு இவையெல்லாம் இருந்தும் , 1952 இல் இருந்து 1959 வரை, வித்யாசமான பாத்திரப்படைப்பு,கதைக்களன்,இவற்றில் கவனம் செலுத்தி , வெற்று டூயட் பாடல்கள், நம்ப முடியாத போர் அடிக்கும் சண்டை காட்சிகள் இவற்றை தவிர்த்து வந்தார்.

    உறங்க கூட நேரமில்லாமல், படப்பிடிப்புகளில், பாத்திர படைப்புகளில் கவனம் செலுத்தி (சில பழக்கங்களும்) உணவு பிரியர் ஆன அவர் உடலை பராமரிக்காமல், 1960 இலிருந்து 1966 வரை மிக மிக பெருத்து விட்டார். குறித்து கொள்ளுங்கள். உலகத்தில் எந்த ஒரு நடிகனும் (இன்றைய சூப்பர்ஸ்டார் உட்பட) அந்த உடலை வைத்து கதாநாயகனாக தோன்றுவதே சிரமம். அங்கேதான் நடிகர்திலகத்தின் stardom ,நடிப்பு திறன்,பாத்திரங்களை தேர்வு செய்யும் முறை இவற்றால் வெள்ளிவிழா படங்களையும், நூறு நாள் படங்களையும் வாரி வழங்கி ,தமிழ் திரையுலகில் அவரே சக்ரவர்த்தியாக உன்னதம் தொட்டார். அவருடைய மறக்க முடியாத காவியங்கள், சாதனைகள்,ஆசிய ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது, அமெரிக்க அழைப்பு,நயாகரா மேயர் கவுரவம்,பத்மஸ்ரீ பட்டம் எல்லாமே அவரை தேடி வந்தன.

    இருந்தும் ,படிப்பறிவில்லாத,ரசனை குறைந்த மக்கள் கூட்டம் நிறைந்த அந்த நாட்களின் கீற்று கொட்டகைகளில் , அந்த மக்களுக்கென்று அவர் படங்கள் நடிக்கவில்லை. ஆனாலும் கீற்று கொட்டகைகளில் நூறு நாட்கள் கண்ட பாவ மன்னிப்பு போன்ற படங்களால் அங்கும் நாயகனாகவே இருந்த போதிலும், C Centre மக்களை அவர் பொருட்படுத்தி படங்கள் செய்ய நினைக்கவில்லை.மாறாக அவர்கள் ரசனையை உயர்த்தும் விதமாக சரித்திர,சமூக,புராண,குடும்ப அனைத்து வித படங்களையும் செய்து வந்தார். வித வித விதமான ஒன்றுக்கொன்று சவால் விடும் பாத்திரங்கள்.இன்று கூட பாலாபிஷேகம் செய்யும் படித்த பகுத்தறிவாளர்கள் நிறைந்த தமிழ் நாட்டின் 50 வருட முந்தைய படிப்பறிவில்லா கூட்டத்தை நினைத்து பாருங்கள். இவர்கள் ரசனையை உயர்த்தவா முடியும்?

    அங்கேதான் நிற்கிறார் நடிகர்திலகம். பூ என்று ஊதி விட கூடிய காதல் காட்சிகளில்,சண்டை காட்சிகளில், நடன காட்சிகளில் எல்லோரையும் விட தன்னால் ஸ்டைலிஷ் ,grace ,இளைமை துரு துருப்பினால் சி centre ரசிகர்களையும் கட்டி போட்டு வசூல் சாதனை புரிய முடியும் என்பதை 1967 இலிருந்து 1980 வரை காட்டினார். தன்னுடைய உன்னத நடிப்பு படங்களுக்கு ,திருவருட்செல்வர்,தில்லானா மோகனாம்பாள்,உயர்ந்த மனிதன்,தெய்வமகன், வியட்நாம் வீடு,பாபு, ஞான ஒளி ,கவுரவம் ,தங்கப்பதக்கம் ,அவன்தான் மனிதன் என்று ஒரு புறம் வழங்கினாலும், தன்னுடைய பாணியில் விலகி ,anti hero வாக தங்கையில்,நகைச்சுவை காதல் மன்னனாக கலாட்டா கல்யாணம் மற்றும் சுமதி என் சுந்தரி,,ஜனரஞ்சக என் தம்பி மற்றும் திருடன், தங்கசுரங்கம்,ராஜா என்று jamesbond , ஜாலியான நிறைகுடம்,சிவகாமியின் செல்வன்,வாணிராணி,கிராமிய பட்டிக்காடா பட்டணமா,முழுக்க முழுக்க ரொமான்டிக் வசந்தமாளிகை,முழுக்க முழுக்க action சிவந்த மண் என்று சி சென்டர் சக்ரவர்த்தியாக கணக்கற்ற வெற்றி படங்கள்.கலக்கோ கலக்கு என்று கலக்கினார். எந்த அரசியலும் ,ஒரு நடிகராக அவர் சாதித்த உன்னத வெற்றி சாதனையை மறைத்து விட முடியாது.

    இங்குதான் அப்போது வந்த சில இயக்குனர்களின் பங்கு குறிப்பிட தக்கது. ஒரு பந்துலு, ஸ்ரீதர் ,ஏ.பீ.நாகராஜன் அளவு உயர்ந்த இயக்குனர்கள் இல்லாமல் ,அப்போது மக்களின் நாடியை புரிந்த மாதவன்,ஏ,சி.திருலோகசந்தர்,சி.வீ.ராஜேந்திரன்,ராமண்ண ா,முக்தா இவர்களின் பங்கு கணிசமானது.
    குடும்ப படங்களை எடுத்தாலும் அவர் பிம்பத்தை முறித்த தங்கை படத்தை எடுத்த ஏ.சி.டி,பாலாஜி, பட்டிக்காடா பட்டணமா எடுத்த மாதவன்,கலாட்டா கல்யாணம்,சுமதி என் சுந்தரி,ராஜா என்று சி.வீ.ராஜேந்திரன், தங்கசுரங்கம்,சொர்க்கம் என்று ராமண்ணா நிறைகுடம் முக்தா என்று கணிசமான பங்களிப்பு. அவரை குழந்தைகளிடம்,இளைஞர்களிடம்,இளைஞிகளிடம்,பாமர மனிதர்களிடம் மிக மிக மிக ரசிக்க படும் நாயகனாக்கியது.

    ஆரம்பம் முதலே, பல முதல்களான வசூல்களுக்கு சொந்தக்காரர் நடிகர்திலகம்.(முதல் வெளியீட்டில்)

    1)முதல் முதல் 15 லட்சம் வசூலை கடந்த தமிழ் படம் பராசக்தி.(1952)

    2)முதல் முதல் 25 லட்சம் வசூலை கடந்த படம் வீரபாண்டிய கட்டபொம்மன்.(1959)

    3)முதல் முதல் 50 லட்சம் வசூலை கடந்த படங்களில் ஒன்று திருவிளையாடல்.(அதே வருடம் இன்னொரு படமும் தொட்டது)(1965)

    4)முதல் முதல் கருப்பு வெள்ளை கோடீஸ்வரன் பட்டிக்காடா பட்டணமா மூக்கையா.(1972)

    5)முதல் முதல் தமிழில் 1.5 கோடி கடந்த படம் வசந்த மாளிகை.(1972)

    6)முதல் முதல் தமிழில் இரண்டு கோடி கடந்த படம் திரிசூலம்.

    அது மட்டுமல்ல. ஒரு திரைப்பட ஆய்வாளரிடம் உரையாடியதில் கிடைத்த செய்தி.

    1952 முதல் 1960 வரை- தமிழ் திரைப்படங்களின் மொத்த வியாபாரம் 7 கோடியில் கிட்டத்தட்ட 4 கோடி நடிகர்திலகம் படங்கள் மட்டும் செய்தன.

    1961 முதல் 1970 வரை கிட்டத்தட்ட 15 கோடியில் 9 கோடி நடிகர்திலகம் படங்கள் மட்டுமே செய்தன.

    ஒவ்வொரு வருடமும் நடிகர்திலகத்தின் படங்கள் 60 முதல் 65% பங்களிப்பு. மிச்சம் மற்ற நடிகர்கள் அனைவரும் சேர்ந்து அளித்தவை.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. Thanks Harrietlgy thanked for this post
    Likes Harrietlgy liked this post
  13. #2077
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு சந்திரசேகர்,

    உங்கள் அயராத முயற்சி,சுயநலம் அண்டா உழைப்பு,அர்ப்பணிப்பு இவற்றிற்கு எனது தலை வணக்கம். பிரச்சினைகளுக்கு போராடும் உங்கள் போராட்ட குணம், பத்திரிகைகளுக்கு நமது ரசிகர்களின் உயிர்ப்பை,அரசியலை மீறிய அர்ப்பணிப்பை உணர்த்தி ,நமது மேன்மையை சொல்லி கொண்டிருப்பது நீங்களே. நான் என்றுமே மனதளவில் உங்களின் பேரவை ஆள்.

    ஒரே ஒரு ஆலோசனை. தேர்தல் நேரங்களில் ,எந்த அரசியல் கட்சிக்கும் நாம் ஆதரவளிக்க தேவையில்லை. அதன் தீர்மானத்தை கோடி கணக்கான நமது விஷய ஞானமுள்ள, பண்பட்ட ரசிகர்களின் தேர்வுக்கு விட்டு விடுவோம். அவர்களுக்கு தெரியும் ,புரியும். வேண்டாம் நமக்கு இந்த அரசியல் சாயம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. Likes Harrietlgy liked this post
  15. #2078
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என்னுடனே சேர்ந்து ஜனித்த காத்தவராயனை 1968 க்கு(திருபுவனம் சாந்தி) பிறகு ,நேற்றுதான் பார்த்தேன். P _ R ,வாசு போன்றோர் விழுந்து விழுந்து ரசித்த படம். நானும் மிக ரசித்தேன். இந்த magical realism நிறைந்த படம் தொட்டிருக்க வேண்டிய உயரங்கள் வேறு. ராமண்ணா துரதிர்ஷ்டசாலி. கூண்டுக்கிளி, காத்தவராயன்,பாசம்,பறக்கும் பாவை போன்ற அவரது படங்கள் மிக சிறந்த வெற்றியை கண்டிருக்க வேண்டும். மிக சிரமங்களுக்கிடையே காலம் தவறி வந்தாலும் வெற்றி பெற்ற என்னை போல் ஒருவன், 1972 இலோ 1973 இலோ வந்திருந்தால் வெள்ளிவிழா கொண்டாடியிருக்கும்.

    முதலில் பார்த்த போது காத்தவராயன் அருமை எனக்கு தெரியவில்லை. இப்போது பார்க்கும் போது அடடா.... எத்தனை அருமையான படைப்பு என்று தோன்றுகிறது. கைதட்டுவோம் நடிகர்திலகம்,ராமண்ணா,துறையூர் மூர்த்தி ஆகியோருக்கு.

    படத்தின் முக்கியமான அம்சங்கள் நான் ரசித்தவை.

    1)படம் முழுக்க செய்திகள் .ஆனால் வெளிப்படையாக போர் அடிக்காமல். கலையில் போட்டி இருக்கலாம் பொறாமை கூடாது, குழந்தைகளே ஆனாலும் பெரியோர் விஷயத்தில் மூக்கு நுழைக்க கூடாது, உன்னதம் தொடும் முன் உலகம் காண வேண்டும்,திறமைகளை ஏமாற்றி பிழைக்க உபயோகிக்க கூடாது,யாரையும் அடிமை கொள்ள கூடாது, தேவையற்ற மோகத்தீயில் இளமையை பொசுக்கினால் பெற்ற வரங்களும் பயனின்றி போகும்,தாயின் ஆசியில்லாமல் எதுவும் வெற்றி பெறாது, ஒருவன் சுக துக்கங்களுக்காக ஊரையும் அப்பாவி மக்களையும் துன்புத்தல் ஆகாது, ஜாதி -அந்தஸ்து பேதம் கூடாது என்று படம் நெடுக .

    2)சிவாஜி அழகோ அழகு. கொள்ளை அழகு. சிவாஜி-சாவித்திரி இணை கண் படும் அழகு. இவர்கள் ஆரம்ப சந்திப்பு காட்சி வசனமில்லா கவிதை.இருவரின் அழகான நடிப்பு.

    3)குறைந்த ,செறிவான வசனங்கள் படம் முழுக்கவே.(இறுதி காட்சி விதிவிலக்கு)

    4)திரைக்கதையின் இயல்பான விரிவு. மாயத்தை இணைத்தும் ,நடைமுறையை மாயம் மயக்கவில்லை.

    5)சிவாஜி பல காட்சிகளில் கண்கள்,உடல்மொழியால் மட்டுமே பாத்திரத்தை மிக மிக புரிந்து நடித்திருப்பார்.கடைசி காட்சியின் உக்கிரம், எந்த action ஹீரோவும் கனவு கூட காண முடியாதது.ஆரம்ப மல்யுத்த காட்சி சிவாஜியின் இயல்பான நடிப்பில் அவ்வளவு மெருகு. அற்புத காட்சி.

    6)பல பாடல்கள் இருந்தும் அலுப்பு தட்டாது.

    7)தங்கவேலுவின் இயல்பான,அளவான ,கற்பனை வளம் மிகுந்த நகைசுவை. இக்கால படங்களையொத்த மெருகு,timing .

    8)அற்புதமான எடிட்டிங் ,கேமரா ,லைட்டிங் .தந்திர காட்சிகள்.

    9)ஆரம்ப சிவா-பார்வதி நடனம், கோழி நடனம் இவையெல்லாம் மிக ரசனைக்குரியது.

    10)காத்தவராயன் உலகம் காணும் montage .நடிகர்திலகத்தின் வியப்பு.

    11)ஓவியர் மணியனின் உடை வடிவமைப்பு. அரங்க நிர்மாணம்.

    இவ்வளவு நிறைகள் படத்தை எங்கேயோ கொண்டு சென்றிருக்க வேண்டாமா? இனி குறைகள்.

    1)திரைக்கதை சுவாரஸ்யமற்ற பகுதிகளில் ரொம்ப புகுந்து புறப்படும்.

    2)ஜீ.ராமநாதனின் இசை பெரிய குறை. தூக்கு தூக்கி அளவு கை கொடுக்கவில்லை. வேடுவ ஆதிவாசிகள் காட்சி சரியாக அமையாமல், எடுத்த உடனே யானையில் அடாணா ராகம் பாடும் ஆதிவாசி நாயகன். பாமர மக்களின் இசையின் சாயலே இல்லை. (ஹும், கே.வீ.எம் மாமாவை போட்டிருக்கலாம்.)

    3)சண்டை காட்சிகள் ரொம்ப சுமார்.(ஆரம்ப மல்யுத்த காட்சி தவிர)

    4)காதல் காவியமான இதில்,காதலின் அழுத்தம்,வேகம் சொல்ல படவே இல்லை.

    5)இறுதி காட்சி கண்ணாம்பா -சிவாஜி இணைவில் மனோகரனை ரொம்ப நினைவு படுத்தும்.

    6)சூழ்நிலைதான் வில்லன் என்றாலும், அவ்வளவு பராக்கிரமசாலி காத்தவராயனுக்கு ,வீரப்பா அளவு,நம்பியார் அளவு சொல்லும் படியான எதிரி வேண்டாமா? தங்கவேல் மாதிரி காமெடி எதிரி என்றால் சுவாரஸ்யமே கெடுகிறதே?
    Last edited by Gopal.s; 16th August 2016 at 02:06 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  16. Likes Harrietlgy liked this post
  17. #2079
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by gopal,s. View Post
    திரு சந்திரசேகர்,

    உங்கள் அயராத முயற்சி,சுயநலம் அண்டா உழைப்பு,அர்ப்பணிப்பு இவற்றிற்கு எனது தலை வணக்கம். பிரச்சினைகளுக்கு போராடும் உங்கள் போராட்ட குணம், பத்திரிகைகளுக்கு நமது ரசிகர்களின் உயிர்ப்பை,அரசியலை மீறிய அர்ப்பணிப்பை உணர்த்தி ,நமது மேன்மையை சொல்லி கொண்டிருப்பது நீங்களே. நான் என்றுமே மனதளவில் உங்களின் பேரவை ஆள்.

    ஒரே ஒரு ஆலோசனை. தேர்தல் நேரங்களில் ,எந்த அரசியல் கட்சிக்கும் நாம் ஆதரவளிக்க தேவையில்லை. அதன் தீர்மானத்தை கோடி கணக்கான நமது விஷய ஞானமுள்ள, பண்பட்ட ரசிகர்களின் தேர்வுக்கு விட்டு விடுவோம். அவர்களுக்கு தெரியும் ,புரியும். வேண்டாம் நமக்கு இந்த அரசியல் சாயம்.
    திரு.கோபால் சார்,

    என்னுடைய மூத்த சகோதரரில் ஒருவராக மதிக்கும் தங்களின் வாழ்த்து மற்றும் ஆலோசனைக்கு கோடி நன்றிகள்.

    தாங்கள் கூறுவது எனக்கும் புரிகிறது, தெரிகிறது. ஆனால் சில சூழ்நிலைகள் அப்படி நேர்ந்துவிடுகிறது. (அது பணம், பொருள் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்). கெளரவத்தில் நம் நடிகர்திலகம் கூறியிருப்பது போல "இங்கு எல்லாமே recommendation with politics " ஆகத்தான் இருக்கிறது.

    கர்நாடகாவில், மறைந்த நடிகர் ராஜ்குமாருக்கு அரசே முன்வந்து மணிமண்டபம் கட்டியது. எல்லாக் கட்சிகளும் அதனை ஆதரித்தன. யாரும் எதிர்க்குரல் எழுப்பவில்லை. ஆனால், இங்கே சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பும்போதே அவருக்கு எதற்கு அரசு சார்பில் மணிமண்டபம் என்ற எதிர்க்குரல் வேறு எழுகிறது. சில நேரங்களில் இவற்றை சமாளிக்க நாம் தனியே போராடுவது என்பது, கடல் அலை நடுவே நின்று கர்னாடக சங்கீதம் இசைப்பது போலாகிவிடுகிறது. எனவே சில அரசியல் கட்சிகளை, நமது கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளை ஆதரித்து அவர்களையும் இணைத்துக்கொண்டு போராடினால் நன்றாக இருக்கும் என எண்ணியதால், எண்ணுவதால் அத்தகைய முடிவுகளை எடுக்க நேர்கிறது.

    எதிர்காலத்தில் இன்னும் எச்சரிக்கையுடன் செயல்பட தங்கள் வாழ்த்து, ஆலோசனை உதவிடும் என்ற நம்பிக்கையுடன், நன்றி.
    Last edited by KCSHEKAR; 17th August 2016 at 02:37 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  18. Likes Harrietlgy liked this post
  19. #2080
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Na. Muthukumar’s Last Song is the Remix Version of Sivaji Ganesan Chartbuster



    .....

    Now GV Prakash switched that to Sivaji Ganesan now, the song ‘Iravinil Aattam, Pagalinil Thookkam’. Which is a record-breaking Navarathri’s album will be featured in his upcoming film. This song is penned by the poet Kannadasan, For GVP upcoming film Kadavul Irukan Kumaru, Rajesh has directed this film, he said that the first two lines remained the same, whereas rest of the song carries different lyrics, which was written by Na. Muthukumar who passed away recently.

    Nikki Galrani, Anandhi, and Thambi Ramaiah, etc., are featuring in this film. We hope this song will turn out as a wonderful memory of Na Muthukumar, as well as yesteryear chartbuster.
    Reproduced from and courtesy: http://www.iluvcinema.in/tamil/na-mu...n-chartbuster/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •