Page 389 of 400 FirstFirst ... 289339379387388389390391399 ... LastLast
Results 3,881 to 3,890 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #3881
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3882
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3883
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #3884
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் வெற்றிச் சாதனைகளோடு ஒப்பிட முடியாமல் போனவர்கள் ஒரு கட்டத்தில் பொய் பிரச்சாரம் மேற்கொண்டனர் அதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சிவாஜி யாருக்கும் உதவிகள் செய்யாதவர் என்பது,
    உண்மையிலேயே அந்தப் பொய் பிரச்சாரம் இன்று வரையிலும் நிலைத்து நிற்பதை நம்மால் காணவே முடிகிறது, சாமான்யமானவன் பொய்யை எளிதில் நம்பி விடுகிறான், அது தேர்தல் வரையும் ஊடுருவி நாட்டையும் சீரழித்து விடுவதை நாம் கண்டு விட்டோம்,
    இனைப்பில் நடிகர் திலகம் அளித்த உதவி பற்றிய நாளேட்டின் செய்தி,
    அடுத்த படம் மெரினாவில் உள்ள சிலை, நடிகர் திலகத்தின் சிலை பெற்று உள்ள சிறப்பு உலகின் எந்த தலைவருக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு,






    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #3885
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரின் , சமீபத்திய, " தங்கப்பதக்கம் " தமிழ் திரைப்படம் தொடர்புடைய ஒரு கருத்தினை கண்டபோது, சுவைமிகுந்த விறுவிறுப்பு நிறைந்த - அந்த திரைப்படத்தினை மீண்டும் காணும் ஆவல் கொண்டு...கண்டு ரசித்தேன்... ரத்தமும் சதையுமாக ஒரு காவல் துறையின் வீரமிக்க, கடமை தவறாத காவல் துறை அதிகாரியாக நடிகர்திலகம் வாழ்ந்த ஒரு அற்புதமான திரைப்படத்தினை பார்த்து ரசித்து சுவைத்தேன், படத்தின் காட்சிகளின் சிறப்பினில் என்னை மறந்தேன்...என்பதே உண்மை.
    இன்றைய காவல்துறையினரை உயர்வு படுத்தி.. கதையின் நாயகனை கடமை வீரனாக உயர்வு படுத்தி.. நாயகனை பிரம்மாண்டப்படுத்தும், காவல் துறையினரை வீரமிக்கவர்களாக...துணிவுடைய சிங்கங்களாக உருவகப்படுத்தும்... சமீப காலப் படங்களான, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மூன்று முகம், காக்கி சட்டை, சாமி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு.. சிங்கம் 1 -2 -3 போன்ற... படங்களுக்கு அடித்தளமிட்ட,
    அந்த காவியத்தினை ஆம்..." தங்கப்பதக்கம் " எனும் காவல்துறையினரின் பெருமையினை 1974 - ஆம் வருடத்திலேயே உயர்த்திப்பிடித்த நடிகர்திலகத்தின்..ஒப்பற்ற காவியங்களில் ஒன்றான... சிறந்த படத்துக்கான தங்கப்பதக்கம் வழங்கி இருக்கவேண்டிய...ஒரு திரைப்படமான... அந்த படத்தினை காணும்போது மெய்சிலிர்த்தது.
    அகமகிழ்ந்தேன்...கதையின் போக்கினில் கரைந்து போனேன்...
    இப்படியும் இந்த கதாபாத்திரத்தினை மனதுக்குள் வடிவமைத்து கதையினை உள்வாங்கி...நடிப்பினை வெளிப்படுத்த இயலும் எனும் கலைக்குரிசிலின் திறம் கண்டேன்.. ஆஹா... என்ன ஒரு அருமையான நடிகர் நடிகையரின் கூட்டணி...இதனை நடிப்பு என்று கூறவே இயலாதே.. கதாபாத்திரங்கள் அத்துணை பேரும் கண்முன்னே வாழ்ந்து காட்டி இருந்தனர்.
    கடமையினை தனது உயிராக கருதும் ஒரு காவல் துறை அதிகாரி, அன்பான மனைவி, அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை..
    குடும்பத்தினர் மீது மட்டற்ற பாசம் கொண்டிருந்தாலும்... எந்த நிலையிலும் தனது கடமையினை விட்டு கொடுக்காத அந்த இரும்பு மனிதருக்கு வாய்த்த மகனோ...ஒரு திருடனாக, மாறி எதிரே நின்று சவால் விட...கடமையா, குடும்பமா, மகன் என்ற பாசமா ? என்ற கேள்விக்கான விடையே இந்த திரைப்படம்.
    சிறுவயதில் தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடுவதை அப்பா கண்டிக்க, கோபமுற்ற மகன் வீட்டில் பணத்தினை திருடிக்கொண்டு ஓடி மும்பை சென்று அங்கே ஒரு திருட்டில் ஈடுபட்டு கைதாகி சிறுவர் சீர்திருத்த சிறையினில் அடைபட்டு தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆகியும் சிறையில் பழக்கமான நண்பர்கள் துணையுடன் மாபெரும் கொள்ளை செயல்களை நடத்தி தந்தைக்கே சவால் விடும், சவடால் காட்டும் அற்புதமான பாத்திரம், வில்லன் கதாபாத்திரத்தினில் ஸ்ரீகாந்துக்கு இந்தப்படம் ஒரு மைல்கல் என்றே கூறலாம்...மறக்க இயலாத ஒரு கதாபாத்திரம்... நடிகர் திலகம் எனும் இமயத்தினை தைரியமாக எதிர்கொண்டு...வித்தியாசமான முறையில் தனது பங்களிப்பினை சிறப்பாகவே செய்துள்ளார்...
    பாசத்துக்குரிய ஒரே மகனான ஸ்ரீகாந்துக்கு பரிந்து பேசுவதா...நியாயத்துக்கு நேர்மைக்கும் காவலனாக இருக்கும் பிரியத்துக்குரிய கண்ணின் மணியான கணவனுக்கு துணையாக நிற்பதா என்று...பாசப்போராட்டத்தில் வென்று காட்டியுள்ளார் கலையரசி K.R. விஜயா அவர்கள்... அவரின் நடிப்பும் கதறும் கதறலும்...நம்மை கலங்க வைக்கிறது...
    இந்தப்படத்துக்கான வெற்றிக்கு கதை வசனம் மிகப்பெரும் பலம் என்றே கூற வேண்டும். காட்சிக்கு காட்சி...கைத்தட்டல்களை பெற்றுத்தரும் வகையிலும் நடிகை நடிகையர்களுக்கு பெயர் வாங்கி தரும் வகையிலும் ரசிகர்களின் மனதில் வேல் போல பாயும் வண்ணம் கூரான வசனங்கள்.. இன்றைய இயக்குனர் மகேந்திரன் அந்த காலக் கட்டத்தினில் வசனகர்த்தா... கதைக்கேற்ப பொருத்தமான வசனங்கள் படத்தின் விறுவிறுப்பினில் முக்கிய பங்கேற்கும் வண்ணம் அமைத்துள்ளார்.
    படத்தின் ஆரம்பத்திலேயே லேட்டாக வீட்டுக்கு வரும் சௌத்ரியை, கே.ர்.விஜயா. ஏன் லேட்டு என்று உரிமையுடன் கேட்டு, போலீஸ்காரன்.. ன்னா ஆயிரம் வேலை இருக்கும் வீட்டுக்கு சரியான நேரத்தில் வரமுடியுமா...என்று வெடிக்கும் கணேசனை,
    ஷூ...இது..போலீஸ் ஸ்டேஷனும் இல்லை.. நீங்க இப்போ இன்ஸ்பெக்டர்...ம் இல்லே ...ஒழுங்கா..கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க... மொதல்ல யூனிபார்மை கழட்டிட்டு வாங்க..என்று அதட்டி...விட்டு, ...
    மீண்டும் கே.ஆர். விஜயா...கோபமாக பேசுவதும்... யூனிபார்மை கழட்டியதும், சௌத்திரி, ஒரு கொலைகாரனை பிடிச்சேன்...அவன்கிட்டேர்ந்து ஸ்டேட்மென்ட் வாங்கறதிலே கொஞ்சம் லேட் ஆயிடுச்சு... என்று... சாந்தமாக பதிலளிப்பதும்...அப்படியே...அந்த காட்சி, இருவருக்குமான கிண்டலுடன் கூடிய காமெடியாக மாறி, பிறகு பாசத்துடன் கூடிய உருக்கமான காட்சியாக மாறுவதுவும் ரசமான காட்சி.
    அதைப்போல வேறொரு காட்சியில் ஜெகனுக்கு முதலிரவுக்கு அலங்காரங்கள் அனைத்தையும் செய்து விட்டு...பார்த்தால்..அவர்கள் உங்கள் அறையில் படுத்து தூங்கி விட்டார்களே...என்ற இடத்தினில் உள்ள ஜனரஞ்சகமான காட்சிகள்..மறுநாள் காலையில்... முகத்தில் குங்குமத்துடன் சிவாஜி படுக்கையில் இருக்க காபி கொண்டு வரும் பிரமிளா...பார்த்து சிரித்துவிட்டு ஓட...K.R. விஜயாவிடம்...என்னது இது...என்று விபரம் கேட்டுவிட்டு...ஐயோ..கர்மம்..கர்மம் மானமே போச்சு... எவ்வளவு இயல்பான காட்சிகள்...
    கணவன் மனைவியாக நடிகர் திலகம் மற்றும் விஜயாவின் நடிப்பு வெகு அன்யோன்யம், மிக இயல்பாக நடிப்பு என்று கூற இயலாதவண்ணம் அற்புதமான பெர்பார்மன்ஸ் .
    வழக்கம் போல நடிகர் திலகத்தின் படங்களில் லட்டு மாதிரியான கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு கலக்கும் மேஜர் சுந்தர ராஜன், V.K. ராமசாமி போன்றோரின் கதாபாத்திரங்களும் அவர்களால் மிகவும் அருமையான முறையில் கையாளப்பட்டு இருக்கிறது..
    நான்கே பாடல்கள் ஆனால் நான்கும் நான்கு முத்துக்கள் என்றே கூறவேண்டும். இசையமைப்பும், பாடல்களும் பாடல் வரிகளும், படமாக்கிய விதமும், காட்சிக்கு முத்தாய்ப்பு வைத்தது போன்ற நடிகர் திலகத்தின் நேர்த்தியான அங்க அசைவுகளும், ஆடும் ஸ்டைலும், முக பாவனைகளும் நெஞ்சை அள்ளுகிறது... பாடல் காட்சிகள் படத்தின் வேகத்துக்கு தடை என்று கூற இயலாது...காட்சியோடு அத்துணை நேர்த்தியாக பொருந்தி உள்ளன...அதுவும் மெல்லிசை மன்னர் புகுந்து விளையாடி உள்ளார்..காவிய வரிகளை தந்து பாடல்களை நம் மனதில் பதிய காரணமானவர் காவிய கவிஞர்... கண்ணதாசன் அவர்கள். பாடல் வரிகளுக்கு அவ்வளவு அழகாக உயிர்கொடுக்கும் பணியினை செய்தவர் பாடகர் திலகம்...T.M . சௌந்தர ராஜன் அவர்கள்.. அவருடன் துணைக்கு தேன் குரலரசி P.சுசீலா அவர்கள்.. தத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு...பாடலுக்கு திருவாளர் சாய்பாபா அவர்களும் கானக்குயில் வாணி ஜெயராம் அவர்களும் குரல் கொடுத்து சிறப்பித்துள்ளனர்.
    நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் பாடல் காட்சி...
    இந்தப்பாடல் ஆரம்பிக்கும் சமயம்...நடிகர் திலகம்..வெகு இயல்பாக ஜோக்கடித்துக்கொண்டு..மிக ஜாலியாக மனைவியை கலாய்த்துக்கொண்டு இருப்பது போல காட்சி அமைந்திருக்கும்...பாடலின் முடிவில் வரப்போகும் அதிர்வினை மனதில் இருத்தியே...இப்படி அமைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.
    ஒரு தலைசிறந்த நடிகரிடம்...எப்படி எல்லாம் காட்சிகளை வைத்து அவரின் திறமைகளை வெளிப்படுத்தி இருக்கிறார் பாருங்கள்...ஒவ்வொரு காட்சியும் அவரின் ஒவ்வொரு பரிமாணத்தினை வெளிப்படுத்தும் வண்ணம் அமைத்துள்ளார்.
    ஒரு பெரிய பொறுப்பில் உள்ள காவல் துறை அதிகாரியின் அந்த கம்பீரமும், நகைச்சுவை உணர்வும் கொண்ட கலவையாக காட்சியளித்து பாடலுக்கு நடனமாடுவதில் கூட...அந்த கண்ணியம் குறையாது...தனக்கே உரித்தான ஸ்டைலுடன் ஆடுவது அவருக்கு மட்டுமே உரித்தான பாணி. அவர் பாட கேட்கும்போது... K.R..விஜயாவின் அந்த வெட்கத்துடன் கூடிய நாணம்...ஆகா...அற்புதம்... காட்சிக்கு எவ்வளவு பொருத்தமாக வரிகளை போட்டிருக்கிறார் பாருங்கள்...
    நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் அன்புமணிவழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க எங்கள் வீடு கோகுலம் ;
    என் மகன் தான் கண்ணனாம் தந்தை வாசுதவனோ
    தங்கமான மன்னனாம்
    அன்னை என்னும் கடல் தந்தது
    தந்தை என்னும் நிழல் கொண்டது
    பிள்ளைச் செல்வம் என்னும் வண்ணம கண்ணன் பிறந்தான்
    நன்மை செய்யும் மனம் கொண்டது
    எங்கள் இல்லம் என்னும் பேரைக் கண்ணன் வளர்ப்பான்
    வெள்ளம் போல ஓடுவான் வெண்மணல் மேல் ஆடுவான்
    கானம் கோடி பாடுவான் கண்ணன் என்னைத் தேடுவான்
    மாயம் செய்யும் மகன் வந்தது ஆயர்பாடி பயம் கொண்டது
    அந்தப்பிள்ளை செய்யும் லீலை நான் அறிவேன் இந்தப்பிள்ளை
    நலம் கொள்ளவும் என்னைப் பார்த்து எனை வெல்லவும்
    கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து நான் வளர்த்தேன் (நல்ல)
    கோலம் கொண்ட பாலனே கோவில் கொண்ட தெய்வமாம்
    தாயின் பிள்ளைப் பாசமே தட்டில் வைத்த தீபமாம்
    பாசம் என்று எதைச் சொல்வது பக்தி என்று எதைச்சொல்வது
    அன்னை தந்தை காட்டும் நல்ல சொந்தம் அல்லவா
    பிள்ளை என்னும் துணை வந்தது
    உள்ளம் எங்கும் இடம் கொண்டது
    இல்லம் கண்டு தெய்வம் தந்த செல்வம் அல்லவா (நல்ல)
    படத்தினில் என்னை கவர்ந்த இடங்கள் பல உண்டு...
    மிகப்பெரும் ரவுடியாக ஆரம்பத்தினில் வரும் மேஜரை...பண்ணையாராக/ மைனராக வரும் மனோகர் ஆகியோரை சண்டையிட்டு கைது செய்யும் ஸ்டைல் , அவர்களை எதிர்கொள்ளும் விதம்...கிண்டலான அந்த பேச்சு... போகிற மாட்டை போக்கில் விட்டு பிடிப்பது போல மனோஹரை வளைத்து கைது செய்து கொண்டுசெல்லும் லாவகம்..
    அந்தந்த இடங்களிலும் பொருத்தமான வசனங்கள்... ஜெகனை கைது செய்து அழைத்து செல்லும் காட்சியில்
    அப்பாவும் மகனும் சவால் விட்டுக்கொள்ளும் உணர்ச்சிப்பூர்வமான அந்த காட்சி...
    ஜெயிலில் இருந்து திரும்ப வந்ததும் ஜெகன் தனி வீடு பார்த்துக்கொண்டு போக முயலும் அந்த காட்சிகள்...
    வேறொரு காட்சியினில் இரும்பு மனிதராக கண்டிப்பு, கறார், பேர்வழியாக இருக்கும் சௌத்ரி...தீபாவளியன்று...வெடி வெடிக்க அஞ்சுவதும்...மனைவி வெடிக்கு நெருப்பு வைக்க போகும்போது...இவர்...பயந்து...பதறுவதும்...ரசமா ன காட்சிகள்.
    குடும்ப நண்பர் ராமசாமியின் அலுவலகத்துக்கு சென்று...அவரறியாமல் வேலைக்காரனிடம் இருந்து காபியை வாங்கிக்கொண்டு வைத்துவிட்டு...அப்போதும் அவர் கவனிக்காமல் பின்புறம் வந்து தோளை பிடித்து விட கூற...இவரும் வந்து தோளை பிடித்து விட்டு...க்கொண்டு... ஷூ காலால் ஓங்கி ஒரு உதை விட்டுக்கொண்டே... உரிமையுடன் பேசும் பாங்கு... வீகேயாருடன் உள்ள காட்சிகள் அனைத்துமே...இருவரின் இயல்பான உரிமையுடன் கூடிய நண்பர்களாக நடிக்கும் நடிப்பும் காண்பதற்கு வெகு அழகு...
    சுமைதாங்கி சாய்ந்தால் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் அந்த துயரத்துடன் கூடிய முகபாவமும் நடிப்பும், மனைவியிடம் காட்டும் அன்யோன்யமும்...பாசமும் நெஞ்சை அள்ளும்... காட்சியினை படமாக்கிய விதமும், பாடலினை இவர் உச்சரிக்கும் நேர்த்தியும்...வெகு.. அருமை.. மனிதர் எந்த கோணத்தில் பார்த்தாலும் அழகுதான்...கம்பீரம்தான்.
    சுமை தாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்
    மணித்தீபம் ஓய்ந்தால் ஒளி எங்குப்போகும் (சுமை)
    சிரித்தாலும் போதும் தெய்வங்கள் கூடும்
    சிலைபோலச் சாய்ந்தால் கலை எங்கு போகும்
    குலமங்கை கூந்தல் கலைந்தாடலாமா
    மலர்சூடு கண்ணே மணவாளன் முன்னே (சுமை)
    மணமாலை கொண்ட மதுரை மீனாட்சி
    நடமாட வேண்டும் நான் தேடும் காட்சி
    அலமேலு மங்கை துணை உண்டு கண்ணே
    அலங்கார மஞ்சம் நிதம் காக்கும் உன்னை
    இந்தப்பாடல் காட்சி காண..க்.. காண திரும்ப பார்க்கத்தூண்டும் நடிப்பு...அற்புதமான முகபாவம்...தனது பிரியம், நேசம், காதலுக்குரிய துணைவி... எழ இயலாமல் அமர்ந்த சூழலில் அவரை வைத்து வீல்சேரில் தள்ளிக்கொண்டே சோகத்தினை நெஞ்சிலே சுமந்து...உணர்வுடன் பாடும் காட்சி காணும் அனைவரையும் கலங்க வைக்கும்.. டிஎம்மெஸ்ஸின் குரல் மிகப்பெரும் பிளஸ் பாயிண்ட் இந்த காட்சிக்கு...
    ஜெகன் வேலை பார்க்கும் வங்கியில் பணம் திருடு போய்விட்ட காட்சியில் உள்ள வசனம்...நச் ...ரகம்...
    மிஸ்டர் ஜெகன்நாத், விசாரணை முடியற வரைக்கும் எங்கேயும் வெளியூர் போயிட மாட்டீங்களே...
    எங்க அப்பாவும் அம்மாவும் எம்மேல ரொம்ப பிரியம் உள்ளவங்க சார்...வெளியூருக்கு எங்கேயும் என்னை தனியா அனுப்ப மாட்டாங்க சார்.
    ஆனா...வேலூர் போணும்னா...தனியாத்தான் போகணும்....
    மேஜர் சுந்தர் ராஜனுக்கு அற்புதமான வாய்ப்புகள்.
    நடிகர் திலகத்தின் படங்களில் கிடைக்கும் இதிலும் நடிப்பதற்கு அற்புதமான வாய்ப்புள்ள இடங்கள் பல. குறிப்பாக தன் மகள், சவுத்ரி வீட்டு மருமகளாகி உள்ள சூழலில் அவர் வீட்டுக்கு வந்து பேசும் காட்சிகள்...மருமகனுக்கு அறிவுரை கூறும் இடம், மருமகனை காப்பாற்ற தான் குற்றத்தினை ஏற்றுக்கொண்டு சரணடையும் இடம்.. என்று அழகான வாய்ப்புகள்...அத்தனை இடங்களிலும் வெளுத்துக்கட்டுகிறார்.
    சோ அவர்களின் காமெடி படத்துக்கு மிகப்பெரும் பலமே...படம் முழுவதுமே..அன்றைய அரசியலை தைரியமாக விளாசி இருக்கிறார்.
    மீட்டிங்கில்...
    அமெரிக்காவையும்..ஜெர்மனியையும் எச்சரிக்கிறேன்...என்னிடம் விளையாடாதீர்கள்...
    நான் மனது வைத்தால் உங்கள் நாடுகளில் பூகம்பம் வெடிக்கும்...
    மீட்டிங்கில்...ஒரு கிழவியை மேடைக்கு கொண்டுவந்து தாய்க்குலமே...தாய்க்குலமே.. என்று கட்டிப்பிடித்து கொண்டு போட்டோ எடுத்து முடித்ததும்...டேய்...கிழவியை நவுத்துடா...இங்கே நின்னுட்டு கழுத்தறுக்குது...
    கையூட்டு வாங்கும் அரசியல் வாதியாகவும், நேர்மையான கான்ஸ்டபிள் ஆகவும் இரட்டை வேடத்தில் பின்னி இருக்கிறார். அன்றைய காலகட்டத்தினில் எம்ஜியார், கலைஞர் இருவரையும் அரசியல் ரீதியாக அவர்களின் அணுகுமுறைகளை மிக தைரியமாக வாரி விட்டுள்ளார். அவர் பகுதிக்கான வசனங்கள் நிச்சயம் அவருடையதுதான் போலும், அவர் வருகின்ற காட்சிகள் அத்தனையும் சர வெடிதான். உதவிக்கு சுருளி ராஜன் வேறு.
    சுருளி, அண்ணே..நம்பாளு ஒருத்தரு... எதிர்க்கட்சி நண்பரோட...கொஞ்சம்..தகராறு... தம்பி..கொஞ்சம் மில்லில இருந்துருக்காரு...
    சண்டைலே... கத்தியால வயித்துல கிழிச்சுருப்பாரு..போல இருக்கு
    குடல் வெளியே வந்துருச்சாம்..
    நியாயமா பாத்தா..வெளியே வந்த கொடலைதான் ஜெயிலுக்குள்ளே போட்டிருக்கணும்...
    எங்காளு ஒருத்தர் காரை ஏத்தி ஒரு குழந்தைய.. கொன்னுட்டாராம்...
    கொழந்தை ஸ்பாட்டுலே...யே செத்து போச்சாம்...
    இதைப்போய் ஒரு பெரிய கேசா..எடுத்துட்டு..யாரோ கான்ஸ்டபிள் சுந்தரமாமே எங்க ஆளை பிடிச்சு உள்ளே போட்டுட்டாராம்..
    அப்பாயிசம்னா.. என்னன்னு தெரியுமா...ஒனக்கு...
    கொழந்தை இருக்கா..செத்து போச்சே...
    சாகலே...சாகலே...இதோ பாருங்க..செத்து போன குழந்தையோட தகப்பன்
    தன்னோட கொழந்தை சாகலைன்னு எழுதிக்கொடுத்த லெட்டர்...
    எங்.. காள .. வெளியே விட்டுட்டீங்கன்னா..எல்லாருக்கும் நல்லது...
    என்ன சார் வெளயாடுறீங்களா...?
    காரியம் ஆனா நாங்க விளையாட மாட்டோம்..காரியம் ஆகலைன்னாதான்..விளையாடுவோம்...
    அட செத்துப்போன குழந்தையாவது...கண் முழிச்சு இதுதான் எங்கப்பான்னு சொல்லுதா..அதுவும் கெடயாது... நீங்க ஒரு நியாயத்துக்கும் கட்டுப்படாம போனா எப்புடி...
    அப்பாயிசம்னா..தெரியுமா...ஒனக்கு...
    என்ன சார் ஒரே அடியா குழப்பறீங்க...
    அதுதான்...அப்பாயிசம்...
    தாய்க்குலமே...என்ன அப்புடி கேட்டுட்டீங்க..ஒருவேளை ..அவங்கப்பா..நான் திரட்டுற நிதிக்கு அவரால முடிஞ்ச ஏதாவது... குடுத்தாருன்னா....
    இந்த நாட்டுலே..ஆயிரக்கணக்கான பேரு நாட்லே கிளிஜோசியம் பாக்குறாங்க...கிளி இல்லாம கஷ்டப்படறாங்க...அவர்களுக்கெல்லாம் கிளி வாங்கி குடுக்கப்போறேன்...
    ரோட்ல குப்பை பொறுக்கறவங்க...பல பேரு கோணி இல்லாம கஷ்டப்படறாங்க...அதுக்காக கோணி வாங்கி குடுக்கப்போறேன்...
    கிளி மறுவாழ்வு திட்டம்...கோணி வழங்கு திட்டம்...
    பணத்தை சிக்கனமாதான் செலவு செய்வேன்...ஒரே ஒரு லட்சம் கிளி வாங்குவேன்...
    அந்த கிளியெல்லாம் குட்டி போட்டதும்..
    என்னது குட்டியா...
    ஆமாம்...எல்லாருக்கும் கிளிக்குட்டி குடுப்பேன்... ஒரு ரூபாய்க்கு மூணு கிளி...
    சோ அவர்கள் நடித்த படங்களில் இதுவும் அவரின் பெயர் சொல்லக்கூடிய ஒரு படமே... அதுவும் குறிப்பாக அந்த கால கட்டத்தில், எம்ஜியாரை இவ்வளவு தைரியமாக விமர்சித்தவர் சோ..வாகத்தான் இருக்கமுடியும்...அதுவும் கூறும்கருத்துகள் மறுக்கமுடியாத மாபெரும் உண்மையும் கூட.
    ஜெகன் வேலை பார்க்கும் சிட்பன்ட் நிறுவனத்தில் கொள்ளை போன இரண்டு லட்ச ரூபாயினை ஜெகன்தான் திருடி இருக்க வேண்டும் என்று போடும் நாடகம்...அதன் தொடர்ச்சியாக பணத்தினை வெளியாக்கும் யுக்தி...காட்சிகள் ருசிகரமானவை...
    ஜெகன் கைது நிகழ்வுக்கு பிறகு..அடுத்த காட்சியில்...
    லட்சுமி...சாப்டாச்சா...
    ஒரு நாளைக்கு சாப்பிடலேன்னா..உயிரா..போயிடும்...
    விமலா...சாப்பிடலியாம்மா....
    (கண்ணீருடன்)...ஒரு நாளைக்கு சாப்பிடலேன்னா..உயிரா..போயிடும்...
    ஆல்ரைட்.. ஆல்ரைட்..டயமாச்சு சாப்பிட வாங்க...
    (அப்போதும் யாரும் வரவில்லை..)
    இப்போ வரப்போறீங்களா இல்லையா.. I... Say....come on...
    என்ற ஒரு அதட்டலில் இருவரும் ஓடிவர.. அவர்களுக்கு நடிகர் திலகம் உணவு பரிமாறிக்கொண்டே... சாப்பிடு..சாப்பிடு... என்று.. அவர்களை சாப்பிட வைத்து....
    விமலா..நான் என்னமா தப்பு செஞ்சேன்...அப்படி ஏதாவது செஞ்சிருந்தா சொல்லு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்...
    லஷ்மி..ஒரு மாணவன் தப்பு பண்ணுனா...ஆசிரியர் தண்டிக்கறது இல்லையா..பிள்ளைங்க தப்பு பண்ணுனா..பெற்றோர்கள் தண்டிக்கறது இல்லையா..? குற்றம் செய்யறவங்க யாரா...இருந்தாலும்...தண்டனை அனுபவிச்சுதான் ஆகணும்...நாளைக்கு நானே ஒரு தப்பு பண்ணுனா...கூட S.P..ங்கறதால என்ன விட்டுடவா..போறாங்க.... ..நெவர்...
    கைலே விலங்கு போட்டு ரோட்ல அழைச்சிட்டுதான் போவாங்க...
    நான் இதுவரைக்கும் எவ்வளவோ..குற்றவாளிகளை கைது பண்ணிருக்கேன்...நீ சந்தோஷப்பட்டிருக்கே..
    ஆனா இன்னிக்கு நம்ப வீட்டுக்குள்ளையே ஒரு குற்றவாளியை கைது பண்ணியிருக்கேன்... அதுல ஒங்களுக்கு வருத்தம்...
    ஏன்னா.. குற்றவாளி ஒனக்கு மகன்...
    அவளுக்கு கணவன்...
    ஆனா ஒன்னு மாத்திரம்...எல்லாரும் மறந்துட்டீங்க... அவன்... எனக்கும் மகன்...
    பெண்கள்.. நீங்கல்லாம்...தாங்க முடியாம அழுதுடறீங்க...
    ஆனா ...நான்... வெளியில் சொல்ல முடியாம... (கைகளால் நெஞ்சிலே தட்டிக்கொண்டு...கண்களில் நீர் நிறைய...) கலங்குகின்ற காட்சி...
    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி பாடல் காட்சியும் படமாக்கப்பட்ட விதமும், நடிப்பும், பாடல் வரிகளும், பாடிய விதமும்...அற்புதம்...நெஞ்சை பிழியும் அற்புதமான ஒரு காட்சி. பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
    அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
    அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
    இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா... இதற்கு மேலும் இந்த காட்சிக்கு இதைவிட சிறப்பாக வரிகள் போட இயலுமா..என்று சவால் விட்டிருக்கிறார் கவியரசு..
    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
    வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
    வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
    சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
    அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
    சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
    அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
    ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
    நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
    பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
    எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
    ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
    அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல
    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
    வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
    வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
    மாமா காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.
    அந்த நதியே காஞ்சி போய்ட்டா??
    துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.
    ஆனா தெய்வமே கலங்கி நின்னா??
    அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?
    நானாட வில்லையம்மா சதையாடுது
    அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
    பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
    அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
    அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
    இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா
    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
    வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
    வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.
    படத்தின் உச்சக்கட்ட காட்சிகளில் ஒன்று...அந்த என்கொயரி காட்சி...மிஸ்டர் சவுத்ரி...ஹாஸ்ப்பிட்டல்லேர்ந்து கைதி தப்பிச்சு போக நீங்களும் ஒரு காரணம் ன்னு கம்பளைண்ட் வருதே....என்று துவங்கும்...அந்த காட்சியில் துவங்கும் வேகம்...
    மிஸ்டர் சவுத்ரி...சாரி...என்கொய்ரி ன்ற முறைல...உங்களையே நான் கேள்வி கேட்க வேண்டியதா போச்சு..
    நோ...சார்...நோ...சார் ஒங்க சீட்ல இருந்தா நானும் அப்புடிதான் சார் கேட்பேன்...
    (டெலிபோன் வர)
    ஓ..ரியலி ...மிஸ்டர் சவுத்ரி..ஒரு குட் நியூஸ்...அந்த கைதியை...பிடிச்சுட்டாங்களாம்..
    ஓ Is It... வெரி குட்...சார்..
    தப்பி ஓட முயற்சி பண்ணுனானாம்..ஷூட் பண்ணிட்டாங்களாம்...
    ஓ...பைன் சார்...
    (அடுத்து ஒரு போன்...வர) ஓ... அப்புடியா...
    மிஸ்டர்..சவுத்ரி..
    (அதே விரைப்புடன்) எஸ் சார்...
    எ.. பேட் நியூஸ் பார் யூ...ஒங்க மனைவி..இறந்துட்டாங்களாம்....
    இங்கே துவங்கும்...ஒரு அற்புத நடிப்பின் துவக்கம்...
    உணர்வுகள் உடலை தடுமாற செய்ய..தடுமாற்றத்துடன்...சுதாரித்துக்கொண்டு ..
    நான் வீட்டுக்கு போலாமா சார்...
    இறுகிய முகத்துடன்...வீட்டுக்கு வந்து...படியேறி...வந்து...மனைவியை...சடலமாக காணும் பொழுதினில்.... (மருமகள் விமலா..கதறிக்கொண்டே காலில் விழுகிறார்...)
    லட்சுமி நான் வந்து ரொம்ப நேரமாச்சு,
    ஏன் என் கூட பேச மாட்டேங்குற...
    நான் யூனி பார்ம்லே இருக்குறப்போ பேச பயப்படுவே....
    இதோ பார் நான் யூனிபாம் இல்லாம.. வந்துருக்கேன்...
    பேச மாட்டியா...பேசும்மா..
    நான் நேரம் கழிச்சு வருவேன் நீ எனக்காக தூங்கா ம காத்துக்கிட்டு இருப்பே...
    இப்போ நான் நேரத்தோட வந்திருக்கேன்.
    இப்போ நீ போயிட்டியே.... ...?
    நான் என்னம்மா தப்பு பண்ணுனேன்... ...?
    ஏம்மா என்னை விட்டுட்டு போயிட்டே...?
    எனக்கு யாருமே இல்லியேம்மா...
    என்ன தனிமரமா ஆக்கிட்டு போயிட்டியேம்மா....
    என்னால தாங்க முடியலேம்மா... என்று கூறிக் கொண்டே... வேரறுந்த மரமாக வீழ்ந்து கதறும் காட்சி...மைகாட்...மறக்கவே இயலாது...அந்த நடிப்பினை வழங்க இனி யாரால் இயலும்....
    நடிகர் திலகத்தின் படங்களில் நிச்சயம் முத்தாரமாக விளங்கும் படங்களில் இதுவும் ஒன்று...மீண்டும், இந்தப்படத்தினை மறு வெளியீடு செய்யவேண்டும்...நிச்சயமாக இன்றைய தலைமுறையினரை கூட கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.











    (முகநூல் விருந்து)
    Last edited by sivaa; 23rd May 2017 at 05:43 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. Likes Harrietlgy liked this post
  8. #3886
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #3887
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #3888
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #3889
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இன்று நடிகர் திலகம் வலியுறுத்திய "நீதி"
    இருக்கிறது " வானவில்" தொலைக்காட்சி சேனலில் பிற்பகல் 1:30 க்கு











    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. #3890
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •