Page 274 of 400 FirstFirst ... 174224264272273274275276284324374 ... LastLast
Results 2,731 to 2,740 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2731
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2732
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சோ - இந்த ஓரெழுத்து தமிழக ஊடகத்துறையிலும் அரசியல் துறையிலும் பலரது தூக்கத்தைக் கெடுத்த எழுத்து.
    திரையுலகில் நடிகர் திலகம் என்னும் மோதிரக்கையால் குட்டுப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டவர் திரு சோ ராமசாமி.
    உண்மையைத் தவிர வேறேதும் எழுதாத பத்திரிகையாக துக்ளக் விளங்க வேண்டும் என்பதில் சோவின் உறுதி பிரமிக்கத் தக்கது.
    ஒரு சில விஷயங்களில் எனக்கு அவருடன் அபிப்ராய பேதம் உண்டு.
    அரசியலைப் பொறுத்த மட்டில் நல்லவர்கள் வரவேண்டும் என விருப்பப்பட்டவர், நடிகர் திலகத்தை மட்டும் அரசியல் ரீதியாக ஆதரிக்கவில்லை.
    குறிப்பாக நடிகர் திலகம் மறைந்த பொழுது உள்ளே அரைப்பக்கத்திற்கு கருப்பு வெள்ளையில் அவருடைய படத்துடன் அஞ்சலி செலுத்தியவர் மூப்பனார் மறைந்த பொழுது அட்டையில் முழுப்பக்கத்திற்கு வண்ணப்படத்தை இடம் பெறச் செய்தார். மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் பொழுது இதெல்லாம் ஒரு விஷயமா எனத் தோன்றலாம்.
    ஆனால் என்னைப் போன்ற ஏராளமான சிவாஜி ரசிகர்களுக்கு அது ஒரு மன வருத்தமே.
    இருந்தாலும் அவர் பத்திரிகையாற்றிய அளப்பரிய சேவையினால் தான் இன்றும் பத்திரிகை தர்மம் என்பது தழைத்து வருகிறது.
    நேர்மையைத் தவிர வேறொன்றறியாத மனிதராய் இறுதி வரை வாழ்ந்த திரு சோவின் மறைவு தமிழக ஊடகத்துறை, திரைத்துறை, நாடகத்துறை உள்ளிட்ட அவர் பங்களிப்பினைப் பெற்ற அத்துணைத் துறைகளுக்கும் பேரிழப்பே.
    எல்லாவற்றிற்கும் மேலாக எந்த ஒரு விஷயத்தையும் லாஜிகலாக அதாவது தர்க்கரீதியாக அணுக வேண்டிய முறையை அவர் எழுத்துக்கள் தான் எனக்கு போதித்தது. தொடர்ந்து துக்ளக் இதழை படித்து வருபவர்கள் தானாகவே எந்த வித சட்ட ரீதியான விஷயத்தையும் விவாதிக்கும் வல்லமையைப் பெறுவார்கள் என்பது திண்ணம்.
    திரு சோ அவர்களுக்கு உளமார்ந்த அஞ்சலி. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டு அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்வோம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #2733
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    "அதிர்சசியுற்றேன்"
    =================

    'ஜெயலலிதா'....... தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல, தமிழக அரசியல் உலகில் மட்டுமல்ல, தமிழர் வாழ்விலிருந்து அகற்ற முடியாத பெயர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிந்த ஒரு ஆளுமை நிறைந்த சக்தி.

    இம்முறை பதவியேற்றத்தில் இருந்தே அவர் முகத்தில் பழைய பொலிவில்லை. மிகவும் சோர்ந்து காணப்பட்டார். கடசியிலிருந்தோ, மக்களிடமிருந்தோ, எதிர்க்கட்ச்சிகளிடமிருந்தோ எந்த நெருக்கடியும் நிச்சயமாக இல்லை. அவரது கோட்டைக்குள் கூடவே இருந்தவர்களால் ஏதோ வெளியில் சொல்ல முடியாத நெருக்கடிகளால் தவித்திருக்கிறார், பாவம்.

    அப்பல்லோவில் அட்மிட் ஆனார் என்றபோதே மனது துணுக்குற்றது. தொடர்ந்து வந்த செய்திகளில் இருந்த முன்னுக்குப்பின் முரணான தகவல்களால் கவலை படர்ந்தது. இருந்தபோதும் 'அம்மா நலமுடன் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார்' என்ற செய்திகள் மனதுக்கு அமைதியை தந்தது.

    ஆனால் நான்காம் தேதி மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தியும், தொடந்து நிலைமை கவலைக்கிடம் என்ற தகவல்களும் நம் நம்பிக்கையை தகர்த்தது. இறைவா இந்த செய்திகள் பொய்யாக இருக்க வேண்டுமே என்று மனம் துடித்தது. ஆனால் இயற்கையின் தீர்ப்புக்கு முன் எல்லாம் தோற்றது. எது நடக்க கூடாது என்று துடித்தோமோ அது நடந்து விட்டது.

    ஆம், தமிழக அரசியலில் முப்பது வருடங்களாக ஆர்ப்பரித்த பெண் சிங்கத்தை இழந்து விட்டோம். சூறாவளியாக சுழன்றடித்த அந்த ஆளுமை, அந்த கம்பீரம் நேற்று முழுவதும் ராஜாஜி மண்டப வாயிலில் மீளா துயிலில் கிடந்த போது, கண்ணீர் விடாதோர், கதறாதோர் உண்டோ.

    எழுபத்தைந்து நாட்கள் நீ என்ன நினைத்தாய், என்ன சொல்ல துடித்தாய் என்பது யாருக்கும் தெரியாது போனதே தாயே. உன் இறுதி நாட்களில் குள்ளநரி கூட்டத்தின் கைகளில் விளையாட்டு பொருளாகி போனாயே. மூன்று தொகுதிகளின் வெற்றிசெய்தி உனக்கு உத்வேகம் தந்து உன்னை எழுந்து உட்கார வைத்து விடும் என்ற நம்பிக்கையில் மக்கள் வெற்றியை தந்தனரே. ஆனால் தேர்தல் நடந்ததே உனக்கு தெரியுமா என்ற ஐயப்பாடு இப்போது எங்களுக்குள் எழுகிறதே.

    ஆள், அம்பு, சேனை பரிவாரம் எல்லாமிருந்தும் ஏதுமற்றவராய், அந்த கடைசி நேர மூச்சுகாற்றுக்காக எவ்வளவு துடித்திருப்பாய் என்று எண்ணும்போதே இதயம் கனத்து, கண்களில் நீர் பெருக்கெடுக்கிறதே தாயே.

    உன் தலைவரையும், எங்கள் அண்ணனையும் காணச்சென்று விட்ட தாயே, நாங்களும் வரிசையில் நிற்கிறோம், வந்து விடுவோம்.

    ஆனால் அங்கேயும் நான் உனக்கு எதிர்க்கட்ச்சிதான். உன்னை உரிமையோடு எதிர்ப்பதில் உள்ள சுகமே தனி.

    சென்று வா... தாயே

    கண்ணீருடன்
    ஆதி.

  5. #2734
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சோ - சிறந்த வழக்கறிஞர். TTK போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் லீகல் அட்வைஸர். UAA குழுவில் இணைந்து அமெச்சூர் நாடகங்களில் நடிக்க தொடங்கி பின் சொந்தமாக விவேகா பைன் ஆர்ட்ஸ் என்ற குழுவை தொடங்கி அதுவரை தமிழ் நாடகத்துறை காணாத அங்கத நகைசுவை நாடங்களை அரங்கேற்றி வெற்றிகரமாக இயக்கி நடித்தவர், திரைப்பட நடிகராக, திரைப்பட கதை வசனகர்த்தாவாக, திரைப்பட இயக்குனராக பரிமளித்தவர். சொந்தமாக பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றை நடத்தியவர், அனைத்திற்கும் மேலாக ஒரு அரசியல் பத்திரிக்கை எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற இலக்கணத்தை தமிழகத்திற்கு வகுத்துக் காட்டியவர். இத்துணை பன்முகத்தன்மை கொண்ட ஒரு மனிதனாக வலம் வந்த திரு சோ அவர்களின் மறைவு உண்மையிலே ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு.

    ஒரு அரசியல் விமர்சகராக அவர் தொட்ட உயரங்கள் பிரமிக்கத்தக்கவை. கிட்டத்தட்ட கடந்த அரை நூற்றாண்டு கால வரலாற்றை எடுத்துக் கொண்டால் தமிழகம் மட்டுமின்றி அகில இந்தியாவெங்கும் அவர் பழகாத அவருக்கு தெரியாத அரசியல் தலைவர்கள் யாருமே இருக்க முடியாது என்பது இன்றைய தலைமுறையினர் பெரும்பாலானோர் அறியாத செய்தி.

    இத்துணை சிறப்பு வாய்ந்த ஒருவரை நமது நடிகர் திலகம்தான் திரையுலகில் அறிமுகப்படுத்தினார் என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம். அதுவும் தவிர 1970 முதல் 1975 வரை பெருந்தலைவரின் தலைமையை ஆதரித்தும், ஸ்தாபன காங்கிரஸ் இயக்கம் மற்றும் நடிகர் திலகம் ரசிகர்களுக்கும் ஒரு moral support ஆக செயல்பட்ட பத்திரிக்கைகளில் துக்ளக்கின் பங்கு முக்கியமானது வலிமையானது.

    அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். திரு சோ அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

  6. #2735
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #2736
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    .....

    Jayalalithaa was a skilled Bharat Natyam dancer. She had her arangetram (on-stage debut) in May 1960 when she was 12. Personalities from the film industry came for the performance. Shivaji Ganesan, mega-star, was the guest of honour.

    Jayalalithaa recalled, "When Shivaji gave the speech, he said 'this girl is really beautiful like a golden idol, and one day in the future she will come into the film industry and will get a great welcome. I wish that for her.'"

    "I'm certain he wouldn't have even dreamt that in some years, I would work alongside him as a heroine," she wrote.
    From NDTV website at: http://www.ndtv.com/tamil-nadu-news/...anesan-1634946
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #2737
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தங்கச்சிலை எனத் தலைவரால் போற்றப்பட்ட கலைச்செல்வி ஜெயலலிதாவின் எதிர்காலத்தை 1960லேயே தலைவர் தீர்க்கதரிசியாய்க் கூறியதை வரலாறு இன்று நிரூபித்துள்ளது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #2738
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like



    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  10. #2739
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like

    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #2740
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. மேடம் மறைந்த மணித்துளிகளில் நடிகர் திலக ரசிகர்களின் ஒட்டுமொத்த அன்புக்குப் பாத்திரமான நமது பிரியத்துக்குரிய 'சோ' அவர்கள் இறந்து விட்டதாக தகவல் வந்ததும் தாங்கவே முடியவில்லை. எப்பேர்பட்டவர்கள் எல்லாம் நம்மை விட்டு மறைந்து கொண்டிருக்கிறார்கள்.

    எனக்கு நன்றக நினைவில் இருக்கிறது. 1970-ல் சோ கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் நடைபெற்ற பொருட்காட்சியில் தன்னுடைய புகழ் பெற்ற 'முகமது பின் துக்ளக்' நாடகத்தை ஒருநாள் இரவு 7.00 மணிக்கு நடத்திக் கொண்டிருந்தார். (அந்த நாடகத்தை நடத்தவிடாமல் அவருக்கு அப்போது தமிழகத்தில் அரசியல் தொடர்பான பல தொல்லைகள். அதையெல்லாம் மீறி தன் மனதைரியத்தால் ஜனங்களின் பேராதரவோடு அந்த நாடகத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தார் அவர்)

    கடலூரிலும் அவருக்கு நாடகம் நடத்த விடாமல் பிரச்னைகள் தந்தனர் அவருடைய விமர்சனங்களை தாங்க மாட்டாதோர். நாடகம் நடக்கும் போது கற்களை மேடை மீது வீசி கலாட்டா செய்தார்கள் அன்றைய அரசியல் ரவுடிகள். இதற்கெல்லாம் கொஞ்சமும் சளைக்காமல் தொடர்ந்து அவர் நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார். கூட்டம் அதிகம் வேறு. கலவரம் அதிகமாவதை பார்த்து அம்மா என்னை நாடகம் முடிவதற்கு முன் கடலூர் துறைமுகத்தில் இருக்கும் என் பாட்டி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள். பின் சாப்பிட்டுவிட்டு கடலூர் துறைமுகம் கமர் தியேட்டரில் அப்போது ஓடிக்கொண்டிருந்த கே.எஸ்.ஜியின் 'தபால்காரன் தங்கை' படத்துக்கு அனைவரும் சென்று பார்த்துவிட்டு நொந்து வந்தோம்.



    துணிச்சல், எதற்கும் கலங்காமல் தன் கருத்துக்களை முன் வைக்கும் தைரியம், தன்னைத்தானே கலாய்த்துக் கொள்ளும் பக்குவம், கேலி, கேள்வி என்று அம்சமான 'துக்ளக்' பத்திரிகை, டியர் மிஸ்டர் துக்ளக், டாக்டர் என்று ரகளையான பக்கங்கள், சினிமா விமர்சனம், அதற்கு டைரக்டரின் பதில் கடிதம், வாசகர்களின் சிறந்த கேள்விக்கு துக்ளக் ஆண்டுவிழாவில் மூன்று பைசா பரிசு என்று தமிழகத்தை களை கட்ட வைத்தார் சோ. துக்ளக்கின் தீவிரமான வாசகர்களை நானறிவேன். அதை இன்று பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்து வருவோரும் உண்டு.

    சினிமாவில் நகைச்சுவை சாதனை. நினைவில் நின்றவள், தேன்மழை, பொம்மலாட்டம் என்ற முக்தாவின் படங்களில் 'சோ' வா நாகேஷா? என்று போட்டி வைத்தால் யார் டாப் என்று சொல்வது சிரமம். 'தங்கப்பதக்கம்'கேட்கவே வேண்டாம். 'யிஸம்' களை அவர் படுத்தியபாடு.... 'விளையாட்டுப்பிள்ளை'யில் வில்லனாகக் கூட நடித்தது விட்டார்.

    [/URL]



    அரசியல் வித்தகர், அறிவாளி, ராஜதந்திரி, சூத்திரதாரி, பத்திரிக்கையாளர், ஆலோசகர் என்று அவர் அரசியலில் செய்யாததே இல்லை. அதையெல்லாம் மீறி அந்த முட்டை கண்களை மலங்க மலங்க விழித்து அம்மாஞ்சியாய் அமர்க்களம் பண்ணின அந்தக்கால பிளாக் அண்ட் ஒயிட் 'சோ'வை எனக்கு மிகவும் பிடிக்கும்.

    அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
    Last edited by vasudevan31355; 8th December 2016 at 11:19 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •