Page 268 of 400 FirstFirst ... 168218258266267268269270278318368 ... LastLast
Results 2,671 to 2,680 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2671
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2672
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Vasu Sir

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #2673
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    'இரும்புத்திரை'
    வாசு சார்,
    "இரும்புத்திரை". - பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. உங்கள் பதிவிற்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தைப் பார்த்தால்தான் சுவாரசியாமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அருமையான பதிவு. நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  6. #2674
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கிடைத்தற்கரிய "செல்வம்" கிடைத்தும்,அதை பகிர மனமில்லா கஞ்சனாய் உங்களிடமே வைத்திருக்கிறீர்களே முரளி? இது ஞாயமா ?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #2675
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    வாசு,

    எனக்கு வேற யாரு இருக்கா உங்களைத்தானே நம்பணும் என்ற தேவர் புலம்பலை போல கார்த்திக் கைவிட்டுவிட,சாரதா கௌரவ நடிகையாகி விட, முரளி பழைய பெருங்காய டபபா ஆகிவிட,ராகவேந்தர் அப்போப்போ தலை காட்ட,புதிய பதிவர்களோ ,நாங்கள் பாட்டுக்கு எங்கள் பதிவை போடுவோம் பதில் வினை-எதிர்வினையா மன்னிக்க என்று செல்ல ,என்னத்தை சொல்ல?எவ்வளவு நாள் உதாசீனத்துடன் போராடி தங்கத்தை இலவசமாகவே ,நன்றி என்ற வார்த்தை கூட இன்றி வழங்கி கொண்டிருக்க போகிறோமோ?
    பெரிய பெரிய பதிவுகள் எல்லாம் போட்டு அசத்தும் வல்லமை இல்லாவிட்டாலும், ஜாம்பவான்கள் பக்கத்தில் நெருங்க முடியாவிட்டாலும், அவர்கள் போடும் அற்புத பதிவுகளுக்கு வெறும் 'லைக்' மட்டும் போட்டு அகல்வது தர்மமில்லையென்று எதையாவது தனக்கு தெரிந்த வரையில் எழுதி பாராட்டுவதற்காக இங்கே 'ஆதி' என்றொரு கிறுக்கன் அலைந்து கொண்டிருந்தானே / கொண்டிருக்கிறானே.

  8. Thanks Gopal.s thanked for this post
    Likes Gopal.s liked this post
  9. #2676
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    பெரிய பெரிய பதிவுகள் எல்லாம் போட்டு அசத்தும் வல்லமை இல்லாவிட்டாலும், ஜாம்பவான்கள் பக்கத்தில் நெருங்க முடியாவிட்டாலும், அவர்கள் போடும் அற்புத பதிவுகளுக்கு வெறும் 'லைக்' மட்டும் போட்டு அகல்வது தர்மமில்லையென்று எதையாவது தனக்கு தெரிந்த வரையில் எழுதி பாராட்டுவதற்காக இங்கே 'ஆதி' என்றொரு கிறுக்கன் அலைந்து கொண்டிருந்தானே / கொண்டிருக்கிறானே.
    ஆதி ,


    உங்களை மறப்போமா? 1000 கடைசி,2000 கடைசி,3000 கடைசி,4000 போதும் என்று சொல்லி சொல்லி செயல் படுத்தும் மனமின்றி இன்னும் மாஞ்சு மாஞ்சு உழைப்பது நடிகர்திலகம் என்ற தெய்வத்திற்கும்,உங்களை போன்ற உயர்ந்த நட்புகளுக்காகவுமே.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. Thanks adiram thanked for this post
  11. #2677
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    கிடைத்தற்கரிய "செல்வம்" கிடைத்தும்,அதை பகிர மனமில்லா கஞ்சனாய் உங்களிடமே வைத்திருக்கிறீர்களே முரளி? இது ஞாயமா ?
    நானும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன். 'செல்வம்' விழாவில் ராகவ்ஜி பங்கேற்க முடியவில்லை என்று கேள்விப்பட்டேன். கே.ஆர்.விஜயாம்மா வந்திருந்தார்களாம்.

    முரளி சார் சீக்கிரம் வாங்க உங்க பொக்கிஷ பதிவோடு.

  12. #2678
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like



    சிவாஜி கணேசன்நடித்து திரைக்கு வராத படம் ஒன்றும் உள்ளது. ‘பெண் பாவம் பொல்லாது’ என்பதே அந்தப் படம். கோபி –
    சிவசுந்தரம் சகோதரர்கள் கதை வசனத்தில், எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில், காயத்ரி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரேவதி ஸ்டுடியோவில் உருவான இப்படம், திரைக்கு வரவேயில்லை
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  13. Likes Harrietlgy liked this post
  14. #2679
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோபால்,

    மிகுந்த சந்தோஷமான விஷயம் என்ன தெரியுமா? நீங்கள் மீண்டும் புதிதாய் எழுதுவது. அன்னை இல்லம் பற்றி, இரும்பு திரை பற்றி, மாளிகை பற்றியெல்லாம் நீங்கள் எழுதியிருப்பதை படிக்கும்போது பல்வேறு உணர்வுகள். முன்பு மடி மீது தலை வைத்து பற்றி எழுதியிருக்கிறேன். இரும்புத்திரை பற்றி சிலாகித்திருக்கிறேன். சென்னை அபிராமியில் மாளிகை பார்த்ததைப் பற்றி எழுதும்போது நீங்கள் குறிப்பிட்ட அந்த காட்சியைப் பற்றி சொல்லி (குளிருதா? பசிக்குதா?) இதைப் பற்றி இன்னும் பேச வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு பார்வையாளனுக்கும் ஒவ்வொரு விதமான எண்ணங்களை விதைப்பதுதானே நடிகர் திலகத்தின் படங்களின் சிறப்பே! எழுத வேண்டும்! எழுதுகிறேன்.

    ஆதிராம் சார்,

    வேலைப் பளு, நேரமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் செல்வம் பொன் விழா நிகழ்ச்சி பற்றி எழுத முடியவில்லை. விரைவில் எழுத முயற்சிக்கிறேன். கோபால், உங்களுக்கும் சேர்த்துதான்.

    இரு மலர்கள் பற்றிய பதிவை மீள் பதிவு செய்ததற்கு நன்றி ஆதிராம் சார்.

    வாசு,

    ஆயிரம் கோடி நன்றிகள். முதலாவதாக நிர்மல் பற்றி எழுதியதற்கு. காரணம் மாணிக்கம் பற்றி கூட நிறைய பேர் எழுத முன்வருவார்கள். ஆனால் நிர்மல் பற்றி சொல்ல விழைபவர்கள் குறைவு. அந்த சண்டைக் காட்சியை கண் முன்னே நிறுத்தியதற்கு மீண்டும் நன்றி.

    ஜெமினி நிறுவனம் நடிகர் திலகத்தை வைத்து எடுத்த மூன்று படங்களில் இரும்பு திரையும் சரி, MSP யும் சரி விமர்சகர்களின் பாராட்டை வெகுவாக பெற்ற படம். கிட்டத்தட்ட 57 வருடங்களை தொடும் நிலையிலும் இரும்புத்திரை திரைப்படமும் நடிகர் திலகத்தின் நடிப்பும் இன்றும் relevant ஆக இருக்கிறது. எப்போதும் இயல்பான காதல் காட்சி என்பது மனதுக்குள் சந்தோஷ பூக்களை தூவுவது. அதிலும் இந்த படத்தின் காட்சி காவியம். சில மாதங்களுக்கு முன்னால் சில இளைஞர் இளம் பெண்கள் குழு ஒன்றிற்கு இந்த காட்சி திரையிடப்பட்டது. அதில் தமிழ் தாய் மொழியாக அல்லாதோர் அதிகம். கலை ஒன்றை பயில்வதற்காக வந்தவர்கள். தொடாமலேயே காதல் உணர்வை எப்படி சொல்ல முடியும், அந்த உணர்வை எப்படி பார்வையாளனுக்கு கடத்த முடியும் என்பதை விளக்கவே இந்த காட்சி தேர்வு செய்யப்பட்டது. திரையிட்டவர் ஒரு சினிமா பிரபலம். காட்சி முடிந்தவுடன் ஆங்கிலத்தில் விளக்குவதாக திட்டம். ஆனால் அந்த அவசியமே எழாமல் அந்த குழுவினர் காட்சியை புரிந்துக் கொண்டதுடன் கைதட்டி ரசித்தார்கள் என்று அந்த பிரபலம் சொன்னபோது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அதே மகிழ்ச்சி இப்போது உங்கள் பதிவை படிக்கும்போதும்!

    அன்புடன்

  15. Thanks adiram thanked for this post
    Likes Harrietlgy liked this post
  16. #2680
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வாசு,

    இந்த பதிவும் உங்களுக்குத்தான்.

    ஒரு 20 நாட்களுக்கு முன்பு ஒருவரின் அலுவலகத்திற்கு நானும் ராகவேந்தர் சாரும் சென்றிருந்தோம். அங்கே எதிர்பாராவிதமாய் மற்றொருவர் வந்தார். நாங்கள் காண சென்றது திரை பிரபலம். வந்தவரோ சின்னத் திரை பிரபலம். Topic நடிகர் திலகம்தான். சிறிது நேரத்திற்கு பிறகு நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட சில காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு காட்சி வந்தது. உடனே அதை freeze செய்துவிட்டு இந்தக் காட்சியில் என்ன விஷேஷம் தெரியுமா என்று திரை பிரபலம் கேட்க சின்னத்திரை நபர் கவனிக்கவில்லையே, மீண்டும் போடுங்கள் என்று சொல்ல மீண்டும் அந்தக் காட்சி. சின்னத்திரை நடிகர் சற்று யோசிக்கிறார்.

    காட்சி இதுதான். வயதான பாதிரியார் ஈஸி சேரில் சாய்ந்திருக்க "முரட்டு பயலே இது யாருனு தெரியுதா" என்று அவரின் கேள்விக்கு வாய் திறந்து பதில் சொல்லாமல் வலது கண்ணை கருப்பு திரை மறைத்திருக்க வந்திருப்பவர் யார் என ஆண்டனி பார்க்கிறான். சட்டென்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் தலையை சற்றே இடது புறம் சாய்த்து மீண்டும் பார்க்கிறான். இதுதான் காட்சி. இதில் என்ன ஸ்பெஷல் என்பதுதான் கேள்வி. பதிலையும் சினிமா பிரபலமே சொன்னார்.

    நம்மைப் போன்றவர்கள் அதாவது இரன்டு கண்களாலும் பார்க்க முடிபவர்களுக்கு பார்க்கும் மனிதனையோ அல்லது பொருளையோ நேராக பார்ப்போம். அதாவது இரண்டு கண்களும் ஒரு மையப் புள்ளியில் நிலை கொண்டு பிம்பத்தை நமது மூளைக்கு உணர்த்தும். அதே நேரத்தில் கண் பார்வை குறையுடையவர்களும் ஒரு கண் பார்வை இழந்தவர்களும் நம்மைப் போன்று பார்க்க இயலாது. எதிரே நிற்கும் பிம்பம் போன்ற எதையுமே அவர்கள் ஒரு கண்ணால் focus செய்வார்கள். அதில் சற்றே சிரமப்படும்போது பிம்பத்தை சரியாக உள்வாங்க அந்த focus சரியாக கிடைக்க எந்த கண் தெரிகிறதோ அந்தப் பக்கம் சற்றே தலையை சாய்த்து அதை சரி செய்வார்கள். வந்திருக்கும் பால்ய நண்பனை சரியாக அடையாளம் கண்டுகொள்ள ஆண்டனி அதைத்தான் செய்கிறான் என்று அவர் விளக்கியபோது மெய் சிலிர்த்து விட்டது.

    வெறும் முப்பது வினாடிகளுக்கும் குறைவாக வந்து போகும் அந்த ஒரு ஷாட்டிற்காக நடிகர் திலகம் வெளிப்படுத்திய அந்த நுணுக்கம், எந்தளவிற்கு தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கு நீதி புலர்த்தினான் அந்த மகாகலைஞன் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

    ஆண்டனி பற்றியோ அல்லது அருண் பற்றியோ விஷயம் பேசப்படும்போது அதை உங்களை தவிர வேறு யாருக்கு dedicate செய்ய முடியும்!

    அன்புடன்

  17. Thanks Harrietlgy, adiram thanked for this post
    Likes Harrietlgy, adiram liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •