Page 167 of 400 FirstFirst ... 67117157165166167168169177217267 ... LastLast
Results 1,661 to 1,670 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #1661
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இமாலய வசூல் சாதனை படைத்திட்ட மக்கள்தலைவரின் திரிசூலம் திரைக் காவியத்தின் வசூல் மற்றும் ஓடிய நாட்கள் பற்றி விபரங்களை இன்றைய ரசிகர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் வெங்கடேஷ் சார்பில் ஒட்டப்பட்டுள்ள மற்றொரு பிரமாண்ட போஸ்டர் உங்கள் பார்வைக்கு...



    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1662
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என்றும் கலையுலகின் சக்கரவர்த்தி சிவாஜி ஒருவரே. இது வரை இவரை வெல்ல யாரும் பிறந்ததில்லை, இனி பிறக்கப் போவதுமில்லை. மண்ணை விட்டு மறைந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன.
    இன்றும் தமிழகத்தில் நமது மக்கள்தலைவரின் திரைக்காவியங்களை மக்கள் மற்றும் இன்றைய இளைஞர்களும் விரும்பி பார்க்கின்றனர் என்றால், அது நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் படங்கள் தான்.
    எத்தனை ஆண்டுகளானாலும் நமது மக்கள்தலைவரின் திரைக்காவியங்கள் மக்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை.




    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  5. Thanks Russellmai thanked for this post
  6. #1663
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Towards the 15th Heavenly Abode of NT....Nostalgic Anniversary glimpses!

    Pin-hole Licensee and Pin-drop Silencer : Shot-cuts from NT's Start-Cut World !!

    நடிப்பின் நாடித்துடிப்பின் 15வது நினைவஞ்சலி மீள்பார்வை!

    (படப்பிடிப்பின்) ஊசித்துவாரம் கண்டு ரசித்த (நடிப்பின்) நாசித்துவாரம் (NT)!

    நடிப்பின் குத்தகைதாரரின் பாத்திரப்படைப்பில் மூழ்கி ஸ்டார்ட் சொல்லி கட் சொல்ல மறந்த தருணங்கள் வரலாற்றுப் பதிவுகள்!

    பராசக்தியின் கோரட் சீன்,மனோகராவின் சங்கிலிப் பிணைப்பின் துடிப்பு, தெய்வமகனின் முப்பரிமாண விஸ்வரூபம், கர்ணனின் மரணாவஸ்தை, பாசமலரின் கைவீசம்மா, நவராத்திரியில் நவரசம், தில்லானாவின் நாதஸ்வர முகபாவங்கள், விக்கிரமனின் உக்கிரம், புதியபறவையாக நிம்மதி தேடியவரின் மன ரணங்கள், .........நினைவலைகள் என்றுமே ஓய்வதில்லை!


    ஷாட்-கட் 1 : பார்த்தால் பசி தீரும்!....பாத்திரப்படைப்பின் தன்மை புரிந்த நடையலங்காரம்!

    குண்டடிபட்டு பாதிக்கப்பட்ட ராணுவவீரரின் நடையின் வெளிப்பாட்டை அதன் தொடர்ச்சி விடாமல் பாடல் முழுவதும் விந்தி நாமும் கண்ணிமைக்க மறுக்கிறோம்!
    கட் சொல்ல மறந்து காமிராவும் விந்துகிறது!


    Last edited by sivajisenthil; 26th June 2016 at 05:34 PM.

  7. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, Harrietlgy, Russellmai liked this post
  8. #1664
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Written by Mr. Sudhangan,




    நடிகர் முத்துராமனுக்கு சிவாஜி மீது எப்போதுமே மிகுந்த பாசமும் மரியாதையும் உண்டு!
    தன்னுடன் எந்தந்த பாத்திரங்களில் முத்துராமன் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதை சிவாஜி உணர்ந்தேயிருந்தார்!
    கர்ணன் என்றால் அர்ஜூனன் வேடத்திற்கு முத்துராமனே பொருத்தமாக இருப்பார் என்பது சிவாஜிக்கு தெரியும்!
    பார் மகளே பார் சிவாஜிக்கு இணையாக பி.பி.எஸ் குரலில் முத்துராமனுக்கும் பாட்டு! அந்த பாட்டுத்தான் அவள் பறந்து போனாளே!
    பழநி படம் என்றால் அதில் நான்கு சகோதரர்களில் ஒரு தம்பி முத்துராமன் என்பதில் உறுதியாக இருந்தார்!
    நெஞ்சிருக்கு வரை படத்தில் தான் காதலித்த பெண் தன் நண்பனை காதலிக்கிறாள் என்று தெரிந்ததும் தானே அந்த பெண்ணுக்கும், தன் நண்பனுக்கு திருமணம் ஒரு சகோதரனைப் போல் திருமணம் செய்து வைப்பார்!
    அப்போதுதான் ஒரு திருமண அழைப்பிதழையே விஸ்வநாதன் பாடலாகப் போட்டிருப்பார்!
    அந்த பாடல் தான் ` பூ முடிப்பாள் இந்த பூங்குழலி’ பாடல்!
    அந்த நண்பன் வேடத்திலும் முத்துராமன்!
    அதே போல் தான் ராமன் எத்தனை ராமனடியிலும் முத்துராமனுக்கு நல்ல வேட!
    எங்கிருந்தோ வந்தாள் படத்தில் சின்ன வேடமாக இருந்தாலும் அதில் முத்துராமனுக்குத்தான் கதையின் திருப்புமுனையாக கதாபாத்திரம்!
    இப்படி முத்துராமன் மீது சிவாஜி மிகுந்த மரியாதை உண்டு!
    இந்த முத்துராமன் சிவாஜியைப் பற்றி என்ன சொல்கிறார்
    `என்னதான் உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? திரு சிவாஜி கணேசனோடு நான் நடிக்கிறேன் என்றால் மலைக்கும் மடுக்குவுமுள்ள பெரிய வித்யாசத்தைக் காண்கிறேன். அவர் உலகப் புகழ் பெற்ற உன்னதமான கலை தெய்வம்.. ஆமாம்! தெய்வப்பிறவியே தான் அவர்! அவருடைய அன்பும் ஆசியும் என்று எனக்கிருந்து வருகிறது. அவர் ஒரு ஆலமரம் போல் இருந்து கலையுலகுக்கு நிழல் தருகிறார். நமது தமிழ்நாடு, அவரின் திறமைமிக்க நடிப்பால் கலையில் உலகப்புகழ் பெற்றுவிட்டது. அதையெண்ணி என் மனம் மிகுந்த பூரிப்படைகின்றது’ இதை அவர் அவன் தான் மனிதன் பட வெற்றி விழா மலரில் பதிவு செய்திருக்கிறார் முத்துராமன்!
    1969ம் ஆண்டு சிவாஜி நடித்து வெளிவந்த படங்கள் அஞ்சல் பெட்டி 520, அன்பளிப்பு, காவல் தெய்வம், குருதட்சணை, சிவந்த மண், தங்கச் சுரங்கம், திருடன், தெய்வமகன், நிறைகுடம்,
    இந்த ஒன்பது படங்களும் வித்யாசமானவை!
    அஞ்சல் பெட்டி 520 படம் சுமாராகத்தான் ஒடியது!
    இந்தப் படத்திற்கு சுதர்ஸனம் இசையமைத்து இருந்தார்!
    அன்பளிப்பு இந்த படத்தை ஏ.சி.திருலோக்சந்தர் இயக்கியிருந்தார்
    இந்த படம்தான் சிவாஜியும், அப்போது மிகவும் பிரபலமாக இருந்த தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்றழைக்கப்பட்ட ஜெய்சங்கர் சிவாஜியுடன் இணைந்து நடித்த முதல் படம்!
    ஒரு முறை ஜெய்சங்கரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் இந்த அனுபவத்தை பற்றி சொல்லும் போது, ` எல்லா நடிகர்களுக்கும் சிவாஜியுடன் நடிப்பது என்றால் ஒரு வித பதட்டம் இருக்கும். ஆனால் எனக்கு பதட்டமே இல்லை. காரணம் நான் என்னை மிக சரீயஸான நடிகனாக கருதியதேயில்லை. அதனால் இதை சிவாஜியிடமே சொன்னேன்! நீங்க நடியுங்க! நான் உங்க கூட படம் முழுவதும் வந்துவிட்டு போகிறேன்’ என்றேன்1
    ஆனால் படம் சரியான வெற்றியை பெறாவிட்டாலும் ஜெய்சங்கரும் இந்த படத்தில் நன்றாகவே நடித்திருப்பார்!
    அந்த வருட வந்த காவல் தெய்வம் படத்தின் சிவாஜிக்கு ஒரு கெளரவ வேடம் தான்!
    இது ஜெயகாந்தனின் கை விலங்கு கதையை வைத்து எடுக்கப்பட்ட படம்!
    இந்தப் படத்தை நடிகர் எஸ்.வி. சுப்பையா தயாரித்திருந்தார்!
    சிவாஜிக்கு ஒரு மரமேறி வேடம்!
    அதே போல் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வந்த படம் தான் குருதட்சணை!
    இதில் சிவாஜி, பத்மினி, ஜெயலலிதா நடித்திருந்தார்கள்!
    ஆனால் ஏ.பி.நாகராஜனின் புராணப் படங்கள் ஏற்படுத்திய பாதிப்பை இந்த படம் ஏற்படுத்தவில்லை.
    அந்த வருடத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ஸ்ரீதர் தயாரித்து இயக்கிய சிவந்த மண் படம் தான்!
    இந்த படம் தயாரிப்பில் இருக்கும் போதே இயக்குனர் ஸ்ரீதர் ஆனந்த விகடன் இதழில் ஒரு 12 வாரம் `அந்நிய மண்ணில் சிவந்த மண்’ என்கிற தொடரை எழுதினார்.
    மேலும் வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது!
    மேலும் படம் பொருட்செலவில் பிரும்மாண்டமாக தயாரிக்கப்படுகிறது என்பதாலும் படத்தின் மீது மிகுந்து எதிர்பார்ப்பு!
    சிவாஜி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு படம் வெளியாவதற்கு காத்திருந்தார்கள்.
    படத்தின் பாடல்கள் அதற்கு முன்பே பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது!
    எங்கும் திரும்பினாலும் அந்த படத்தின் ` ஒரு ராஜா ராணியிடம்’ பாடல் தான் கேட்கும்1
    அது நீண்ட பாடல்1
    வானொலியில் நேயர் விருப்பம் என்றால் இந்த பாடலுக்குத்தான் அதிக கடிதங்கள் குவியும்!
    படம் அண்ணா சாலையின் குளோப் தியேட்டரில் ரீலிசானது!
    முன் பதிவே கூட பல நாட்களுக்கு ஆனது!
    சிவாஜ் ரசிகர்களை குதிரைப் போலீஸார் விரட்டினார்கள்1
    ஆனால் இத்தனை பெரிய ஆரம்பம் இருந்தும் படம் எதிர்ப்பாத்த வெற்றியை தரவில்லை!
    மன்னராட்சியையும் நிகழ்கால படித்த இளைஞனையும் பின்னி கதை இருந்ததால், படம் எடுபடாமல் போனதா என்பது தெரியவில்லை!
    இந்த படத்தில் வந்த ` பட்டத்து ராணி’ பாடல் வந்த போதும் ஊரெங்கும் பின்னனிப் பாடகி எல்.ஆர். ஈஸ்வரி பற்றியே பேச்சு!
    இதே படத்தை ஸ்ரீதர் இந்தியிலும் தயாரித்தார் படத்தின் பெயர் தர்த்தி!
    தமிழ் படத்தில் முத்துராமன் நடித்த வேடத்தில் இந்தியில் சிவாஜி நடித்தார்!
    அப்போது இந்தியில் பட்டத்து ராணி பாடலை பாட இந்திப் பாடகி ஆஷா போன்ஸ்லே தடுமாறிப்போனார்1
    அவரால் ஈஸ்வரியைப் போல பாட முடியவில்லை!
    அதே போல் இந்த படத்தின் போது தனக்கு ஏற்பட்ட ஒரு அபாயகரமான அனுபவத்தை பற்றி எங்கள் ஆனந்த விகடன் எம்.டியும், அப்போது ஜெமினி கலர் லேப் அதிபருமான திரு எஸ். பாலசுப்ரமணியன். `சிவந்த மண் படத்தை எங்கள் லேபில் தான் ப்ராஸஸ செய்தோம். தொழிலாளர்களின் கவனக்குறைவினால் பிலிம்கள் பாழாகிவிட்டது என்று ஒரு நாள் இரவு எனக்குச் சொன்னார்கள். அதிர்ச்சி அடைந்தேன்! மற்ற படங்களாக இருந்தால் இங்கே படப்பிடிப்பு மீண்டும் எடுத்துக் கொள்ளலாம் ஆனால் இதுவோ வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படம்! மறுபடியும் படக்குழுவினரையெல்லாம் அழைத்துக்கொண்டு எப்படி போக முடியும்’ பிறகு என்ன நடந்தது ?
    (தொடரும்)

  9. Likes Subramaniam Ramajayam, KCSHEKAR liked this post
  10. #1665
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //ஆனால் இத்தனை பெரிய ஆரம்பம் இருந்தும் படம் எதிர்ப்பாத்த வெற்றியை தரவில்லை!
    மன்னராட்சியையும் நிகழ்கால படித்த இளைஞனையும் பின்னி கதை இருந்ததால், படம் எடுபடாமல் போனதா என்பது தெரியவில்லை!//

    மறுபடி மறுபடி தவறு. இதற்கு ஒரு முடிவே இல்லையா?

    சிவந்த மண் தோல்விப்படமா?

    சிவந்த மண் தோல்விப்படமா?

    சிவந்த மண் தோல்விப்படமா?

    சிவந்த மண் தோல்விப்படமா?

    சிவந்த மண் தோல்விப்படமா?

    சிவந்த மண் தோல்விப்படமா?

    சிவந்த மண் தோல்விப்படமா?
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  12. #1666
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சாரதா மேடம்.

    'சிவந்த மண்' நினைவுகள்.......

    காவியப்படமான 'சிவந்த மண்' பற்றி நான் எற்கெனவே எழுதிய பதிவின் மீள்பதிவு இது. பலர் படித்திருக்கக்கூடும். சிலர் படிக்காதிருக்கலாம் என்ற ஆதங்கத்தில் மீள்பதிவு செய்திருக்கிறேன். ஏற்கெனவே பதித்ததன் 'லிங்க்' பக்கம் தெரியாததால், முழுப்பதிவையும் (சிவந்த மண் வெளியீட்டு நாளை முன்னிட்டு) இங்கு தந்துள்ளேன்.

    வெளிநாட்டில் படப்பிடிப்பு மேற்கொண்ட நாள் முதலே, மக்கள் மத்தியில், குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் 'சிவந்த மண்' பற்றிய எதிர்பார்ப்பு வளர்ந்து வந்தது. போதாக் குறைக்கு, ஆனந்த விகடன் பத்திரிகையில் நடிகர்திலகம், தான் பங்கேற்ற வெளிநாட்டு படப்பிடிப்பு பற்றி 'அந்நிய மண்ணில் சிவந்த மண்' என்ற தலைப்பில் எழுதிவந்த தொடர் கட்டுரையும் ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்தது. தன்னுடைய ஒரு சாதாரண படத்தையே அனுபவித்துப் படமாக்கும் இயல்பு கொண்ட இயக்குனரும் தயாரிப்பாளருமான ஸ்ரீதர், சிவந்தமண்ணை அணு, அணுவாக செதுக்கிக் கொண்டிருந்தார்.

    ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணனின் கைவண்னத்தில் "சிவந்த மண்" படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி அமைந்திருக்கும். அதற்கு அருமையான ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணனின் கைவண்னத்தில் camera angles செட் செய்த இயக்குனர் sreedhar க்கு பாராட்டுக்கள். சிவந்த மண் என்றதும் பெரும்பாலோர் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகளையே சொல்வார்கள்

    சொல்லப்போனால் வெளிநாட்டுக்காட்சிகளை விட உள்நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளே நம்மை பிரமிக்க வைக்கும். லைட் எஃபெக்டுகள் எல்லாம் அற்புதமாக அமைந்திருக்கும்.

    உதாரணத்துக்கு சில:

    1) நாகேஷ் - சச்சு நடத்தும் மதுபானக்கடையின் (பார்) அரங்க அமைப்பும், லைட்டிங்கும் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக அமைந்திருக்கும்.

    2) கிளிமாக்ஸ் காட்சியில் ராணுவ ஜீப்கள் அனிவகுத்து வேகமாகப் பறந்து செல்லும் காட்சியமைப்பில் ஒளிப்பதிவு சூப்பர்.

    3) எலிகாப்டர் காட்சியிலும், ஒளிப்பதிவாளரின் பங்கு அருமை. இயக்குனரும் கூட. குறிப்பாக, புரட்சிக்காரர்கள் ஓடி வந்து திடீரென்று தரையில் படுத்துக்கொள்ள அவர்களை ஒட்டியே குண்டுகள் வந்து விழும்போது, நம் ரத்தம் உறைந்து போகும். அதுபோல சிவாஜி ஓடிவந்து பள்ளத்தில் குதிக்க, அவர் தலையை உரசுவது செல்லும் எலிகாப்டர். இவற்றில் டைமிங் அருமையாக கையாளப்பட்டிருக்கும்.

    4) கப்பலில் வெடிகுண்டு வைக்க புரட்சிக்காரர்கள் செல்லும்போது, கையாளப்பட்டிருக்கும் நைட் எஃபெக்ட் லைட்டிங்கும், கயிறு வழியாக சிவாஜி ஏறுவதை, கப்பலின் மேலிருந்து காட்டும் சூப்பர் ஆங்கிளும். அதே நேரம், கப்பலின் உள்ளே நடக்கும் ராதிகாவின் நடனமும், அதற்கு மெல்லிசை மாமன்னரின் இசை வெள்ளமும்.

    5) ரயில் பாலத்துக்கு வெடிகுண்டு வைக்க சிவாஜி போவதை, கீழேயிருந்து படம் பிடித்திருக்கும் அற்புதக்கோணம், அப்போது சிவாஜியின் கால் சற்று சறுக்கும்போது நம் இதயமே சிலிர்க்கும்.

    6) ஒளிந்து வாழும் சிவாஜி, தன் அம்மாவைப்பார்க்க இரவில் வரும்போது, மாளிகையைச்சுற்றி அமைக்கப்பட்டிகும் நைட் எஃபெக்ட் லைட்டிங்.

    7) நம்பியாரால் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்ட சிவாஜி, ஜெயில் அதிகாரியை பிணையாக வைத்துக்கொண்டு, அத்தனை துப்பாக்கிகளையும் தன் வசப்படுத்தியதோடு, தன் கைவிலங்கை துப்பாக்கி குண்டால் உடைத்துக்கொண்டு தப்பிக்கும் காட்சி.

    8) வாகினி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட, சுழன்று சுழன்று தண்ணீர் ஓடும் ஆறு. அதை இரவு வேளையில் காண்பிக்கும் அழகு.

    9) அரண்மனை முன்னால் போராட்டம் நடத்த வந்த கூட்டத்தினரை, துப்பாக்கி ஏந்திய குதிரை வீரர்கள் விரட்டியடிக்க மக்கள் சிதறி ஓடும் காட்சி.

    10) எகிப்திய நாட்டிய நாடகம நடத்தும் முன், தாங்கள் பதுங்கியிருக்கும் இடத்தில், அந்த நாட்டியத்துக்கான மேடை அமைப்பை ஒத்திகை பார்ப்பார் பாருங்க... என்ன ஒரு யதார்த்தம். (நம்ம வி.ஐ.பி.ங்க, டி.வி.ஷோவுல இதெல்லாம் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் 'வானம் பொழிகிறது... பூமி விளைகிறது...')

    11) ஜூரிச் விமான நிலையத்தில், காஞ்சனாதான் இளவரசி என்று தெரிந்துகொள்ளும்போது காட்டும் அதிர்ச்சி.

    12) விமான விபத்தில் தப்பிப்பிழைத்து, தன் வீட்டுக்குக்கூட நேராகப்போகாமல் நண்பனைச்சந்திக்கும்போது அடையும் ஆனந்தத்தின் உணர்ச்சி வெளிப்பாடு. (இப்படம் முத்துராமனின் கிரீடத்தில் ஒரு வைரம்).

    13) செத்துப்போய்விட்டதாக நினைத்து மகனுக்கு பூஜை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென தாய் தந்தை முன் தோன்றி, அவர்களை அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தருணம். அந்த இடத்தில் நடிகர்திலகம் நடிக்கிறார் என்று யாராவது சொல்ல முடியுமா?. நிஜமாகவே உயிர் தப்பிவந்த ஒருவரைப்போல எத்தனை உணர்வுகள் கலந்த வெளிப்பாடு. அதற்கு முற்றிலும் ஈடு கொடுத்து சாந்தகுமாரி, மற்றும் ரங்காராவிடம் இருந்து வெளிப்படும் அபார நடிப்புத்திறன்.

    14) போராட்டத்தில் பலியான நண்பனையும், அந்த அதிர்ச்சியில் இறந்த அவன் தாயையும் மயானத்தில் எரித்து விட்டு, ரத்தக்கறையுடன் ஆக்ரோஷமாக தன் மாளிகையில் நுழைந்து, தன் தாயுடனும் அந்நேரம் அங்கு வரும் சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியான தந்தையுடனும் பேசும்போது காட்டும் ஆக்ரோஷம், இறுதியில் அடிக்கும் அந்த அட்டகாசமான சல்யூட் (இந்தக்காட்சிக்கு பெரிய பெருமை.... மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள்கூட பலமாகக் கைதட்டிவிட்டு சொன்ன வார்த்தை 'இதுக்கெல்லாம் கணேசன்தான்யா'). வீராவேசத்திடன் செல்லும் மகனைப்பார்த்து, புன்னகைத்துக்கொண்டே ரங்காராவ் சொல்லும் பதில் "உன் மகன் முட்டாள் இல்லை, புத்திசாலி".

    இக்காட்சிக்குத்தேவையான அவரது பாடி லாங்குவேஜ். குறிப்பாக கீழ்க்கண்ட வசனங்களின்போது....

    "....... அதற்கு உங்கள் ஆட்சி கொடுத்த பரிசு உயிர்ப்பலி, ரத்தம்" இந்த இடத்தில் அவரது கையசைவு.

    "......... திவானைக் கைது செய்து மக்கள் முன் நிறுத்த வேண்டும். அல்லது அந்தப்பதவியையும் அதற்கான உடைகளையும் தூக்கி எறிந்துவிட்டு" (இந்த இடத்தில் அவர் கையசைவு) "திவானுக்கு எதிராக புரட்சிக்குரல் எழுப்ப வேண்டும்".

    "பாராட்டு... வெறும் வார்த்தையில் இருந்தால் போதாது. செயலிலே காட்ட வேண்டும்" (இந்த இடத்தில் அவரது அந்த நாட்டிய முத்திரை).

    "ஒரு தேச விரோதிக்கு உங்கள் சட்டம் பாதுகாப்பு தருகிறதென்றால், அந்தச்சட்டத்தை உடைத்தெறியவும் தயங்க மாட்டோம்" (இந்த இடத்தில் கையை உயர்த்தி இரண்டு சொடக்குப்போடுவார்)

    "இல்லையம்மா... நான் இந்த சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்" (இந்தக் கட்டத்தில் அவர் கண்களில் தெரியும் தீர்க்கம்)

    இறுதியாக தியேட்டரையே அதிர வைக்கும் அந்த சல்யூட்.

    இன்றைக்கு நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இருக்கும் உணர்ச்சிமயமான சூழ்நிலையில், சிவந்த மண் திரையங்குகளில் திரையிடப்பட்டால், ரசிகர்களின் அலப்பறையில் மேற்சொன்ன காட்சியில் ஒரு வசனம் கூட கேட்க முடியாது என்பது திண்ணம். (அதற்கென்று தனியாக இன்னொரு நாள் பார்க்க வேண்டியிருக்கும்). அந்த அளவுக்கு இந்தக்காட்சியில் வார்த்தைக்கு வார்த்தை கைதட்டலும் விசிலும் பறக்கும்.

    15) எலிகாப்டரை சுட்டு வீழ்த்திவிட்டு, அந்த மலையுச்சியில் நின்று நண்பர்களுக்கு எழுச்சிமிக்க 'அன்று சிந்திய ரத்தம்' பேருரை ஆற்றும்போது, முகத்தில் தோன்றும் ரௌத்ரம். (இதெல்லாம் வேறு யாராவது செய்யமுடியும் என்று நினைக்கிறீர்களா?).

    16) தான் வீட்டுக்கு வந்திருப்பது திவான் நம்பியாருக்குத் தெரிந்துபோய், தன்னைக்கைது செய்யும் இக்கட்டான நிலையில் தந்தையைத் தள்ள, கணவரின் பெருமைகாக்க தன் தாயைக்கொண்டே தன்னைக்கைது செய்ய வைக்கும்போது காட்டும் கண்டிப்பு கலந்த பெருமிதம்.

    17) ரயிலுக்கு குண்டுவைக்கும் முயற்சியை தன் மனைவியே செயலிக்கச் செய்துவிட்டாள் என்று தெரியும்போது முகத்தில் எழும் ஆதங்கம், அதை தன் சக புரட்சிக்காரர்களுக்குச் சொல்லும்போது முகத்தில் தோன்றும் ஏமாற்றம் கலந்த இயலாமை. (சில வினாடிகளுக்குள் எத்தனை உணர்ச்சிகள்தான் அந்த முகத்தில் தோன்றி மறையும்..!!!!).

    'பாரத்'துக்கும் வசந்தி (என்கிற சித்திரலேகா) வுக்கும். எதிர்பாராவண்னம் திருமணம் நடந்துவிடும் அந்தச்சூழல் மிகவும் சுவையானது. ராணுவத்தின் துரத்தலுக்குத் தப்பி, ஒரு திருமண வீட்டில் தஞ்சம் புக, தேசப்பற்று மிக்க அம்மக்களால் நடிகர்திலகமும் காஞ்சனாவுமே திருமண தம்பதிகளாய் மாற்றப்பட,
    மந்திரம் தெரியாமல் தடுமாறும் ஐயர் நாகேஷ்,
    கண்ணடித்தவாறே டிரம்ப்பட் வாசிக்கும் (இயக்குனர்) விஜயன்,
    ஸ்டைலாக தலையாட்டிக்கொண்டே பேண்ட் டிரம் வாசிக்கும் மாலி,
    என அந்த சூழலே களை கட்டுகிறது.

    ('ஜெனரல் பிரதாப்' ஆக வருபவர், எம்.எஸ்.வி.யின் உதவியாளர் ஹென்றி டேனியலா...?)

    இன்றைக்கு ஐந்து இயக்குனர்களை ஒரு படத்தில் நடிக்க வைத்திருப்பதாக பெருமைப்படும் முன், அன்றைக்கே மூன்று இயக்குனர்களை (ஜாவர் சீதாராமன், விஜயன், தாதாமிராஸி) தனது சிவந்த மண்ணில் நடிக்க வைத்த பெருமை ஸ்ரீதருக்கே. (இயக்குனர்கள் எல்லாம் படங்களில் தலைகாட்டாத காலம் அது).

    எடுத்தவரை யில் அவ்வப்போது போட்டுப் பார்க்கும்போதெல்லாம் படம் அவருக்கு திருப்தி யளிக்கவே, படம் தயாராகும்போதே ஒரு முடிவு செய்தார். தன்னுடைய படத்தை தமிழ்நாடு முழுதும், அந்தந்த ஊர்களில் சிறந்த தியேட்டர்களில் திரையிட வேண்டும் என்பது அவரது ஆவலாக இருந்தது. இது விஷயமாக அவ்வப்போது விநியோகஸ்தர்களிடம் கலந்து பேச, அவர்களும் அந்தந்த ஏரியாக்களில் நல்ல தியேட்டர்களாக புக் செய்து வைக்க, படம் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஏற்கெனவே புக் பண்ணி வைத்திருந்த தியேட்டர்கள் கைமாறிப் போய்க்கொண்டிருந்தன.

    1969 மே மாதத்திலேயே வெளியிடுவதாக ஏற்பாடு செய்திருந்த படம், நினைத்த வேகத்தில் முடியாததால், பின்னர் ஆகஸ்ட் 15 சுதந்திர தின வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படியும் முடியவில்லை. முரளி அவர்கள் சொன்னது போல, வாகினி ஸ்டுடியோவில் போடப்பட்டிருந்த ஆற்று வெள்ளம் செட் உடைந்து, வடபழனி கடைகளுக்கெல்லாம் தண்ணீர் புகுந்த சம்பவமும் ஒரு காரணம். (முதலில் ஏன் மே மாதத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு காரணம் அன்றைய ரசிகர்களுக்கு தெரியும். 'அவரது' சொந்தப்படத்தை தன் படத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்பது ஸ்ரீதரின் எண்ணம். 'அன்று சிந்திய ரத்தம்' என்ற படத்தலைப்பைச்சொன்னால் போதும். அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும். புரியாதவர்கள் விட்டுவிடுங்கள்). இறுதியாக 1969 தீபாவளி வெளியீடு என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அதற்கேறாற்போல தியேட்டர்கள் புக் செய்யப்பட்டன.

    சென்னை மவுண்ட் ரோடு ஏரியாவில் 'குளோப்' தியேட்டர் என்பது கடைசி நேரத்தில் முடிவானதுதான். இப்போது இருக்கும் அதிநவீன தியேட்டர்கள் எல்லாம் அப்போது கிடையாது. தேவி காம்ப்ளக்ஸ், சத்யம் காம்ப்ளெக்ஸ் எல்லாம் கூட அப்போது இல்லை. இருந்தவற்றில் சிறந்தவைகளாக (சித்ராலயாவின் கோட்டையான) காஸினோ, சாந்தி, ஆனந்த், சஃபையர் காம்ப்ளெக்ஸ் இவைகள்தான். இதில் சாந்தியில் தெய்வமகன், மிடலண்ட்டில் நிறைகுடம் ஓடிக்கொண்டிருந்தன. காஸினோவில் வேறு படம் புக் ஆகிவிட்டது. ஆகவே ஸ்ரீதர் குறி வைத்தது ஆனந்த் தியேட்டரைத்தான். கடைசி நேரத்தில் அது மிஸ்ஸாகிப்போக, வேறு வழியின்றி குளோப் அரங்கை புக் செய்தனர்.

    அதே சமயம், வட சென்னையில் அப்போதைக்கு மிகச்சிறந்த தியேட்டராக விளங்கிய 'அகஸ்தியா'வையும், மூன்றாவது ஏரியாவான புரசைவாக்கம் பகுதியில் அப்போதைக்கு சிறந்த தியேட்டராக இருந்த 'மேகலா'வையும் சைதாப்பேட்டையில் 'நூர்ஜகான்' தியேட்டரையும் புக் செய்தனர்.

    குறிப்பாக மேகலா தியேட்டரில் படம் வெளியாகப்போகிறது என்றதும் ரசிகர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி. காரணம், அந்த ஏரியாவில் 'புவனேஸ்வரி' நடிகர்திலகத்தின் கோட்டையாகத்திகழ்ந்ததுபோல, மேகலா, திரு எம்.ஜி.ஆரின் கோட்டையாகத்திகழ்ந்தது. ஏற்கெனவே நான் குறிப்பிட்டதுபோல, அந்த தியேட்டரில் 100 நாட்களைக்கடந்த படங்களின் பட்டியலை ஒரு ப்ளாஸ்டிக் போர்டில் அழகுறப் பதித்து வைத்திருந்தனர். அதில் சிவந்தமண் வெளியாவதற்கு முன் வரை (1964 - 1969) எட்டு படங்கள் 100 நாட்களைக்கடந்து ஓடியதில், 'எதிர்நீச்சல்' படம் தவிர மற்ற ஏழு படங்கள் (வேட்டைக்காரன், பணக்கார குடும்பம், எங்கவீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, காவல்காரன், அடிமைப்பெண்) என எம்.ஜி.ஆர். படங்கள்தான். நடிகர்திலகத்தின் நல்ல படங்களெல்லாம் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி காம்பினேஷனில் வரும்போது, புவனேஸ்வரிக்குப் போய்விட்டதால் (அல்லது அதைவிட்டால் ராக்ஸி) 'சிவந்த மண்' மூலம் எப்படியும் எதிரியின் கோட்டையில் கொடியேற்றி அந்த போர்டில் இடம் பெற்றுவிட வேண்டும் என்பது ரசிகர்களின் தணியாத தாகமாக இருந்தது.

    அதிலும் நடிகர்திலகத்தின் கோட்டையான புவனேஸ்வரியில் 'குடியிருந்த கோயில்' 100 நாட்கள் ஓடியதிலிருந்து, அண்ணனுக்கு ஒரு படமாவது மேகலாவில் 100 நாட்களைக் கடந்து ஓடியாக வேண்டும் என்ற ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்து, சென்னையில் 100 நாட்களைக்கடந்த நான்கு அரங்குகளில் ஒன்றாக மேகலாவில் 'சிவந்த மண்' 100 நாட்களைக்கடந்து ஓடி, வெற்றிகரமாக அந்த போர்டில் இடம்பெற்றது. மேகலாவில் அந்த போர்டையும், ஷீல்டு காலரியில் 'சிவந்த மண்' 100வது நாள் ஷீல்டையும் பார்க்கும்போது நமக்கு ஒரு பெருமிதம் தோன்றும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. #1667
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #1668
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  15. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, Russellmai liked this post
  16. #1669
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  17. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, Russellmai liked this post
  18. #1670
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இது தோல்விப்படமா?

    நடிகர் திலகமே தெய்வம்

  19. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, JamesFague, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •