Page 377 of 400 FirstFirst ... 277327367375376377378379387 ... LastLast
Results 3,761 to 3,770 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #3761
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இந்தப் பகிர்வை எழுதுவதற்கே மிகுந்த மன உறுதி வேண்டும்...பார்ப்பதற்குக் கலங்காத நெஞ்சுரம் வேண்டும்.....மணியான காட்சி....மிகையில்லாத நடிப்பு...அதை நடிப்பென்று கூட சொல்ல முடியாது....அத்தனை இயல்பு...ஒன் மேன் ஷோ என்பார்களே.....மூன்று பேர் காட்சியில் இருந்தும் இந்த ஒரு மனிதனின் ஆளுமை....அய்யா...இவர் மட்டுமே நடிக்கப் பிறந்தவரய்யா .......நடையழகில் எத்தனை வகை, குரல் உயர்த்தி,தாழ்த்தி,கண்ணாலே பேசி,கெஞ்சி,கொஞ்சி......இனிமேல் பிறந்து வரணும்...அதுவரை நான் சாகாதிருக்கணும்...ஒரு அல்ப ஆசை....காட்சியின் துவக்கத்தில் குமாரி பத்மினி ,பகவதி அண்ணாச்சி ...பணக்காரக் குடும்பம்...கணவனுக்காக வாசலில் காத்திருக்கும் மனைவி,,,,மகளிடம் மருமகனின் தொழில் பக்தி பற்றி பிரஸ்தாபிக்கும் தந்தை...கல்யாணத் தரகர் உள்ளே நுழைகிறார்....அவரிடம் பகவதி (நாடகப் பிரியர்)ராஜப்பார்ட் ரங்கதுரையைப் பற்றி நலம் விசாரிக்க...உண்மை தெரியாத தரகர் ராஜபார்ட் ரங்கதுரை நாடகம் இல்லாமல் வறுமையில் உழல்வதையும்,கஷ்டப்பட்டு படிக்க வைத்த ரங்கதுரையின் தம்பி பாஸ்கர் கூட அவருக்கு உதவ முன் வரவில்லை என்று(பாஸ்கர் அவர் மருமகன் என்பதை உணராமல் )சொல்லி விடுகிறார்.வந்த காரியம் முடிந்தது என்று மானஸ்தனாக அவர் நகர,பாஸ்காராகிய ஸ்ரீகாந்த் உள்ளே நுழைகிறார்.கோபத்தில் பகவதியும் குமாரி பத்மினியும் ரங்கதுரையைப் பற்றியும்,அவர் இவருடைய அண்ணனா என்று கோபத்துடன் விசாரிக்க,ஆடம்பர வாழ்விற்குப் பழகிப் போன ஸ்ரீகாந்த் யாரோ தவறான தகவல் தந்திருப்பதையும்,தான் ரங்கதுரையின் தம்பியல்ல,கப்பல் முதலாளி கண்ணபிரான் அவர்களின் தம்பி என்றும் நிரூபிக்கும் வரை வீடு திரும்பப் போவதில்லை என்று சூளுரைத்து அண்ணனைக் காணச் செல்கிறான்......'ராஜாமணி அம்மா தர்மச் சத்திரத்தில்,தரையில் படுத்துறங்கும் ரங்கதுரை....தட்டி எழுப்பும் ஸ்ரீகாந்த்....'வாப்பா"ஆதுரத்துடன் அழைப்பவரிடம்,"அண்ணே உங்க கிட்ட பேசணும் கொஞ்சம் வெளியே வாங்க "அழைக்க உடன் செல்கிறார்.அவரிடம் தன மாமனார் மனைவிக்கு,தான் ஏழை ரங்கதுரையின் தம்பி என்று தெரியாது என்றும்,தன மரியாதையைக் காப்பாற்ற ஒரு பெரிய தனவந்தனாக நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறான்.வெள்ளந்தியான ரங்கதுரை"அவுங்கதான் என்னைப் பார்த்திருக்கிறார்களே?என்று வினவ.....நாடகத்தில் பல வேடங்கள் போட்டிருக்கும் அவர் பெரிய கனவானாக நடிப்பது பெரிய விஷயமில்லை என்றும் சொல்கிறான்.அதிர்ந்து போன நடிகர் திலகத்தின் கண்களையும் உடல் மொழியையும் இனிமேல் பார்க்கணும் ஒவ்வொரு நொடியும் ஒரு பாடம்...நடிகன் என்று பேர் சொல்லிக் கொண்டிருக்கும் அனைவரும் பலமுறை ரீவைண்ட் செய்து செய்து பார்க்கணும்.....பாடமாகவும் நடிப்புக் கல்லூரியில் வைக்கணும்..."நான் உங்கண்ணன் மாதிரி நடிக்கணுமாப் பா??நான் மேடையில் அர்ஜுனனாக நடிச்சிருக்கேன்,அரிச்சந்திரனாக நடிச்சிருக்கேன்...சொந்த தம்பிக்கே அண்ணனாக முதன் முதல்ல வேஷம் போடப் போறேம்பா?"தோள் துண்டும்,உடல் குறுகிக் கூனும் நெகிழ்வும்...ஆஹா....உன் அண்ணனில்லைஎன்று நானே வந்து சொல்லணு மாப்பா...கேட்கும் பொழுதே நெஞ்சு வெடித்து விடும் நமக்கு...சொன்னபடியே ஒரு பெரிய தலைப்பாகை,கம்பீரமான நடை,பகட்டான உடை,கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக் அதை சுழட்டும் லாவகம்...'ஏண்டா இதுதான் உன் மாமனார் வீடா...என்னமோ பேலஸ் மாதிரின்னு சொன்னே நம்ம செர்வெண்ட்ஸ் குவாட்டர்ஸ் மாதிரி இருக்கு......தோரணை....ஸ்டைல்....கம்பீரம் என்றால் இது!பகவதியைக் காட்டி யார் இவரு உன் மேனேஜரா?எடக்கு ...என்ன நினச்சுகிட்டு இருக்காரு உன்னை....திருவாங்கூர் திவான் தில்லை நாயகத்தின் பேரனா இல்ல தோட்டக்காரனா?கப்பல் முதலாளி கண்ணபிரானின் தம்பியா இல்லை இவுங்க வீட்டுத் தோட்டக்காரனா?ராயல் பேமிலி....அவர் நிறுத்தியதும் பகவதி மன்னிக்க வேண்டுகிறார்...அவரிடம்'அய்யா நெல்லைக் கொட்டினா மணிமணியாகப் பொறுக்கிடலாம்...நெய்யைக் கொட்டினால் முடியுமா?'பேசி முடித்து தலையில் இருக்கும் தலைப் பாகையையும்,மீசையையும் கலைக்க....கலந்குவோம் நாம்...தொடருவார் அவர்....ஆமாய்யா ரங்கதுரையே தான்....இந்த லட்சாதிபதி வேஷம் பொய்,,,எல்லாம் பொய்.....அய்யா நாங்க லட்சாதிபதிக்குப் பிறக்கலை...ஆனால் தேசத்தின் விடுதலைக்காக மேடையில் நடித்த ஒரு லட்சியவாதிக்குப் பிறந்தவர்கள்...என் தம்பி நல்லவனய்யா...பகட்டான வாழ்க்கைக்கு ஆசைப் பட்டதன் விளைவு.....தம்பி மனைவியிடம் அம்மா என் தம்பி நல்லவன் என்று சொல்லி வெளியேறும் முன்...பகலெல்லாம் பட்னி கிடக்கிற நான் இரவில் மேடையில் ராஜாவாக நடிக்கிறேன்.....பகலெல்லாம் நல்ல வாழ்க்கைக்காக என் தம்பி நாளும் நடிக்கிறான் ஒருத்தன் பொழைப்புக்காக நடிக்கி றான்...இன்னொருத்தன் பகட்டுக்காக நடிக்கிறான்.....சொல்லி நடக்கிறார்.பகவதியும் பத்மினியும் விக்கித்து நிற்க,ஸ்ரீகாந்த் வெட்கி நிற்க நாம் சொக்கி,திக்கு முக்காடிப் போகிறோம் சோகத்தில்.....என்றும் நீரே உமக்கு நிகரானவர் நடிகர் திலகமே....காட்சி உங்களுடன்...






    Rajapart Rangadurai - Sivaji acts as rich ship business man
    Rajapart Rangadurai - Tamil Movie Sivaji Ganesan plays the lead role in this film. Sivaji and his siblings toil hard at young age to eke out a living. V.K.Ra...
    youtube.com









    (முகநூல் விசாலி ஶ்ரீராம்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3762
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    டி.எம்.எஸ்....நடிகர்திலகம்...கவியரசர்....மெல்லிசைம ன்னர்.இந்தப் பாடலில் எது என்னைக் கவர்ந்தது?இசையா?டி.எம்.எஸ் அவர்களா?மெல்லிசைமன்னரா?இல்லை கவியரசரா என்றால் என்னால் சொல்ல இயலாது என்பதே உண்மை...அப்படி ஒருவரை ஒருவர் பின்னிப் பிணைத்துக் கொண்டு நெஞ்சத்தில் ரீங்காரம் செய்து கோலோச்சுகிறார்கள் என்பதே உண்மை...எனக்கு மிகவும் பிடித்த பாடல்...1962 இல் வந்த படித்தால் மட்டும் போதுமா படப் பாடல்.
    திருமணம் முடிந்து விடுகிறது.ஆனால் அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை...அவன் என்ன செய்வான் பாவம்....இத...ு வெளியில் சொல்லக் கூடிய விஷயமா?
    நான் கவிஞனும் இல்லை என்று ஒரு பாடல் இப்பொழுது உங்களுக்காக!!!
    ஒரு வீரமான வாலிபன் திருமணம் முடிந்து ஓராயிரம் கனவுகளோடு முதலிரவு அறைக்கு செல்கிறான்!அவ்ளோ அவன் படிக்கதவன் என்று வெறுத்து ஒதுக்குகிறாள்!அவனின் வாலிப விரகம் இந்தப் பாடல்!நடிகர் திலகம் அந்த ஆண்,அந்த ஆணுக்கு ஒரு ஆண்மைகென்றே அமைந்த குரலோன் டி.எம்.ஸ் குரலில்,மெல்லிசை மன்னரின் இசைப்பூங்கொத்து இது!
    நான் கவிஞனும் இல்லை,நல்ல ரசிகனும் இல்லை,காதலென்னும் ஆசை இல்லா பொம்மையும் இல்லை!!!
    அவன் விரகம்,கவியரசரின் கண்ணியமான வரிகளில்........
    இரவு நேரம் பிறறைப் போலே என்னையும் கொல்லும்,துணை இருந்தும் இல்லை என்று போனால் ஊரென்ன சொல்லும் என்று பாடி ஆஹாஹாஹா என்று வார்த்தைகளே இல்லாமல் ஊமைகீதத்தில் தன் வருத்ததை அழுதும் அழாமலும் புரியவைக்கிறான்!!!
    உடலை முறுக்கிக் கொண்டு உடம்பெல்லாம் வலிப்பதாகக் காட்டும் லாவகம்,மேலிருந்து ஒரு மாண்டலினை எடுத்து பிரடையை சரி செய்து சுருதி சேர்க்கும் நயம்....நடிகர் திலகத்துக்கு இதையெல்லாம் யாராவது சொல்லித்தர வேண்டுமா?வாழ்ந்திருப்பார்...'அன்பே ஆருயிரே,இன்பமே இனியவளே...பண்போடு அன்போடு படியேறி வந்தவளே!!!உன்மேல் பாட்டுப் பாட...நான் கவிஞனும் இல்லை என்று பாடும்போது நம் கண்ணை நிறைக்கும் கண்ணீர் துளிகள்....
    'காட்டு மானை வேட்டையாடத் தயங்கவில்லையே...இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ மயங்கவில்லையே...கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்கை புரியவில்லையே...நான் கொண்டு வந்த பெண் மனதில் பெண்மை இல்லையே.....நான் அழுதால் சிரிக்கிறால் சிரித்தாள் அழுகிறாள்....அம்மா தாயே.....இந்த வரிகளைப் பாடும்போது கெஞ்சும் அவன் முகம்...அதில் கப்பிக் கொண்டிருக்கும் சோகம்.....பெண்ணினமே பெண்ணை வெறுக்கும் காட்சி அது....ராஜசுலோசனாவைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது...அந்த ஆணவப் பார்வை.....அற்புதம்.
    எனக்குத் தெரிந்தவரையில் இந்த மாதிரி ஒரு விரகத்தை விரசமில்லாமல் விரிவாக இரண்டு வரிகளில் சொன்ன கவிஞன் வேறு யாரும் இல்லை என்பதால்,கவியரசர்,ஒப்பாரும்,மிக்காரும் இல்லாத கவிமாமன்னன்!!!!!!!பாடல் உங்களோடு.
    See more




    Naan Kavignanum Illai - Padithal Mattum Podhuma Tamil Song
    Naan Kavignanum Illai - Padithal Mattum Podhuma Tamil Song. Watch old Tamil song, Naan Kavignanum Illai from the super hit classic film, Padithal Mattum Podh...
    youtube.com

    (முகநூல் விசாலி ஶ்ரீராம்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3763
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    1979 ஆம் ஆண்டு வாக்கில் தமிழகத்தின் மக்கள் தொகை சுமார் 4.3 கோடியாகும், அந்த ஆண்டு வெளிவந்த நடிகர் திலகத்தின் 200 வது காவியமான "திரிசூலம்" படத்தினை கண்டு மகிழ்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3.15 கோடியாகும், இது ஏறக்குறைய 75% த்தை பெறுகிறது,
    ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையில் 75% அளவிற்கு ஒரு திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தார்கள் என்றால் உலகிலேயே நடிகர் திலகத்தின் படத்தை மட்டுமே




    (முகநூல் sekar .p)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #3764
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #3765
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #3766
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Veerapandiya Kattabomman- 16/05/1959- 58 th Year of Completion.

    என்னதான் நடிகர்திலகம் Strasberg/Stanislavsky method Acting செய்தாலும்,Meisner பாணியில் நடித்தாலும் ,நிறைய நல்ல படங்கள் கொடுத்து பெரும் பாராட்டுதல்களை பெற்றாலும் , என் கருத்தில் நடிகர்திலகம் நடித்த Chekhov பாணி படங்கள்,Oscar Wilde /Stella Adler /Shakespere school படங்களே அவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நம்மை ஓங்கி சொல்ல வைக்கிறது. ஏனென்றால் பிற இந்திய நடிகர்கள் method Acting பாணியில் நடித்து அவருடைய நடிப்பில் ஒரு 60% தொட முடிந்துள்ளது. ஆனால் அவருடைய மற்ற பாணி நடிப்பில் 5% கூட தொட யாருக்கும் தகுதியில்லை என்று தைரியமாக கூற முடியும். அவரால் மட்டுமே முடியும் என்று சொல்ல கூடியவை. ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.

    Larger than life என்பது சராசரி மனிதனை விட மேற் தரத்தில் உள்ள (பணம்,பதவி,நோக்கம்,புகழ்,தலைமை,போராட்ட குணம் ,இறை நிலை ) மக்களை பேசும் வலுவான நோக்கம் கொண்ட ,அதீத உணர்ச்சிகள்,போராட்ட நிலை உள்ளதாகவே அமையும். மேற்தர மனிதர்களின் பிரச்சினையும் அதற்குரிய பிரம்மாண்டம் கொண்டே அமைவது தவிர்க்க இயலாதது. இன்றைய காலத்தில் ஒரு NRI குழந்தை,ஒரு அரசாங்க மேற்பணியானர்,தலைவர்,அமைச்சர், புகழ் பெற்ற மருத்துவர் இவர்களை பார்த்தாலே இவர்களின் பொது நடத்தை விந்தையாகவே தெரியும். முற்காலங்களில் அரசர், பிரபுக்கள் ,மதகுருமார்கள் இவர்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறு பட்ட உடை, தலை அலங்காரம் (கொம்பா முளைச்சிருக்கு.இல்லை கிரீடம் )நடை,பேச்சு தோரணை, பெரிய பொறுப்பு அதற்குரிய பெரும் பிரச்சினைகள் என்று வேறு பட்டே வாழ்ந்தவர்களை ,நிறைய இக்கால மேதாவிகள் சொல்வது போல் soft contemporary முறையில் நடிப்பது அபத்தத்திலும் அபத்தம்.

    உதாரணத்திற்கு வீர பாண்டிய கட்டபொம்மன் படம் ஒரு Epic தன்மை கொண்ட folklore .மக்களுக்கு அதை பற்றி ஒரு பிரம்மாண்ட image இருக்கும். இங்கு சரித்திரம் புறம் தள்ள பட்டே ஆக வேண்டும். (சரித்திர கட்டமைப்பில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதே கேள்வி குறி. எல்லோரை பற்றியும் தேவையான சரித்திர குறிப்புகளும் இல்லை.)இந்த நிலையில் Costume Drama என்ற வகை பட்ட பிரம்மாண்ட படத்திற்கு ஒரு உன்னத நடிகரின் கற்பனை சார்ந்த , உயிரிலும் உணர்விலும் அந்த நடிகன் கனவு கண்ட ஒரு பாத்திரத்தை ,கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற எல்லோருடைய fantasy ஐயும் பூர்த்தி செய்வதாகத் தானே அமைய வேண்டும்? அப்படித்தான் அமைந்தது. அதை மொழிக்கு அவசியம் இன்றி உலகமே வியந்தது. எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது


    கட்டபொம்மன் ஒவ்வொரு தமிழனின் பூஜா பலன். உச்ச அதிர்ஷ்டம். மேற்கு மக்களுக்கு ஒரு ten commandments ,ஒரு lawrence of Arabia போல கீழை மக்களின் சுதந்திர போராட்ட சரிதம். நிகழ்வுகள் ஓரளவு சரித்திரத்தை ஒட்டியவை ஆனாலும் நம் மக்களின் ரசனையை ஒட்டி அழகு படுத்த பட்ட பிரம்மாண்ட சரித்திரம். கட்டபொம்மனின் சரித்திரம் ,அவன் சுதந்திர காற்றுக்காக ஏங்கி , சிறுமையும் மடமையும் கொண்ட அடிமை கூட்டத்தில் தனித்தியங்கி வீரம் காட்டிய முன்னோடி. இந்த ஒரு அம்சம் போதும் அவனை நடையில்,உடையில்,அந்தஸ்தில்,பேச்சில் மக்களின் எதிர்பார்ப்புகேற்ப தமிழ் புலவர்களின் சங்க கால கவிதை தொடர்ச்சியாக காட்சியமைப்பில், வசனத்தில்,உயரிய நடிப்பில், தமிழகத்துக்கே பிரம்மன் வடித்த தந்த உன்னத நடமாடும் சிற்பத்தால் உரிய உன்னதம் கொடுக்க பட்டு, சிற்றரசன் என்று கீழ் நிலை விமர்சகர்கள் இகழ்ந்தாலும் பெரிய நோக்கம் கொண்ட உயரிய மனிதன், மகாராஜாவாக ஆக்க பட்டான். நிலத்தின் அளவை பொருத்தல்ல ,மனத்தின் திண்மையின் அளவு.கொண்ட நோக்கத்தின் அளவு.

    கட்டபொம்மனின் 1791 முதல் 1799 வரை ஆன கால கட்டமே இந்த படத்தின் காலகட்டம்.ஆற்காடு நவாப் வாங்கிய கடனுக்கு கும்பனியிடம் தனக்குட்பட்ட பாளய சிற்றரசர்களிடம் இருந்து வரி வசூல் உரிமையை கொடுப்பதில் இருந்து கட்டபொம்மன் அதை மறுத்து எதிர் வினை புரிந்தது, வெள்ளையர்கள் மற்றோரை தன் வசப்படுத்தி அடிமையாக்கி கட்டபொம்மனை தனிமை படுத்தி ,அவனுடன் போர் செய்து ,தப்பியோடிய அவனை பிடித்து தூக்கிலிடுவது படத்தின் காலகட்டம். கட்டபொம்மனின் வயதுதான் நடிகர்திலகத்தின் அன்றைய வயது. ஏறக்குறைய முப்பது. கட்டபொம்மனின் நிறம்தான் நடிகர்திலகத்தின் நிறம். அப்பப்பா இந்த படத்தில் அவர் இயல்பான நிறம் காட்ட பட்டதில்,ஒப்பனையாளர் பாதி சாதனை புரிந்து விட்டார்.

    கட்டபொம்மனின் உயரம்? அவன் உயரம் அத்தனை சமகால பாளய சிற்றரசர்களின் உயரம்,ஆற்காடு நவாப் உயரம், அனைத்துக்கும் மேலல்லவா? அந்த உயரமும் கிடைத்து விட்டது ஒரு நடிக மேதை தன் நடிப்பால் மட்டுமே தன் உயரத்தை மேலும் ஓரடி கூட்டி கொண்ட அதிசயம் .அதை நாம் மட்டுமே வியக்கவில்லை ,உலகமும் நாசரும் (எகிப்து அதிபர்)கூடவியந்தனர். தானே தேடி வந்து நடிகர்திலகத்தை பார்த்த நாசர் ,இவரா(?) ,படத்தில் ஆறடிக்கு மேல் தெரிந்தாரே ,என்று மூக்கில் விரலை வைத்தார்.

    இப்போது சொல்லுங்கள் கட்டபொம்மன் அதிர்ஷ்டம் செய்தவரா இல்லை ஒவ்வொரு தமிழனுமா என்று?actors should never feel small என்று சொன்ன Stella Adler கூட இப்படி ஒரு ஏகலைவனை அடைய கொடுத்த வைத்தவர்தானே?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. Thanks adiram thanked for this post
    Likes Harrietlgy, adiram liked this post
  9. #3767
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Veerapandiya Kattabomman-16/05/1959

    எனக்கு நமது சாஸ்திரிய சங்கீத கீர்த்தனைகளில் விமர்சனம் உண்டு. அது அவ்ளோ பெரிய விஷயமா ,ராகத்தை ஒட்டி வார்த்தை நிரப்பல்தானே என்று? ஆனால் தஞ்சாவூர் சங்கரன் என்பவர் மும்மூர்த்திகளின் கீர்த்தனை சிலதை எடுத்து விளக்கினார். ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் எப்படி முக்கியத்துவம் பெற்று ராகங்களின் அழகை மிளிர வைக்கிறது என்று.

    அதை போல் தான் நடிகர்திலகத்தின் வசன உச்சரிப்புகளும். தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது? எனக்கு முதல் பரிச்சயம் கட்டபொம்மனுடன் ஒலிச்சித்திரம் (soundtrack ) மூலமே ஏற்பட்டது.பிறகு வசன புத்தகத்தை வாங்கி வசனங்களை மனனம் செய்தேன். அவரை போல் பேச முயன்றேன்.

    listen only to soundtrack and you will realise the timbre ,modulation ,tonal clarity ,subtle and quick flow of variation in octave levels that plucks every known &buried emotional suggestions from the dialogue with its rhythm and beauty(He lived in his voice) .அவருடைய ஆண்மையான குரலில் வசனத்தின் ஒவ்வொரூ எழுத்தும் சொல்லும் அவரின் பாவம், ஏற்ற இறக்கம், தெளிவு, கவிதையின் அழகு,முக பாவத்திற்கேற்ற கை கால் உடல் அசைவுகளுக்கேற்ப மெல்லிய துல்லிய குரல் மாற்றங்கள், நம்மில் அந்த பாத்திரத்தை அதன் உணர்வை மனகண்ணில் காட்டி விடும் வலிமை கொண்டது.

    நான் இந்த குரலுக்கு அடிமையாகி ஐந்து வருடங்கள் கழித்தே படத்தை வெள்ளித்திரையில் கண்டேன்.ஆனால் சமீபத்தில் எனக்கொரு சந்தேகம். நாம் முதலில் வசனம்,பிறகு படத்தோடு வசனம் மகிழ்ந்து அதில் திளைக்கிறோம். ஆனால் உலக அங்கீகாரம் பெற்ற இந்த படத்தில், அந்நிய நாட்டை,மொழியை சார்ந்தவர்களை ,இந்த வசனங்களின் முழு பொருளும் அருமையும் தெரியாமலே அடிமை ஆக்கி ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகராக அங்கீகரிக்க வைத்ததே? எப்படி?

    அந்த படத்தை ,முழுவதும், வசனத்தை mute பண்ணி பார்த்தேன்.(மனதில் வசனம் ஓடாமல் பிரயத்தனம் செய்து)

    எனக்கு முதல் அதிசயமே அந்த நடையும், கைகளை,விரல்களை அவர் பயன் படுத்தும் விதமும். நான் ஏற்கெனவே கூறிய படி நிறைய hollywood மற்றும் உலக நடிகர்கள் ,அந்த பாத்திர குணங்களை establish செய்ய ,விலங்குகளின் நடை, குணங்கள் இவற்றிலிருந்து inspiration எடுத்து, சமயங்களில் imitate கூட செய்வார்கள். வால்மீகி ராமாயணத்தில் ,வால்மீகியும் ராமனின் நாலு வித நடைகளை குறிப்பிடுவார். சிங்க நடை தலைமை குணத்தை குறிப்பது. புலி நடை சீற்றத்தையும் கோபத்தையும் குறிப்பது.யானை நடை பெருமிதத்தை குறிப்பது.எருது நடை அகந்தை,அலட்சியம் இவற்றை குறிப்பது.

    இந்த படத்தை நான் பார்த்த போது ,அதிசயித்த விஷயம் வால்மீகியை படிக்காமல் நடிகர்திலகம் இவற்றை உணர்ந்த விதம்.

    அவையிலும், நகர்வலம் செல்லும் போதும், மந்திரி மற்றும் நண்பர்களுடன் இருக்கும் நடை ஒரு சிம்மத்தின் தலைமை குணத்தை குறிக்கும் நடை.ஜாக்சன் தன்னை அவமதித்து கோபப் படுத்தும் போது ஒரு புலியின் சீற்றம் நடையில் தெரியும்.ஜக்கம்மாவிடம் போருக்கு விடை பெரும் போது ஒரு யானையின் பெருமிதம் தொனிக்கும்.கடைசியில் பானர்மன் தூக்கு தண்டனை விதித்ததும் தூக்கு மேடையை நோக்கி நடக்கும் கால்களில் ஒரு எருதின் அலட்சியம் தெறிக்கும்.

    ஒரு சராசரி நடிகனுக்கும், ஒரு மகா நடிகனுக்கும் உள்ள வேறுபாடு காலுக்கும், உடல் மொழிக்கும் ஏற்றவாறு கைகளை பயன் படுத்தும் முறை. ஜாக்சனுடன் ஆரம்ப பேச்சில் கைகளை சிறிது ஒடுக்கி கட்டுபடுத்துவார். எண்ணிக்கை தெரியாத குற்றம் என்னும் போது விரல்கள் எண்ணிக்கையோடு அசையும். போர் விடை பெரும் காட்சியில் வலது கை புறம் காட்டி இடது புற உரையில் கத்தியை சடாரென்று மணிக்கட்டை மட்டும் பயன் படுத்தி தள்ளும் தன்னம்பிக்கை நிறைந்த style .

    Mute பண்ணி பார்க்கும் போதும், ஜாக்சன் உடன் தன்னை கட்டு படுத்தும் ஆரம்ப restlessness நிறைந்த restraint , பிறகு தன் நிலையை உணர்த்தும் force ,வன்முறைக்கு படிப்படியாய் தள்ள படுவது வசனங்களின் உதவி மஞ்சளரைத்து கொடுக்கவே அவசியமில்லாமல் அந்நியர்களுக்கு புரிந்திருக்கும். தானாபதி பிள்ளை ஒப்பந்தத்தை மீறி கொள்ளையிட்ட குற்றத்தின் போது நடுநிலையை எண்ணி, சிறிதே குன்றி போய் பேசும் போதும், ஆனால் வரம்பு மீறும் போது மந்திரிக்கு சார்பாய் நிலை எடுத்து வருவது வரட்டும் என்று முடிக்கும் போதும் ..... வசனம் தேவையே படவில்லை. முகக்குறிப்புகள் போதுமானதே அன்னியருக்கு.
    போரில் தன்னை மீறி செல்லும் நிலைமையில் மகளுக்கு தைரியம் சொன்னாலும் நிலைமையை உணர்ந்து தளரும் நிலை, தானறியாமல் தன்னை மற்றோர் போர்களத்திலிருந்து அப்புறப் படுத்தி தப்பிக்க வைத்ததை எண்ணி மருகுவது இதற்கும் வசனம் தேவையே இல்லை.

    ஆனால் இறுதி காட்சி பற்றி எனக்கே சந்தேகம். அரைகுறை விமர்சகர்கள் குறிப்பிடுவது போல் இது வசனம் சார்ந்த காட்சியா என்று. ஆனால் சங்கிலியால் கட்ட பட்டு முன்னும் ,பின்னும், பக்கவாட்டிலும் நகர்ந்து ,முகக்குறிப்பை பார்க்கும் போது ,எதையும் சந்திக்க தயார் என்ற prime text எல்லோருக்கும் விளங்கி இருக்கும்.ஆனால், காட்டிகொடுத்த கோழைகளை எள்ளும் முறை,தன இனத்தை பற்றி குறிக்கும் பெருமிதம்,இப்போதும் பணிய விரும்பவில்லை என்ற குறிப்பு, என் நிலையே சரி என்ற conviction ,யாராவது வந்து தன் பணியை தொடர்வான் என்ற நம்பிக்கை, சாவின் விளிம்பை தொடும் அலட்சியம் என்று காட்சியின் subtext களும் வசனமின்றியே அந்நியர்களுக்கு புரிந்திருக்கும்.

    ஆனாலும் வசனம் புரியாமலே கூட ,அந்த காட்சியுடன் சிம்ம குரல் இயைந்து நடத்தும் வித்தையை சராசரி அந்நியனும் அதிசயித்து வியந்திருப்பான்.

    வீர பாண்டிய கட்டபொம்மன் காட்சியிலும், நடிப்பிலும் ,பிரம்மாண்டத்தை காட்டும் படம்.

    வசனங்கள் ஒரு கூடுதல் பலமே ,அது இல்லாமலே கூட இந்த படத்தின் வலு குறையவில்லை, என்று அரைகுறை விமர்சகர்கள் முகத்தில் படகாட்சிகளே தூ என்று கட்டபொம்மன் போலவே உமிழ்கிறது. இதை அவர் வேறு விதமாக நடித்திருக்கலாம் என்று சொல்லும் எட்டப்பர்களுக்கு அந்த பணியை நாமே செய்து விடலாம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. Thanks adiram thanked for this post
    Likes Harrietlgy, adiram liked this post
  11. #3768
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வீரபாண்டிய கட்டபொம்மன்

    வீரபாண்டிய கட்டபொம்மனில் இன்னொரு அம்சத்தை நீங்கள் கவனித்தே ஆக வேண்டும். நான் குறிப்பிட்ட ten commandments ,Benhur ,Lawrence of Arabia போன்று multi -agenda கொண்ட வலுவான கதையம்சம்,உணர்ச்சி குவியல்கள்,பல்வேறு வலுவான பாத்திரங்கள் கொண்டதல்ல கட்டபொம்மன். 1791-1799 வரையான வெள்ளையர்களுடன் கருத்து வேறுபாடு,மோதல்,சக சிற்றரசர்களின் துரோகம் ,ஒன்றிரண்டு confrontation ,சமமற்ற போர் ,பிடிபட்ட பிறகு தூக்கு என்று ஒரே பாத்திரத்தை மட்டுமே நம்பிய ஒற்றை agenda கொண்ட படம். நான்கே முக்கிய காட்சிகள். ஜாக்சன் துரை யுடன் வாக்குவாதம்,தானாபதி பிள்ளை சம்பத்த பட்ட காட்சி,தப்பி சென்ற கால காட்சிகள், இறுதி தூக்கு மேடை காட்சி இவ்வளவுதான் முக்கியம். மற்றதெல்லாம் நிரவல். Hyper Rhetoric என்று ஒற்றை அம்ச படம்.

    ஒரு Artist Portfolio Repertoire என்ற ஒரே விஷயத்துக்கு மட்டுமே இவ்வகை படங்கள் தகுதி கொண்டது.

    மேற்கூறிய அம்சத்தை கட்டபொம்மனில் நீங்கள் கவனிக்க கூட முடியாமல் ஒரு cult படமாக,தமிழின் பிரம்மாண்ட படமாக உங்களை இன்று வரை அசை போட வைத்தது இரண்டே அம்சங்கள். நடிகர்திலகம், மற்றும் தயாரிப்பில் பிரம்மாண்டம்.

    இப்படத்தின் வெற்றி ஏற்கெனவே தீர்மானிக்க பட்டது என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். நடிகர்திலகம் இந்த பாத்திரத்தில் நடிக்க படம் தயாரிக்க படுகிறது என்றதுமே ,எல்லாமே முன்முடிவு செய்ய பட்ட ஒன்றாகி விட்டது.

    என் மகனே கூட என்னிடம் இந்த படத்தை பார்த்து , நான் முதலில் கூறிய சந்தேகத்தை கேட்டான்.நான் படத்தின் காலகட்டத்தை சொல்லி, அவனிடம் சொன்னேன். ஒரு சாதாரண சின்ன வியாபார பிரச்சினைகளில் வார கணக்கில் mood out ஆகி, சம்பந்தமில்லாமல் எல்லோரையும் எரிந்து விழுந்து சத்தம் போட்டு ,குடும்பத்தையே gloomy சூழ்நிலைக்கு தள்ளிய நாட்கள் உண்டு. அவனிடன் அதை சொல்லி, பிரச்சினை மிக பெரிது. மான ,சுய கௌரவ,மண் சார்ந்த பிரச்சினை. மோதுவதோ வலுவான ,தன்னை மீறிய எதிரி. சூழ்ந்திருப்பவர்களோ எதிரியுடன் இணைந்து விட்டனர். வெற்றி வாய்ப்பு குறைவு என்றாலும் எதிர்த்து நின்றே ஆக வேண்டும். படத்தில் சித்தரிக்கும் காலகட்டமே எதிர்ப்பு,துரோகம்,அவமானம்,வாக்குவாதம்,போர் ,தோல்வி ,தூக்கு இவ்வளவுதான் என்னும்போது ,எங்கே relaxation ,ease முடியும், படத்தின் agenda hyper rhetoric என்றேன் .புரிந்து கொண்டு மிக மிக ரசித்தான்.

    அடுத்ததாக ஒரு நண்பர் அரசவை சம்பத்த பட்ட காட்சிகளின் cliched formalities பற்றி கேட்ட போது,நான் அவர் கம்பெனி board meeting எடுத்து விளக்கினேன். tie ,suit ,proper assembling ,protocol ,formalities , fixed agenda ,jargonised technical presentation ,explanations ,பிறகு entertainment இதுதானே? அரசவை என்பது இதை விட formal ஆன இடமாயிற்றே? hierarchy என்பது இன்னும் வலுவாக இருந்த முற் காலமாயிற்றே? எப்படி present பண்ண வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?அந்த meeting இல் கூட chairmen ,MD ,VP ,senior managers behaviour ,role play வேறு படவில்லையா? ஒரு லாப நோக்கம் கொண்ட வர்த்தக நிறுவனமே இப்படி என்றால், அரசனை சுற்றி வாழ்வா சாவா பிரச்சினையை சந்திக்கும் அரசவை அதற்குரிய ceremonial procedures ,protocol ,formalities , cliched expressions &Language இருக்காதா என்றேன். நண்பர் தலையாட்டி சிந்தித்தார். புரிந்து கொண்டார் என்று புரிந்து கொண்டேன்.

    நம் பிரச்சினை என்னவென்றால் ,அறியாத கேள்விகளுக்கும் ,முட்டாள் தனமான விமர்சனங்களுக்கும் நாம் ஒரு compromise பாணி சமாதானம் சொல்கிறோமே தவிர, நம் conviction சரியானது என்று அவர்களை convince செய்ய வேண்டும். முக்கியம் நமக்கு அந்த படம் சம்பத்த பட்ட முழு விவரமும் தெரிய வேண்டும் .

    முதல் பத்தியில் பார்த்தது போல வலுவில்லாத கதையம்சம், ஒற்றை நோக்கம் கொண்ட ஒரு glorified folk -lore ---------- உலக நடிகன் கனவு கண்ட பாத்திரமாகி , அவன் அபார திறமையால் ,உலக புகழ் பெற்ற விந்தை, அவர் அந்த பாத்திரத்தை மெருகேற்றி காட்டிய விதம் பற்றி வரும் பதிவுகளில் பார்ப்போம்.

    நடிப்பு மற்றும் complexity in character என்று பார்த்தால் ,மிக ஆராய்ந்தால் VPKB நிச்சயமாக அவருடைய Top 10 இல் வர முடியாது. ஆனால் நீங்கள் என்னிடமோ ,அல்லது யாரிடம் கேட்டாலும் இந்த படம் ஒரு பரவச அனுபவம், mesmerism முறையில் கட்டுண்டது போல ஒரு மயக்க ட்ரான்ஸ் நிலை. மற்ற படங்களை பற்றி வேறாக சொல்வோர் சிலர் இருக்க முடியும். ஆனால் VPKB பற்றி கேட்டால் ,அது எந்த தமிழனாக இருந்தாலும் சொல்லுவது ஒரே பதில். நான் சொன்ன மாதிரி single agenda நேர்கோட்டில், hyper ஒரு முகப்பட்ட உணர்ச்சி நிலை, ஒரே நோக்கம், ஒரே மையம் என்று போகும் இந்த படம் எப்படி இதனை சாதிக்க இயலும்?நான் பார்க்கும் போது என் முன்னோர்களுக்கு இருந்த folklore epic image கிடையாதே?அடுத்த தலைமுறையும் இந்த படத்தை சிலாகிக்கிறதே ,எப்படி சாத்தியமானது?எந்த மந்திரம் அதனை சாதித்தது?

    நடிகர்திலகம் Focusreach முறையில் நம் ஆத்மாவுக்குள் நுழைந்து சாதித்த அதிசயம்.

    தன் ஆத்மாவுக்குள் அந்த வீரனை நுழைத்து அவர் சாமியாடியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.Hysteric delirium which mesmerises the audience with psychedelic trip .

    இந்த படம் நடிகர்திலகத்தின் focusreach கொண்டே cult status அடைந்து ,எந்த கலைஞனை கேட்டாலும் இந்த பட காட்சியை நடித்ததே தன் முதல் audition என்று சொல்ல வைத்த அதிசயம்.இதை விரிவாக பார்ப்போம்.

    1)Focusreach முறையின் முக்கியம் அதீத energy level . சக்தியின் உக்கிர வெளிப்பாடு.உடலின் சோர்வு,பசி,துன்பத்தை கருதாது நோக்கத்தை நோக்கி செல்லும் அதீத வெளியீடு.இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், இதுதான் உச்ச சக்தி என்று நாம் கருதும் போது அடுத்தது அதனை மிஞ்சி உச்ச காட்சியில் இமயத்துக்கு மேலும் செல்லும்.

    2)அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் விட மேல் தளத்தில் விரிந்து நாயகனை superhero ஆக உணர்த்தும் விந்தை. இதை செயல்களின் துணையின்றி உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தியிலேயே சாதித்து ,நமக்கு மேலே அவர் என்று உணர வைத்த விந்தை. நாசரே இவர் உயரம் பல அடிகள் மேலே என்று நினைக்க வைத்த சாதனை.அனைத்து தரப்பினரையும்,வயதினரையும் ,தன் கீழ் பட்டவர்களாக படம் பார்க்கும் போது உணர வைத்த சாதனை.

    3)focus focus focus reach a peak ,move to other peaks என்ற முறையில் நடிப்பின் உணர்ச்சி வரைபடத்தில்(Emotional intensity mapping) சிகரம் தொட்டு தொட்டு மேற்செல்லும் முறை.

    4)மெய் வருத்தம் பாராத,தன்னை வருத்திய ஒரு முக சிந்தனை வெளிப்பாடு.
    (ரத்தமெல்லாம் கக்கி துடைத்து கொண்டு தொடர்வாராம்)

    5)வித விதமான வேறு பட்ட முயற்சி,சிந்தனை அதன் வழி செயல் பாடுகள்.

    6)சரி- தவறு என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு ,தான் செய்வதே மிக சரி என்று அனைவரையும் உணர வைக்கும் சக்தி. எடுத்த நோக்கமும் உன்னதமானதாக இருந்ததால் double impact .

    7) Adrenalin Rushes with High Stress levels . இந்த படம் எடுத்து கொண்ட காலகட்டமே stress level கட்டபொம்மனுக்கும் மேலாக இருந்தது. சிவாஜியின் Type A personality கொண்ட வெளியீட்டு முறை ,பார்க்கும் நமக்கும் வாளெடுத்து போர் புரிய வைக்கும் அளவு நரம்புகளை முறுக்கேற்றும்.வசனங்களும் அற்புதமாக இதற்கு இசையும்.

    8)அவர் மட்டுமே அந்த கணத்தில் முக்கியமானவர் என்று அந்த இருட்டின் கணங்களில் கட்டி வைக்கும் ஈர்ப்பு.

    எனக்கு தெரிந்த அளவில் இந்த focusreach அதிசயம் ,இந்த படத்தில் நடிப்பினால் அமைந்த அதிசயம் எந்த இந்திய படத்துக்கும் அதற்கு முன்போ பின்போ நடந்ததே இல்லை.

    வீரபாண்டிய கட்டபொம்மனில் என்னை மிக மிக கவர்ந்தது அவர் வீரத்தை மட்டுமே காட்டாமல் எதிரி தன்னை மீறியவன் என்றுணர்ந்து விவேகம் காட்டுவார். மானத்தை துறக்காமல் சமாதான வாசல்களை திறந்தே வைப்பார். ஜாக்சன் துரை தன்னை அவமதித்து அலைக்கழித்த போதும் ,பொங்கி வரும் கோபம் அடக்கி முடிந்த அளவு பொறுமை காப்பார் .நட்பு நாடி வந்ததை குறிப்பார். பிறகு தானாபதி பிள்ளை தப்பி வந்து இன்னொரு சமாதான முயற்சி குறித்து பேச,பொங்கியெழும் ஆலோசனை குழுவை அணைத்து பேசி, சமாதானத்தை யோசிப்பதில் தவறில்லை என்று மெல்லிய தொனியில் வலிக்காமல் சொல்லுவார். தானாபதி பிள்ளை நெற்களஞ்சியத்தை கொள்ளையிட்டு பாண்டி தேவரையும் கொலை செய்து விட்டது சமாதான கதவுகளை நிரந்தரமாக மூடி விட்டதறிந்து கொதிப்பார். பிறகு வேறு வழியின்றி வருவது வரட்டும் என்று தன் மந்திரியை காத்து ,போருக்கு மனதளவில் தயாராவார். இதில் அவர் மேலுக்கு இலகுவாக இருப்பதாய் வரும் சில காட்சிகளில் கூட சிங்கார கண்ணே, மனைவி, வெள்ளையத்தேவன் கல்யாணம்,குழந்தையுடன் பேசுவது எல்லா சந்தர்ப்பங்களிலும் ,ஒரு கவலை கலந்த சிந்தனை ரேகை (stress )அவர் முக குறிப்பில் தோன்றிய படியே இருக்கும்.போருக்கு தயாராகும் காட்சியில் கூட ஒரு வீரனாக தயாரானால் கூட எதிரி தன்னை மீறிய சக்தி படைத்தவன் , வாய்ப்பு குறைவுதான் என்ற அவநம்பிக்கை கலப்பு நன்றாக அவர் குறிப்பில் தொனிக்கும்.

    மிக சிறந்த காட்சிகள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஜாக்சன் சந்திப்பு, தானாபதி பிள்ளை தவறிழைக்கும் காட்சி,பிடி படும் காட்சி,இறுதி பானர்மென் விசாரணை தூக்கு காட்சி ஆகியவை .

    ஜாக்சன் பேட்டிக்கு உள்ளே வரும் போதே எச்சரிக்கையுடன் அக்கம் பக்கம் பார்த்து நுழைவது, நாற்காலி இல்லாததால் சுற்று முற்றும் பார்த்து பேட்டியில்லை, அவமதிப்பே என்றுணர்ந்தாலும், நாற்காலி பறிப்பதுடன் தன் தாழா நிலையை குறிப்புணர்த்தி , பிறகு சற்றே ஆசுவாசம் கொள்வார் ,கை கால்களில் படபடப்பு கோபம் தெரிய ,சிறிதே தணிவார் .ஆனால் பேச்சு குற்றம் சாட்டும் தொனியில் ஆரம்பிக்க பொறுமை மீறி ,படபடப்புடன் எதிர்ப்பை அதிக படுத்தி கொண்டே போவார்.

    என்னுடைய ஆதர்ஷ காட்சி ,தானாபதி பிள்ளை நெல்லை கொள்ளையிட்டதால் ,அவரை ஒப்படைக்க சொல்லி தூதன் ஓலையுடன் வரும் காட்சி. முகபாவம்,உடல் மொழி, அசைவுகள்,வசன முறை எல்லாவற்றிலும் உச்சம் தொடும் அதிசய காட்சி.குற்றச்சாட்டின் வலிமை அறிந்து ,அதன் தன்மையை மந்திரி உணர்கிறாரா என்று ஆழம் பார்ப்பதும், தன் பதவிக்குரிய விவேகமில்லாமல் பேசும் மந்திரியின் பேச்சினால் நிலை குலைந்து, தன் சுற்றி இருப்பவரிடம் தான்தான் அரசன் என்று குறிக்கும் ஒரு அர்த்த புஷ்டியான ஒரு எச்சரிக்கை குறிப்பை காட்டி ,மந்திரியிடம் நீறு பூத்த நெருப்பாக வஞ்ச புகழ்ச்சியில் ஆரம்பித்து ,படி படியாய் நிலைமையின் தீவிரத்தை குற்றச்சாட்டை உணர்த்தும் பாங்கு இந்த காட்சியை உயரத்தில் வைக்கும்.பிறகு குழுவின் நலன் கருதி மந்திரியை காத்து விட்டாலும் வருவதை தடுக்க இயலாது என்ற விரக்தி கலந்த இயலாமையுடன் தூதரின் மேல் தேவை இல்லாமல் பாய்வார்.

    தன்னை பிடிக்க ஆள் அனுப்பிய புது கோட்டை மன்னருக்கு இவர் சொல்லும் ராஜாதி ராஜ கட்டியம் ஒவ்வொரு செருப்படி போல தொனிக்கும். தன்னை காண விரும்பவில்லை என்றதும் கேலி,ஏமாற்றம் கலந்த எள்ளலுடன் சொல்லும் வாழ்க ,தூக்கு தண்டனைக்கு ஈடானது.

    கடைசி காட்சி "Back to the wall resolution " என்ற catharsis ,venting out anger ரக காட்சி.இதிலே நான் கண்ட சக்தி எந்த படத்திலும் ,எந்த நடிகனிடமும் கண்டதில்லை. இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் , நிலையற்ற அந்நியனிடம் பணிந்த தன் சகாக்களிடம் ஈனமாக வெடிக்கும் கோபம் ,அந்நியனிடம் மூர்க்கம் கலந்த வன்மையான இயலாமை கலந்த வருவது வரட்டும் என்ற கோபம் என்று இவர் வெடிக்கும் காட்சி ஒரு dynamite நம் நாற்காலிக்கு கீழேயே வெடித்த உணர்வில் நாம் பிரமையுடன் வெளியேறுவோம்.
    Last edited by Gopal.s; 10th May 2017 at 08:49 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. Thanks adiram thanked for this post
    Likes Harrietlgy, adiram liked this post
  13. #3769
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பாட்டும் பரதமும்' (புதிய பதிவு)



    'தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
    தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு'

    பாடல் ஒரு முழு ஆய்வு.

    ஒரு பாடல்.ஒரே ஒரு பாடல். உச்சி முதல் உள்ளங்கால் வரை நம் ஊன் உயிரெல்லாம் கலந்து மௌனமான சிலிர்ப்பை உண்டாக்கும் சிந்தை கவரும் பாடல்.

    இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனது பாரமாகும். இனம் புரியா சோகம் நெஞ்சைக் கவ்வும். தொண்டைக்குழிக்குள் பலாப்பழம் அடைப்பது போன்ற உணர்வு. நாயகருடனும், பாடகனுடனும், இசை அமைப்பாளருடனும், கவியரசருடனும், காட்சியுடனும் இரண்டறக் கலந்து விடுவோம். பாடல் கேட்டு முடித்த பின் உணவு உண்ணப் பிடிக்காது. உறக்கத்தில் நாட்டம் இராது.


    எதிலும் நாட்டமில்லாமல் சதா தொழில் தொழில் என்று அலைந்து பணம் புரட்டும் பெரும் வியாபார நாயகன் ஒரு நடன மாது மீது சொல்லொணாக் காதலுற்று, அவளை அடைவதற்காகவே பரதம் பயின்று, போட்டியில் அவளையே வென்று பல சோதனைக்களுக்கிடையில் அவளைக் கைப்பிடிக்கும் நேரம் அந்தஸ்து கெளரவம் என்று அலையும் தந்தையின் சதியால் அவளை பிரிகிறான். காசு காசு என்று அலைந்தவன் காதலிக்காக கலை, கலை என்று அதிலேயே மூழ்குகிறான் விபச்சாரி என்று பட்டம் கட்டப்பட்டு பரிதாபமாக அந்தப் பாவை பரத நாயகனை விட்டு நீங்குகிறாள்.

    நாயகியைத் தேடித் தேடி அலைகிறான் அந்த பரிதாபத்துக்குரிய நாயகன்.தேடுகிறான்...தேடுகிறான்....காடு மேடெல்லாம் தேடுகிறான்....மலைகளிலெல்லாம் தேடுகிறான்...அவளால் தான் கற்ற பரதத்தையும், இசை ஞானத்தையும் முதலாக வைத்து தேடுகிறான். பாவை கிடைத்தபாடில்லை. அவளின்றி அவனுக்கு இனி வேறோர் உலகம் உண்டோ. 25 வயதில் அவளைத் தொலைத்து விட்டு 60 வதிலும் அவளைத் தேடுகிறான். இன்னும் தோல்விதான் அவனுக்கு. ஆனால் அவனின் காதலுக்கு அல்ல.

    இளமை போய் நரைத்திரை விழ, நடுத்தர வயதை நாயகன் அடைந்தும் முயற்சியை விடவில்லை. வருடங்கள் பறந்து வாலிபன் வயோதிகனாகிறான். பொலிவிழந்த உருவம்...களையிழந்த முகம்.. குன்றிய உடல்.. ஆனால் குன்றாத மன உறுதி. .காதல் அவனை உருக்கியது. ஆனால் அவனோ காதலை இன்னும் தன் உள்ளத்தில் இறுக்கினான். இருத்தினான். கிடைத்து விடுவாள் என்று தேடுதலை விடான்.

    இதுதான் பாடலின் சிச்சுவேஷன்.

    ‘கற்பனைக்கு மேனி தந்து கால் சலங்கை போட்டுவிட்டேன்'

    என்ற தொகையறாவில் தொடங்கி

    'தெய்வத்தின் தேரெடுத்து'

    தன் தேவியைத் தேடுகிறான். தென்றலை தூதாக ஓடச் சொல்லி ஓடாய்த் தேய்கிறான்.

    நாயகன் யார்? வேறு யார். நம் நடிகர் திலகமே. சதியால் காதலியைப் பிரிந்து துயருறும் துன்ப நாயகன். நடிப்பில் நமக்கு எப்போதும் இன்பமளிக்கும் இனிய நாயகன். பிரிந்த நாயகி கலைச்செல்வி

    சால்வை அணிந்த ஜிப்பா பஞ்சகச்சத்துடன் நடிகர் திலகம் மலைப் பிரதேசங்களில் கவலை தோய்ந்த முகத்துடன் காதலியின் பிரிவுத்துயரை பாடல் வரிகளின் மூலம் பறை சாற்றும் கட்டங்களை எப்படி எழுதுவது?

    மனதில் கவலை மேகங்கள். வானில் கலைந்து செல்லும் வெண் மேகங்கள்.

    'பாவைக்குப் போட்டு வைத்தேன் நானொரு கோடு' வரிகளில் இந்த அதிசய நடிகன் காட்டும் கை பாவங்கள். வலது கை விரல்களில் நான்காவது விரலையும், சுண்டு விரலையும் சற்றே மடக்கி, நடு விரலையும், சுட்டு விரலையும் நிமிர்த்தி, கட்டை விரலை விரித்து, வளைத்து, வான் நோக்கி தலை உயர்த்தி, இடமிருந்து வலமாக காற்றில் விரல்களால் கோடு கிழிக்கும் உன்னத நடிப்பு. அந்த வரியை உச்சஸ்தாயியில் உயர்த்திப் பிடிக்கும் பாடகர் திலகம் நடிகர் திலகத்தினுடேயே இணைந்து விடுவார்.

    ஷெனாய், சிதார், வீணை, சாரங்கி வைத்து வித்தை காட்டுவார் மெல்லிசை மன்னர். மலைப் பரப்புகளில் நடிகர் திலகம் லாங் ஷாட்டில் சோகமே உருவாய் நடந்து வரும் அழகை அற்புதமாக படம் பிடித்திருப்பார் ஒளிப்பதிவாளர். மென் குளிரில், மெலிதான தென்றலில் சால்வை அகல, அதை சரி செய்து கொண்டு நடந்து வரும்போது சூரியனைக் கொண்டுதான் திருஷ்டி சுற்றி போட வேண்டும் இந்த நடிப்புத் திருமகனுக்கு.

    'மாமழை மேகமென்று கண்களில் இருப்பு' என்ற ஒரே ஒரு ஒற்றை வரியில் நாயகனின் மன நிலையை நம்முள் விரிய வைத்த மகா கவிஞன்.

    நடிகர் திலகத்தின் ஒவ்வொரு சைட் போஸும் ஒரு கோடி பெறும்.

    பருவ காலங்கள் மாறி மாறி வர, காதோரம் நடிகர் திலகத்திற்கு நரைக்க ஆரம்பிப்பதை காலத்தின் ஓட்டம் காட்டும்.

    கம்பனும், காளிதாசனும் தங்கள் நாயகிகளை மறந்து இவன் நாயகியை கண்டால் அவர்கள் நாயகி என்று சொந்தம் கொண்டாடுவார்களாம். அடடா! நாயகி மேல் நாயகன் வைத்துள்ள காதலை இதைவிட சிறப்பாக உணர்த்த இயலுமா?

    'சீதையைக் காண்பான்' எனும்போது நடிகர் திலகம் கையை அருள்புரிவது போல அமைதியாக காட்டும் கட்டம் கன ஜோர். 'சகுந்தலை' எனும்போது காற்றிலே திலகத்தின் கைகள் சாகுந்தலம் வரையும். மஞ்சள் நிற சால்வை பெருமை கொள்ளும். பாந்தமான நடிப்பில், தோற்றத்தில் சிகரம் நம்மை சிறையிடுவார்.

    'நாயகியே எனது காவிய எல்லை' வரிகளில் பாடகர் திலகமும், நடிகர் திலகமும் நிஜமாகவே அவரவர்கள் துறையின் எல்லைகளைத் தாண்டி அற்புதம் காட்டுவார்கள். நடிகர் திலகம் கண்களை மூடி
    சைட் போஸில் 'காவிய எல்லை'யை வாயசைப்பில் ஜாலம் காட்டும் வித்தைக்கு ஆஸ்கர் எந்த மூலை க்கு? ஒவ்வொரு இடத்திலும் ஒரு நடிகன் எப்படி நிற்க வேண்டும்,எப்படி கைகளை வைத்துக் கொள்ள வேண்டும், எப்படி பாவங்களை தேவையான சமயம் காட்ட வேண்டும் என்ற நடிப்பு நாளந்தா பல்கலைக் கழகமல்லவோ இந்த பார் போற்றும் நடிப்புச் சக்கரவர்த்தி.

    'நரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை' வரிகளில் தன் தலை தொட்டு, நரை காட்டி, தன்னிரக்கம் காட்டுவார் நடிகர் திலகம். நம் இரக்கம் முழுதும் மொத்தமாக அவருக்கே போய்ச் சேரும். நம் மனம் இந்த இடத்தில் புண்பட்டு பழுதாகும்...ரணமாகும்.

    நீண்ட நெடிய, யாருமே இல்லாத வளைந்து செல்லும் ஒற்றை சாலையில் கைகளை பின்புறம் கட்டி விட்டேர்த்தியாக திலகம் நடக்கையில் நம் இதயம் பரிதவிக்கும்.

    சிதாரின் பின்னணியில் மலையருவி கொட்ட, காதல் வாழ்வை பாழ்படுத்திய தந்தை, மற்றும் காதலிக்கும், தனக்கும் வித்தை கற்றுத் தந்த குருக்கள், இவர்கள் மாலையிட்ட புகைப்படமாக மறைந்து விட்டதற்கு கா(சா) ட்சியளிக்க, காலங்கள் பறப்பதை இசைக்கருவிகள் அம்சமாக உணர்த்த, பாடகர் திலகத்தின் ஸ்வரங்கள், ஜதி கம்பீரமாக கேட்க, குழந்தையாய் ஆடும் இளம் ஸ்ரீப்ரியா இப்போது குமரியாக நடராஜர் சிலை முன் பரதம் ஆட, பாடலின் முடிவில் கழுத்தைக் கவர் செய்யும் வெள்ளைக் கலர் ஜிப்பாவுடன் முதிர் தோற்றத்தில் தாடியுடன் 'தாம் தீம் தாம் தகிடதகதிமி' ஜதி சொல்ல.....

    காலங்கள் கடக்கும் வேகத்தை இசை மூலமாகவே நமக்கு உணர்த்திவிடும் மகா இசைக் கலைஞன் சொல்லி மெல்லிசை மன்னர். அந்த மகானுக்கு தன் பாடல் வரிகளால் தீனி போடும் கவியரசன். பிரிவுத் துன்பத்தை நம்முள் நடிப்பால் விதைக்கும் நடிகர் திலகம். கர்நாடக இசையோடு இழையும் இந்த இனிய பாடலை ஒரே ஒரு வித்தகன் மட்டுமே பாட முடியும். நாயகனின் பிரிவுத் துயரை தன் குரல் மூலம் பிரித்து மேயும் பாடகர் சிகரம் டி.எம்.எஸ்.

    மனதை பிழித்தெடுக்கும் பாடல்களில் என்றும் முதலிடம் பெறும் உணர்ச்சிக் குவியல்களின் ஒருமித்த சங்கமப் பாடல். பாடல்களின் வேதம். கல்வி போல நீராலும், நெருப்பாலும், காலத்தாலும் அழிக்க முடியாத சிரஞ்சீவிப் பாடல்.



    கற்பனைக்கு மேனி தந்து கால் சலங்கை போட்டுவிட்டேன்
    கால் சலங்கை போன இடம் கடவுளுக்கும் தோன்றவில்லை.....

    தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
    தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு
    தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
    தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு

    ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
    அவளில்லையென்றால் நான் வெறும் கூடு
    ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
    அவளில்லையென்றால் நான் வெறும் கூடு
    பாவைக்குப் போட்டு வைத்தேன் நானொரு கோடு
    பாவைக்குப் போட்டு வைத்தேன் நானொரு கோடு
    பாடிப் பறந்ததம்மா இளங்குயில் பேடு
    இளங்குயில் பே டு

    தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
    தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு

    நீர் வற்றிப் போனதென்று நினைவினில் வெடிப்பு
    நெஞ்சத்தினில் தோன்றுதம்மா வசந்தத்தின் துடிப்பு
    மாமழை மேகமென்று கண்களில் இருப்பு
    மார்கழிப் பனியன்றோ அவளது சிரிப்பு
    அவளது சிரிப்பு

    தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
    தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு

    கம்பனைக் கூப்பிடுங்கள்
    சீதையைக் காண்பான்
    கவிகாளிதாசன் அவள் சகுந்தலை என்பான்
    கம்பனைக் கூப்பிடுங்கள்
    சீதையைக் காண்பான்
    கவிகாளிதாசன் அவள் சகுந்தலை என்பான்
    நாயகியே எனது காவிய எல்லை
    நரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை
    நரை விழுந்தாலும் நெஞ்சில்
    திரை விழவில்லை

    தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
    தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு

    தாம் தீம் தாம்
    தகிடதகதிமி
    ததீம்தாங்கு ததீம்தாங்கு தகதிமி
    தாம் தீம் தாம்
    தகிடதகதிமி ததீம் தாங்கு ததீம் தாங்கு தகதிமி
    ததரிட தகஜுனு ததரிட தகஜுனு
    தகிட ஜூனுகு தகிட ஜூனுகு
    தகிடதகமி தகிட தஜூனு
    தகிடதனத்த தகிட தஜூனு
    தஜூம் தஜூம் தஜூம் தகிடதா

    Last edited by vasudevan31355; 11th May 2017 at 10:37 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Thanks goldstar, adiram thanked for this post
    Likes adiram liked this post
  15. #3770
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    அன்பு வாசுதேவன் சார்,

    சற்று இடைவெளிக்குப்பின் தங்களின் புத்தம்புது பதிவான 'தெய்வத்தின் தேரெடுத்து தேவியை தேடு' பாடலின் விவரணை கண்டு சொக்கிப்போனேன். நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் பரவச நிலை, அதை தலைவர் படங்கள் மற்றும் பாடல்கள் மூலம் மட்டுமே நீங்களும், கோபால் சாரும், முரளி சாரும் தர முடியும்.

    பாட்டும் பரதமும் படத்தின் அத்தனை பாடல்களும் தேன் சொட்டு என்றால் மிகையாகாது.

    மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
    சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான்
    தெய்வத்தின் தேரெடுத்து
    உலகம் நீயாடும் சோலை
    என ஒவ்வொரு பாடலும் அருமையோ அருமை.

    நடிகர்திலகத்தின் படங்களில் நாயகனுக்கும் நாயகிக்கும் பெரும்பாலும் டூயட் பாடல் இருக்காது. அப்படியே இருந்தாலும் ஒன்றேயொன்று வைப்பார்கள். இப்படத்தில் மூன்று பாடல்களில் இணையாக தோன்றுவது மனதுக்கு இதமாக இருந்தது.

    இப்படத்தின் துவக்கம் முதல் அண்டர் கரண்ட் என்பது போல ஆழத்தில் ஏதோ ஒரு சோகம் இழையோடிக் கொண்டேயிருக்கும். அதுவே படத்தோடு நம்மை ஒன்ற வைக்கும்.

    பாடலின் ஒவ்வொரு வரியையும் வார்த்தைகளையும் அற்புதமாக அலசியுள்ளீர்கள். நடிகர்திலகத்தின் நடிப்பு மட்டுமல்லாது எழுதியவரின் படைப்பாற்றல், இசையமைத்தவரின் அசாத்திய திறமை, பாடியவரின் அபார பங்களிப்பு என்று அனைத்தையும் விவரித்துள்ளீர்கள். நிச்சயமாக டி. எம். எஸ். தவிர வேறு யாரும் இந்தப்பாடலை அவ்வளவு ஜீவனோடு பாடியிருக்க முடியவே முடியாது. உச்ச ஸ்தாயியில் 'கற்பனைக்கு மேனி தந்து' என்று அவர் துவங்கும்போதே நமக்கு மெய்சிலிர்த்து விடும். பாடல் முடியும் வரை அந்த பரவசம் அடங்காது. பாடலின் இடையே கதையின் முக்கிய பாத்திரங்களான மேஜர் சுந்தர்ராஜன், சுகுமாரி, மனோகர் ஆகியோர் மறைந்து விட்டதை காண்பிக்கும்போது நம் சோகம் இன்னும் அதிகரிக்கும். கதாநாயகியையும் காணவில்லை, கதாபாத்திரங்களும் மறைந்து விட்டனர். மேற்கொண்டு கதை எப்படி நகருமோ என்ற எதிர்பார்ப்பு தொற்றிக்கொள்ள நம் ஆவல் அதிகரிக்கும்.

    சிறப்பான திறனாய்வுக்கு பாராட்டுக்கள்.
    இதுபோன்ற சிறப்பு பதிவுகளுடன் அடிக்கடி வருகை தாருங்கள்.
    Last edited by adiram; 11th May 2017 at 01:36 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •