-
7th January 2017, 02:36 AM
#2961
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
7th January 2017 02:36 AM
# ADS
Circuit advertisement
-
7th January 2017, 02:37 AM
#2962
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
7th January 2017, 02:39 AM
#2963
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th January 2017, 02:42 AM
#2964
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
7th January 2017, 07:27 AM
#2965
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
7th January 2017, 07:08 PM
#2966
Junior Member
Newbie Hubber
-
8th January 2017, 08:30 AM
#2967
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
8th January 2017, 11:33 PM
#2968
Junior Member
Devoted Hubber
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 159 – சுதாங்கன்.
தேவி! வேடிக்கையாக இந்திராணி கூறியதை குறையாகக் கருத வேண்டாம். எங்கள் குறை தீர்த்த குமரனுக்கு தெய்வயானையை கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறோம்’ என்பான் இந்திரன்.
` ஆஹா! முறைப்படி நடக்கவேண்டும் என்று எப்போது ஒரு சொல் வந்துவிட்டதோ அதன்பிறகு எல்லாமே முறைப்படித்தான் நடக்க வேண்டும். தேவி! பெண்வீட்டார் மாப்பிள்ளைக்கு செய்யப்போகும் நால்வரிசை சீதனம் என்னவென்று கேட்டுச் சொல்லுங்கள்’--– இது வீரபாகு!
`தேவி! கேட்ட நால்வரிசை சீர்வரிசைகளோடு எங்கள் தங்கையை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்.’
`ஜெயந்தா! அந்த நால்வகை சீர்வரிசை என்னவென்று சற்று விளக்கமாகத்தான் சொல்லேன்’– சிவபெருமான்.
`ஆண்டவா! அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, இந்த நால்வகை சீர்வரிசையோடு எங்கள் தெய்வயானையை முருகப்பெருமானுக்கு தாரை வார்த்து கொடுக்கிறோம்’ என்பான் ஜெயந்தன்! `ஆ! போதாது! போதாது! ஆபரண வகைகள் என்னென்ன போடுவீர்கள் என்பது தெரிய வேண்டும்’ – வீரபாகு!
`உங்கள் விருப்பத்தைத் தெரிவித்தால் அதன்படி செய்கிறோம்’ – ஜெயந்தன்! `தலையிணி தன்னில் வலம்புரிச் சங்கு, புறப்பாளை, பொன்அணி மாலை, சூடாமணியும் சேர்த்து, காதணியாக வாளி, குடை இவற்றைச் சேர்த்து, கழத்தணியாக வீரச்சங்கலி, இதயச்சங்கலி, பொன்னுள்சமலி இவற்றையும் சேர்த்து, கையணியாக கனகம், பொன்மணி, தங்க வளையும்,நவமணி வளையும், பவள வளையும் மாட்டி காலணி வகையாக, சிலம்பு, சலங்கை,போன்றவற்றையும் சேர்த்து தேவி, இனி நீங்கள் கேளுங்கள்’ என்பான் வீரபாகு! `அடேயப்பா! போதுமே, இன்னும் வேண்டுமா தேவி?’ என கேட்பார் சிவபெருமான். `பெண் என்று பிறந்துவிட்டால் பொன் ஆபரணமும், பட்டாடையும் போதுமென்று சொல்வாளா சுவாமி?’– இது பார்வதிதேவி! `இறைவா! இவற்றிற்கெல்லாம் மேலாக,கற்பையே ஆபரணமாகப்பூட்டி எங்கள் குலப்பெண்ணை நகைமுகத்தோடு அனுப்பி வைக்கிறோம். போதுமா சாமி?’ என்பான் தெய்வயானையின் சகோதரன் ஜெயந்தன்.
`அடே! சிறுவா! நீ பேசக்கற்றவன்’ என்று ஜெயந்தன் தோளில் தட்டுவான் வீரபாகு! `பெண் வீட்டு சீர்வரிசைகளைப் பற்றி நீங்கள் இத்தனை விவரங்களைக் கேட்ட பிறகு, மாப்பிள்ளையைப் பற்றி நாங்கள் ஒரு வார்த்தை கேட்கலாமா?’ ஜெயந்தன் கேட்பான்! `ஜெயந்தா! நீ என்ன கேட்கப்போகிறாய் என்பது எனக்குத் தெரியும்! அதற்கு விடை நானே கூறிவிடுகிறேன். முத்தமிழும் முருகப்பெருமானின் குலச்சொத்து, தன்னுடன் பிறந்த தனயன் வீட்டுச் சொத்து பிரணவப் பொருள், தாய் வீட்டு சீதனமாக மாமன் நாரணன் வீட்டுச் சொத்து, பட்டுப் பீதாம்பரம், பலவகை ஆபரணம், இவற்றுக்கெல்லாம் மேலாக அலைபாயும் கடலெல்லாம் முருகப்பெருமானின் அத்தை வீட்டுச் சொத்து.’ வீரபாகு
`அப்பன் என் சார்பில் இருப்பதோ வெள்ளிமலை’ – இது சிவபெருமான்.
`அன்னை நான் அவனுக்கென்றே கொடுத்தது வெற்றிவேல்’ –இது பார்வதி தேவி!
`இறைவா! எதற்காக இந்த நாடகம்? கட்டளையிடுங்கள். தேவயானியை தாரைவார்த்துக் கொடுக்க காத்து கொண்டிருக்கிறோம்’ என்பான் இந்திரன்.
`மலைமகள் மைந்தனுக்கு மலைமீதே திருமணம் நடக்கட்டும். ஜெயந்தா, வீரபாகு, முருகனுக்கும், தேவயானிக்கும் திருப்பரங்குன்றத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்’ என்பார் சிவபெருமான். அதற்குப் பிறகு முருகன்– தேவயானி திருமணம் நடக்கும். இந்த படத்தில் முருகன்– தேவயானி திருமணத்திற்குப் பிறகு, முருகன் வள்ளியையும் திருமணம் செய்து கொண்ட பிறகு வள்ளி, தேவயானிக்கிடையே வரும் பிணக்கின் போது ஒரு காட்சியில் வீரபாகுவாக நடித்த சிவாஜி படத்தில் வருவார். ஆனால் அவருக்கான காட்சிகள், கொடுக்கப்பட்ட வசனங்களால் இந்த படத்தை சிவாஜி படமாகவே மக்கள் கருதி படத்தை வெற்றிப்படமாக ஆக்கினார்கள். இந்த படத்தில் எல்லாப் பாடல்களையும் கண்ணதாசன்தான் எழுதியிருந்தார். படத்திற்கு இசையை கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். ஆனால், ஏற்கனவே பூவை செங்குட்டுவன் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் ஒரு தனிப்பாடல் எழுதி அது குறுந்தகடாக வெளியாகி இருந்தது. ஆனால், அந்தப் பாடல் இந்தப் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதால், கே.வி. மகாதேவன், கண்ணதாசன் அனுமதியோடு அந்தப் பாடலை படத்தில் இணைத்து, டைட்டிலில் குன்னக்குடிக்கும், பூவை செங்குட்டுவனுக்கும் தனி கார்டு போட்டார் இயக்குநர் ஏ.பி. நாகராஜன்.
அந்தப் பாடல்தான் `திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா! திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்’ என்ற பாடல்! அதே வருடம் அதாவது 1967ம் வருடம்தான் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜியின் இரண்டு படங்கள் வெளியாகின. ஒரு படத்தை ஸ்ரீதரின் சித்ராலயா நிறுவனமே தயாரித்தது! அது கறுப்பு வெள்ளை படம்! இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும், சிவாஜி உட்பட யாருக்குமே ஒப்பனை கிடையாது! அந்தப் படம்தான் `நெஞ்சிருக்கும் வரை.’ இந்த படம் ஸ்ரீதர் எதிர் பார்த்த வெற்றியை அடையவில்லை. ஆனால் படத்தில் அத்தனை பாடல்களுமே அருமை! எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் விஸ்வநாதனும், கண்ணதாசனும், ஒரு திருமண அழைப்பிதழையே பாடலாக்கியிருப்பார்கள். அந்தப் பாடல்தான் ` பூ முடிப்பாள் இந்த பூங்குழலி.’ இந்த பாடலும் திருமண வீடுகளின் கட்டாய பாடலாக தமிழகமெங்கும் பல வருடங்கள் ஒலித்துக் கொண்டேயிருந்தது. இந்த வருடத்தில் வந்த எட்டு சிவாஜி படங்களில், ஆறு படங்களுக்கு இசை எம்.எஸ். விஸ்வநாதன்.
ஸ்ரீதர் இயக்கத்தில் இதே ஆண்டு வெளிவந்த இன்னொரு படம் கோவை செழியனின் கே.சி. பிலிம்ஸ் தயாரித்த `ஊட்டி வரை உறவு’. இந்த படமும், பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன! காமெடி கலந்த ஒரு த்ரில்லர் படம் இது! `காதலிக்க நேரமில்லை’ படத்திற்கு பிறகு ஸ்ரீதர் இயக்கத்தில் வந்த ஒரு அருமையான நகைச்சுவை படமாக இந்த படம் அமைந்தது!
சென்னை மற்றும் தமிழகமெங்கும் இந்த படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது! இன்றைக்கும் தினமும் ஏதாவது ஒரு சேனலில் இந்த படத்தின் பாடல்கள் இல்லாமல் இருக்காது. இந்த படத்தின் முதல் பாடல் கே.ஆர். விஜயாவிற்கு! அந்தப் பாடலில் அவர் புடவையோடு மேற்கத்திய நடனம் ஆடியிருப்பார்! அதே காட்சியில் சிவாஜி மறைந்திருந்து அந்த நடனத்தை வெள்ளைப் பேண்ட் – கோட், உள்ளே ஒரு சிவப்பு நிற சட்டையணிந்து ஸ்டைலாக புகை பிடித்தபடி அறிமுகமாவார். அரங்கே அதிர்ந்தது!
இதே ஆண்டுதான், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிவாஜி, பத்மினி ஜோடியாக நடித்த `பேசும் தெய்வம்’ படம் வெளியானது! இந்த படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தையும் வாலி எழுதியிருந்தார். இந்த படம் ஒரு குடும்பப்பாங்கான படம். அதனால் பெண்களின் வரவேற்பை அமோகமாக பெற்ற படமாக இது அமைந்தது. சென்னை கெயிட்டி தியேட்டரில் வெளியாகி வெற்றியடைந்த படம் இது. இந்த ஆண்டுதான் தயாரிப்பாளர், நடிகர் கே.பாலாஜியும், சிவாஜியும் இணைந்தார்கள்.
(தொடரும்)
-
9th January 2017, 01:32 AM
#2969
Junior Member
Junior Hubber
Madi Veetu Ezhai
Here is thew link for Kalaignar's Madi Veetu Ezhai.
-
9th January 2017, 07:19 AM
#2970
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks