-
28th November 2016, 09:45 AM
#11
Junior Member
Newbie Hubber
அக நானூறு என்பது தமிழில் அக நாநூற்றொன்று என்று மாறிய அதிசயம் இதே மாதம் 15 ,53 வருடங்கள் முன் (15.11.1963)நிகழ்ந்தேறியது.மகளிருக்கு காமத்தை வெளியிடும் சுதந்திரம்,உடன் போக்கு என்று இன்று பேசும் பெண் உரிமைகளை சங்க காலத்திலேயே வழங்கிய தமிழ் சமூகமாயிற்றே?
ஒரு பெண்ணே தன்னுடைய விழைவை நாணம் துறந்து வெளியிட்டு ,நாணத்தை அழைப்பின் தூண்டிலாய் மாற்றிய அதிசயம் கண்டோம்.
61 முதல் 65 வரை காதல் ரசாயனத்தை மொத்த குத்தகைக்கு எடுத்திருந்த ஜோடியின் புணர்ச்சி விழைவு உணர்ச்சி பண் என்றால் நாங்கள் மெய் மட்டுமா மறப்போம்?அப்போது தமிழின் செயற்கை பெருந்திணை காதல் பொய்களையும் சேர்த்தே மறந்து துறந்தோம்.
மடிமீது தலைவைத்து விடியும் வரை தூங்க (???)விரும்பும் ஏந்திழையாளின் அழைக்கும் விழிகள் தூக்கத்தின் உண்மை அர்த்தத்தை கூறி விடாதா? மறுநாள் எழும் விருப்பம் காலையல்ல?சேவல் குரலுக்கு தடை பின் மறுநாளும் ,மருகி நாட்களாகி விடுமே?இன்பத்தின் கதையை முடிக்காமல்,சேர்ந்தவர் உயிரும் பிரியாமல் இருக்க நாயகி முதல் மாதிரியாக தருவது தன்னுடைய விரல்களை அவன் இதழுக்கு காணிக்கையாக.அவன் அதை மென்மையான முத்தத்தால் அங்கீகரித்தாலும் ,அவனுக்கு புரியாதா அசல்கள் ,முன் இந்த மாதிரி எம்மாத்திரம் என்று?
விழிகள் கலக்கும் போது ,காதலன் கண்கள் காதலை வெளியிட,காதலியோ பொய் நாணத்தால் அதை மேலே இழுக்கும் முயல்வை காட்டுவார்.சிறிதே விலகி ஓடும் காதலி ,அவனால் இழுபட்டு இணைவின் சுகத்தின் எதிர்பார்ப்பை காட்டும் அதிசயம் நாயகியின் பாவத்தால்,கண்களால்,உடல்மொழியால் நமக்கே விளக்கி விடுமே? இரண்டற ஓருயிராக கலக்க விரும்பும் நாயகனுக்கா விளங்காது? இந்த ஓட்டம் இன்ப ஓட்டம் ஆயிற்றே?காமம் என்ற புத்தகத்தின் பக்கங்களை விட முன்னுரை பக்கங்கள் அதிகம் வேண்டும் என காம சாத்திரங்கள் உரைக்கிறதே?
முன்னுரைத்து காதலால் காமம் தூண்டி உயிரை இணைத்து காண வேண்டிய உன்னத விளையாட்டாயிற்றே?
இரவே இரவே விடியாதே ,இன்பத்தின் கதையை முடிக்காதே,சேவல் குரலே கூவாதே ,சேர்ந்தவர் உயிரை பிரிக்காதே என்று நாயகி அபிநயத்தால் ஆணையிடும் அழகில் இரவும்,சேவலும் கேட்டு விட்டால் நம் கதி?ஆனால் அந்த அழகுக்கு இரண்டும் இசையும் வாய்ப்பு அதிகமே.
இரண்டு உள்ளங்களும் வதை படும் உருண்டு விளையாடும்,நாயகரும் ஓடியே தொடர்வார்?பின் பேரின்பம் என்பது சும்மாவா கிடைக்கும்? உன்மத்தமான துரத்தல் விளையாடல். (இன்பத்தை துறக்காமல் துய்த்து கொண்டேயிருக்க)
வாயின் சிவப்பு விழியிலே,மலர்கண் வெளுப்பு இதழிலே என்பதற்கு இந்த நாயகி வண்ணங்களின் துணையின்றியே விளக்கமளித்து ,உள்ளத்தில் வண்ணம் கூட்டும் அதிசயத்தை காட்சியாக பாருங்கள்.
கடைசி இதமான அணைப்பில் காதலும் காமமும் இணையும் பாலத்தை கடந்து செல்லும் அழகு.(erotic )
காலடி தடங்கள் மட்டுமா அடையாளம் அழிந்து கலக்கின்றன ?செம்புல பெயனீர் போல அன்புடை உடல்களும் தான் கடந்தனவே? கலந்தனவே???நினைப்பின் தடத்தை விட்டு செல்லும் நம் மனதில் , அகழியில் வீசிய கல் அலைவுகளை விட்டு செல்வது போல.இவ்வளவும் நடப்பது அன்னை இல்லத்திலேயே.
சில பாடல்கள் மட்டுமே காட்சியுடன் ஒன்றி ,திரை காதலர்கள் உண்மையில் வாழ்வில் இணைகிறார்கள் என்ற பிரமையை ஏற்படுத்தும். அந்த மாதிரி கே.வீ..எம்மின் இரவின் இன்பத்தை கூட்டும் இசையில், கண்ணதாசனின் காம மையில் தோய்த்த எழுத்தில்,சிவாஜியும்-தேவிகாவும் அரங்கேற்றும் கூடல் நாடகம், காட்சி வடிவில்.
Last edited by Gopal.s; 28th November 2016 at 12:31 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
28th November 2016 09:45 AM
# ADS
Circuit advertisement
Bookmarks