Page 223 of 400 FirstFirst ... 123173213221222223224225233273323 ... LastLast
Results 2,221 to 2,230 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2221
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2222
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    1967

    நடிகர் திலகத்திற்கு இது ஒரு திருப்புமுனையான ஆண்டு. ஆகவே அதை பற்றி நான் எழுத வேண்டும் என்று ராகவேந்தர் சார் சொல்லியிருக்கிறார். என்னை எழுத சொன்னதற்கு நன்றி.

    1967 உண்மையிலே திருப்புமுனையான ஆண்டுதான், பல்வேறு தளங்களிலும். இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தின் தலையெழுத்து முற்றிலுமாக மாறிய ஆண்டு. மாற்றங்கள் தவிக்க முடியாதது என்றாலும் தமிழகத்தின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது பற்றி whether it was for good or not என்று 47 வருடங்களுக்கு பிறகு கேள்வி எழுப்பினால் நமக்கு எதிர்மறையான பதிலே கிடைக்கிறது. அதே நேரத்தில் நடிகர் திலகத்தின் திரைப்பட வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் அல்லது இமேஜ் makeover பற்றிய கேள்விக்கு நமக்கு positive ஆன பதிலே பெருவாரியான மக்களின் கருத்தாக அமைந்திருக்கிறது.

    1952-ல் தொடங்கி இடைவெளியில்லாமல் நடித்துக் கொண்டிருந்த நடிகர் திலகம் 1967- முதல் தான் நடிக்கும் படங்களின் genre -ல் ஒரு மாற்றத்தை கொடுத்தார். ஆழமான கதையம்சம் அழுத்தமான பாத்திரப் படைப்புகள் உணர்ச்சிக் குவியலான திரைக்கதை என்ற பாதையில் பயணம் செய்துக் கொண்டிருந்த நடிகர் திலகம் அதை தாண்டி நகைச்சுவை மிளிரும் பொழுது போக்கு படங்களுக்கும் மற்றும் action oriented பொழுது போக்கு படங்களுக்கும் முன்னுரிமை கொடுக்க ஆரம்பித்தார்.

    அதற்கு முன் அவர் நகைச்சுவை படங்கள் செய்திருக்கிறாரே என்ற கேள்வி எழும். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, சபாஷ் மீனா மற்றும் பலே பாண்டியா ஆகியவற்றை மறந்து விட்டு பேசவில்லை. ஆனால் அவை few and far in between என்ற வகையிலேயே அமைந்திருந்தது. முறையே அவை வெளியான வருடங்களை பார்த்தோமென்றால் [1954,1958,1962] நான் சொல்வதன் அர்த்தம் புரியும். அது போன்றே murder mysteries ஆன புதிய பறவை, கல்யாணியின் கணவன் போன்ற படங்களிலும் கூட சண்டைக் காட்சிகள் கிடையாது. அல்லது மிக மிக அரிதாகவே அமைந்திருந்தது.

    இப்படி ஒரு மாற்றத்தை அவர் 1967- ல் தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்று கேட்டால் தமிழ் சினிமா வரலாற்றில் சற்றே பின்னோக்கி செல்ல வேண்டும்.

    60-களின் மத்தியில் தமிழ் சினிமாவில் மாற்றங்கள் வீச ஆரம்பித்த காலம் என குறிப்பிடலாம். அதுவும் தவிர அதே காலகட்டத்தில் மற்றொரு முக்கிய நிகழ்வு நம்முடைய பாட்டுடைத் தலைவனான நடிகர் திலகத்தின் வாழ்வில் நடந்தது.

    தமிழ் சினிமாவில் 60-களின் மத்தியில் புதிய வரவுகளாக பலர் அறிமுகமானார்கள். நடிகர்களை எடுத்துக் கொண்டோமென்றால் ஏவிஎம் ராஜன், சிவகுமார், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த் போன்றவர்க-ள் அறிமுகமாகி அதிலும் ரவி மற்றும் ஜெய் கதாநாயகனாகவே நிலை பெற்றார்கள். கேஆர்.விஜயா, ஜெயலலிதா வெண்ணிற ஆடை நிர்மலா, வாணிஸ்ரீ போன்றவர்களின் திரையுலக பிரவேசமும் அந்த காலகட்டத்தில்தான் நிகழ்ந்தது. இவர்களின் வரவோடு அன்றைய இந்தி திரையுலக தாக்கமும் சேர்ந்துக் கொண்டது. இந்தி பட தாக்கம் என்று குறிப்பிடுவது பெரும்பாலும் நாயகன் நாயகி வெளிப்புற பாடல்காட்சிகள், அவற்றில் முன் காலங்களில் இல்லாத அளவிற்கு ஆடலுக்கு முக்கியத்துவம் பின் இளைஞர்களை கவர்ந்திழுக்க சண்டைக் காட்சிகள், மற்றும் கிளப் டான்ஸ் போன்றவை இடம் பெற ஆரம்பித்தன.

    அந்த காலகட்டத்தில் நகைச்சுவைக்கு காதலிக்க நேரமில்லை, தேன் மழை, suspense வகைக்கு அதே கண்கள், ஜேம்ஸ் பாண்ட் பாணியில் வல்லவன் ஒருவன், இசை கலந்த காதலுக்கு இதய கமலம், பொழுதுபோக்கை விரும்புபவர்களுக்கு குமரிப் பெண் என்று வெரைட்டியாக படங்கள வந்த நேரம்.அதிலும் ரவிசந்திரன் ,அடுத்தடுத்த வெள்ளிவிழா வர்ண படங்களை வழங்கி விஸ்வரூபம் எடுத்து நின்றார்.

    இந்த மாற்றத்தினால் அன்றைய முன்னணி நாயக நாயகியரும் பாதிக்கப்பட்டனர். நாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஜெமினி எஸ்எஸ்ஆர் போன்றவர்களுக்கு பாதிப்பு அதிகம். எஸ்எஸ்ஆர் ஒரு முதல் நிலை கதாநாயகன் என்ற நிலையிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தார். ஜெமினிக்கும் இறங்குமுகம்தான். ஆனால் அவ்வப்போது சில படங்கள் வந்து ஜெமினியை காப்பாற்றிக் கொண்டிருந்தது. ராமு, பணமா பாசமா போன்ற படங்களை சொல்ல வேண்டும். ஆனால் பணமா பாசமா முதற்கொண்டே அவர் heroine oriented subject படங்களான பூவா தலையா, தாமரை நெஞ்சம், இரு கோடுகள், காவிய தலைவி போன்ற படங்களில் ஹீரோவாக நடிக்க வேண்டிய நிலைமை.

    இந்த புது வெள்ளத்தில் அடித்து செல்லப்படாமல் தங்கள் நிலையை தக்க வைத்துக் கொண்டவர்கள் சிவாஜி -எம் ஜி ஆர் இருவரும். ராஜகுமாரி மந்திரி குமாரி காலம் முதல், வருடத்தில் ஒரு படமேனும் ராஜா ராணி பாத்திரங்களையுடைய சரித்திர கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதை 1963 வரை செய்துக் கொண்டிருந்த எம்ஜிஆர் படவுலகில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை புரிந்துக் கொண்டு பழைய பாணியிலிருந்து மாறுபட்டு 1964 முதல் முழுக்க சமூக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தன் பாணியிலிருந்து மாறுபட்ட கதையம்சம் கொண்டிருந்த come september ஆங்கிலப் படத்திலிருந்து inspiration உட்கொண்டு உருவான அன்பே வா படத்தில் அவர் நடித்ததை இங்கு உதாரணமாக கூற வேண்டும்.

    நமது நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை அவரும் சற்றே light hearted subjects செய்யலாமா என்ற யோசனையில் இருக்கும் நேரம். இதே சமயத்தில் அவர் ஒரு முக்கியமான முடிவு எடுத்தார். 50-களின் மத்தியில் திராவிட இயக்கத்தினரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அவர் [அவர் எந்த திராவிட இயக்கத்திலும் உறுப்பினராக இருந்ததேயில்லை] காங்கிரஸ் பேரியக்கத்தின் அனுதாபியாகவும் பெருந்தலைவரின் தொண்டராகவும் அறியப்பட்டுக் கொண்டிருந்தார். 1965-ல் அன்றைய தமிழக இந்திய அரசுகள் சந்தித்துக் கொண்டிருந்த கடுமையான சோதனைகளை பார்த்த அவர் தன்னாலான உதவியை செய்வதற்காக காங்கிரஸ் பேரியக்கத்தில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். நமது எல்லையில் அத்து மீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினால் ஏற்பட்ட சோதனைகளை இந்திய அரசாங்கம் எதிர் கொள்ள இங்கோ மொழிப் போராட்டம் தூண்டி விடப்பட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டிருந்தவர்கள், போரினால் ஏற்பட்ட உணவு தானிய பற்றாக்குறை போன்றவற்றை வைத்து அரசியல் செய்தவர்கள் பெருகிவிட, இந்த சூழலில் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்வதை தன் கடமையாக நினைத்த நடிகர் திலகம் அதை முறைப்படி செய்தார்.

    இந்த அரசியல் நிகழ்வை இங்கே குறிப்பிட காரணம் அதற்கு முன்னரே சிவாஜி- எம்ஜிஆர் இருவரிடையே அல்லது அவர்கள் ரசிகர்களிடையே நிலவிய போட்டி இந்த நிகழ்வினால் மேலும் வலுவடைந்தது. அதனாலும் நடிப்பதற்கு தேர்ந்தெடுக்கும் கதைகளின் போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.

    நடிகர் திலகத்திற்கு 1966 ஜனவரி 26 அன்று பதமஸ்ரீ விருது கிடைத்தது. அன்றுதான் அவர் நடித்த 106-வது படமான மோட்டார் சுந்தரம் பிள்ளையும் வெளியானது. பத்மஸ்ரீ விருது கிடைத்ததற்கு பல்வேறு ஊர்களில் அவருக்கு சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது. அதன் பிறகு ஓய்வு ஒழிச்சல் இல்லாத அவரது வேலைப் பளு காரணமாக டைபாயிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். கடுமையான முறையில் பாதிக்கப்பட்ட அவர் இரண்டு மூன்று மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளானார். ஆனால் blessing in disguise என்று சொல்வார்களே அது போல் இந்த சுகவீனம் ஏற்கனவே இளைத்துக் கொண்டிருந்த அவர் உடலை மேலும் இளைக்க வைத்தது. அதன் காரணமாக அவரது உடல் ஸ்லிமாகி அன்றைய 20-25 வயது இளைஞர்களுக்கு சவால் விடும் வண்ணம் படு சிக்காக ஸ்மார்டாக படப்பிடிப்புகளுக்கு திரும்பினார். .

    இந்த நேரத்தில் நடிகர் பாலாஜியை பற்றி நாம் பேச வேண்டியிருக்கிறது. ஜெமினியின் ஔவையார் படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமாகி பின் துணை நாயகன், இணை நாயகன் ஆக உயர்ந்து ஒரு சில படங்களில் நாயகனாகவும் இடம் பிடித்து வரும் நேரத்தில்தான் இந்த புது வெள்ள பிரவாகம். அதனால் பாதிக்கப்பட்டவர்களில் பாலாஜியும் ஒருவராகப் போனார். ஆனால் அதனால் நிலைகுலைந்து விடாமல் தனக்கு தெரிந்த ஒரே தொழிலான சினிமா தொழிலில் வேறு என்ன செய்ய முடியும் என்று ஆக்கப்பூர்வமாக யோசித்து அவர் எடுத்த முடிவுதான் தயாரிப்பாளர் ஆவது. தன் மூத்த மகளான சுஜாதாவின் பெயரில் [இரண்டாவது மகள் சுசித்ரா - மோகன்லாலின் மனைவி, மகன் சுரேஷ் பாலாஜி] சுஜாதா சினி ஆர்ட்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்த காரணமாக இருந்தவரான ஜெமினியை நாயகனாக்கி அண்ணாவின் ஆசை என்ற படத்தை தயாரித்து 1966-ல் வெளியிட்டார். படம் வர்த்தக ரீதியில் சரியாகப் போகவில்லை என்றாலும் கூட தைரியமாக ரிஸ்க் எடுத்து பிசினஸ் செய்யக் கூடியவர் என்பதை அவர் பிரபல இந்தி நடிகர் அசோக்குமார் அவர்களை தன் முதல் படத்திலேயே நடிக்க வைத்ததன் மூலம் நிரூபித்தார்.

    அண்ணாவின் ஆசை சரியாக போகவில்லை என்றதும் பாலாஜியும் அவருக்கு பொருளாதார பின்புலமாக இருந்த சுதர்சன் சிட்பண்ட் வேலாயுதன் நாயரும் [கேஆர்விஜயாவின் கணவர்தான்] ஆலோசனையில் ஈடுபட அவர்களுக்கு தோன்றிய ஐடியாதான் நடிகர் திலகத்தை நாயகனாக்கி படம் எடுப்பது என்பது.

    பாலாஜி சென்று நடிகர் திலகத்தைப் பார்க்க, பாலாஜியை ஒரு இளைய சகோதரன் போலவே கருதியிருந்த நடிகர் திலகம் சந்தோஷமாக நடிக்க ஒப்புக் கொண்டார். விசி.சண்முகத்திற்கும் சம்மதம். ஆனால் பாலாஜி ஒரு கண்டிஷன் போட்டார். அதுநாள் வரையில் எந்த தயாரிப்பளாரும் நடிகர் திலகத்தை காட்டாத ஒரு கோணத்தில் நடிகர் திலகத்தை காட்டப் போகிறேன். அதற்கு நீங்கள் மறுப்பு சொல்லக் கூடாது என்றார். சரி என்று சொல்லப்பட்டாலும் கூட எந்த மாதிரியான subject என்பது முடிவாகாமலே இருந்தது.

    பாலாஜியைப் பொறுத்தவரை அன்றைய சூழலில் மக்களின் குறிப்பாக இளைஞர்களின் விருப்பமாக இருந்த action oriented film வகையை சார்ந்த படமாக தயாரிக்க விரும்பினார். அதில் அவர் எதிர்கொண்ட சவால்கள் என்னவென்றால் அதுவரை action genre -ல் படங்கள் செய்யாத நடிகர் திலகம் அப்படி ஒரு படம் செய்யும்போது அவருக்கும் comfortable -ஆக இருக்க வேண்டும், audience -ற்கும் convincing ஆக இருக்க வேண்டும். பாலாஜி எதிர்கொண்ட மற்றொரு சவால் என்னவென்றால் நடிகர் திலகம் நடிக்கும் படம் என்றால் அதை பெரிதும் எதிர்பார்த்து வருவது அவரின் core constituency ஆன தாய்குலங்களும் நல்ல நடிப்பை எதிர்பார்த்து வரும் ரசிகர் கூட்டமும்தான். ஆகவே என்னதான் action படம் எடுத்தாலும் மேற்சொன்னவர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். அப்படி இருந்தால்தான் படம் வணிகரீதியாக வெற்றி அடையும். இல்லையென்றால் வணிகரீதியில் நஷ்டம் அடைவதுடன், நடிகர் திலகத்திற்கும் அவப்பெயர் வந்து சேரும். என்ன செய்யலாம் என்று யோசித்தபோது பாலாஜிக்கு தோன்றிய ஐடியாதான் வெற்றிகரமாக ஓடிய பிறமொழிப் படத்தை ரீமேக் செய்வது.

    இப்படி பல parameters -ஐ அலசி ஆராய்ந்து அதற்கேற்றபடி பாலாஜி தெரிவு செய்த படம்தான் தேவ் ஆனந்த ஹீரோவாக நடித்த இந்திப் படமான Baazi . ஆனால் அது 1951-ல் வெளிவந்த படம். அதை 1967-க்கு ஏற்றவாறு மாற்றும் பொறுப்பு இயக்குனர் A .C திருலோகசந்தர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

    பார்த்தால் பசி தீரும் படத்தின் கதை ACT யின் கதை என்றாலும் அது ஏவிஎம் படமாகவே தயாரானது. அதன் பிறகும் ஏவிஎம் வளாகத்துக்குள்ளேயே இயக்குனராக வலம் வந்துக் கொண்டிருந்த ACT-யை வெளியே இழுத்துக் கொண்டு வந்தார் பாலாஜி. இந்தி Baazi யை தமிழக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்த ACT அதை நடிகர் திலகத்திடம் திரைக்கதையாக சொல்ல நடிகர் திலகம் impress ஆனார். தங்கை படம் கருக் கொண்டது. படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தது. அதே வேகத்தில் நிறைவு பெற்று வெளியானது. action mood வகையை சார்ந்த தங்கை படத்தை ரசிகர்களும் பொதுமக்களும் இரு கரம் நீட்டி வரவேற்றனர். வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும், திரையிட்ட அரங்க உரிமையாளர்களுக்கும் லாபத்தையும் தாண்டிய வசூலை வாரி வழங்கினாள் தங்கை.

    Action படங்களில் நடிகர் திலகம் நடிக்க ஆரம்பித்தது மட்டும்தானா 1967-ல் ஏற்பட்ட மாற்றம் என்று கேட்டால் அது மட்டும் இல்லை என்றே சொல்ல வேண்டும். தங்கை வருவதற்கு முன்னரே மேக்அப்பே இல்லாமல் நடித்த நெஞ்சிருக்கும் வரை படத்தை வெளியிட்டார்[ஒரு முன்னணி கதாநாயகன் ஜோடியும் இல்லாமல் மேக்கப் இல்லாமல் அதுவும் பொது தேர்தல் சமயத்தில் வெளியிடுவதற்கு அகில இந்தியாவிலேயே நமது நடிகர் திலகத்தை தவிர வேறு யாராவது இருக்கிறார்களா என்ன?].

    Action படங்களில் நடிக்க ஆரம்பித்தாலும் உணர்ச்சிப்பூர்வமான கதைகளையும் அவர் விடவில்லை. அதனால்தான் ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், அஞ்சல் பெட்டி 520, சுமதி என் சுந்தரி போன்ற நகைச்சுவை படங்களிலும், என் தம்பி, தங்க சுரங்கம், திருடன், சிவந்த மண் போன்ற Action படங்களிலும் நடிக்கும்போதும் கூட திருவருட்செல்வர், இரு மலர்கள், உயர்ந்த மனிதன், தெய்வ மகன், வியட்நாம் வீடு போன்ற அவர் மட்டுமே செய்யக்கூடிய படங்களிலும் அவர் நடித்தார்.

    இந்தப் பதிவு ஒரு நீண்ட பதிவாக போய்விட்டது. காரணம் நடிகர் திலகத்தின் திரைப்பட வாழ்க்கையில் 1967-ல் ஏற்பட்ட மாற்றம் என்பது ஒரு சில வரிகளில் சொல்லி முடிக்கக்கூடிய ஒன்றல்ல. அந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு ரசிகர்களும் பொது மக்களும் அதை ஒப்புக் கொண்டதன் பின்னில் உள்ள சமூக உளவியல் காரணங்கள் ஆழமாக உட்செல்பவை. ஆராயப்பட வேண்டியவை. அதை பற்றி பேசுகிறோம் எனும்போது பல்வேறு சமூக அரசியல் தளங்களில் நாம் சஞ்சரிக்க வேண்டியிருக்கிறது.

    உலகத்தில் வெகு சில நடிகர்களுக்கு மட்டுமே ஒரே நேரத்தில் ஸ்டார் என்ற வகையிலும் ஆக்டர் என்ற வகையிலும் அங்கீகாரங்கள் கிடைத்திருக்கின்றன. அப்படிப்பட்ட வெகு சிலரில் முதன்மையானவர் நமது நடிகர் திலகம், அந்த அங்கீகாரம் உறுதிப்படுத்தப்பட்டதும் தொடர்ந்து இறுதி வரை நிலைத்து நின்றதற்கும் காரணமான முத்திரை பதித்த ஆண்டு 1967.

    நடிகர் திலகத்தை திரையில் எப்படி பார்க்க வேண்டும் என்று ஒரு சாதாரண ரசிகன் நினைப்பானோ அது திரையில் வெளிப்பட்ட ஆண்டு 1967. இன்றைக்கும் கூட அவர் மறைந்து ஏறத்தாழ 14 ஆண்டுகள் ஆகப் போகின்ற சூழலிலும் கட்சி, அரசியல், ஆட்சி, அதிகாரம், பணப்புழக்கம் போன்ற எந்தவித லாபநோக்கங்களும் இல்லாமல் நடிகர் திலகம் என்ற மனிதனுக்காக மட்டுமே இன்றைக்கும் அவர் புகழ் பரப்பிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு அடித்தளமிட்ட ஆண்டு 1967.

    இப்படி ஒரு பதிவிற்கு வாய்ப்பளித்த ராகவேந்தர் சாருக்கும் இந்த நீண்ட நெடிய(!) பதிவை பொறுமையாக வாசித்த அனைவருக்கும் நன்றி!

    Thanks Murali.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. Thanks sivaa, Harrietlgy thanked for this post
    Likes sivaa, Harrietlgy liked this post
  6. #2223
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கோபால் சார்
    இது நீண்ட பதிவல்ல.இன்னும் நீளாதோ என்னும் எனும்படியான பதிவு.

  7. Likes Harrietlgy liked this post
  8. #2224
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வசந்த மாளிகை-1972(Completing 44 years )

    எனது அபிமான சிவாஜி-வாணிஸ்ரீ ,ஆனந்த்-லதாவாக வாழ்ந்து ,இணைந்து உலக அபிமானம் பெற்ற காவியத்தின் கவிதையை கவிதையாகவே வடிப்பேன்.மதுவின் விளைவுகளுக்கு மதுவே மருந்தாவது போல, இந்த காவிய கவிதை நம் மனதில் தைத்த மன்மத அம்புகளின் விளைவுகளுக்கு மருந்தாக ,சந்தனம் போல் கவிதை பூசி ,என் இதய கடவுளை பூசிக்க போகிறேன்.

    மதனுடன் ரதி இணையின் இன்பம் இத்தரணி க்கல்லவோ
    அதனுடன் விடுக்க பட்ட விரக பாணங்கள் வீசிய காதற்புயல்

    ஆனந்தன் தன் கண்ணான லதாவை காணு முன்பு கிண்ணத்தை ஏந்திய எண்ணங்களில்
    ஞானந்தனை முறித்து மது மாது ஆனந்தங்களில் தன்னை தொலைத்தவன்

    கெட்டு போனவனே அன்றி கெட்டவனுமல்ல கெடுத்தவனுமல்ல
    விட்டு விட்ட மனசாட்சியை தேடியலையும் தூய துணையரியா வீட்டு அனாதை

    தொட்டு பார்த்து தூசு தட்டி கலைமகள் கைபொருளை சீராட்ட வந்தாள் ஒரு வாணி
    விட்டு பட்ட வீட்டு சொந்தங்களோ தங்களுக்குள் விலங்கிட சுயநல சூழல் வளர்க்க

    குடிலில் இணைந்தாலே குதூகல இணைப்பு மாளிகையில் வசந்தமாக தரும் மயக்கமென்ன
    முடிவில் வசந்த மாளிகையில் யாருக்காக என உலகே உணர்ந்து ஊருக்கும் உணர்த்தியது

    தாயிருந்தும் செவிலி மடியில் உறங்கிய சேய் இரவல் தாயை கௌரவ கொலை கொள்ளும்
    பேயிடமிருந்து ஞாயமற்ற காயங்களில் மனதை தொலைக்க சுயம் தொலைத்தவன்

    வசந்த மாளிகை வடித்து தன்னை மீட்டியவளால் தான் தன்னை மீட்ட அதிசயம்
    கசந்த மாளிகையானதோ காயம் தரும் இங்கிதமற்ற ஒரே கேள்வியால்

    மருந்தானவளே காயம் தருகிறாள் தன் சுயம் காக்க மீட்ட வீணையின் தந்தியருக்கிறாள்
    அருமையான ஆத்மாவை மீட்க ஆட்கொண்ட தேவதையின் சிரத்தில் செய்த சத்தியம்

    மருத்துவரோ மதுவை மருந்தாக்க நாடிய மாதுவுக்கு நாடேன் மதுவை என்ற
    இருமனம் கேட்கும் வாலிப சேயை நாடாதே என சொந்தமின்றி சொல்லி விட

    திருமணம் முடிக்க செல்லும் திருமகளை தீர வாழ்த்தி நஞ்சுதனை
    விரும்பி நாடி ஓலமிடும் ஊமை காதலனின் உரத்த ஓசையின் உளமறிந்து

    அரும்பி அருகிய ஆசை அரும்பை ஆயுளுக்கும் சுவைக்க வரும் சுகத்துடன் சுபமுடிவு.

    மானிட ஜாதியை விளித்து துவங்கும் நடிப்பு தேவன்
    வானிடை உலவும் வனிதா தேவதையின் கை கோர்க்கும்

    வைபவம் காண வசந்த மாளிகைகளின் கொட்டகை வாசல்களில்
    எய்பவன் எங்கோ இருக்க எங்கள் மீதெல்லாம் மன்மத அம்புகள்

    கிண்ணத்தை ஏந்தி களிநடம் புரிபவன் விசையுறு பந்தாக
    எண்ணத்தை எல்லாம் வண்ண ஜாலமாய் வாரியிறைப்பதை

    கண்ணதாசன் பாடலுக்கு என்னத்தை சொல்ல இதய கண்ணனின்
    விண்ணதிரும் சிருங்கார ஜால வித்தை விண்ணவரும் காணா விந்தை

    கன்னியருடன் கன்னமிடும் இக்கள்வனா எல்லோரின்
    இன்னுயிரை கவ்வி சென்ற ஆலம் விழுதுகள் போல் வந்த

    ஆயிரம் உறவுகளுடன் கண்ணீர் கடலில் குளிக்க செய்தவன்
    பாயிர பாடல்களில் ஆலத்துடனே ஆடி களிக்கிறான்

    வண்ண காஞ்சனாவுடன் சிவந்து மண்ணில் ஒருநாள் கண்டு
    கன்னமிட்டவன் இந்த சின்ன காஞ்சனாவையும் கொஞ்சி சுவைக்கிறான்.

    அப்பராக அப்பர் மக்களை அதி உன்னத அமைதியால் அசத்தியவன்
    தப்பராக தோன்றி லோயர் தளத்தையும் துதி பாட துள்ளுகிறான்

    வானத்து தேவதையோ வரவேற்பறையில் வரவேற்க வாலிப வண்ணங்கள்
    கானத்தின் கணத்தில் காமுகன் கண்களுக்கு கன்னல் கரும்பாக

    வாலிப வண்ண எண்ண விடலை கனவுகளில் கடலை கடக்கும் காற்றாக
    ஜாலி பண்ண ஜோலி பார்க்கும் வெறி வேங்கையின் வெற்றிகாணா

    இந்த நேரம் இன்னும் கூடாதா என் கனவு கன்னியின் தனங்கள் தரிசனம்
    வந்த வாலிப மதனோ காக்கும் கரங்களாய் கனவை கலைக்க

    உந்தலுடன் உன்மத்தினிடம் வேண்டாமெனில் விடு விரும்பினால் தொடு
    கந்தலை மேலுடையால் போர்த்தி கன்னியை கனிய காண்பான்

    குடிமகனை களிக்க வரும் கணிகையை காம கண்களால் களித்து
    கடித்து முடிக்கும் கள்வெறியுடன் காந்த கவர் கண்களின் கவர்ச்சி

    உதைத்து தள்ளி உன்மத்தம் ஊட்டி பதைத்து எழுப்பி பஞ்சணையில்
    கதைத்து நெஞ்சணைத்து உடையென்ற திரை உடைக்கும் ஆனந்தனின் ஆனந்தம்

    வீணை மீட்டும் வாணியை வீண் பொருளாய் வாட்டிஎடுத்து வெகுண்டவன்
    இணை தேடும் இன்ப பரப்பின் பரபரப்பின் பார்வையில் கனிந்த நோக்கு

    காந்தமென்ற சொல்லுக்கு கண்ணழகன் கண்களே காணு பொருளாய் கண்டோம்
    சாந்தம் வென்ற சந்தத்தில் சாந்தியை பெற்றவன் சாந்தி பெரும் சாரம்

    பறப்பதை தடுக்க விரும்பா திருந்திய குறும்பனின் விருதா விருப்பம்
    திறப்பதை திறந்த திருமகளை தீர தீண்டுமன கரும்பனான விரும்பன்

    ஆதி மனிதன் ஆடும் நடனம் வருணனையே வானம் திறக்க செய்யும்
    பாதியில் நின்று ராசாவுடன் ராணி இணைவு காண குடிலில் மன்மத

    பாணத்துடன் பருவ தாக போக பார்வையுடன் பழத்தை சுவைக்கும்
    நாணத்துடன் நல்கி நாடும் நல்லிதயம் விளித்து கொள்ளியால் புகை நாடும்

    இளமானுடன் இளமானுடன் இதம் காணும் இளமையுடன் தனிமை
    வளமான வாலிபனுக்கு வருமோ உளம்நாடும் உள்ளத்துணிவு

    குடிலிலே இணைவு காணும் இணைக்கு இல்லம் காண மாளிகை
    மடியிலே மகிழ்ந்து கன்னத்தில் முத்தமிட்டு கள்வெறி கொள்வதும்

    கழுத்திலே முத்தமிட்டு காண்போரையல்லாம் கனவு கடலில் கவிழ்த்து
    எழுத்திலே வடிக்கவொன்னா ஏந்திழையாளுடன் மெல்லிசைவு அசைவு நடமாடி

    பிரிவு துயருக்கு பெருங்காப்பியமே படித்து துவண்டு துடித்து
    பரிவு துயர் ஊட்டி இருமனம் வேண்டிய பெருமன வேள்வி வடித்து

    யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை
    பாருக்காக இது ஊருக்காக என்று உலகே வியந்து ஊரறியா வெற்றி தந்து

    முடியா மாளிகையாய் காதல் காவியங்களுக்கு கதை மாளிகையாய்
    அடிமுடியறியா நடிப்பு சுரங்கத்தின் விடிவெள்ளி வடிவு வண்ணம்

    கண்டங்கள் கண்டு வென்ற நடிப்பினை கண்டெங்கள் இதயம்
    வண்டென நாடி நல்கும் வண்ண மலர் வாணிக்கும் வாழ்த்து சொல்லி வணங்கும்
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. Thanks sivaa, venkkiram thanked for this post
    Likes sivaa, Harrietlgy, venkkiram liked this post
  10. #2225
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by senthilvel View Post
    கோபால் சார்
    இது நீண்ட பதிவல்ல.இன்னும் நீளாதோ என்னும் எனும்படியான பதிவு.
    Same feeling, That is Gopal sir.

  11. #2226
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Advertisement





    அக்.1 - நடிகர் சிவாஜி பிறந்தநாள்

    சிவாஜி குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகியவரும், சிவாஜி புரொடக் ஷன்ஸ் நிறுனத்திற்காக, வெற்றி விழா மற்றும் மை டியர் மார்த்தாண்டம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவரும், சிவாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, சூப்பர் ஹிட்டான, ஒரு யாத்ரா மொழி என்ற மலையாள படத்தை இயக்கியவருமான நடிகர் பிரதாப் போத்தன், சிவாஜி பற்றி கூறிய சில சுவையான தகவல்கள்:
    நடிகர் சிவாஜி கணேசனை போல, சினிமாவை நேசித்தவர்கள், சினிமா கலைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர்கள் யாருமே இருக்க முடியாது.
    சிவாஜி புரொடக் ஷன்ஸ்க்காக நான் இயக்கிய முதல் படம், வெற்றி விழா; சிவாஜியின் மகன் ராம்குமார் மற்றும் நடிகர் கமல் இருவரும் தான் இப்படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்தனர். பெரிய அளவில் வெற்றி பெற்ற இப்படத்தில், அம்னீஷியா எனப்படும் ஞாபக மறதி போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார் கமல். இதில் இடம் பெற்ற, எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்!
    படத்திற்கு இசையமைத்த இளைய ராஜாவுக்கு, இசையின் வெற்றியை கவுரவிக்கும் வகையில், 'பிளாட்டினம் டிஸ்க்' வழங்கப்பட்டது. முதன் முதலாக இசையமைப்பாளருக்கு, 'பிளாட்டினம் டிஸ்க்'வழங்கப்பட்டது இப்படத்திற்கு தான். படத்தை பார்த்து, மனதார பாராட்டினார், சிவாஜி.
    அடுத்து, சிவாஜி புரொடக் ஷன்ஸ்க்கு, மை டியர் மார்த்தாண்டம் படத்தை இயக்கினேன். பிரபு, குஷ்பு இருவரும் நடித்த, மாறுபட்ட கதை அமைப்பு கொண்ட படம் இது!
    இப்படத்திற்கு, ஐந்து மணி நேரத்தில் டியூன் போட்டு, சாதனை படைத்தார், இளையராஜா. படத்தில் இடம் பெற்ற, 11 பாடல்களுமே பெரிய ஹிட். வியாபார ரீதியாக வெற்றி பெற்ற படம் இது. படத்தை பார்த்த சிவாஜி, என்னையும், பிரபுவையும் பாராட்டினார்.
    சிவாஜியை வைத்து, ஒரு யாத்ரா மொழி என்ற மலையாள படத்தை இயக்கியது, வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மாபெரும் பாக்கியம் என்றே கூற வேண்டும். சிவாஜியும், மோகன்லாலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தனர். இதில் ஒரு புதுமை என்னவென்றால், படம் முழுவதும், தமிழில் பேசுவார், சிவாஜி. மற்ற எல்லா கதாபாத்திரங்களும், மலையாளத்தில் பேசுவர். இப்படத்திற்கு கதை எழுதியவர், இயக்குனர் ப்ரியன். திரைக்கதை, வசனம் எழுதியவர், ஜான்பால்; தயாரிப்பாளர், வி.பி.கே.மேனன். இப்படத்தில், இடம் பெற்ற நான்கு பாடல்களுக்கு இசையமைத்தவர், இளையராஜா.
    ஒரு யாத்ரா மொழி படப்பிடிப்பில், என்னை, 'இயக்குனர் சார்...' என்றே, மற்றவர்கள் முன் கூப்பிடுவார் சிவாஜி; எனக்கு கூச்சமாக இருக்கும். படப்பிடிப்பு முடிந்ததும், உரிமையோடு, 'வாடா போடா...' என்று பேசுவார்; அப்போது தான், நிம்மதியாக இருக்கும்.
    சிவாஜியின் நடிப்புத் திறமை, நேரம் தவறாமை இவை இரண்டும் எல்லாருக்கும் தெரியும். ஆனாலும், அவற்றை நேரில் பார்க்கும் போது, திரில்லிங்காக இருந்தது.
    ஒருசமயம், வெளிப்புறப் படப்பிடிப்பின் போது, நாங்கள் எல்லாரும் படப்பிடிப்பு தளத்திற்கு அருகே இருந்த ஓட்டலில் தங்கினோம். சிவாஜி மட்டும் சற்று தொலைவில் இருந்த நண்பர் வீட்டில் தங்கினார். காலை, 7:00 மணிக்கு ஷூட்டிங் என்றால், மேக் - அப் போட்டு சரியாக, 6:50க்கு வந்திருப்பார். சில சமயம், நாங்கள் தாமதமாக வருவோம்.
    'அப்பா... ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்துடுறீங்க...' என்று கேட்டால், 'நீ தானே, 7:00 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிக்கணும்ன்னு சொன்னே... முதல் ஷாட்டை என்னை வைத்து எடுப்பதற்கு, 'பிளான்' செய்திருந்தால், நான் லேட்டாக வந்து உங்களை காத்திருக்க வைத்தால் நன்றாகவா இருக்கும்...' என்பார். அத்துடன், 'பிரதாப்... எனக்கு நடிக்க மட்டும் தான் தெரியும்; வேறே எதுவும் தெரியாது. நான் நடித்துக் கொடுக்கிறேன்; எது வேண்டுமோ நீ எடுத்துக்கோ...' என்பார்.
    அவரை, 'குளோசப்'பில் எடுப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். படத்தில் அவருக்கு நிறைய, 'குளோசப்' காட்சிகள் இருக்கும். அவர் மாதிரி, முகத்தில் பல்வேறு உணர்ச்சி பாவங்களை, வேறு யாராலும் காட்ட முடியாது.
    இப்படத்தில், சிவாஜிக்கு, மணல் சப்ளை செய்யும் கான்ட்ராக்டர் கதாபாத்திரம்; மோகன்லால் ஒரு ரவுடி. தன் அப்பாவை பார்த்தால், கொன்று விட துடிக்கும் கதாபாத்திரம். இவர்கள் அப்பா - மகன் என்பது அவர்களுக்கே தெரியாது. மலையாள நடிகர் திலகன் நடித்த கதாபாத்திரத்துக்கு மட்டும் தான் இந்த உண்மை தெரியும்.
    படத்தில், திலகன் - சிவாஜி இருவருக்கும் பெரிய, 'ஷாட்' இருந்தது. அந்த, 'ஷாட்' முடிந்ததும், 'யாருடா இவன்; ரொம்ப நல்லா நடிக்கிறான்...' என்று திலகனை பாராட்டினார் சிவாஜி. அவர் பாராட்டியதை கேட்டு, நெகிழ்ந்து போனார் திலகன். மலையாளத்தில் திலகன் பெரிய குணசித்திர நடிகர்.
    அடுத்து, திலகன் சொன்னது தான், சிவாஜி உட்பட அனைவரையும், ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
    'பல ஆண்டுகளாக, உங்கள் படத்தை வீட்டில் வைத்து, ஆராதித்து வருகிறேன்...' என்றார் திலகன். உடனே, அவரை கட்டித் தழுவினார், சிவாஜி.
    இப்படம் படமாக்கப்பட்ட போது, சிவாஜிக்கு இதய ஆபரேஷன் நடந்து, 'பேஸ்மேக்கர்' பொருத்தப்பட்டிருந்தது. எனவே, சிவாஜி சம்பந்தப்பட்ட காட்சிகளை, மிகவும் கவனமாக படமாக்கினேன்.
    என்ன காரணத்தினாலோ, ஒரு யாத்ரா மொழி படத் தயாரிப்பாளர்கள், இப்படத்தை விருதுக்கு அனுப்பவில்லை. அப்படி அனுப்பியிருந்தால், கண்டிப்பாக சிவாஜிக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருதோ, சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதோ கிடைத்திருக்கும்.
    என்னைப் பொறுத்தவரை, நான் விரும்பி செல்லும் சினிமா சம்பந்தப்பட்ட ஒரே வீடு, சிவாஜியின் அன்னை இல்லம் தான். பலமுறை அங்கு அவர்களது விருந்தோம்பலை அனுபவித்துள்ளேன்.
    அநேகமாக சிவாஜி நடித்திருக்கும் எல்லா முக்கிய படங்களையும் பார்த்து, ரசித்துள்ளேன். அதிலும், வியட்நாம் வீடு, எங்க மாமா, தெய்வமகன், தேவர் மகன் மற்றும் முதல் மரியாதை போன்ற படங்களை, எத்தனை முறை பார்த்திருப்பேன் என்ற கணக்கே இல்லை என்றார், பிரதாப்.

    நடிகர் திலகம் பெற்றுள்ள விருதுகள் மற்றும் கவுரவங்களில் முக்கியமானவை:
    கடந்த, 1962ல் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டதுடன், 1966ல் பத்மஸ்ரீ மற்றும் 1984ல் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்றார், சிவாஜி. மேலும், 1995ல் பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருதும், 1997ல் திரைப்படத்திற்கு ஆற்றிய அளப்பெரிய சேவைக்காக, மத்திய அரசின், தாதா பால்கே சாஹிப் விருதும் பெற்றார்.
    கடந்த, 1972ல் வெளியான, ஞானஒளி, 1973ல் வெளியான, கவுரவம் மற்றும் 1985ல் வெளியான, முதல் மரியாதை போன்ற படங்களுக்காக, சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதுகள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது, பிரபல மும்பை பத்திரிகை.
    கடந்த, 1986ல், சிவாஜிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மேலும், மஹாராஷ்டிரா மாநில அரசு, சிவாஜி பெயரில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கி வருகிறது.
    சிவாஜி, மூன்று வேடங்களில் நடித்த, தெய்வமகன் திரைப்படம் ஆஸ்கர் விருது போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில், 2006ல் சிவாஜிக்கு சிலை நிறுவப்பட்டது. அங்கு சிலை நிறுவப்பெற்ற ஒரே நடிகர், சிவாஜி கணேசன்!
    பிரதாப் வீட்டிலிருந்து, அவருக்காக ஸ்பெஷலாக தயாரித்து அனுப்பிய வாத்துக்கறி, மீன் குழம்பு போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார், சிவாஜி. அதே போன்று, பிரதாப் வீட்டு எலுமிச்சை ஊறுகாய் சிவாஜியின் மனைவி கமலா அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும்.

    எஸ். ரஜத்
    dinamalar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. Likes Harrietlgy liked this post
  13. #2227
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  14. Likes Harrietlgy liked this post
  15. #2228
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    (முகநூலில் இருந்து)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  16. Likes Harrietlgy liked this post
  17. #2229
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  18. Likes Harrietlgy liked this post
  19. #2230
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  20. Likes Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •