Page 187 of 400 FirstFirst ... 87137177185186187188189197237287 ... LastLast
Results 1,861 to 1,870 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #1861
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எனக்கு பள்ளி வயதில் ஸ்ரீதர் என்றொரு நண்பன் . கலையில் நாட்டம் கொண்டவன். நாங்கள் நெய்வேலி நூலகத்தில் தேடி தேடி புத்தகம் படிப்போம்.முக்கியமாக சரித்திரம். என்னை வசீகரித்த தலைவர்களுள் ஒருவர் ஹிட்லர். முரணான பல விஷயங்கள். ஆனாலும் கடைசி சில நாட்கள் பல திருப்பு முனைகள் கொண்டது. ஹிட்லரின் கடைசி சில நாட்கள் என்று நான் ஒரு திரை குறிப்பு தயாரித்தேன்.சொன்னால் நம்ப மாட்டீர்கள் மொத்தம் 32 காட்சிகள். 32 பக்கங்களே திரைக்கதை. நம் நடிகர்திலகத்தை வைத்து எடுக்கும் ஆசை. எனக்கு வயது 14.(நிறைய திரைக்கதை பண்ணியுள்ளேன். எல்லாம் சிவாஜிக்கே)

    ஹிட்லரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தவர் கோயபெல்ஸ்.
    அவரின் மிக முக்கியமான ஒரு பொன்மொழி அப்போது தமிழகத்தில் அற்புதமாக நடைமுறையில் இருந்தது.

    ஒரு பொய்யை சொல்லுங்கள். அதையே திரும்ப திரும்ப சொல்லுங்கள். மக்கள் அதனை உண்மை என்று ஏற்பதுடன் , பின்னால் நீங்களே உண்மையை கூறினாலும் அதனை உண்மை என்று நம்ப மாட்டார்கள்.

    இப்போது ஸ்ரீதர் எங்கேயோ?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Likes Georgeqlj, vasudevan31355, Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1862
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like

    'என் ஆசை என்னோடு' (திருடன்)

    ஒரு அருமையான பாடல். நல்ல சிச்சுவேஷனும் கூட. ஆனால் நல்ல நடிகை இருந்தும் அவரின் அன்றைய உருவத்தால், அவருக்கு பொருத்தமில்லா நடனத்தால் இப்பாடல் உரிய பலனை அடையாமல் போனது. சுசீலா அம்மாவின் அற்புதமான பாடலின் சூழலை உணர்ந்த குரல் பாவங்கள். அதற்கேற்ற அந்த பாத்திரத்தின் மேல் பார்ப்பவர்கள் கருணையோடு பரிதாபப்பட்டு நெகிழச் செய்யும் மன்னரின் துள்ளாட்டத்தோடு கூடிய உருக வைக்கும் இசை.



    திருடனான கணவன் திருந்தி வாழும் போது வறுமைக்கு உள்ளாகிறான். மனைவியும், குழந்தையும் உணவு கூட இன்றி வாழ வேண்டிய சூழ்நிலை. நல்லவனாய் மாறினாலும் திருடன் என்ற முத்திரை மாறாததால் சமூகம் அவனுக்கு வேலை தர மறுக்கிறது. பாலின்றித் தவிக்கும் தன் குழந்தையின் நிலைமை கண்டு அவன் துடிக்கிறான். தவிக்கிறான். மனைவி அவனை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவன் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் படுக்கையில் விழுகிறான். அரண்டு பிதற்றுகிறான். அவன் உடல்நிலை மோசமாகிறது. படுக்கையில் படுத்தபடியே 'யாராவது வேலை கொடுங்களேன்' என்று அரற்றுகிறான். அவனை படுக்கையில் கண்ட்ரோல் செய்ய முடியாமல் மனைவி அவனை கட்டிலுடன் சேர்த்து சேலையால் கட்டிப் போடுகிறாள் அழுதபடியே. ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வர, டாக்டர் மருந்து எழுதித் தந்து சத்துள்ள ஆகாரமாக அவனுக்குத் தரச் சொல்லி செல்ல, மனைவி செய்வதறியாது நிற்கிறாள் வறுமையின் கொடுமையை நினைத்தபடியே.

    இப்போது அவள் ஒரு முடிவெடுக்கிறாள். ஹோட்டலில் நடனமாடி, வருவாய் ஈட்ட முடிவு செய்து, அட்வான்ஸும் வாங்கி கணவனுக்கு மருந்துகள் வாங்கி வருகிறாள். கணவன் இவையெல்லாம் 'எப்படி வாங்கினாய்?' என்று வினவ, தான் வேலைக்குப் போவதாகக் கூறுகிறாள். கணவன் அதை எண்ணி துயரமடைகிறான். அவள் கணவனிடம் வேலைக்குப் போவதாகத் சொன்னாளே ஒழிய, தான் ஹோட்டலில் நடனமாடிச் சம்பாதிப்பதாகச் சொல்லவில்லை.

    இப்போது அவள் ஹோட்டலில் நடனமாடச் செல்ல, வீட்டில் தனியே இருக்கும் கணவனிடம் வருகிறான் அவனுடைய பழைய பாஸ். அவனை மறுபடி திருட்டுத் தொழிலுக்கு வரச் சொல்லி வற்புறுத்துகிறான். ஆனால் திருந்தியவனோ தீர்மானமாக அதற்கு மறுக்க, அவனுடைய கொள்ளையர் தலைவன் அவன் மனைவி ஹோட்டலில் பல பேர் அறிய மானத்தை விட்டு நடனமாடி சம்பாதிப்பதை விட திருடுவது எவ்வளவோ மேல் என்று அவன் மனைவி நாட்டியமாடுவதை அவனிடம் போட்டு உடைக்க, அதைக் கேட்டு அதிர்ந்து, உறைந்து போகிறான் கணவன். கோபம் தலைக்கேற தான் பாஸுடன் ஹோட்ட்டலுக்கு புறப்படுகிறான்.

    அங்கே கணவனுக்காக தன் மானத்தையே விட்டு நடனமாடுகிறாள் அவன் மனைவி.


    திருந்திய திருடனான கணவன் வேடத்தில் நடிகர் திலகம். கேட்கவே வேண்டாம். மனைவி ரோலுக்கு கே.ஆர்.விஜயாதான். கொள்ளைக்கார பாஸ் பாலாஜி.

    ஹோட்டலில் நடனமாடும் ரோல் சற்றும் பொருந்தா விஜயா. உடல் பருமன் உடன் பயமுறுத்துகிறது. மரியாதைக்குரிய நாயகி என்று பெயர் எடுத்தது விட்டதால் உடல் முழுதும் மறைத்த கோபிகாஸ்திரி கவர்ச்சி டிரெஸ் விஜாவிற்கு சூட் ஆகவில்லை. இந்த மாதிரி நடனமும் அவ்வளவாக அவருக்குப் பழக்கமில்லை.


    என் ஆசை என்னோடு
    சலங்கை தரும் ஓசை உன்னோடு
    உலகமே ஆடும் பெண்ணோடு
    மயக்கந்தான் ஹா ஹா ஹா மயக்கந்தான்
    ஓஹோஹோ
    அஹா அஹா அஹாஹா
    அஹா அஹாஹா

    (என் ஆசை என்னோடு)

    கூட்டத்தில் விளையாடப் புதிதானவள்
    கோலத்தின் அலங்காரம் பழகாதவள்
    பாட்டுக்கு நடை போட்டு அறியாதவள்
    பாவத்தை பிறர் காண சகியாதவள்
    ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
    ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு

    கேட்டால்

    உலகமே ஆடும் பெண்ணோடு
    மயக்கந்தான் ஹா மயக்கந்தான்
    ஓ மயக்கந்தான்

    (என் ஆசை என்னோடு)

    மதுக் குடத்தினில் நனைத்தெடுத்தது எந்தன் உடலல்ல
    வடித்த பொன்னென அணைக்க வந்தவள் நானல்ல நானல்ல
    மணமுள்ள மலர் காண கொடியானவள்
    வாழ்கின்ற துணைக்காக கனியானவள்
    வழி கண்டு சபை தேடி சிலையானவள்
    மானத்தின் நிழலோடு கலையானவள்
    ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
    ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு

    கேட்டால்

    உலகமே ஆடும் பெண்ணோடு
    மயக்கந்தான் ஹா மயக்கந்தான் ஓ மயக்கந்தான்
    (என் ஆசை என்னோடு)

    'புன்னகை அரசி'யை புறந்தள்ளிவிட்டு பாடலை முழுவதும் ஆக்கிரமிப்பது இசையரசியே. பாடலின் முழு அர்த்தத்தையும் உணர்ந்து அதை நம் உள்ளங்களில் உணர்வோடு உணர்த்தும் வித்தையில் கைதேர்ந்த குரல்காரி இந்த பார் போற்றும் பாடகி. நடிகையின் முக பாவங்களையும், உடல் பாவங்களையும் ஒரே ஒரு குரல் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது.

    'ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
    ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு'

    என்று வரிகள் முடித்து

    'கேட்டால்'

    என்று ஒரு வார்த்தை கேட்டு, சிறிது நிறுத்தி,

    'உலகமே ஆடும் பெண்ணோடு
    மயக்கந்தான் ஹா மயக்கந்தான்
    ஓ மயக்கந்தான்'

    என்று தபேலா வாத்தியங்களுக்கிடையே சுசீலா பாடும் இந்தப் பாடல் என்னுள் ஆழப் புதைந்தது. 'நடிப்புத் திருடன்' என்ற பிரளய சுனாமியால் இந்த பாடல் காணாமல் மறக்கடிக்கப்பட்டு விட்டது என்பதும் ஒரு புறம் உண்மையே. இருந்தாலும் மதுர கானங்கள் இதையெல்லாம் வெளிக்கொணரத்தானே உருவாக்கப்பட்டது?

    கதையறிந்து, காட்சியறிந்து காவிய வரிகள் படைக்க கண்ணதாசனை விட்டால் யார்? விரசம் எதிர்பார்க்கும் பத்து ஆண்களுக்கு மத்தியில் பத்தினி ஒருத்தி தன் மானத்தையும் காத்துக் கொண்டு, அதே சமயம் நாட்டியமும் ஆட வேண்டிய கட்டாய நிர்ப்பந்தத்தில் காலத்தின் கோலத்தை நினைத்து தன் நிலையை எண்ணிப் பாடும் வரிகள் அருமை. 'அனைத்தும் பெண்ணே' என்பதை 'உலகமே ஆடும் பெண்ணோடு' என்ற ஒரே வரியில் கலக்கிய இவனல்லவோ கவி!

    மனைவியை ஹோட்டலில் நடனமாடும் கோலத்தில் பார்த்துவிட்டு அவளைத் 'தரதர'வென வீட்டுக்கு இழுத்து வந்து, ஒரு வார்த்தை கூட பேசாமல் தான் மறுபடி கத்தி, துப்பாக்கி எடுத்து திருட்டுத் தொழிலுக்குப் போவதை பலவேறு முகபாவ உணர்ச்சிகளால் நமக்கும் அவளுக்கும் உணர்த்தும் நடிகர் திலகத்தின் பேராற்றல் நடிப்பு எப்பேற்பட்டதையும் மறக்கடிக்கச் செய்யும் மாயா ஜால வித்தை. அதை வெல்ல எவரால் முடியும்?


    ராகவேந்திரன் சார்,

    உங்களுக்காகவே இந்தக் காட்சியையும் சேர்த்து பாடலுடன் இணைத்துள்ளேன். மூலவர் இல்லாமலா?

    ('Youtube'-ல் ஏற்கனவே அப்லோட் செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. எனவே இன்று நான் அப்லோட் செய்தது)


    Last edited by vasudevan31355; 18th July 2016 at 12:44 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Thanks Russellmai, RAGHAVENDRA thanked for this post
  6. #1863
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Malaimalar



    Arasiyal Post
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #1864
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Nakkeeran - 17 July 2016


    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  8. #1865
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்



    திருடன் நம் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளையடித்தவன். ஸ்டைல் என்ற வார்த்தைக்கு இன்னுமோர் பரிமாணத்தைக் கொடுத்தவர் தலைவர் இப்படத்தில். செய்யும் தொழில் சமூக விரோதமாக இருந்தாலும் அதனை கட்டாயத்தின் அடிப்படையில் மேற்கொள்பவனின் உள்மனதில் எத்தகைய போராட்டங்களெல்லாம் வெடிக்கும் என்பதை உன்னதமாக சித்தரித்தார் தலைவர். இந்தத் தொழிலே வேண்டாம் என்று ஒதுங்கி செல்பவரை சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அதற்குள்ளேயே நுழைக்கும் கட்டங்களில் மனம் எப்படியெல்லாம் துடிக்கும் என்பதை காட்சி யாக அற்புதமாக வடித்தவர் தலைவர். என்னைப் பொறுத்தவரையில் இப்படத்தில் மேலே தாங்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் பாடலும், அதைத் தொடர்ந்து அந்த சூதாட்ட விடுதியில் மீண்டும் இவரை வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்ட பாடலும் முதலிடம் பெறும். அதிலும் நினைத்தபடி நடந்ததடி வராதவன் வந்து விட்டான் என்று சூழ்நிலைக்கேற்ற பாடல் வரிகளோடு அமைந்த பாடலில் வெள்ளுடை வேந்தராக மிகவும் ஸ்லிம்மாக சுமார் 20 அல்லது 25 வயதுக்கு மேல் மதிப்பிட முடியாத இளமைத் தோற்றத்தில் தலைவரின் ஒய்யாரமான நடன அசைவுகளும் நடையழகும் நம் உள்ளத்தைக் கபளீகரம் செய்து விடும்.

    மறக்க முடியாத திருடன் பாடலோடு மறக்க முடியாத நாளாக இன்றை ஆக்கி விட்டீர்கள். இனியென்ன நினைத்தபடி நடந்து விடும். இந்த இரண்டு பாட்டும் இன்று முழுதும் ஆக்கிரமிக்கும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Thanks vasudevan31355, Russellmai thanked for this post
    Likes Georgeqlj, vasudevan31355, Russellmai liked this post
  10. #1866
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Nadigar Thilagam Film Appreciation Association (NTFAnS) Next Programme.



    Last edited by RAGHAVENDRA; 18th July 2016 at 04:26 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1867
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சி கெய்ட்டி திரை அரங்கில் வரும் சனிக்கிழமை அதாவது 23 ஆம் தேதி முதல் உலக திரை உலகினரால் முடிசூட்டப்பட்ட நிரந்தர சாம்ராட், நடிக்க வந்த 23 ஆவது ஆண்டிலேயே 175 ஆவது காவியம் கண்ட திரை உலகின் சக்ரவர்த்தி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய மாபெரும் வெற்றிப்படைப்பு அவன் தான் மனிதன் திரையிடப்படுகிறது !



    அவன்தான் மனிதன் திரைப்படத்தின் அந்த கால வசூல் மற்றும் ஓடிய நாட்களின் விளம்பர ஆவணங்கள் இருப்பின் அதனை தயவு செய்து இங்கு நண்பர்கள் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன் !

    RKS

  12. Thanks vasudevan31355 thanked for this post
  13. #1868
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஹிட்லர் கடைசி நாட்கள் பற்றி வாசு விவரம் கேட்டான்.நான் எழுதிய திரைக்கதை கரையானால் பறி போனது. (நெய்வேலியில்)

    ஆனால் நினைவில் உள்ளது ,கடைசி 30 நாட்கள்,அதில் அடங்கும்.அது படமாகி இருந்தால் சிவாஜிக்கு oscar நிச்சயம். பாடல்கள் கிடையாது.
    32 பக்கங்களில், மற்றோர் பேசும் வசனங்கள் 24 பக்கங்கள் . 8 பக்க வசனம் நடிகர்திலகத்துக்கு. அதிக பட்சம் 5 வாக்கியங்கள் தான் தொடர் வசனம்.மிச்சம் ஓரிரு வாக்யங்களே.

    முதலில் ஹிட்லரின் முழு ஆளுமை. - தேச பக்தன், அஞ்சாநெஞ்சன், தான் நினைத்ததை சாதிப்பவன்,திட்டமிடுபவன்,கம்பீரன் ,பேச்சாளி,ஆளுமை மிகுந்தவன். ஆனால் hysteria நோய் ,வயிற்று கோளாறு,கொலை வெறி,personality disorder இவற்றால் அவதி. சைவன், நாய்களின் மீது பிரியம், பெண்களின் மீது நாட்டமின்மை,ஆனால் இனவொழிப்பில் ஈடு பட்டவன்.

    ஆனால் கடைசி சில நாட்கள்.

    ஹிட்லரின் ஆளுமை படி படியாய் சிதையும். மற்றோர் ஆலோசனை கேளாமல் ,தப்பிக்க எண்ணாமல் கடைசி வரை நம்பிக்கை விதைப்பான். ஆனால் சோர்வு,நம்பிக்கை குலைவு சிறிதே தெரியும். கடைசி நிமிடங்களில் ரகசியமாய் உடைந்து அழுதுள்ளான் .வெளியே காட்டாமல். கடைசி நிமிடங்கள் ஈவா பிரவுன் திருமணம். பிறகு தற்கொலை . என்று உணர்ச்சிகளை அள்ளி தெறிக்கும் படிப் படி நிலை. நடிகர்திலகத்தை தவிர யாருமே செய்திருக்க முடியாது.
    அப்போதைய உடல்வாகு ஒத்துழைத்திருக்கும்.

    என்ன செய்வது ,அப்போது எனக்கு வயது 14. வாசனும் மறைந்திருந்தார்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Georgeqlj, Harrietlgy, vasudevan31355 liked this post
  15. #1869
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    அவன்தான் மனிதன் திரைப்படத்தின் அந்த கால வசூல் மற்றும் ஓடிய நாட்களின் விளம்பர ஆவணங்கள் இருப்பின் அதனை தயவு செய்து இங்கு நண்பர்கள் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன் !

    RKS



    100 தொடர்ந்து கொட்டகை நிறைந்த காட்சிகள்



    "அவன் தான் மனிதன்" 100 நாட்களைக் கடந்த அரங்குகள்:

    1. சென்னை - சாந்தி

    2. சென்னை - கிரௌன்

    3. சென்னை - புவனேஸ்வரி

    4. மதுரை - சென்ட்ரல்

    5. சேலம் - நியூசினிமா

    6. திருச்சி - ராஜா

    7. யாழ்ப்பாணம் - லிடோ

    மேலும், சேலம் மாநகர திரைப்பட வரலாற்றில், ஒரே சமயத்தில் இரு அரங்குகளில் வெளியான படங்களில், ஒன்றில் 107 நாட்களும் [நியூசினிமா], மற்றொன்றில் 35 நாட்களும் [பேலஸ்] ஓடிய முதல் திரைப்படம் "அவன் தான் மனிதன்".

    கோவை 'கீதாலயா'வில் 85 நாட்கள் ஓடி வசூல் மழை பொழிந்தது. மேலும் பற்பல ஊர்களிலும் 50 நாட்களைக் கடந்து பெருவெற்றி பெற்றது.

    அயல்நாடான இலங்கையில், கொழும்பு 'கிங்ஸ்லி' திரையரங்கில் 82 நாட்களும், யாழ்ப்பாணம் 'லிடோ' திரையரங்கில் 122 நாட்களும் ஓடி இமாலய வெற்றி அடைந்தது.

    சென்னை மாநகரின் சாந்தி(100), கிரௌன்(100), புவனேஸ்வரி(100) ஆகிய மூன்று திரையரங்குகளின், 300 நாள் மொத்த வசூல் ரூ.13,29,727-37பை.

    1970களில் ஒரு படம், முதல் வெளியீட்டில், மொத்த வசூலாக அரை கோடியை [ரூ.50,00,000/-] ஈட்டினாலே 'சூப்பர்ஹிட்' அந்தஸ்தைப் பெற்று விடும். "அவன் தான் மனிதன்" முதல் வெளியீட்டில் மொத்த வசூலாக ரூ.55,00,000/-த்தை [ரூபாய் ஐம்பத்து ஐந்து லட்சங்களை] அளித்தது. அன்றைய சில லட்சங்கள் இன்றைக்கு பல கோடிகளுக்குச் சமம்.

    "அவன் தான் மனிதன்" முதல் வெளியீட்டில் உண்டாக்கிய பாக்ஸ்-ஆபீஸ் பிரளயத்தின் முழு விவரத்தை, நமது திரியின் 8வது பாகத்தில் தனியொரு சிறப்புப் பதிவாகவே தருகிறேன்.

    மேலும், மறுவெளியீடுகளாகவும், சிங்காரச் சென்னையில் "அவன் தான் மனிதன்" கணிசமான அளவுக்கு திரையிடப்பட்டுள்ளது. 1988-ல் சென்னையின் பல அரங்குகளை ரெகுலர் காட்சிகளில் அலங்கரித்த காவியம் "அவன் தான் மனிதன்". 1989 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்குப் பின் மீண்டும் சென்னையில் வெளியான இக்காவியம் பல அரங்குகளில் House-Full காட்சிகளாக அமோக வரவேற்பு பெற்றது. 'எவ்வளவு தான் உடைஞ்சாலும் ராஜா ராஜா தான்' டயலாக்கிற்கெல்லாம் அரங்குகளின் கூரைகள் பிய்த்துக் கொள்ளும். பின்னர் 1993-ம் ஆண்டிலும், 1997-ம் ஆண்டிலும் கூட சென்னையில் ரவிகுமார் வெற்றி உலா வந்திருக்கிறார். மதுரை ரசிகர்கள் எப்போதும் எதிர்பார்க்கும் படம் இதுதான். மதுரையில் பல முறை மறுவெளியீடுகளில் சக்கை போடு போட்டிருக்கிறது. ஏனைய ஊர்களிலும் ரவிகுமார் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஹீரோ தான்!

    அன்புடன்,
    பம்மலார்.


    இலங்கையில் 17 ..09 ..1976 ல் திரையிடப்பட்டது

    அவன்தான் மனிதன்

    கொழும்பு...............கிங்ஸ்லி....83..நாட்கள ்

    கொழும்பு..............கல்பனா......51..நாட்கள்

    யாழ்நகர்...............லிடோ.........122..நாட் கள்



    யாழ்நகர்......லிடோவில்...105 தொடர் house full காட்சிகள்




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  16. Thanks Russellmai, Harrietlgy thanked for this post
  17. #1870
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    19.07.2016 தேதியிட்ட இன்றைய தினத்தந்தி நாளிதழிலிருந்து...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  18. Thanks Harrietlgy, vasudevan31355 thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •