Page 271 of 400 FirstFirst ... 171221261269270271272273281321371 ... LastLast
Results 2,701 to 2,710 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2701
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Murali Sir
    Super
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2702
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like






    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. Thanks adiram thanked for this post
    Likes sivaa, Harrietlgy, adiram liked this post
  5. #2703
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்,

    நான் அனுப்பிய புகைப்படங்களை மிக அழகாக தரவேற்றிய தங்களுக்கு கோடானு கோடி நன்றி. அன்று இரவே ஊருக்கு கிளம்ப வேண்டிய சூழல் ஆதலால் என்னால் முழுமையாக இருக்க முடியவில்லை. இறுதி வரை இருந்து புகைப்படம் எடுத்து அதை பகிர்ந்துக் கொண்ட நண்பர் ஜெய்குமாருக்கு நன்றி,

    அன்புடன்

  6. #2704
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    சென்ற வாரம் மதுரை சென்றிருந்தேன். கட்டபொம்மன் திரையிடப்பட்டிருந்த சென்ட்ரல் சினிமாவிற்கு ஞாயிறு மாலை சென்ற போது ரசிகர்கள் வழக்கம் போல் ஆர்பாட்டத்துடன் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். .
    இப்படி மொழி தெரியாத, நம்முடைய வரலாற்றை முழுவதுமாக அறியாத வெளிநாட்டினரைக் கூட தன் ஒப்புயர்வற்ற நடிப்பினால் கட்டிப் போட நமது நடிகர் திலகம் இருந்ததால்தான் நம்மால் இன்றும் மார் தட்டிப் பேச முடிகிறது.
    நன்றி முரளி சார்.
    நடிகர்திலகம் காலம் கடந்த கலைஞர் என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. Likes Harrietlgy liked this post
  8. #2705
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    நடிகர்திலகம் சிவாஜி ரசிகர்களாக, முகநூல் மற்றும் WhatsApp இல் தொடர்பவர்கள் ஒன்றிணைந்து, நடிகர்திலகம் சிவாஜி - நண்பர்கள் குழு என்ற பெயரில் அமைப்பாக உருவாக்கப்பட்டு, கடந்த மாதம் இந்தக் குழுவின் முதல் கூட்டம் சென்னை பல்லாவரத்திலுள்ள ஓட்டல் ஒன்றில் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 100 நண்பர்கள் கலந்துகொண்ட இந்த சந்திப்பு நிகழ்வின் சில புகைப்படங்கள்



    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. Likes sivaa, Harrietlgy liked this post
  10. #2706
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி பாட்டு - 35
    ---------------------------------

    வீணை இசை என்ன இத்தனை இனிக்கிறது
    என்று விசாரித்தால், வீணை பலா மரத்தில்தான்
    செய்யப்படுகிறதாமே?

    அதுவும் "வாணி"யே மீட்டினால்.. இனிமைக்கா
    பஞ்சம்?
    *****

    மிதமிஞ்சிய ஒப்பனை அழகு. கற்பழிக்க விரட்டும்
    தடியர்களிடமிருந்து காப்பாற்றும் கதாநாயகனின் மீது காதல். நாலு ஜோடிப் பாட்டு. நடிப்பதற்கே
    வாய்ப்பில்லாத காட்சிகள்... இப்படியான கதாநாயகி நடிகர் திலகத்தின் படங்களில் காணக்
    கிடைக்க மாட்டாள்.

    நவராத்திரியில், பாசமலரில் - நடிகையர் திலகம்,

    நெஞ்சிருக்கும் வரை, இரு மலர்களில் - புன்னகை
    அரசி,

    பாலும் பழமும், ஆலயமணியில் - அபிநய சரஸ்வதி,

    அவன்தான் மனிதன், எங்கிருந்தோ வந்தாளில் -
    கலைச் செல்வி,

    வசந்த மாளிகையில், சிவகாமியின் செல்வனில் -
    வாணிஸ்ரீ...

    சராசரி நாயகிகளில்லை.. சாதித்த நாயகிகள்.

    நடிப்பென்பதின் மனித உருவமாய்த் திகழ்ந்த
    எங்கள் நடிகர் திலகத்தின் நேர் நின்று, பேர் வென்று சாதித்த நாயகிகள்.
    *****

    " ல(த்)தா"-

    மறக்க முடியாத பெயர்.

    கதவிடுக்கில் சிக்கிய பல்லியாய் அன்றாடங்களின் பிடியில் சிக்கி அல்லலுறும்
    மனிதர்களுக்கு சினிமாக் கொட்டகைகள் ஆறுதல் தளமாகின்றன.

    எல்லோருக்குமே சினிமா என்பது பொழுதுபோக்கில்லை. தன்னை, தன் கஷ்ட நஷ்டங்களை திரையும் உலவும் பிம்பத்தோடு
    பொருத்திப் பார்த்துக் கொண்டு, ஒப்பிட்டுக் கொண்டு சந்தோஷிக்கவோ, வருந்தவோ செய்யும்
    சாதாரணர்களுக்கு சினிமா ஒரு திருத்தலம்.

    வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகி் போல்
    அலங்காரப் பதுமையாக மட்டும் வளைய வராமல், நடுத்தரக் குடும்பங்களில் திடீர் திடீரெனச் சூழும் இருளை விரட்டும் சுள்ளென்ற சூரியப் பெண் ல(த்)தாவை தமிழ் மக்கள் வசந்த மாளிகையில் கதாநாயகியாகப் பார்த்தார்கள்.

    ஒரு அடிமைத் தனம் கிடையாது. பிறையில் ஏற்றி
    வைத்த தீபமாட்டம் அழகில் அலப்பல் கிடையாது.
    காசென்றால் வாய் பிளக்கும் கேவலம் கிடையாது.
    எந்தவொரு சூழலிலும் தன் கம்பீத்தை சிறிதும் இழக்காத கதாநாயகி, தமிழ்த் திரைகள் பழகாத புதுசு.

    அன்புக்கு சந்தனமாய் குழைவதும், அதிகாரத்தை
    திராவகமாய் பொசுக்குவதுமாய் ஒரு குணம்.

    தன்மானத்தைச் சீண்டிப் பார்க்கிறவன் காதலனே ஆனாலும், அவனே தனக்கு சம்பளம் கொடுக்கிற முதலாளியாய் இருந்தாலும், துணிந்து நெற்றிக் கண் திறக்கிற ல(த்)தா என்கிற கதாநாயகியை, நான் வசந்த மாளிகையை முதன் முதலாகப்
    பார்த்த அந்தச் சின்ன வயசிலேயே பிடித்துப் போனது.

    "ல(த்)தா"-

    மறக்க முடியாத பெயர்.

    ( தலைவர், "லத்தா" என்று அழைத்து அழகாக்கிய
    பிறகு "லதா" வாவது..? "லத்தா" தான்! )
    *****

    அந்தக் கால இரவுகளில் என்னோடு அதிக நேரம் வசித்த வானொலிப் பெட்டியிலிருந்து "அடுத்ததாக வசந்த மாளிகை படத்திலிருந்து ஒரு பாடல்" என்று குரல் வந்தால், எம். ஆர். ஆர். வாசு அறைக்குள் நுழைந்து உருட்டிய சத்தம் கேட்டு, கண் தெரியாத தவப்புதல்வன் நிர்மல் காதோடு
    கை குவித்து கவனமாதல் போல நானும் ஆவலோடு காது தீட்டிக் காத்திருப்பது... இந்தப்
    பாடலுக்காகத்தான்.

    நன்றிகளுக்குரிய கவியரசர் நடிகர் திலகத்தை
    வீணையாக உருவகப்படுத்திய போதே பாடல்
    ஜெயித்து விட்டது.

    "கலைமகள் கைப்பொருள்" கலைமகளின் மடிமீது
    கிடக்கிறது.. குழந்தை போல. மடி கிடத்திப் பார்த்த
    கலையன்னைக்குத் தன் திறமை நாதத்தால் பெருமை சேர்த்த குழந்தைதானே நம் நடிகர் திலகம்?

    "கவனிக்க ஆளில்லையோ"...

    கவனிப்பு - அன்பு மிகுந்த அக்கறை.

    சரியான விரல்களால் மீட்டப்படாத அற்புதமாய்
    நாயகன். நாதம் நிரம்பிய வாத்தியம் நல்லிசை
    தாராமல் வீணாகிறதே என்கிற நாயகியின் கவலை, பாடலாகியிருக்கிறது.

    கவலை எவ்வளவு இனிமை கேளுங்கள் என்கிறார்
    திரை இசைத் திலகம்.

    நாயகன் குறித்த நாயகியின் கவலையை மூன்று
    பகுதிகளாகப் பிரிக்கிறார்கள் .. கவியரசரும், திரை இசைத் திலகமும்.

    "உன்னிடம் ஆயிரம் ராகங்களே - என்றும்
    உனக்குள் ஆயிரம் கீதங்களே..
    இசையறிந்தோர்கள் மீட்டுங்களேன் - இல்லை
    எனக்கேனும் வழிகாட்டுங்களேன்!?"

    - அக்கறை. காதல் மிகுதியில் கசியும் கரிசனம்.
    கெட்டழியும் காதலனை நல்வழிப்படுத்த வேண்டும்
    என்கிற துடிப்பு. தானே அந்த நல்ல காரியத்தைச்
    செய்ய வேண்டுமென்பதுதான் நினைப்பு. இசையறிந்தோர்கள் மீட்டுங்களேன் என்பதெல்லாம் சும்மா நடிப்பு.

    "நான் யார் உன்னை மீட்ட?
    வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழிகாட்ட?
    ஏனோ துடிக்கின்றேன்..
    அதன் இனம் புரியாமல் தவிக்கின்றேன்..!"

    - சுய பரிசீலனை. காதலனை நல்வழிப்படுத்தும்
    யோக்கியதை தனக்கிருக்கிறதா என்று தனக்குத்
    தானே கேட்டுக் கொள்ளும் கேள்வி. தனது தவிப்பையே தன் கேள்விக்குப் பதிலாகத் தரும்
    பரிதாபம்.

    "சொர்க்கமும், நரகமும் நம் வசமே.
    நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே.
    சத்தியம், தர்மங்கள் நிலைக்கட்டுமே.
    இது, தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே."

    - ஏக்கத்தையும், கவலையையும் அறிவுரையாக மாறும் உரிமை. தன் நேசத்திற்குரியவன் மேல்
    தான் கொண்ட அன்பெல்லாம் திரட்டி தாயாகி
    நிற்கிற பெருமை.
    *****

    சுசீலாம்மா ஆயிரம், ஆயிரம் என்று பாடும் போது
    அந்த "ரம்", உள்ளே சிவப்பு பரவிய அறையில்
    தலைவர் ஊற்றி, ஊற்றிக் குடிக்கும் மதுவை விட
    போதை.
    *****

    சிவப்பு வெல்வெட் விரித்த மாடிப் படிகளில் ஊன்றி, ஊன்றி நடந்து வரும் அழகை வி்டுங்கள்..

    வெளிர் நீல உடையணிந்த மெழுகுச் சிலை போல
    நிற்கும் அழகை விடுங்கள்..

    "இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே" என்று
    வாணிஸ்ரீ பாட, உதடு சுழித்துச் சிரிக்கிற அழகை
    விடுங்கள்..

    "ஏனோ.. துடிக்கின்றேன்" என்று அழுது பாடும்
    பெண் குரல் கேட்டதும், நின்று நிமிர்ந்து திரும்பிப்
    பார்க்கும் ஒரு பார்வை போதாதா.. எங்கள் தலைவனை நினைத்து, நினைத்து நாங்கள்
    கொண்டாட..!?



    Sent from my P01Y using Tapatalk

  11. Likes sivaa, Harrietlgy liked this post
  12. #2707
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி.. ஆதிராம் சார்.. "வெள்ளிக் கிண்ணம்"
    பதிவுக்கான பாராட்டுக்காக.

    அந்த எனது நாற்காலிக் கற்பனையைத் தாங்கள்
    பாராட்டியது பார்த்து மனம் மகிழ்ந்து குதித்தாலும்,
    தங்களின் பாராட்டுப் பதிவின் கடைசி இரண்டு
    அடிகளில் அந்த நாற்காலி குறித்து நீங்கள் எழுதியிருந்தீர்களே.. அந்த மாதிரியான துணிச்சலான எழுத்துகள் எனக்கு எப்போ கை வருமோ என்று ஒரு ஓரத்தில் கவலைப்படவும் செய்கிறது.
    *****

    கோபால் சார்...

    நீங்கள் எழுதினால் "எத்தனை அழகு", இன்னும்
    எத்தனை அழகு? ரசித்தேன்.

    "மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்" என்று எழுதி விட்டு தூங்குவோம் பக்கத்தில் அடைப்புக் குறிக்குள் கேள்விக் குறிகள் அடைத்த உங்களின் குறும்பு... ரசித்தேன்.

    அசங்கல், கசங்கலில்லாத புத்தம் புது பிரிண்டில் மீண்டும் படம் பார்த்தது போல அந்த "தவப்
    புதல்வன்" பதிவு.. மிக ரசித்தேன்.

    எத்தனை அருந்தினாலும் திகட்டுவதேயில்லை
    உங்களின் எழுத்துத் தேன்.

    தங்களைப் போன்ற திரியின் முன்னோடிகளின் சிறந்த எழுத்துகள் உதாசீனப்படுத்தப்
    படுவதாய் தாங்கள் வருந்தும் பதிவுகளை இடையிடையே பார்க்க முடிகிறது.

    நல்ல எழுத்துகளை வாசித்து, உடனுக்குடன் விமர்சிப்பது, ஆலயம் சென்று இறை வணங்குதல்
    போல. சொல்ல வார்த்தையின்றி மௌனித்திருப்பது, கோபுரம் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வது போல.

    வணங்கும் முறைகள்தான் வேறுபடுகின்றன.
    நல்ல எழுத்துகள் வணங்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.

    வெள்ளிக் கிண்ணத்தைத் தங்கக் கிண்ணமாக
    மாற்றித் தந்த தங்கள் தமிழ்க் கரங்களுக்கு என்
    நன்றி முத்தங்கள்.
    ******

    வாசு சார்...

    கடந்த பிப்ரவரியில் சென்னையில் நிகழ்ந்த வாட்ஸ் ஆப் குழும நண்பர்கள் சந்திப்பின் போது,
    (கோபால் சார் கோடு போட, நீங்கள் தங்க நாற்கரசாலை போட்ட) இரும்புத் திரை காதல் காட்சியை ராகவேந்திரா சார் புண்ணியத்தில் பார்த்து மகிழ்ந்தேன். நீங்கள் எழுத்து வழி ஓட்டிக்
    காட்ட, ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மீண்டும்
    பார்த்து மகிழ்ந்தேன்.

    அப்புறம்.. தவப்புதல்வன் சண்டைக் காட்சி வர்ணனையை வியந்தேன். விரித்து வைத்த
    நடிகர் திலகத்தின் கால்களுக்கூடே தங்களின் பெயர் கொண்டவர் படும் அவஸ்தைகளுக்கு
    நீண்ட காலம் சிரிக்கலாம்.

    அறுபதுகளில் நம்மவரோடு தந்தை நடிகவேள் நடித்துத் தந்த நிறைவுக்குக் கொஞ்சமும் குறைவின்றி எழுபதுகளில் வாசுவும் தந்திருக்கிறார். உதாரணம் - பாரத விலாஸ், தவப்புதல்வன்.
    *****

    முரளி சார்..

    "செல்வம்" வரக் காத்திருக்கும் ஏழையாக நானும்.
    ******

    ராகவேந்திரா சார்..

    அய்யனின் அழகுத் திருவுருவங்களுடன் தாங்கள்
    சொல்லும் "குட்மார்னிங்" களுக்காகவே எனது
    காலைகள் விடிகின்றன.

    Sent from my P01Y using Tapatalk

  13. Thanks adiram thanked for this post
    Likes Harrietlgy liked this post
  14. #2708
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Harrietlgy liked this post
  16. #2709
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    good morning
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  17. #2710
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like


    எழுபதுகளின் துவக்கத்தில் வறுமையின் பிடியில் சிக்கி வாடிய கக்கன் மற்றும் அவரது குடும்பத்துக்கு நிதியளித்து உதவ எண்ணிய நடிகர்திலகம் சிவாஜி, அதற்காக, தான் அப்போது ...நடத்திவந்த 'தங்கப்பதக்கம்' நாடகத்தினை சென்னைக்கு வெளியே பெரிய நகரமொன்றில் நடத்த திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினார். தான் சார்ந்திருந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், பல ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவருமான கக்கன் அவர்களுக்காக நடத்தப்படும் நாடகத்துக்கு பெருந்தலைவர் தலைமையேற்றால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி அவரை அணுக, சாதாரணமாக இதுபோன்ற நாடக விழாக்களில் கலந்துகொள்ளும் பழக்கமில்லாத பெருந்தலைவர், கக்கன் அவர்களுக்காகவும் நடிகர்திலகத்துக்காகவும் வேண்டுகோளை ஏற்றார். நாடகம் கோவையில் நடந்ததாக நினைவு.
    நாடகக்கலைஞர்களை சென்னையிலிருந்து அழைத்துச்சென்று திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பது, அவர்களின் சம்பளம், அரங்க வாடகை, நாடக செட்களுக்கான லாரிவாடகை, விளம்பரச்செலவு என அனைத்துச் செலவுகளையும் நடிகர்திலகமே ஏற்றுக்கொண்டார். அபூர்வமாக தங்கள் நகரில் நடிகர்திலகம் பங்கேற்று நடிக்கும் நாடகம், அதுவும் பெருந்தலைவர் தலைமையில் நடக்க இருப்பதையறிந்த ரசிகர்களும் பொதுமக்களும், இந்த அரிய வாய்ப்பைத்தவற விடக்கூடாதென்று பெரும் கூட்டமாகத் திரண்டு வந்தனர். வசூல் குவிந்தது.
    நாடகத்துக்கான மொத்தச்செலவையும் நடிகர்திலகம் ஏற்றுக்கொண்டதால், நாடகத்தில் வசூலான தொகை முழுவதும் கக்கன் அவர்களின் குடும்பத்துக்காக, மேடையிலேயே தலைவர் கரங்களால் வழங்கப்பட்டது. நடிகர்திலகத்தின் இந்த சீரிய சேவையைப்பாராட்டி அவருக்கு பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் ஒரு தங்கப்பதக்கத்தினை பரிசாக அளித்தார். தலைவர் அளித்த அந்தப்பதக்கத்தையும் நடிகர்திலகம் விழாவில் ஏலம் விட்டார். அங்கிருந்த உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் அதை 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். (அன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் எழுநூறு ரூபாய்). ஏலத்தில் கிடைத்த பத்தாயிரத்தையும் கூட கக்கன் அவர்களுக்கே வழங்கிவிட்டார் நடிகர்திலகம்.
    நன்றி தெரிவித்துப்பேசிய கக்கன், "பதக்கம் மட்டும் தங்கம் அல்ல, சிவாஜியின் மனமும் சொக்கத்தங்கம்" என்று மனம் நெகிழ்ந்து சொன்னார்.
    PHOTO-(தங்கப்பதக்கம் நாடக இடைவேளையில், நாடகம் பார்க்க வந்திருந்த கானக்குயில் 'பாரதரத்னா' லதா மங்கேஷ்கருடன் நடிகர்திலகம்)

    (முகநூலில் இருந்து)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  18. Likes Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •