Page 254 of 400 FirstFirst ... 154204244252253254255256264304354 ... LastLast
Results 2,531 to 2,540 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2531
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு வாசுதேவன் சார்

    9000 பதிவுகள் திரியில் வழங்கி சாதனைகள் படைத்த தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் சார்பாக வாழ்த்துகிறோம் .

  2. Thanks saradhaa_sn thanked for this post
    Likes saradhaa_sn liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2532
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சாரதா மேடம் அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் திலகம் திரியில் பதிவுகள் வழங்கியிருப்பது மிக்க மகிழ்ச்சி .ஏற்கனவே அவர் பதிவிட்ட எல்லா தரப்பு பதிவுகளும் மிகவும் அருமை . குறிப்பாக மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் விமர்சனம் மறக்க முடியாது . இனி தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்க்கிறேன் .

  5. Thanks saradhaa_sn thanked for this post
    Likes saradhaa_sn liked this post
  6. #2533
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    காலம் கொண்டாடும்
    காவிய நாயகனுக்காய்
    நாளும் பிறக்கும்
    நல்ல எழுத்துகளை...

    அவற்றில்
    நாங்கள் உணர்ந்த
    உண்மையின் ஆழத்தை...

    உளப்பூர்வமான
    அர்ப்பணிப்பை...

    ஞான ஒளி்யாரின்
    ஒப்புயர்வற்ற
    ஒன்பதாயிரத்தை...

    வணங்குகிறேன்.

    Sent from my P01Y using Tapatalk

  7. Likes saradhaa_sn liked this post
  8. #2534
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 151 – சுதாங்கன்.



    சிவாஜி கணேசனைப் பொறுத்த வரையில் அவருக்கு அவர் நடிக்கும் வேடம்தான் முக்கியம். அந்த கதாபாத்திரம் வில்லனா, கதாநாயகனா என்பது பற்றியெல்லாம் அவருக்கு கவலை கிடையாது. தனக்கு நடிக்க அந்த கதாபாத்திரத்தில் வாய்ப்பு இருக்கிறதா என்பதைத்தான் பார்ப்பார்.இதை சிவாஜியே கதை – வசனகர்த்தா ஆரூர்தாஸிடம் சொல்லியிருக்கிறார்.
    `ஒரு படத்தில் கதாநாயகன் வேடம்தான் அணிய வேண்டும் என்பது முக்கியமல்ல. வில்லன் வேடமாக இருந்தாலும் சரி அல்லது வேறு குணச்சித்திர வேடமாக இருந்தாலும் சரி. அது ரசிகர்களால் பேசப்படும்படியாக நடித்துக் காட்டவேண்டும். அதுதான் நடிப்பு. கதாநாயகியுடன் `டூயட்’ பாடிவிட்டால் மட்டும் அது நடிப்பாகிவிடாது’ என்றார்.
    இதற்கு எடுத்துக் காட்டாக ஒரு படம் உண்டு. நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுதம். இவர் `மஜ்பூர்’ என்ற இந்திப் படத்தின் உரிமையைப் பெற்று, தமிழில் சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா ஜோடியாக நடிக்க, ஆரூர்தாஸ் வசனமெழுதி எடுத்த படம்தான் ` நான் வாழ வைப்பேன்.’
    அந்தப் படத்தின் கடைசி இரண்டு ரீல்களில், இந்திப் படத்தில் நடிகர் பிரான் நடித்த கவுரவ வேடத்தில் ரஜினிகாந்த் நடித்தார்.
    படம் முடிந்து, முதல் பிரதியை சிவாஜிக்கு போட்டுக் காட்டினார்கள்.
    `மைக்கேல் – டி. சவுஸா’ என்கிற பெயரில் ஒரு வழிப்பறி திருடனாக ரஜினி நடித்த அந்த பாத்திரத்துக்குப் படத்தின் உச்சக்கட்ட காட்சியில் அமைந்திருந்த முக்கியத்துவத்தைப் பார்த்த சிவாஜி, `இந்த ரஜினியோட `கேரக்டர்’ல நான் நடிச்சிருக்கணும். ஏன்னா, கிளைமாக்ஸ் ரஜினி மேலே போயிடுச்சு. இதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்கும்னு யாரும் எனக்கு சொல்லலையே?’ என்றார்.
    அதற்கு பதிலளித்த ஆரூர்தாஸ், `ரஜினி நடித்தது கெஸ்ட் ரோல். ஹீரோவான உங்க பேரைச் சொல்லித்தான் படத்தை விற்க முடியும். இந்திப் படத்தை அமிதாப் பச்சனை வைத்துத்தான் வியாபாரம் செய்தார்கள். ரஜினி நடித்த பாத்திரத்தில் நடித்த பிரானை வைத்து அவர்கள் வியாபாரம் செய்யவில்லை’ என்றார்.
    அதற்கு சிவாஜி, ` ஹீரோ என்ன ஹீரோ?` ஆக்டிங் ஸ்கோப்’ இல்லாம சும்மா ஹீரோயின் பின்னால போய் மரத்தை சுத்தி ஆடிக்கிட்டு. எனக்கு முன்னாலேயே சொல்லியிருந்தா அந்த ஹீரோ ரோலை ரஜினிக்கு கொடுத்துட்டு அவர் செய்த ரோலை நான் செய்திருப்பேன். இப்ப `கிளைமாக்ஸ்’ ரஜினி மேலே நின்னுடுச்சு. நான் மக்கள் மனதில் இருக்கமாட்டேன்’ என்றார்.
    அதுதான் சிவாஜி.
    படத்தில் தான் எத்தனை காட்சிகளில் வருகிறோம் என்பது அவருக்கு முக்கியமில்லை. தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் மக்கள் மனதில் நிற்க வேண்டுமென்றுதான் அவர் நினைப்பார். சிவாஜி ‘நான் வாழ வைப்பேன்’ படத்தைப் பற்றி சொன்னது உண்மைதான். ஆனால் ரஜினிக்கு அப்போது அவ்வளவாக மார்க்கெட் மதிப்பு கிடையாது. அதனால் அவரை ஹீரோவாக போட்டு படத்தை எடுத்திருக்க முடியாது.
    `புதிய பறவை’ படத்தில் சிவாஜியின் கதாபாத்திரம் என்பது நெகட்டிவ் கேரக்டர்தான்.
    அந்தப் படத்தில் சவுகார் ஜானகியும் `நெகட்டிவ் கேரக்டர்’ என்பதால் நடிப்பால் தனது `நெகட்டிவ் கேரக்டரை’ சிவாஜி உயர்த்திக் காட்டிவிட்டார்.
    `சிவாஜி கணேசன் ஒரு பிறவி நடிகர்’ என்பதால் அவரது முகத்துக்கு எடுப்பாக செதுக்கியது போன்று இயற்கையாக அந்த நீண்ட மூக்கும், பெரிய விழிகளும், வாய்த்தாடையும் வேறு யாருக்கும் அப்படி அமையவில்லை. அவருடைய முகத்தை நேரடியாகப் பார்த்தாலும், பக்கவாட்டில் பார்த்தாலும் எடுப்பாகவே இருக்கும். அந்த அமைப்பு இருந்ததால்தான் `சிவாஜி’ வேடம் அவருக்கு அத்தனை பொருத்தமாக அமைந்தது. பெரும்பாலும் மராட்டிய வீரர் சிவாஜியின் புகைப்படத்தை புத்தகங்களிலும், பத்திரிகைகளிலும் பக்கவாட்டில்தான் போடுவார்கள். சிவாஜியின் உடல்வாகு எந்த உடை அணிந்தாலும், அழகாகவும் பொருத்தமாகவும்தான் அவர் இருப்பார். இதை அவர் நடித்த பல படங்களிலும் பார்க்கலாம். கடவுளர் வேஷமாகட்டும், ராஜா வேஷமாகட்டும் மற்ற சமூக படங்களில், கதாநாயகர் வேஷமாகட்டும், அந்தந்த பாத்திரங்களுக்கான வெவ்வேறு உடைகள் அவருடைய உடலுக்கு அப்படி பொருந்திவிடும்.
    ஒழுக்கம், உணவு விஷயங்களிலும் சிவாஜி கட்டுப்பாட்டோடு இருந்தார்.
    அதே போல் ஒரு நாடகத்திலோ, அல்லது வேற்றுமொழி படங்களிலோ நல்ல கதாபாத்திரம் இருந்தால் அந்த பாத்திரத்தில் தான் நடிக்க வேண்டுமென்று சிவாஜி ஆசைப்படுவார். இதற்கு இரண்டு உதாரணங்களைச் சொல்லலாம். முதலில், நாடகம். சிவாஜி நடித்த ‘தங்கப் பதக்க’த்தை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது.
    இந்த படத்திற்கு கதை – வசனம் எழுதிய இயக்குநர் மகேந்திரன் என்னிடம் சொன்ன விஷயம் இது. அப்போது மகேந்திரன் துக்ளக் பத்திரிகையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் அங்கே உதவி ஆசிரியர்.
    காரசாரமான சினிமா விமர்சனங்களை `போஸ்ட்மார்ட்டம்’ என்ற தலைப்பில் `டாக்டர்’ என்ற பெயரில் எழுதி வந்தார். ஒரு நாள் துக்ளக் ஆசிரியர் சோவைப் பார்க்க சிவாஜியின் பால்ய நண்பரும், நடிகருமான எஸ்.ஏ. கண்ணனும், நடிகர் செந்தாமரையும் வந்திருந்தார்கள். சோ அப்போது அலுவலகத்தில் இல்லை. வெளியே போயிருந்தார். அவருக்காக காத்திருந்த கண்ணனும், செந்தாமரையும், மகேந்திரனிடம் `சோவிடம் நாடகத்திற்கு கதை கேட்க வந்தோம். உங்களிடம் நல்ல கதை இருந்தால் கூட சொல்லுங்களேன். நாடகமாக்குவோம்’ என்றார்கள்.
    உடனே மகேந்திரன் பக்கத்தில் இருந்த ஒரு மேல்நாட்டு பத்திரிகை பக்கம் பார்த்தார். அதில் `ஹடாரி’ படத்தில் நடித்த ஜான் படம் இருந்தார். அது ஓர் ஆங்கிலப்பட விளம்பரம். அதில் ஒற்றைக்கண்ணை துணியால் மூடியபடி ஜான் வெய்ன் படம் இருந்தது. அந்த படத்தின் தலைப்பு `தி ஷெரிப்.’
    ஷெரிப் என்றால் மேலைநாடுகளில் போலீஸ் என்று பொருள். அதைப் பார்த்த மாத்திரத்தில் மகேந்திரன் மனதில் ஒன்று தோன்றியது. உடனே வந்திருந்த இருவரிடமும், `அப்பா போலீஸ். பிள்ளை திருடன்’ இதுதான் கதை’ என்றார்.
    இருவருக்கும் இந்த ஒற்றைவரி ஐடியா பிடித்துப் போனது.
    `இதையே நாடகமாக எழுதிக் கொடுங்களேன்’ என்றார்கள். நாடகம் உருவாயிற்று. நாடகத்தின் தலைப்பு `இரண்டில் ஒன்று.’ அதை செந்தாமரையின் நாடகக்குழு மேடையேற்றியது. நாடகம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.
    நாடகத்தின் கதைக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு. சுமார் 30 நாடகங்கள் நடந்திருக்கும். ஒரு நாள் சிவாஜி செந்தாமரையை அழைத்தார்.
    `என்ன? உன் நாடகத்தைப் பத்தி எல்லோரும் ‘ஓஹோ’ன்னு பேசிக்கிறாங்க. நான் எப்ப பாக்கறது?’ என்று கேட்டார்.
    சிவாஜி நாடகத்தைப் பார்த்தார்.
    அடுத்து....
    (தொடரும்)

  9. #2535
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு,

    9000 விட 10000 என்பது சிறப்பானது.சீக்கிரம் அங்கு வா.

    நண்பர்களுடன் தொடர்பே இல்லாமல் என்றேனும் ஓர் நாள் அன்பை தேடி லோ லோ என்று அலைவாய் என்று எதிர்பார்த்தது வீண் போகவில்லை. அன்பை தேடி ,முக்தாவின் முதல் வண்ண படம். புதிய கரு.புதிய களம் .கலைஞானம்-தூயவன் இணைவு ,சோ நகைசுவை எல்லாமே அமைந்தும், எம்.எஸ்.வீ ஓரளவு திருப்தியான பாடல்களை கொடுத்தும், பாலசந்தர் போட்ட கருப்பு-வெள்ளை அணுகுண்டு அவள் ஒரு தொடர்கதை, எல்லாவற்றையும் பூண்டோடு அழித்தது 1974
    தீபாவளியில்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. Likes Harrietlgy, saradhaa_sn liked this post
  11. #2536
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn View Post

    சிவந்த மண், அண்ணன் ஒரு கோவில்
    சாரதா மேடம்,

    சிவந்த மண், அண்ணன் ஒரு கோவில் விமர்சனத்துடன் திரியில் மீண்டும் தங்களின் பதிவினைக் காண்பதில் மகிழ்ச்சி. தொடருங்கள், நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  12. Thanks saradhaa_sn thanked for this post
  13. #2537
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    வாசுதேவன் சார்,

    தங்களின் 9000 முத்திரைப் பதிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றி. தங்களின் பதிவுகளை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  14. #2538
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்

    9000பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்
    உங்களுக்காக இதோ...

  15. Likes saradhaa_sn liked this post
  16. #2539
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    Sent from my P01Y using Tapatalk

  17. Likes saradhaa_sn liked this post
  18. #2540
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நெஞ்சத் திரையில் நடிகர் திலகம் -12
    -----------------------------------------------------------------

    "அன்பைத் தேடி"-

    நேற்று 42 ஆண்டுகளைப் பூர்த்தி செய்திருக்கிறது.. நம் இதயத்தின் தேவைகளை
    நடிகர் திலகம் பூர்த்தி செய்வதைப் போல.

    "ஏனோ வெற்றியடையவில்லை" என்று வாசு சார் வருத்தப்படுகிறார். ஏன் எடுபடவில்லை
    என்று ராகவேந்திரா சார் விளக்குகிறார்.

    படம் வெளியான நாளிலிருந்து வெகுகாலம்
    தள்ளி,நிறைந்த அரங்கத்தில், நிறைவோடு
    "அன்பைத் தேடி" பார்த்த என் போன்றோருக்கு அந்தக் கவலையில்லை என்று ஒரு பக்கம் மனம் சந்தோஷித்தாலும், "அன்பைத் தேடி" யின் காலத்தில் அது குறித்த வெற்றிக் கனவுகளோடும், அது குறித்த நினைவுகளோடுமே பயணித்துக்
    கொண்டிருந்த மூத்த ரசிகர்களின் மெலிதான ஏமாற்றங்கள் அவர்களின் வார்த்தைகளில்
    ஒட்டியிருப்பதைப் பார்க்க வருத்தமாகத்தான்
    இருக்கிறது.

    நல்லதைக் கொண்டாடத் தெரியாத சண்டாளத்
    தமிழர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்து
    தொலைக்கிறார்கள்.
    ---------------------

    இத்துடன் ஒரு பத்து நிமிடக் காணொளி
    இணைத்துள்ளேன். அதில் கடைசி நான்கு
    நிமிடத்தைப் பாருங்கள்.

    இதில் அய்யா ஏற்றிருக்கிற அந்த "ராமு" கதாபாத்திரம் திடீரென்று ஒரு நிமிஷத்தில் மாற்றம் பெற்று, அனைவரின் கவனத்தையும்
    தன் வசம் ஈர்க்கக் கூடிய கதாபாத்திரம். சிறப்பு மிக்க அந்த "திடீர் நிமிஷத்தை" இந்தப் படத்தின் இயக்குநர் உள்ளிட்டோரைத் தாண்டி நடிகர் திலகமே தீர்மானித்திருக்கிறார் என்பது இந்தக்
    காட்சியில் விளங்கும்.

    சதா கனவுகளோடு வாழும் நாயகன், தன் கனவுப்
    பழக்கத்தால் தனது பிரியமான அக்காள் மகள்
    குழந்தை இந்திராவைத் தொலைத்து அவளது
    சாவுக்கும் காரணமாகிறான். "எங்களைப் போலவே பெற்றுப் பறி கொடுப்பாய்" என்று
    அத்தான் கொடுத்த சாபத்தை, தலை வணங்கி
    ஏற்றுக் கொள்கிறான்.

    புராண, சரித்திர பாத்திரங்களில்.. படித்தறிந்ததை,
    கேள்வி ஞானத்தை வைத்து நடித்து ஜெயித்து விடலாம்.

    நடைமுறை வாழ்க்கையில் நாம் சந்திக்கவே
    வாய்ப்பில்லாத, நாசமாய்ப் போன இந்த சமூகத்தின் சராசரி மனிதர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கும் நல்லவனான "ராமு"
    என்கிறவனை தன் கலையறிவால் கற்பனை செய்து, நடித்து ஜெயிப்பது எளிதான காரியமல்ல.

    அத்தான் கொடுத்த சாபத்தை ஏற்றுக் கொண்டு,
    மணந்து,பெற்று, தானம் தந்து விடத் தயாராகும்
    ராமு, தனக்கு இதில் உதவுமாறு கேட்டுக் கொள்ள
    தன் காதலியை வரச் சொல்லியிருக்கிறான்.

    காதலி, ராமுவின் மாளிகைக்கு வருகிறாள்.

    பளீரென்று வெள்ளை உடை தரித்து மாடி விட்டு
    ராமுவாக இறங்கி வருவார்.. நடிகர் திலகம்.

    காதலியிடம், தன்னை மணந்து கொள்ளச் சம்மதமா என்று ஒரு ஒழுக்கமான ஆடவன்
    பொட்டிலடித்தாற்போல் கேட்டு விட மாட்டான்.

    கேட்க வேண்டிய கட்டாயத்திற்கும், அதிரடியாகக்
    கேட்கவியலாத சூழலுக்கும் ஊடே "நீ என்னைக்
    கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்று தயங்கிக்
    கேட்பதற்கு நடிகர் திலகம் எடுத்துக் கொள்கிற
    கால அவகாசம் அற்புதமானது.

    ஒரு தேர்ந்த இசையமைப்பாளர்,ஒரு நல்ல பாடலுக்கான தாளத்திற்கு சரியான இடைவெளிகள் விட்டுத் தரும் கால
    அவகாசத்தையொத்தது அது.

    காதலி கல்யாணத்திற்கு சம்மதித்த பின் அடுத்த
    இறைஞ்சுதல்.

    "நமக்குப் பிறக்கும் குழந்தையை நம்ம குழந்தை
    இல்லேன்னு நினைச்சு வேற ஒருத்தருக்குத்
    தானம் குடுக்க நீ சம்மதிப்பியா?"

    சில த்வனிகள் நம்பிக்கையைத் தன்னுள் நிறைத்தபடி வெளிப்படும். நடிகர் திலகம் இதைக்
    கேட்கும் த்வனி, 'காதலி இதற்கு(ம்) சம்மதிப்பாள்'
    என்கிற நம்பிக்கையுடையதாகவே இருக்கும்.

    அதிர்ந்து போகும் காதலி, "யாராவது அப்படி தானம் குடுப்பாங்களாய்யா? என்று கேட்க...

    "யாரும் குடுக்குறாங்களோ.. இல்லையோ? நான்
    குடுக்கணும்" எனும் நடிகர் திலகத்தின் உறுதிக்
    குரல் அவரது லட்சியத்தில் அவர் பிடிவாதமாய்
    இருப்பதைக் குறிக்கிறது.

    உறுதிக் குரல் அடுத்த விநாடியே மென்மையாகி,
    தனது லட்சியத்திற்குப் பின்னால் இருக்கும் சோகக் கதையை காதலியின் முன் விரிக்கிறது.

    கதை கேட்டு, நல்லவனான தன் நாயகனை வியந்த காதலி அவனது லட்சியத்திற்கு தான்
    உறுதுணையாக இருப்பதாக உறுதி சொல்லும்
    போது, ஒரு நெகிழ்வான அழுகையைக் கரைத்துக்
    கொண்டு உருகுகிறது. உருக்குகிறது.

    ஒரே ஒரு நாயகரின் உலகறிந்த சிம்மக்குரல்..
    அந்த மகாகலைஞரோடு சேர்ந்து கொண்டு
    விதவிதமாய் நடிக்கிறது.

    ஆண்டாண்டு காலங்களுக்கு முன் அய்யன் செய்த
    அற்புதம் இந்தத் தலைமுறைக்கும் பிடிக்கிறது.

    எனக்கு ஆறு வயதாயிருக்கையில் உலகம் பார்த்த
    ஒரு உற்சாகத் தீபாவளியை "அன்பைத் தேடி"
    பார்த்து ஆனந்தமாய்க் கொண்டாடிய பொறாமைக்குரிய மூத்த ரசிகர்களுக்கு என் வந்தனங்கள்.



    Sent from my P01Y using Tapatalk

  19. Thanks saradhaa_sn, Gopal.s thanked for this post
    Likes Harrietlgy, saradhaa_sn, Gopal.s liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •