Page 235 of 400 FirstFirst ... 135185225233234235236237245285335 ... LastLast
Results 2,341 to 2,350 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2341
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்களே,

    இந்த முறை சிவாஜி பிறந்த நாள் விழாவில் கௌரவிக்க பட்ட வாணிஸ்ரீ, விஸ்வநாத ராய், y .G. M ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
    வெங்கையா நாயுடுவின் சுருக்கமான ,செறிவான உரையை கேட்டு களித்தேன்.

    நடிகர்சங்க நிர்வாகிகள் விஷால்,நாசர் போன்றோரை வன்மையாக கண்டிக்கிறேன். அவரின் சிலைக்கு மரியாதை செலுத்தி நடிகர் தினத்தை கொண்டாடாத இவர்களால் ,நடிகர் என்று பட்டம் சுமந்து எப்படி திரிய முடிகிறது?

    அ .தி .மு .க பற்றி கவலையில்லை. தி .மு .க பிரமுகர்கள் வந்திருக்கலாமே?மரியாதை செலுத்தி இருக்கலாமே?தி.மு.க வை ஆரம்ப காலத்தில் வளர்த்ததில் நடிகர்திலகம் பங்கு உண்டே? அண்ணா,கருணாநிதி,உட்பட எல்லோரும் சிவாஜி ரசிகர்கள்தானே ?
    கலைஞர்களால் வளர்ந்த தி.மு.க அந்த கலைக்காவது வணக்கம் செலுத்த வேண்டாமா? கலைஞர் திறந்து வைத்த சிலைக்கு உரிய மரியாதை செலுத்தியிருக்க வேண்டாமா?

    கமல்,ரஜினி போன்றோர் தீவிர நடிகர்திலகம் பக்தர்கள். அவருடைய நடிப்பை பிரதியெடுத்து அவரை முன் மாதிரியாக சுமப்பவர்கள். அவர்கள் வந்து உரிய மரியாதை செலுத்தியிருக்க வேண்டாமா?

    அவன்தான் மனிதனின் சாதனை வியக்க வைக்கிறது. ராஜபார்ட் ரங்கதுரை வெற்றி காண வாழ்த்துக்கள்.

    இன்னும் மூன்று பதிவுகளில் 4000 எட்டி விடுவேன். 4000 ஆவது பதிவாக நவராத்திரி இருக்கும். பிறகு ,திரியில் இருந்து ஓய்வு பெற எண்ணியுள்ளேன்.

    இதுவரை எனக்கும் இடம் கொடுத்த திரிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2342
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என் பரீக்ஷா கால நண்பன் ,இன்றைய நடிகர்சங்க தலைவன் நாசரிடம் தொலைபேசியில் மனம் விட்டு பேசினேன் .

    கீழ்கண்ட விஷயங்களை தெளிவாக கூறினார்.

    1)நடிகர்திலகத்திடம் ,இன்றைய நிர்வாகிகள் பெருமதிப்பு கொண்டுள்ளனர்.

    2)அரசியல் ரீதியாகவோ,தனி பட்ட முறையிலோ யாருக்கும் எந்த வித தயக்கமோ நெருக்கடியோ இல்லை.

    3)இந்த முறை ஹைட்ரபாத் நகரில் ஒரு படப்பிடிப்பில் இறுதி கட்டத்தில் மாட்டி கொண்டதால், அக்டோபர் 1 அன்று நடிகர்திலகத்தின் சிலைக்கு மரியாதை செலுத்த,சக நிர்வாகிகளை பணித்துள்ளார்.

    4)எனது,நடிகர்திலகம் புத்தகத்துக்கு ,இயக்குனர் மகேந்திரன்,நடிகர் நாசர்,அஜித் ஹரி போன்றோர் முன்னுரை அளிக்க இசைந்துள்ளனர்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. Likes Harrietlgy liked this post
  6. #2343
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like

    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. Thanks Gopal.s thanked for this post
    Likes sivaa, Harrietlgy, Gopal.s liked this post
  8. #2344
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. Likes Harrietlgy liked this post
  10. #2345
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like


    (பத்மநாதன் அவர்களின் முகநூலில் இருந்து)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. Thanks Gopal.s thanked for this post
    Likes Harrietlgy liked this post
  12. #2346
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like



    நடிகர் திலகம் சிவாஜிக்கு எத்தனையோ சிறப்புகள் உள்ளது. அவற்றில் முக்கியமானது அவர் அமெரிக்காவில் உள்ள பிரபலமான சுற்றுலாத்தலமான நயாகரா மாநகரத்தின் ஒரு நாள் மேயராக ப...தவி வகித்தது.
    நடிகர் திலகத்தின் நடிப்பிற்கு மிகப்பெரிய ரசிகர் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான்.எப் கென்னடி. அவர் சிவாஜியை நேரில் பார்க் விரும்பி 1962ம் ஆண்டு அமெரிக்காவுக்கு அழைத்தார். அந்த நாட்டின் சிறப்பு விருந்தினராக சிவாஜி அமெரிக்கா சென்றார். அங்கு அதிபர் ஜான் எப்.கென்னடியை சந்தித்தார். பின்னர் அவர் உலகிலியே பிரமாண்ட அருவி கொட்டும் நயாகரா நகர ஒரு நாள் மேயராக நியமிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். மாநகர் மன்ற கூட்டத்தில் சிவாஜி பேசினார்.
    சிவாஜியின் வருகையை அறிந்த அன்றை ஹாலிவுட் நடிகர்கள் அவரை சந்தித்து பேசினார்கள். டாவரிச் வரிசை படங்களின் நாயகன் ஜேம்ஸ் கார்னர், ஆஸ்கர் விருது பெற்ற ஜேக் லெம்மோன், தி டென் கமாண்ட்மேண்ட்ஸ், பென்ஹர் பட நாயகன் கார்ல்ட்ன் ஹெஸ்டன், ஹாலிவுட்டின் ஆரம்ப கால ஹீரோ ஜார்ஸ் சேன்ட்லியர், ஊமை படங்களின் நாயகன் வால்டர் பிட்ஜியோன் ஆகியோர் அவரை சந்தித்து சிவாஜியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்திய நடிகர்கள் எவருக்கும் கிடைக்காத மிகப்பெரிய கவுரவம் இது.


    (சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருச்து)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  13. Likes Harrietlgy liked this post
  14. #2347
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    நமது நடிகர் திலகத்தின் அலாதி சிரிப்பு....அவரது வெகுளித்தனமான குழந்தை மனதிற்கு இந்த புகைப்படம் ஒரு எடுத்துக்காட்டு...அந்த சமயம் திரு.வி.பி.சிங் அவர்கள் இந்தியாவின் பிரதம மந்திரி என்பது குறிப்பிடத்தக்கது.

    நன்றி திரு.பழனியப்பன் சுப்பு - புகைப்படம்

    (நன்றி திருச்சி சிறினிவாசன் முகநூல்)







    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  15. Likes Gopal.s, Harrietlgy liked this post
  16. #2348
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  17. Likes Harrietlgy liked this post
  18. #2349
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    279
    Post Thanks / Like
    " நாம் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது "
    Welcome for our James Bond
    October 14 rh onwards chennai mahalakhsmi theatre
    " தங்கச் சுரங்கம் "

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  19. Likes Harrietlgy liked this post
  20. #2350
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 147 – சுதாங்கன்.




    ஏழு இரவுகளோடு போராடி `புதிய பறவை’ படத்திற்கான முழு வசனங்களையும் எழுதி முடித்துவிட்டு சிவாஜியிடம் தெரிவித்தார் ஆரூர்தாஸ்!
    அவருக்கு இருந்த படப்பிடிப்பு பணிகளுக்கிடையில் ஆரூர்தாஸ் எழுதியதை படித்துக் கேட்பதற்கு ஒரு நாளை ஒதுக்கினார் சிவாஜி! தெற்கு போக் ரோட்டிலிருந்த சிவாஜியின் `அன்னை இல்லம்’ வீடு! தரையில் சிவாஜியும், ஆரூர்தாஸும் அமர்ந்து கொண்டார்கள். கீழே தரையில் உட்கார்ந்து சோபாவில் சாய்ந்தபடி காலை நீட்டியபடி கேட்பது சிவாஜிக்கு மிகவும் பிடிக்கும். ஆரூர்தாஸ் எப்போதுமே தனது வசனங்களை இரண்டு கோப்புகளாகப் பிரித்து வைத்திருப்பார். ஒன்று– இடைவேளை வரையில். இன்னொன்று– இடைவேளைக்குப் பிறகு! இருவரும் காலை சிற்றுண்டி முடித்து காபி சாப்பிட்டார்கள். அந்த வீட்டில் உள்கூடத்தில் இருந்த அந்த ஆள் உயர அயல்நாட்டு கடிகாரம் ஒன்பது முறை அடித்து ஓய்ந்தது. சிவாஜி சிகரெட் பற்ற வைத்துக்கொண்டார். ஆரூர்தாஸ் நெற்றிக்கும் நெஞ்சுக்குமாக கைகளால் சிலுவைக் குறி போட்டுக்கொண்டார்.
    படிக்கத் தொடங்கினார். `நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும் சிவாஜி பிலிம்ஸின் ` புதிய பறவை’. காட்சி ஒன்று – பகல் – சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வரும் கப்பல் நடுக்கடலில் மிதந்து வருவது காட்டப்படுகிறது.
    காட்சி இரண்டு – பகல்– கப்பலில் உள்ளே முதல் வகுப்புப் பகுதியில் பயணிகளுக்கிடையில் கதாநாயகன் கோபால் ( சிவாஜி), நாயகி லதா ( சரோஜாதேவி) மற்றும் அவருடைய தந்தை (வி.கே. ராமசாமி) அறிமுகமாகிறார்கள்.
    ஒவ்வொரு காட்சியாக திரைக்கதையை விவரித்து அதற்கான வசனங்களைப் படித்துக்கொண்டே வந்தார். சிவாஜி வைத்த விழி வாங்காமல் ஆரூர்தாஸையே பார்த்துக்கொண்டிருந்தார். இடையில் தொலைபேசித் தொல்லைகள், நண்பர்கள் வருகை எதுவும் இல்லாதபடி முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் ஆரூர்தாஸின் `மூடு’க்கு எந்த இடைஞ்சலும் இல்லை. ஆரூர்தாஸும், சிவாஜியும் தெளிவான கதை சிந்தனையிலேயே இருந்தார்கள். இடைவேளையை நெருங்கிக்கொண்டிருந்தார் ஆரூர்தாஸ்! மதிய உணவு வேளையும் வந்து கொண்டிருந்தது. உள்ளே இருந்து சிவாஜியின் துணைவியார் கமலாம்மாள் வந்தார். `மாமா! மணியாகுது சாப்பாடு ரெடி’ என்றார்.
    சிவாஜி : ஆரூரான்! உனக்கு பிடித்த வரால் மீன் குழம்பும், வறுவலும் இருக்கு. காலையிலேயே அம்மாகிட்ட சொல்லிட்டேன். சாப்பிட்டுட்டு ஒரு சின்ன தூக்கம் போட்டுட்டு, நாலு மணிக்கு மேலே இடைவேளைக்கப்புறம் இருக்கிறதை படிக்கலாம்.
    கமலாம்மாளும் தஞ்சாவூர்காரர் என்பதால், அவர்களது ஊர்ப்பக்குவத்தில் புளி சற்று தூக்கலாக கரைத்து கறிவேப்பிலை. பச்சை மிளகாய் போட்டு ‘திக்’காக வைக்கும் மீன் குழம்பும், நிறைய மிளகாய் சாந்தில் போட்டு பொன்வறுவலாக வறுக்கும் மீனும் ஆரூர்தாஸுக்கு மிகவும் பிடிக்கும்.
    சாப்பிட்டு முடித்ததும், கட்டில் மெத்தை இல்லாமல், கீழே தரையில் துண்டை விரித்து தூங்குவது சிவாஜிக்கு பிடிக்கும்.
    அந்த நாட்களில், சிவாஜி பிலிம்ஸுடன், சிவாஜி நாடக மன்றமும் சொந்தமாக வைத்து, தனது பழைய சக்தி நாடக சபா நடிகர்களுடன் நாடகங்களையும் நடத்தி வந்தார் சிவாஜி.
    `வீரபாண்டிய கட்டபொம்மன், `வியட்நாம் வீடு’ `தங்கப்பதக்கம்’ ஆகிய படங்கள் நாடகங்களாக வந்தவைதான்.
    ஆரூர்தாஸுக்கும் சினிமா புகழ் இருந்ததால், அவரையும் நாடகம் எழுதித்தரும்படி சிவாஜி கேட்பார்.
    அப்போதெல்லாம், `நாடகம் எழுதிக் கொடுத்து, நாடகம் நடக்கிற அன்னிக்கு நூறோ இருநூறோ பணம் வாங்கறதை விட, உங்க படத்துக்கு எழுதி ஆயிரக்கணக்கில் வாங்கிக்கிறேன்’ என்பார் ஆரூர்தாஸ்.
    சில சமயங்களில் நாடகம் நடக்கிற நாட்களில் தனக்கு படப்பிடிப்பு இல்லாவிட்டால், பேச்சுத்துணைக்காக ஆரூர்தாஸை அழைத்துக்கொண்டு, ராஜா அண்ணாமலை மன்றம், `மியூஸிக் அகாடமி,’ ` ஆர்.ஆர். சபாவிற்கு காலையிலேயே போவார் சிவாஜி.
    மதியம் வரையில் பழைய கதைகளையெல்லாம் பேசுவார். வீட்டிலிருந்து சாப்பாடு வரும். சாப்பிட்டுவிட்டு, அங்கேயே மேடையிலேலே துண்டை விரித்து போட்டுத் தூங்கிவிடுவார். சொல்லி வைத்தாற்போல் சரியாக நான்கு மணிக்கு எழுந்துவிடுவார். உடனே ஒரு காபி குடித்துவிட்டு ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொள்வார். அதை அப்படியே இழுத்துக்கொண்டு நாடக ஆசிரியரை வரவழைத்து அன்றைய நாடக வசனங்களை அப்படியே படிக்கச் சொல்லி கேட்பார்.
    இதையெல்லாம் அருகிலிருந்து பார்த்த ஆரூர்தாஸ் பிரமித்துப் போவார். சிவாஜியின் தலைசிறந்த நடிப்பு ஒரு புறம் இருக்கட்டும். மறுபுறம் அவருக்கு இருக்கும் `கலை ஒழுக்கம்,’ உண்மையான தொழில் பக்தி, `அக்கறை’ இவைதான் சிவாஜி கணேசன் என்ற ஒரு மாபெரும் நடிகனை செதுக்கி உருவாக்கி, உன்னதமான நிலைக்கு உயர்த்தி இருக்கிறது.
    `செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம்’ என்று பாடினார் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அந்தப் பாடல் சிவாஜிக்கு மிகவும் பொருந்தும்.
    இப்போது அன்னை இல்லத்தில் கதையின் இரண்டாவது பகுதியை படிக்க ஆரம்பித்தார் ஆரூர்தாஸ். சிவாஜியின் அந்த கதாபாத்திரத்தோடு அப்படியே ஒன்றிப்போய் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டு படித்துக்கொண்டிருந்தார் ஆரூர்தாஸ். அதுவரையில் லேசாக இருந்த அந்த கதாபாத்திரம், இடைவேளைக்குப் பிறகு வரும் நிகழ்ச்சிகளால் கனமாக இருக்கவேண்டும் என்பதற்காக வசனங்களின் எடையைச் சற்று கூட்டி இருந்தார் ஆரூர்தாஸ். சிவாஜி அதை புரிந்துகொண்டார் என்பதை அவரது முகபாவத்திலிருந்து புரிந்து கொண்டார் ஆரூர்தாஸ்.
    படித்துக்கொண்டே வரும்போது, இடையிடையே ஆங்காங்கே அவர் கேட்ட விவரங்கள், அதற்கு ஆரூர்தாஸ் அளித்த விளக்கங்களுடன் படத்தின் உச்சக்கட்ட காட்சிக்கு வந்தார் ஆரூர்தாஸ். சரோஜாதேவி – போலி சவுகார் ஜானகி – எம்.ஆர். ராதா, ஓ.ஏ.கே. தேவர் – எஸ்.வி. ராமதாஸ் ஆகிய பாத்திரங்கள். நடுவே சிக்கிக்கொண்ட சிவாஜி!
    (தொடரும்)

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •