Page 251 of 400 FirstFirst ... 151201241249250251252253261301351 ... LastLast
Results 2,501 to 2,510 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2501
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


















    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2502
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes Harrietlgy liked this post
  6. #2503
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி பாட்டையும், சுந்தர் எனும் என் நாயகனை நான் எழுதியதையும் பாராட்டிச் சிறப்பித்தமைக்கு..

    ஞான ஒளியாரே.. ( நன்றி : ஆதிராம் சார் )
    வணங்குதலுடன் நன்றி.

    அன்பான வேண்டுகோள் ஒன்று..

    கோபால் சாருக்கும், முரளி சாருக்கும், ராகவேந்திரா சாருக்கும் அன்பளித்தது போல்
    எனக்கொன்று வேண்டும்...

    கடைசித் தருவாயிலிருக்கும் பாதிரியாருக்காக
    சிறப்பு அனுமதியின் பேரில் சிறையிலிருந்து வரும் ஆன்டனி, மெலிதான கேவலில் துவங்கி,
    பாதிரியார் அருகழைக்க, மடிந்து விழுந்து வெடித்தழுவதை நீங்கள் எழுதிப் படிக்க வேண்டும்.
    ------------------

    K.C.S சார்...

    என் எழுத்துகளை வாழ்த்துவதில் எப்போதும்
    ஆர்வம் காட்டும் தங்களை நன்றிகளோடு
    நினைக்கிறேன். மகிழ்கிறேன்.
    ------------------

    ராகவேந்திரா சார்..

    சிவந்த மண் - சொர்க்கம் ஒப்பீட்டை முன்னமே
    ( மெல்லிசை மன்னர் அஞ்சலி நிகழ்ச்சி குறித்து
    எழுதும் போது என்று நினைவு) நீங்கள் சுருக்கமாக எழுதியிருந்தீர்கள். அது ஆனந்தம்.

    இது பேரானந்தம்.

    Sent from my P01Y using Tapatalk

  7. Likes Harrietlgy liked this post
  8. #2504
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவந்த மண்- 1969 -சில நினைவுகள்.(9th Nov )

    ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.

    தமிழ் திரை பட உலக சரித்திரத்திலேயே இவ்வளவு hype உடன் வெளியான இரண்டே படங்கள் சந்திரலேகா, சிவந்த மண் .இரண்டும் பெரும் பொருட்செலவில் தயாரிக்க பட்ட பிரம்மாண்டங்கள். முதல் முறை வெளிநாட்டில் தமிழ் படம். ஹேமமாலினி நடிப்பதாக இருந்த படம்.(கஸ்டடி battle கோர்ட் கேஸ் இருந்ததால் ஹேமா மாலினி நடிக்க முடியவில்லை. பெரிதும் வருந்தி தமிழில் ஒரே படம்தான் நடிப்பேன்.அது சிவாஜி கணேசனுடன்தான் என்று பேட்டி கொடுத்தார்). 1967 என்று நினைவு. சிவாஜி,ஸ்ரீதர் கலந்து கொண்ட கூட்டத்தில் ,ஸ்ரீதர் இந்த படத்தை அறிவித்து ,தமிழிலேயே முத்த காட்சி இடம் பெற போகும் முதல் படமாக இருக்கும் என்றார். பின்னால் பேசிய சிவாஜி, அதெல்லாம் சரிதான்,என் மனைவி இருக்கும் போதா இதை சொல்வது என்று ஜோக் அடித்தார். தமிழ் நாடே திரு விழா கோலம் பூண்டு இந்த படத்தை வரவேற்றது. சிவாஜி வேறு ஆனந்த விகடனில் "அந்நிய மண்ணில் சிவந்த மண்" என்ற தொடர் எழுதி இருந்தார்.

    சிவந்த மண் போல் பிரம்மாண்டம் கொண்ட படம் ,இந்திய திரையுலகம் இது வரை கண்டதில்லை. வெளி நாடுகள்(அதுவும் ஐரோப்பிய) படபிடிப்பு, கப்பல்,ஹெலிகாப்ட்டர், காட்டாறு,சுழல் மேடை என்று ஏக தட புடல். படமும் மிக மிக பிரம்மாண்ட வெற்றி படமாய் பத்து திரையரங்குகளில் நூறு நாள் கண்டது. பெரும்பான்மையான திரையரங்குகளில் ஐம்பது நாட்களும், repeat ரன்களில் பிரமாதமாய் ஓடி(பைலட் தியேட்டரில் 80 களில் 75 நாட்கள்)

    எனக்கு தெரிந்த எந்த சிவாஜி படத்திலும்,heroine அறிமுகம் ஆகும் முதல் காட்சி இவ்வளவு அமர்க்களமாய் வரவேற்பு பெற்றதில்லை.(காஞ்சனா போன் பேசும் காட்சி). சிவந்த மண்ணின் சிறப்பே அதுவரை வந்த action படங்களில் இருந்து மாறு பட்டு ,கதாநாயகன் திட்டமிடுவார். வில்லன் ரியாக்ட் செய்வார். திட்டங்கள் படு சுவாரஸ்யமாய் ,படம் விறு விறுப்பாய் செல்ல உதவும். மூன்று மணி நேர இன்ப பயணம்.helocopter fight , கப்பல் வெடிகுண்டு காட்சி,தொடரும் சேஸிங், பட்டத்து ராணி, ரயில் பால வெடிகுண்டு காட்சி, அமர்க்களமாய் மாறி மாறி ஊசலாடும் உச்ச காட்சி என்று தமிழில் வெளி வந்த மிக மிக சிறந்த action ,adventure படமாய் இன்றளவும் பேச படுகிறது.

    எம்.எஸ்.விஸ்வநாதனின் பங்களிப்பு இந்த படத்தின் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்தியது.(கார்த்திக் சார் சொன்னது போல் அவரின் மிக சிறந்த படம்)ஒரு ராஜா ராணியிடம், முத்தமிடும் நேரமெப்போ, ஒரு நாளிலே உறவானதே,பட்டத்து ராணி, பாவை யுவராணி கண்ணோவியம்,சொல்லவோ சுகமான என்று ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை பாணி,ஒவ்வொரு நாட்டு இசை கோர்ப்பு, பின்னணி இசை(முக்கியமாய் கப்பலில் ராதிகா டான்ஸ்,மாறும் காட்சிகளுகேற்ப மாறும் இசை,) ஹாட்ஸ் ஆப் எம்.எஸ்.வீ சார். உங்களுக்கு கடன் பட்டுள்ளோம்.

    சிவாஜி இந்த படத்தில் மிதமான make -up ,natural hair style , rugged ,manly , subtle உடையலங்காரங்களில் படு படு படு இளமையாய், handsome ஆக இருப்பார்.காஞ்சனா பொருத்தமான ஜோடி. என் தூக்கத்தை பல இரவுகள் கெடுத்த romance சீன் ஒரு நாளிலே உறவானதே. ஒரு ஷாட்டில் கட்டி அணைத்து, சிவாஜி சொக்கி போவார்.எந்த வேடத்திலும் ,எப்படிபொருந்துகிறார் சிவாஜி?? அராபிய உடையிலும் !!! action ,ரொமான்சில் கூட சிவாஜியிடம் யாரும் நெருங்க முடிந்ததில்லை.

    ஹெலிகாப்ட்டர் காட்சி ,கப்பல் காட்சி, ஜெயில் சண்டை காட்சிகள் மிக மிக சிறப்பாக வந்திருக்கும். தேங்காயுடன் விமான சண்டை,செஞ்சி கிருஷ்ணனுடன் ஆற்றில் சண்டை, உச்ச கட்ட பலூன் சண்டைகள் சொதப்பல். (ஷ்யாம் சுந்தர் down down ) .வெளி நாட்டு காட்சிகள் சிறப்பாக படமாக்க பட்டிருக்கும்.(ஓடம் பொன்னோடம் படமாக்கம் படு மோசம் . பனி சறுக்கு காட்சியில் இசை உச்ச வேகம் பிடிக்கையில் skate செய்து கொண்டிருப்பவர் நின்று விடுவார்!!)

    ஸ்ரீதரின் திரைக்கதையமைப்பு புத்திசாலிதனமாய்,விறு விறுப்புடன் இருக்கும். இயக்கம் கேட்கவே வேண்டாம். சிவாஜி-ஸ்ரீதர் இணைவில் மிக சிறந்த படைப்பு இதுதான்.அடிமை பெண்ணிற்கு போட்டியாக வந்திருக்க வேண்டியது ,தீபாவளிக்கு தள்ளி போனது. அதனால் என்ன,நமக்குதான் தீபாவளி ராசியாயிற்றே.!!! இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சிவாஜி பிலிம்ஸ் ஒரு படத்தை கீழை நாடுகளில் (ஜப்பான் உள்ளிட்ட) படமாக்க திட்டமிட்டு ,திட்டம் கசிந்து விட்டதால்,மாற்று முகாம் அள்ளிதரித்த அவசர கோலத்தில் முந்தி கொண்டது.(மணியன் என்ற ........)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. Likes Harrietlgy liked this post
  10. #2505
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவந்த மண் படத்தின் பல தங்க புதையல்களின் நடுவே தொலைந்து விட்ட பிளாட்டின புதையலை பற்றி இந்த பதிவு.பிளாட்டினத்தின் மதிப்பு மக்களுக்கு புரியாததாலோ என்னவோ.

    ஒரு நாளிலே உறவானதே
    கனவாயிரம் நினைவானதே
    வா வெண்ணிலா இசையோடு வா
    மழை மேகமே அழகோடு வா
    மகராணியே மடி மீது வா

    நாளை வரும் "நாளை" என நானும் எதிர்பார்த்தேன்.
    காலம் இது காலம் என காதல் மொழி கேட்டேன்
    போதை தரும் பார்வை எனை மோதும் அலை மோதும்
    போதும் என கூறும் வரை பூவே விளையாடு
    வரும் நாளெல்லாம் இது போதுமே

    மஞ்சம் இது மஞ்சம் என மார்பில் விழி மூடு
    கொஞ்சும் இதழ் சிந்தும் என் நெஞ்சில் ஒரு கோடு .
    தஞ்சம் இது தஞ்சம் என தழுவும் சுவையோடு.
    மிஞ்சும் சுகம் யாவும் பெற வேண்டும் துணையோடு
    வரும் நாளெல்லாம்.இது போதுமே

    ஒரு நிர்ப்பந்தமாய் நடந்த காதல் ஜோடியின் நாலு பக்கம் வேடர் சூழ்ந்த நிலையில் (நண்பர் செஞ்சியும்)மானிரெண்டின் காதல்.(மகாராணியின் முதலிரவு கட்டாந்தரையில்).இரவு ஊருறங்கிய பின் குளிக்கும் மனைவியிடம் தாபத்தை கண்ணியமாய் வெளியிடும் புரட்சியாளன்.

    காஞ்சனாவின் தாபம் நிறைந்த விழிகளும்,நடிகர்திலகத்தின் காதல் வயப்பட்ட மோவாய் முத்தங்களும்.போதும் என கூறும் வரை அணைத்து,வினாடி கண் சொக்குவாரே !!!!!வரும் நாளெல்லாம் என்று வீணை மாதிரி மடி கிடத்துவாறே (50 ஆவது நாள் போஸ்டர் என நினைவு),மிஞ்சும் சுகம் யாவும் வரிகளில் காஞ்சனாவின் கண்களை பாருங்கள் .வரும் நாளெல்லாம் என மடியில் இரு கால்களை வெவ்வேறு நிலை மடித்து மயக்குவாறே....

    புரட்சியாளனின் இயல்பான முடியழகும் ,ஆண்மை நிறைந்த கட்டம் போட்ட சட்டையும்,make -up மிதமாக திராவிட மன்மதனின் இளமை பொங்கும் handsome என படும் ஆணழகும்(அந்த மூக்கு ...அடடா) ,காஞ்சனாவின் நாணம்,தாபம் நிறை பெண்மையும், ஆபாசமில்லாத உறுத்தாத ஈர உடையும் உங்களை வேறு உலகத்துக்கே அனுப்பும்.

    நடிகர்திலகத்தின் முதல் ஐந்து காதல்களுக்குள் வரும். நல்ல வேளை ...அசல் திட்ட படி பாலமுரளி இதை பாடவில்லை. டி.எம்.எஸ் -சுசிலாவின் மயக்கும் குரலும் (ரெண்டு பெரும் சௌகரியமான pitch இல் ),எம்.எஸ்.வியின் சாதனை பாடல்களில் ஒன்று.

    பார்த்து பார்த்து பார்த்து பார்த்து ,கேட்டு,கேட்டு,கேட்டு,கேட்டு மகிழவும்.

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. Likes Harrietlgy liked this post
  12. #2506
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்களே,

    திரியின் வேகம் கபாலி போன்ற உதவாக்கரை படங்களினால் தடைபடுவது வருத்தத்திற்குரியது. நிறைய தேவையற்ற முடக்கங்கள்.
    நண்பர்களே, குறைந்த அளவில் ஆனாலும் செம்மையான ஊக்கம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி.என்னோடு பழகிய நண்பர்களுக்கு தெரியும், என்னுடைய தோன்றியதை அப்படியே சொல்லிவிடும் குணத்தால் ,எதிரிகளை விட,நண்பர்களை அதிகம் சோதித்தவன் சிவ பெருமானை போல.அனைத்தையும் பொறுத்து எழுத்தை தொடர்ந்தவர்களுக்கு நன்றி.

    மகிழ்வான செய்தி. இதுவரை நம் நடிகர்திலத்தை பற்றி பல புத்தகங்கள் வெளி வந்தாலும் அவை ,உலக பெரு நடிகனை பற்றிய சராசரி தமிழக பார்வையில் வந்தவை. இந்த குறை போக்க எனது பொன்னெழுத்துக்கள் உலகத்தரத்தில் முதலில் ஆங்கிலம் கலந்த தமிழிலும்,பிறகு ஆங்கிலத்திலும், நாசர்,அஜித் ஹரி ,இயக்குனர் மகேந்திரன் முன்னுரையில் வெளியாகும்.இதை இலவசமாக கொடுக்கும் எண்ணமே எனக்கு உள்ளது. எனது வாழ்நாளை பொன்னாட்களாக மாற்றிய உலக கலைஞனுக்கு எனது சிறு காணிக்கை.

    ராகவேந்தர்- தலைவா, நவம்பர் 9 முதல் சடேரென உறக்கம் விழித்து எனது ஆதர்ச திரியை உயிர்ப்பித்த உங்களுக்கு முதல் தலைவணக்கம் பிதாமகரே .

    வாசு- என்னதான் நாங்கள் மாஞ்சு மாஞ்சு எழுதினாலும் நீ வந்தால் களையே தனிதான். ஞான ஒளியுடன் வந்தால் கேட்கவா வேண்டும்?

    முரளி- உன் தொலைபேசி வாழ்த்துக்கு நன்றி. பாலும் பழமும் விமரிசனத்தில் ராகவேந்தர் மிரட்டிய பிறகு வாழ்த்தெல்லாம் தொலைபேசியில் மட்டுமே.

    சந்திரசேகர்- அவருக்கு வாரிசுகள் சொத்தையும் ,அவர் புகழையும் சொந்தம் கொண்டாடட்டும். நாமெல்லாம் பலன் கருதாமல் அவருக்காக உழைக்கும் உண்மை வாரிசுகள். நாம் செய்வது என்றென்றும் நிலைக்கும்.அவர் நமக்கு வாரித்தந்த கலை செல்வமே நமக்கு போதும்.

    ஆதவன் ரவி- உனக்கு என்ன சொல்லி பாராட்ட? நேரம் கிடைக்கும் போது கவிதையிலேயே பாராட்டி விடுகிறேன். அதுதான் கவிதை ஞாயம்,உன் கவிதைக்கும் ஞாயம்.

    செந்தில் வேல்- என்னுடன் சேர்ந்து 4000 கண்ட உனக்கு ,கண்ட படி பாராட்டை அள்ளி வழங்க கடமை பட்டுள்ளேன்.

    சிவா- தங்களை பாராட்ட தகுதியற்றவன். தங்களின் ஈடுபாட்டோடு ஒப்பிடும் போது நானெல்லாம் தூசு . உங்களின் உண்மை ஈடுபாடு இணையற்றது.

    முரளி- உன்னிடம் நிறைய எதிர்பார்த்து ஏமாந்தவன். உன்னை பாராட்டுவது வீண். சமீபமாக உன்னுடைய பங்களிப்பு ஒன்றுமேயில்லை.மன்னிக்கவும்.(வெட்டிவிடாதே)
    Last edited by Gopal.s; 12th November 2016 at 03:28 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. Likes sivaa, Harrietlgy liked this post
  14. #2507
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி.. கோபால் சார்.

    எனக்குப் பிரியமான தங்களின் கவிதையைத்தான் "ஒரு நாளிலே" வர்ணனையாகத் தந்து விட்டீர்களே !?

    உலக மகா கலைஞனுக்குக் காணிக்கையாகும்
    தங்களின் பொன்னெழுத்துகள் தாங்கி வரும்
    நூலுக்கு நல்வாழ்த்துகள்.

    Sent from my P01Y using Tapatalk

  15. Likes Harrietlgy liked this post
  16. #2508
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நவராத்திரி- 2

    ஏதோ திணித்தது போல இல்லாமல் அழகான திரைக்கதை. அப்பா பார்த்த மாப்பிள்ளை தான் காதலித்த ஆனந்தன் என்று உணராத
    நளினா , வீட்டை விட்டு விரக்தியுடன் வெளியேறி தற்கொலைக்கு முயல ,அற்புதராஜ் என்ற பணக்கார ,மனைவியை இழந்து,ஒரே பெண்குழந்தையுடன் வசிக்கும் கனவானால் காப்பாற்ற பட்டு,அங்கிருந்து வெளியேறி ஒரு விபசார விடுதியில் சிக்கி ஒரு குடிகார காமுகனால் (மனைவியின் நோயால் உறவு வேட்கையில் வாடும் ஒரு பூஞ்சை மனம் கொண்டவன்)வல்லுறவிற்கு உந்த பட்டு, அங்கிருந்தும் தப்பியோடி ,பைத்தியமாய் நடித்து, பைத்தியக்கார ஆஸ்பத்தரியில் அடைக்க பட்டு, Dr .கருணாகரன் என்பவரால் புரிந்து கொள்ள பட்டு, அங்கிருந்தும் தப்பி, சந்தர்ப்பவசத்தால் கொலை செய்ய நேரும் ஒரு ஏழை மனிதனின் உணர்ச்சிகளை உணர்ந்து அவன் கொலை செய்ய படுவதை பார்த்து அங்கிருந்தும் ஓடி , விரக்தியில் ஓடும் ரயில் முன் உயிரை மாய்க்க முடிவெடுக்கிறாள். ஆனால் ஒரு நல்ல அப்பாவி விவசாயி சாந்தப்பனால் காப்பாற்றப்பட்டு ,அங்கிருந்து ஓடி , ஒரு நல்லிதயம் கொண்ட செல்வராஜ் என்ற தொழுநோயாளிக்கு உதவி, அங்கிருந்து வெளியேறி , ஒரு கூத்து நாடக குழுவிடம் அவர்களுக்கு ஒரு கூத்தில் நடித்து உதவ கோரப்பட்டு உதவ, கடைசியில் மாறுவேடம் போட்டு ,வீரப்பன் என்ற உயர் காவல் அதிகாரியிடம் அழைத்து வர பட, வீரப்பன்,ஆனந்தனின் சித்தப்பா என்ற உண்மை வெளியாகி ஆனந்தனிடன் சென்று சேர்ந்து கல்யாணம் நிறைவேறுகிறது. நவராத்திரி நாட்களில் நளினா கடந்து வந்த ,மனிதர்கள் கல்யாண விருந்தினர்களாக ஒரு சேர வந்து வாழ்த்த , சுபம். இயல்பான நகைசுவை பைத்தியக்கார விடுதியில், சாந்தப்பனின் வீட்டில், கூத்து நாடகத்தில்,உச்ச காட்சியில் என்று ஜனரஞ்சகமாக போவதே தெரியாமல் பொழுது போகும். சிந்தியுங்கள் ,கேவலமான தசாவதார அலுப்பூட்டும் திரைக்கதை,வலுவில் திணிக்க பட்ட ஒட்டாத பாத்திரங்கள் ,கொடூரமான ஒப்பனை ,உலகநாயகன் என்ற கேவலமான சுய தம்பட்டம் என்ற கொடூர சித்திரவதை நாடகமா? சினிமாவா?சிஷ்யன் என்று சொல்லி கமல் அடித்த கூத்து சகிக்க இயலாத சித்திரவதை.நவராத்திரிதான் உண்மை சினிமா.உண்மை திறமை காட்டும் நடிப்பு.

    இதில் ஒரு விஷயம்.

    எல்லோருமே ஏதோ ஒரு ரசத்தைத்தான் ஒவ்வொரு பாத்திரங்களும் பிரதிபலிப்பதாக ஏ.பீ.என் அவர்களில் டைட்டில் பேச்சு கேட்டு உளறி கொண்டிருந்தனர்.

    அற்புதராஜ் ஒரு அற்புத கனவான் மட்டுமல்ல, பாசம்,கண்ணியம், உள்ளோடிய சோகம் கொண்டவன்.

    குடிகாரன் பயந்தவன் மட்டுமல்ல. காம தீயின் தகிக்கும் தாபம் சுமந்தவன்,மனசாட்சியின் நச்சரிப்பு தாங்கியவன்.

    டாக்டர் கருணாகரன் கருணை மட்டுமல்ல, கடமை,புத்தி கூர்மை ,எடை போடும் திறமை கொண்ட முதியவர்.

    கொலைகாரன் ஆத்திரம் மட்டும் கொண்டவனல்ல, தம்பியை இழந்த உள்ளாடிய சோகம்,துயர், கொண்ட பழி வாங்கும் வெறியுணர்வு, ஒரு அடிப்படை மனிதனுக்குள்ள செயலுக்கு நியாயம் தேடும் விழைவு,சவால் விட்டு எதிரிகளை சாய்க்கும் ஒரு குழந்தைமை ,போனால் போகட்டும் என்ற விரக்தி அத்தனையும் பிரதிபலிப்பான்.

    சாத்தப்பன், அப்பாவி நம்பிக்கைவாதி,நல்லவன் தாண்டி, குறும்பும் பிரதி பலிக்கும்.ஆற்றாமை கொண்ட நல்லமனம்.

    செல்வராஜ், சுயவெறுப்பு,விரக்தி,நம்பிக்கையின்மை , குதற பட்ட வலி ,நன்றியின் அணைப்பில் ஆசுவாசம் என்று அனைத்தும்.

    வீரப்பன் ஆண்மை நிறை கம்பீரம்,வீரம், குறும்பான அட்டகாசம் என்ற குணங்களின் கலவையாய்

    ஆனந்தன் காதலி சார்ந்த விரக்தி, தோல்வி மனம்,காதல்,ஆனந்தம்,அவசரம் அனைத்தின் கலவை.

    உணருங்கள் ,ஒரு பாத்திரத்துக்கு கிட்டத்தட்ட 13 நிமிடங்கள் மட்டுமே நேரம்.பாடல்களை கழித்தால் 11 நிமிடங்கள் மட்டுமே.

    இந்த மேதை பாத்திர வார்ப்புகளுக்கு எந்த நடிப்பு முறைமையும் சாராத ,தன்வயப்பட்ட கற்பனை ஒன்றை மட்டுமே சார்ந்து இதனை சாதித்துள்ளார்.

    பாமர மக்களுக்கு மனதில் பதியன் போட mannerism என்ற ஆயுதம்.

    அற்புத ராஜுக்கு தோள் குலுக்கல் , குடிகாரனுக்கு பார்வை ,கருணாகரனுக்கு நடை -இள முறுவல்,கொலைகாரனுக்கு குரலின் தன்மை, சாந்தப்பனுக்கு வலிய கைகால் உடல் மொழி, தொழுநோயாளிக்கு உடல் குறுக்கல் -இறைஞ்சும் குரல்-பார்வை குறைவுக்கு கையின் உபயோகம் ,வீரப்பனுக்கு நடை-சிரிப்பு, ஆனந்தனுக்கு விழிகளின் கூர்மை என்று பாத்திரங்களின் வசியத்தை ,வீச்சை நெஞ்சுக்குள் ஆழமாய் குறுகிய நேரத்தில் ஆழமாய் ஊன்றுவார்.

    இனி இந்த படத்தின் ,நடிப்பின் நுண்ணிய தருணங்களை மேலும் அலசுவோம்.

    (தொடரும்)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  17. Thanks Harrietlgy thanked for this post
    Likes Harrietlgy liked this post
  18. #2509
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நெஞ்சத் திரையில் நடிகர் திலகம் -11
    -----------------------------------------------------------------

    தினம் தினம் திருவிழாவைக் கொண்டு வருகிறார்
    நடிகர் திலகம்.

    "சிவந்த மண்" பார்த்து சிலிர்த்த விழிகளில் அடுத்த ஆனந்தம் விதைக்க நேற்று "அண்ணன் ஒரு கோயில்" ஆயிற்று.

    இதோ.. இதனடியில் நான் இணைத்திருக்கிற
    காட்சியைப் பார்த்து ரசிக்காதவர்களின் ஐநூறு,ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மாற்ற முடியாமலே போகக் கடவது.

    இணைந்த இந்த காட்சித் துண்டில் நான் குறிப்பிடும் இடம் ஒரு அழைப்பு மணிச் சத்தத்தோடு துவங்குகிறது. நம்மைச் சிறந்ததோர்
    ரசனை உலகத்திற்குள் அழைக்கும் அழைப்பு மணி
    அது.

    மாடிப்படியிலிருந்து வேகமாய் இறங்கி வரும்
    ஜெய்கணேஷ் கதவு திறக்க, தலைவர் பரபரப்பாய்
    உள்ளே நுழைவார்.

    போலீசாரால் தீவிரமாக தேடப்படும் டாக்டர் ரமேஷ்,
    அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, ஒரு
    குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியிருப்பார்.

    ஜெய்கணேஷிடம் அந்தக் குழந்தையின் நலம் விசாரிக்கும் அக்கறையாகட்டும்..

    "ஆபரேஷன் செஞ்சது நீங்க.. நல்ல பேரென்னவோ
    எனக்கு" என்று ஜெய்கணேஷிடமிருந்து அடிக்கும்
    பாராட்டுச் சாரலில் கொஞ்சமும் நனையாது,
    கடமையாய் காகிதமெடுத்து மருந்து எழுதுவதாகட்டும்..

    ஒரு கண்ணியமான மருத்துவர் கம்பீரமாகத் திரைக்கு வருவார்.

    நண்பனான மருத்துவரிடம் கெஞ்சி அனுமதி பெற்று, பழசத்தனையும் மறந்து படுத்திருக்கும்
    தங்கையைப் பார்க்கச் செல்லும் துடிப்பென்ன?

    கவலை பூசிய கை விரல்கள் கொண்டு தங்கையின் தலைகோதும் மென்மையென்ன?

    கண்விழித்துப் பார்க்கும் நா வறண்ட தங்கை தண்ணீர் கேட்க.. தங்கையின் இன்றைய நிலையை ஜீரணிக்கவியலாதவராய் எச்சில் கூட்டி
    (ஒரு டாக்டர் விழுங்கும் கசப்பு மாத்திரை..?) விழுங்குவதென்ன?

    உள்ளிருந்து பொங்கித் திரண்டு வரும் கண்ணீர்த் துளி தங்கை முகம் வீழ்ந்து தெறிக்க.. விழிக்கும்
    தங்கை "நீங்க யாரு" என்று கேட்க.. உடைந்து நொறுங்கிய ஒரு குரலில் "டாக்டர்" என்று சொல்வதென்ன?

    தன்னையே மறந்து விட்ட தங்கையை நினைந்தழும், நீரோடு பானை விழுந்துடையும்
    சத்தத்தோடு வரும் அந்த அழுகையென்ன?

    அழுகையோடு கலந்த தன்னிரக்கமென்ன?

    இயலாமையைக் குறிப்பதென்ன? இடை விடாத
    புலம்பலென்ன?

    நினைத்து,நினைத்து அழும் போது நீல நிற கைக்குட்டையை மீண்டும் மீண்டும் பார்ப்பதென்ன?

    ஆடிப் பாடி மகிழ்ந்திருந்தவள் அடங்கிப் படுத்திருக்கும் நிலையை சிரித்தும் அழுதும் செப்புவதென்ன?

    ஒரு ஐந்து நிமிட நேரத்திற்குள் ஆயிரம் பாவங்கள்
    காட்டி நம்மை நடிகர் திலகம் தன் உலகத்துள் இட்டுச் செல்வதென்ன?

    "அண்ணன் ஒரு கோயில்" திரைக் காவியத்தை
    அதன் தினமான நேற்று பார்க்கும் ஆர்வத்தைத்
    தூண்டி விட்ட ராகவேந்திரா சாருக்கும், முரளி சாருக்குமான நன்றிகள் என் நெஞ்சோடு கனப்பதென்ன?




    Sent from my P01Y using Tapatalk

  19. Likes Harrietlgy liked this post
  20. #2510
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    "நவராத்திரி"-

    அசத்துகிறீர்கள்... கோபால் சார்.

    முன்பொரு முறை ஒரு வாரப் பத்திரிகையில்
    நாமே கேள்வி கேட்டு நாமே பதில் சொல்கிற மாதிரி ஒரு போட்டி வைத்தார்கள். நானும் எழுதினேன்..அனுப்பவில்லை.

    என் கேள்வியும்..என் பதிலும்...

    " ஒன்பதை விட பத்துதானே பெரிது?"


    "ஒன்பதுக்குப் பிறகுதான் பத்து."

    Sent from my P01Y using Tapatalk

  21. Likes Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •