Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    (31)

    தாங்க முடியாத மன வேதனையுடன் அன்னை கலைவாணியின் முன் அமர்ந்து வேண்டுவார்.அன்னை
    தோன்றுவாள். ஊனம் நீக்குவாள். உருவம் அழகாக்குவாள்.

    மிக கம்பீரமான எழில் தோற்றம்
    பெறும் நடிகர் திலகத்தை எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கென்னவோ.. கம்பீரத் தோற்றம் பெறுவதற்கு முந்தைய விநாடியில், அன்னையை வியப்போடு வாய்
    பிளந்து பார்த்திருக்கும் அந்தத்
    தோற்றம் மிகப் பிடிக்கும்.

    (32)

    அன்னை அருள் வழங்கி, பேசும்
    சக்தியையையும் தந்து விட்டாள்.பிறந்தது தொட்டு
    அந்த நிமிடம் வரை பேச முடியாதிருந்தவருக்கு பேச்சு
    படிப்படியாக வரும் அதிசயம்
    நிகழ்கிறது.

    அய்யன் தன் முதல் வார்த்தைக்காக நிரம்பவும்
    பிரயத்தனப்பட்டு, கண்கள் சுருக்கி, உள்ளிருந்து வார்த்தைகள் தேடும் பாவனையைப் பார்க்க நேரும்
    போதெல்லாம் உடனிருப்போர்
    முகத்தைக் கவனிப்பேன்.

    இதுவரை நான் பார்த்ததில் தானும் கண்கள் சுருக்காமல்
    திடமாய் அமர்ந்து பார்ப்பவர்
    எவரையும் நான் பார்த்ததில்லை. இனியும் பார்க்கப் போவதில்லை.

    (33)

    தனக்கு ஒலி தந்து, மொழி தந்த
    அன்னையை வியந்து பாடும்
    "அகர முதல எழுத்தெல்லாம்"
    பாடலினூடே "ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய்"
    என்கிற வரியின் போது அன்னைக்குத் தன் கண்களில்
    காட்டும் நன்றிப் பெருக்கு
    அருமையானது. அரிதானது.
    வேறு யாரிடத்தும் காணக்
    கிடைக்காதது.

    (34)

    அன்பு மகனுக்காக அழுது விட்டுக் கிளம்பிப் போன அருமைத் தந்தை வீடு திரும்பினால்... அலங்காரத்
    திருவடிவாய் மைந்தன்.

    ஆச்சரியப்படும் தந்தையிடம்
    தனக்கு பேச்சு வந்த கதையைச்
    சொல்லி விட்டு, குரல் தழுதழுக்க "கலைமகளுக்குப்
    பூமாலையே சூட்டி வந்த நான்
    பாமாலை சூட்டி விட்டேனப்பா..
    பாமாலை சூட்டி விட்டேன்"என்று நடிகர் திலகம்
    சொல்லும் போது அவரது ஒளி
    மிகுந்த கண்கள் கண்ணீரோடு
    காட்டும் பெருமிதம்.. அவர்
    நமக்குக் கிடைத்த பெருமிதம்
    போல.

    (35)

    இறைவன் மீது நம்மவர் பாடும்
    பாடல் கேட்டு அசந்து போகும்
    அரசி, தான் கழுத்தில் அணிந்த
    விலையுயர்ந்த முத்து மாலையை பரிசளிக்க எண்ணி,
    "நானே அகமுவந்து கொடுக்கிறேனென்றால்..."
    என்கிற கர்வமான வாக்கியத்தை உபயோகிப்பார்.
    கல்விக்கன்றி எதற்கும் அடிபணியாத நம்மவர் இந்த
    இடத்தில் காட்டுகிற வெகு
    அலட்சியமான உடல் மொழிகளைக் கவனியுங்கள்...
    நடிகர் திலகத்துள் வித்யாபதி
    ஆழ இறங்கியிருப்பது புரியும்.

    (36)

    இதே காட்சியில்
    இன்னொன்று...

    அந்த மாலையைப் பரிசாகத்
    தர எண்ணும் அரசி, "விலை
    மதிப்பற்ற பரிசு" என்று ஒரு
    முறை சொல்வார். நிறைய
    வாக்குவாதங்களுக்குப் பிறகு
    அதை வாங்க மறுத்து விடுவார்
    நடிகர் திலகம். கடைசியில்
    அரசி "பரிசு..?" என்று நீட்ட,
    "விலை மதிப்பற்ற பொருள்..
    தங்களிடமே இருக்கட்டும்.."
    என்பார். பதிலாக இல்லாமல்
    பதிலடியாக வார்த்தைகளை
    மாற்றத் தெரிந்தவரன்றோ..
    நம் வித்யாபதி..?

    (37)

    அரசியைப் பகைத்துக் கொண்டதற்காக அப்பா கண்டிப்பார்... அரசியால் பிள்ளைக்கு ஆபத்து வருமோ
    என்ற பயத்தில்.

    "செங்கோல் அவர்கள் கையில்
    என்றால் எழுதுகோல் என் கையில்" என்று நடிகர் திலகம்
    சொல்வார். அப்போது அவர்
    அகல விரிக்கும் கண்களில்
    காட்டும் பயமற்ற அலட்சிய பாவங்களில் இன்னும் நூறு தலைமுறைக் கலைஞர்களுக்கான பாடங்கள்..

    (38)

    அரசவைக்கு வித்யாபதியை
    வரச் சொல்லி அழைப்பு வரும்.
    வருவார்... அரசவைக்குள்.

    கொஞ்ச நேரத்துக்கு முன்
    நாரதராய் நடந்த பூனை நடையல்ல இது... புலி நடை.

    (39)

    அரசவையில் அரசியும், தளபதியும் மாற்றி, மாற்றி
    கேள்வி கேட்பார்கள்.

    தளபதி கேட்கிறார்..
    " அழியாதிருப்பது..?"

    வித்யாபதியின் பதில்..
    "கலைஞனின் காவியம்."

    அழியாதிருக்கும் காவியத்துக்கு
    "சரஸ்வதி சபதம்" ஒரு சான்று.

    (40)

    கொண்ட கொள்கையில் உறுதியாயிருப்பவர்களின்
    கோபம் பலமானதாகவே இருக்கும். அரசியைப் புகழ்ந்து
    ஒரு கவி பாடச் சொல்லி திரும்பத் திரும்ப வலியுறுத்தப்
    படும் கோபத்தில்" இந்த மனித
    ஜென்மங்களைப் பாடுவதில்லை" என்று சொல்லும் உறுதியும், அந்தக்
    கைவீச்சும் இதயக் குறிப்பேட்டில் அழுத்தமாகப்
    பதிவானவை.

  2. Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •