-
16th November 2016, 10:36 PM
#11
வாசு, சாரதா, ஆதவன் ரவி, கோபால் போன்ற திரியின் சூப்பர் ஸ்டார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பங்களிப்பு செய்யும்போது கிடைக்கும் ஆனந்தமே தனி. ஆயிரம் facebook, whatsapp வந்தாலும் நமது மய்யம் நடிகர் திலகம் திரி போல் வரவே முடியாது என்ற என் எண்ணம் மேலும் வலுப்படுகிறது.
சாரதா, உங்கள் சிவந்த மண் பதிவு என்னால் மறக்கவே முடியாது. முதன் முறை நீங்கள் அதை பதிந்த போது அதன் பின்னூட்டமாக அந்த காட்சியின் சில சிறப்புகளை பற்றி நான் பதிந்திருந்தது இப்போதும் நினைவில் நிற்கிறது. ("உணர்ச்சிகள் வார்த்தையில் அல்ல செயல்களில் வேண்டும்" என்று ரங்காராவிடம் ஒரு காலை உயர்த்தி வசனம் பேசும் முறை, "இந்த நாட்டின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்" என்று பதிலளிப்பது பற்றியெல்லாம்). அந்த சுகமான நினைவுகளை மீண்டும் நினைவு கூற வைத்ததற்கு நன்றி. அது போல் வாசு குறிப்பிட்ட கடவுள் தந்த இரு மலர்கள் பாடல் காட்சியை பற்றி நான் முன்பு எழுதியிருந்ததை நினைவு வைத்து எழுதியது உங்களுக்கே உரித்தான பண்பு.
வாசு,
நான் என்ன சொல்வது? நம் உள்ளில் கலந்து விட்ட ஒரு காவியத்தை அதன் ஒரு உயிர்ப்பான காட்சியைப் பற்றி நீங்கள் எழுதுவதுடன் கூடவே கவிதை சித்தர் ஆதவன் ரவியையும் எழுத வைத்து "நற்கருப்பஞ்சாற்றினிலே தேன் கலந்து பால் கலந்து செழுங்கனிதிச்சுவை கலந்து" என்று புலவர் பாடியது போல் ஒரு விருந்தே பரிமாறி விட்டீர்கள். அதுவும் நீங்கள் போட்டிருக்கும் அந்தக் காட்சி ஆஹா! (என்ன ஆனான் உன் பணக்கார மாப்பிளை?)
ரவி,
அருமை என்பது சம்பிரதாய வார்த்தை. தொடருங்கள்!
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
16th November 2016 10:36 PM
# ADS
Circuit advertisement
Bookmarks