Page 349 of 400 FirstFirst ... 249299339347348349350351359399 ... LastLast
Results 3,481 to 3,490 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #3481
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes Harrietlgy, sivaa liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3482
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes sivaa liked this post
  6. #3483
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes sivaa liked this post
  8. #3484
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு கிராமத்தோட வணிகம் அந்த ஊரு சந்தைய சார்ந்தது. எல்லாமே விக்கறதும் வாங்கறதும் அங்க நடக்கும்.பஞ்சம் பொழக்க வந்தாச்சு அந்த ஊருக்கு.அப்பிடியே இருந்தா பொழப்பு எப்பிடி நடக்கும்? அதான் ஒரு பரிசல அக்கரைக்கும் இக்கரைக்கும் ஓட்டி வர்ற வருமானத்துல பொழப்பு நடத்துறா குயிலு.அந்த வருமானம் பத்த மாட்டேங்குது.அதனால இன்னொரு பரிசல வாங்கி ஓட்டுனா ஓரளவுக்கு சமாளிச்சரலாமேன்னுயோசன வருது.இன்னொரு பரிசலுக்கு என்ன வழி? இருக்கிற ரெண்டு ஆட்ட வித்து பரிசல் வாங்கிக்கலாம்னு சந்தக்கு ஆடுகள கொண்டாறா.ஆனா யாபாரத்துல அவ்வளவு நெளிவு சுளிவு அவளுக்கு தெரியல.பேச்சுக்கேத்த வினயம் இல்ல.மலைச்சாமியும்அந்த சந்தைக்கு வராரு.இவளயும் பாக்குறாரு.என்ன விஷயம்னு கேட்டும் தெரிஞ்சுக்கிடறாரு.அவளோட சாமார்த்தியம் யாபாரத்துக்கு ஆகாதுன்னு தெரிஞ்சு போச்சு பெருசுக்கு.சரி, விவரம் தெரியாத பொண்ணு, நாமளே வித்துக் கொடுத்துடலாம்னு விவரமா பேசி ஆட்டுகள நல்ல விலைக்கு வித்துக் கொடுக்கார் மனுஷன்.அவளுக்கு ரொம்ப சந்தோசம். காச வாங்கிட்டு
    சந்தைய சுத்தி வரா.அப்பத்தான் ஒரு போட்டோ கடய பாக்குறா குயிலு.போட்டோ எடுக்கணும்னு ஆச வந்துருது அவளுக்கு.போட்டோ கடக்காரன் எச்சா பணம் கேக்குறான்னு சண்ட போட்டுகிட்டு நிக்கிறா குயிலு.இதயும் பாக்குறாரு பெருசு.அங்கயும் ஒரு பஞ்சாயத்து.அவ கொடுக்க நினச்ச காசு போக மிச்ச காச தான் கொடுக்கிறதா சொல்ல பிரச்சன முடிஞ்சது.
    போட்டோவுக்கு நிக்கிறா குயிலு. திடீர்னு பெரிசையும் கூப்பிட்டு தன் பக்கம் நிக்கச் சொல்லிடறா.பெருசுக்கு கொஞ்சம் சங்கடம் தா(ன்) .வெகுளியா இருக்கா, வலுவுக்கு கூப்பிடாறாளேன்னு போட்டோ எடுத்துக்கிடறாரு.அந்தக் கத அப்ப முடிஞ்சிருச்சு.
    ***
    நம்ம குடும்பம் நல்லா இருக்கோ இல்லியோ அடுத்தவன் வீட்டுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிறதலதான் சில பேருக்கு பொழப்பே.அடுத்தவன் பண்ற நல்லது கண்ணுக்குத் தெரியுதோ இல்லையோ அவன் எப்ப இடறுவான்னு தெரிஞ்சுக்கிறதலதா இந்த மாதிரி மனுஷங்க கண் கொத்தி பாம்பா இருப்பானுங்க.அப்பிடி ஒருத்தன் இருக்கான் பாரபட்டில.அவன் உண்மையான தொழிலே கயிறு திரிக்கிறதேன்.
    மலைச்சாமியும் குயிலும் சேந்து போட்டோஎடுத்துக்கிட்டத பாத்து தொலச்சிடறான் .சமயம் பாத்து கிடக்கான்.

    அன்னக்கி பொன்னாத்தா தனியா இருக்கா.அதான் சரியான நேரமுன்னு இல்லாத விஷயத்த பொல்லாத விஷயமா ஊதி ஊதி பேசி குயிலுக்கும் மலைச்சாமிக்கும் உறவு இருக்கிறதா சொல்லி சாட்சிக்கு அந்த போட்டோவைக் காட்டி வில்லங்கத்த
    ஆரம்பிச்சு வச்சிடறான்.
    புருஷன மதிக்காம பொன்னாத்தா குடும்பம் நடத்திக்கிட்டு இருந்தாலும் புருஷன ராமனா தான் நினச்சிக்கிட்டு இருக்கா அவ.ஆனா அந்தப் போட்டோ தான் அவ மனச கலைச்சிருச்சு.
    எடுக்கிறா சீமாத்த.
    விளாசறா குயில.
    தெரு சனமே பேச்சத்துப் போயிடுது.
    ஊருக்குள்ள வேற பேச்சு இல்ல.
    இத ஒண்ணத் தவிர.

    இது வரைக்கும் குயிலு மனசுல என்ன இருந்துச்சோ, தெரியல.பொன்னாத்தா கேட்டாளே ஒரு கேள்வி.
    "ஏன்டி என் புருஷன வச்சிருக்கியா? "ன்னு.அது அவள காயப்படுத்துன மாதிரி தெரியலே.
    ஒத்தயில இருக்கா அவ.விசனப்பட்ட மனசு , உண்மையா இல்லாதிருந்தா பொங்கியழும்.புலம்பித் தள்ளும்.அவளோ மவுனமா இருக்கா.பொன்னாத்தா சொன்னத நினச்சு பூமாரி பொழியறதா நினச்சுக்கறா.
    இது இப்ப அவ நிலம.

    ரெண்டு நா வெளியூரு போயிட்டு அப்ப தா வருது பெருசு.குயிலு வீட்டுக்கு போகுது.அவிக உறவு அவங்களுக்கே தெரியாத நிலயில அது கொச்சையா ஊரு பூரா காத்துல பறந்த விஷயம் பெருசுக்கு தெரியல போலேன்னு குயிலும் ஒண்ணுஞ் சொல்லாம வீட்டுக்கு போன்னு சொல்லறா.

    அப்புறமென்ன?

    பஞ்சாயத்து.
    பெரிச எதுத்து எவனும் பேசுனதில்ல.அந்தமாதிரி எந்த எடக்கு மடக்கும் பெரிசும் செஞ்சதில்ல.அது உண்மையோ பொய்யோ, இது தான் சமயம்னு அவனவன் பங்குக்கு கேள்வி கேட்கறாங்க.
    உங்களுக்கும் அவளுக்கும் தொடுப்புன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்களே அது உண்மையான்னு ஒருத்தன் கடைசி வார்த்தய துப்ப முடியல அதுக்குள்ள தலயக் கவுத்துக்கிட்டான்.அதுக்கு பெரிசு பாத்த பார்வைதான் காரணம்.
    கிளி அப்பவே சொல்லிச் "சு "ன்னு ஒருத்தன் சொல்லி முடிக்கல.அவனும் பெரிசோட பார்வையில குனிஞ்சிட்டான்.இன்னொருத்தன்,
    ஊருக்கே தலக்கட்டு குடும்பம், அந்த வீட்டுக்குள்ளயே குழப்பம் வந்துடுச்சேன்னு முடிக்க முடியல.
    ...வந்தவன் போனவன் எல்லாம் கேள்வி கேட்கறான்.என்னப் பத்தி கேள்வி கேட்க எவனுக்கு யோக்யதை இருக்குது ஊருக்குள்ள? .தான் யாரு தன் தன்மானம் என்னன்னு இன்னும் கூட புரிஞ்சுக்காத பாவி மக்களா இருக்கானுகளே? இப்படி அதும் மனசுக்குள்ள ஓடிட்டிருக்கோ என்னமோ? யாருக்குதெரியும்?
    கடசியா ஊரு சனத்த பாக்குது பெரிசு. எல்லாரும் பேசியாச்சில்லங்கற மாதிரி ஒரு பார்வை..இப்ப வாயத் தொறக்குது.

    "எல்லாரும் கேட்டுக்கங்க.
    ஆமா!
    அவள நான் வச்சிருக்கேன் ".

    அல அடிச்சி ஓஞ்சாச்சி
    புயல் வீசி அடங்கிருச்சி.

    இப்ப கூட்டம் கலைஞ்சிருச்சு.குயிலோட நினைப்பா ஒத்தையிலே அந்த மகராசன்.
    ***
    ஆயிரந்தா இருந்தாலும் பொன்னாத்தா விட்டுறுவாளா?
    ஊர்க்காரங்கள கூப்பிட்டு விருந்து வக்கிறா.கிடா வெட்டி.கூடவே சாராயமும்.விஷயம் இதுக்குத்தான்.பரிசல்காரிய ஊரை விட்டு தொரத்தனும்.அதுக்குத்தான் தடபுடலா பொன்னாத்தா வீட்டுலயே விருந்துக்கு ஏற்பாடுகள் நடக்குது.கறிச்சோறு திங்கவே ஒரு கூட்டம் அலயும்.அந்தக் கூட்டம்தா பொன்னாத்தா வீட்டுல உட்காந்திருக்கு.
    அங்கன வராரு பெருசு.
    பாக்காரு.வீச்சரிவாவ கையில் எடுத்துக்கிறாரு.அப்ப சொல்றாரு.
    "உங்க அத்தன பேருக்கும் சொல்றேன். வீடு பூரா வெட்டரிவாவும், வேல்கம்பும் வச்சிருக்கேன்.நீங்கஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா எடுத்துகிட்டு வாங்க.எவனுக்காவது தைரியமிருந்தா அவள தொட்டுப் பாருங்கடா.சாச்சுப்புடறேன் சாச்சு.
    நா இப்ப ஆத்தங்கரைக்கிதா போறேன்."


    குயில தேடி போகுது பெரிசு.குயில அங்க காணோம்.ஊரே பரபரத்து ஓடுது ஆத்தங்கரைக்கி.
    வெறிச்சு நின்னுகிட்டு இருக்கா குயிலு.அவளச் சுத்தி நாலு போலீசும், நல்லா இருந்த ஊரும்.தரயில ஒரு பொணம்.பெரிசுக்கு ஒண்ணும் புரிபடல.யாருக்கும் எதும் தெரியல.கொல செஞ்ச குத்தத்துக்காக போலீசோட போறா குயிலு.
    ***
    ஜெயில் :

    நீ ஏன் இப்படிஞ் செஞ்ச. என்ன நடந்ததுன்னு சொன்னாத்தானே வக்கீலு வெக்க முடியும்.
    -இது மலைச்சாமி.

    நீ வக்கீலு வெக்க மாட்டேன்னு சொல்லு,உண்மையச் சொல்லுறேன்.
    -இது குயிலு.

    மலைச்சாமிக்கு என்ன சொல்லறதுன்னு தெரியல.காரணம் இல்லாம அவளும் இப்படி பேச மாட்டாளேன்னும் யோசிக்காம இல்ல. வேற வழி? சரின்னு ஒப்புக்கிறாரு.
    இப்ப சொல்றா குயிலு...

    எந்த அசிங்கத்த மறச்சு குல கவுரவத்துக்காக மானத்த பெரிசா நினச்சு எல்லாஅவமானங்களயும் ஏத்துகிட்டு அந்த மனுஷன் வாழ்ந்துட்டு வந்தாரோ, அந்த
    கோட்டைய சாய்க்கத்தான் அவன் வந்தான்.இருபது வருஷத்துக்கு முந்தி பொன்னாத்தா சீரழிஞ்சு போயிட்டா ஒருத்தனால மாமன் கால்ல விழுந்து கெஞ்சி மானத்தக் காப்பாத்துடா மருமகனேன்னு சொன்னாரே, அதுக்காக பொத்தி பொத்தி மறச்ச அந்த அசிங்கமான உண்மய உடைக்கத்தான் அவன் வந்தான்.ஏன்னா அந்த அசிங்கத்துக்கு காரணமே அவந்தானே.வந்தவன ஊருக்குள்ள விட்டா என்னாகும்? பல நா கோட்ட ஒரு நா இடில சாஞ்சிருமே? மலச்சாமி வேதன குயிலுக்கு தெரியுமே. மலச்சாமி மேல அவ வச்சிருக்கிறது பாசமா? மரியாதையா? கஞ்சிக்கு வழி செஞ்ச வள்ளலா? இது அதுக்கு மேலே தானே.அது மனசொடிஞ்சா இவளாலே தாங்க முடியாதே?
    அதான்...
    பரிசல் ஓட்டிட்டு வந்தவகிட்ட எல்லா உண்மையும் சொல்லிடறான்.இவன ஊருக்குள்ள விட்டாத்தானே அத்தினி பிரச்சினையும்.துடுப்பாலேயே அடிச்சுக் கொன்னுட்டேன்னு சொல்றா.

    கேட்டா கொடுக்குமுன்னுதான் சாமிய வேண்டிக்கிறோம்.கேட்காமயே நம்மள காப்பாத்துன சாமியா மலைச்சாமிக்கு தெரியறா குயிலு
    அதயே அவகிட்டவும் சொல்றாரு.
    இப்பத்தான் அவ கண்ணுல சந்தோசம் தெரியுது.இப்ப கேட்கிறா.
    "ஏய்யா என்ன நீ நெனக்கல? உன் மனசுல எனக்கு இடமில்லையா?" உண்மயச் சொல்லு.
    குயிலு!
    நீ மட்டும் தான் என் மனசுல இருக்கே!
    நீ எத்தினி வருஷம் கழிச்சு வந்தாலும் உனக்காக காத்துகிட்டு இருப்பேன்னு வாக்கு கொடுக்கார்.

    ***

    பல வருஷ தண்டன குயிலுக்கு.அவ வராம தன் உசிரு போகாதுன்னு
    அவ இருந்த குடிசையிலேயே தங்கிக்காரு பெருசு.அவ எப்ப வருவான்னு ஆத்தங்கரையையே பாத்து பாத்து அவரோட வாழ்க்கையும் பல வருஷம் ஓடிருது.நினச்சு நினச்சு விசனப்பட்டே வருஷங்களும் கரையுது.மனுஷன் படுத்த படுக்கையா கிடக்கார்.இப்பவோ அப்பவோன்னு உசிரும் இழுத்துகிட்டுஇருக்கு.ஊர் சனமும் இதுக்கு மேல தாங்காதுன்னு குயிலுக்கு சொல்லி அனுப்புறாங்க.
    ***
    பெரிசு படுத்துருக்கு.மூச்சு மட்டும் வந்தும் போயிகிட்டும் இருக்குது.
    குடிசைக்குள்ள காலடி வக்கிறா குயிலு.அவ மூச்சுக்காத்தும் வாசனையும் அந்த உடம்புக்கு தெரியாதாங்கற மாதிரி சின்ன உதறல் பெரிசு கிட்ட இருந்து.
    "மானே என் நெஞ்சுக்கு பால் வார்த்த தேனே
    முன்னே என் பார்வைக்கு வாவாபெண்ணே "
    பெரிசோட நினப்பு குயிலுக்கு தெரியாதா .
    அவ கண்ணீரு பெரிச அசைக்குது.பெரிசுக்கு லேசா முழிப்பு வருது.அவளப் பாத்த சந்தோசம் கண்ணுல தெரியுது.இதுக்குத்தானே இத்தினி வருஷம் காத்திருந்தேன்னு சந்தோசமா கண்ண மூடுது.

    கொள்ளி வச்சு முடிஞ்சதும் ரயிலேறிப் போகிற குயிலு உடம்புக்குள்ள மட்டும் உசுறு தங்குமா?
    குயில் பாட்டு நின்னுடுச்சு.

    *********************************************
    ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு புல்லாங்குழல் வார்த்தைக்கு வராத சோகத்தை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறது.
    -வைரமுத்து.

    முதல் மரியாதை..
    முற்றும்.

  9. Likes Harrietlgy, sivaa liked this post
  10. #3485
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #3486
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    " சத்ரியன் இசை வெளியீட்டு விழாவில் அமீர் பேசிய பேச்சு."
    இதற்கு பதில் இவ்வார பத்திரிக்கையில்.
    நல்ல பதிலை அளித்தவருக்கு நம் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.


  12. Likes Harrietlgy liked this post
  13. #3487
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நெஞ்சை அள்ளும்
    உடலை உலுக்கும்
    நடன அசைவுகளில்
    நடிகர்திலகம்
    மெய்சிலிர்க்கும்
    இந்த வீடியோ பதிவுகள்
    சத்யம் படத்திலிருந்து..
    YouTube. ல் இன்று நான் தரவேற்றியது...


    Sivaji 's sathyam:


    Sathyam-song:

  14. #3488
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  15. #3489
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  16. Likes Harrietlgy liked this post
  17. #3490
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  18. Likes Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •