Page 84 of 400 FirstFirst ... 3474828384858694134184 ... LastLast
Results 831 to 840 of 3996

Thread: Makkal Thilagam MGR Part -19

  1. #831
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like



    அவ்ளோ பெரிய சந்தோஷம்

  2. Thanks orodizli thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #832
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like

  5. #833
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். நடித்த அன்பே வா படம் வெளிவந்து இந்த பொங்கலோடு ஐம்பது வருடங்கள் ஆகிறது. இந்த படத்திற்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளது. திரையரங்கில் நான் பார்த்த முதலும் கடைசியுமான தலைவர் படம்.

    எங்கள் பகுதியில் இருந்த மத்திய அரசு தொழிற்சாலையின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர ஊழியர்களுக்கான மனமகிழ் மன்றத்தின் திறந்த வெளி திரையரங்கில் அதிகம் ஞாபகம் இல்லாத ஒரு சனிகிழமை அன்று பார்த்தேன்.

    ஜெ.பி.யாக தலைவர் திரையில் தோன்றும் முதல் காட்சியில் ரசிக்க ஆரம்பித்து, ஆனந்தத்தின் உச்சியில் அவர் பாடும் புதிய வானம் புதிய பூமி பாடலில் அவரின் ரசிகனாகிவிட்டேன்.

    என்னதான் புதிய வானம் புதிய பூமி பாடல் எனக்கு பிடித்து இருந்தாலும் நான் அதிகம் முணுமுணுப்பது கல்லூரி மாணவர்கள் பாடும் ஒன்ஸா பாப்பா மெத்தமாமா என்னடி அம்மா எங்கள் லிட்டில் டூரிஸ்ட் என்ற பாடல் தான்.

    அதுவரை நாயக பிம்பத்திலேயே நடித்து வந்த தலைவர் முதல்முறையாக நகைச்சுவை வேடம் ஏற்றிருப்பார். சின்ன பாப்பூ, ராமைய்யா, புண்ணியகோடி ஆகியோரது நகைச்சுவை மறக்க முடியாத ஒன்று.

    திரையில் படம் பார்த்து கொண்டு இருந்த பொழுது, இடைவேளையில் ஒரு பெரியவர் இந்த படம் வெளி வந்த பொழுது படத்திற்கு இரண்டு இடைவேளை இருந்தாக சொன்னார். உண்மை தான். அன்று பெரும்பாலும் டூரிங் டாக்கீஸில் இரண்டாம் வெளியீடாக அன்பே வா போட்டபட்ட பொழுது படத்தின் நீளம் காரணமாக சூடான ப்ராஜெக்ட்டரை இரண்டு தடவை நிறுத்தி ரீல் சுற்றி, மாற்றி வைத்து படதை ஓட்டினார்கள்.

    படத்தில் சேகர் எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது, என் முதல் மனைவி விமானம் என்று சொல்வார்.... அவரது விமானத்தின் மீதான காதலை பின்னாட்களில் சாண்டில்யன் எழுதிய கடல் புறா நாவலில் அகூதா மற்றும் அமீர் ஆகியோரின் கடல் மீதான காதலில் கண்டேன். அந்த நாவலில் ஒரு வரி வரும் (சரியாக ஞாபகம் இல்லை) ஒருவன் கடலில் பயணித்து விட்டால், கடல் அவனை விடாது.. அவனை கடல் அழைத்து கொண்டே இருக்கும். அந்த வரியை போல அன்பே வா படத்தை ஒருதரம் பார்த்துவிட்டதால் அந்த படத்தை மீண்டும் மீண்டும் இந்நாள் வரையில் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

    அதிகாலை பனியின் பொழுது புதிய வானம் புதிய பூமி பாடல், குளித்து விட்டு வரும் பொழுது லவ் பேர்ட்ஸ் பாடல், நண்பர்களுடன் இருக்கும் பொழுது ஒன்ஸா பாப்பா மெத்தமாமா பாடல் என்று இந்த படத்தை ஞாபகபடுத்தும் விஷயங்கள் தினசரி வாழ்க்கையில் கிடைத்து கொண்டே இருக்கிறது.

    எல்லாவற்றுக்கும் மேலே தான் யார் என்று தெரியாமல் கலாட்டா பண்ணும் கல்லூரி மாணவர்களை பார்த்து தலைவர் சிரிக்கும் அந்த சிரிப்புக்காகவே படத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
    courtesy - tamil manam .Thanks ABKHLABHI SIR

  6. Thanks Russellisf thanked for this post
    Likes orodizli, Russellisf liked this post
  7. #834
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    Courtesy - facebook

  8. Thanks orodizli thanked for this post
  9. #835
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. Likes orodizli liked this post
  11. #836
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    “அன்பே வா” – (மறு) திரைப்பார்வை
    courtesy - Raghavan Sampathkumar
    80s ல பொறந்தவங்களுக்கே பாதி பேருக்கு மேல பழைய படம்னா ஒரு கிலி உண்டாகும். பக்கம் பக்கமா செந்தமிழ் வசனம், செண்டிமெண்ட் ஓவர்லோட், அழுகை, குடும்பக் கதை, etc etc ன்னு நமக்கு செட் ஆகாதுப்பான்னு சொல்லுவாங்க.

    அதே 90s க்கு அப்புறம் பொறந்த பசங்கன்னா “இதுக்கு கெமிஸ்ட்ரி கிளாசே பரவால்ல” ன்னு தெறிச்சி ஓடியே போய்டுவாங்க. ஆனா, பழைய படங்கள் எல்லாமே அப்படி இல்ல, 3 மணி நேரம் போறதே தெரியாம யூத்புல்லா, ஜாலியா, சும்மா டைமிங் காமெடியோட சில EXTRAORDINARY ENTERTAINER படங்கள் இருக்குன்னு சொல்றத்துக்கு தான் இந்த பதிவு.

    இன்டெர்நெட்ல எங்க பாத்தாலும் புதுப்பட விமர்சனம் கெடைக்கும். ஆனா, என்னிக்குமே நினைவில் நீங்காம இருக்கற சில படங்களப் பத்தி விவரம் இருக்குமான்னா பெரும்பாலும் இல்லை.

    அந்த வரிசையில FIRST… நம்ம மக்கள் திலகம் MGR நடிச்ச
    “அன்பே வா”

    “அடப்பாவி ! கவுத்துட்டான்”

    இது 2015 ல வந்த எதோ ஒரு படத்துல வந்த ஒரு யங் ஹீரோவோட டயலாக் இல்ல. 1966 ல வந்த “அன்பே வா” ல MGR பேசினது. Typical பழைய படம் மாதிரி “அய்யகோ, பணத்தை வாங்கிக்கொண்டு இப்படி என்னை ஏமாற்றிவிட்டானே, கிராதகன்” ன்னெல்லாம் AVM Rajan (படமே ஏவிஎம் ப்ரொடக்ஷன் தானே…) எபக்டு குடுக்காம, சும்மா பஞ்ச் பாலா மாதிரி தலைவர் பேசின இந்த ஒரு டயலாக்லேந்தே புரியும் அந்த படம் எவ்ளோ யூத்புல்லா இருக்கும்னு.



    அந்த காலத்துல தமிழ் வசனங்களுக்காகவே ஓடின படங்கள் தான் ஜாஸ்தி. அதஎல்லாம் பாத்துட்டு இந்த ஜெனரேஷன் பசங்க “ஏம்பா? வீட்டுக்குள்ளயே செந்தமிழ்ல தான் பேசுவாங்களா?” ன்னு கேப்பாங்க. ஆனா, அந்த (60s) ஜெனரேஷன்ல இது முற்றிலும் வித்தியாசமான படம்னு காட்ட இந்த ஒரு வசனம் போதும்.


    படத்தோட கதை எல்லாருக்கும் தெரிஞ்சது தான். COME SEPTEMBER ங்கற ஹாலிவுட் படத்தோட அடிப்படையில் AC திருலோகச்சந்தர் அவர்கள் திரைக்கதை, டைரக்ஷனில் வந்தது. சொல்லப்போனா அந்த பீரியட்களில் இந்த கதையை படமாக்கத் துணிந்த ACT, பலவித GENRE களில் வல்லவர்னு காட்ட இது ஒரு நல்ல உதாரணம்.


    அதே போல, அதுவரை ஆக்ஷன் ஆதர்ஸ ஹீரோவாவே நடிச்ச நம்ம மக்கள் திலகமும் காமெடியில வூடு கட்டி கலக்குவார்னு காட்டினதும் இந்த படம் தான். சும்மா சொல்லக்கூடாது, செம்ம கேஷுவலா; READERS DIGEST படிக்கற; GOLF விளையாடும் மல்டி மில்லியனரா செம்ம கலக்கல். அதுவும் குளிச்சிட்டு வந்து ஹீரோயின கலாய்க்கற ஸீன்… ஹா ஹா… டாப் கிளாஸ். இன்னோரூ ஸீன்ல காலேஜ் பஸ் டிரைவருக்கு பணம் குடுத்து அவன வயத்து வலின்னு சொல்லச் சொல்லிடுவாரு. அதுக்கு முன்னாடி, “டிரைவாஆஅர்” னு சும்மா வாய சொழட்டி நக்கலா கூப்டுவாரு பாருங்க… யப்பா… செம்ம மாஸ்….

    அபிநய சரஸ்வதி (அவங்கள காலேஜ் ஸ்டூடன்ட்னு நம்பக் கொஞ்சம் நிறையவே கஷ்டமா இருந்தாலும்…) தன் பங்குக்கு கேஷுவலா பண்ணிருப்பாங்க.



    படத்தோட ஹைலைட் நாகேஷ் & மனோரமா. என்ன டைமிங் ரெண்டு பேருக்கும். அதுவும் நாகேஷ் செம்ம கூலா தலைவர் கிட்ட காசு வாங்கிகிட்டே இருக்கறதும், அதப்பார்த்தும் ஒண்ணும் பண்ண முடியாம ஆச்சி தவிக்கறதும் சொல்லி முடியாது. திரையில் பார்த்து ரசிக்கணும். கேஸட் ப்ளேயர் இருந்த காலத்துல நானும் என் அக்காவும் இந்த வசனம் முழுக்க “கட்டிக்கரும்பே கண்ணம்மா” ல ஆரம்பிச்சு மொத்த வசனத்தையும் ஒப்பிப்போம்.

    CAMEO வா வர்ற நம்ம (நடமாடும் AHUJA சவுண்ட் சிஸ்டம்) அசோகன், அவர் வேலையக் கரெக்டா அளவா செய்வாரு. மத்த எல்லாருமே அவங்கவங்க கேரக்டர்ல அழகா நடிச்சிருப்பாங்க.



    ஹீரோ ஹீரோயின்க்கு நடுவுல வர்ற ஈகோ, மோதல், காதல், எல்லாத்தையும் அவ்வளவு டீசண்டா, அழகா, திரைக்கதையில கொண்டுவந்த ACT ஒரு ஜீனியஸ்னு சொல்ல எனக்கு வயசும், அறிவும், அனுபவமும் போதாது. ஆனாலும், ரசிகன்ங்கற முறையில், அவரைக் கண்டிப்பா புகழ்ந்தாக வேண்டும்

    சுத்தமா கவனிக்கப்படாத ஆனா REFRESHING ஆன 2 விஷயங்கள் அதாவது பாடல்கள்.

    1) AL ராகவன் பாடின “ONCE A PAPPA, MET A MAMA“ – என்ன ஒரு ஸ்டைல் ஆன PRONUNCIATION! யப்பா… வாட்ட பௌட்ட ஹெல்லார்யூ? ன்னு எதோ RAP சிங்கர் மாதிரி பாடிருப்பாரு. அந்தக்கால சுராங்கனி ன்னு சொல்லலாம். கேட்டா எழுந்து டான்ஸ் ஆட வக்கிற மாதிரி செம்ம யூத்தா இருக்கும் அந்த பாட்டு.


    2) கிளைமாக்ஸ் க்கு முன்னாடி வர்ற Liban Bindey ங்கற ஒரு சிங்கர் பாடின சோகமான “ADIOS, GOODBYE MY FRIEND“ ங்கற பாட்டு. அந்த மூடுக்கு ஏத்தா மாதிரி அருமையா செட் ஆகி இருக்கும்

    இந்த ரெண்டு பாடல்களையும் சேர்த்த MSV அவர்களை மெல்லிசை மன்னர்னு சொல்லலேன்னா எப்படி?

    ஓகே, மொத்தத்துல பழைய படம்னா கிளிசரின் பாக்டரி தான்னு நெனச்சிட்டிருக்கற யூத்களே, அன்பே வா ஒரு தடவ பாருங்க…

  12. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  13. #837
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பே வா’ படத் தில் எம்.ஜி.ஆர் பெரிய பணக் காரர். வெவ்வேறு நாடு களுக்குப் பயணித்துக் கொண்டே இருப்பது என்று பிஸியாகவே இருப்பார். தொடர்ந்து வேலை செய்து களைத்துப்போனதால் சிம்லாவில் ஜே.பி. பங்களா என்கிற பெயரில் இருக்கும் தனது பங்களாவுக்கு ஓய்வு எடுக்கச் செல்வார். அந்த பங்களாவில் வேலை பார்க்கும் நாகேஷ், அவரது மனைவி மனோரமா, மாமனார் பி.டி.சம்பந்தத்துடன் சேர்ந்து அந்த பங்களாவை டி.ஆர்.ராமசந்திரன், முத்துலட்சுமி, சரோஜாதேவிக்கு வாடகைக்கு விட்டிருப்பார்கள்.

    இந்த விஷயம் எம்.ஜிஆருக்குத் தெரிய வரும். எம்.ஜி.ஆரின் காலில் மனோரமா விழுந்து, ‘‘முதலாளி மன்னிச்சிருங்க’’ என்று மன்னிப்பு கேட்பார். ‘‘சரி, நான்தான் இந்த பங்களாவுக்கு முதலாளி என்று யாரிடமும் சொல்லக் கூடாது’’ என்று மனோரமாவிடம் சத்தியம் வாங்கிக்கொள்வதுடன், நாகேஷிடம் பணத்தைக் கொடுத்து தானும் அங்கே தங்குவதற்கு சம்மதம் வாங்கியிருப்பார் எம்.ஜி.ஆர். சரோஜா தேவி மேல் எம்.ஜி.ஆருக்கு ஒரு கண் விழுந்ததுதான் இதற்குக் காரணம். எம்.ஜி.ஆரும் நாகேஷும் சந்தித்துப் பேசும்போதெல்லாம் மனோரமா பதறு வார். அந்தப் படத்தில் நகைச்சுவை காட்சி அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கும்.

    படத்தில் எம்.ஜி.ஆருக்கும் சரோஜாதேவிக்கும் இடையில் ‘சண்டையில்தான்’ காதல் பூக்கும். ‘லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்’ பாடலின்போது மூன்று, நான்கு லவ் பேர்ட்ஸ் களைக் கூண்டில் வைத்து ஷூட் செய்தோம். அந்தப் பாட்டுக்கு சரோஜாதேவி ஆடும்போது எம்.ஜி.ஆர் மறைந்திருந்து கேலி செய்து அபிநயித்து ஆடுவார். அந்த ஷூட்டிங் சமயத்தில் மூர் மார்க்கெட்டுக்குச் சென்று லவ் பேர்ட்ஸ் வாங்கி வருவதற்கு அண்ணாமலை என்ற உதவியாளரை நியமித்திருந்தோம். அவருடைய வேலையே லவ் பேர்ட்ஸ் வாங்கி வருவதுதான். அதனால் அவர் பெயரே ‘லவ் பேர்ட்ஸ்’ அண்ணாமலை என்றாகிவிட்டது.

    சரோஜாதேவிக்கு அப்பாவாக நடித்த டி.ஆர்.ராமசந்திரன் நிஜத்தில் சைவக் காரர். ஒரு காட்சியில் சிக்கன் ரோஸ்ட் சாப்பிடுவதுபோல காட்சி எடுக்க வேண் டும். சிக்கனை பார்த்தாலே அவருக்கு வாந்தி வந்தது. இந்த செய்தி ஏவி.எம் செட்டியாருடைய காதுக்குப் போயிற்று. அதற்கு அவர் ‘‘பேக்கரியில் சிக்கன் மாதிரி கேக் செய்யச் சொல்லி, அதை சாப்பிட வைத்து எடுக்கலாமே?’’ என்றார். சிக்கன்ரோஸ்ட் போலவே கேக் செய்து அவரை சாப்பிட வைத்தோம்.

    எம்.ஜி.ஆர். அவர்கள் சிம்லாவைப் பார்த்து ரசித்து பாடும் விதமாக உரு வானதுதான் ‘புதிய வானம் புதிய பூமி’ பாடல். இந்தப் பாட்டில் கவிஞர் வாலி, ‘உதய சூரியனின் பார்வையிலே…’ என்று ஒரு இடத்தில் எழுதியிருந்தார். அதை பார்த்த செட்டியார், ‘‘சென்சாரில் வெட்டி விடுவார்களே?’’ என்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் இப்படி பாடினால்தான் கைதட் டல் விழும்’’ என்று சமாதானம் செய்தார் வாலி. அப்படியே படமாக்கப்பட்டது.

    ஆனால். செட்டியார் சொன்னது போலவே சென்சாரில் அந்த வரியை நீக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அதன் பிறகு ‘உதய சூரியனின் பார்வை யிலே’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்று வார்த்தையை மாற்றினோம். படத்தில் மட்டும் ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்றுதான் இருக்கும். ஆடியோவில்தான் ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்று இருக்கும். இதெல்லாம் சென்சார் லீலைகள்.

    ‘‘உதய சூரியன் என்று வரும் இடத்தில் எம்.ஜி.ஆரை குன்றின் உச்சியில் ஏறி நிற்க வைத்து சூரியனையும் எம்.ஜி.ஆரை யும் இணைத்து ஷாட் எடுத்தால் நன்றாக இருக்கும்’’ என்று இயக்குநர் திருலோக சந்தர், பி.என்.சுந்தரத்திடம் சொல்ல, ‘‘எம்.ஜி.ஆரால் ஏற முடியுமா?’’ என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

    கொஞ்ச நேரத்தில் ‘‘டைரக்டர் சார்..!’’ என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது. எல்லோரும் குரல் வந்த திசையில் பார்த்தோம். குன்று உச்சியில் எம்.ஜி.ஆர் அவர்கள் நின்றுகொண்டிருந்தார். படக் குழுவே அவரைப் பார்த்து திகைக்க ‘‘மலை மேல என்னால ஏற முடியுமான்னு நீங்க பேசிட்டிருந்தீங்க… நான் ஏறியே வந்துட்டேன்’’ என்றார் எம்.ஜி.ஆர் புன் சிரிப்போடு. அதுதான் எம்.ஜி.ஆர்!

    இயக்குநர் நினைத்தது போலவே அந்தக் காட்சியை படமாக்கினோம். துள்ளல் இசையாக அமைந்த அந்தப் பாடல் முழுக்க எம்.ஜி.ஆர் அவர்கள் ஓடிக் கொண்டே இருப்பார். டி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவில் சிம்லாவின் அந்த அழகும், அந்த மனிதர்களும், அந்தக் குழந்தைகளும் அந்த பாட்டில் வலம் வருவார்கள்.

    ‘புதிய வானம் புதிய பூமி…. எங்கும் பனி மழை பொழிகிறது’என்ற வரிகள் வரும் இடத்தில் பனி மழையோடு காட்சி எடுக்க வேண்டும் என்று விரும்பினோம். அப்படி ஒரு தருணம் வாய்க்க இரண்டு நாட்கள் காத்திருந்தோம். பனி மழை பெய்யவே இல்லை. சிம்லாவில் இருந்து டெல்லி வந்து விமானத்தில் சென்னைக் குப் புறப்பட்டோம்.

    விமானம் பறந்தது. எம்.ஜி.ஆர் அவர்கள் அங்கு கொடுக்கப் பட்ட ஆங்கில செய்தித்தாளை படித்து விட்டு, ‘‘மிஸ் பண்ணிட்டோம். ஸ்நோ பால்ஸ் இன் சிம்லானு செய்தி வந் திருக்கு’’ என்று பத்திரிகையைக் காட்டி யவர், ‘‘டெல்லியில் விமானம் ஏறுவதற்கு முன்பு இந்த நாளிதழ் கையில் கிடைத் திருந்தால், சிம்லாவுக்குத் திரும்பிப் போய் பனி மழையில் அந்தப் பாட்டை எடுத்திருக்கலாம்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஆர்வமும், ஆதங்கமும் அதில் தெரிந்தது.

    படத்தில் எம்.ஜி.ஆர்- சரோஜாதேவி ‘காதல் சண்டை’ உச்ச கட்டத்தை எட்டும். சரோஜாதேவி அங்கு வந்த கல்லூரி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்துக் கொண்டு எம்.ஜி.ஆரை கேலி செய்து நடனம் ஆடுவார். அதற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். சரோஜாதேவியின் மாணவக் குழுவுக்குத் தலைமை வகித்தவர் நடன இயக்குநர் சோப்ராவின் உதவியாளர் ரத்தன்குமார். அவர் நடனம் ஆடுவதில் புலி. அந்த ‘புலி’ ஆட்டத்துக்கு சவால்விட்டு எம்.ஜி.ஆரால் எப்படி ஆட முடிந்தது?

    s.p .muthuraman

  14. Likes orodizli liked this post
  15. #838
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பே வா’ படத்தில் சரோஜாதேவி கல்லூரி மாணவர் களுடன் சேர்ந்து எம்.ஜி.ஆரைக் கேலி செய்து நடனம் ஆடுவது போல் ஒரு காட்சி. உதவி நடன இயக்குநர் ரத்தன்குமார் தலைமையில் மாணவர் குழு நடனமாட இருந்தனர். ரத்தன்குமாருக்கு இணையாக எம்.ஜி.ஆரால் ஆட முடியுமா என்று படக்குழு எதிர்பார்ப்பில் இருந்தது.

    போட்டி என்றாலே விறுவிறுப்புத் தானே. படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். அவர்கள் வெகு இலகுவாக ட்விஸ்ட் நடனம் ஆடியபோது கைதட்டல் ஷூட்டிங் அரங்கத்தை அதிர வைத்தது. படம் வெளியானதும் தியேட்டர்களில் ரசிகர்கள் அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பப் பார்த்து ரசித்தனர்.

    சிம்லாவுக்குப் படப்பிடிப்புக்காக போயிருந்தோம். சிம்லாவின் மேல்பகுதி முழுதும் பனி படர்ந்த மலைச் சிகரங்கள். அங்குதான் சீனாவின் எல்லைக் கோடு இருந்தது. அந்தப் பகுதியில் நமது ராணுவ வீரர்கள் நம் நாட்டை பாதுகாப்பதற்காக காவல் இருந்தார்கள். அங்கிருந்த பனியும் மிகையான குளிரும் நம் ராணுவ வீரர்களை பாதித்து, அவர்களில் சிலருக்கு கால்கள் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் இருந்தார்கள்.

    அத்தகைய ராணுவ வீர்ர்களைப் பார்க்க எம்.ஜி.ஆர் தலைமையில் சரவணன் சார், திருலோகசந்தர் சார் மற்றும் சிலரும் புறப்பட்டோம். அந்த வீரர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர் கண் கலங்கினார். ‘‘நாட்டில் உள்ள எங்கள் உயிரைக் காக்க, உங்கள் உயிரைப் பணயம் வைக்கும் உங்களைப் பார்க்க வந்திருக்கிறோம்’’ என்று இரு கை தூக்கி அவர்களை வணங்கினார் எம்.ஜி.ஆர். அந்த வீரர்களுக்கு ஹார்லிக்ஸ், ரொட்டி, பழங்கள் எல்லாம் கொடுத்து அவர்களுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு வாழ்த்தினார்.

    எப்போதுமே எம்.ஜிஆருக்கு ஏவி.எம்.சரவணன் சார் மீது தனிப்பட்ட பிரியம் உண்டு. அந்தப் பிரியத்தின் வெளிப்பாடுதான் 86 மற்றும் 87-ம் ஆண்டுகளில் ‘சென்னை செரிஃப்’ஆக சரவணன் சாரை நியமித்து பெருமைப் படுத்தினார் எம்.ஜி.ஆர்.

    எம்.ஜி.ஆர் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து, இயக்கிய படம் ‘நாடோடி மன்னன்’. இந்தப் படத்தைப் பற்றி எம்.ஜி.ஆரிடம் பத்திரிகையாளர் கள் கேட்டபோது, ‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாடோடி’’ என்றார். அந்தச் சூழ்நிலையில் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் ஏவி.எம்.செட்டியாரைப் பார்க்க வந்தார். ‘‘நாடோடி மன்னன் படத்தின் இறுதிகட்ட வேலைகளை முடிக்க கொஞ்சம் பணம் வேண்டும்’’ என்றார். செட்டியாருடைய சட்ட ஆலோசகர் எம்.கே.எஸ், ‘‘பணம் கொடுப்பதாக இருந்தால் எம்.ஜி.ஆரின் கையெழுத்து வேண்டுமே’’ என்றார்.

    அதற்கு ‘‘நான் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸின் நிர்வாகி. நான் கையெழுத்துப் போடுகிறேன். என் மேல் நம்பிக்கை வைத்துக் கொடுங்கள்’’ என்றார் ஆர்.எம்.வீரப்பன். அவருடைய அணுகுமுறை செட்டியாருக்கு பிடித்துவிட்டது. கேட்ட பணத்தைக் கொடுத்தார். படம் ரிலீஸான உடனேயே வாங்கிய பணத்தைத் திரும்பக் கொண்டுவந்து கொடுத்தார் ஆர்,எம்.வீ. அவருடைய நாணயம் செட்டியாருக்குப் பிடித்துப்போய் ‘‘நீங்கள் படம் எடுத்தால், நான் பண உதவி செய்கிறேன்’’ என்றார். ஆர்.எம்.வீ ‘தெய்வத்தாய்’படத்தை சொந்தமாக தயாரித்தபோது, தான் சொன்னதைப் போலவே ஆர்.எம்.வீ அவர்களுக்கு செட்டியார் பணம் கொடுத்தார்.
    s.p .muthuraman

  16. Likes orodizli liked this post
  17. #839
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சாலைகளில் எம்.ஜி.ஆரின் அரசாங்கம்

    இந்தச் சூழலிலும் எம்ஜிஆர் தமிழகமெங்கும் ஆட்டோ நிறுத்தங்களிலும், சாலை முனைகளிலும் டிசம்பர் 24 அன்றும், ஜனவரி 17ஆம் தேதியிலும் நினைவுகூரப்படுகிறார். அவரது ரசிகர்களுக்கு வயதாகிவிட்டதை அவர்களது சுருங்கிய முகங்களும், காய்ப்பேறிய கைகளும் காட்டுகின்றன.

    எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்கும் தெருவில் எம்ஜிஆரின் அரசாங்கம் நிகழ்வது போன்ற தோற்றத்தை எப்படியோ அந்த இடம் அடைந்துவிடுகிறது. பூ விற்கும் பெண்கள் முதல் வெள்ளை வேட்டியுடன் தொழிலாளர்களைப் பார்த்து அன்று உற்சாகமாகக் கையுயர்த்தி செல்லும் சிறு முதலாளி வரை எல்லாரும் கதாபாத்திரங்கள் ஆகிவிடுகிறார்கள். நல்ல முதலாளி, நல்ல தொழிலாளி என்ற உலகம் அந்தப் பாடல்களின் கீழே ஒவ்வொரு வருடமும் சிருஷ்டிக்கப்பட்டு விடுகிறது. ‘உலகம் பிறந்தது எனக்காக’ பாடலும் ‘உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே’ பாடலும் ஒலிக்கும்போது, தமிழகம் முழுவதும் தெருவோரங்களில் இருக்கும் பாட்டாளிகளின் கைகள் ஒரே கையாக அன்று எழும்பும். ‘கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா?’ என்ற பாடலின்போது ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வரும்.

    எம்.ஜி.ஆர். உருவாக்கிய கற்பனை அரசாங்கத்தில் நீதி தவறுவது போலத் தோன்றினாலும் கடைசியில் ஜெயிக்கவே செய்யும். நம்பிக்கை சிறகடிக்கும். ‘உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா...கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா...’

    எம்ஜிஆரின் பாடல்களுக்குள்ளேயே நாளைக்கான நம்பிக்கையையும், மாற்றத்தையும், புரட்சியையும், நீதியையும் பாவித்து வளர்ந்த தலைமுறையினர் இன்னமும் வாழ்ந்துவருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் எப்போதும் ஒன்றேபோல இருக்கப்போகும் ‘நாளை ஒன்றை நம்பி’ களைப்பேயில்லாமல் கற்பனை வீதியில் அபிநயம் செய்கிறார். ‘நாளை நமதே இந்த நாளும் நமதே… அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது.’ என்கிறது ஒலிபெருக்கி. ரசிகர் பூரிக்கிறார்.

  18. Thanks orodizli thanked for this post
  19. #840
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Come September is a popular Hollywood movie of 1963 featuring Rock Hudson and Gina Lollobrigida. This movie, directed by the noted filmmaker Robert Mulligan, was a hit around the world, including India where it had a successful run in places like Madras.

    One of the contributing factors for its success was the popular title music, ‘Come September,’ and the long-playing record, rendered by the famous American musician Billy Vaughn, was a bestseller even in Madras city.

    The movie narrated the tale of Robert (Rock Hudson), an American millionaire, who arrives early for his annual vacation at his luxurious Italian villa. His long-time girlfriend Lisa (Gina Lollobrigida) has given up waiting for him to “pop the question,” and has decided to marry another man. Meanwhile, his sneaky villa manager Maurice secretly converts the villa into a hotel when the boss is away. The current guests of the “hotel” are a group of young American girls trying to fend off a gang of oversexed boys, led by Tony (famed singer Bobby Darin in his movie debut).

    This interesting storyline was brilliantly adapted into a Tamil film by the multifaceted writer-director-producer A.C. Thirulokachandar, who was then working for the House of AVM writing screenplays and also making movies. ‘ACT’ hails from an upper middle-class family of Madras and after qualifying himself with an MA degree he worked hard to appear for the Indian Administrative Service without thinking of a job.

    Even as a student he wrote stories and articles and was a voracious reader. His close friend and classmate P. Balasubramaniam, son of the South Indian movie pioneer R. Padmanabhan, introduced him to his father and soon he joined RP as his assistant and learnt the ropes of moviemaking, especially screenplay writing. Then he moved to the AVM unit where he made his debut as a filmmaker…

    Anbe Vaa was all about JB (MGR), a wealthy industrialist, who decides to take a break at his Simla home away from business concerns. He lands there to find that his caretaker (Sambandam) has rented his house to Geetha’s (Saroja Devi) family, taken the rent and left for Kasi with his wife. His daughter Manorama and brother-in-law Nagesh are left in charge of the house and the guests. JB decides not to reveal his identity and pretends to be a wealthy man, Balu, willing to pay rent for a place in the house. Nagesh takes the money and gives him JB’s room.

    Balu keeps playing practical jokes on Geetha and they keep clashing. She brings her friends who are on a trip to Simla and tries to drive JB from the house. After he gets the friends on his side, she gets angry and tells her parents to get her married to Asokan, a relative and an Air Force pilot.

    By the time Balu confesses his love for her, Geetha’s engagement is already fixed. Asokan turns out to be a school friend of JB, but he also agrees to play along with the trick. Asokan discovers that Balu and Geetha are actually in love with each other and steps aside. When Balu’s true identity is known, Geetha thinks that the wedding plans are yet another of his practical jokes and tries to run away. He finds her and all misunderstandings are cleared. The two get married.

    The screenplay was brilliantly written by ACT. MGR’s performance as the rich man posing as a tenant was impressive. Nagesh was inimitable. Saroja Devi looked glamorous in her glossy make-up and costume.

    One of the major plus points was its melodious music (composer M.S. Viswanathan working on his own after separating from his erstwhile partner T.K. Ramamurthi). Many songs became hits. The opening song, ‘Puthiya Vaanam Puthiya Bhoomi’ (lyrics: Vaali and voice: T.M. Soundararajan) filmed on MGR sporting a red and black striped coat in Simla and other areas, had a political touch. It was brilliantly photographed by master lens man S. Maruthi Rao. ‘Rajavin Paarvai’ (TMS and P. Suseela) is another hit number.

    The film was produced by the sons of AV. Meiyappan — Murugan, Saravanan and Balasubramaniam.

    With so many plus points, Anbe Vaa turned out to be a box office hit….

    Remembered for the impressive performances by MGR, Nagesh and Saroja Devi, melodious music, interesting storyline and screenplay, picturesque cinematography which captured the beautiful landscape of the Himalayan region, and the fabulous sets in true AVM style.
    the hindu

  20. Thanks orodizli thanked for this post
    Likes orodizli, mappi, rajeshkrv liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •