-
14th March 2016, 04:48 PM
#3751
Junior Member
Diamond Hubber
தியாக நாயகன்
முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தை தன் திறன் தெரியாமல் வளர்த்து ஆளாக்கப்பட்டவர்கள் பிறர் வஞ்சித்தோ கிஞ்சித்தோ அபகரித்துக்கொண்ட பின்னர் அதை மீட்டெடுக்க வீரமுமின்றி சாதுர்யமும் இன்றி இட்ட வழி வாழ்வதையும் வாழ்ந்து கெட்டவராக கொள்ளலாம்.இவர்கள் தயிர்சாதம் வகையறா.ஆனால் தியாக நாயகன் கதை அப்படிப்பட்டதன்று.வீரத்தை நெஞ்சிலே கொண்டவன்.வீரம் தன் சரீரம் என்று நம்புவனை விட, மனத்திலே வீரம் கொண்டவன் பெரும் வீரனாயிருப்பான்.மார்பு நோக்கிய கூர்முனை கத்தியை புறங்கையால் தள்ளி வீரமெதுவென காட்டுவான்.
வஞ்சித்தும் நயவஞ்சகம் ஆடியும் தன் பாட்டானாரின் சொத்தை அபகரித்த தன் வீட்டு வேலைக்காரனை துச்சமென உதறுகிறார்.வீணர்களை எதிர்ப்பதுவா வீரம் என்று ஒதுக்கித்தள்ளுவார்.இருந்தும் இருத்தலற்ற நிலையை விரும்பி ஏற்றல்.ஒரு வகையில் இது வீரத்தில் சிறந்த நிலை.இதுவே தியாகத்தில் நாயகனின் குணாதிசயம்.இது போன்ற வீரத்தை கொண்டிருந்தாலும் உறவுகளை இழப்பதில் பெரிதும் துயர்படும்.நேசித்த அன்பு விலகுதலில் மனம் நொறுங்கும்.அந்த இடத்தில்தான் மனம் விரக்தி கொண்டலையும்.இது தியாகத்தில் நம் தலைவரின் கேரக்டரைசேஷன்.
வீகேஆரை துப்பாக்கி முனையில் மிரட்ட ,அவர் பயந்து காலில் விழ, கோழைகள் என உதாசீனம் காட்டி சொத்தை ஏற்காமல் வெளியேறுவது மேற்கூறிய வீரவகை எனலாம்.
கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேலேந்தல் இனிது என்ற குறளுக்கு சான்றானது.
இந்தக் குணம் உடம்பிற்குள் வேராய் இருக்கும் குணம். புதிதாய் வந்தஇன்ஸ்பெக்டரிடம்
நடக்கும் உரையாடலிலும் அது
தெறிக்கும்.கேள்வி கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு என்பதை கொண்ட குணம்.
நீ என்ன கேட்பது.அதற்கு நான் என்ன பதில் சொல்வது என்ற வீம்பு அதில் இருக்காது.கர்வ மொழி காட்டாது.நேர்மையான கேள்வி நியாயமான பதில்.
பாலாஜியிடம் பேசும் தோரணை,சிகரெட்டை உருவி காதில் செருகுவது,புருவங்களை அசைத்தே தன் குணம் காண்பிப்பது,ஸ்டேசனில் சேரை இழுத்து போட்டு உட்கார்வதில் தன்கௌரவத்தை நிலை நிறுத்ததுதல்,குற்றம் சுமத்தும் இன்ஷ்பெக்டரிடம் சாட்டையை வீசி அஞ்சாமையை வெளிப்படுத்துதல்,நியாயம் உன்னிடமும் இல்லையே என்று கேட்பதில் கேள்வி உரிமையை நிலை நாட்டுதல் என்று நீளும்.
தொடரும்...
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
14th March 2016 04:48 PM
# ADS
Circuit advertisement
-
14th March 2016, 07:39 PM
#3752
Senior Member
Devoted Hubber
தமிழ் நாட்டின் இரு துருவநட்சத்திரங்கள் சதுரங்கம் ஆடிக்கொண்டு
உற்சாகமாக பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம்.
சிவாஜி கணேசன் ஆலயமணி படத்தில் நடிப்பதற்காகவும்
எம் ஜீ ஆர் ஈ வீ ஆர் பிக்சர்ஸ் படத்தில் நடிப்பதற்காகவும்
ஒரே செட்டில் சந்தித்தபொழுது மனம்விட்டு உரையாடுகிறார்கள்.
(முகநூலில் இருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 4 Thanks, 4 Likes
-
14th March 2016, 07:59 PM
#3753
Junior Member
Veteran Hubber
எதிர்காலம்....?!
நம்பிக்கையே நமது வாழ்வின் தும்பிக்கை !
கடந்தகால நெல்லிக்கனியை மென்று விட்டு நிகழ்கால நீரைக் குடித்தால் எதிர்கால நாவினிக்குமே!
நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை எதிர்கால புதிய பாதை மெழுகுவர்த்தி எரியும் வெளிச்சத்தில் கூட பளீரென்று தெரியும் ஒளி மயமானதே !
Last edited by sivajisenthil; 14th March 2016 at 08:14 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
14th March 2016, 10:42 PM
#3754
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
15th March 2016, 12:59 AM
#3755
Junior Member
Platinum Hubber
-
15th March 2016, 12:59 AM
#3756
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
15th March 2016, 01:00 AM
#3757
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
15th March 2016, 01:02 AM
#3758
Junior Member
Platinum Hubber
-
15th March 2016, 01:03 AM
#3759
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th March 2016, 01:04 AM
#3760
Junior Member
Platinum Hubber
Bookmarks