Page 268 of 401 FirstFirst ... 168218258266267268269270278318368 ... LastLast
Results 2,671 to 2,680 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #2671
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜியின் காதல்கள்- 2

    அந்த நாளும் வந்திடாதா.......

    பராசக்தியிலும்,அந்த நாளிலும் படித்த சிந்திக்கும் பெண்ணை காதலித்து மணந்து நொந்து அந்த நாளில் அவர் பேசும் வசனம் "படித்த பெண்ணை கல்யாணம் செய்தது தவறு என்று புரிந்து கொண்டேன்".(நாம் எல்லோரும் நடைமுறை வாழ்க்கையில் நொந்து கொள்ளும் விஷயம்தான்)

    இந்த படத்திலும் sidetrack முதலில் பார்த்து விட்டு, maintrack ற்கு வருவோம்.படத்தில் சிவாஜி ராஜன் என்கிற புதுமை லட்சிய வெறி கொண்ட unethical careerist ஆகவும்,சந்தர்ப்பம் வாய்க்கும் போது அப்படியே மற்ற பெண்ணையும் பதம் பார்க்கும் ஆளாகவும்(காதலித்து கடிமணம் புரிந்தும்)வருவார். அம்புஜம்(சூர்ய லட்சுமியா ,மேனகாவா?),சின்னையா என்கிற (சிவாஜியின் குள்ள குரு சம்பந்தம்) பணக்கார கிழவனின் உறவில் பணத்துக்காக திளைக்கும் நாட்டிய நங்கை. பிக்னிக் வந்துள்ள இடத்தில் ராஜனின் கண்ணில் பட்டு தொலைக்க வேண்டுமா? இட்லியை நன்றாக முக்கி கொண்டிருக்கும் குள்ள கிழவனுக்கு தண்ணி கொண்டு வர செல்லும் அம்புஜத்தை ஹாட் அணிந்து ராஜன் குறும்பு வில்ல சிரிப்புடன் நோட்டமிட்டு ,சின்னையாவிடம் வந்து அமர்ந்து வம்பு வளர்க்கும் ஜாலி வில்லத்தனம் கலந்த குறும்பு அமர்களமாய் இருக்கும்.அம்புஜம் வருவதற்கு முன் அப்புற படுத்த பார்க்கும் சின்னையாவை உட்கார்ந்தே டபாய்ப்பார் . அம்புஜம் வந்ததும் நோட்டமிட்டு கள்ளபார்வையுடன், அம்புஜத்தின் சம்மதமும் கலக்க ,மறைமுகமாக அம்புஜம் தன பூர்விகம்,வாழும் இடம் எல்லாவற்றையும் குறிப்பிட சின்னையா டென்ஷன் ஆவதும், ராஜன் குறும்போடு கணக்கு பண்ணுவதும் படு ஜாலியான யதார்த்தம். பிறகு சின்னையா சின்ன வீட்டிலேயே அம்புஜத்தோடு romance பண்ணும் அழகு.அம்புஜம் கற்பமானதும் சால்ஜாப்பு சொல்லி நாள் கடத்தி உத்தர என்னும் நேர்த்தி.காதல் கடிதங்களை காட்டி மிரட்டும் அம்புஜத்தை துப்பாக்கி முனையில் கடிதங்களை திரும்ப வாங்கி ,அடிக்கும் கமெண்ட்.

    உஷாவின் சந்திப்போ பராசக்தி type ,intellectual conflict . அறிவுக்கும்,கல்விக்கும் வந்தனை செய்து,இதில் அரசியல் வேண்டாம் என்று வாதித்து சபையை மயக்கும் உபகார சம்பள அநாதை ராஜனை , சத்யாக்ரக இயக்க சுதந்திர எழுச்சி தலைவர்களின் தியாகத்தை நினைவுறுத்தி ,உறவினர் துன்ப நிலையில் உள்ள போது சிந்தனையா செய்வோம் என்று கேட்டு சபை வளையல் அணிவிக்கும் அளவு பங்க படுத்துவார் உஷா.

    ஆனால் அந்த ராஜன் மனதில் புகுந்து விட்டதும்,சில நாட்கள் கழிந்து தொழில் ரீதியாக தந்தையிடம் பேசும் ராஜனை கண்டு ,இருவரும் பழைய பிரச்சினையை கருதாமல் மனமொப்புவதும், முழுக்க முழுக்க அறிவு சார்ந்த காதல்.

    கடைசியில் மனைவியிடம் பிடிபட்டு கட்டி வைத்து confront பண்ணும் காட்சி சிவாஜியின் அற்புத நடிப்பை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. சொந்த நாடு அறிவாளிகளுக்கு பாரா முகம் காட்டினால் ,அவர்கள் தங்களுக்கு வசதியான பாதையை தேர்ந்தெடுத்து நியாய படுத்துவது இந்த பட காட்சியில்,வசனத்தில்,நடிப்பில் விகசித்து தெறிக்கும்.சிவாஜி குரூரம்,ஏமாற்றம்,மகிழ்ச்சி,அவசரம்,கடுப்பு,எதி ர்பார ்ப்பு எல்லா உணர்வுகளையும் கொடுக்கும் அழகே அழகு.இவ்வளவுதானா உஷா உன் தேச பக்தி என்று மனைவியை கலாய்ப்பது,வெறுக்க வேண்டியது தோல்வி என்னும் போது ஒரு தீவிர வெறி,அம்புஜம் விஷயத்தை கேட்டு ஏன் அவளையும் ஏமாற்றுகிறாய் என்று மன்றாடும் மனைவியிடம் பிடி கொடுக்காமல்,கூட வந்தால் லேடி அம்பாசடர் ஆகா திரும்பலாம் என்ற கொக்கி,துப்பாக்கி நீட்டும் மனைவியிடம் அன்று கடற்கரையில் சொன்னது நினைவிருக்கிறதா இன்பத்தின் எல்லை என்று,புரண்டு படுக்கும் போதும் முழிப்பாயே என்று மனைவியின் உணர்வை தூண்டி divert பண்ண பார்க்கும் போது சிறிதே உணர்ச்சி காதல் தலை தூக்கும்.

    மற்ற படி அறிவு காதல்,ஏமாற்று காதல்,துரோக காதல்,காரிய காதல்தான் இந்த படத்தில்.

    அடுத்து,இதையெல்லாம் சரி பண்ணும் இரண்டு உணர்வு காதல்கள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2672
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜியின் காதல்கள்-3

    ராஜா ராணி-1956.

    இதுவரை நான் பேசியதெல்லாம் intellectual காதல்கள்.இதெல்லாம் காதலில் சேர்த்தியா என்றே உலகம் பேசி கொண்டிருக்கிறது. இப்போது நான் பேச போவது அக்மார்க் உள்ள பூர்வமான காதல்.

    அதுவரை தமிழ்திரையே காணாத அதிசயம்.

    நிஜமாகவே chemistry கொண்ட அழகான இளைஞன் இளைஞி இணைவு.

    நடிப்பு,வயது,அனுசரணை (compatability ) அத்தனையிலும் நூற்றுக்கு நூறு வாங்கி அன்றைய இளைஞர்களின் இதய துடிப்பை எகிற செய்த ஜோடி.

    Feelgood என்ற genre ரொமாண்டிக் காமெடி.

    அலுப்பு தட்டாத திரைக்கதை ,வசனம்,நல்ல இயக்குனர்.

    டீசிங் ,situational காமெடி ,ஜாலியான ஓட்டம் அனைத்தும் கொண்ட அற்புத படம்.

    எப்போதாவது கிளைமாக்ஸ் முடிந்த பிறகு ஒரு full டூயட் பாடலை ஒரு ஜோடி பாடி ரசிகர்கள் கலையாமல் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்த அதிசயம் கண்டதுண்டா?ராஜா ராணியில் சிவாஜி-பத்மினி என்ற அமர காதலர்கள் நிகழ்த்தி காட்டினர்.

    60லும்,70 களிலும் இயக்குனர்கள் திணறிய (கே.எஸ்.ஜி,ஸ்ரீதர்,பாலச்சந்தர்) விதவா மறுமணத்தை அலட்சியமாய் அலட்டாமல் சாதித்து காட்டியது இந்த 50 களின் படம்.

    சேரன் செங்குட்டுவன்,சாக்ரடிஸ் போன்ற அபூர்வ performance ,இந்த படத்தின் மிக அற்புத காதலை விழுங்கி ஏப்பம் விட்டு நிலைத்து நிற்பது சோகமே.

    ராணி என்கிற குருட்டு தகப்பனின் ஏழை பெண் ,சந்தர்ப்ப வசத்தால் ராஜா என்கிற வசதியுள்ள இளைஞனால் பணக்கார பெண்ணாக புரிந்து கொள்ள பட்டு ,அவனிடமே வேலைக்கு சேர்ந்து ,காதல் கனிந்து,உண்மையும் தெரியும் போது,ராணி இளம் வயது விதவை என்ற பேருண்மை திடீரென்று காதலை பெயர்க்க ,பிறகு பரபரப்பான இறுதி காட்சியில் காதலர்கள் சேரும் கதை.

    என்னவென்று இந்த படத்தை வர்ணிக்க?இதை பார்க்காதவர்களை சிவாஜி ரசிகன் என்ற லிஸ்ட் டில் நான் சேர்க்கவே மாட்டேன்.(ராகவேந்தர் மட்டும்தான் நிபந்தனை விதிக்க வேண்டுமா?நானும்தான்)இளைமையுடன் கூடிய குறும்பு மின்னி தெறிக்கும் அழகோ அழகு சிவாஜி-பத்மினி.(முத்துலிங்கம் போல நானும் சிறிதே வருந்தினேன் இந்த படம் காணும் போது)

    மயக்க மருந்து உட்கொண்டு ராணி தள்ளாடி ராஜாவின் காரில் உட்கார்ந்து கண்ணசர தொடங்கும் இளமை குதூகல திருவிழா. ராஜா வீட்டிற்கு அழைத்து சென்று(தூக்கம் வருதுப்பா என்னும் பத்மினியின் நடிப்பு,பின்னாட்களின் பஞ்ச தந்திரம் தேவயானியை தூக்கி சாப்பிடும்) ,ஏனோதானோ போஸில் போட்டு விட்டு,பத்திரிகையில் வந்த விளம்பர படி பணக்கார பெண்ணாய் (லீலா) இருப்பாளோ என்ற சந்தேகத்தில் ,அவளின் தூங்கும் விதத்தை நேர் செய்து,போர்வையும் போர்த்தும் விதம். மறுநாள் காலை ராணி ஒட்டு கேட்டு லீலாவாகவே தொடர ,அவளை வீட்டில் விட வரும் ராஜாவிடம் இங்கேயல்ல, என்ற டபாய்த்து ,சுலபமாய் நுழைந்து வெளியேறும் வீடாக பார்ப்பது. நுழைந்து பிறகு அமைதியாக வெளியேறி ,பரோபகாரம்-தங்கம்(என்.எஸ்.கே,டி.ஏ.மதுரம்) தம்பதிகள் வீட்டில் குழப்பம் விளைவிக்கும் சமயங்கள். ராஜா, ராணியிடம் சேலை கொடுக்க,துரத்தும் நாய்க்கு பயந்து மாடியேறி ஓடி அமர்க்களம் செய்ய , தங்கத்தையும்,ராஜாவையும் ,பரோபகாரம் சந்தேகிக்க, ராணியையும்,பரோபகாரத்தையும் தங்கம் சந்தேகிக்க ஜாலி நாட்.

    வேலைக்கு அமரும் ராணியிடம் சீசீ இதெல்லாம் அவங்களுக்கு ஒரு பொருட்டா ,அவங்க பொழுது போக்கா வேலை செய்யறாங்க ,சம்பளமெல்லாம் வாங்க மாட்டாங்க என்று ராணி வயிற்றில் புளி கரைக்கும் காட்சி தூள். ராணி பிறகு தான் ஒரு 200 ஐ தொலைத்ததாய் சொல்லி சமாளித்து இருநூறை பெறுவார்.

    பாபு என்ற அமச்சூர் நாடக நண்பனிடம் முரண் பட்டு ,தானே நாடகம் அரங்கேற்றும் போது,பாபு பணம் கொடுத்து தூண்டி விடும் கலாட்டாவால் துவங்கும் காதல் அத்தியாயம் நம்மை சொக்க வைக்கும்.

    எனக்கு மிக பிடித்த காதல் காட்சிகளில் ஒன்று.கல்லடிக்கு தப்பி ஓடும் லீலாவை துரத்தி கொண்டு, ஓடி,இருவரும் ஒரு வாய்க்காலை கடக்க முயலும் போது நனைந்து விட,நடுக்கத்துடன் ,தன வயிற்றுக்குள் நாடகத்திற்காக சுருட்டும் சேலையை லீலாவிற்கு கொடுத்து திருமணம் என்று சொல்லி தீர்மானம் என்று சமாளித்து லவ் மீட்டர் கையை கொடுத்து மாட்டி கொண்டதாய் டபாய்த்து,மீனை கண்ணுக்கு ஒப்பிட்டு வழிந்து,அய்யய்யோ,அநியாயத்துக்கு ஜாலி இந்த காட்சி.

    பாபுவுடன் நேரும் கைகலப்பை விலக்க,வீட்டினுள்ளிருந்து பையன் வேஷத்தில் வரும் ராணியை ,போட்டோ பார்த்து அடையாளம் கண்டு ,கட்டு போடும் போது டபாய்ப்பது படு ஸ்வீட்.

    டீசிங் சாங் (எஸ்.சி.கிருஷ்ணன்)லீலா லாலி, பூனை கண்ணை மூடி கொண்டால் செம கலாய்ப்பு.

    improvisation என்றால் தெரிந்த கொள்ள விரும்பும் ஆட்கள், சிவாஜி-பத்மினி காதல் காட்சியில் சிவாஜி ஒரு மர மட்டையை பறித்து, frisky ஆக காலால் உதைத்து,மட்டையை கையால் உரித்து கொண்டு ,துரு துறுவென்று பண்ணும் இந்த அதகள காதல் காட்சி!! என்னவென்று வர்ணிக்க?

    காதலில் ஒருமித்த பின் transister பரிசு காட்சி என்று மகா சுவாரஸ்யம்.

    ஒரு இதமான ஜாலி ரைட் இந்த இதமான நகைச்சுவை கலந்த அர்த்தமுள்ள காதல் படம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. Thanks Russellmai thanked for this post
  6. #2673
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks Russellmai thanked for this post
  8. #2674
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  10. #2675
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like


    Aatuvithaal Yaarovar song :
    Parthiban S Arumuganeri wrote 2 months ago
    1:19ல் ‘என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு...’

    ‘அனுபவத்தில்’ என்று
    சொல்கையில்
    வலது இமையில்
    தனித்து தருகிறான் பாருங்கள்
    ஒரு மின்னல் வெட்டு...

    இதனை
    செய்து காட்டிவிட்டு
    அவனை
    மிகை நடிப்பென்று திட்டு

  11. Thanks Harrietlgy, Russellmai thanked for this post
  12. #2676
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like


    Ar Raja wrote in Youtube:
    பாட்டும் நானே பாடல் காட்சி ஒரு மாஸ்டர் பீஸ்..

    ஒரு கட்டத்தில் 5 சிவாஜிகள், அடுத்தடுத்து அமர்ந்திருப்பர். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இசைக்கருவி.. ஒருவர் மட்டும் கொன்னக்கோல் என்னும் வாய்த்தாளம்.. முதலில் சிவாஜி 'தனி'யாக வீணை வாசிப்பார்.. அவர் முடிக்கும் தருவாயில் அடுத்து மிருதங்க இசையை வழங்கவிருக்கும் சிவாஜி, தன் வாத்தியத்தை வசதியாக அமைத்துக்கொண்டு தயாராவார் பாருங்கள்.. அடடா..! அடுத்து புல்லாங்குழலாரும் எதோ ஒருவகையில் தயாராவார். இறுதியில் கொன்னக்கோலார் என்னக் கோளாறு பண்ணுவாரென ஆவலோடு காத்திருந்தேன். முன்னவர் முடிக்கும்போது, தன் தொண்டையைத் தடவித் தயார்செய்து ஆரம்பித்தார்..! அப்படியே உடல் சிலிர்த்துவிட்டது..!!

    சிவாஜி என்ற நடிகர் ஒருவர்தான்.. ஆனாலும் திரையில் 5 வெவ்வேறு கலைஞர்கள் வீற்றிருக்கிறார்கள் என்று நம்மை உணரவைப்பார்..

    இதெல்லாம் பார்த்து ரசித்தால்தான் புரியும்.. சிவாஜி ஒரு மஹாகலைஞர்..!

    Mohan Srinivasan wrote in You tube :
    It is very unfortunate that Shivaji Ganesan did not get the recognition he truly deserved. Undoubtedly the best actor ever lived.
    " 4.44 ---Just watch the Konnakkol portion of him getting ready by adjusting his throat when the flute goes for the first round of kalpana swarams".
    He was truly amazing and no one can ever match him.

  13. #2677
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    More details to follow
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Likes Georgeqlj, Russellmai, Harrietlgy liked this post
  15. #2678
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    "பா "வரிசை பாடல்கள்.
    தலைவரின் படங்களில் இடம் பெற்றவை மட்டும்.
    1.பார் மகளே பார்.
    2.பார்த்த ஞாபகம் இல்லையோ
    3.பாலும் பழமும் கைககளில் ஏந்தி
    4.பாவாடை தாவணியில்
    5.பார்த்தா பசுமரம்
    6.பால் பொங்கும் பருவம்
    7.பாலக்காட்டு பக்கத்திலே
    8.பாலிருக்கும் பழமிருக்கும்
    9.பாலூட்டி வளர்த்த கிளி
    10.பாவை யுவராணி
    11.பார்த்துப்போ
    12.பாசமலரே அன்பில் விளைந்த
    13.பாட்டும் நானே
    14.பாட்டொன்று கேட்டேன்.
    15.பார்த்தால் பசி தீரும்.

  16. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, Russellmai, Harrietlgy liked this post
  17. #2679
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  18. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai, RAGHAVENDRA, Harrietlgy liked this post
  19. #2680
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  20. Thanks Russellmai thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •