Page 70 of 401 FirstFirst ... 2060686970717280120170 ... LastLast
Results 691 to 700 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #691
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ரவி
    நினைத்தோம் மகிழ்கிறோம்.. இரு மலர்கள் படத்திற்கு மட்டுமே தனியாக ஆயிரம் பதிவுகள் தேவைப்படும் போல.. தங்களின் உன்னதமான எழுத்தில் இரு மலர்கள் நமது இதய தெய்வத்தின் அர்ச்சனைப் பூக்களாக வடிவெடுத்து அன்றாடம் அர்ச்சிக்கப் படுகின்றன.

    அந்த வித்யாபதி பூந்தோட்டத்து மலர்களைத் தொடுத்தார்.
    இந்த ரவியோ கற்பனைத் தோட்டத்து மலர்களைத் தொடுத்தார்.

    அந்த வித்யாபதி அகர முதல எழுத்தெல்லாம் பாடினார்.
    இந்த ரவி அகில முழுதும் தலைவர் புகழ் பாடுகிறார்.

    பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes ifohadroziza, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #692
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிப்பு தெய்வத்தின் 'காவல் தெய்வம்' மீள்பதிவு (புதிய அங்கத்தினர்களுக்காக)



    திரையுலகைக் காத்த 'காவல் தெய்வம்' ஒரு ஆய்வு. (நடிகர் திலகத்தின் பகுதி மட்டும்)

    அதுவரை வெளிவந்த நடிகர் திலகத்தின் காவியங்களில் நடிப்பில் பிரளயம் செய்த சரித்திர பெருமை பெற்ற படம்.

    "கொஞ்ச நேரமே வந்தாலும் அந்த சாமுண்டி என்னை அதிகமாகத்தான் ஆட்டிப் படைத்து விட்டான்"

    என்று அந்த சாமுண்டி பாத்திரத்தைப் பற்றி நடிகர் திலகமே பெருமிதம் கொண்ட கர்ஜனைக் காவியம். இனி சாமுண்டியைப் பற்றி...



    சாமுண்டி கிராமணி ஒரு மரம் ஏறி. பனை மரம் ஏறி 'பதநீர்' இறக்கும் தொழில் அவனுடையது. குணம் புடம் போட்ட தங்கம். யார் வம்புக்கும் போகாமல் தான் உண்டு, தன் தொழில் உண்டு, தன் அன்பு மகள் உண்டு என்று வாழ்பவன். சாணரன் ஆனாலும் தன்மானமிக்கவன். தன்னுடன் மரம் ஏறும் சக தொழிலாளியிடம் கூட அவன் ஏறும் மரத்தில் இருக்கும் குருவிக்கூட்டைக் கலைத்து விடாதே என்று சொல்லும் இளகிய மனம் கொண்டவன். மனைவியை இழந்தவன். மகளுக்காக உயிரை சுமப்பவன்.

    ஊர்ப் பெரிய மனிதர் இருவரின் கழுகுப் பார்வையில் பட்டு விடுகிறாள் சாமுண்டியின் மகள். சாமுண்டி தொழிலுக்குப் போய் இருக்கும் நேரத்தில் மகளின் கற்பு சூறையாடப்படுகிறது. காமப் பிசாசுகளின் காம வெறியாட்டத்தால் கற்பிழந்து காலனுக்குப் பலியாகிறாள் காவிய மகள்.

    வீடு திரும்பும் சாமுண்டி கயவர்களைக் கண்டு விடுகிறான். என்ன நடந்தது என்று தெரியாமல் ஆனால் என்னவோ நடந்து விட்டது என்பதை மட்டும் புரிந்துகொண்ட சாமுண்டி வீடு நுழையும் முன் ஒருவனைப் பிடித்து விடுகிறான். இன்னொருவனோ தப்பித்து விடுகிறான். பிடித்தவனைப் பிடித்தபடியே வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால்...



    மகள் மானத்தை பலி கொடுத்து, அலங்கோலமாக சின்னாபின்னாபடுத்தப்பட்டு மரணத்தை தழுவியிருக்கிறாள். சடுதியில் புரிந்து கொண்டு உறைந்து போய் விடுகிறான் சாமுண்டி. அவன் வாழ்வே அவன் கண்ணெதிரில் நாசமாகக் கிடக்கிறது. கோபத்திலும், வெறியிலும், கட்டுக்கடங்கா உணர்ச்சியிலும் பிடித்தவனை கண்டந்துண்டமாக வெட்டி மகளுக்கு பலி கொடுக்கிறான். கதறுகிறான்... துடிக்கிறான்... துவள்கிறான்.

    காவல் துறை கைது செய்து கூண்டில் ஏற்றுகிறது. கோர்ட் ஆயுள் தண்டனை விதிக்கிறது. விதியின் தீர்ப்பு. சாய்ந்த பனைமரமாய் சருகாய் கருகிப் போனது அவன் வாழ்க்கை.



    ஒருநாள்... எதிர்பாராத திருப்பம். தன் மகளை நாசப்படுத்திய இன்னொருவன் தான் இருக்கும் ஜெயிலுக்கே தண்டனை அனுபவிக்க வருவதைப் பார்த்து விடுகிறான் சாமுண்டி. கூண்டில் அடைக்கப் பட்ட சிம்மமாய் கர்ஜிக்கிறான். அங்கும் இங்கும் கூண்டில் அலை பாய்கிறான். கொலை வெறியோடு எரிமலை ஆகிறான்.

    ஜெயிலில் உள்ள சக கைதி கேசவன் தச்சுப் பட்டறையில் வேலை செய்யும்போது கம்பி அறுக்கும் ரம்பத்தை கொண்டு வந்து சாமுண்டியிடம் கொடுத்து தப்பித்துப் போக சொல்கிறான்.



    தப்பித்துப் போகவா விருப்பப்பட்டான் சாமுண்டி? அவன் மனம் முழுதும் ஒரே எண்ணம்... ஒரே சிந்தனை... பழி..பழி..பழி.. பழி தீர்... மகளைக் கெடுத்தவனை பழி தீர்...

    ஒரு இரவு வேளையின் நடுநிசியில் ஜெயில் கம்பியை அறுத்து தப்பிக்கிறான் சாமுண்டி. கால்களில் பூட்டப்பட்டுள்ள விலங்கு சத்தம் காவலர்களுக்கு தெரியாமல் பூனை போல மெதுவாக அடியெடுத்து வைக்கிறான். ஜெயிலுக்குப் பக்கத்தில் தெருக்கூத்து நடக்கிறது. என்ன நாடகம் தெரியுமா?.. இரண்ய விலாசம்... பிரகலாதா நாடகம்.

    என்ன ஒரு பொருத்தம்! அங்கே நாராயணன் தூணிலிருந்து நரசிம்மமாய் வெடித்துக் கிளம்ப, இங்கே நமது சிம்மம் ஜெயிலில் இருந்து துடித்துக் கிளம்ப, அங்கே இரணியனை நரசிம்மன் குடலைக் கிழித்து துவம்சம் செய்ய, இங்கே சாமுண்டி கயவன் உறங்கும் சிறைக் கம்பியை அறுத்து அவனது குடலை உருவி நாசம் செய்ய...

    எல்லாம் முடிந்துவிட்டது. ஆனால் யாரும் நெருங்க முடியவில்லை.. சிங்கத்தின் உறுமல் நிற்கவில்லை...கோபம் தணிய வில்லை. அன்பே வடிவான ஜெயிலரின் சாந்தமான கண்களின் தீர்க்கமான கருணைப் பார்வையினால் சாந்தமடைகிறான் சாமுண்டி. பழி தீர்ந்தது...வெறி தணிந்தது... இனி நிம்மதி... மனதில் எந்த பாரமும் இல்லை...லேசானது...கொலைக்குற்றத்துக்கு தூக்கு தண்டனை... சந்தோஷமாக எதிர்கொள்கிறான். விரைவில் தன் மனைவி கமலத்திடமும் மகள் சிவகாமியிடமும் ஐக்கியமாகி விடுவான் நம் சாமுண்டி.




    சாமுண்டியாக சரித்திர நாயகர். கேக்கணுமா...சும்மா அதம் பறக்காதா!...

    தலையில் பின்னால் அள்ளி முடியப்பட்ட பெரிய கொண்டை... முகத்தின் இருபக்கமும் மேல்நோக்கி முறுக்கிவிடப்பட்ட முரட்டு மீசை... இடுப்பில் சாணரர்கள் அணியும் கச்சை... கச்சையில் கட்டப்பட்ட அருவாப் பொட்டி... அதில் செருகியிருக்கும் அருவாகத்தி... அருவாவை சுற்றியிருக்கும் கிட்டிக் கயிறு... மரம் ஏற தளவாடிக்கயிறு சகிதம் சாமுண்டி கிராமணியாக நம் சிங்கத்தமிழன். மரம் ஏறும் சாணரக் குலத்தோர் கெட்டார் போங்கள்.

    சாணரர்களுக்கே உரித்தான அந்த கம்பீர நடை... அந்தப் பணிவு... அடக்கம்... அதே சமயம் தன்மானத்தை விட்டுக்கொடுக்காத கவரிமானின் குணம்... கள் இறக்கச் சொல்லி தூண்டிவிடும் களவானிகளின் மேல் எரிச்சல், கோபம்... மகளின் மேல் மட்டற்ற பாசம்... மகள் கெடுக்கப்பட்ட நிலையில் பொங்கி எழும் பிரளய நிலை... அதிர்ச்சியில் உறைந்து நிலைதடுமாறி மகளின் பிணத்தின் மேல் விழுந்து மகளை வாரியணைத்து கதறி அழும் சோகம், வெறி கொண்ட வேங்கையாகி மகளைக் கெடுத்த ஒருவனை வெட்டிச் சாய்க்கும் வேகம்... சிறையில் தன்னுடன் சக கைதியாய் இருக்கும் சிவக்குமார் தன் கதையைக் கேட்கச் சொல்லி கேட்கும் போது "கத கேக்குறியா...என் கதையைக் கேக்குறியா" என்று குமுறி மகளின் மேல் உள்ள வாஞ்சையை வர்ணிக்கும் விதம்... தான் பழிவாங்கத் துடிக்கும் கயவன் தன் எதிரிலேயே தான் இருக்கும் சிறையில் அடைக்கப்பட கொண்டு போவதை எதிர்பாராமல் பார்த்து அதிர்ச்சியுற்று, அவன்தானா என்று நன்கு உற்று நோக்கி, பார்வையாலேயே நன்கு ஊர்ஜிதம் செய்த பின்னர் செய்வதறியாது சிறையிலேயே சிங்கம் போல சிலிர்த்து, ஜெயில் கம்பிகளைப் பிடித்தபடியே அவனை கிரகிக்கும் விதம்... அங்கும் இங்குமாக அலைபாய்ந்து நடக்கும் பட்டவர்த்தனமான பழி உணர்ச்சி... நாகேஷ் ரம்பத்தை கொடுத்தவுடன் ஏதோ பம்மலாரின் பொக்கிஷம் கிடைத்தது போன்ற சந்தோஷ வெறி... இரணியன் கூத்து நடக்கும் போது கம்பியை நைசாக அறுத்து தப்பிக்கும் விதம்... (ஆஹா... கம்பியை அறுத்து முடித்தவுடன் ஏற்படும் கைவலியைக் கூட கைகளை உதறிவிட்டவாறே காட்ட தெய்வமே! உன்னால் மட்டுமே முடியும்) கால்களில் பூட்டப்பட்ட விலங்குகளினூடே சத்தமில்லாமல், சந்தடியில்லாமல் அடிமேல் அடியெடுத்து வைக்கும் விவேகம்... O.A.K.தேவர் உறங்கும் சிறை அறையின் கம்பிகளை அறுத்து உள்ளே நுழையும் லாவகம்... உள்ளே நுழைந்தவுடன் நம்முடைய இலக்கை அடைந்து விட்டோம் என்ற பரிபூரண திருப்தியை முகத்தில் வெளிப்படுத்துதல்... கண்களில் கனல் கக்கும் வெறி... உச்சந்தலை வரை ஏறியிருக்கும் கோபம்... நாலு கால் பாய்ச்சலில் தாவி நரியைப் பிடிக்கும் சிங்கத்தின் வெறி... வில்லனை நார் நாராய் கிழித்து வெறி அடங்காமல் தொடர் உறுமல்... ஜெயிலர் எஸ்.வி. சுப்பையாவின் கருணைப் பார்வையில் படிப்படியாக கோபம் குறைத்து சாந்தம்... நோக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி விட்ட திருப்தியை அழகாக நடையிலேயே வெளிப்படுத்தும் பாங்கு... தூக்குதண்டனையின் முதல்நாள் இரவு அநியாயமாக உயிரைவிடப் போகிறோமே என்ற சாதாரண மனிதனின் ஆதங்க வெளிப்பாடு ... தனிமை வாட்டும் சோகம்... அதை மறக்க சக கைதிகளை பாட்டு பாடச் சொல்லி கேட்கும் பரிதாபம்... பாட்டுபாட சக கைதிகள் மதங்களின் பெயரை சொல்லி மறுக்கும் போது,"அட ஏண்டா பாவிகளா இங்க வந்து கூட சாதி மதம்ணு பேசிகிட்டு" என்று சலிப்புக் குரல் கொடுத்து... பின் தானே "பொறப்பதும் போறதும் இயற்கை...சிலர் புகழ்வதும், இகழ்வதும் செயற்கை" என்று வருத்தம் மேலிடப் பாடி முடிக்கும் சோகம்... தூக்கு மேடைக்கு போகும் போது மிக அமைதியாக கைதிகளிடம் விடை பெற்று "நான் என் சிவகாமிகிட்டே போறேன்" என்று தன்னைத்தானே தேற்றிகொள்ளும் பக்குவம்... ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக இறுதி மூச்சை விடப்போகும் போது "ஐயா"...என்று குரல் எதிரொலிக்க கூக்குரலிடும் பரிதாபம்...

    நடிப்புக் கயிற்றால் உலகத்தைக் கட்டிப் போட்ட கண் கண்ட கடவுளே! உன் பக்தனாக நாங்கள் என்ன தவங்கள் செய்திருந்தோமோ தெரியவில்லை.


    அன்புடன்,
    வாசுதேவன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Thanks sss thanked for this post
  6. #693
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-104.

    "வியட்நாம் வீடு."

    துவக்கக் காட்சி.

    விசேஷ காலங்களில் மனிதனுக்கு இனம் புரியாத
    கூடுதல் சந்தோஷம் கிட்டும்.
    இதை மெய்ப்பிக்கிற விதமாய்
    தன் வீட்டுக் கிரகப் பிரவேச
    நிகழ்வுக்கு வருபவர்களைத்
    தன் சம்மந்தி வி.எஸ்.ராகவன்
    வரவேற்பதைக் கிண்டலடித்து,
    உரிமையுடன் அவர் இடுப்பில்
    கிச்சுகிச்சு மூட்டி விளையாடுவது.

  7. Likes Harrietlgy, Russellmai, RAGHAVENDRA liked this post
  8. #694
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-105.

    "முரடன் முத்து".

    "தாமரைப் பூக்குளத்திலே"
    பாடல்.

    பாடல் முடியும் தருவாயில்
    மற்ற எல்லாம் மறந்த காதல்
    மகிழ்வில், தேவிகா எதிரில்
    ஆட, ஒரு சின்னப் பாறை மீது
    நின்று கொண்டு ஆடும்
    ஆட்டமும்,

    பலத்த காற்றுக்கு வேட்டி
    விலகி விடாதபடிக்கு,ஆட்டத்தோடு ஆட்டமாய்
    அதையும் சரி செய்து கொள்வதும்.

  9. Likes Harrietlgy, Russellmai, RAGHAVENDRA liked this post
  10. #695
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-106.

    "பாட்டும் பரதமும்".

    நடன நிகழ்ச்சிக்கு தலைமை
    ஏற்க அழைக்க வந்த பள்ளித்
    தலைமையாசிரியரான காது
    கேளாத சாமிக்கண்ணு "ஒங்க
    அப்பா ஆரம்பிச்சு வச்ச பள்ளிக்
    கூடம்." என்று சொன்னதையே
    சொல்ல...

    தொழில் சம்மந்தமான வேறொரு தொலைபேசிப் பேச்சையும்,சாமிக்கண்ணுவின் " ஒங்க அப்பா ஆரம்பிச்சு வச்ச
    பள்ளிக்கூடம்" ஒப்பித்தலையும்
    ஒரே நேரத்தில் சமாளிக்கும்
    சாமர்த்திய வேகம்.

  11. #696
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    எத்தனை முறை மீள்பதிவு செய்தாலும் ஒவ்வொரு முறையும் சுவையாகவும் புதிதாகவும் இருக்கும் சிறப்பு வாய்ந்த எழுத்துக்கள் தங்களுடையது. காவல் தெய்வம் விதிவிலக்காகி விடுமா என்ன.
    படிக்கப் படிக்க தலைவரின் மேன்மை மேலும் அதிகரித்துக்கொண்டே போகிறது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Likes Russellmai liked this post
  13. #697
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மிக மிக மிக மிக மிக...... அரிய பொக்கிஷம்......

    நடிகர் திலகத்தின் ஒவ்வொரு ரசிகருக்கும் அரிய பொக்கிஷம்...

    சேமித்து வைத்துப் பார்த்துப் பார்த்து நெஞ்சில் மகிழ வேண்டிய பொக்கிஷம்...

    காத்திருங்கள்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  15. #698
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    காலத்தால் அழியாத கலை தெய்வத்தின் சாதனை மகுடம். பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும் அபூர்வ நிழற்படம். தமிழ் சினிமாவின் பெருமையை உலகெங்கும் 1959லேயே பறைசாற்றிய உலக மகா நாயகனின் உன்னத நிகழ்வு.

    வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதினை ஆசிய ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் நடிகர் திலகம் பெற்ற பெருமை மிகு நிகழ்வைப் பறைசாற்றும் நிழற்படம்.

    ஆசிய ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் பெற்ற சிறந்த நடிகருக்கான விருதுடன் நடிகர் திலகம் காட்சியளிக்கும் அபூர்வ நிழற்படம்.

    ஒவ்வொரு ரசிகருக்கும் இது பொக்கிஷமன்றோ.

    அனைவருக்கும் பொதுவான வேண்டுகோள். இந்நிழற்படத்தில் எந்த விதமான எழுத்துக்களையும் வாட்டர்மார்க்காகவோ அல்லது வேறு குறிப்புகளுக்காகவோ பதிக்க வேண்டாம்.


    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Thanks sss, mappi, vasudevan31355 thanked for this post
  17. #699
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=vasudevan31355;1268647]நடிப்பு தெய்வத்தின் 'காவல் தெய்வம்' மீள்பதிவு (புதிய அங்கத்தினர்களுக்காக)




    (. மரம் ஏறும் சாணரக் குலத்தோர் கெட்டார் போங்கள்)
    —------------------------------------------------------------

    இந்த ஸ்டில்லைப் பார்த்தால் யார் தான் அதை மறுப்பார்கள்.நீங்கள் பதிவிட்ட போட்டோக்கள் அத்தனையும் அட்டகாசம்.
    மீள்பதிவாக இருந்தாலும் அதிலிருந்து யாரும் மீள முடியாத பதிவு.
    ்படம் பார்த்த திருப்தி.
    Last edited by senthilvel; 16th November 2015 at 11:12 AM.

  18. Likes Russellmai liked this post
  19. #700
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பொக்கஷப்போட்டோக்களை தேடிப்பிடித்து பதிவிடும் ராகவேந்திரா அவர்களுக்கு நன்றி

  20. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •