Page 255 of 401 FirstFirst ... 155205245253254255256257265305355 ... LastLast
Results 2,541 to 2,550 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #2541
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Last edited by RAGHAVENDRA; 12th January 2016 at 07:42 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2542
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி-வாணிஸ்ரீ- The Ultimate Pair in Tamil Screen .

    நடிகர்திலகத்தின் காதல் காட்சிகள் , Duets என்று எல்லாவற்றையும் அலசி விட்டேன்.

    1952 முதல் 1960 வரை அவர் பலதரப்பட்ட கதைகள் , படங்கள், பாத்திரங்கள், நடிப்பு முறைகள் என்று அவர் focus சென்று விட்டதால் ,இந்த கால கட்டத்தில் பத்மினியோடு அவர் நடித்த ராஜாராணி,புதையல்,உத்தம புத்திரன்,தெய்வ பிறவி காதல் காட்சிகள் சிறந்தவையாகின்றன. ஆனால் இந்த கால கட்டத்தில் romance ,intimacy ,chemistry (தெய்வ பிறவியில் ஒரு காட்சியில் கழுத்தில் சொறிந்து கொள்ளும் சிவாஜியின் குறிப்பறிந்து பத்மினி சொறிந்தே விடுவார்.) இருக்குமே அன்றி erotism அன்றைய காலகட்டங்களில் யார் படத்திலும் இல்லை.ஜமுனா, மாலினி,வைஜயந்தி, சாவித்திரி ,கிரிஜா போன்றோருடன் ஒன்றிரண்டு காதல் காட்சிகள்,காதல் பாடல்கள் மிக நன்றாக இருக்கும்.

    1961-1965- அவர் உடல் அமைப்பு ஒத்து வராததால் காதல் காட்சிகள் மிக அபூர்வம். அப்படி வந்தவை தேவிகா,சரோஜாதேவி, ஜமுனா சம்பத்த பட்ட நிச்சய தாம்பூலம், பலே பாண்டியா, இருவர் உள்ளம்,கல்யாணியின் கணவன்,அன்னை இல்லம்,ஆண்டவன் கட்டளை,புதிய பறவை,நவராத்திரி,சாந்தி,நீலவானம் படங்களில் இடம் பெற்றவை.

    அதற்கு அடுத்த காலகட்டமான இளைத்து இளமை மீண்ட திராவிட மன்மதனின் இளமை திருவிழா காலமான 1966-1974. இந்த கால கட்டத்தில் அவரின் குறிப்படும் இளம் ஜோடிகளாக (அப்போதும் அவர் எங்கே பத்மினியையும்,சரோஜாதேவியையும் விட்டார்?)கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா,வாணிஸ்ரீ, பாரதி,காஞ்சனா,உஷா நந்தினி,மஞ்சுளா போன்றோரை குறிப்பிடலாம். உங்களுக்கே தெரியும் பாரதி,காஞ்சனா ஆகியோர் one movie wonders .கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா நடித்த பெரும்பாலானவை performance oriented not romance centric . ஆனாலும் கே.ஆர்.வியின் செல்வம்,ஊட்டி வரை உறவு, ஜெயலலிதாவின் கலாட்டா கல்யாணம், தெய்வ மகன், எங்க மாமா ,சுமதி என் சுந்தரி , ராஜா போன்ற படங்களில் romance பாடல்கள்,காட்சிகள் நன்கு வந்திரூக்கும். உஷாவின் பொன்னூஞ்சல் படத்தை பாடல்கள், காதல் காட்சிகளுக்காக பல முறை பார்த்திருக்கிறேன். அந்த காலகட்டத்தில் மஞ்சுளாவுடன் இரண்டே படங்கள் எங்கள் தங்க ராஜா,என் மகன் என்ற இரண்டு. எங்கள் தங்க ராஜாவின் கல்யாண ஆசை, இரவுக்கும் cute duets என்ற அளவில் சரி.

    இங்கேதான் நம் வாணி வருகிறார். இணைகிறார்.இசைகிறார்.பிணைகிறார், பின்னுகிறார்,என் தூக்கத்தை கெடுத்த அத்தனை பட காட்சிகளின் ஜோடி.
    1968- 1974 -உயர்ந்த மனிதன்,நிறை குடம், வசந்த மாளிகை, சிவகாமியின் செல்வன்,வாணி ராணி .
    பின்னால் 1975-1979- ரோஜாவின் ராஜா, இளைய தலைமுறை ,நல்லதொரு குடும்பம்.(பாவ பூமியை மறப்போம்,மன்னிப்போம்) என்று அப்பப்பா!!!
    என்னை ஏன் இந்த ஜோடி இத்தனை ஆட்கொண்டது?

    1)Best physical compatibility in features (மூக்கு ),உடலமைப்பு,நிறம்,உயரம் என்று பிரம்மா சிவாஜிக்காக தயார் பண்ணிய pair .
    2) நடிப்பிலும் ,ஓரளவு குறை சொல்ல முடியாமல் ஈடு கொடுத்தவர்.
    3) நடித்த அத்தனையிலும் romance,erotism முன்னிலை படுத்த பட்டு, ultimate romantic sivaji classic வசந்த மாளிகை ஜோடி.
    4)பாடல்கள் (வெள்ளி கிண்ணந்தான்,கண்ணொரு பக்கம்,மயக்கமென்ன ,இனியவளே,மேளதாளம்,எத்தனை அழகு,அலங்காரம்,ரோஜாவின் ராஜா, சிந்து நதிக்கரை )மட்டுமின்றி ,காட்சிகள் உயர்ந்த மனிதன் மர காட்சி,நிறைகுடம் வர்ணனை காட்சி,வசந்த மாளிகை plum காட்சி, வாணி ராணி உருளல், ரோஜாவின் ராஜா தியேட்டர் காட்சி, இளைய தலைமுறை பத்து நிமிட முத்த காட்சி, நல்லொதொரு குடும்பம் படுக்கை காட்சி என காட்சிகளுக்கும் குறைவே வைக்காத காதல்.
    5) வாணிஸ்ரீ ,நடிகர்திலகத்திடம் தன்னை ஒப்படைத்து மெய் மறப்பார்.
    6)அவர் அடுத்து என்ன பண்ணுவார் என அறிந்து தயாராய் reaction காட்டுவார். நல்லதொரு குடும்பத்தில் உதடு துடிப்பும், சிவகாமியின் செல்வனின் காது கடியும், உதாரணங்கள் .
    7)நடிகர்திலகமும் 100% involvement ,interest எடுத்து காதல் காட்சிகளில் நடித்தவை வாணிஸ்ரீ சம்பத்த பட்ட படங்களிலேயே. (மன்னிக்க வேண்டுகிறேன்,மடி மீது, நெஞ்சத்திலே,பத்து பதினாறு முத்தம் முத்தம் -OK ,ஆனால் வாணியுடன் special )
    8)இருவருமே காமெராவை மறந்து ஒருவருக்கொருவர் வாழ்வது போல ரசிகர்களின் (அனைத்து வயதினரும்)உணர் நிலை.
    9)நடிகர்திலகத்தின் மிக சிறந்த இளமை நாட்களில் அமைந்த மிக சிறந்த ஜோடி.
    10)வாணிஸ்ரீ ,சிவாஜியின் best admirer ,ரசிகை என்பதால் அவருடன் நடிப்பதை பெருமையாக உணர்ந்து அவருக்கு அனைத்திலும் ஈடு கொடுத்தவர்(சிவாஜிக்கும் ,வாணிஸ்ரீயின் grace &elegant poise,dressing sense பிடிக்கும்.).
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #2543
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    முதல் படத்திலிருந்தே தமிழர்களின் ஒரே ஒப்பற்ற முன்னோடி ,கதை போக்கிற்கு இசைவாக பல positive energy உள்ள பாடல்களை பாத்திரங்களின் தன்மையை ஒட்டி ,பிரசார வாடை இல்லாமல் கொடுத்துள்ளார். சும்மா சில உதாரணங்கள்.....(samples )

    தேச ஞானம் கல்வி , கா கா கா ,நாணயம் மனுஷனுக்கு அவசியம்,மணப்பாறை மாடு கட்டி,நான் பெற்ற செல்வம், இந்த திண்ணை பேச்சு வீரரிடம், வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே, உள்ளதை சொல்வேன், எல்லோரும் கொண்டாடுவோம்,வந்த நாள் முதல்,எங்களுக்கும் காலம் வரும், சமாதானமே தேவை, ஓஹோஹோ மனிதர்களே ,ஆண்டவன் படைச்சான், கவலைகள் கிடக்கட்டும், பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ,வாழ நினைத்தால் வாழலாம்,யாரை எங்கே வைப்பது என்றே,புத்தன் வந்த திசையிலே போர்,கையிருக்குது காலிருக்குது முத்தையா, உலகம் இதிலே அடங்குது ,அறிவுக்கு விருந்தாகும் ,ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்,ஒளி மயமான எதிர்காலம்,கேள்வி பிறந்தது அன்று, போட்டது முளைச்சுதடி கண்ணம்மா,ஆறு மனமே ஆறு,ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்,ஒண்ணாயிருக்க கத்துக்கணும் ,வாழ்ந்து பார்க்க வேண்டும்,பார்த்தா பசுமரம், கல்லாய் வந்தவன் கடவுளம்மா, கல்வியா செல்வமா,தெய்வம் இருப்பது எங்கே,நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு,இனியது இனியது உலகம்,நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு, ஒரு நாள் நினைத்த காரியம், நான் தன்னம் தனிக்காட்டு ராஜா,ஏரு பெரிசா இந்த ஊரு பெரிசா,ஆனைக்கொரு காலம் வந்தா,இதோ எந்தன் தெய்வம்,அம்பிகையே ஈஸ்வரியே,சுதந்திர பூமியில் பலவகை,நீங்கள் அத்தனை பேரும்,நான் நாட்டை திருத்த போறேன்,நல்லவர் குரலுக்கு,நாளை என்ன நாளை,உலகம் வெறும் இருட்டு,தங்கங்களே நாளை தலைவர்களே,இரண்டு கைகள் நன்கானால்,என்னை யாருன்னு நெனச்சே.

    போதுமா, இன்னும் வேணுமா, நம் தலைவர் சொல்லாததா, செய்யாததா?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #2544
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy :facebook

    பதிவு
    சுஜாதா , “தமிழ் சினிமாவின் அபத்தங்கள்” பற்றி எழுதிய ஒரு விஷயம் , தற்செயலாக கண்ணில் பட்டது....
    அந்த சுவாரஸ்யம் ...இதோ சுஜாதாவின் வார்த்தைகளில் ...

    # “ 'ராஜராஜசோழன்' ...சிவாஜி நடிக்கும் தமிழ்ப்படத்தில் எத்தனையோ செலவழித்து மெட்ராசில் தஞ்சைக் கோயிலையும் , நந்தியையும் செட் அமைத்துப் பிடித்திருக்கிறார்களாம். இதைவிட .......த்தனமான காரியம் இருக்க முடியாது...”

    # “இதைவிட ........த்தனமான காரியம்” என்று “பீப்” போல ஒரு இடைவெளி விட்டிருக்கிறாரே ...
    அந்த இடத்தில் என்ன எழுத நினைத்திருப்பார் சுஜாதா..?

    சரி... அதை விடுங்கள்...
    தொடர்ந்து சுஜாதா எழுதுகிறார் , இப்படி :
    “மேனாட்டில் சரித்திரப்படம் எடுப்பவர்கள் ஆயிரம் மைல் கடந்து சரித்திரம் நடந்த இடத்துக்குச் சென்று பிடிப்பார்கள்....இருநூறு மைலில் இருக்கும் தஞ்சாவூர்... அங்கே செல்லவில்லை.... அதற்குக் காரணம் தஞ்சைக் கோயிலில் இன்று இருக்கும் எலெக்ட்ரிக் கம்பங்களும், கம்பிகளும் நியான் விளக்குகளும் என்று சொல்லப்படுகிறது.... செட் அமைக்கச் செலவிட்ட பணத்தில் பத்தில் ஒரு பங்கு செலவழித்து அந்த உறுத்தும் விளக்குகளையும், கம்பங்களையும் அகற்றிவிட்டு படம் எடுத்துவிட்டு மறுபடி அவற்றை அமைத்திருக்கலாம்.”

    # இந்த இடத்தில்தான் சுஜாதாவின் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை...
    பக்தர்கள் வராத பாழடைந்த கோவில் என்றால் சுஜாதா சொல்வது போல படம் எடுக்கலாம்...
    தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் , உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் எலெக்ட்ரிக் கம்பங்களையும் , கம்பிகளையும் , நியான் விளக்குகளையும் எப்படி அகற்றுவது..? எத்தனை நாள் அகற்றுவது..?

    அப்படியே அகற்றி படப்பிடிப்பு நடத்தினாலும் , அத்தனை நாள் அங்கு வரும் பக்தர்களும் , சுற்றுலாப் பயணிகளும் திண்டாடிப் போய் விட மாட்டார்களா..?
    எப்படி இதை எழுதினார் சுஜாதா..?

    # இதை சுஜாதாவின் குற்றமாக நான் கருதவில்லை ..!
    அவரைக் குறை கூறும் அளவுக்கு அருகதையும் எனக்கு இல்லை..!

    # ஆனாலும் நடைமுறை சாத்தியம் இல்லாத இந்த விஷயத்தை சுஜாதா எழுதி இருக்க மாட்டார் என நம்பி , இணையத்தை துணைக்கு அழைத்து தேடிக் கொண்டிருக்கிறேன்...!

    என்ன பதில் கிடைக்கப் போகிறது என எனக்கே தெரியவில்லை..!

    கருத்துக்ககள்:


    " நாயகன்" திரைப்பட இறுதி காட்சியில் .இன்ஸ்பெக்டரின்
    இன்னொசன்ட் மகன் வேலுநாயக்கரை கொலை செய்ய
    அப்பாவின் பெட்டியை திறப்பான்..
    லோடு செய்யப் பட்ட.துப்பாக்கி..ஸ்டார் யூனிஃபார்ம் ..எல்லாம் 20 வருடங்களாக அப்படியே இருக்குமாம்.? காவல்துறையில்
    திரும்ப வாங்கவே மாட்டார்களாம்.அதை எடுத்துப்
    போய் கொலை செய்வாராமாம்.?!?!
    ரோஜாவில் ஒரு கிராமத்துப்பெண்
    கணவனை மீட்க கா.,ஷ்.மீ.ரி.ல்..
    தனியாக போராடுவாளாமாம்..
    அப்பா அம்மா பேசினால் நானே
    பார்த்துக் கொள்கிறேன் என்பாளாமாம்..! குசலம் விசாரிக கும் .அவள் அப்பா அம்மா..?
    சுஜாதா .மணிரத்ணம் இணைந்த
    படங களில் அபத்தங்கள் குவிந்து
    கிடக்கும்.,!
    சினிமா என்பது நிஜம் மாதிரியே ஆன பொய்.! பொய் போல இருக்க கும் நிஜம்..! காம்ப்ரமைஸ் இருக்கத்தான் செய்யும் ..!
    அவரின் நைலான் கயிறு முதல் நாவலில் கூட முடிவு அபத்தம் தான்.,!
    குறை சொல்வது எளிது..,
    வேறென்ன சொல்ல.....


    அவர் கருத்துப்படி தஞ்சை பெரிய கோவில்களில் படத்தை எடுக்க முயற்சிகள் எடுத்திருந்து என்றால் முடிக்க குறைந்தபட்ச 7 முதல் 9 ஆண்டுகள் நீடித்திருக்கும் (அவர் குறிப்பிடும் ஆங்கில படங்கள் போல) அப்போதைய காலகட்டத்தில் நடிகர்திலகத்தின் கால்சீட் வேல்யூவை பார்க்க வேண்டும், ரசிகர்கள் இடையே அங்கு அவ்வளவு சுலபமாக குறுகிய காலத்தில் படத்தை முடித்திருக்க முடியாத ஒன்று


    , But the film didn't fill the cash box. As a fan of Sivaji I felt very bad about it at that time.

    கடுமையான மின்வெட்டு,படம் தயாரித்தவரின் விளம்பரம் இது.2 வாரங்கள் 25இலட்சம்.இன்றைய கணக்கில்?



    Last edited by senthilvel; 12th January 2016 at 05:34 PM.

  6. Thanks Russellmai thanked for this post
    Likes RAGHAVENDRA, Russellmai, Harrietlgy liked this post
  7. #2545
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    இதயம் பேசுகிறது 29/6/1986 இதழில் ரசிகன் பதில்கள் பகுதியில் கேட்ட ஒரு கேள்வியும் ரசிகனின் பதிலும் :

    இ. காங்கிரசில் செல்வாக்கு பெற்றவர் - விஜயத்திமாலாவா , சிவாஜியா ?

    விமான நிலைய வரவேற்ப்க்கு பெரிய போஸ்டர் போட்டு கொள்ள தெரியாத - ராஜீவ் காந்தியோடு புன்னகையுடன் போஸ் கொடுத்து கொண்டிருக்க தெரியாத சிவாஜியை போய் வைஜயந்தி மாலாயிடம் ஒப்பிடுகிறே .

  8. #2546
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. Thanks Russellmai thanked for this post
    Likes RAGHAVENDRA, Russellmai, Harrietlgy liked this post
  10. #2547
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. Thanks Russellmai thanked for this post
  12. #2548
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  13. Thanks Russellmai thanked for this post
    Likes RAGHAVENDRA, Russellmai, Harrietlgy liked this post
  14. #2549
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  15. Thanks Russellmai thanked for this post
    Likes RAGHAVENDRA, Russellmai, Harrietlgy liked this post
  16. #2550
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  17. Thanks Russellmai thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •