-
1st November 2015, 05:44 AM
#281
Senior Member
Devoted Hubber
வ மன்னிப்பு திரைப்படம் சென்னையில் வெளியான அரங்குகள் - சாந்தி, கிருஷ்ணா, ராக்சி
வெள்ளி விழா கண்ட திரையரங்கு – சென்னை சாந்தி
100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்
1. சென்னை சாந்தி – 177 நாட்கள்
2. சென்னை கிருஷ்ணா – 127 நாட்கள்
3. சென்னை ராக்ஸி – 107 நாட்கள்
4. திருச்சி ராஜா – 120 நாட்கள்
5. கோவை கர்நாடிக் – 100 நாட்கள்
6. நெல்லை நியூ ராயல் – 109 நாட்கள்
7. நாகர்கோவில் ஸ்ரீ லட்சுமி – 103 நாட்கள்
8. சேலம் ஓரியண்டல் – 130 நாட்கள்
9. வேலூர் ஸ்ரீ ராஜா – 105 நாட்கள்
10. காஞ்சி கண்ணன் – 100 நாட்கள்
11. ராமநாதபுரம் சிவாஜி – டூரிங் டாக்கீஸ் .. கீற்றுக் கொட்டகை – 100 நாட்கள்
12. மதுரை சென்ட்ரல் – 141 நாட்கள்
13. திருவனந்தபுரம் பத்மநாபா – 103 நாட்கள்
14. பெங்களூர் ஸ்டேட் சினிமா – 154 நாட்கள்
15. கொழும்பு கிங்ஸ்லி – 106 நாட்கள்
இது இல்லாமல் வெளியான திரையரங்குகளில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 முதல் 84 நாட்கள் வரை ஓடியது.
தகவல் உபயம் – இதய வேந்தனின் வரலாற்றுச் சுவடுகள் மற்றும் ஆவணத் திலகம் பம்மலார்.
1. முதன் முதலாக கீற்றுக் கொட்டகையில் .. டூரிங் டாக்கீஸில் 100 நாட்கள் ஓடிய தமிழ்ப் படம்
2. சென்னை நகரில் முதல் முதலில் குளிர்சாதன திரையரங்கில் வெள்ளி விழாக் கண்ட படம். சென்னை சாந்தி திரையரங்கு திறக்கப் பட்டு வெளியான முதல் நடிகர் திலகத்தின் திரைப்படம்.
3. பாவ மன்னிப்பு பாட்டுப் போட்டி தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானதோடு, ஏராளமான விடைகள் பெறப் பட்டு சிறந்த பாடல் ரசிகர்களின் ஆதரவிற்கேற்றவாரு வரிசைப் படுத்தப் பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நடைபெற்ற விழாவில் பரிசுகள் வழங்கப் பட்டன. இது மட்டுமின்றி கிராமபோன் ரிகார்டு விற்பனையில் முந்தைய சாதனைகளை முறியடித்தது.
4. 1961ம் ஆண்டின் அகில இந்திய அளவில் சிறந்த படங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு நற்சான்றிதழ் பெற்றது.
5. தமிழ்த்திரையுலகில் முதன் முதலில் பலூன் மூலம் விளம்பரம் செய்யும் யுக்தி கடைப் பிடிக்கப் பட்டது பாவ மன்னிப்பு திரைப்படத்திற்குத் தான்
6. தெலுங்கில் பாப பரிஹாரம் என்று மொழி மாற்றம் செய்யப் பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.
7. வான வில் நாடகத்தில் நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்து நடித்த தேவிகா, சிவாஜி ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற ஜோடி நடிகையாக தேவிகா திகழ அடித்தளம் இட்டதும் முதல் படமாக அமைந்த்தும் பாவ மன்னிப்பு.
8. ஒரே பிரேமில் நான்கு பரிமாணங்களில் சிவாஜியைத் தோற்றுவித்த சிலர் சிரிப்பார் பாடல் காட்சி, அக்காலத்தில் புதுமையாக்க் கருதப் பட்டது.
9. ஹிந்தியில் பின்னாளில் சஞ்சய் கான் நடிக்க சப் கா சாத்தி என்ற பெயரில் தயாரிக்கப் பட்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியானது.
10. அக்காலத்தில் கேரளத்தில் 100 நாட்கள் ஓடிய சில தமிழ்ப் படங்களில் பாவ மன்னிப்பு திரைப்படமும் ஒன்று
11. திராவக வீச்சினால் ஏற்பட்ட பாதிப்பில் முகம் சிதைந்து போன தோற்றத்தோடு ஒரு கதாபாத்திரம் திரையில் காட்டப் பட்டது முதன் முதலில் பாவ மன்னிப்பு படத்தில் தான்
12. அது வரை பல்வேறு திரைப்படங்களில் பாடியிருந்தாலும், பி.பி.ஸ்ரீநிவாஸ் என்கிற மிகச் சிறந்த பாடகரைத் தமிழ்த் திரையுலகில் பிரபலமாக்கியது காலங்களில் அவள் வசந்தம் பாடலே.
13. எல்லாவற்றிற்கும் மேலாக நடிக வேள் எம்.ஆர்.ராதா அவர்களின் வாழ்க்கையில் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக, அவருக்கு நிலையான புகழைப் பெற்றுத் தந்த வாய்ப்பாக அமைந்த்து பாவ மன்னிப்பு.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st November 2015 05:44 AM
# ADS
Circuit advertisement
-
1st November 2015, 05:45 AM
#282
Senior Member
Devoted Hubber
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து விளம்பர நிழற்படங்கள்
பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்
The Hindu : 21.4.1961
சுதேசமித்ரன் : 28.4.1961
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st November 2015, 05:46 AM
#283
Senior Member
Devoted Hubber
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து விளம்பர நிழற்படங்கள்
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
பாசமலர்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
'இன்று முதல்' விளம்பரம் : தினமணி : 27.5.1961
50வது நாள் விளம்பரம் : The Hindu : 15.7.1961
[நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரு மிகப் பெரிய ஹீரோ, தான் கதாநாயகனாக நடிக்கும் ஒரு திரைக்காவியத்தில் - அதுவும் கிட்டத்தட்ட தனது சொந்த தயாரிப்பு போன்ற ஒன்றின் - 50வது நாள் விளம்பரத்தில், Stamp-Sizeசில் கூட தனது புகைப்படத்தை வெளியிட்டுக் கொள்ளாமல், அக்காவியத்தில் நடிக்கும் மற்ற இரண்டு முன்னணி நட்சத்திரங்களின் புகைப்படத்துடன் மட்டும் கூடிய ஒரு 50வது நாள் விளம்பரத்தை அளிக்க முடியுமா..?! 'அது என்னால் மட்டுமே முடியும்' என நிரூபித்தவர், பெருந்தன்மையின் மறுவடிவமான நமது நடிகர் திலகம்..! மேற்காணும் "பாசமலர்" 50வது நாள் விளம்பரமே அதற்கு சரியான சான்று..! ஈரேழு பதினான்கு லோகங்களிலும் நடிகர் திலகத்தை போன்ற ஒரு பெருந்தன்மையான, விட்டுக்கொடுக்கும் குணம் கொண்ட ஒரு அதியற்புத மனம் படைத்தவர் எவருமில்லை..!]
75வது நாள் விளம்பரம் : The Hindu : 9.8.1961
100வது நாள் விளம்பரம் : தினமணி : 3.9.1961
வெள்ளிவிழா விளம்பரம் : The Hindu : 11.11.1961
வெள்ளிவிழா விளம்பரம் : தினத்தந்தி : 14.11.1961
'வெள்ளிவிழா கொண்டாட்ட' விளம்பரம் : The Hindu : 17.11.1961
26வது வார [176வது நாள்] விளம்பரம் : The Hindu : 18.11.1961
குறிப்பு:
அ. மெகாஹிட் காவியமான "பாசமலர்", வெள்ளிவிழா மற்றும் 100 நாள் விழா கொண்டாடிய திரையரங்குகள்:
1. சென்னை - சித்ரா - 176 நாட்கள்
2. சென்னை - கிரௌன் - 132 நாட்கள்
3. சென்னை - சயானி - 118 நாட்கள்
4. மதுரை - சிந்தாமணி - 164 நாட்கள்
5. திருச்சி - ஸ்டார் - 164 நாட்கள்
6. கோவை - ராயல் - 118 நாட்கள்
7. சேலம் - பேலஸ் - 105 நாட்கள்
8. வேலூர் - நேஷனல் - 105 நாட்கள்
9. பெங்களூர் - ஸ்டேட்ஸ் - 100 நாட்கள்
10. கொழும்பு - கிங்ஸ்லி - 110 நாட்கள்
ஆ. சென்னை 'சித்ரா' திரையரங்க வரலாற்றிலேயே, வெள்ளிவிழா கொண்டாடிய தமிழ்த் திரைப்படங்கள் இரண்டு:
1. பாசத்திலகத்தின் "பாசமலர்(1961)".
2. கலைநிலவு ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடித்த "நான்(1967)".
இ. "பாசமலர்", பெங்களூரிலும், இலங்கையிலும் தாமதமாக வெளியாகி 100 நாள் விழாக் கொண்டாடியது.
ஈ. இக்காவியம், தீபாவளித் திருநாளான 7.11.1961 அன்று வெளியான தீபாவளித் திரைப்படங்களுக்காக, மதுரையிலும், திருச்சியிலும் நூலிழையில் வெள்ளிவிழாவைத் தவறவிட்டது.
உ. முதல் வெளியீட்டின் அத்தனை பிரிண்டுகளும் 50 நாட்களும் அதற்கு மேலும் ஓடி இமாலய வெற்றி.
ஊ. 1961-ம் ஆண்டில், தமிழ் சினிமா பாக்ஸ்-ஆபீஸில், இரண்டாவது அதிக வசூல் ஈட்டிய திரைக்காவியம் "பாசமலர்". 1961-ல், வசூல் சாதனையில், முதல் இடத்தைப் பிடித்த திரைக்காவியம் நமது நடிகர் திலகத்தின் "பாவமன்னிப்பு".
எ. ஒரே ஆண்டில்(1961) வெளியான ஒரு கதாநாயக நடிகரின் இரு காவியங்கள்["பாவமன்னிப்பு", "பாசமலர்"], இரண்டுமே அந்தக் காலண்டர் ஆண்டிலேயே - அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பருக்குள் - பெரிய திரையரங்குகளில், ரெகுலர் காட்சிகளில் வெள்ளிவிழாக் கண்ட பெரும்பெருமை தமிழ்த் திரையுலக வரலாற்றிலேயே நமது நடிகர் திலகத்துக்கும் அவர்தம் காவியங்களுக்கும் மட்டுமே சொந்தம். இதே ரக சாதனையை 1983-ல் "நீதிபதி", "சந்திப்பு" திரைக்காவியங்களின் மூலம் மீண்டும் நமது நடிகர் திலகம் நிகழ்த்திக் காட்டியிருந்தாலும், "நீதிபதி", ரெகுலர் காட்சிகளில் வெள்ளிவிழாக் கண்டது மதுரை 'மினிப்ரியா'வில். எனவே, 1961 காலண்டர் வருடத்தில். "பாவமன்னிப்பு" மற்றும் "பாசமலர்" காவியங்களின் வெள்ளிவிழா சாதனை தமிழ் சினிமாவிலேயே யாருமே செய்யாத தனிப்பெருஞ்சாதனை.
ஏ. ஒரே ஆண்டில் வெளியான இரு காவியங்கள், இரண்டுமே வெள்ளிவிழா, என்கின்ற இமாலய சாதனையை 1959-க்குப்பின் மீண்டும் 1961-ல் நிகழ்த்திக் காட்டினார் நமது நடிகர் திலகம். இதே சாதனையை மேலும் 4 முறையும்[1972, 1978, 1983, 1985] நிகழ்த்தியுள்ளார்.
ஐ. தமிழ்த் திரையுலகில், முதல்முறையாக, ஒரே ஆண்டில் வெளியான ஒரு கதாநாயக நடிகரின் மூன்று காவியங்கள், ஒவ்வொன்றும், முதல் வெளியீட்டில் முழுவதும் ஓடி முடிய, முக்கால் கோடி ரூபாய்க்கு மேல் [75 லட்ச ரூபாய்க்கு மேல்] வசூலைக் குவித்தது 1961-ல் தான். அந்த மூன்று காவியங்கள் : "பாவமன்னிப்பு", "பாசமலர்", "பாலும் பழமும்"; அந்தக் கதாநாயகன் : நமது பாசத்திலகம்.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்துக்கு நிரந்தர சக்கரவர்த்தி
சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே..!!
பாசமலர்' வெள்ளிவிழா கேடயம்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st November 2015, 05:48 AM
#284
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st November 2015, 05:49 AM
#285
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st November 2015, 05:49 AM
#286
Senior Member
Devoted Hubber
வீரப் பொக்கிஷங்கள்
காவிய விளம்பரம் : கலைத்தோட்டம் : 15.6.1959
[15.6.1959 தேதியிட்ட 'கலைத்தோட்டம்' பருவ இதழ் சற்றேறக்குறைய அப்பொழுது ஒரு மாதத்திற்குமுன் வெளியாகி விண்ணை முட்டும் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைக்காவிய சிறப்பு மலராக மலர்ந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.]
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 24.8.1961
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st November 2015, 05:51 AM
#287
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st November 2015, 05:51 AM
#288
Senior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st November 2015, 05:52 AM
#289
Senior Member
Devoted Hubber
BOX OFFICE RECORD" of PAALUM PAZHAMUM by our beloved Pammalar (Posted on 09.09.2010)
பாக்ஸ் ஆபீஸில் 'பாலும் பழமும்'
இன்று 9.9.2010, நடிப்பிலும், சாதனையிலும் தன்னிகரில்லா சிகரங்களைத் தொட்ட நடிப்புலக மகான், சாதனைகளின் சக்கரவர்த்தி நமது நடிகர் திலகத்தின் "பாலும் பழமும்" திரைக்காவியத்திற்கு பொன்விழா ஆண்டின் தொடக்கம்.
பதிபக்தி (1958)[100 நாள்],
பாகப்பிரிவினை (1959)[31 வாரம்],
படிக்காத மேதை (1960)[22 வாரம்],
பாவமன்னிப்பு (1961)[25 வாரம்],
பாசமலர் (1961)[25 வாரம்]
ஆகிய ஐந்து மெகாஹிட் காவியங்களுக்குப் பிறகு, அதே "ப" வரிசையில், வெள்ளிவிழா டைரக்டர் பீம்சிங், சிவாஜி கூட்டணியுடன் வழங்கிய ஆறாவது மெகாஹிட் காவியம் "பாலும் பழமும்". [ராஜா ராணி(1956) மற்றும் பெற்ற மனம்(1960) ஆகிய காவியங்களை சேர்த்துக் கணக்கிட்டால் பாலும் பழமும்(1961) வரை பீம்சிங் இயக்கிய சிவாஜி படங்கள் 'எட்டு' எனப் புள்ளி விவரம் கூறும்.]
தையல் மற்றும் உடையலங்கார நிபுணராக விளங்கிய ஜி.என்.வேலுமணி அவர்களை 'சரவணா பிலிம்ஸ்' என்கின்ற படக் கம்பெனியின் முதலாளியாக, திரைப்படத் தயாரிப்பாளராக உயர்த்திய பெருமை சிவாஜி பெருமானையே சாரும். இவர் மட்டுமல்ல. இவரைப் போல பல சாமானியர்களை சீமான்களாக உருவாக்கிய, உயர்த்திய பெருமை, பெருந்தன்மை என்றென்றும் சிங்கத் தமிழனுக்கே!
'சரவணா பிலிம்ஸ்' நிறுவனத்தின் முதல் தயாரிப்பு பாகப்பிரிவினை(1959). இரண்டாவது தயாரிப்பு பாலும் பழமும்(1961). இரண்டுமே மகத்தான இமாலய வெற்றிக்காவியங்கள். வேலுமணி "மணி(Money)" உள்ளவர் ஆனார். கணேச கடாட்சத்தால் அவருக்கு லட்சுமி கடாட்சம் கிட்டியது. சாதாரண நிலையில் இருந்தவர், இந்த இரு காவியங்களின் மகத்தான வெற்றியினால் லட்சாதிபதியாக, மிகப் பெரிய செல்வந்தராக உயர்ந்தார்.
இனி "பாலும் பழமும்" முதல் வெளியீட்டில் ஏற்படுத்திய பாக்ஸ் ஆபீஸ் சாதனைப் பிரளையத்தை சற்று விரிவாகக் காண்போம்.
"பாலும் பழமும்" - கலைக்குரிசிலின் 73வது திரைக்காவியம், 71வது கருப்பு-வெள்ளைக் காவியம், இருபது வாரங்கள் ஓடிய இமாலய வெற்றிக் காவியம்.
வெளியான தேதி : 9.9.1961 (சனிக்கிழமை)
வெளியான ஊர்கள் / திரையரங்குகள் : 39 / 42
100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 8 / 10
[ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]
1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 127 நாட்கள்
2. சென்னை - ஸ்ரீகிருஷ்ணா (1198 இருக்கைகள்) - 127 நாட்கள்
3. சென்னை - உமா (762 இருக்கைகள்) - 111 நாட்கள்
4. மதுரை - சென்ட்ரல் (1662 இருக்கைகள்) - 127 நாட்கள்
5. திருச்சி - பிரபாத் (1289 இருக்கைகள்) - 127 நாட்கள்
6. சேலம் - பேலஸ் (1222 இருக்கைகள்) - 127 நாட்கள்
7. கோவை - கர்னாடிக் - 139 நாட்கள்
8. திண்டுக்கல் - சோலைஹால் (1117 இருக்கைகள்) - 105 நாட்கள்
9. பெங்களூர் - ஸ்டேட்ஸ் - 112 நாட்கள்
10. கொழும்பு - கிங்ஸ்லி - 103 நாட்கள்
50 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 25 / 25
[ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]
1. நெல்லை - ரத்னா (1064 இருக்கைகள்) - 75 நாட்கள்
2. நாகர்கோவில் - பயோனீர்பிக்சர்பேலஸ் (1088 இருக்கைகள்) - 75 நாட்கள்
3. குடந்தை - ராஜா (1100 இருக்கைகள்) - 75 நாட்கள்
4. தஞ்சாவூர் - நியூடவர் (1101 இருக்கைகள்) - 75 நாட்கள்
5. வேலூர் - நேஷனல் (1330 இருக்கைகள்) - 75 நாட்கள்
6. பெங்களூர் - ஆபெரா - 75 நாட்கள்
7. பழனி - ஜெயராம் (975 இருக்கைகள்) - 59 நாட்கள்
8. விருதுநகர் - நியூமுத்து (939 இருக்கைகள்) - 59 நாட்கள்
9. மாயவரம் - சுந்தரம் (1135 இருக்கைகள்) - 59 நாட்கள்
10. திருவாரூர் - அம்மையப்பா (1045 இருக்கைகள்) - 59 நாட்கள்
11. புதுக்கோட்டை - பழனியப்பன் (882 இருக்கைகள்) - 59 நாட்கள்
12. கரூர் - லைட் ஹவுஸ் (1375 இருக்கைகள்) - 59 நாட்கள்
13. தூத்துக்குடி - சார்லஸ் (1383 இருக்கைகள்) - 59 நாட்கள்
14. தென்காசி - பாக்யலக்ஷ்மி (1608 இருக்கைகள்) - 59 நாட்கள்
15. ஈரோடு - ராஜாராம் (1104 இருக்கைகள்) - 59 நாட்கள்
16. ஊட்டி - ஏடிசி (706 இருக்கைகள்) - 59 நாட்கள்
17. திருப்பூர் - கஜலக்ஷ்மி (1055 இருக்கைகள்) - 59 நாட்கள்
18. நாமக்கல் - ஜோதி (1077 இருக்கைகள்) - 59 நாட்கள்
19. தர்மபுரி - கணேஷ் (960 இருக்கைகள்) - 59 நாட்கள்
20. பாண்டி - ராஜா (2000 இருக்கைகள்) - 59 நாட்கள்
21. சிதம்பரம் - வடுகநாதன் (1240 இருக்கைகள்) - 59 நாட்கள்
22. கடலூர் - பாடலி (874 இருக்கைகள்) - 59 நாட்கள்
23. விழுப்புரம் - சீதாராம் (1141 இருக்கைகள்) - 59 நாட்கள்
24. காஞ்சி - கிருஷ்ணா - 59 நாட்கள்
25. பல்லாவரம் - ஜனதா (1034 இருக்கைகள்) - 59 நாட்கள்
6 வாரங்கள் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 7 / 7
[ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]
1. பரமக்குடி - தங்கம் - 41 நாட்கள்
2. காரைக்குடி - ராமவிலாசம் (1106 இருக்கைகள்) - 41 நாட்கள்
3. பட்டுக்கோட்டை - முருகையா - 41 நாட்கள்
4. பொள்ளாச்சி - கலைமகள் (912 இருக்கைகள்) - 41 நாட்கள்
5. உடுமலைப்பேட்டை - கல்பனா - 41 நாட்கள்
6. ஆத்தூர் - ஸ்ரீதரன் (1112 இருக்கைகள்) - 41 நாட்கள்
7. ஆற்காடு - ஜோதி (1344 இருக்கைகள்) - 41 நாட்கள்
பாவமன்னிப்பு, பாசமலர் திரைக்காவியங்களுக்குப் பின் அதே 1961-ம் ஆண்டில் மூன்றாவது பெரிய இமாலய வெற்றிக்காவியமாக திகழ்ந்தது "பாலும் பழமும்". தமிழ் சினிமா சரித்திரத்திலேயே, இன்னும் சொல்லப் போனால் உலக சினிமா சரித்திரத்திலேயே, ஒரே ஆண்டில் (1961), மூன்று Blockbusterகளை (மெகாஹிட் இமாலய வெற்றிக் காவியங்களை), கொடுத்த முதல் நடிகர் என்ற பெருமைக்குரியவரானார் நமது கலையுலக முதல்வர்.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!
அன்புடன்,
பம்மலார்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st November 2015, 05:56 AM
#290
Senior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks