Page 43 of 337 FirstFirst ... 3341424344455393143 ... LastLast
Results 421 to 430 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #421
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    " வெள்ளிக்கிண்ணம் வாங்கி வைத்து, சுமந்து வந்த கைகளை சுகமாக முத்தமிட்டு, வாணியின் 'வழுவழு' கன்னத்தில் அதைவிட வழுவழுப்பான தன் இதழ்கள் பதித்து, முத்துப் புன்னகையை அவ்விடத்தில் படரவிட்டு, அந்த காந்தக் கண்களாலேயே காதலியின் கண்களை சுட்டிக் காட்டி, அப்படியே மலர்த் தோரணங்கள் அலங்கரித்த கட்டிலுக்குக் வைரச் சிலையை மெதுவாகக் கொண்டு சென்று, அமர வைத்து, அவள் எதிரே கீழ் அமர்ந்து கை பிடித்தவளின் கையை நுனியிலிருந்து மேல்வரை உதடுகள் விரித்து, தொட்டுக் கலந்து, கழுத்தில் முகம் புதைத்து 'இதுதான் சுகம்' என்று அங்கு சொர்க்கத்தைக் காணும் சுகக் கணவன். பார்ப்பவர்களை பரவசப்படுத்தும், கண்ணியக் காதலை வெளிப்படுத்தும் கண்கவர் அழகன்."
    ====

    வாசு , பாடலை விட உங்கள் வர்ணனை மிகவும் பிரமாதம் . ஒவ்வொரு எழுத்துக்களும் உங்கள் ஈடுப்பாட்டை எடுத்துச்சொல்லும் . இந்த பாடலை பிடிக்காதர்வர்கள் என்று யாருமே இருக்க முடியாது - இந்த பாடலை கலரில் நினைத்துப்பார்த்தால் விடை " மயக்கமென்ன , இந்த மௌனமென்ன !" என்ற பாடாலாகத்தான் இருக்க முடியும் . அழகான காதல் மிகவும் மென்மையாக சொல்லப்பட்டிருக்கின்றது . இவ்வளவு முறைதான் இந்த பாடலை கேட்கவேண்டும் , படத்தைப்பார்க்க வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு இருந்தால் , அதை உடைத்தெரியக்கூடிய பாடல் , படம் .

    அடுத்ததை தெரிந்துக்கொள்ளும் ஆவல் அதிகமாகின்றது .......

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #422
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்களுக்கு வணக்கம்,

    மக்கள் திலகம் திரியில் புதிதாக பங்கேற்ற திரு.மயில்ராஜ் அவர்கள் பிரச்சினைக்குரிய விதத்தில் பேசினார் என்று கூறி அவருக்கு நிரந்தரமாக தடை விதித்திருக்கிறார்கள். அவர் என்ன தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டாரா? ஒருவேளை அவர் ஆட்சேபகரமான சிலவற்றை சொல்லியிருக்கலாம். அவருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கலாமே? அல்லது அடையாளமாக ஒரு சில நாட்கள் மட்டும் தடை விதித்திருக்கலாம். ஆனால், நிரந்தரமாக நீக்கும் அளவுக்கு இங்கு சிலர் சொல்லாததை அவர் என்ன பெரிதாக சொல்லி விட்டார்?

    மக்கள் திலகத்தைப் பற்றி திரு.கோபால் கூறாதவற்றையா திரு.மயில்ராஜ் கூறிவிட்டார்? அல்லது தனிப்பட்ட நபர்களை, நண்பர்களை திரு.கோபால் மோசமாக விமர்சித்ததைப் போல விமர்சித்தாரா? சமீபத்தில் கூட திரு.எஸ்.வி. அவர்களை ‘பசுத்தோல் போர்த்திய நரி’ என்றார். என்னைப் பார்த்து ‘பொய் சொல்கிறேன்’ என்று குற்றம் சாட்டினார். வயதில் தன்னைவிட மூத்தவர்களை நாய், சொறிநாய் என்றெல்லாம் பேசினார். திரு.சிவாஜி கணேசன் அவர்களையே, ‘கிழட்டு மூஞ்சி’ என்று விமர்சித்தார். ‘அவரது பிற்காலப் படங்களை எப்படி பார்க்கிறாய்?’ என்று என் மனைவி கேட்கிறாள் என்றார். நேருவை பெண் பித்தன் என்றார். அவர் நிரந்தரமாக நீக்கப்படவில்லை.

    திருச்சி பாஸ்கர் என்பவர் திரு.சிவாஜி கணேசன் அவர்களை அரசியலில் முட்டாள் என்றார். நேற்று கூட சுமூக சூழ்நிலையை கெடுக்கும் வகையில் மீண்டும் பதில் சொல்வேன் என்று எச்சரிக்கிறார். ‘குள்ளநரிகள்’ என்கிறார். ‘கொக்கரிக்காதே வேதகிரி’ என்கிறார். அவர்களை எல்லாம் அனுமதிக்கிறார்கள். அவர்கள் கூறிய வார்த்தைகளும் இன்னும் அப்படியே இருக்கின்றன.

    செல்வி. ஜெயலலிதாவை பார்த்து விட்டு வந்த சிவாஜி குடும்பத்தினரை ‘துரோகம் செய்யாதீர்களடா, இனத்துரோகிகளா’ என்றும் ஒரு மாநிலத்தின் முதல்வரை ‘பாம்பு’ என்றும் பல்வேறு அர்ச்சனைகள். அதற்காக நான் அவரது ஆதரவாளர் அல்ல. எப்படி எல்லாம் மோசமான தாக்குதல்கள் என்பதற்கு சொல்கிறேன். அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. இந்த வார்த்தைகள் எல்லாம் நீக்கப்படவும் இல்லை.

    ஆனால், இப்படி எல்லாம் வரைமுறை கடந்து எதுவும் கூறாத திரு.மயில்ராஜை நிரந்தரமாக நீக்கியிருக்கிறார்கள். நல்ல நியாயம்.

    இப்படி பாரபட்சமாக மாடரேட்டர்களும் மய்யம் இணையதள நிர்வாகிகளும் நடந்து கொள்வது வேதனையளிக்கிறது. இங்கு நீதியில்லை. ஒருவன் கையை கட்டிப்போட்டு விட்டு இன்னொருவன் கையில் ஆயுதம் கொடுத்து இரண்டு பேரும் மோதிக் கொள்ளுங்கள் என்று சொல்வதும் கைகள் கட்டப்பட்ட நிராயுதபாணிகளை தாக்குவதும் கோழைத்தனம். நியாயவான்கள் என்றால் எங்களுக்கும் முழு சுதந்திரம் அளித்துப் பாருங்கள். திரு.மயில் ராஜ் அவர்களை நிரந்தரமாக நீக்கியது அநீதி.

    இப்படி பாரபட்சமாக செயல்படும் இந்த இணையதளத்தில் நான் நீடிக்க விரும்பவில்லை. இப்படி நியாயத்தை கேட்பதற்காகவே என்னையும் நிரந்தரமாக தடை செய்யலாம். நீங்கள் என்ன என்னை தடை செய்வது? நானே வெளியேறுகிறேன்.

    தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டு எப்போதும் உண்மைக்கு மாறானதை மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் திரு.கோபால், உங்கள் பொய்களுக்கு பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.

    உதாரணத்துக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன். உங்களை எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும்.

    பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களை கடுமையாக தாக்கினீர்கள். அதற்காக, உங்களுக்கு நான் கண்டனம் தெரிவித்தேன். உடனே, அவர்தான் என்னை முதலில் தாக்கினார் என்று கூசாமல் பொய் சொன்னீர்கள். நான் அதை மறுத்து ஆதாரத்தோடு என்ன நேரத்தில் இருவரும் பதிவுகளை வெளியிட்டீர்கள் என்று பதிலளித்தேன். உடனே, நீங்கள் பல்டியடித்து ‘நான் திமுக பேராசிரியரை (அதாவது திரு.அன்பழகன் அவர்களை, அடைப்புக்குறிக்குள் இருப்பது என் விளக்கம்) சொன்னேன் என்று வழிந்தீர்கள்.

    மக்கள் திலகம் திரி பாகம் 15 பக்கம் 328 பதிவு 3271.

    http://www.mayyam.com/talk/showthrea...ART-15/page328

    -----------------------------
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    திரு.கோபால்,

    ‘‘பேராசிரியர் உங்களை அத்துமீறி விமர்சித்த பிறகுதான், உங்கள் கருத்தை அவர் பெயர் குறிக்காமல் வெளியிட்டேன்’’ என்று கூறியிருக்கிறீர்கள். இதுவே தவறு.

    //பேராசிரியர்களே புளுகித்தள்ளும் கலிகாலமாயிற்றே// என்று உங்கள் திரியில் 14-ம் தேதி காலை 11.27 மணிக்கு பதிவிட்டு (பதிவு எண் 2979) நேரடியாக அவரை அத்துமீறி முதலில் தாக்கியது நீங்கள்தான்.

    அதன் பிறகே பேராசிரியர் அவர்கள், அதற்கு பதில் சொல்லும் வகையில் உங்களை பெயர் குறிப்பிடாமல் பதிவு போட்டார். அவர் பதிவிட்டது 14ம் தேதி இரவு 8.58 மணிக்கு, எங்கள் திரியில் பதிவு எண்.3104.

    இதிலிருந்தே யார் சொல்வதில் உண்மை உள்ளது என்பது எல்லாருக்கும் புரியும். பேராசிரியர், பேராசிரியர்தான்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    நான் மேலே சொல்லியிருந்த பதிலுக்கு திரு.கோபால் அவர்களின் விளக்கம் இது....

    //கலைவேந்தன்,

    அடடா ,அப்படி ஒரு அர்த்தம் வந்து விட்டதா? அது கலைஞர் பாடல் சம்பந்த பட்ட பதிவு என்பதால் தி.மு.க பேராசிரியர் ஞாபகம் வந்து விட்டார்.// ......(அவர்கள் திரியில் பதிவு எண்.3173)

    ஓ... ஹோ....அப்படியா விஷயம்? மன்னிக்கவும் கோபால். இன்று காலையில் நீங்கள் போட்டிருந்த பதிவில்,(உங்கள் திரியில் பதிவு எண்.3166) திமுக பேராசிரியரின் பயோ டேட்டாவை கேட்கிறீர்கள் என்று தெரியாமல் திரு. செல்வகுமார் அவர்களின் பயோ டேட்டாவைத்தான் கேட்கிறீர்களோ என்று நினைத்து பதிலளித்து விட்டேன். மீண்டும் மன்னிக்கவும். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

    -----------------------

    இனிமேலாவது உண்மையை மட்டுமே பேசுங்கள். மற்றவர்களை கண்ணியப்படுத்துங்கள். முக்கியமாக, எல்லாருக்கும் புரியும்படி எழுதக் கற்றுக் கொள்ளுங்கள். நான் வெளியேறுகிறேன். எனவே என்னை தடை செய்தாலும் கவலையில்லை என்ற நிலையில் நான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் உங்களை பேசிவிட்டு வெளியேற முடியும். குறிப்பாக, திரு.ராகவேந்திரா சாரையும் திரு.சிவாஜி செந்தில் அவர்களையும் நீங்கள் என்ன வார்த்தை கொண்டு தாக்கினீர்களோ, அதை விடவும் மோசமாக பேசமுடியும். ஆனால், உங்கள் அளவுக்கு தரக்குறைவாக கீழிறங்க நான் தயாரில்லை.

    விடை பெறுகிறேன் நண்பர்களே. இந்தப் பதிவும் கூட நீக்கப்படலாம். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. பார்க்கும் நண்பர்கள் நியாயத்தை புரிந்து கொண்டால் போதும்.

    வாழ்க ஜனநாயகம்.

    எந்தக் கொம்பன் நினைத்தாலும் எக்காலத்திலும் அழிக்க முடியாத புரட்சித் தலைவர் புகழ் ஓங்குக!

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  5. #423
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    From GG Island with Love!

    The indisputable King of Romance GG's PBS songs with karaoke!


    பாடல் 14
    காற்று வெளியிடை கண்ணம்மா உந்தன் காதலை எண்ணிக் களிக்கிறேன் ! / கப்பலோட்டிய தமிழன்

    இதுவும் நடிகர்திலகத்தின் ஒன் மேன் ஷோதான் எனினும் இனிமைக் காரணி இடைச்செருகலாயினும் ஜெமினி சாவித்திரி ஜோடியே !
    பாரதியாரின் பாடலுக்கு சீனிவாசின் ஜெமினிக் குழைவு காலங்களைக் கடந்து பெருமை சேர்க்கிறதே !!
    இந்தப் பாடல் காட்சி படமாக்கப் பட்டபோது ஜெமினிக்கு கொஞ்சம் ஹிப் ஜாயிண்ட் வலி இருந்ததால் அடிக்கடி இடுப்பில் கைவைத்து சமன் செய்து கொள்ளப் போக ரசிகர்கள் அதையே அவரது காதல் பாடல்களின் ஸ்டைலாக்கி முத்திரை குத்தி விட்டனராம் !!

    (சிலசமயம் மறந்துபோய் கதாநாயகியின் இடுப்பிலும் கைவைத்து சமாளித்துக் கொள்வார் எல்லாம் ஒரு பேலன்சிங்தான் !!)


    Last edited by sivajisenthil; 5th October 2015 at 07:05 PM.

  6. Likes Russellmai liked this post
  7. #424
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    From GG Island with Love!

    The indisputable King of Romance GG's PBS songs with karaoke!


    பாடல் 15
    எந்தன் பருவத்தின் / பார்வையின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி ராதா ....சுமைதாங்கி

    சாத்தனூர் or மலம்புழா டேம் ? (Vaasu sir?)
    மிக மிக இனிமையான தேனிசைப் பாடல் !
    பாலாஜி நடிகர்திலகத்தை வைத்து எடுத்த எல்லாப் படங்களிலும் நாயகன் நாயகி பெயர்கள் ராஜா ராதா என்பது இப்பாடலின் இன்ஸ்பிரேஷனோ ?!





    Last edited by sivajisenthil; 5th October 2015 at 07:13 PM.

  8. Likes Russellmai liked this post
  9. #425
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    திகில் பாண்டிகள் / பகுதி 2 அமானுஷ்ய அசரீரி கானங்கள்!

    பேய் / பிசாசு / குட்டிச்சாத்தான்


    உடலைவிட்டுப் பிரிந்தேகும் ஆவி தனது ஆத்ம தேவைகள் குடும்ப கடமைகள் இலட்சியங்கள் ஆசைகள் முழுவதுமாக நிறைவேறியிருந்தால் மட்டுமே Cloud o'9 ஒன்பதாம் மேக அடுக்கு தாண்டி தனது கர்மவினைகளுக்குத் தகுந்த மாதிரி சித்திரகுப்தனின் திரிப் பதிவுப்படி எமராஜன் என்னும் திரி மாடரேடரின் வழி காட்டுதலில் சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ திரி சங்கு சொர்கத்துக்கோ செல்வது சாத்தியம் !

    நிறைவேறாத ஆசைகளை ஆவி சுமந்தால் கனம் தாங்காது புவியீர்ப்பு விசை காரணமாக வான் நோக்கி பறக்க முடியாமல் பூமியிலேயே விழுந்து விடும் !
    அப்படி விழும்போது பஞ்சபூதங்களின் கிரக நிலைப்படி பேயாகவோ பிசாசாகவோ கொள்ளிவாய்ப் பிசாசாகவோ மாறி மனித இனத்திநூடே அமானுஷ்யமாகக்
    கலந்து விடுமாம்! நாய் பூனை பல்லி ஆந்தை நரி கண்களுக்கு மட்டுமே புலப்படுமாம்!!
    சிலசமயம் மந்திரவாதிகள் சுடுகாட்டுக்கு சென்று இவைகளின் சங்கங்களுடன் சங்கு ஊதி அவற்றின் உள்ளேயும் வெளியேயும் கலவை பூசி கவலை இல்லாத குட்டிச் சாத்தான்களாக மாற்றுவதும் உண்டு! இவை உக்கிரமானவை! மனிதர்களை ரத்தம் கக்கி சாகடிக்குமாமே!


    ஜேம்ஸ் பாண்டுக்கே நல்லாக் கெளப்பறாங்க பீதி !





    குட்டிசாத்தானுடன் வடிவேலு !

    Last edited by sivajisenthil; 5th October 2015 at 10:02 PM.

  10. Likes madhu, Russellmai liked this post
  11. #426
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    From GG Island with Love!

    The indisputable King of Romance GG's PBS songs with karaoke!


    பாடல் 16
    கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு காரியம் நடக்கட்டும் துணிந்து விடு / பந்தபாசம்

    ஜெமினிகணேசன் சிவாஜிகணேசனை விட எட்டு வயது மூத்தவர் ! பெண்ணின் பெருமை / பாவ மன்னிப்பில் காதல்மன்னர் நடிகர்திலகத்தின் அண்ணனாக நடித்திருப்பார் !

    பந்தபாசத்தில் தம்பியாகவும் வீரபாண்டிய கட்டபொம்மன்/ கப்பலோட்டிய தமிழன் / நாம் பிறந்த மண் படங்களில் சிவாஜிக்கு இளையவராக
    நடித்திருப்பார்! பிற படங்களில் சம வயதினராக நடித்திருப்பார்!

    அண்ணன் என்னடா தம்பி என்னடா என்று மாற்று டைட்டில் வைத்திருக்க வேண்டிய அளவு சகோதர மனஸ்தாபம் புரிதலின்மை வெளிப்படுத்தப் பட்ட படம்!
    இனிய கானங்கள் நிறைந்தது !



  12. Likes Russellmai liked this post
  13. #427
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார்,

    பிரகலாதன் இரணியன் கதை மூலம் கூறியிருந்த கருத்துக்கள் அற்புதம். ஆசையின் முழு அர்த்தமும் அதில் வெளிப்பட்டது.


    //* ஒருவருக்கு உதவி செய்வதன் மூலம் உண்மையில் நீங்கள் உங்களுக்கு உதவி செய்துகொள்கிறீர்கள்.

    * நீங்கள் எதை விதைத்தாலும் அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.

    * அன்னயாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.

    * காரணமின்றி காரியங்கள் நடப்பதில்லை.

    * எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை இருக்கும்.

    * எல்லாம் நன்மைக்கே

    * விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை; கெட்டுப்போகிறவர் விட்டுக்கொடுப்பதில்லை//

    அருமை! அருமை!

    பழமொழிகளும் அவைகளின் உண்மை வடிவமும் பதிவும் புதுமையான அசத்தல் தங்கள் பாணியிலே.

    "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை "

    உண்மை விளக்கம் ஏ.ஒன்.தியானத்திர்கான சிறுவன் கதையும் நல்ல விளக்கம்.

    நல்ல பதிவுகள். தொடருங்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes Russellmai liked this post
  15. #428
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி கூட பேயோ பிசாசோ என்று பயந்து சவுக்குத் தோப்புகளில் ஒளிந்து இந்த வெள்ளை மோகினியை இருட்டில் தொடர்கிறாரே!

    வெள்ளை மோகினி வேறு ஒருவருடன் ஜோடி சேர்வதையும் கண்டு ரவி அதிர்ச்சியடைய, இன்னும் அதிர்ச்சியூட்ட பாலோ பண்ணும் ரவியையே இன்னொரு உருவம் பின்தொடர்ந்து கிலி ஏற்படுத்துகிறதே.

    நடிகர் திலகமே தெய்வம்

  16. #429
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிப்புச் சுடர் செய்யாத கொலைக்கு பயந்து நடுங்கி, இரவில் தனியே படகில் போகும் போது 'நீ எங்கே?' குரல் கேட்டு, திடுக்கிட்டு, ஏரியின் மேல் வெள்ளை தேவதை வெளிச்சமாய்த் தெரிய, விழிகள் பிதுங்கி, மிரண்ட ராஜன் ராத்திரி மோகினி வசம் சிக்கினாரா?

    நடிகர் திலகமே தெய்வம்

  17. Likes eehaiupehazij, Russellmai, rajeshkrv liked this post
  18. #430
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ஜி

    ராஜனின் திகில் முகத்திற்கு விளக்கம் சூப்பர்

  19. Likes eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •