Page 252 of 337 FirstFirst ... 152202242250251252253254262302 ... LastLast
Results 2,511 to 2,520 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2511
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    vasu : Plan on enjoying 'Grand Canyon' next year !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  2. Thanks vasudevan31355 thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2512
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி ராகவேந்திரன் சார்.

    மறக்கமுடியாத கலைஞர்களை அவர்கள் பிறந்த நாளில் மட்டுமல்லாமல் பிற நாட்களிலும் நினைவு கூர்ந்து நாமும் சந்தோஷமடைந்து மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்த மதுரகானங்களுக்கு தனி இடம் உண்டு. தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    http://freetamilmp3.in/index.php?dir...Pen&p=1&sort=0

    ஆமா. 'நீதான் மோகினியா?' உண்டா... இல்லை அதுவும் கத்தரிக்கு இரையானதா?
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #2513
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

    (நெடுந்தொடர்)

    52-ஆவது பதிவு



    52

    'அம்மம்மா! ஓ..அம்மமம்மம்மா '

    கொஞ்சம் நடுவில் வேலைப்பளு காரணமாக நின்று போய் இருந்த பாலாவின் தொடர் மீண்டும் இப்போது.

    'அன்புச் சகோதரர்கள்'

    ஜெயந்தி பிலிம்ஸ் தயாரிப்பு.

    வசூல் வேட்டை செய்த இன்னொரு கருப்பு வெள்ளை படம். நான்கு அன்பு சகோதர்களுக்கிடையே நடைபெறும் பாசப் போராட்டங்கள்தான் இந்தப் படத்தின் கரு. இப்போதைய தொலைகாட்சி சீரியல்களை ஞாபகப்படுத்தும் காட்சிகளை இப்படத்தில் அப்போதே காணலாம்.

    நட்சத்திரப் பட்டாளம். அனைவர்க்கும் சம பங்கு வாய்ப்பு. 'உங்கள் அபிமான நட்சத்திரங்கள் அனைவரும் ஒருங்கே இணைந்து நடிக்கும்' என்று சாமர்த்த்தியமாக டைட்டில் ஓடும். ஏன் வம்பு?

    மூலக்கதை பிரபாகர் ரெட்டி. வசனம் ஏ.எல்.நாராயணன்.

    எஸ்.வி.ரங்காராவ், மேஜர், ஏ.வி.எம்.ராஜன், ஜெய் நால்வரும் சகோதரர்கள். ராவிற்கு இணை கிடையாது. மேஜருக்கு அதற்கு பதிலாக இரண்டு. ஒன்று ஜமுனா.




    ஜமுனா ('ராணி' மாலினி தேவி ஜமுனா மிடுக்கு 'ஜம்' அபாரம்) நல்ல வில்லியாம். இரவல் குரல் வில்லி. யார் குரல்? மேஜரைப் பழி வாங்கத் துடிக்கும் வில்லி. இன்னொன்று நேற்றைய நாயகி தேவிகா. ராஜனுக்கு ராணி பிரமிளா. இன்னொரு கெட்ட வில்லி.

    ஜெய்க்கு 'வெண்ணிற ஆடை' ஜோடி.

    பாட்டை மட்டும் தொட்டு வைக்கலாம் என்றால் பழக்கம் விடுவேனா என்கிறது. விவரமாகத் தந்தால்தான் மனசு திருப்தி அடைகிறது.

    இசை மகாதேவ மாமாதான். கிடார் ஓசையிலிருந்தே ஈஸியாக கண்டுபிடித்து விடலாம். கனகசபை தயாரிக்க, திரைக்கதை இயக்கம் லக்ஷ்மி தீபக். அதிகம் பரிச்சயமில்லை.

    'முத்துக்கு முத்தாக' என்ற பிரளயப் பாடல் அனைவரையும் கவர்ந்தது அனைவரும் அறிந்ததே. நால்வர் கூட்டணியில் நானிலம் போற்றிய ஒரு பாடல். கண்டசாலாவின் பின்னாளைய சூப்பர் ஹிட். ராவிற்கு மிகப் பொருத்தமான குரல்.

    அப்புறம் 'ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்... உங்களுக்காச்சி...எங்களுக்காச்சி பார்ப்போமா' என்று ராட்சஸி ரகளைப் பாடல். ஜெய், 'வெண்ணிற ஆடை' கல்லூரி குரூப் கலாய்ப்பு கானம். 'நீயா நானா... ஆம்பளையா பொம்பளையா' போட்டி.

    சோ 'ஜெய்சங்கர் ஜெய்சங்கர் ஜெய்சங்கர் ஜெய்' என்று டைமிங்காக பாடுவார் அப்போதைய ஜெய் முன்னணியை பின்னணியாக வைத்து. 'ஆப் கி கஸம்' (1974) படத்தின் 'Jai Jai Shiv Shankar' பாடலுக்கு முன்னோடி போல இருக்கும். தமிழன் எல்லாவற்றுக்கும் முன்னோடிதானே! ஆம்பளையை உயர்த்தி சௌந்தரராஜன் பாடுவார். ரொம்ப ரொம்ப ரேர் சாங். ராட்சஸியின் குரலில் இடையே வரும் 'ஜுகு ஜுகு ஜுகு ஜுகு ஜுகு ஜுங் ஜுகு ஜுகு ஜுகு' வழக்கம் போல அவருக்கு மட்டுமே சாத்தியம்.

    'குதிரை ஏறினா மதுரை வீரனா?' என்று ஒருவரி இப்பாடலில் உண்டு.

    ஆதி சார், சின்னா!

    நானும் மதுரை பாட்டு ஒன்னு போட்டுட்டேன். நிர்மலா உடை விஷயத்தில் அப்படியே இந்தி மும்தாஜைப் பின்பற்றுவார். இருந்தாலும் அம்சம்தான். ஜெய், நிர்மலா டீஸிங் எப்பவுமே நல்லாத்தான் இருக்கும். 'பூவா தலையா' ஒன்று போதாதா? 'shut up' என்கிறீர்களா? அதுவும் சரிதேய்ங்.... இந்தப் பாட்டு ஒன்னும் அவ்வளவு ஜோர் இல்லை. ஆனா ஜாலியாக இருக்கும்.

    ம்ம்..இப்படியே போனால் போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான். நம் தொடர் பாடலுக்கு வந்து விடுகிறேன்.


    ஜெய், நிர்மலா ஒன்று சேர்ந்து அண்ணி பிரமிளாவை வெறுப்பேற்றும் பாடல் ஒன்று உண்டு. இதில் நம் தொடர் நாயகர் பாடுவார். .

    ஈஸ்வரி ரகளைகள் டாப். பாலா கம்பீரக் குழைவில் அட்வைஸ் அளிப்பார். கடற்கரை காட்சிகள் கண்ணுக்கு இதம். ஆனால் பிரமிளா வதம். ஜெய் சுறுசுறு. நிர்மலா தாவணி கடலைவிட குளிர்ச்சி என்று சொல்லாவிடில் சின்னா வைவார்.

    பிரமாதமான பாடல் ஒன்றுமில்லைதான். ஆனால் கணக்கில் சேருமே!




    அம்மம்மா! ஓ..அம்மமம்மம்மா!
    அம்மம்மா!... அம்மமம்மம்மா!
    என்னம்மா! நீ பெண்ணம்மா!
    அதை மறந்திடலாமா?... சொல்லம்மா!
    வீட்டையும் நெனச்சுக்கம்மா
    ஆட்டத்தை முடிச்சுக்கம்மா

    அம்..மம்மா! அம்மமம்மம்மா!
    என்னம்மா! நீ பெண்ணம்மா!
    அதை மறந்திடலாமா?... சொல்லம்மா!
    வீட்டையும் நெனச்சுக்கம்மா
    ஆட்டத்தை முடிச்சுக்கம்மா

    பூப்போலே இருக்கணுமம்மா பொண்ணுங்க கையி
    அதை மனசில வை

    பிள்ளையைப் பெத்து தொட்டிலைக் கட்டு
    பாசம் உண்டாகும்

    குவா!

    உன் உள்ளத்துக்கும் இல்லத்துக்கும் பாலம் உண்டாகும்
    டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

    ஆடாத ஆட்டம் ஆடும் சங்கதி என்னம்மா?
    ஆடாத ஆட்டம் ஆடும் சங்கதி என்னம்மா?
    காலில் சங்கிலி போடம்மா

    அ ...வீட்டையும் நெனச்சுக்கம்மா

    ஆட்டத்தை முடிச்சுக்கம்மா

    அம்மம்மா!

    ஹேய்!

    அம்மமம்மம்மா!

    ஹேய்!

    என்னம்மா! நீ பெண்ணம்மா!
    அதை மறந்திடலாமா?... சொல்லம்மா

    வீட்டையும் நெனச்சுக்கம்மா

    ஹா ஹா ஹா ஹா!

    ஆட்டத்தை முடிச்சுக்கம்மா

    ஹா ஹா ஹா ஹா!

    ஹேய்...ராரா...

    ஹ... வாயாடி வம்புக்கு போனா வாங்கிக்க வேணும்

    ஒதை (ஜெய் 'வெண்ணிற ஆடை'யை இப்படியா உதைப்பது?..பாவம்...பச்சை மண்ணைப் போய்)

    தந்தா தாங்கிக்க வேணும்

    வாழும் வீடும் வளர்ந்த வீடும் பெருமைப் பெற வேண்டும்
    வந்தாளம்மா லட்சுமி என்று ஊரே சொல்ல வேணும்

    தாயார்கள் வாழ்ந்ததிலெல்லாம் தத்துவம் உண்டம்மா
    தாயார்கள் வாழ்ந்ததிலெல்லாம் தத்துவம் உண்டம்மா
    அது சத்திய வாழ்வம்மா

    ஆஹா1 நீ என்ன அதிசயமா?

    நான் என்ன சொல்லணுமா?

    அம்மம்மா!

    ஹே........ய்

    அம்மமம்மம்மா!

    ஹே........ய் (ராட்சஸி கனைப்பு இருக்கிறதே! சான்ஸே இல்லை. நக்கல் அப்படியே புகுந்து புறப்படுதே )

    என்னம்மா! நீ பெண்ணம்மா!
    அதை மறந்திடலாமா?... சொல்லம்மா
    வீட்டையும் நெனச்சுக்கம்மா
    ஆட்டத்தை முடிச்சுக்கம்மா

    கல்லூரி பாடத்திலே நீ பார்த்தது என்ன?

    என்ன?

    அங்கே படித்தது என்ன?

    என்ன?

    வீட்டுக்குளே காட்டுத் தர்பார் நடத்திடச் சொன்னாரா? (யம்மோவ்...'ரா'வுக்கு என்ன ஒரு அழுத்தம் ராட்சஸி தருவது!)

    உஹாஹா!

    வீ(றா)ராப்பாக பேசுவதேதான் வேதம் என்றாரா?

    மேலான ராணி என்றாலும் மென்மை வேண்டுமம்மா!
    மேலா.....ன ராணி என்றாலும் மென்மை வேண்டுமம்மா!
    குலத் தன்மை வேண்டுமம்மா!

    வீட்டையும் நெனச்சுக்கம்மா

    ஆட்டத்தை முடிச்சுக்கம்மா

    அம்மம்மா! அம்மமம்மம்மா!
    என்னம்மா! நீ பெண்ணம்மா!
    அதை மறந்திடலாமா?... சொல்லம்மா!
    அ...வீட்டையும் நெனச்சுக்கம்மா
    ஆட்டத்தை முடிச்சுக்கம்மா

    அம்மம்மா! அம்மமம்மம்மா!
    என்னம்மா! நீ பெண்ணம்மா!
    அதை மறந்திடலாமா?... சொல்லம்மா!
    அ...வீட்டையும் நெனச்சுக்கம்மா
    ஆட்டத்தை முடிச்சுக்கம்மா

    லல்லல லல்லலலா
    ஜூஜூஜூ ஜூஜூஜூஜூ




    இதே படத்தில் பாலா இன்னொரு டூயட் பாடியிருப்பார். 'எதிர்பார்த்தேன்' என்று எதிர்பார்த்துக் கொண்டிருங்கள். எதற்காக? 'உங்களுக்காக'. வரும் விரைவில். அதுவரை தேவை பொறுமை.

    சரி! கிளம்பட்டுமா?
    Last edited by vasudevan31355; 26th April 2016 at 01:43 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes Russellmai, madhu, chinnakkannan liked this post
  7. #2514
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    I will also join if there is any plan for Sathanur Dam tour by our friends.

  8. #2515
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Bhakthi - yezhumalai irukka

    From thirumalai dheivam (1973)

    yezhumalai irukka enakkenna manak kavalai.........




    I still remember a concert by K.B.SundarambaL I attended in 1954 in Mayavaram (Mayiladuthurai). It lasted nearly six hours. Compare that to two hour cncerts these days !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  9. Likes vasudevan31355 liked this post
  10. #2516
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    vasu : Plan on enjoying 'Grand Canyon' next year !
    அருமை ராஜ்ராஜ் சார்.

    இப்போதே என்னுடைய சந்தோஷத்துடன் கூடிய வாழ்த்துக்கள். ஜமாயுங்கள். உங்களுக்காக ஒரு முன்னோட்டம். பிரம்மாண்டத்தின் அடையாளமோ?

    நடிகர் திலகமே தெய்வம்

  11. Likes madhu liked this post
  12. #2517
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Thanks vasu ! . I have visited Grand Canyon three or four times. If you are visiting I will definitely accompany you. I don't drive long distance these days. You will have to learn American driving !



    Quote Originally Posted by vasudevan31355 View Post
    அருமை ராஜ்ராஜ் சார்.

    இப்போதே என்னுடைய சந்தோஷத்துடன் கூடிய வாழ்த்துக்கள். ஜமாயுங்கள். உங்களுக்காக ஒரு முன்னோட்டம். பிரம்மாண்டத்தின் அடையாளமோ?
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  13. #2518
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசு ஜி... ஒரு கௌபாய் டிரஸ், தொப்பி வாங்கிக்கிட்டு குதிரை சவாரியும் கத்துகிட்டால்... கர்ணன் இயக்கிய பட ஹீரோவைப் போல் டகடக் டகடக்னு கிராண்ட் கான்யானை வலம் வரலாம்.... ( ராட்சசி குரலில் பாடிக்கிட்டு ஆட யாரும் வரமாட்டாங்க ... ஆமாம் சொல்லிட்டேன் )

  14. Likes chinnakkannan, vasudevan31355 liked this post
  15. #2519
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'உள்ளத்தில் குழந்தைகளடி'

    மதுரை, தஞ்சை ஊர் பாடல்கள் ஓய்ந்தன.

    இப்போது கொஞ்சம் வேறு எடுக்கலாம்.

    தமிழ்ப் படங்களில் நாயகனோ, நாயகியோ மனவளர்ச்சி குன்றி குழந்தைகள் போல குறும்புகளும், குழப்பங்களும் செய்ய அவர்களுக்கு ஆதரவாக, அன்பாக இன்னொரு கதாபாத்திரம் இருக்குமல்லவா? அந்த கதாபாத்திரம் இந்த வாலிபக் குழந்தைகள் எது செய்தாலும் பொறுத்துக் கொண்டு அவர்கள் மேல் அன்பைப் பொழியும். பாசத்தைப் பிழியும். அப்படிப்பட்ட சில பாடல்களை பார்த்தால் என்ன என்று தோன்றியது.

    முதலில் 'கை கொடுத்த தெய்வம்'.

    குழந்தை போல மனவளர்ச்சி குன்றிய, கள்ளம் கபடம் அறியாத, 'வெடுக் துடுக்' நாயகி சாவித்திரி மேல் ஊர் களங்கப்பழி சுமத்த, அந்தக் குழந்தையைப் பற்றி எல்லாம் அறிந்த 'நடிகர் திலகம்' மனம் ஒடிந்து, அதே சமயம் அந்தக் குழந்தைக்கு ஆதரவாக குரல் தருவதைப் பாருங்கள்.

    'களங்கம் சொல்பவர்க்கு உள்ளமில்லையோ!
    ஆதாரம் நூறென்று ஊர் சொல்லலாம்
    ஆனாலும் பொய்யென்று நான் சொல்லுவேன்'

    என்று கோபம் தலை உச்சிக்கேற, ஊரார் அவளை 'புரிந்து கொள்ளவில்லையே' என்ற ஆதங்கத்தில் கடிந்து கொள்வதைப் பாருங்கள். வேட்டியை சற்றே உயர்த்திப் பிடித்து, உள்மனதில் ஊராரின் பொய்யுரைகளை நினைத்து நெஞ்சடைத்து, ஆத்திரம் பொங்க, சாவித்திரி குழந்தைக்காக 'பாவிகளா! அப்படியெல்லாம் அந்தப் பெண் மீது அபாண்டப் பழி சுமத்தாதீங்கய்யா... உருப்படவே மாட்டீங்க' என்று உயர்த்திய வேட்டியை கால்களுக்கு மத்தியில் சைட் போஸில் லாவகமாக செருகி, ஆட்காட்டி விரலை உயர்த்தி, அதிலேயே கடுங்கோபத்தைக் காட்டி, அதற்கு மேல் விழி பெருக்கி, கண்களின் உருட்டல்களிலேயே அவள் புனிதமானவள் என்று ஊரார்க்கும், நமக்கும் உணர்த்தி, அந்த வெகுளிப் பெண்ணுக்காக உருகுவதை கண் இமைக்காமல் பாருங்கள்.



    அடுத்து

    'கண்ணன் என்ன சொன்னான்? சிறு பிள்ளையே! கண்ணீர் வர காரணம் ஏன் கொடி முல்லையே?' என்று ஜெயதேவி அழும் 'குமாரி' ஸ்ரீதேவி குழந்தையை மடியில் கிடத்தி, 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' என்று ஆறுதல் கானம் இசைப்பதை பாருங்கள். பாடலின் பல்லவி வரிகளின் டியூன் இன்னும் என்னை ஆச்சர்யப்படுத்தும். அப்படியே சாதரணமாக ஆரம்பித்து அப்படியே எங்கெங்கோ அந்த பாடலின் டியூன் போகும் போது 'ராஜா'வுக்கு ஓடிச் சென்று ரோஜாச் செண்டு கொடுத்தால் என்ன என்று தோன்றும். அப்படியே அதிலிருந்து சில ரோஜாக்களை எடுத்து இசையரசிக்கும் கொடுத்து விடலாம். அற்புதம்.



    அதே 'ச்சுப்பிரமணி' ஸ்ரீதேவிக் குழந்தையை மடியில் கிடத்தி 'மூன்றாம் பிறை' நாயகன் உதடு வெதும்பி 'கண்ணே! கலைமானே!' என்று கண்கள் கலங்க பாடி, தன்னுடைய குருவுக்கு சிஷ்யனாக நடிப்பில் பரிமளிப்பதையும் காணுங்கள்.



    காதலியின் எதிர்பாரா தீ மரணத்தில் அதிர்ச்சிப் பைத்தியமாகி விட்ட இந்த வெகுளியை குணப்படுத்த 'எங்கிருந்தோ வந்த' 'கலைச்செல்வி' அறையிலேயே அடைபட்டுக் கிடக்கும் அந்த அழகு வாலிபனை இயற்கை எழில் சூழும் இடங்களுக்கு இட்டுச் சென்று அவனை குதூகலிக்க வைப்பதைக் காணுங்கள். (பின்னால் சின்னத்தம்பி 'அரண்மனை அன்னக்கிளி'யை எழில் பிரதேசங்களுக்கு கூட்டிச் சென்று 'போவோமா ஊர்கோலம்' பாடினார்) அவனுக்குப் பக்கத் துணையாய் இருப்பதையும் கவனியுங்கள். இருவரின் 'சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதம்'தானே!



    'உள்ளத்தில் குழந்தையடி' என்று இருக்கும் ஸ்ரீப்ரியாவிடம் பாசம் கா(கொ)ட்டும் அண்ணனும் அண்ணியும்.

    'கண்ணுக்கு நீ ஒரு கன்னிப் பொண்ணு...என் கருத்துக்கு நீ வெறும் பச்சை மண்ணு... உண்ணடியோ சோறு உண்ணடியோ...ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ?' என்று தேங்காயும், அண்ணியும் (யார் ஸ்ரீவித்யாதானே?) அன்பொழுக பாடுவதைக் கேளுங்கள். பாடல் வரிகள் அற்புதம். சீர்காழி, வாணி ஜெயராம் காம்பினேஷன் அரிதான தூள். 'இயக்குனர் திலகம்' படம் என்று நினைவு.



    இது கொஞ்சம் வேறு. மனவளர்ச்சி குன்றிய இவன் உருவத்திலே மனிதன் என்றாலும் இவனுக்கு பின்னணியில் ஒலிக்கும் ஜேசுதாஸின் குரலே துணை. சிரிப்பைத்தவிர வேறேதும் அறியா அன்பன். ஆனால் ஒரே முறை அழுதான். 'யாருக்காக அழுதான்'? விம்ம வைக்கும் வித்தியாச நாகேஷ். ஜெயகாந்தன் பட்டறையின் வைரம். மனம் முழுக்க பாரம்.



    இனி நண்பர்கள் வேறு குழந்தைகளைத் தேடித் தரலாம்.
    Last edited by vasudevan31355; 27th April 2016 at 10:19 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes Russellmai, madhu liked this post
  17. #2520
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் வாசு.. கலக்கல் தான் போங்க உங்க குழந்தை உள்ளம்.. ஹப்புறம் கேட்டுச் சொல்றேன். ஸிமிலர்லி ஐ டிண்ட் ஹியர் த எஸ்பிபி சாங்க் ஆல்ஸோ.. கேட் சொல்றேன்..ம்ம்

    குழந்தை உள்ளம் மனமுதிர்ச்சி அடையாத நபர் என்றெல்லாம் பார்த்தால் இன்னொரு கமல் நினைவுக்கு வருவாரே..

    துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா..சிப்பிக் முத்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •