Page 245 of 337 FirstFirst ... 145195235243244245246247255295 ... LastLast
Results 2,441 to 2,450 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2441
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுண்ணா!

    உங்களுக்கு பத்மப்ரியா நினைவு வந்திருக்குமே! அதுவும் வண்ணம் வேறு.
    Last edited by vasudevan31355; 19th April 2016 at 07:09 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2442
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அதே ஷாந்தா ஜானகிராமன் அவர்கள் தரவேற்றிய 'பௌர்ணமி நிலவு' படப் பாடலில் பாவம், நடிப்பு என்றால் 'கிலோ என்ன விலை?' என்று எப்போதுமே கேட்கும் விஜய்பாபு 'பசிக்குது இலை போடம்மா' என்று பூமாதேவி போல வாழ்ந்த ஜீவனை வளர்த்தவரிடம் வச(ந்)தியாகக் கேட்கிறாரே. (அந்த பெல்பாட்டமும், ஸ்டெப் கட்டிங்கும் இல்லாத விஜய்பாபு ரொம்ப ரேர்). அப்போ படமும், பாடல்களும் பரபரப்பைக் கிண்டியது நெசந்தான்.

    நடிகர் திலகமே தெய்வம்

  4. #2443
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    மதுண்ணா!

    உங்களுக்கு பத்மப்ரியா நினைவு வந்திருக்குமே! அதுவும் வண்ணம் வேறு.
    ஹி ஹி... வாசு ஜி.. நீங்க ஒரு மந்திரக் கண்ணாடி..

  5. #2444
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    “நான் போய்ட்டு வர்ரேன்னு சொன்னார்ப்பா.. சரி இங்க இருக்கு மஸ்கட்டு தோ ரெண்டரை அவர் ல வந்துருவாராங்காட்டியும்னு போய்ட்டுவா மாமான்னேன்

    போனார் போனாருதான்.. அதுசெரி.. பேசறாரான்னு கேக்கறியா.. ம்ம்..அதுமாட்டுங்கெடக்கு...வாஸ்ஸப் ஐஎம்மோ.. அப்பப்ப தும்பிக்கையாட்டம் டை கட்டிகினு புது க்ளாஸ் போட்டுகினு போட்டு அனுப்பிகினு தான் இருக்கார்..என் ஃபோட்டோ ஆனமட்டும் அனுப்புன்னு கெஞ்சறார்.. மாட்டேன் முடியாதுன்னுட்டேன்..

    ஏன்ங்கறியா.. நான் இன்னாத்த சொல்வேன்..அது பாட்டுக்கு போய்டுச்சு..வரத்துக்கு அடுத்தவருஷம் தான் வருமாம்.. என்னதான் பேசி போட்டோலாம் பாத்துகினு இருந்தாலும் நேர்ல கூட இருக்கறா மாதிரி வருமா.. வராது தான்.. உனக்குத் தெரியுது..என் உடம்புக்குத் தெர்லையே..


    இத்தனைக்கும் வெளிய கூட போறதில்லை..ஹிந்தி சீரியலும் பார்க்கறதுல்ல..சாப்பாடு எப்பவும் கொஞ்சமாத்தான் சாப்பிடுவேன்னு உனக்குத் தெரியும் பட் பசிக்கலை.. கொஞ்சம் செவேல்னு இருப்பேன்னு அடிக்கடி நீ பொறாமைப் படுவியே..இப்ப எப்படி இருக்கேன்.. கொஞ்சம் கறுத்துட்டேனில்லை..ம்ம் காரணம் அந்தச் சண்டாளன் தான்..திருட்டுப் பயபுள்ள.. அவர் பிரிஞ்சதாலத் தான் எனக்கு இப்படி ஆகிடுத்து “ என்று ஒரு தலைவி தன் தோழியிடம் பகிர்ந்து கொள்கிறாள் என்பதை வள்ளுவர் கீழ்க்கண்டவாறு உரைக்கிறாராக்கும்..


    நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தஎன்
    பண்பியார்க்கு உரைக்கோ பிற.

    ஸோ இது பசலைங்கறது நிறமாற்றம்.. அதாவது காதலன் பிரிந்ததால் ஏற்பட்ட நிற மாற்றம்..

    இதையே ஒரு திரு நெல்வேலிக் காரம்மா என்னவாக்கும் சொல்றாக..

    “ஆமா வந்துட்ட கேக்கறதுக்கு..என்னத்த சொல்வேன் போ..அவிய ஊருக்குப் போய்ட்டாக.. ஆமா.. அதுக்கென்ன..

    தோ..அங்க பாரு..புதுசா வாங்கின ஜெர்ஸிப் பசு.. கோனார் வரலை.. நானும் மறந்துபுட்டேன். பார்த்தா என்னாச்சா
    பால் முச்சூடும் காம்பிலிருந்துபொங்கி தரையில கொட்டிக்கிட்டிருக்கு..ம்ம் கன்னுக்குட்டிய அவுத்து வுடலாம்னா ரொம்பச் சின்னதா தூங்கிவழிஞ்சுது..விட்டுட்டேன்..அப்புறமா ஃபீடிங்க் பாட்டில்ல கொடுக்கலாம்னு..

    என்னது..எளச்சுருக்கேனா.. எக்ஸர்ஸைஸா.ஸூம்பா க்ளாஸஸா.அதெல்லாம் இல்லை.. தானா இளைக்குது..உடம்பும் கொஞ்சம் கறுத்துப் போச்சுதேன்..எல்லாம் இந்தப் பால் இப்படி கன்னும் குடிக்காம நமக்கும் உபயோகப்படாம வேஸ்ட் ஆச்சு பாத்தியா..அது போல ஹும் என்னோட யூத் எல்லாம் வேஸ்ட் ஆகட்டும்..அவிய தான் இல்லையே..எப்போ வருவாரோ எந்தன் கலிதீர... சிரிக்காத புள்ள..வகுத்தெரிச்சல்”

    இதைத்தான் ஒரு குறுந்தொகைப் பாடல் சொல்கிறது..

    கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
    நல ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு
    எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது
    பசலை உணீஇயர் வேண்டும்
    திதலை அல்குல் என் மாமைக் கவினே.

    இங்க தலைவி பசலையை நோய் என்றே சொல்கிறாள் போல..

    ம்ம் ஒரு பாட்டுல கூட வரும்ல

    மாலைக்கு நோயாகிப் போனேன்
    காலை மலருக்குப் பகையாக ஆனேன் .. என்கிறா இந்தப்பொண்ணு..

    எதுக்காம்.. அந்த ஹீரோப்புள்ளையாண்டன் கொஞ்சம் லூஸு போல..
    மொதல்லையே நைஸா விண்ணப்பிக்கிறா..

    அழகானபழம் போலும் கன்னம்
    அதில் தரவேண்டும் அடையாளச்சின்னம்

    இது இருக்கே ஜடம் தத்தி (சிசெ..கோச்சுக்கப்போறார்)

    பொன் போன்ற உடல் மீது மோதும்
    இந்த கண் தந்த அடையாளம் போதும்

    அதுக்கப்புறம் தான் இந்த மாலைக்கு நோயாகிப் போனாளாம்.. ஃபீலிங்க்ஸ்..அழகாச் சொல்றா பாருங்க.பிரிஞ்சாலும் கஷ்டம் கூட இருந்து சும்மா இருந்தாலும் கஷ்டம்.. யாருக்கு யாருக்கோ

    வாங்க பாட் பார்க்கலாம்..

    துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே இங்கே என்னாளும்..ம்ம்



    //நேற்றெழுதி இட்டு சரியா வரலையோன்னு சந்தேகப்பட்டு டெலீட் பண்ணி மறுபடியும் இடுகிறேன்..ஓகேயா//

  6. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  7. #2445
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசு ஜி...

    அந்த "பசிக்குது" பாட்டைப் பார்த்த பிறகுதான் உடனே அங்கே ஒரு ரிக்வெஸ்ட் வச்சேன். யூடியூபில் இந்தப் பாட்டுக்கு கீழேயே இருக்கு பாருங்க... சிலர் இது போல் கையில் இருந்தா உடனே அப்லோட் செய்வாங்க... நீங்க முழுப்படமும் கேட்டிருக்கீங்க.. பரங்கிமலை ஜோதியில் ரிலீஸ் ஆனபோது பார்த்தேன். அப்புறம் கண்ணில் படவே இல்லை.. கிடைச்சா மறுபடி பார்க்கலாம்.

  8. #2446
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சிக்கா.. துயிலாத பெண்ணை தூங்க வைக்கப் போறீங்களா ?

    பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்னு சொல்வது எந்த நோய் ? சொல்லுங்க..

  9. Likes chinnakkannan liked this post
  10. #2447
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    சிக்கா.. துயிலாத பெண்ணை தூங்க வைக்கப் போறீங்களா ?

    பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்னு சொல்வது எந்த நோய் ? சொல்லுங்க..
    தூங்க வைக்கப் போறீங்களா மீன்ஸ்.. போரடிக்குதா..

    நாம பேசற நோய் தான்.. உணர்வுகளை உடலை உருக்கும்... பட் பாலும் கசந்ததடிங்கற மாதிரி சாப்பிடாம கொள்ளாம இருந்தா நோய் தானே வரும்..

    இந்த தெ.ரா பாட் ஏன் போடலை வாசு

  11. #2448
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post

    இந்த தெ.ரா பாட் ஏன் போடலை வாசு
    அது பாடல்கள் வரிசையில் வராது. போட்டிக்கவிக்கு புத்தி புகட்ட ராமகிருஷ்ணா ஈற்றடி தந்து பின் உரைக்கும் வெண்பா. அதனால் அது அம்பிகாபதி நூறுக்கு முன் பாடிய கடவுள் துதி போல 'தெனாலிராமன்' படப் பாடல் வரிசையில் இடம் பெறாமல் போய் விட்டது. உங்களுக்கு வேண்டுமென்றால் சொல்லுங்க செல்லம். நான் என் டிவிடியிலிருந்து எடுத்து அப்லோட் செய்கிறேன். அதே உங்க ஓ.கே.யா?

    இன்னொன்று. என்னுடைய நடிகர் திலகத்தின் டாப் 10 வரிசையில் எப்போதுமே 'தெனாலிராம'னை வைத்திருப்பேன். அவ்வளவு அறிவுபூர்வமான படம் அது. இரண்டாவது நடிகர் திலகம் திரையில் நடிக்க வந்து நான்கு ஆண்டுகளிலேயே, அதாவது 1956 -ல் இந்த அற்புதமான 'தெனாலி ராமன்' என்ற வெளியே எளிமையாக தமாஷாகத் தெரியும் அவ்வளவு கடினமான பாத்திரத்தை சிறு வயதிலேயே தலையில் சுமந்து அட்டகாசம் செய்தார் தன் அபார நடிப்பால். (அப்போது அவருக்கு வயது இருபத்து எட்டு தான்) இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவரது விழிகளும், முகபாவங்களும் புரியும் அதிசயங்களை எப்படிப்பட்டவரும் வார்த்தைகளில் வடித்து விட இயலாது. எவ்வளவோ அதியற்புதமான பாத்திரங்களை அவர் ஊதித் தள்ளியிருக்கிறார். ஆனால் அதில் 'தெனாலிராமன்' தனி ரகம் என் உயிரான 'ஆண்டனி அருண்' போல.

    இதை நான் நடிகர் திலகம் திரியில் எழுதலாம். ஆனால் 'தெனாலிராமன்' படத்தில் ராமன் ஒரு கவி என்பதால் படத்தின் ஆரம்பத்தில் இருந்து ராயரிடம் பணியில் சேர்ந்து, போட்டியாளர்களை சந்தித்து அவரகளை தன் அறிவுத் திறனால் ஓட ஓட விரட்டி முடிக்கும் வரை நிறைய சிறு சிறு கவிகளும் வெண்பாக்களும் பாடல் வடிவில் இப்படத்தில் அடிக்கடி ஒலிக்கும். அதனால்தான் இங்கு எழுதினேன். இந்தப் படத்தில் நடிகர் திலகம் கவி பாடும் போது அதற்கு பின்னணிக் குரல் கொடுப்பவர் வி.என்.சுந்தரம் என்ற அற்புதமான கலைஞர். இவர் புகழ் பெற்ற நடிகரும் கூட.

    ஒரு மூன்று மணி நேர ஓய்வு கிடைத்தால் இந்த அற்புத படத்தை அணுஅணுவாக கண்டு ரசித்து மகிழுங்கள். ஜென்மமே சாபல்யம் அடைந்தது போல இறுதியில் உணரலாம்.

    படத்தின் டைட்டிலின் போது பின்னணியில் ஒலிக்கும் 'உலகெலாம் உனதருளால் மலரும்...'கிருபாகரியே! மஹேஸ்வரியே!' என்ற அருமையான பாடலை மறக்கவே முடியாது. அமைதியும், சாந்தமும் ஒருசேரப் பொங்கினால் அது இந்தப் பாடலே. (இதே பாடல் ஜமுனா பாடும் சோக வடிவத்திலும் உண்டு)
    Last edited by vasudevan31355; 20th April 2016 at 06:56 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes chinnakkannan, madhu liked this post
  13. #2449
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Bhakthi - ulagelaam unadharuLaal.........

    From Tenali Raman (1959)

    ulagelaam unadharuLaal........

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  14. Likes chinnakkannan, madhu liked this post
  15. #2450
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சாருக்கு எங்கே தட்டினா எங்கே வலிக்கும் என நல்லா தெரியும்.
    தெனாலி ராமனை வைத்து என்னை இங்கே இழுத்து விட்டார்..
    நடிகர் திலகத்தின் முதல் பத்தில் இதுவும் இடம் பெற வேண்டும்.

    தெனாலி ராமன் படத்திற்காகப் பதிவு செய்யப்பட்டு கடைசி நேரத்தில் படத்தில் இடம் பெற முடியாமல் போன பாடல் உங்களுக்காக

    http://www.pradosham.com/msv/1956%20...Kannadasan.mp3

    தென்னவன் தாய்நாட்டு சிங்காரமே..

    இந்த ராகத்தை ரீதி கௌளை என்பார்கள். இதை முதலில் கவிக்குயில் படத்தில் தான் பயன் படுத்தியதாகக் கூறி வந்தார்கள் சிலர். ஆனால் எப்படி நடிப்பில் எதிலும் முதன்மையாக பல வகை நடிப்பை நடிகர் திலகம் கொண்டு வந்தாரோ அது போல இசையில் அத்தனை விதமான அம்சங்களையும் முதலில் கொண்டு வந்தவர் மெல்லிசை மன்னர். அதே போல் இந்த ரீதி கௌளை ராகத்தை 1956லேயே கொண்டு வந்து விட்டார்.

    இந்த ராகம் கேட்க மிகவும் இனிமையாகவும் அதே சமயம் மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும் படியும் திகழும் தன்மை வாய்ந்தது.

    குறிப்பிடத்தக்க சில பாடல்கள்

    சின்னக்கண்ணன் அழைக்கிறான், தலையைக் குனியும் தாமரையே, உன்னி கிருஷ்ணன் பாடிய ஒரு பாடல், முதல்வன் படத்தில் அழகான ராட்சசியே உள்ளிட்ட பாடல்கள் இந்த ராகத்தில் அடங்கும்.,
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Likes chinnakkannan, madhu liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •