Page 221 of 337 FirstFirst ... 121171211219220221222223231271321 ... LastLast
Results 2,201 to 2,210 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2201
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    செவ்விதழோரம் ..பழச்சாறு.. என்ன பழம்னு சொல்லலையே..அதுஆப்பிள் நா கொஞ்சம்ஸ்வீட்டா இருக்கும்.. தக்காளிப்பழம்னா சம்டைம்ஸ் புளிக்குமே..

    பக்காவாய்ப் பார்த்துப் பளிச்சிடுமே இந்தத்
    தக்காளி என்றுமே தான்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2202
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கவியுரைத்த கற்பனை போல்
    கைபிடித்த பூங்கொடியாள்
    பொய்யுரைத்த கவிதையைப்போல்
    போன கதை என்ன சொல்வேன்.

    சின்னக்கண்ணன் சார்
    அது என்ன கற்பனை?
    பொய்யுரை?
    தெரியவில்லை.
    விளக்கினால் நன்று.
    Last edited by senthilvel; 5th April 2016 at 08:00 PM.

  4. #2203
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Asha Parekh,,,the Sarojadevi of Hindi screen!...without a break!

    Last edited by sivajisenthil; 5th April 2016 at 10:21 PM.

  5. Likes Russellmai liked this post
  6. #2204
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like

  7. Likes Russellmai liked this post
  8. #2205
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like

  9. Likes Russellmai liked this post
  10. #2206
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like

  11. Likes Russellmai liked this post
  12. #2207
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஞாயிற்றுக் கிழமைச் சந்தை என்றும் தேர்தல் சமய அல்லது இன்ன பிற அரசியல் பொதுக்கூட்டங்களுக்காக திலகர் திடல் என்றும் அழைக்கப்படும் சந்தையிலிருந்து கொய்ங்க்கென்று வலதுபக்கம் கிருஷ்ணாராயர் தெப்பக்குள மேற்குத்தெருப் பக்கம் திரும்பாமல் நேரே நடந்தால், குறுக்கே போகும் சாலையில் வலது பக்கம் எட்டிப்பார்க்க கொஞ்சம் தொலைவில் ஸ்ரீதேவி தியேட்டர் தெரியும்..கடக்க இரட்டைத்தெரு..

    நிற்க அந்த வலது பக்கம் தெருவில் உள்ள வீட்டின் சுவர்கள் சுவரொட்டிகளுக்குத் தானமாக வழங்கினார்களோ என்னவோ அங்கு பார்த்த ஒரு போஸ்டர் ஹிந்திப் படம் ஏ என ஆங்கில எழுத்து இருக்க உள்ளே ஒரு ஆணும்பெண்ணும் அணைத்தபடி இருக்க பார்த்த சிறுவனுக்கு அறியாத வயசு..சினிப்ரியாவோ என்னமோ தியேட்டர் என நினைவு..அதே சுவரில் சிலவருடங்களுக்கு அப்புறம் அதன் தமிழ் போஸ்டர் ஒட்டிய போதும் அந்தச்சிறுவன் சிறுவன் தான்..அதே அறியாத வயது தான்.. ஹிஹி அடியேன் தான்..

    படம் ஆ கலே லக் ஜா (தமிழில் அணைக்கவே அழைக்கிறேன் என்று போட்டிருப்பார்கள்) தமிழில் தெரியுமே ந.தி யின் உத்தமன்.. நியூ சினிமா..

    படம் பார்த்த போது வெகு குட்டிக் கண்ணாவிற்கொன்றும் தெரியாதாக்கும்.. ஆனால் குமுதம் விமர்சனம் மட்டும் நினைவிருக்கிறது.. என்னது உடல் சூடா.. க்ரீன் ரொம்ப க்ரீன் என்பது போல் எழுதியிருந்தார்கள்.

    ஆக செந்தில்வேல் உங்கள் அர்த்தம் புரியாத பாட்டுப் பற்றிச் சொல்லவேண்டுமானால் வாலி பற்றிச் சொல்ல வேண்டும்..

    வாலியா கேட்ட பாட்டு கண்ணதாசனோடதுன்னா எனத் திகைப்பது புரிகிறது..

    வாலிப வாலி புத்தகத்திலா வேறெங்காவதா என நினைவிலில்லை..வாலியிடம் கேட்கப்பட்ட கேள்வி…வானமெனும் வீதியிலேயும் எழுதறீங்க அல்லா அல்லான்னும் எழுதியிருக்கீங்க முகுந்தாமுகுந்தாவும் எழுதறீங்க..எப்ப்பூடி…

    அதாவது நான் ஹிந்து தான்..பாடல் எழுதுவது தொழில்..அவர்கள் படத்தில் வரும் சமயம் சொல்லிக் கேட்க அந்த சமயத்திற்கு த் தக்கபடி எழுதுகிறேன் என்றிருப்பார் சிலேடையாக…

    அதே மாதிரிதான் இங்கேயும்..

    நீங்கள் கேட்ட பாடல் கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ வில் வரும் வரிகள்…அதைப்பற்றிச் சொல்லவேண்டுமானால் படத்தின் கதையைப் பற்றிச் சொல்ல வேண்டும்..(”போச்சுடா:… ”ஹலோ யார் அங்க குரல் விடறது!”)
    *
    டார்ஜிலீங்க்கில் இருக்கும் சசிகபூருக்கு ஷர்மிளா மீது காதல் வருகிறது.. என்ன செய்ய இளமை இன்னபிற ஹார்மோன்கள் செய்யும் வேலை..
    ஷர்மிளாவோ டாக்டருக்குப் படிப்பவர்.. பை சான்ஸ் சசிகபூர் ஷர்மிளா ட்ரெய்னிங்க் பெறும் ஹாஸ்பிடலில் மருத்துவப் படிப்பிற்காக ஐஸ்கட்டியில் படுக்கும் மாடலாக ஒரு நாள் இருக்க அங்கு படக்கதைக்குத் தேவையான பாடமும் கிடைக்கிறது..

    சூழ் நிலையில் ஷர்மிளாவிற்கும் காதல் வந்து பனிக்கட்டிகளிடை டூயட் பாடித் திரிய பனிக்குள் விழுந்துவிடுகிறார் ஷர்மிளா..

    அந்தக் குடிசையில் படுக்கவைக்கப் பட்ட ஷர்மிளாவிற்குக் குளிரில் அவயவங்களில் உள்ள அனைத்துசெல்களும் நடுக்கிக் கொண்டிருக்க, ஹாஸ்பிடலில் கற்ற பாடத்தை நினைவு கூர்ந்து சசிகபூர் ஷர்மியிடம் படித்துக் காப்பாற்றுகிறார் அவரை..

    பின் என்ன.. ஷர்மியின் பணக்கார அப்பாவிற்கு இது பிடிக்காமல் சதி செய்ய சசிகபூர் மனம் நொந்து போகிறார்..
    ஆனால் ஷர்மியின் வயிற்றிலோ குழந்தை வளர, அதைக் கண்டிப்பாக பெற்று தான் ஆகவேண்டும் இல்லையென்றால் ஷர்மியின் உயிருக்கே ஆபத்து என்று டாக்டர் சொல்லிவிட ஷர்மியும் ஃபுல் ப்ளெட்ஜ்ட் தாயாகி குழந்தையைப் பெற மறுபடியும் ஷர்மியின் தந்தையின் சதி.. குழந்தை இறந்தே பிறந்தது என்று சொல்லி ஷர்மியை சமாதானப் படுத்தி விடுகிறார்..
    ஆனால் விதி வசத்தால் அந்தக் குழந்தையை சசிகபூரே வளர்க்கிறார்..இறுதியில் குழந்தை வளர்ந்து ஐந்தாறு வயதாகும் போது ஷர்மியைச் சந்திக்க பின் என்ன ஆனது..

    மீதியை வெண் திரையில் காண்க !

    ஹிஹி..இது ஆகலே லக்ஜா பாட்டுப்புத்தகத்தில் ஹிந்தியில் இருந்த கதை என்றால் நம்பவா போகிறீர்கள் (இது கூட கொஞ்சம் நினைவிலிருந்து எழுதுகிறேன்.. அதுவும் தமிழ் உத்தமன் பார்த்து வெகு நாட்களாகிவிட்டது)

    சசிகபூர் நடித்த இடத்தில் ந.தி. இளமை இளமை.. ஷர்மிளா டாகூருக்கு மஞ்ச்சு.ளா.. அவ்வளவுதான் அதே கதை தான் தமிழிலும்..

    எனில்…
    மஞ்சுளா எழுதியதாக ச் சொல்லப்படும் ஒரு கடிதத்தை ப் படித்து மனம் நொந்து போகிறார் ந.தி..பின் அந்தக் குழந்தையை வேண்டாம் என்று மஞ்சுவே சொல்லிவிட்டார் எனக் கேள்வியும் பட மனசில் புகுகிறதுஅலையென விரக்தி ..ஐ திங்க் இடையில் அவரது அம்மாவாக பண்டரிபாய் அவரும் இறந்து விடுவார் என நினைக்கிறேன்..

    ஸோ இப்படிப் பட்ட சூழ் நிலையில் கண்ணதாசன் உண்டு ந.தி உண்டு டி.எம்.எஸ் உண்டு கேவிஎம் உண்டு..என்ன செய்யலாம்..ஸோலோ சோகம்
    அதைத்தான் செய்தார்கள்..

    விரக்தி மன நிலை வெறித்த பார்வை நல்ல சஃபாரி டிரஸ்ஸூடன் ந.தி சோகமே உருவாய் நடக்க நடக்க..
    என்ன சிச்சுவேஷன்னா இதான் கதை ஓய் என க் கண்ணதாசனிடம் சொல்லியிருப்பார்கள் போல வரிகள் வந்து விழுந்திருக்கிற்து கவியரசருக்கு

    கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ
    நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ
    நிம்மதியை தாரீரோ

    ”சரீங்க கவிஞரே ஜோரா இருக்கு அப்புறம்.”.

    ”வாங்கிக்கோங்க மாமா”

    ”கேவிஎம்.. உங்களுக்கும் நான் மாமா தானா”

    கவியரசர் சிரித்து…

    கவியுரைத்த கற்பனை போல் கை பிடித்த பூங்கொடியாள்
    பொய்யுரைத்த கவிதையை போல்
    போன கதை என்ன சொல்வேன்
    சிலை வடிக்க கல்லெடுத்தேன்
    சிற்றுளியால் செதுக்கி வைத்தேன்
    சிலை வடித்து முடியும் முன்னே
    தலை வெடித்து போனதம்மா

    “வெய்ட் வெய்ட் கவிஞரே”

    என்ன மாமா..ஃப்ளோ வந்துக்கிட்டிருக்குல்ல..இரு முடிச்சுடறேன்..
    எனகோபமாகச் சொல்லி

    ஆடியிலே காற்றடித்தால் ஆயிரமாய் இலையுதிரும்
    ஐப்பசியில் மழை பொழிந்தால்
    அத்தனையும் தழைத்து வரும்
    ஆடியிலே காற்றடித்தால் ஆயிரமாய் இலையுதிரும்
    ஐப்பசியில் மழை பொழிந்தால் அத்தனையும் தழைத்து வரும்
    அவள் ஆடி வர பார்த்திருந்தேன் ஆடி வந்து சேர்ந்ததம்மா
    ஐப்பசிக்கு காத்திருந்தேன் எப்பசியும் தீரவில்லை

    என மீதிவரிகளை முடித்து “இப்பக் கேளுங்க”

    “சாரி.. கோச்சுக்காதேயும்.. அதுல பாருங்கோ கவியுரைத்த கற்பனை போல் கை பிடித்த பூங்கொடியாள்
    பொய்யுரைத்த கவிதையை போல்
    போன கதை என்ன சொல்வேன்.. அர்த்தம் புரியலீங்க்ணா..(பிற்காலத்துல இதையே ஒருவர் இன்னொரு குட்டிக்கண்ணா கிட்ட கேட்டு அவன் தலையைப் பிச்சுப்பானாக்கும்.). எனில் சொல்றீங்களா..

    கவியரசர். “ராஜேந்திரா (ராஜேந்திர பிரசாத்) இங்க வாப்பா.. நீ என்ன சொன்ன.. இளைஞன் அழகன். தான் ஹீரோ.. இளைஞி அழகி தான் ஹீரோயினி..காலத்தில மொதல்ல மனசாலயும் அப்புறம் உடலாலையும் அறிஞ்சுக்கறாங்க.. விதியாய் ஹீரோயினோட அப்பா பிரிச்சு வச்சுடறார் இல்லியா

    சரி.. வரிக்கு வரலாம்.. இதெல்லாம் சினிமா கதைல்லதான் நடக்குமோன்னோ.. கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா அழகான கவிதையில் வர்ற கற்பனை கொஞ்சம் தூக்கலாத் தான் இருக்குமோன்னோ..

    அவிழ்ந்து மலர்ந்திடும் அல்லிபோல் இங்கே
    கவிதை உருவாகும் காண்..

    அந்த மாதிரி விரக்தில அவ விட்டுட்டுப் போய்ட்டான்னு ஃபீலிங்க்ல பாடற ஹீரோக்குத் தோணுது..
    அழகான கவிதைக் கற்பனை மாதிரி இந்தப் பொண்ணு என்னைக் கைப்பிடிச்சது.. அப்புறம் என்ன பண்ணிச்சு ஒரு லெட்டர் ஈவிரக்கமில்லாத லெட்டர் குடுத்து உன்னை எனக்குப் பிடிக்கலைங்கற மாதிரி எழுதி வச்சுட்டுப் போய்டுச்சு இல்லையா.

    கண்களில் விழுந்து பின்னர்
    …கனவிலே ஊடி மேலும
    வண்ணமாய்க் கொஞ்சி வந்தாள்
    …வார்த்தைகள் தந்து நின்றாள்
    கன்னமும் பூத்து நிற்க
    …காரிகை காத லாகி
    திண்ணமாய் என்னைக் கொண்டாள்
    …தெளிவினை எனக்குத் தந்தாள்..


    என்னதான் மாயம் தானோ
    …ஏதிலும் அறிகி லேனே
    கண்ணுளே முள்ளை வைத்து
    …காற்றிலே ஏகி விட்டாள்
    நுண்ணிய உணர்வு எல்லாம்
    … நெகிழ்ந்துதான் மரத்த தய்யா
    எண்ணமோ கலங்கு தய்யா
    .. என்னநான் செய்வேன் இன்று

    அப்படின்னு புலம்பிக்கிட்டிருக்கான் இல்லியா...

    அதான் கவியுரைத்த கற்பனை போல் என்னைக் கைப்பிடித்த இந்தப் பூங்கொடிபோன்ற நளினமான வண்ணமயமான இந்தப் பொண்ணு டபக்குனு மெட்றாஸ் பாஷைல பால் மார்றதுன்னு சொல்வாங்க அந்த மாதிரி அவளோட லவ்லாம் பொய்னு சொல்லிட்டுப் போய்ட்டா..

    பட் அவ சொன்னதே பொய் தான்..அவமனசை அவளே ஏமாத்திக்கிட்டா..அப்படிப் பட்ட கதையை நான் எப்படிச் சொல்வேன்..

    இப்பத்திருப்பிச் சொல்லிப் பாரு..

    கவியுரைத்த கற்பனை போல் கை பிடித்த பூங்கொடியாள்
    பொய்யுரைத்த கவிதையை போல்
    போன கதை என்ன சொல்வேன்..

    சரியா இருக்கா.. இரு இரு..ஏதும் பேசாதே இன்னொரு ஸ்டான்ஸாவும் போட்டுடலாம்..பஞ்ச்சு எடு பேனாவை..

    காயமொன்று நீ கொடுத்தாய் காய்ந்த வடு நீங்கவில்லை
    காய்ந்த வடு ஆறுதற்கோ கை தவழும் சேய் கொடுத்தாய்
    உன் கதையை நான் எழுத உயிரை வைத்து காத்திருந்தேன்
    என் கதையை நீ எழுதி ஏடுகளை ம றைத்து விட்டாய்

    எப்படி இருக்கு மாமா..புரியுதா.. எக்ஸ்ப்ளனேஷன் பண்ணனுமா..

    “கவிஞரே நான் என்னத்தைச் சொல்ல இதைவிட சிறப்பா அந்தக் காதலனோட வேதனையைச் சொல்ல முடியாதுங்காணும்..ரொம்பத் தாங்க்ஸு.. மன்னிச்சுக்கோங்கோ கேள்வி கேட்டதுக்கு..

    அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் நீ பாட்டை ஜோராப் போடு..
    எனச் சொல்லி வந்த பாடல் தான் கனவுகளே கனவுகளே ( என் கற்பனையூரில் நடந்த உரையாடல் மேற்கண்டது.சுமாரான விருத்தம் அடியேனோடது...)

    *

    உத்தமனில் ந.தி ஜோர்.. வெகு இளமை.. இனிய நடிப்பு.. சசிகபூரெல்லாம் ஒட்டவே இல்லை (ஆகலேலக்ஜா படம் பார்க்கவில்லை பாடல்கள் மட்டும் பார்த்திருக்கிறேன் முன்பும் இப்போதும்).. ஹிந்திப் படப் பாடல்களை விட இந்தப் படப் பாடல்கள் ஜோர்.. ஆனால் என்னமோ ஷர்மி கொஞ்சம்கூடுதல் அழகாக இருப்பதுபோல் இப்போது படுகிறது ( நெய்வேலி திட்டப் போகுது!)

    பாடல்களில் படகு படகு ஆசைப்படகு, தேவன் வந்தாண்டி ரொம்பப் பிடிக்கும்..ஏ மேரே பேட்டே யை கேளாய் மகனே கேளொரு வார்த்தை என்று மாற்றியிருப்பார்கள் மற்றதெல்லாம் ஒரிஜினல்..ஹரிஓம் ரங்க ஹரியும் நாளை நாளை என்றிருந்தேனும் அழகுதான்..கனவுகளே கனவுகளேயும்..




    .

    படகுபடகு ஹிந்தியில் மெலடி…போட்டிப் பாடலைப் போல.. தமிழிலும் தான் பட் கதைகளுடன்..பிற்காலத்தில் இருவரும் பிரியப் போகிறார்கள் என மனதில் வைத்து..வெகு அழகான ஃபாஸ்ட் சாங்க் நடுவில் கொஞ்சம் உள்ளே போய் பின் மறுபடி ஃபாஸ்ட் ஆகும்..






    இவ்வளவு சொல்லிவிட்டு தமிழில்மிக ச் சிறப்பாகவும் அழகாகவும் இருக்கும் தேவன் வந்தாண்டி பாட் சொல்லவில்லை என்றால் சாமி கண்ணைக் குத்தும்..



    தேவன் வந்தாண்டி ஒரு தீபம்கொண்டாடி..

    இமயமலைச் சாரலுக்கு நன்றி சொல்லடி யார்க்கும்
    இந்தவகை முதலிரவு வந்ததல்லடி…
    கொஞ்சம் உள்ளாழ்ந்து வரிகள் கவனித்தால் கவிஞர் குறும்பாய் வார்த்தைகளில் விளையாடி இருப்பார்.. ந.தி மஞ்சுளா மேட்சிங்க் ட்ரஸ் லொகேஷன்.. மனதை அள்ளும்..

    அதனால் முடிக்கறச்சே என்ன சொல்லலாம்னாக்க

    செந்தில்வேல் குமரனுக்கு நன்றி சொல்லடி.. ( வாசக தோஷஷந்தவ்யக )

    அப்புறம் வாரேன்..
    Last edited by chinnakkannan; 8th April 2016 at 10:00 AM.

  13. #2208
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Bhakthi from a Sivaji Ganesan movie

    From Veera Pandiya Kattabomman

    vetri vadivelane ........

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  14. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  15. #2209
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    "ரொம்ப ரசிக்கும்படியா சொல்லி கடசில
    சொல்ல வந்த விஷயத்தை சுவராஸ்யமாசொல்லி "
    சின்னக்கண்ணன் சார்
    அருமையாக இருந்தது.
    No doubt
    Last edited by senthilvel; 6th April 2016 at 05:59 PM.

  16. Likes madhu liked this post
  17. #2210
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    புரியலை..போர் அடிச்சுட்டேனா வளவளான்னு இருக்கா.. அந்த த் தமிழ்வாத்தியாரே பெட்டர்ப்பா வா.. ம்ம் இந்தாள் ரைட் அப் ப ப் படிக்கல்லாம் வாணாம் வீடியோ மட்டும் பாத்துக்குவோம் அவருக்குத் தெரியவா போகுதுங்கற ஃபீலிங்க்கா.. என்னமோ போங்க அண்ட் வெரி இன் டரஸ்டிங்க் சொன்னதுக்கு ரொம்ப நன்றி..

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •