Page 214 of 337 FirstFirst ... 114164204212213214215216224264314 ... LastLast
Results 2,131 to 2,140 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2131
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Congratulations to P. Susheela!

    Here's a song from Dasari Narayana Rao's 1982 Telugu movie MEGHASANDESAM, composed by
    Ramesh Naidu, and for which Susheela won the National Award for Best Female Vocalist...


  2. Likes Russellmai, madhu liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2132
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    engeyum eppodhum PS mayam.... maayam...

    mm.. RDji... Is it not "Priye charuseele" which got the National award in Mega sandhesam ? ( I may be wrong )

  5. #2133
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    உன்னை கண் தேடுதே
    உன் எழில் காணவே உளம் நாடுதே
    உறங்காமலே என் மனம் வாடுதே

    எழில் ராணி போலே எனை காண்பதாலே
    ஜகமே என் காலில் சுழன்றாடுதே பார்
    ஜகமே என் காலில் சுழன்றாடுதே
    எனதாவல் யாவுமே நிறைவேறும் திண்ணமே



    ராஜ் ராஜ் சாருக்கு ரொம்ப்பப் பிடிச்ச பாட்டாம்..யாரோ சொன்னாங்க.. ( கண்ணா உனக்கு ரொம்ப வம்பு )

  6. Thanks eehaiupehazij thanked for this post
  7. #2134
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    engeyum eppodhum PS mayam.... maayam...

    mm.. RDji... Is it not "Priye charuseele" which got the National award in Mega sandhesam ? ( I may be wrong )
    Madhuji: You and me both may be wrong! The citation on P. Susheela's award that year was: "For her immense contribution to the musical excellence of the film." In other words, the award was for her overall singing in the movie and not for a specific song. All the music awards that year went to MEGHASANDESAM. Yesudas's citation was: "For his rich contribution to the musical element of the film." ; and for Ramesh Naidu, it was: "For his use of classical music to enhance the aesthetic quality of the film." By the way, "priyE chaaruseelE..." in this movie was a duet.

    (Sorry for the digression)

  8. #2135
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by raagadevan View Post
    Madhuji: You and me both may be wrong! The citation on P. Susheela's award that year was: "For her immense contribution to the musical excellence of the film." In other words, the award was for her overall singing in the movie and not for a specific song. All the music awards that year went to MEGHASANDESAM. Yesudas's citation was: "For his rich contribution to the musical element of the film." ; and for Ramesh Naidu, it was: "For his use of classical music to enhance the aesthetic quality of the film." By the way, "priyE chaaruseelE..." in this movie was a duet.

    (Sorry for the digression)
    Yes.. RD.. I too check with the Wiki.. But in P.S website its mentioned as Andhra state award for "aakulo aakunai" and National award for "priya charseele". mm... let me ask for explanation from the sources.

  9. #2136
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    உன்னை கண் தேடுதே

    ராஜ் ராஜ் சாருக்கு ரொம்ப்பப் பிடிச்ச பாட்டாம்..யாரோ சொன்னாங்க.. ( கண்ணா உனக்கு ரொம்ப வம்பு )
    சிக்கா... இந்தப் பாட்டில் வரும் விக்கல் மட்டும் பி.பானுமதியுடையதாம்... தெரியுமா ?

  10. Likes chinnakkannan, vasudevan31355 liked this post
  11. #2137
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu


    திரையில் மிளிரும் வரிகள் 8 - காதல் கீதமா, குழந்தைப் பாடலா?

    பாரதியாரின் பாடல்கள் திரைப்படங்களில் காலங்காலமாக இடம் பெற்றுவந்தாலும் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடலுக்கு இணையான புகழை வேறு எந்தப் பாடலும் பெற்றுவிடவில்லை எனலாம். இசையறிவு இல்லாதவர்கள்கூட அப்பாடலின் மெட்டைச் சட்டென அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

    இப்பாடலைப் பொறுத்தவரை பாரதியார் பைரவி ராகத்தில்தான் மெட்டமைத்துள்ளதாக பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதன் தெரிவிக்கிறார். ஆனால், இன்று வழக்கத்தில் இருக்கும் ராகமாலிகை மெட்டை அமைத்தவர் திரைப்பட இசையமைப்பாளர் சி.ஆர். சுப்பாராமன். ‘மணமகள்’ படத்தில் இப்பாடல் இடம் பெற்றது. கண்ணனைக் குழந்தையாக்கிக் கொஞ்சும் தொனியில் அமைந்த இப்பாடலின் கடைசி சரணத்தைக் காதலை வெளிப்படுத்தும் வகையில் சுப்பாராமன் அமைத்திருந்தார். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தயாரித்த இப்படத்துக்கு திமுக தலைவர் கருணாநிதிதான் வசனம்.

    பாடல் காட்சியில் பத்மினியும் லலிதாவும் டி.எஸ். பாலையாவும் நடித்திருக்கிறார்கள். அதன் பிறகு இப்பாடல் காதல் கீதமாகவே மாறிவிட்டது. “கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி” என்னும் வரிகளை மனதுக்குள் பாடிப் பார்க்காத காதலர்கள் யார் இருக்கிறார்கள்?

    இது போலத்தான் பாரதிதாசன் எழுதிய ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா?’ என்ற தேஷ் ராகப் பாடலும் குழந்தைக்காக எழுதப் பட்டு ‘ஓர் இரவு’ திரைப்படத்தில் காதல் பாடலாக மாறிவிட்டது.

    ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ காபி ராகத்தில் தொடங்கி, ‘ஓடி வருகையிலே கண்ணம்மா’வில் மாண்டுக்கு மாறுகிறது. ‘உச்சிதனை முகர்ந்தால்’ வசந்தாவில் ஒலிக்கிறது. ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ வரிகள் திலங்குக்கு மாறுகின்றன. ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ வரிகள் உருக்கத்தை வெளிப்படுத்தும் நீலமணியில் ஒலிக்கின்றன. திரைப்படத்திலும் பின்னர் கச்சேரி மேடைகளிலும் பாடிப் பிரபலப் படுத்தியவர் எம்.எல். வசந்தகுமாரி. கடைசி சரணத்தை ஆண் குரலில் வி.என். சுந்தரம் பாடினார். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் “வெற்றிவடிவேலனே சக்தி உமைபாலனே” என்ற தொகையறாவைப் பாடியவர் சுந்தரம். இப்பாடலை நாகசுரக் கலைஞர் காருக்குறிச்சி அருணாசலம் வாசித்ததும் அதற்கு இன்னொரு பரிமாணம் கிடைத்தது.

    ‘தில்லானா மோகனாம்பாள்’ படம் உருவானபோது தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் சண்முகசுந்தரமும் மோகனாவும் சந்திக்கும் காட்சியில் “சண்முசுந்தரம் மோகனாவை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து ஒப்படைக்க வேண்டிய இடத்தில் ஒப்படைத்துவிட்டேன்” என்று பரேதசியாக நடிக்கும் எஸ்.வி.சகஸ்ரநாமம் சொல்கிறார். மோகனாவின் கையைப் பிடித்துப் பெட்டியில் ஏற்றுகையில் பின்னணியில் ‘சின்னஞ்சிறு கிளியே’ கண்ணம்மாவே ஒலிக்கிறது. ஆயிரம் வார்த்தைகளைக் கொட்டி எழுதினாலும் சொல்ல முடியாத உணர்வுகளை அந்த மெட்டு வெளிப்படுத்துகிறது.

    சென்னையின் திரைப்படத் துறை குறித்து பிரெஞ்சு மொழியில் உருவாகியுள்ள ஆவணப்படத்தில் ‘தில்லானா மோகனாம்பாள்’ படம் உருவாக்கப்பட்ட காட்சியும் இடம்பெற்றுள்ளது. திருவாரூரில் மோகனாம்பாளின் வீட்டுக்கு வெளியே அமர்ந்து சண்முகசுந்தரமும் குழுவினரும் வாசிப்பது போன்ற காட்சி. வாசிக்கும் பாட்டு ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’தான். ‘என் கண்ணில் பாவையன்றோ’ என்ற வரிகளை முதலில் சிவாஜி கணேசன் வாசிப்பது போன்ற காட்சி.

    பின்னர் திரைப்பட இயக்குநரான ஏ.பி. நாகராஜன் “அங்கே பார்த்திட்டிருந்தீங்க. மோகனாவை” என்று சொல்லிவிட்டு, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ வரிகளைப் பாடிக் காட்டுகிறார்.

    1980-களில் எம்,எஸ். விஸ்வநாதன் இசையில் ‘நீதிக்குத் தண்டனை’ திரைப்படத்தில் வேறொரு மெட்டில் இப்பாடல் இடம் பெற்றது. கே.ஜே. யேசுதாசும் ஸ்வர்ணலதாவும் அற்புதமாகப் பாடியிருந்தாலும் தமிழர்களின் மண்டைக்குள் ‘சின்னஞ்சிறு கிளியே’ என்றாலே சி.ஆர். சுப்பாராமனின் மெட்டு மட்டுமே ஒலிக்கிறது.

    சமீபத்தில் ‘குற்றம் கடிதல்’ படத்தில் சேர்ந்திசையில் பியானோ ஒலிக்க, வரிக்கு வரி இப்பாடலைக் கச்சிதமாகப் படமாக்கியிருக்கிறார்கள். ‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ வரிகள் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு ஏற்படும் நெருக்கடியின்போது சற்றும் எரிச்சலடையாமல், நிதானம் இழக்காமல், விட்டுக்கொடுக்காமல் அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் கணவன் மணிகண்டனைப் போல் கணவனைப் பெற்றிருக்கும் பெண்கள் பாக்கியவதிகள்தான்.

  12. Likes Russellmai liked this post
  13. #2138
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    மறக்கப்பட்ட நடிகர்கள் 4: வெண்கலக் குரல் வித்தகர்! - ஓ.ஏ.கே. தேவர்


    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள ஒத்தப்பட்டி கிராமம்தான் ஒ.ஏ.கே. தேவரின் பூர்வீகம். பெற்றோர் இட்ட பெயர் கருப்புத் தேவர். பள்ளிக்கூடத்தில் மற்றொரு கருப்பு இருந்ததால் ‘ஒத்தப்பட்டி ஐயத் தேவர் மகன் கருப்புத் தேவர்’ என்பதைச் சுருக்கி ஆசிரியர் வைத்த பெயர்தான் ஓ.ஏ.கே. தேவர். மதிய உணவு இடைவேளையில் நாடகப் பாடல்களைப் பாடுவதிலும் நீளமான வசனங்களைக் கணீர்க் குரலில் பேசுவதிலும் சிறந்து விளங்கினார்.

    இதைக் கருப்புத் தேவரின் தந்தையிடம் பள்ளி வாத்தியார் பெருமையாகச் சொல்லிவிட்டுப்போக, கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார் ஐயத் தேவர். “இவனை இப்படியே விட்டா கூத்தாடிப் பயலா போயிடுவான். நாட்டுக்கு எந்தப் பிரயோசனமும் இருக்காது” என்று கூறி, பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஊர் வழக்கப்படி மகனை ராணுவத்தில் சேர்த்துவிட்டார் ஐயத் தேவர்.

    தந்தையின் சொல்லை மதித்து 17 வயதில் ராணுவத்தில் சேர்ந்தவர், அங்கேயும் பாட்டுப் பாடி, நடித்துக்காட்டி சக ராணுவ வீரர்களைச் சந்தோஷப்படுத்த, ஓ.ஏ.கே. வேலை செய்த சவுத் பட்டாலியன் முழுவதும் பிரபலமானார். நான்கு ஆண்டுகள் ராணுவச் சேவையை முடிந்திருந்த நிலையில் தந்தையார் இறந்த செய்தி தந்தியாக வர, அப்போது ஊருக்கு வந்தவர், திரும்பவும் தனது முகாமுக்குத் திரும்பவில்லை. நாடகம் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டது.

    சக்தி நாடக சபாவின் மாணவர்

    திருச்சியில் முகாமிட்டிருந்த ‘சக்தி நாடக சபா'வின்’ ‘கவியின் கனவு’ நாடகத்துக்குச் சென்றார் தேவர். நாடகம் முடிந்ததும், சபாவின் முதலாளி, சீர்திருத்த நாடகங்களின் சிற்பியாகக் கொண்டாடப்பட்ட ‘சக்தி’ டி.கே. கிருஷ்ணசாமியைச் சந்தித்தார்.

    ‘கவியின் கனவு’ நாடகத்தை தேவர் பார்ப்பது இது முதல்முறையல்ல; 25-வது முறை. சர்வாதிகாரியை எதிர்த்துக் கதையின் நாயகன் பேசும் வசனங்களை, கிருஷ்ணசாமியின் முன்னால் அட்சரம் பிசகாமல் கணீர்க் குரலில் தேவர் பேசிக்காட்ட, “ உன் ரத்தத்தில் நடிப்பு ஓடுகிறதடா!” என்று கிருஷ்ணசாமியிடமே பாராட்டு பெற்றார். கையோடு தனது சபாவிலும் சேர்த்துக்கொண்டார். எந்த நாடகத்தை நேசித்தாரோ அதே நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் தேவர். அப்படிப்பட்ட சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா உள்ளிட்ட பலர் நடிகர்களாக இருந்தனர்.

    ‘கவியின் கனவு’ நாடகத்தில் ராஜகுருவாக நடித்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கி நண்பரானார்.

    நாடக சபாவிலிருந்து மாடர்ன் தியேட்டர்

    சக்தி நாடக சபாவில் சில ஆண்டுகளைக் கழித்த தேவருக்கு, அதன் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த் திரைப்படமாகிவந்த நிலையில், தனது சக நடிகர்களைப் போல் தனக்கும் சினிமா வாய்ப்புகள் அமையும் என்று எதிர்பார்த்தார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சேலத்திலிருந்து சென்னை திரும்பினார். உயிர் நண்பரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுகொள்ள புதுச்சேரி சென்று ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டார்.

    நண்பரைப் பிரிந்த தேவர், சென்னையில் எங்கே சென்று தங்குவது என்று தெரியாமல் பகல் முழுவதும் கீழ்ப்பாக்கம் ஸ்டூடியோக்களில் சுற்றித்திரிந்துவிட்டு, இரவில் மெரீனா கடற்கரையில் படுத்துறங்குவதை வழக்கமாகக் கொண்டார். கடற்கரையில் உறங்கினாலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அதிகாலையில் எழுந்து குஸ்தியும் சிலம்பமும் விளையாடுவார்.

    இதனால் தேவருக்குக் கடற்கரையில் நண்பர்கள் கிடைத்தார்கள். தினசரி கடற்கரைக்கு நடைப்பயிற்சிக்கு வரும் என்.எஸ். கிருஷ்ணனைச் சந்தித்தார். தேவரின் வாட்டசாட்டமான உடல்வாகையும் தமிழ் உச்சரிப்பையும் கண்ட கலைவாணர், அவரை சேலம் வரச்செய்து மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் மாதம் 10 ரூபாய் சம்பளத்துக்கு கம்பெனி நடிகராகச் சேர்த்துவிட்டார். அங்கே 100 ரூபாய் மாதச் சம்பளம் பெறும் துணை நடிகராக உயர்ந்தாலும் உருப்படியான வேடங்கள் எதுவும் அமையாததால் மார்டன் தியேட்டரை விட்டு விலகி வெளியே வந்தார் தேவர்.

    மீண்டும் சென்னைக்கு வந்தவரை அரவணைத்துக்கொண்டார் உயிர் நண்பரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெருவில் கதவெண் 10-ல், ஐந்து ரூபாய் வாடகைக்கு ஒர் அறையை எடுத்துத் தங்கிக்கொண்டு, சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தார்கள். இவர்கள் இருவருடனும் மூன்றாவதாக இதே அறையில் வந்து சேர்ந்தார் ஓவியர் ராமச்சந்திரன்.

    ரோஷத்துடன் மார்டன் தியேட்டரை விட்டு, வந்துவிட்டாலும் உடனடியாகத் துணை நடிகர் வாய்ப்பு கூட கிடைக்காத நிலை. பட்டுக்கோட்டைக்கும் வாய்ப்புகள் இல்லாமல் சாப்பாட்டுக்கே திண்டாடினார்கள். தேர்ந்த ஓவியரான ராமச்சந்திரன், சினிமா செட் வேலைகளுக்குப் போய் வந்துகொண்டிருந்தார். அவர் வாங்கிவரும் வாரக் கூலிதான் நடிகரையும் கவிஞரையும் காப்பாற்றிவந்தது. ஒரு சூழ்நிலையில் ஓவியருக்கும் சம்பள பாக்கி விழ, பல நாட்கள் பட்டினியாகவே ஓடியிருக்கின்றன.

    பசி தாள முடியாத நண்பர்கள், வீட்டு உரிமையாளரின் துணைவியாரிடம் சட்டைக்குக் கஞ்சி போட வேண்டும் என்று கூறி அரிசிச் சோறு வடித்த கஞ்சியை வாங்கிவந்து உப்பு போட்டுப் பருகிப் பசி தீர்த்திருக்கிறார்கள். இந்த இக்கட்டான நிலை ஓவியர் ராமச்சந்திரன் மூலம் கலைவாணருக்குத் தெரிய, தேவரை உடனே அழைத்துவரும்படி ஆள் அனுப்பினார்.

    கைகொடுத்த கலைவாணர்

    திறமையானவர்களைக் கைதூக்கிவிடுவதிலும் கையில் இருக்கும் அனைத்தையும் அள்ளிக் கொடுப்பதிலும் பெயர் பெற்ற வள்ளலாக விளங்கிய கலைவாணர், அப்போது பிரபல எடிட்டர் ஆர்.எஸ். மணி தயாரித்து இயக்கிய ‘மாமன் மகள்’(1950) படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஓ.ஏ.கே. தேவருக்குப் பெற்றுக் கொடுத்தார். வீராசாமி என்ற அடியாளாக நடித்தாலும் அந்தப் படத்தின் மூலம் பளிச்சென்று அடையாளம் கிடைத்தது தேவருக்கு.

    அந்தப் படத்தில் ஏற்ற கதாபாத்திரம் காரணமாக தேவருக்கு எதிர்மறைக் கதாபாத்திரங்களே அமைய, மறுபடியும் கலைவாணரிடம் வந்து நின்றார் தேவர். அப்போது ‘மதுரை வீரன்’ படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. எம்.ஜி.ஆரிடம் எடுத்துச் சொல்லி ‘மதுரை வீரன்’ படத்தில் திருமலை நாயக்கர் மன்னன் வேடத்தை தேவருக்கு வாங்கிக் கொடுத்தார் கலைவாணர். திருமலை மன்னராக வெண்கலக் குரலில் தேவர் பேசி நடிக்க, மதுரை வீரனின் பெரிய வெற்றி தேவரைப் பிரபலப்படுத்தியது.

    எம்.ஜி.ஆருடன் நெருக்கமான நட்பும் உருவானது. எம்.ஜி.ஆர் படங்களில் அடுத்தடுத்து இடம்பெறத் தொடங்கியதும் சிவாஜி நடிக்கும் படங்களுக்கும் அழைப்புகள் குவிந்தன. இருபெரும் கதாநாயகர்களின் படங்களில் மாறி நடிக்க ஆரம்பித்த தேவரின் நடிப்பு சிவாஜிக்குப் பிடித்துப்போக, தனது சொந்த நாடக மன்றமான சிவாஜி நாடக மன்றத்தில் மிகப் பெரிய இடம்கொடுத்தார் சிவாஜி. சிவாஜியுடன் திரையில் நடிக்கும் அதேநேரம் நாடகமேடையிலும் வெளுத்துக்கட்டினார் தேவர்.

    அன்று இரக்கமில்லாத வில்லன் கதாபாத்திரங்கள் என்றால் எம். என். நம்பியார், பி.எஸ்.வீரப்பா, டி.எஸ். பாலைய்யா ஆகிய மூன்று நட்சத்திரங்கள்தான் ரசிகர்கள் மனதில் நின்றார்கள். அதை மாற்றிக்காட்டியது 1957-ல் வெளியான ‘மகாதேவி’. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். பி.எஸ். வீரப்பாவுடன் இணைந்து நடித்தார்.

    “வாள் பிடிக்கத்தெரியாத பேடியிடம் போய்ச் சொல் இந்த வார்த்தையை” என்ற தேவர் பேசிய வசனமும் அவரது நவரச நடிப்பும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக மிரட்டலான வில்லன் நடிகராக எழுந்து நின்றார் ஓ.ஏ.கே.தேவர். அவரது அடையாளம் வில்லன் நடிப்பு மட்டும்தானா? அவரது திரையுலகப் பயணத்தின் சுவடுகள் நிறைவுப் பகுதியாக அடுத்த வாரம்.

  14. Likes vasudevan31355 liked this post
  15. #2139
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சுசீலாம்மமா பாடல்களில் என்னுள் முதல் இடத்தைப் பிடித்த பாடல் இந்தப் பாடல்தான். இதை பலமுறை சொல்லியிருக்கிறேன். இந்தப் பாடலில் அவர் தரும் வைப்ரேஷன்கள் தெளிந்த குளத்தில் கல்லெறிந்தால் தோன்றும் அதிர்வலைகளை ஒப்பும்.



    இந்தப் பாடல் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தை சொல்லி மாளாது. படத்தில் இப்பாடல் இல்லாமல் போனாலும் 'யூ டியூபி'ல் 'அம்மம்மா.... காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்' பாடலுக்கு பதிலாக 'ரீமிக்ஸ்' காட்சியாகிறது. பார்க்க நன்றாகவே பொருத்தமாக இருக்கிறது. ஆனாலும் காதலின் வேதனை நெஞ்சில் கனலாய் வீச, விரசமின்றி, விரகதாபமின்றி, தூய காதலை மனதில் வைத்து நாயகி பாடும் இப்பாடலை அருவியில் குளிக்கும் மகிழ்ச்சிப் பாடலுக்கு ரீமிக்ஸ் செய்திருப்பது ....'அம்மம்மா'.... ரொம்பவே ....இடிக்கிறது. மாற்றம் செய்த நண்பருக்கு தொழில் நேர்த்திக்காக பாராட்டுக்கள். அப்படியே குட்டுக்களும், திட்டுக்களும்.

    'காதலைத் தேடி நான் அழுதேனோ... ஓ....ஓ...ஓ....ஓ....
    காரணத்தோடே நான் சிரித்தேனோ... ஓ....ஓ...ஓ....ஓ....

    அடடா! உயிரையே விலையாகத் தந்து விடலாம் கில்லாடி 'கின்னஸ்' ராணிக்கு.

    உன் குரல் கேட்கும் போது வேறு நினைவுகள் எமக்கேது?

    நடிகர் திலகமே தெய்வம்

  16. Thanks Russellmai thanked for this post
    Likes madhu, Russellmai liked this post
  17. #2140
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மது அண்ணாவிற்கு பாட்டு கொடுத்து நாளாச்சு....டெலிபோன் பண்ணியும் நாளாச்சு.... சரி! டெலிபோன் பெருமையை பேபி இந்திரா சௌகாருக்கு விளக்க கிடச்சுது அபூர்வ பாட்டு 'ஸ்கூல் மாஸ்டர்' பேராசிரியர் மூலமாக.


    'பார்த்தா சிறிசுதான் பாட்டி
    இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி
    காதோரம் மெல்ல மெல்ல மாட்டி
    சேதி தருவது இது செய்யும் பியூட்டி

    டில்லியும் பேசும் மதுரையும் பேசும்
    நேருக்கு நேராக
    தெரியாத ஆள் கூட அறிமுகமானங்க'

    Last edited by vasudevan31355; 2nd April 2016 at 12:59 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •