-
1st April 2016, 10:42 AM
#2121
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
1st April 2016 10:42 AM
# ADS
Circuit advertisement
-
1st April 2016, 11:09 AM
#2122
Senior Member
Diamond Hubber
மயக்கத்தைத் தந்தவர் யாரடி...
சுசீலா என்னும் சுகம்தானடி
'இசைக்குயிலி'ன் குரலில் இன்னொரு அதிசயம். பாடலுக்குத் தகுந்த 'கலைச்செல்வி'யின் பரவச ஆட்டம். 'காதலில் சிக்கிக் கொண்டு விடாதே' என்று தோழிக்கு ஹீரோயினின் அறிவுறுத்தல்.
'மயக்கத்தைத் தந்தவன் யாரடி?' என்று தோழியிடம் விசாரித்து,
'அழகென்று நினைத்து பழகிடும் போது அசடாய் இருந்தால் என்னாவது?' என்ற நியாயமான கேள்வியை அவள் முன் வைத்து,
'சொத்து, சுகக்காரன் மெத்தப் படித்தாலும் பித்துக்குளியானால் சுகமேதடி?' என்று 'ஜாக்கிரதை'அறிவுரை சொல்லும் அழகு. (இன்னா படிச்சு இன்னா பிரயோஜனம்....இந்த லூஸைப் போய்க் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டேனே!) (அதே சமயம் 'மறைவினில் நடந்தது என்னடி?' என்று நடந்ததை தோழியிடம் நைஸாகக் கேட்டு அறிந்து கொள்ளும் ஆர்வமும் இருப்பதை மறுப்பதற்கில்லை.
காதலைப் பற்றி.... அதில் மாட்டினால் படும் அவஸ்தையைப் பற்றி இந்த சாமர்த்தியசாலி சாதுர்ய நாயகி காதலிக்காமலே வெகு அழகாகத் தெரிந்து வைத்திருக்கிறாளே! (இதே நாயகி பின்னால் காதலில் விழுந்து, நாயகனுடன் 'பூமாலை சூட நல்ல நாள்' பார்க்க அவனிடம் சம்மதம் கேட்பது எந்த விதத்தில் நியாயம்?)
'ஒருநாள் பழக்கம்...மறுநாள் நெருக்கம்...உதவாது... வேலைக்கு ஆகாது... இதை அறியாயோ' என்று சிநேகிதியிடம் சிலிர்ப்பாகக் கேட்கிறாள் நம் நாயகி.
விட்டளா அத்துடன்?....
'கடற்கரை மணலில் வளர்கின்ற காதல் கல்யாணம் வரையில் போகாதடி' (அப்படிப்போடு...அந்தக் காலக் காதலும் பீச்சோடு போச்சா?)
'அடிக்கடித் துடிக்கும் அவசரக் காதல் உயிர் கொடுத்தாலும் தேறாதடி'
ம்...எப்படி?...எப்படி?.... அவசரக் காதலுக்கு இன்னா ஆக்ஸிஜன் கொடுத்தாலும் அது தேறாதாமே!
'முதலில் இனிக்கும்
முடிவில் கசக்கும்
இதுதான் காதல் வரலாரடி'
என்று 'லவ் ஹிஸ்டரி'யை பிய்த்து உதறுகிறாளே!
உண்மைதானே! இரண்டு நாட்கள் மட்டுமே இனித்து இல்லறம் முடிய கசக்கும் காதல்தானே! இவள் சொல்வதில் தவறென்ன?
சிக்கென்ற 'சுடி' யில் ஸ்லிம்மாக ஜெயலலிதா. என்னவொரு அழகு! குமாரின் இடையிசை கிடார் இனிமை ஒலிகளுக்கு ஜெயா அவர்களின் இடையசைவுகளும், கை கால் அசைவுகளும் களேபரம் புரிகின்றன. பாடலின் வரிகள் அர்த்தம் பொதிந்தவை என்று சந்தோஷிக்கும் போதே ஜெயாவின் நடனமும், அழகும், குதூகலமும் சேர்ந்து இன்னும் நமது சந்தோஷம் இரட்டிப்பாகிறது. இசைக்குயிலின் குரல் அந்த இரண்டு சந்தோஷங்களையும் மீறி 'நான் நான்தான்' என்று கொக்கரித்து நம்மை சந்தோஷ உச்சிக்கே தூக்கிச் செல்கிறது.
உடன் தோழி சச்சு. வழக்கமான முக்தாவின் படங்களின் நாயகி மற்றும் தோழி நெருக்கப் பாடல்களில் ஒன்று. எனக்கு மிக மிக நெருக்கமான பாடல்களிலும் ஒன்று. இதர பாடல்களால் நெருங்க முடியாத பாடல்களிலும் முதலிடப் பட்டியல்.
ஒவ்வொரு முறையும் புதிதாய் பிறந்த குழந்தையை அப்படியே அள்ளி அணைத்து மென்மையான மேன்மையான சுகத்தை அடைவோமே... அந்த மாதிரி இந்தப் பாடல் என்றும் இன்பப் பாடல்.
Last edited by vasudevan31355; 1st April 2016 at 11:12 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st April 2016, 11:10 AM
#2123
Senior Member
Senior Hubber
வாங்க வாங்க சிக்கலாரே..சுகமா இருக்கியளா..வாஸ்ஸூ எவ்ளோ நாளாச்சு ஓய் உம்மைப் பார்த்து.. ம்ம் பாலாடை பாட் கு தாங்க்ஸ் வாங்க வாங்க மேலும் தருக தருக..ஆமா இ.ஜோ ஸ்ரீ ரஞ்சனி பத்தி வியாசம்லாம் எழுதினீரா இல்லியா ( ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான் )
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
1st April 2016, 11:30 AM
#2124
Senior Member
Senior Hubber
இதயம் பொல்லாதது கண்ணெதிரே பெண்ணழகைக்
கண்டபின்னே
இளமை வேகம் சொல்லாமல் நில்லாதது..
உண்மை தான்..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
1st April 2016, 11:44 AM
#2125
Senior Member
Senior Hubber
முழுமதி போன்ற முகத்தினிலே
முத்து முத்தாக வியர்வை வர
அழகிய மேனி சதிராட
அன்னங்களே விளையாடுங்கடி...
ம்ம் எல்லாம் விளையாட்டாப் போச்சு
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st April 2016, 11:59 AM
#2126
Senior Member
Senior Hubber
எல்லாமே விளையாட்டாப் போச்சு ( ஹை நல்ல தலைப்பா இருக்கே) - 2
அவன் விளையாடும் விளையாட்டை எங்கே சொல்ல..(ம்ம் இங்க சொல்லுங்க)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st April 2016, 12:18 PM
#2127
Senior Member
Diamond Hubber
சின்னா!
நன்றி!
இந்தாங்க....'இன்றைய ஸ்பெஷலி'ல் அப்போ நான் எழுதியது. மறுபடி நினைவூட்டியதற்கு நன்றி.
இன்றைய ஸ்பெஷல் (33)
படம்: அன்று கண்ட முகம் (1968)
நடிப்பு: ரவிச்சந்திரன், ஜெயலலிதா, அசோகன், நாகேஷ், மனோரமா, மேஜர், வி.கே.ராமசாமி
வசனம்: மா.ரா.
காமெரா: கர்ணன்
பாடல்கள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: 'திரை இசைத் திலகம்'
கதை, தயாரிப்பு, டைரக்ஷன்: ஜி.ராமகிருஷ்ணன்
ஆத்மநாபன் (அசோகன்) என்ற பாரிஸ்டரிடம் அவருடைய நண்பர் கல்லூரி பிரின்சிபால் லா பிராக்டிஸ் செய்ய ஒருவரை சிபாரிசு செய்து அனுப்புகிறார். ஆத்மநாபன் ஆண் ஒருவரைத்தான் பிரின்சிபால் வக்கீலாக பிராக்டிஸ் செய்ய அனுப்புவார் என்று பார்த்தால் வந்து நிற்பது ஒரு அழகு தேவதை. பெண்கள் என்றால் பத்தடி தூரம் விலகி நிற்கும் ஆத்மநாபன் அந்த சுந்தரியிடம் வேறு எங்காவது பிராக்டிஸ் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். ஆனால் அந்த இளம் பெண் வக்கிலோ அவரிடம்தான் பிராக்டிஸ் செய்வேன் என்று பிடிவாதமாக கெஞ்ச இறுதியில் ஆதம்னாபன் சம்மதிக்கிறார்.
அந்த இரவு தான் சந்தித்த அந்த தேவதையின் அழகை நினைத்து அவர் மனம் தடுமாறுகிறது. அப்படியே அந்த தேவதை அவர் கனவில் வந்து....
என்ன அழகான அருமையான பாடல்! ஆனால் பாப்புலர் ஆகாத பாடல். கடுப்பு.
கண்ணியப் பாடகியின் கல்கண்டு குரலில் கேட்க, கேட்க அப்படி ஒரு சுகம். அதுவும் 'கண்ணெதிரே.......ஏ' என்று அவர் இழுத்து பாடும் போது மயங்காதவர்களே இருக்க முடியாது.
இப்பாடலின் ஆரம்ப இசை அமர்க்களம். பேங்கோஸ், ஆர்மோனியம், கிடார் என்று கலக்கல் உபகரணங்களை அம்சமாகக் கலந்து திரை இசைத் திலகம் அமர்க்களமான அமர்க்களப்படுத்தி விட்டார்.
ஜெயா செம கியூட். இப்பாடலில் 'மணி' மேகலையாய்க் (இடையணி வேறு.) காட்சி அளிக்கிறார். கொள்ளை கொள்ளும் அழகு. அதே போல டான்ஸ் மூவ்ஸ் செக்ஸியான அற்புதம். ஆடைகளுக்கு மேல் டிரான்ஸ்பரென்ட் அங்கி போல வேறு அணிந்து படுகவர்ச்சியாக வேறு பரிமளிப்பார்.
ஆண்குரல் இல்லையென்றாலும் அசோகனுக்கும், ஜெயாவுக்கும் டூயட் போலவே தெரியும் பாடல் இது. இதுவும் ஒரு வித்தியாசம்.
'காட்டுக்கு ஓடிய முனிவர்களும், வீட்டுக்குத் திரும்பிய விஷயம் இது' என்று காதலை காமத்துடன் இணைத்துப் பெருமைப்படுத்தும் நம் கவிஞன். வரிகள் எளிமையான அமர்க்களம்.
அதிகம் வெளியே தெரியாத அற்புத பாடல். அனுபவித்துக் கேளுங்கள். ஆழ்ந்த சுகத்தை உணர்வீர்கள். முடிவு உங்கள் கையில்
இதயம் பொல்லாதது
இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது
இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது
காட்டுக்கு ஓடிய முனிவர்களும்
வீட்டுக்குத் திரும்பிய விஷயமிது
காட்டுக்கு ஓடிய முனிவர்களும்
வீட்டுக்குத் திரும்பிய விஷயமிது
காவலை மீறிய போதையிது
காவலை மீறிய போதையிது
கண்மூடி நடக்கின்ற பாதை இது
ஆஹா ஓஹோ ம்ஹூம்
(இடையிசை இடையசைவிற்குத் தகுந்தமாதிரி பிரம்மாண்டம்)
இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது
சட்டமும் இதனை மறுத்ததில்லை
தருமமும் இதனை வெறுத்ததில்லை
பட்டங்கள் வாங்கிப் பயனுமில்லை
பயிர் செய்யாவிடில் நிலமுமில்லை
சட்டமும் இதனை மறுத்ததில்லை
தருமமும் இதனை வெறுத்ததில்லை
பட்டங்கள் வாங்கிப் பயனுமில்லை
பயிர் செய்யாவிடில் நிலமுமில்லை
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது
இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது
ஆசையில் இதயம் கனிந்திருக்கும்
சந்தோஷம் கண்ணில் மலர்ந்திருக்கும்
ஆசையில் இதயம் கனிந்திருக்கும்
சந்தோஷம் கண்ணில் மலர்ந்திருக்கும்
நினைவுக்குள் நினைவு வளர்ந்திருக்கும்
நினைவுக்குள் நினைவு வளர்ந்திருக்கும்
இல்லையென்றால் எது பிறந்திருக்கும்
இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது
Last edited by vasudevan31355; 1st April 2016 at 12:20 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
1st April 2016, 02:59 PM
#2128
Senior Member
Diamond Hubber
எல்லா நண்பர்களும் சுசீலாம்மா பாடல்களை அள்ளி வழங்கும்போது கையைக் கட்டிக்கிட்டு உட்கார முடியுமா ?
ஆரம்ப காலத்தில் இசைக்குயிலின் குரலில் இளங்கிளியும் இழையும்.. மிஸ்ஸியம்மாவின் பிருந்தாவனமும் நந்தகுமாரனும் போல இந்தப் பாடலும் அந்தக் கிளிக்குரல் கொஞ்சலில் துள்ளி வருகுது..
அறியா பருவமடா.. மலர் அம்பையே வீசாதடா.. மதனா
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
1st April 2016, 03:20 PM
#2129
Senior Member
Senior Hubber
(இடையிசை இடையசைவிற்குத் தகுந்தமாதிரி பிரம்மாண்டம்)// நன்றி வாசுஜி..உங்களோட பதிவு படித்த நினைவு..ஆனால் தேட சோம்பல்..உங்களை மாதிரி இசையெல்லாம்விலாவாரியாக எனக்குச் சொல்ல வராதே.நைஸ் அண்ட் தாங்க்ஸ்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st April 2016, 03:35 PM
#2130
Senior Member
Senior Hubber
எல்லாமே விளையாட்டாப் போச்சு...3
சுசீலாம்மா எல் ஆர் ஈஸ்வரி..
காவேரித் தண்ணியிலே குளிச்சி வந்தேண்டி
கரிகால் சோழன்கிட்டே படிச்சி வந்தேண்டி
காவிரிப் பூம்பட்டினத்தை பார்த்திருக்கியாடி
கண்ணகி வீடு எங்க வீட்டு பக்கம் தாண்டி
சர்ரூ,மணிமாலா+இளமை+ சடுகுடு சடுகுடு
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks