-
2nd December 2015, 11:08 PM
#1781
Senior Member
Seasoned Hubber
அபூர்வ கானங்கள்...
ஜெயச்சந்திரன் பி.சுசீலா இணைந்த பாடல்களில் மிகவும் பிரபலமான பாடல். வழக்கம் போல் படத்தின் பெயர் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சக்கரங்கள் நிற்பதில்லை படத்தில் சங்கர் கணேஷ் இசையில், மு.மேத்தா வரிகள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd December 2015 11:08 PM
# ADS
Circuit advertisement
-
2nd December 2015, 11:20 PM
#1782
Senior Member
Seasoned Hubber
அபூர்வ கானங்கள்
தேன் சிட்டுக்கள்..
இந்தப் படத்தைப் பற்றி வாசு சார் எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். சின்னி பிரகாஷ் சுபாஷினி நடித்த படம். விஜயரமணி இசையமைப்பாளர்.
இதில் பாடல்கள் ஜனரஞ்சகமானவை. என்றாலும் கேட்கத் திகட்டாதவை. குறிப்பாக பாடகர் திலகம் வாணி ஜெயராம் பாடிய இப்பாடல் கலப்பிசையில் வித்தியாசமாக இருக்கும். பாடலாசிரியர் ஆலங்குடி சோமு
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd December 2015, 11:31 PM
#1783
Senior Member
Seasoned Hubber
அபூர்வ கானங்கள்
இசையரசியும் கே.ஜே.யேசுதாஸும் இணைந்து பாடிய அபூர்வமான பாடல். மெல்லிசை மாமணி வி.குமாரின் இசையில் வசந்தம் வரும் திரைப்படத்திற்காக மு.பாவாணன் எழுதிய பாடல்.
http://psusheela.org/audio/ra/tamil/...aresong452.ram
மேற்காணும் இணைப்பில் உள்ள பாடல் ரியல் ஆடியோ வடிவில் உள்ளது. விஎல்சி மீடியா ப்ளேயரில் கேட்கலாம்.
Last edited by RAGHAVENDRA; 3rd December 2015 at 11:23 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
2nd December 2015, 11:39 PM
#1784
Senior Member
Senior Hubber
Originally Posted by
RAGHAVENDRA
அபூர்வ கானங்கள்
காகித ஓடம்... இந்தப் படத்தின் பெயரைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த வார்த்தையைக் கொண்டு தொடங்கும் இசையரசியின் பாடலென்றால் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் இந்தப் படத்தைத் தெரியாதவர்களுக்குக் கூட இந்தப் பாடல் அத்துப்படி.
சந்தோஷமான சூழலில் எஸ்.பி.பாலாவும் சோகமான சூழலில் ராஜ்குமார் பாரதி, சசிரேகா இருவரும் பாடிய சூப்பர் ஹிட் பாடல். சங்கர் கணேஷ் இரட்டையருக்கு மிகவும் பெயர் பெற்றுத் தந்த பாடல்.
பொன்வீணையே என்னோடு வா...
எஸ்.பி.பாலா பாடிய பாடல் வீடியோவில் இணைப்பு கிடைக்கவில்லை. ஒரு வேளை ஆடியோ கிடைத்தால் கிடைக்கலாம்.
இது கன்னடத்தில் சத்யம் செய்த பாடல்
solo SPB
duet: PS & M.Ramesh
-
3rd December 2015, 10:11 AM
#1785
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
சினிமா எடுத்துப் பார் 36: துணிவே துணை!
எஸ்பி.முத்துராமன்
காவியக் கவிஞர் வாலி அவர்கள் மதுப் பழக் கத்தை நிறுத்தியதையும், இன்றைய தலைமுறை குடிக்கு எப்படி சீரழிகிறது என்பதையும் கடந்த வாரம் வருத்தத்தோடு பதிவு செய்திருந்தேன். கலங்கிய கண்களோடு அடுத்தவாரம் என்ன பகிரப் போகிறோம் என்பதை சொல்ல மனமில்லாமல் விட்டிருந் தேன்.
அந்த செய்தி வெளிவந்த நாளில் நாமக்கல் அருகே நான்கு பள்ளிக் கூட மாணவிகள் வகுப்பறையில் மது அருந்தி பிறந்த நாள் கொண் டாடிய செய்தியையும், மற்றொரு பள்ளியில் ஒரு மாணவிக்கு நான்கு மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்து அதனை வாட்ஸ் அப்-பில் வெளியிட்டிருக்கிறார்கள் என்ற கொடூரமான செய்தியையும் படிக்க நேர்ந்தது. இவர்களை நினைக்கையில் கண்ணீர் வந்தது.
அது இதயத்திலிருந்து வந்ததால் சிவப்பாக இருந்தது. இந்தச் சூழலில் குமரி அனந்தன் அவர்கள் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளார். நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து துணிவே துணையாக போராட வேண்டிய நேரம் இது.
நான் இந்த வாரம் சொல்லப் போகும் படம் ‘துணிவே துணை’. இந்தப்படத்தை எப்படி தொடங்கி னோம் என்பதற்கு ஒரு வரலாறு உள்ளது. சேலம் மாடர்ன் தியேட் டரில் சில படங்களை தொடர்ந்து படமாக்கி வந்தோம். அந்த நாட் களில் படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசையோடு தினமும் இரண்டு நபர்களாவது வருவார்கள். அவர்களிடம், ‘ பண வசதி எப்படி?’ என்று நானும், ஒளிப்பதிவாளர் பாபுவும் கேட்போம். ‘முதலில் பூஜையை போடுவோம். அப்புறம் பணத்தை புரட்டிவிடுகிறோம்?’ என்பார்கள்.
அதற்கு நாங்கள் ‘பூஜை போட்டு பாதியிலேயே படம் நின்று விடுவதற்கு நாங்கள் படம் எடுக்க மாட்டோம். பண பலத்தோடு வாருங்கள்’ என்று அனுப்பிவிடு வோம். இந்த நிலையில், எளிமை யாக வேட்டி சட்டை அணிந்து ஒரு மஞ்சள் பையுடன் எங்களை பார்க்க ஒருவர் வந்தார். ‘படம் எடுக்க வேண்டும்?’ என்றார். எல்லோரிடமும் சொல்வதைப் போல அவரிடமும் சொன்னோம். மேஜையில் மஞ்சள் பையை கொட்டினார். நோட்டுக்கட்டுகள் குவிந்தன. அதைப் பார்த்ததும் எங்களுக்கு ஆச்சரியம்.
இதற்கு மேலும் வங்கியில் பணம் இருக்கிறது என்று பாஸ் புக்கை காட்டினார். “நடிகர் ஜெய்சங்கரிடம் கேட்டுவிட்டு பதில் சொல்கிறோம்’’ என்று கூறினோம். நடிகர் ஜெய் யிடம் கூறியதும், ‘நாம இந்தப்படத்தை ஏன் கலர் படமாக எடுக்கக் கூடாது?’ என்று கேட்டார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்படி தொடங்கப்பட்ட படம், ‘துணிவே துணை’ அதன் தயாரிப்பாளர் சேலம் பி.வி.துளசிராம்.
படத்துக்கு கதை, திரைக்கதை பஞ்சு அருணாசலம். இது சஸ்பென்ஸ் திரில்லர். படத்துக்கு சரியான தலைப்பை பிடிப்பது ஒரு முக்கியமான வேலை. ஆசிரியர் உயர்திரு. தமிழ்வாணன் அவர்கள் கல்கண்டு இதழில் ‘துணிவே துணை’ என்று லட்சிய வார்த்தையை போடுவார். அந்த தலைப்பு சரியாக இருக் கும் என்று பஞ்சு அவர்கள் கூற தமிழ் வாணன் அவர்களிடம் கேட்டோம். ‘தாராள மாக வைத்துக் கொள் ளுங்கள். எல்லோருக் கும் துணிவு வருகிற மாதிரி படத்தை எடுங் கள்’ என்றார். தமிழ் வாணன் - ‘மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜக்ட்’ என்ற அடைமொழிக்கு தன்னை தகுதி யாக்கிக்கொண்டவர். அவர் தந்த செல்வங்கள்தான் லேனா தமிழ்வாணனும், ரவி தமிழ்வாணனும்.
பொதுவாக கிளைமேக்ஸ் காட்சியில்தான் ஆடியன்ஸ் இருக்கை முனைக்கு வருவார்கள். இந்தப்படத்தில் முதல் 5 ரீல்களில் மக்கள் இருக்கை முனையில்தான் உட்கார்ந்திருந்தார்கள். ஆங்கிலப் படங்களுக்கு இணையாக அல்ல. அதற்கு மேலாக எடுக்கப்பட்ட படம் இது. ஒளிப்பதிவு பாபு. அவரது படப்பிடிப்பு பாராட்டுக்குறியது. எம்.எஸ்.வி அவர்களின் பாடல் களும், பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்தன. ஜெய் சங்கர், ஜெயபிரபா, அசோகன், விஜயகுமார், ராஜ சுலோச்சனா ஆகியோர் நடித்தனர். வில்லன் களுக்கு தலைமைப் பொறுப்பு வகிப்பவரை பெரிய வில்லனாக போடுவோம். இந்தப்படத்தில் வித்தியாசமாக பெண் கதாபாத் திரம் தலைமை ஏற்கட்டுமே என்று ராஜ சுலோச்சனாவை தலைவியாக்கினோம். அவர் நடிப்பில் வில்லன்களையே மிஞ்சி விட்டார்.
கலை இயக்குநர் ராதா மிக நுணுக்கமாக அரங்குகள் அமைத்தார். ஜெய்சங்கர் இரட்டை வேடத்தில் வரும் ‘அச்சம் என்னை நெருங்காது’ என்ற பாடலை வித்தியாசமாக படம்பிடித்தோம். மிகவும் சிரமப்பட்டு இரண்டு வேடங்களையும் மாஸ்க் முறை யில் பாபு ஒளிப்பதிவு செய்தார். அந்தப் பாடல் காட்சி மக்களிடத்தில் பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் நடன அமைப்பாளர் புலியூர் சரோஜாவிடம் உதவியாளராக இருந்த ஒருவர் இன்று புகழ்பெற்ற நடன அமைப்பாளராக உள்ளார். அவர் யார்? அடுத்த வாரம் பார்ப்போம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd December 2015, 08:03 PM
#1786
Junior Member
Veteran Hubber
நடிப்பின் பாலபாட அனுபவங்கள்
Schools of Acting
நடிகர்திலகம் Vs காதல் மன்னர்
Part 3
காதல் மன்னரின் பாந்தமான ஜோடியாக சாவித்திரி வலம் வந்தாலும் எனக்கென்னவோ ஜெமினி வைஜயந்தி ஜெமினி சரோஜாதேவி ஜெமினி விஜயா காம்பினேஷன்கள் அதைவிட நன்கு அமைந்ததாக ஒரு எண்ணம் உண்டு !
ஜெமினி வைஜயந்தி ஜோடியில் தேன் நிலவும் பார்த்திபன் கனவும் வஞ்சிக்கோட்டை வாலிபனும் மறக்க முடியாத படங்கள் !!
வஞ்சிக்கோட்டை வாலிபனில் ஜெமினியை சுற்றிசுற்றி சுழன்றாடும் ராஜாமகள் ரோஜாமலர் பாடலும் காட்சியமைப்பும் இன்றுவரை என் மனதில் இனம் புரியாத ஒரு இனிமைப் பரபரப்பைத் தோற்றுவிக்கும் ! அதுபோலவே தேன் நிலவில் இவர்கள் இணைந்த பாடல் காட்சிகள் பரவசமானவை!! ஜெமினிக்கு நம்பர் ஒன பொருத்தமான கதாநாயகி உயரமாகட்டும் முகவசீகரமாகட்டும் நடிப்பில் காதல் வேதியியல் ஆகட்டும்......
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் ஜெமினி வைஜயந்தி இணைவில் நாம் காணும் இப்பாடல் காட்சிகளே !!
நடிகர்திலகத்துடன் வைஜயந்தி தோன்றும் கண்ணியமான இக்காதல் பாடல் காட்சியும் ஜெமினிகணேசனின் இனிமையான ஒரு பாடல் காட்சியைக் கண்டு களித்திட்ட ஒரு மன நிறைவைத் தரும் !! இரும்புத்திரை விலக்கி நடிகர்திலகம் இயல்புத்திரையில் மின்னும் மறக்க முடியாத மதுரகான காட்சி!!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd December 2015, 10:14 PM
#1787
Senior Member
Senior Hubber
gemini -sarojadevi super
-
4th December 2015, 10:39 AM
#1788
Senior Member
Senior Hubber
uyir songs
thanks tfmlover
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th December 2015, 11:00 AM
#1789
Senior Member
Seasoned Hubber
Posting moved to a different thread.
Last edited by raagadevan; 5th December 2015 at 07:27 PM.
-
6th December 2015, 06:40 PM
#1790
Junior Member
Veteran Hubber
நடிப்பின் பாலபாட அனுபவங்கள்
Schools of Acting
நடிகர்திலகம் Vs காதல் மன்னர்
Part 4
நடிப்புப் புயலும் நடிப்புத் தென்றலும்
The Cyclone Crossing The Gentle Breeze
பொதுவாகவே நடிகர்திலகத்துடன் காதல் மன்னரும் ஒரு படத்தில் இருக்கிறார் என்றால் அந்தக் கால ரசிகர் வட்டங்களில் ஒருவிதமான நடிப்புப் போட்டி எதிர்பார்ப்பு நிலவும்! நடிகர்திலகம் புயல்வீச்சாய் தனது நடிப்புக் கிரணங்களை வெளிப்படுத்தும்போது காதல்மன்னர் தனது பாணியில் குளிர்நிலவாய் தென்றலாய் நமது மனங்களை வருடுவார்.
கதையமைப்பில் சில சமயம் எதிர்பார்ப்புக்கு மாறாக தென்றல் புயலானதும் புயல் தென்றலாய் தணிந்ததும் ரசனைக்குரிய நிகழ்வுகளே!!
உலகத்திரைக்கே எடுத்துக்காட்டாக நல்ல நட்புணர்வுடன் கதைக்களத்தையும் பாத்திரத்தின் குணாதிசய முன்னிறுத்தலையும் மட்டுமே மனதில் நிறுத்தி பொறாமையற்ற Multi-Star Cast நடிப்புப் போட்டியை வழங்கி நம்மை மகிழ்வித்த நடிகர்திலகம் / காதல்மன்னர் புரிதலுடன் கூடிய நட்புணர்வை இனி எங்கே காண்போமோ!?
ஒரு புயல் தென்றலாய் கரை கடக்கிறது !
ஒரு தென்றல் புயலாய் சீறுகிறது !!
தென்றலும் புயலும் இணைந்து........... புயலுக்காக தென்றல் இசை மீட்டுகிறது !!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks