Page 174 of 337 FirstFirst ... 74124164172173174175176184224274 ... LastLast
Results 1,731 to 1,740 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1731
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil HIndu

    சினிமா எடுத்துப் பார் 35: மயங்குகிறாள் ஒரு மாது


    ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான விநியோகஸ்தர்கள் மயங்குகிறாள் ஒரு மாது படத்தை வாங்கத் தயங்கினார்கள். திருச்சியைச் சேர்ந்த விநியோ கஸ்தர் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டு களை அடுக்கி வைத்துக்கொண்டு கிளை மாக்ஸில் கதாநாயகி இறப்பது போல மாற்றிக் கொடுங்கள். உடனே படத்தை வாங்கிக்கொள்கிறேன் என்றார். நானும், பஞ்சு அருணாசலமும் கிளைமாக்ஸ் காட்சியில் நாயகியைக் கொன்றுவிடக் கூடாது. தவறை மன்னித்து வாழ வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந் தோம். தயாரிப்பாளர் விஜயபாஸ்கரிடம் படம் தொடங்குவதற்கு முன்பே, இதை சொல்லியிருந்ததால் அவரும் அந்த முடிவில் இருந்து மாறவில்லை.

    பல வகையில் பணத்தை புரட்டி னோம். படப்பிடிப்பு முடிந்தது படத்தை சென்சாருக்கு அனுப்பினோம். படத்தை பார்த்துவிட்டு சென்சார் அதிகாரி எங்களை அழைத்து பாராட்டி, யூ சான்றிதழ் கொடுப்பதாகக் கூறினார்.

    பஞ்சு அவர்கள் என்னை அழைத்து, ரிஸ்க் எடுக்க வேண்டாம். அதிகாரியிடம் அந்த பருவக் கோளாறு காட்சிகளைப் பற்றி கேட்டுவிடுங்கள் என்றார். நான் சென்சார் அதிகாரியிடம் சென்று படத் துக்கு ஏ சான்றிதழ் கொடுத்து காதலர் கள் தனிமையில் இருக்கும் காட்சிகளைக் குறைப்பீர்கள் என்று நினைத்தோம்! என்றேன். அதற்கு சென்சார் அதிகாரி, படத்தில் திருப்புமுனையே அந்தக் காட்சிதான். இளம் வயதில் தவறு செய் தால் அதன் பின்விளைவு என்ன என் பதை உணர்த்துகிறது. அதனால்தான் அக் காட்சியை வெட்டவில்லை. எல்லோரும் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என் பதற்காக யூ சான்று கொடுத்தோம் என் றார். கதைக்கு சம்பந்தமில்லாமல் கவர்ச் சியாக, அசிங்கமாக வைத்தால்தான் சென்சாரில் கட் செய்வார்கள் என்பதை அன்று புரிந்துகொண்டோம்.

    சினிமா எடுத்துப் பார் என்ற சவாலை ஏற்று பல சங்கடங்களுக்கு மத்தியில் படத்தை வெளியிட்டோம். தவறு செய்த பெண்ணை மன்னித்து வாழ வைத்ததை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். கிளை மாக்ஸை மாற்ற சொன்ன திருச்சி விநி யோகஸ்தரும் படத்தை பார்த்துவிட்டு நீங்க ஜெயிச்சீட்டீங்க முத்துராமன் சார். உங்க கிளைமாக்ஸை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்றார்.

    படத்தில் சம்சாரம் என்பது வீணை என்ற பாடலை எழுதியிருந்த கண்ண தாசன் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு, படம் எனக்குப் பெரிய தாக்கத்தை கொடுக் கிறது. சுஜாதா கதாபாத்திரம் கண் முன் னேயே சுற்றி சுற்றி வருகிறது. வித்தி யாசமான படமாக எடுத்துவிட்டீர்கள் என்று என்னையும் பஞ்சுவையும் பாராட்டி னார். தம்பிகளுக்கு அண்ணன் கொடுத்த ஆஸ்கர் விருதாக அதை எடுத்துக்கொண் டோம். பட்ட கஷ்டமெல்லாம் படத்தின் வெற்றியில் கரைந்து போனது. இளங்கோ கலை மன்றம் மயங்குகிறாள் ஒரு மாது படத்தின் வெற்றிக்கு விழா எடுத்தது. கவியரசு கண்ணதாசன் அவர்கள் விருது கொடுத்தார். புதியவர்களை ஊக்குவித்த இளங்கோ கலை மன்றத் துக்கும், இளங்கோ வீரப்பனுக்கும் எங்கள் நன்றி என்றும் உரியது.

    காவிய கவிஞர் வாலி என் பல படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக் கிறார். இரண்டு படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார். அதில் ஒரு படம் பெண்ணைச் சொல்லி குற்றமில்லை மணியனின் கதை. திரைக்கதை, வசனம், பாடல்கலை வாலி எழுதியிருந்தார்.

    கணவன், மனைவியை கவனிக் காமல் இருந்தால் மனைவி தவறான வழிகளில் போக வாய்ப்பு இருக்கிறது என்பதை எடுத்துச் சொன்ன படம். கதாபாத்திரத்தின் விரகதாபத்தை அள வுக்கு அதிகமாக சொன்னதால் படத்தை பெண்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எங் களுக்கு வருத்தம். அதைவிட வருத்தம் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் என் எல்லா படங்களுக்கும் எடிட்டரான ஆர்.விட்டல்.

    எழுத்தாளர் பிலகிரி படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, குடும்பப் பின்னணி கதையுடன் வந்து என்னைச் சந்தித்தார். அந்தக் கதைதான் ஒரு கொடி யில் இரு மலர்கள். அந்தப் படத்துக்கு வசனம் வாலி சார்தான். அந்தப் படத்தின் வசனம் கவிதையாகவே இருந்ததைப் பலரும் பாராட்டினார்கள்.

    இன்னொரு முக்கியமான விஷயத் தையும் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பெண்ணைச் சொல்லி குற்றமில்லை படத்தின் வேலைகள் சேலம் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோவில் நடந்துகொண்டிருந்தன. அதற்கு வசனம் எழுதுவதற்காக வாலி சார் சேலத்துக்கு வந்திருந்தார். என் குழுவினர் என்னிடம் வந்து வாலி சார் இரவு நேரத்தில் அள வுக்கு அதிகமாக மது அருந்துகிறார் என்றார்கள்.

    அடுத்த நாள் அவரை சந்தித்து, அதைப் பற்றி கேட்டேன். யார் சொன்னது, யார் சொன்னது? என்று வியப்பாக கேட்டார். நாம் இருப் பது சினிமா துறை. இங்கே ரகசியம் எல்லாம் எட்டுத் திக்குக்கும் தெரிந்து விடும் என்று கூறினேன். நான் கனிமுத்து பாப்பா படத்தை இயக்கும் நேரத்தில் வி.சி.குகநாதனின் அலுவலகத்துக்கு எதிர்வீடுதான் வாலி வீடு. மாலை நேரத்தில் வாலி சாரோடு பேசிவிட்டு, அவர் மனைவி ரமண திலகம் கொடுக் கும் காபியை குடித்துவிட்டு, அவர் மகன் பாலாஜியோடு விளையாடுவேன். இதனால் நான் வாலி சார் குடும்பத்தில் ஒருவனாகியிருந்தேன். அந்த உரிமை யோடு அவரிடம் பேசினேன்.

    உங்கள் குடும்பத்தில் ஒருவ னாக சொல்கிறேன். நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த உயரத்தை அடைந் தீர்கள். உங்கள் கவிதைகளையும், பாடல் களையும் மக்கள் கொண்டாடுகிறார்கள். மக்கள் விழிப்புணர்வு அடையும் அள வுக்கு உங்கள் எழுத்துக்கள் இருக்கின் றன. நீங்கள் குடிக்கு அடிமையாக லாமா? உங்கள் மனைவி ரமண தில கத்தையும், மகன் பாலாஜியையும் நினைத்துப் பாருங்கள் என்று மன அழுத்ததுடன் எடுத்துச் சொன்னேன்.

    சில விநாடிகள் யோசித்தவர், இனிமேல் எந்தச் சூழலிலும் குடிக்க மாட்டேன் என்று என் கையில் அடித்து சத்தியம் செய்தார். அன்று முதல் வாலி குடிப்பதை விட்டுவிட்டார். இது எனக்குக் கிடைத்த வெற்றி இல்லை. வாலியின் மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி.

    எம்.ஜி.ஆர் அவர்கள் ஒருமுறை வாலியைப் பார்த்தபோது, என்னய்யா, நாங்க எவ்வளவோ சொல்லியும் குடிப்பதை நிறுத்தாத நீ, இப்போ எப்படி நிறுத்தினே? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் நடந்ததை எடுத்து கூறி யிருக்கிறார். வாலி சார் கைகளில் இரண்டு சாக்லேட்டை கொடுத்த எம்.ஜி.ஆர் ஒன்று உனக்கு. இன்னொன்று முத்துராமனுக்கு! என் றாராம். இந்த சம்பவத்தை துக்ளக் பத்திரிகையில் வாலியே எழுதியிருந்தார்.

    இன்றைக்கு உங்களோடு இதைப் பகிர்ந்துகொள்ள காரணம், தற்போது குடிப் பழக்கம் குடும்பத் தலைவர்களை, தொழிலாளர்களை, மாணவர்களை சீரழித்து வருகிறது. அதனால் தமிழ்க் குடும்பங்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது. அடுத்த தலைமுறை முழுவதும் குடிக்கு அடிமையான தலைமுறையாக ஆகிவிடுமோ என்கிற பயம் வளர்ந்து வருகிறது. இப்படி ஒரு வருத்தமான மனநிலையில் என் கண்களில் கண்ணீர் வந்து, அந்த துக்கம் எழுதவிடாமல் தடுக்கிறது. அதனால் தொடர்ந்து உங்களோடு பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அடுத்த வாரம் சந்திப்போம்.



    - இன்னும் படம் பார்ப்போம்

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1732
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    சூழல் ஒன்று பார்வை இரண்டு: முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு?


    ஐம்பெரும் இயற்கை சக்திகளாக நாம் போற்றுவது நிலம், நீர், காற்று, தீ மற்றும் ஆகாயம். இவற்றின் பௌதிக இயல்புகளையும் தாண்டி நமது செயல்கள் மற்றும் உணர்வுகளுடன் ஒப்பிட்டுப் பாடப்படுவது கவி மரபு. இந்த மரபை அடியொற்றி இரண்டு மழைப் பாடல்களைப் பார்ப்போம்.

    இந்திப் பாட்டு.

    படம்: ஷோர் (சத்தம்/ இரைச்சல்),

    பாடலாசிரியர்: இந்திரஜித் சிங் துளசி,

    பாடியவர்: முகேஷ், இசை: லட்சுமிகாந்த் பியாரிலால்:

    பாடல்:

    பானிரே பானி தேரா ரங்க் கைஸா,

    ஜிஸ்மே மிலா தோ லகே உஸ் ஜைஸ்ஸா

    பானிரே பானிரே ஓ பானிரே பானிரே பானிரே

    பொருள்:

    தண்ணீரே ஓ தண்ணீரே உன் வண்ணம் எப்படி

    எதில் கலந்தாயோ அதுவாக நீ மாறுவாய் அப்படி

    தண்ணீரே ஓ தண்ணீரே

    இப்படியும் உள்ளது இவ்வுலகின் சிலரது வாழ்க்கை

    உலர்ந்ததை உண்டு குளிர்ந்ததைக் குடிக்கும் செய்கை

    நிறையும் உன் ஒரு சொட்டு நீரில் இந்நில மக்களின்

    குறைகள் பலவும் அவர் கொள்வர் அமைதி - ஓ மழையே

    (தண்ணீரே ஓ தண்ணீரே)

    பசித்த மானிடனின் பசியும் அவன் தாகமும் போல

    கங்கையில் விழும்போது நீ புனித கங்கை நீராகிறாய்

    தங்கும் மேகத்துடன் கலந்து பொங்கு மழையாகிறாய்

    (ஒருபுறம் மழையை ரசிக்கும்)

    தீயில் விரிந்து தீயை அணிந்து தடுமாறும் இளமை

    (மறுபுறம் அதே மழையினால்)

    சாயும் மதில்கள் சரியும் சுவர்கள் ஓ மழையே

    நீ வாழ்வை மாற்றுவாய் வீழும் சுமையாய் அங்கே

    தண்ணீரே ஓ தண்ணீரே உன் வண்ணம் எப்படி தாம்

    எண்ணியபடி இவ்வுலகைப் படைத்த இறைவன் அப்படி

    ஒவ்வொரு காட்சியும் ஒளிபெறும் வண்ணம்

    உள்ளது மழையே உன் கைவண்ணம்

    (நீ நீராய்) கொட்டும்போது கிட்டாத இவ்வெழில் வண்ணம்

    மொட்டுகள் மலர்ந்து வனங்கள் முகிழ்கும் செய்தி

    மெட்டுகள் வந்து நமக்கு மெலிதாய் உணர்த்தும்

    தண்ணீரே ஓ தண்ணீரே உன் வண்ணம் எப்படி - இந்த

    மண்ணில் வாழ்வோம் ஆண்டுகள் நூறு என நம்பும்படி

    மழையை இரு விதமான கோணங்களில் மனோஜ்குமார் காண்பதாக அமைந்த இப்பாடல் இன்றும் மழைக்காலங்களில் மும்பையில் ஒலிக்கப்படுகிறது. மிக அழுத்தமான கதையம்சம், முகேஷின் உருக்கமான குரல், தத்துவார்த்தமான வரிகள் ஆகியவற்றுடன் கூடிய பல பாடல்கள் நிறைந்த ஷோர் என்ற இந்தத் திரைப்படம் மனோஜ் குமாரை ஒரு லட்சிய நடிகராக ஆக்கியதில் பெரும் பங்கு வகித்தது.

    சமூகத்தின் அவலங்களை எளிய வார்த்தைகள் மூலம் எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் பாடல் எழுதியவர் மருதகாசி. மழையைப் பற்றி அவரின் அழகான உவமேயங்கள் கொண்ட இந்த மழைப் பாடலைப் பாடி நடித்த வசீகரமான குரல் வளம் கொண்டவர் டி.ஆர். மகாலிங்கம்.

    படம்: ஆடவந்த தெய்வம், பாடலாசிரியர்: ஏ. மருதகாசி,

    பாடியவர்கள்: டி.ஆர். மகாலிங்கம், பி.சுசீலா, இசை: கே.வி. மகாதேவன்

    பாடல்:

    சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே- மழை

    கொட்டு கொட்டுனு கொட்டுது பாரு அங்கே

    கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே-அவன்

    கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர் துளி போலே

    சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

    முட்டா பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே

    துட்டு படைச்ச சீமான் அள்ளி கொட்டுற வார்த்தை போலே

    கொட்டு கொட்டுனு கொட்டுது பாரு அங்கே

    முழுக்க முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு

    உன் முக்காட்டை நீக்கு தலை ஈரத்தைப் போக்கு

    இருக்க இடம் கொடுத்தா என்னையே நீ தாக்குறே

    குறுக்கு மூளை பாயுறே கோணல் புத்தியை காட்டுறே

    பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும் இரும்பு போலவே

    முகம் சிவக்குது இப்போ அது சிரிப்பது எப்போ

    குளிச்சு முழுகிவிட்டு குளிர்ச்சியாய் ஓடி வா

    செவந்து போன முகத்தில் சிரிப்பை நீயும் காணலாம்

  5. Likes madhu, Russellmai liked this post
  6. #1733
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr CK you can enjoy and get more details about Soundarya from Neyveliar


  7. #1734
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    One more melody from Karna.



  8. Likes Russellmai liked this post
  9. #1735
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நேற்று பெளர்ணமி. முழு நிலவு. பால் வெள்ளை? ம்ஹூம்.. கொஞ்சம் சிறிதாக ஒருலிட்டர் பாலில் ஒரு இத்தினியூண்டு மஞ்சள் பொடி போடடுக் கலக்கினால் என்ன நிறமோ அது போன்ற வெளிர் மஞ்சள் நிறம்..ஆனால் ரின்போட்டு வெளுத்தாற்போல் பளீர் எனச் சிரிப்பு..
    அதனுடைய வடிவம் எப்படி..

    வட்டம்..என சுலபமாய்ச் சிறு குழந்தை சொல்லும்.. சரி..அந்த வட்ட முகம் எத்தனை பேருக்கு உண்டு..

    எஸ் செளந்தர்யா தான்..

    மெளன விழிகளால் மென்மைக் கவிசொல்லும்
    செளந்தர்யம் கொண்டவர் தான்

    பொன்னுமணியில் அறிமுகமாகி தமிழில் சோபிக்காமல் தெலுங்கு சென்று கிளாமரித்துப் பின் தமிழ் மறுபடி தெலுகு பின் அரசியல் எனப் போய்க் கொண்டிருந்தவர். வாழ்க்கையில் எதிர்பாரத திருப்பமாக விபத்தில் மரித்தும் விட்டார்.. வெகு சின்ன வயது..ம்ம்

    போதுமா Mr. s.v.d sir நெய்வேலியார் வந்து அவர் பங்குக்குச் சுத்திச் சுத்தி வந்தாரு என அவர் பற்றிச் சொல்லட்டும்..

  10. Likes Russellmai, JamesFague liked this post
  11. #1736
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    'மரியாதை' குறைந்தாலும் மனதில் நிறைந்த மதுர கானங்கள் !

    வாடா வாடி போடா போடி வாங்க போங்க வாங்கடா போங்கடா ....டா....டி.... பாடல்கள்!!

    மரியாதை என்பது மனதில் தோன்றுவது நம்மை விட வயதானவர்களைக் காணும் போதும் படிப்பிலும் பண்பிலும் பதவியிலும் உயர்ந்தவர்களுடன் உரையாட நேரும் போதும் ...இயல்பானதே!!

    இந்த தகுதிகள் எல்லாமே இருந்தாலும் மரியாதைக்குரிய மனிதரும் மயங்குவது தன்னை காதலி (மனைவி அல்ல மக்களே!) மரியாதைக் குறைவாக வாடா போடா என்றழைக்கும் போதும் மழலைகள் வாப்பா போப்பா வா தாத்தா போ பாட்டி என்றெல்லாம் மரியாதையின்றி விளிக்கும்போதுமே !!

    நண்பர்களுக்குள் எத்தனை வயதானாலும் வாடா போடா வாடி போடி இயல்பே !!


    நாட்டிய பேரொளியின் மழலை செல்ல தாங்கல் !!



    நளின நடன நிலவு ரவிச்சந்திரனின் சூப்பர் டான்சேதான் ....... நெளிவுசுளிவு நடன நட்சத்திரம் நாகேஷுடன்!



    நடிகர்திலகத்தின் தன்னம்பிக்கை .....

    Last edited by sivajisenthil; 26th November 2015 at 06:49 PM.

  12. Likes Russellmai, chinnakkannan liked this post
  13. #1737
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மரியாதை பற்றி முன்பு திருப்பாவை - பூமாலை தொடுத்த பாமாலை - விளக்கவுரை எழுத முயற்சித்தபோது - எழுதியது நினைவுக்கு வருகிறது சி.செ.

    //

    மரியாதை என்பது என்ன?

    ஒருவன் தான் செய்த செயல்கள் மூலம் நான்கு பேருக்கு நல்லது செய்தானென்றால் அவனுக்கு அனைவரும் மரியாதை காட்டுவார்கள் – அது அவனது குணத்திற்கு. மேற்பதவியில் இருப்பவர்க்கு கீழே உள்ளவர்கள் மரியாதை காட்டுவார்கள் – அது அவர்களின் பதவிக்கு.

    சரி மரியாதையை எப்படிக் காட்ட வேண்டும்?

    குழந்தை தந்தையிடம், ‘அப்பா ,நீ எங்க போயிட்டு வந்தே?” என ஒருமையில் கேட்கிறது. குழந்தைக்கு மரியாதை தெரியவில்லை என அர்த்தமில்லை. அன்பின் மிகுதியால் ஒருமையில் அழைக்கிறது. வளர்ந்தவுடன் அதே குழந்தை மரியாதையாகத் தந்தையிடம், ‘ அப்பா, நீங்கள் எனக்காக என்ன செய்து கிழித்தீர்கள்?” என்று கேட்கும்!

    எனது சகோதரி நாய் ஒன்று வளர்த்தார்கள். அது அழகாய் வேளாவேளைக்கு தயிர்சாதம், தொட்டுக் கொள்ள எலுமிச்சங்காய் ஊறுகாய், இட்லி, தோசை எல்லாம் சரியான நேரத்தில் சாப்பிட்டுவிடும். சகோதரி உணவருந்தும் போது வாயில் உமிழ் நீர் பெருக, அவர் சாப்பிடும் சாம்பார் சாதத்தையே பார்க்கும். சகோதரிக்குக் கோபம் வரும்., “ச்சீ, அந்தப் பக்கம் போ எருமை மாடே!” என்பார்கள். அது பரிதாபமாய் வைப்புத் தொகை இழந்த வேட்பாளர் போல முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஒதுங்கிவிடும். அவர் உண்டு முடித்ததும் எதிரே பாவமாய்ப்போய் நிற்கும். சகோதரிக்குச் சிரிப்பு வரும், “என் கன்னுக்குட்டியைத் திட்டிட்டேனாடா?” என்று அதைக் கொஞ்சுவார். நாய் எருமை மாடானதும் கன்றுக்குட்டியானதும் அன்பின் மிகுதியால் தான்!

    *இருபது வருடங்களுக்கு முன்னால் பெயர் பெற்ற அம்மையார் ஒருவர் தலை நகரிலிருந்து மதுரை வந்திருந்தார்கள். சாலையில் இருபக்கமும் ஒரே கூட்டம். ஒருவரிடம் விசாரித்தேன், “யாருங்க வராங்க?” அவர், “உஷ், அந்த அம்மா வருது!” என்றார். இங்கு மரியாதை காரணமாக உயர் திணை அஃறிணையாகி விட்டது!

    இன்றையபாடலில் கோபியர்கள் கண்ணனை, தவறிப் போய் உன்னை ஏக வசனத்தில் அழைத்திருந்தாலும் கோபங்கொள்ளாதே – எனச் சொல்கிறார்கள்.//

    வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி

    வாடா வாடா பையா என் வாசம் தூண்டிப் போயா ?

    ராஜா வாடா சிங்கக் குட்டி

    வாடி ராசாத்தி..

    கிட்ட வாடி ஆசை புள்ள

    எனில் இங்கு போடப் போவது



    ஹச்சோ இது வேற வாடா வோ

  14. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  15. #1738
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சரி.. ரியல் வாடியம்மா சின்னப் பொண்ணு கேட்கலாம் என்றால் முதல் பாட்டு கேட்டு இரண்டாவது பாட் கேட்கவேண்டும்..ஜெய்ஷங்கர் எல்.விஜயலஷ்மி..


  16. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  17. #1739
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    vaNakkam from Los Angeles,CA. Will post beginning Sunday!
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  18. Likes rajeshkrv, chinnakkannan liked this post
  19. #1740
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வெரி குட் சின்னா! இதுவரை போடவில்லை என்று நினைக்கிறேன். 'உயிர் மேல் ஆசை' நிறைய இருக்கிறது. நன்றி சிஷ்யரே!

    அடா அடி போடா போடி பாடல் போடுமய்யா என்றால் வாடா மலரே பாட்டை அந்த லிஸ்ட்டில் சேர்த்து அடாவடி பண்ணி விட்டீரே! நல்ல வேளை. கடா பாட்டு போடாமல் தப்பிக வைத்தீரே! அதுமட்டும் சந்தோசம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  20. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •