-
22nd November 2015, 03:47 PM
#1651
Senior Member
Seasoned Hubber
மதுஜி
கற்பூரம் படத்தில் ஈஸ்வரியின் இந்தப் பாடலை வைத்து, டிக்கெட் வேணுமா, காசு வேணுமா என பள்ளியில் நண்பர்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்ததுண்டு. பாடல் ஹிட்டாகவில்லை. ரேடியோவில் எப்போதாவது ஒலிபரப்புவார்கள். எதேச்சையாக நண்பர்கள் சிலர் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு மறுநாள் பள்ளியில் இந்தப்பாட்டைப் பாடி கிண்டல் செய்வார்கள்.
கற்பூரம் படம் வெளிவந்த புதிதில் அழகு ரதம் பொறக்கும் பாடல் தான் அடிக்கடி ஒலிபரப்புவார்கள். அம்மா வேணுமா பாடல் கூட சிலோன் ரேடியோவில் தான் அதிகம் இடம் பெற்றது.
அபூர்வமான பாடலை நினைவூட்டியமைக்கு உளமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
22nd November 2015 03:47 PM
# ADS
Circuit advertisement
-
22nd November 2015, 03:50 PM
#1652
Senior Member
Seasoned Hubber
குணசுந்தரி படம் டிவிடியில் வந்த போது ஆர்வத்துடன் வாங்கி ஏமாந்ததுண்டு. கலையே உன் விழி கூட கவி பாடுதே பாடல் இல்லை.
பின் நீண்ட நாட்களுக்குப் பின் யூட்யூபில் இப்பாடலின் காணொளி தரவேற்றப்பட்டுள்ளது. வேம்பார் மணிவண்ணன் அவர்கள் தரவேற்றியுள்ளார்.
இந்தப பாடலின் ஒரிஜினல் வீடியோ தானா என்பது சரியாக எனக்குத் தெரியவில்லை. என்றாலும் பாடலைப் பார்க்கும் வாய்ப்பிற்கு நமது உளமார்ந்த் நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
22nd November 2015, 03:51 PM
#1653
Senior Member
Senior Hubber
பாவாடை தாவணி கட்டிய பருவச்சிட்டாக அன்றைய வாலிப மனங்களை நாளுக்கு நாளாய் வாடைக்காற்றாய் வாட்டி எடுத்த புஷ்பலதா. கற்பூரமாய் இப்போது பிடித்துக் கொள்வீர்கள்தானே! இரட்டைஜடை பின்னலில் ஒற்றை ரோஜா வைத்து அம்மா என்று தேடி அழுது தவழும் குழந்தையைத் தூக்கி // அந்தக்குழந்தையே இப்போ பாட்டி ஆகியிருக்குமோன்னோ.. அம்மா வேணுமா அக்கா வேணுமா பாட் முத தபா கேக்கறேன் பாக்கறேன். ட்டாங்க்ஸூ மதுண்ணா அண்ட் வாசுவிற்கு..
ராம பக்த ஹனுமான் பாடலுக்கும் ரா அண்ட் ம விற்கு தாங்க்ஸ்..
சரவெடியா.. ஏற்கெனவே இருமல் லொக்லொக் மீட்டிங் கில் பேச்சு பாதி லொக்கில் போய் காற்று வந்து வர்றேங்க்ணா எனச் சொல்லி வீட் வந்தாயிற்று..சரி என்பங்கிற்கு - இப்போது என்னால் முடியா விட்டாலும் - நா ஆஆன் சத்தம் போட்டு தான் பாடுவேன்...
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
22nd November 2015, 04:01 PM
#1654
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
22nd November 2015, 04:14 PM
#1655
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
எதற்கும் துணிந்தவன் பாடல் அபூர்வமான ஆனால் அட்டகாசமான பாடலைப் பகிர்ந்துள்ளீர்கள். ஏற்கெனவே ஃபடாபட் ஜெயலக்ஷ்மி இருந்ததால், இவருக்கு கர்ணன் ஜெயலக்ஷ்மி, என்றும் ஒரு பெயர் அந்தக்காலத்தில் இருந்ததுண்டு. பாடல் சூப்பர். விவித்பாரதியில் அடிக்கடி இடம் பெறும். சிலோன் ரேடியோவில் சொல்லவே வேண்டாம். இந்தப் பாடலை இசைத்தட்டில் தான் கேட்கவேண்டும். வீடியோவில் ஒலியமைப்பு சரியில்லை.
இசைத்தட்டின் துல்லியமான ஒலியில் பாடலைக் கேட்டால் அதன் சிறப்பே தனி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd November 2015, 04:15 PM
#1656
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்!
'கலையே உன் விழி கூட கவி பாடுதே' பாடல் ஒரிஜினல் பாடல்தான் என்று நினைக்கிறேன். வாயசைப்பு எல்லாம் மிகச் சரியாகவே உள்ளது. அதனால் ஒரிஜினலாகவே இருக்கலாம். நல்ல பாடலுக்கு நன்றி.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd November 2015, 04:15 PM
#1657
Senior Member
Senior Hubber
ஏதோ கொயந்த பாட் பக்திப் பாட்லாம் போடறாகளே நாமளும் நம்ம பங்குக்கு கொயந்தபாட் போடலாம்னு வந்தா கர்ணன் பாட் வந்துடுச்சு
ஆளுக்கொரு முத்தம் உங்க அம்மா கன்னத்திலே
நாளுக்கொரு கனவு உஙக் அம்மா நெஞ்சத்திலே
Last edited by chinnakkannan; 22nd November 2015 at 04:23 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd November 2015, 04:20 PM
#1658
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
என்னைப் போலவே 'சுகம் பெற ஒரே வழி' பாடலும் தங்களுக்குப் பிடித்தம் என்பதில் ஆச்சர்யம் இல்லாத சந்தோஷம். இந்த ஜெயலட்சுமியின் தங்கையோ, அல்லது மகளோதானே டிவி மற்றும் சினிமா நடிகை மோகனபிரியா?
-
22nd November 2015, 04:21 PM
#1659
Senior Member
Diamond Hubber
'ஆளுக்கொரு முத்தம்' தராமல் மறுபடியும் 'சத்தம் போட்டு' பாடுகிறீர்களே சின்னா! என்ன ஆச்சு?
-
22nd November 2015, 04:23 PM
#1660
Senior Member
Senior Hubber
//குதிரையை ஆற்றில் ஓட்டி வருகிறார். இல்லையென்றால் கர்ணன் தோலை உரித்துவிடுவார். குதிரையின் தோலை. அப்புறம் நடிகையின் தோலையும்// பட்குதிரைக்கால்களுக்கு ப் பின்னால் காமரா வைத்திருப்பது ரிஸ்க் இல்லியோ..பாடல் என்னமோ மனதில் ஒட்டவில்லை.
முத்ல் பாட்டும் பாரதி பாட் என்பதால் இதுவும் அஃதே என்பதை..
நீயில்லாமல் எந்தன் வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks