-
20th November 2015, 05:48 PM
#1631
Senior Member
Diamond Hubber
எல்லோரும் சொல்றீங்க... அதனால் நாளையை இன்னைக்கே கொண்டு வந்துட வேண்டியதுதானா ?
வாசு ஜி..... மனம் நிறைந்த வாழ்த்துகளுடன் இன்றைய தினத்தை விட இனி வரும் தினங்கள் எல்லா வளங்களும் பெருகி இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
( நாளைக்கு கூப்பிட்டு பேசிக்கிறேன் )
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
20th November 2015 05:48 PM
# ADS
Circuit advertisement
-
21st November 2015, 09:04 AM
#1632
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
21st November 2015, 09:41 AM
#1633
Junior Member
Seasoned Hubber
Courtesy:Tamil Hindu
காற்றில் கலந்த இசை 31: நினைவெல்லாம் நல்லிசை!
தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான தர் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தைத் தொடர்ந்து இளையராஜாவுடன் இணைந்து அற்புதமான இசைக் காவியங்களைத் தந்தார். இவர்கள் கூட்டணியில், 1982-ல் வெளியான திரைப்படம் ‘நினைவெல்லாம் நித்யா’. கார்த்திக், ஜீஜீ., பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரும் தொழிலதிபரின் மகனான சந்துரு (கார்த்திக்), பழங்குடியினப் பெண்ணான நித்யா(ஜீஜீ.)வைக் காதலிப்பான். ஏற்றத்தாழ்வின் கொடூரப் பார்வைக்கு இருவரும் பலியாகிவிடுவார்கள்.
ஆத்மார்த்தமான காதல் கதைக்கு உயிரோட்டமான இசையைத் தந்திருந்தார் இளையராஜா. பாடல்களில் மட்டுமல்ல, படத்தின் பின்னணி இசையிலும் காதல் மனதின் துடிப்பை இசையாக்கியிருந்தார். பாடலாசிரியர் வைரமுத்துவின் கவித்துவமான வரிகள் பாடல்களுக்குச் செறிவைச் சேர்த்தன. எஸ்.பி.பி.யின் பொற்காலத்தில் வெளியான ஆல்பம் இது.
கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு, தந்தை நிர்வகித்து வந்த நிறுவனங்களின் பொறுப்பில் அமரவைக்கப்படும் சந்துரு, பொறுப்புகளிலிருந்து தப்பித்து நண்பர்களுடன் சுதந்திரமாக ஆடிப்பாடுவான். ஆப்பிரிக்க பாணி தாளக்கட்டுடன் உருவாக்கப்பட்ட ‘தோளின் மேலே பாரமில்லே’ எனும் இப்பாடலை தெறிக்கும் இளமையின் உற்சாகத்துடன் பாடியிருப்பார் எஸ்.பி.பி. பாடலின் முகப்பு இசையில் ஒலிக்கும் புல்லாங்குழல் துணுக்கு, மாலை நேர ஒளியின் பின்னணியில் கூடாரங்களில் வசிக்கும் செவ்விந்தியர்களின் குடியிருப்பை நினைவுபடுத்தும்.
இரண்டாவது நிரவல் இசையிலும் இந்தப் புல்லாங்குழல் இசையின் தொடர்ச்சி வரும். அதைத் தொடர்ந்து ‘தரரத் தரரத் தா’ என்று ஆர்ப்பரிக்கும் குதூகலத்துடன் சரணத்தைத் தொடங்குவார் எஸ்.பி.பி. 80-களில் வானொலி நிகழ்ச்சிகளின் முகப்பு இசையாக இப்பாடலின் இசை பயன்படுத்தப்பட்டது. பழங்குடியினத் திருமண நிகழ்ச்சியொன்றில் பாடப்படும் ‘கன்னிப் பொண்ணு கைமேலே’ பாடலை மலேசியா வாசுதேவனும், பி.சுசீலாவும் பாடியிருப்பார்கள்.
முற்றிலும் வேறுவிதமான தாளக்கட்டுடன் தொடங்கி, வேறு திசையில் பயணிக்கும் ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ பாடல் இளையராஜாவின் ராஜ முத்திரைகளில் ஒன்று. கரும்பச்சைப் பாறைகளில் தெறித்து ஓடி, கூழாங்கற்களின் மீது படரும் ஓடையைப் போல் தபேலா, டிரம்ஸின் கூட்டுக் கலவையின் தொடர்ச்சியாக ஜலதரங்கம். ஓடை நீரில் கால் நனைக்கும் சுகத்துடன் ஜானகியின் ஆலாபனை என்று வர்ணிப்புகளுக்கு அப்பாற்பட்ட சுகந்தத்தைத் தரும் முகப்பு இசை அது.
நிரவல் இசையில் ஜலதரங்கம், பேஸ் கிட்டார், எலெக்ட்ரிக் கிட்டார், வயலின், புல்லாங்குழல் என்று நான்கு நிமிடப் பாடலில் ஒரு காவியத்தையே படைத்திருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில், விட்டு விட்டு ஒலிக்கும் பறவையின் குரலை ஓடைக் கரையில் அமர்ந்து கேட்கும் சுகத்தை இசையாக வார்த்திருப்பார். நந்தவனம், பூஞ்சோலை போன்ற வார்த்தைகளுக்கு இசையால் வடிவம் கொடுத்த பாடல் இது.
எஸ்.பி.பி. பாடிய ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’ பாடல் இப்படத்தின் மொத்தச் சூழலையும் சொல்லிவிடும். குடும்பத்தினரின் ஆதரவில்லாமல், கையில் பணமுமில்லாமல் தவிக்கும் கார்த்திக், அன்பைத் தவிர வேறு எந்த ஆபரணமும் இல்லாத தனது காதலியை ராஜகுமாரியாக வர்ணித்துப் பாடும் பாடல் இது. பல்லவியை எஸ்.பி.பி. தொடங்கியதும் வசந்தத்தின் வருகையை உணர்த்தும் புல்லாங்குழல் ஒலிக்கும்.
முதல் நிரவல் இசையில் வசந்தத்தின் இனிமையை உணர்த்தும் வயலின் இசைக்கோவை, கிட்டார் இசையைத் தொடர்ந்து களிப்பூட்டும் ஒற்றை வயலினை ஒலிக்கவிடுவார் இளையராஜா. கூடவே துள்ளலான டிரம்ஸ் தாளம். இளம் காதலர்களை வாழ்த்தும் இயற்கையின் பிரத்யேக மொழிபோல் அது ஒலிக்கும். பாடல் முழுவதுமே இயற்கையின் பேரழகைப் பிரதிபலிக்கும் இசைக்கோவைகளைத் தந்திருப்பார்.
இளையராஜாவின் பெரும் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று எஸ்.பி.பி. பாடிய ‘பனிவிழும் மலர்வனம்’. பாடலின் தொடக்க வரியே பனிக்காலப் பூந்தோட்டத்தின் காட்சியை உணர்த்திவிடும். காதலில் உறைந்திருக்கும் மனம் மெல்ல மவுனத்தைக் கலைப்பதுபோல், கிட்டார் இசை மெலிதாக ஒலிக்கத் தொடங்கும். ‘…உன் பார்வை ஒரு வரம்’ எனும் வரிகளை ஆமோதித்து ஆசி வழங்குவதுபோல், இயற்கை வயலின் இசைக்கோவையை வழங்கியிருப்பார் இளையராஜா.
வாவா பெடல் (wah wah pedal) எனப்படும் கருவியுடன் சேர்ந்து ஒலிக்கும் கிட்டார் இளமைத் துள்ளலை இரட்டிப்பாக்கியிருக்கும். முதல் நிரவல் இசையில் புல்லாங்குழலுக்கும் வீணைக்கும் இடையிலான உரையாடல்; அதைத் தொடர்ந்து, மெல்லிய வெயிலுக்கு நடுவே வீசும் தென்றலைப் போன்ற வயலின் இசைக் கீற்று; அதனுடன் கலக்கும் நறுமணத்தைப் போல் ஒரு வயலின் கோவை; எதிர்பாராத இடத்தில் ஒரு தபேலா தாளம் என்று திரையிசைப் பாடல் ஒன்றைச் சமகாலத்திலேயே காவியமாக்கும் அளவுக்கு அற்புதமான இசையமைப்பை இப்பாடலுக்கு வழங்கியிருந்தார் இளையராஜா. ’தழுவிடும்பொழுதிலே இடம் மாறும் இதயமே’ எனும் வரி வைரமுத்துவின் அசாத்திய கற்பனை.
காதலியின் பிரிவை நினைத்து வாடும் காதலன் பாடும் ‘நினைவெல்லாம் நித்யா நித்யா’ எனும் குறும்பாடலும் இப்படத்தில் உண்டு.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st November 2015, 08:27 PM
#1634
Junior Member
Veteran Hubber
On behalf of NT/GG threads...
ஏதோ மனிதர் பிறந்துவிட்டார் என்றில்லாமல் இதோ ஒரு மனிதர் தனது பிறவிப் பயனை வெல்லமுடியாத வெல்லமான வெள்ளமான எழுத்தாற்றலால் மெழுகுவர்த்தியாக கரைந்து ஒளிர்ந்து ஏனைய மனித மனங்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு நிகழ்கால சாட்சியாக அசத்தியடிக்கும் விற்பன்னர் வாசு சாருக்கு நடிகர்திலகம் / காதல் மன்னர் திரிசார்ந்த மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Happy Birthday Vasu Sir
senthil
Last edited by sivajisenthil; 22nd November 2015 at 07:06 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
22nd November 2015, 07:34 AM
#1635
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
22nd November 2015, 07:43 AM
#1636
Junior Member
Veteran Hubber
Heroines Swap Songs! / Paradox Error!
கதாநாயகர் வில்லன் கண்களில் கதாநாயகியர் இடமாறு தோற்றப்பிழை!!
ஒருதலைக் காதலில் நாயகியர் வீழும்போது நாயக வில்லன்களில் கண்களில் இடமாறு தோற்றப்பிழை காரணமாக சரோஜாதேவி மட்டுமே தெரிவாராம் !!
Last edited by sivajisenthil; 22nd November 2015 at 07:46 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
22nd November 2015, 10:11 AM
#1637
Senior Member
Diamond Hubber
அன்போடு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அருமை சகோதரர்கள்
எங்கள் செல்லக்குட்டி சின்னா
எஸ்.வாசுதேவன் சார்
செந்தில்வேல் சார்,
ராகவேந்திரன் சார் (தொலைபேசியிலும்)
வினோத் சார் (தொலைபேசியிலும்)
சிவாஜி செந்தில் சார் (தொலைபேசியிலும்)
மற்றும் தொலைபேசியில் வாழ்த்துக்கள் தெரிவித்த முரளி சார், பம்மலார் சார், கோபால் சார், மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிறந்த நாள் வாழ்த்துக்களாக எஸ்.எம்.எஸ்.களாக அனுப்பி என்னைத் திக்குமுக்காடச் செய்த எனதருமை ராஜேஷ்ஜி, பம்மலார் சார், ரவி சார் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
Last edited by vasudevan31355; 22nd November 2015 at 10:15 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 5 Likes
-
22nd November 2015, 10:16 AM
#1638
Senior Member
Senior Hubber
குட்மார்னிங் ஆல்..
வாசு..பிறந்த நாள் எப்படிப் போயிற்று (பதினெட்டு தானே.. உம்ம பையன் வயசைச்சொன்னேன் ஸ்வாமி..) நேற்றும் முன் தினமும் லொக் லொக் அண்ட் ஃபீவர்...கொஞ்ச்ம அழைத்த போது எங்கேஜ்டாகவே வந்தது.. இன்று முயல்கிறேன்..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd November 2015, 10:16 AM
#1639
Senior Member
Diamond Hubber
உடல்நிலை முடியாதபோதும் அதையும் பொருட்படுத்தாது அன்புடன் கைபேசியில் அழைத்து எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய அன்பு மது அண்ணாவிற்கு என்னுடைய ஸ்பெஷலான நன்றிகள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
madhu thanked for this post
-
22nd November 2015, 10:23 AM
#1640
Senior Member
Diamond Hubber
Originally Posted by
chinnakkannan
குட்மார்னிங் ஆல்..
வாசு..பிறந்த நாள் எப்படிப் போயிற்று (பதினெட்டு தானே..
உம்ம பையன் வயசைச்சொன்னேன் ஸ்வாமி..) நேற்றும் முன் தினமும் லொக் லொக் அண்ட் ஃபீவர்...கொஞ்ச்ம அழைத்த போது எங்கேஜ்டாகவே வந்தது.. இன்று முயல்கிறேன்..
ஹாய் சின்னா!
எப்படியிருக்கீங்க? நம் மய்ய நண்பர்களால் பிறந்த நாள் அமர்க்களமாகப் போயிற்று. மது அண்ணா போன் பண்ணி வாழ்த்தியது பாக்கியம். ஜி எஸ்.எம்.எஸ் அனுப்பித் தள்ளிவிட்டார். முரளி சார் வாழ்த்துக்கள் அளித்தார். தொடர்ந்து நமது ரசிக வேந்தர் ஆசிகள் தந்தார். காலையில் நமது சிவாஜி செந்தில் சார் போனில் வாழ்த்தினார். நேற்று முழுதும் கைபேசியிலேயே நேரம் கழிந்தது.
எப்படியிருக்கீங்க சின்னா! ஆஹா! உங்க காலை மிஸ் பண்ணிட்டேனே! போன் காலைச் சொன்னேன் சாமி! (நாங்களும் வாருவோமில்லே.... காலை) லொக் லொக் தேவலையா? ஃபீவர் குறைஞ்சுதா? டாகடரிடம் போகலையா? 'எதிர்நீச்சல்' இருமல் தாத்தா ஞாபகம் வருது. உடம்பைப் பார்த்துக்கோங்க.
ஏன் மதுர கானங்கள் கொஞ்சம் மௌனமாயிடுத்து?
Last edited by vasudevan31355; 22nd November 2015 at 10:48 AM.
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks