-
3rd November 2015, 08:31 AM
#1321
Senior Member
Veteran Hubber
Originally Posted by
madhu
vathiyarayya...
tamil remake film name Praptham illaiyo ? engal kudumbam perusu... innum kooda pazhasu.. ( adhuve kannada school master-in dubbing enru ninaikiren )
Thanks madhu ! You are right. Corrected!
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
madhu thanked for this post
-
3rd November 2015 08:31 AM
# ADS
Circuit advertisement
-
3rd November 2015, 08:43 AM
#1322
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
madhu
vathiyarayya...
tamil remake film name Praptham illaiyo ? engal kudumbam perusu... innum kooda pazhasu.. ( adhuve kannada school master-in dubbing enru ninaikiren )
Engal Kudumbam Perisu and School Master Kannada separate productions.
EKP is an original Tamil film.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd November 2015, 08:55 AM
#1323
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
உத்தரவின்றி உள்ளே வா..
ஏராளமான புதிய தலைமுறை ரசிகர்களை பாலுவிற்கு உண்டாக்கிய பெருமை படைத்த பாடல்.
குறிப்பாக மாதமோ ஆவணி அந்தக் காலத்தில் பல இளம்பெண்களை பாலாவின் ரசிகர்களாக மாற்றியதை நான் பார்த்திருக்கிறேன்.
உத்தரவின்றி உள்ளே வா வெளியான சென்னை சித்ரா தியேட்டரில் பாவாடை தாவணியுடன் பல கல்லூரி மாணவிகள் பகல் காட்சியில் இந்தப் பாடல் முடிந்தவுடன் எழுந்து போய் விடுவார்கள்.
எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம் படங்களோடு இரு துருவம் படமும் தீபாவளிக்கு வெளிவருவதாயிருந்தது. அது தள்ளிப்போய் உத்தரவின்றி உள்ளே வா படத்தோடு வெளியானது. சுமதி என் சுந்தரி வரும் வரையில் சித்ராவில் உத்தரவின்றி உள்ளே வா திரையிடப்பட்டது என நினைவு.
அந்தப் பொங்கலில் நமக்கு ஒரே சமயத்தில் மவுண்ட் ரோட்டில் மூன்று தியேட்டர்களில் தலைவரின் படங்கள் - சாந்தியில் எங்கிருந்தோ வந்தாள், அதற்கு அடுத்த தியேட்டரான தேவி பேரடைஸில் சொர்க்கம், வெலிங்டனில் இருதுருவம்.
மறக்க முடியாத நாட்கள்.
இப்போது படத்திற்கு வருவோம். காலேஜ் ஹாஸ்டலில் மதிய வேளையில் கிராமஃபோன் ரிக்கார்டுகளில் பாடல்களைப் போடுவார்கள். சில நாட்கள் சாப்பிடக் கூட மறந்து விடுவேன். நேராக ஹாஸ்டலுக்கு போய் பாட்டுக் கேட்பது தான் முதல் வேலை. ஒரு மணி நேரம் போவது தெரியாது. அதில் தான் ஏராளமான பாடல்கலைக் கேட்டு ரசித்திருக்கிறேன். அதில் உத்தரவின்றி உள்ளே வா பாடலுக்கு தனியிடம் உண்டு. அதுவும் அந்த பகல் வேளையில் இந்த மாதமோ ஆவணி பாடலைக் கேட்டால் அப்படியே உண்ட களைப்புடன் பல நண்பர்கள் தூங்கியே விடுவார்கள். அப்படி ஒரு சொக்க வைக்கும் பாடல். உத்தரவின்றி உள்ளே வா பாடலை எப்போது கேட்டாலும் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்து விடுகின்றன. அப்படி ஒரு சூப்பர் ஹிட் மியூஸிகல் திரைப்படத்தின் முதல் பாடலை அட்டகாசமாக எழுதியிருக்கிறார்கள்.
தங்களுக்கு பாராட்ட சொல்வதற்கும் எங்களுக்கு நீங்களே பாடம் எடுத்து விடுங்கள். மொழியில் வார்த்தைகள் தெரியாமல் தவிக்கிறோம்.
Last edited by RAGHAVENDRA; 3rd November 2015 at 09:05 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
3rd November 2015, 10:26 AM
#1324
Senior Member
Senior Hubber
//தங்களுக்கு பாராட்ட சொல்வதற்கும் எங்களுக்கு நீங்களே பாடம் எடுத்து விடுங்கள். மொழியில் வார்த்தைகள் தெரியாமல் தவிக்கிறோம் // ட்ரூ.. ஒரு விஷயம் எழுதறதோ ஒரு கவிதை கதை கட்டுரை எழுதறதோ எனக்கு க் கொஞ்சம் மெனக்கெட்டா வந்துடும்.. அதாவது வந்தது போலக் காண்பிக்கும்..ஆனா ஒரு பாட்டு ந்னு ஒண்ணு எடுத்து..
அதை சின்சியரா அனலைஸ் பண்ணி(அதுக்காக குப்பையாய் இருந்தாலும் படத்தைப் பார்த்து) ஒவ்வொருவரி, ஒருவாயசைப்பு,லொக்கேஷன் டைமிங்க்ஸ் எல்லாம் சொல்றதுங்கறது கொஞ்சம் கஷ்டம் தான் (அதுவும் நகைச்சுவை கலந்து) இதுல பக்கெட்-ஃப்ரோஷன் ஷாட் எடுத்து அதைப் போடுவது- பின் கலர் கலர் எழுத்துக்களுக்கு ஃபாண்ட் கலர்னு கமெண்ட் கொடுத்து..
பின் வரிவரியா ஸ்பெல் செக் பண்ணிப் போடறதுங்கறது க்ரேட் தான்..எதுக்காக இந்த மாதிரி பண்ணனும்..
நம் போன்ற நண்பர்களுக்காகவா.. படிக்கும் வாசகர்களுக்காகவா..
ஆமாம் என்றாலும் இன்னொன்றும் உண்டு..எதை எழுதுவதானாலும் சுவாரஸ்யமாக இ ருக்க வேண்டும், இன்னிக்கு மட்டும் படிச்சுட்டு யர்ரும் மறந்துடக் கூடாது -பின்னால பலவருஷம் கழிச்சுப் படிச்சாலும் நமக்கும் சுவாரஸ்யமா இருக்கவேண்டும்- பிறருக்கும் இருக்க வேண்டும் என மனதுக்குள் தோன்றிய சின்சியாரிட்டி -எழுத்து ஒரு தவம்..அதை இனிதே செய்யவேண்டும் என்ற எண்ணம் -இது எல்லாருக்குமே சுலபத்தில் வாய்க்காது- வாசுவிற்கு ஆரம்ப முதலே வாய்த்திருக்கிறது..எனில் கலக்கிக் கொண்டிருக்கிறார்..ருப்பார்..
வாழ்த்துக்கள் வாசு..நன்றி.. உம்மைத் தெரிவது இனியது உம்மைத் தெரிந்தது இனியது எம் வாழ்க்கையில்
Last edited by chinnakkannan; 3rd November 2015 at 10:28 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
3rd November 2015, 11:11 AM
#1325
Senior Member
Senior Hubber
மிஸ்ஸம்மா (தெலுங்கு)
மிஸ்ஸியம்மா (தமிழ்)
மிஸ் மேரி (ஹிந்தி மற்றும் மலையாளம்)
மலையாளத்தில் பிரேம் நசீர்
ஏ.ஆர்.ரகுமானின் தந்தை திரு ஆர்.கே.சேகர் இசை
எனையாளும் மேரி மாதாவிற்கு இணை
நீ எண்டே வெளிச்சம் இசையரசியின் குரலில். வரிகள் ஸ்ரீகுமாரன் தம்பி
பிருந்தவானமும் நந்தகுமாரனும் பாடலின் இணை
மணிவர்ணன் இல்லத்த விருந்தாவனம்
ஜமுனாவின் வேடம் நம் ஜெயாவிற்கு
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
3rd November 2015, 11:17 AM
#1326
Senior Member
Senior Hubber
குமார சம்பவம் திரையில் தேவராஜனின் இசையில் லீலாம்மா மற்றும் ராதா ஜெயலெக்*ஷ்மியின் குரல்களில் மிகவும் கடினமான பாடல்
ஆடல் : ராஜஸ்ரீ மற்றும் ஸ்ரீவித்யா
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
3rd November 2015, 04:46 PM
#1327
Senior Member
Diamond Hubber
அடேங்கப்பா!
'உத்தரவின்றி உள்ள வா' படத்துக்கும், அதன் பாடல்களுக்கும்தான் எவ்வளவு ரசிகர்கள்! எத்துணை ரசிப்புத்தன்மை!
பாலா தொடரின் பதிவைப் பாராட்டிய அத்தனை பேருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி!
ஜி, மதுண்ணா, சித்தூரார், வினோத் சார், ராகவேந்திரன் சார், கோபு சார், சின்னா, ஆதிராம் சார் அனைவருக்கும் நன்றிகள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
3rd November 2015, 05:09 PM
#1328
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்!
கொன்னுட்டீங்க! சுவையான தகவல்கள். 'உத்தரவின்றி உள்ளே வா' ரிலீஸ்... அவ்வமயம் வெளியான நடிகர் திலகத்தின் 'இரு துருவம்' பற்றிய குறிப்புகள்... (1971 பொங்கலில் நமக்கு ஒரே சமயத்தில் மவுண்ட் ரோட்டில் மூன்று தியேட்டர்களில் நீங்கள் சொன்னபடி தலைவரின் 3 படங்கள் - சாந்தியில் 'எங்கிருந்தோ வந்தாள்', அதற்கு அடுத்த தியேட்டரான தேவி பேரடைஸில் 'சொர்க்கம்', வெலிங்டனில் 'இருதுருவம்'. உத்தரவின்றி உள்ளே வா மற்றும் இருதுருவம் படங்களின் பொங்கல் ரிலீஸின் போது (1971 ஜனவரி 14) சொர்க்கமும், எங்கிருந்தோ வந்தாளும் வெற்றிகரமாக 78 ஆவது நாட்களை தொட்டிருந்தன. இதற்கு முன்னம் நடுவில் நவம்பர் 11-ல் (1970) எனக்கு மிக மிகப் பிடித்த, எங்கள் கடலூரில் ஷூட்டிங் எடுக்கப்பட்ட தலைவரின் 'பாதுகாப்பு' படமும் வெளியாகியிருந்தது அல்லவா! இது போதாது என்று தொடர்ந்து பிப்ரவரி 6 ம்தேதி 'தங்கைக்காக' வேறு ரிலீஸ்.) இளைஞிகளையும் கவர்ந்த 'உத்தரவின்றி உள்ளே வா' பாடல்கள்....ஹாஸ்டலில் பாடல் கேட்டு மகிழ்ந்த அனுபவங்கள்... என்று இனிக்க இனிக்க பசுமையான அன்றைய தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு பெருமகிழ்ச்சியில் அனைவரையும் ஆழ்த்தி விட்டீர்கள்.
பதிவுகளுக்கான மேலதிக தகவல்கள் தருவதில் தாங்கள், ஆதிராம் சார், முரளி சார், நமது கார்த்திக் சார் இவர்கள் நால்வரையும் அடித்துக் கொள்ளவே முடியாது.
நான் சிட்டியில் இல்லாததால் இந்த விவரங்களெல்லாம் எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. கடலூரோடு கட்டுண்டது என் சினிமா வாழ்வு. பின் 'ஞான ஒளி' தேடித் தேடி பல ஊர்கள். சென்னை நிகழ்வுகளைப் பற்றி நீங்களும், கார்த்திக் சாரும் உங்கள் நினைவலைகளை எழுதும் போது 'அடடா! நாம் சென்னையில் இல்லாது போய் விட்டோமே...இருந்திருந்தால் இவர்களைப் போல பல விஷயங்களை எழுதி அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாமே' என்று சற்று பொறாமை கூட உங்கள் இருவரின் மேல் ஏற்பட்டதுண்டு. ஆனால் சென்னை நிகழ்வுகள், சின்னா, முரளி சாரால் மதுரை நினைவுகள், கிருஷ்ணா சாரால் நெல்லை நினைவுகள் என்று எனக்கு மகிழ்ச்சிக் கொண்டாட்டம்தான். அதற்காக உங்கள் அனைவருக்கும் என் நன்றி!
ரவியின் 'உத்தரவின்றி உள்ளே வா' நமது இன்னொரு 'சுமதி என் சுந்தரி' என்று சொன்னால் மிகையில்லைதானே?
Last edited by vasudevan31355; 3rd November 2015 at 05:35 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd November 2015, 05:56 PM
#1329
Senior Member
Diamond Hubber
ஆதிராம் சார்,
'சுடரும் சூறாவளியும்' படத்தின் பாலா பாடல் பதிவைப் படித்துப் பாராட்டியதற்கு நன்றி.
'சுடரும் சூறாவளியும்' பற்றி ரிலீஸ் சமயத்தில் குகநாதன் கூறியதை நன்கு நினைவு வைத்து தக்க தருணத்தில் அதைப் பதிவிட்டு பாலா தொடரின் பதிவைப் பெருமைப்படுத்தி விட்டீர்கள். நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. ஜெயா என்றாலே குகநாதன் சொக்கிப் போவார்.
குகநாதன் தயாரித்து கதை வசனம் எழுதிய 'தெய்வக் குழந்தைகள்' படத்தில் ஜெய் ஜோடி இவர்.
இந்தப் படத்தில்
'நான் எண்ணத்தில் நீந்தும் பெண்ணல்லோ
வண்ணங்கள் சூடும் செண்டல்லோ
மின்னலை வீசும் கண்ணல்லோ
வா வா'
என்ற மிக மிக அருமையான பாடல் ஒன்று ஜெயாவுக்கு சுசீலா குரலிலும் சி.ஐ.டி சகுந்தலாவுக்கு ஈஸ்வரி குரலிலும் ஒலிக்கும். என் உயிரான பாடல் இது.
இதே ஜெயா கொஞ்சம் குண்டடித்து 'கிரஹப்பிரவேசம்' படத்தில் சிவக்குமாரின் ஜோடியாக வருவார்.
அருமையான தகவல்களுக்கு நன்றிகள் ஆதிராம் சார்.
Last edited by vasudevan31355; 4th November 2015 at 05:41 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd November 2015, 07:02 PM
#1330
Senior Member
Diamond Hubber
Originally Posted by
RAGHAVENDRA
Engal Kudumbam Perisu and School Master Kannada separate productions.
EKP is an original Tamil film.
தாங்க்ஸ் ராகவ்ஜி... அதிமதுரா அனுராகா பாட்டு ரெண்டு படத்திலும் வருதே ! அதனால் அப்படி நினைத்தேன். அப்படின்னா அது ரீமேக்கா ?
விக்கியில் பி.ஆர்.பந்துலு தயாரிப்பில் கன்னடம், தமிழ் இருமொழிகளிலும் எடுத்த படம் என்று கொடுத்திருக்காங்க...
இதில்தானே நடிகர் திலகம் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் ? ( பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஆசிரியரைக் காக்கும் மாணவனாக )
இதே கதை மீண்டும் ஜெமினி, சௌகார் நடித்து ஸ்கூல் மாஸ்டராக வந்ததோ ?
Bookmarks