Page 117 of 337 FirstFirst ... 1767107115116117118119127167217 ... LastLast
Results 1,161 to 1,170 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1161
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    சிக்கா...

    எட்டாத உயரம் அல்ல எட்டாயிரம் இன்னும்
    எத்தனையோ எட்ட வேண்டும் நீர் சீக்கிரம்

    ஆமா.. அதென்ன பழைய பாட் என்பதால் மதுண்ணா... எனக்கு புத்ப் பாட் புடிக்தா என்ன ?

    இந்தப் பாட்டும் புடிக்கும் தெரிஞ்சுக்குங்
    தெகிடி பாட்டுக்கு நன்றி மதுண்ணா.. அதுல பார்த்தேள்னாக்க தெகிடி நல்ல சஸ்பென்ஸ் படம்..கொஞ்சம் ஃபேமஸான ஹீரோ போட்டு எடுத்திருக்கலாம்..அஷோக் செல்வனும் குறைவிலாமல் நடித்திருப்பார்.. செம முழி கொண்ட ஜனனி அய்யர்..கொஞ்சம் மஞ்சள் வெண்ணிலா போல வட்ட முகம்..பளீர் பல்வரிசை (கோல்கேட்டா க்ளோஸப்பா)

    படம்பார்க்கும்போதே வரிகள் வித்தியாசமாக இருக்கேன்னு நோட் பண்ணினேன்..பட் மறுபடி கேட்க பார்க்க ச் சந்தர்ப்பம் வரவில்லை.. நீங்க கொடுத்தீஙக்.. ஸோ..

    லிரிக்ஸ் எழுதினது கபிலனாம்.. (இவர் கபிலன் வைரமுத்து இல்லைன்னு நினைக்கறேன்)

    விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
    பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
    மழையின் இசைகேட்டு மலரே தலையாட்டு
    மழலை மொழிபோல மனதில் ஒரு பாட்டு
    இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
    காதல் இரண்டு எழுத்து

    நான் பேசாத மௌனம் எல்லாம்
    உன் கண்கள் பேசும்
    உன்னை காணாத நேரம் என்னை
    கடிகாரம் கேட்கும்
    மணல் மீது தூறும் மழை போலவே
    மனதோடு நீதான் நுழைந்தாயடீ
    முதன் பெண் தானே நீ தானே
    எனக்குள் நானே ஈர்ப்பேனே

    **

    நல்லாத் தான் இருக்கு வரிகள்..என்னைக் கவர்ந்த புது(?) பாடல்

    யுகபாரதி..தனக்கென ஒரு கோடெழுதி தாண்டாத கவிஞர்..எனக்கு மிகப் பிடிக்கும்..

    சிவப்பதிகாரத்தில் சட்டென மனம் கொய்யும் இரண்டாவது பாடல் (முதல்பாட் சித்திரையில் என்ன வரும்)

    அடிதொட முடிதொட
    ஆசை பெருகிட
    நேரும் பலவித பரிபாஷை

    பொடிபட பொடிபட
    நாணம் பொடிபட
    கேட்கும் மனதினில் உயிரோசை

    முடிதொட முகந்தொட
    மோகம் முழுகிட
    வேர்க்கும் முதுகினில் இதிகாசம்

    உருகிட பருகிட
    ஏக்கம் இளகிட
    கூடும் அனலிது குளிர்வீசும்

    தளும்பினேன் எனைநீதொட
    மயங்கினேன் சுகம்சேர்ந்திட
    குலுங்கினேன் உடல்கூசிட
    கிறங்கினேன் விரல்மேய்ந்திட
    பாய்ந்திட ஆய்ந்திட

    காணுகின்ற காதல்
    என்னிடம் நான்
    தேடுகின்ற யாவும்
    உன்னிடம்

    உடலெது உடையெது
    தேடும் நிலையிது
    காதல் கடனிது அடையாது

    இரவெது பகலெது
    தேங்கும் சுகமிது
    சாகும் வரையிலும் முடியாது

    கனவெது நினைவெது
    கேட்கும் பொழுதிது
    காமப் பசிவர அடங்காது

    வலமெது இடமெது
    வாட்டும் கதையிது
    தீண்டும் வரையிலும் விளங்காது

    உறங்கலாம் அதிகாலையில்
    ஒதுங்கலாம் இனிமாலையில்
    தயங்கலாம் இடைவேளையில்
    நிரம்பலாம் உயிர்ச்சோலையில்
    கூடலில் ஊடலில்

    காணுகின்ற காதல்
    என்னிடம் நான்
    தேடுகின்ற யாவும்
    உன்னிடம்

    அற்றை திங்கள் வானிடம்
    அல்லிச் செண்டோ நீரிடம்
    சுற்றும் தென்றல் பூவிடம்
    சொக்கும் ராகம் யாழிடம்

    காணுகின்ற காதல்
    என்னிடம் நான்
    தேடுகின்ற யாவும்
    உன்னிடம்

    ஏற்கெனவே சொல்லியிருக்கிறேனா என நினைவில்லை..பட் மிக மனங்கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று..(ராகதேவன் என்னவாக்கும் ராகம்)

    மறக்காததற்குக் காரணம் ஹீரோயின் மம்தா மோகன் தாஸ்.. அழகு மட்டுமல்ல அவரது மனவுறுதியினாலும் தான்..இன்னும் நோயை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்..



  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1162
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Chinna kabilan veru, kabilan vairamuthu veru


  5. Likes chinnakkannan liked this post
  6. #1163
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    என் சின்னக் கண்ணா! செல்லக் கண்ணா!



    8000 பதிவுகளை அள்ளித் தெளித்து விட்டீர்களே இதுவரை! ஒவ்வொன்றுக்கும் கடின உழைப்பு. ஏனோதானோ என்றில்லாமல் கருத்துச் சிரத்தை காமெடி வாக்கியங்களுடன். அப்படியே கவிதை வடிவங்களிலும். ஒவ்வொன்றையும் படித்து கருத்துக் கூறும் சுவாரசியம்.

    அது போல மற்றவருக்கு நன்மை விளைவிக்கும் அதிக சந்தேக பதிவுகள். நைசாக வேலை வாங்கும் திறன். எல்லாம் நன்மைக்கே. உவகையாய் பதில் சொல்லக் கூடிய சந்தேககங்கள்.

    புதுத் தேடலில் கொஞ்ச நாளாய் மனம் அவ்விடத்தில் லயித்துக் கிடப்பதும் இந்தப் பாம்பு அறியும்.

    வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்...

    உம்மைவிட அதிக சந்தோஷம் பெறுபவன் அடைபவன் நானே!
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Thanks chinnakkannan thanked for this post
    Likes rajeshkrv, Russellmai liked this post
  8. #1164
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    இதோ இன்னும் சில ராணிகள்.

    உமக்குப் பிடித்த (எனக்கு நன்றாகத் தெரியும்)

    'கல்லூரி ராணிகாள்
    உல்லாசத் தேனிகாள்'

    அப்புறம்

    'முகத்தில் முகம் பார்க்கலாம்' படத்தில் நம்ம ரேடான் ராதிகா நம்ம முன்னாள் வில்லன் ஸ்ரீகாந்த் முன்னால் 'நான் ஒரு ராணி' என்று நீச்சல் குளத்தில் பிகினியில் பின்னி எடுக்கும் ஜானகியின் அருமையான பாடல்.

    ராதிகாவை அப்போது பார்க்கும் போது அப்படியே சிங்கள முகம் அப்பட்டமாகத் தெரிகிறது. குண்டு மூஞ்சி..வெளியே தெரியும் பெரிய பளீர் பற்கள் என்று. அதுவும் சைட் போஸ்களில் இலங்கைப் பெண் போலவே தோற்றமளிக்கிறார். இப்போது பார்த்தால் அப்படியா இருக்கிறார் சித்.................தி.

    நல்ல பாடல் சின்னா. பாருங்கள்.



    அடுத்து,

    கமலின் 'காதல் மகராணி கவிதைப் பூ விரித்தாள்' (போட்டாச் தெரியல!?)


    'பக்காத் திருடன்' படத்துல 'பெண்ணே வா சின்ன ராணி' நாகேஸ்வரராவும், ஜமுனாவும்.

    'மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி'

    'நான் சின்ன ராணி செவத்த ராணி' சில்க் டான்ஸ். அதிசயப் பிறவிகள் படத்துல



    'மாயாவி'யில,

    'சீட்டுக்கட்டு ராணி போல தேடி ஒன்னக் கொண்டு வந்து விட்டு விட்டு ஓடலாமா'? புருஷன், பொண்டாட்டி நடிச்சது.

    'என்ன மகராணி அழகு அழகு' பாலா தொடர்ல டீடெயில்ஸ் பார்க்கலாம்.

    'அழகுராணி கதை இது' நீங்க அடிக்கடி மறந்து போகும் மஞ்சு பாடல்.

    'அந்த சில நாட்கள்' படத்துல 'ராஜா ராணி ராஜ்ஜியம்'

    'சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் ச்சம் ச்சம்' பிரபு பாடலில் (மை டியர் மார்த்தாண்டன்)'ராணி தேனி வாநீ'

    'மைக்'கும், பூர்ணிமா பாக்கியராஜும். (ராஜா ராணி ராஜ்ஜியம்)

    'பார்வை யுவராணி கண்ணோவியம்'

    'குட்டி' படத்தில் 'சின்ன மகராணி சிரிக்கும் சிரிப்பு கோயில் மணியோசை போல'



    'சரசராணி கல்யாணி' (ராஜா தேசிங்கு)

    'ஜிம்போ' படத்துல 'நான் ராணி...அன்பே நீ'

    Last edited by vasudevan31355; 29th October 2015 at 09:06 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  10. #1165
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சி.க. சார்
    உங்க சின்ன ராணி இந்த செல்ல ராணிக்கு சீனத்துப் பட்டு மேனியாம்...

    நான் சொல்லவில்லை.. பாட்டிலேயே வருது..



    என்ன மாதிரி பக்திப்படம் தாய் மூகாம்பிகை.. அதில் தான் இந்தப் பாட்டு...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai, rajeshkrv liked this post
  12. #1166
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like



  13. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  14. #1167
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like







  15. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  16. #1168
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: from facebook

    An epic classic film Karnan...a film which can never be made again .
    Most of the main people involved in the making of the movie are no more with us ..but what a legacy they have left behind....and superb songs....

    கண்ணுக்கு குலமேது ....
    கண்ணா கருமைக்கு இனம் ஏது.................
    படம் : கர்ணன் ( 1964)
    இசை : எம்.எஸ். விஸ்வநாதன் TK . ராம மூர்த்தி
    பாடியவர் :பி.சுசீலா
    வரிகள் : கண்ணதாசன்
    கண்ணுக்கு குலமேது (2)
    கண்ணா கருமைக்கு இனம் ஏது
    கண்ணுக்கு குலமேது
    கண்ண கருமைக்கு இனம் ஏது
    கண்ணுக்கு குலமேது
    விண்ணுக்குள் பிரிவேது.. கண்ணா
    விண்ணுக்குள் பிரிவேது .. கண்ணா
    இழப்புக்கு இருளேது..
    கண்ணுக்கு குலமேது
    கண்ண கருமைக்கு இனம் ஏது
    கண்ணுக்கு குலமேது
    பாலில் இருந்து…. ஆ..ஆ
    பாலில் இருந்து நெய் பிறக்கும்.. கண்ணா
    பரம்பொருள் கண்டே உயிர் பிறக்கும்
    வீரத்தில் இருந்து குலம் பிறக்கும்
    அதில் மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும்
    கண்ணுக்கு குலமேது
    கண்ண கருமைக்கு இனம் ஏது
    கண்ணுக்கு குலமேது
    கொடுப்பவர் இல்லாம்.. கொடுப்பவர் எல்லாம் மேலாவார்
    கையில் கொள்பவர் எல்லாம் கீழாவார்
    தருபவன் அல்லவோ கண்ணா நீ
    தருமத்தின் தாயே கலங்காதே..
    கண்ணுக்கு குலமேது
    கண்ண கருமைக்கு இனம் ஏது
    கண்ணுக்கு குலமேது

  17. Likes Russellmai, chinnakkannan liked this post
  18. #1169
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    8000 பதிவுகள் வழங்கிய திரு சின்னகண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .
    எத்தனை கவிதைகள்
    எத்தனை நயமான கதைகள்
    புதுமையான பாடல்கள்
    அத்தனையும் அருமை .
    ராணிக்கான என்னுடைய பங்களிப்பு

    ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் .

  19. Thanks chinnakkannan thanked for this post
  20. #1170
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாழ்த்துக்கள் சொன்ன அன்பு நண்பர்கள் வாசுவிற்கும் எஸ்வி க்கும் மிக்க நன்றி..வேலைப்பளு காரணமாக எதுவும் எழுத இடவில்லை..

    ஆஹா எத்தனை ராணிகள் வாசு,ராகவேந்தர்,ராஜேஷ், எஸ்வி.. மிக்க நன்றிஒவ்வொன்றாய்ப் பார்க்க வேண்டும்..

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •