Page 48 of 337 FirstFirst ... 3846474849505898148 ... LastLast
Results 471 to 480 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #471
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    சி க !
    கும்நாம் (And Then ..there were None by Agatha Christie) சாயலில் வீணை பாலசந்தர் இயக்கத்தில் வந்த நடு இரவில் படத்தை விட்டு விட்டீர்களே !



    கும்நாமில் முகமது ரபியின் சுறுசுறு பாடல் !

    Last edited by sivajisenthil; 8th October 2015 at 12:16 AM.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #472
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆமாம் சி.செ. பட் நடு இரவில் பத்தி முன்னால பேசிய நினைவு.. பட் இந்த அண்ட் தென் தேர் வேர் நன்.. டைட்டில் சொன்னீங்களே..மத்யானத்துக்குள்ள இருந்து நன்னா யோசிச்சு யோசிச்சு காஞ்சு போய்ட்டேன்.. தாங்க்ஸ்.. கண் பார்த்த ஜாடையிலே காவியம் கண்டேன் மறக்க முடியுமா.. அந்தப் படத்துல ஆத்தோரம் எல்லா பாடியையும் புதைக்கறமாதிரி காட்டுவாஙக்..கதையில் ஒரு அறையில் போட்டிருப்பார்கள்.. கதையில் வில்லன் ஒரு ஜட்ஜ் என நினைவு..கடைசியில் அவரும் இறந்த்ருப்பார்..

    இதையே வைத்து சமீபத்தில் பத்து வருடம் இருக்குமா ஐந்து வருடமா நினைவில்லை.. ஒரு கலர்ப் படமும் வந்தது..ஸ்ரீமன் என நினைவு..

    நடு இரவில் படத்தில் கொலைகள்..பக் பக்கென இருக்கும்.. அம்மா வோட பீரோவத் தெறந்து பணம் எடுக்கலாம்னு போனா அங்கிருந்து அம்மாவான எஸ்.என்.லட்சுமி சரிவார்..விஷம் சாப்பிட்ட பால் குடித்த சித்தப்பா உத்தரத்தில் தொங்குவார்.. கெக்கெகெக்கே என சிரித்தபடி மாடியிலிருந்து எட்டிப் பார்க்கும் பண்டரிபாயைத் தள்ளிவிடும் இருகைகள் சர்ரியான த்ரில் படம்..வீணை எஸ்.பாலச்சந்தருக்கு ஒரு ஓ..சோ வின் இரண்டாவது படம் என நினைக்கிறேன்..முதல்படம் பா.ம.பா. இல்லியோ..

  5. Likes Russellmai, eehaiupehazij liked this post
  6. #473
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சி.செ.ஜி... இரவும் பகலும் படத்தில் கூத்தாடுவது ஏ.சகுந்தலா என்றுதான் நினைக்கிறேன். ஆண் யாரோ தெர்லீங்

  7. Thanks eehaiupehazij thanked for this post
  8. #474
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    அதென்னது ? எல்லோரும் வெள்ளை டிரஸ் போட்டு மல்லிப்பூ வச்ச பெண் ஆவி/பேய்/பிசாசுகளை பத்தியே பேசறீங்க ?

    இளம்பெண்ணை சுற்றும் ஆண் ஆவி ஒண்ணு இருக்கே... கண்டுக்க மாட்டீங்களா ?



    எத்தனையோ பேய் இருக்கு நாட்டுக்குள்ளே என்று அம்ம்மா சொல்வது கேக்குதா ?


  9. Thanks eehaiupehazij thanked for this post
  10. #475
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post


    ஹாய் ..

    செளக்கியமா.. (என்னது இதுவரைக்குமா..)

    யா.வ. வானம்பாடிமகன் பார்த்தது சிந்தாமணியில் புகையாய் நினைவிருக்கிறது..இந்த ஜாம் ஜாம் பாட்டு படத்தில் மற்றும் இசைக்களஞ்சியத்தில் ஓரிரு தடவைகள் கேட்டதுண்டு..

    மோகினி பேய் என்று பதிவுகள்..இருந்தாலும் கும்னாம்போடவில்லையே.. பேய் வர்ராட்டாலும் அந்தக் குரல்.. இதுவே தமிழில் நாளை உனது நாள் என வர...அதுவும் சக்தி தியேட்டரில் சரியாக ஐந்து மணிக்கு (மதியக்காட்சி இறுதி) கரெண்ட் போய் ஆறுமணிவரை வெய்ட் செய்து கரெண்ட் வராததினால் க்ளைமேக்ஸ் பார்க்காமல் வந்தது ஒரு தனி அனுபவம்..

    ம்ம் வாரேன் பின்ன..




    கும்னாம் ஹை கோயி எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  11. Likes chinnakkannan liked this post
  12. #476
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like

  13. Likes Russellmai liked this post
  14. #477
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=g94127302;1257856]செந்தில் வேல் - உங்களையும் , செந்தில் சாரையும் விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் - உங்கள் உழைப்பில் எனக்கு என்றுமே அரிமா எப்படி செல்கிறது? - சிங்க நடையைப்பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று கேட்க்கிறீர்களா ?? உங்களுக்காக 16 வார்த்தைகளில் இராமாயணம் -

    தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.வாசு சாரையும் அழைத்து வாருங்கள்.

    16 வார்த்தை ராமாயணம் அருமை.


    [

  15. #478
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய மதிய வணக்கம்


  16. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  17. #479
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு வார்த்தை பல லட்சம் புண்ணியங்கள் !!!

    மது சார் - இந்த பதிவு உங்களுக்காக !

    ஒரே வார்த்தையைக்கொண்டு மாயா ஜாலம் செய்தவர்கள் நம் முன்னோர்கள் - அதில் புதைந்திருக்கும் கருத்துக்கள் நம்மையெல்லாம் இன்னும் வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன .


    பதிவு 1

    கிருஷ்ணம் , கிருஷ்ணாஷிரியம் கிருஷ்ணம்
    கிருஷ்ணம் , கிருஷ்ணாஷிரியம் ததா
    கிருஷ்ணம் , கிருஷ்ணாஷிரியம் கிருஷ்ணம்
    கிருஷ்ணம் , கிருஷ்ணாஷிரியம் பஜே

    ஒவ்வொரு கிருஷ்ணனுக்கும் ஒவ்வொரு அர்த்தம் . கிருஷ்ணம் என்ற சொல்லுக்கு பல வேறு அர்த்தங்கள் உண்டு . இந்த பாடலை எடுத்துக்கொள்ளுங்கள் - எவ்வளவு கிருஷ்ணர்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிய வரும் . நம் கண்ணதாசனும் இந்த பாடலைக்கேட்டபின் தான் " கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா " என்ற காலத்தினால் அழிக்க முடியாத உன்னத பாடலை தந்துள்ளார் . ஒரு வித்தியாசம் - கண்ணதாசனின் அந்த பாடலில் கிருஷ்ணன் ஒன்று ஆனால் கோரிக்கைகள் பல . நாம் எடுத்துக்கொண்ட இந்த பாடலில் கோரிக்கை ஒன்று , கிருஷ்ணர்கள் பல .

    இந்த பாடலில் 8 மொத்தம் கிருஷ்ணர்கள்

    1. கிருஷ்ணன் : மஹா பாரதத்தை எழுதிய வியாசரின் பெயரும் "கிருஷ்ணன் " தான் .

    2. அர்ஜுனனுக்கும் " கிருஷ்ணன் " என்ற பெயர் உண்டு .

    3. திரௌபதிக்கும் " கிருஷ்ணா " என்று பெயர் .

    4. யமுனை நதிக்கும் " கிருஷ்ணா " என்று பெயர் உண்டு .

    5. கிருஷ்ணன் என்றால் " சியாமள வர்ணன் " - கருமை நிறம் கொண்டவன் .

    6. கிருஷ்ணன் என்பதற்கு " மற்றவர்களை மயங்க வைப்பவன் " என்றும் ஒரு பொருள் உண்டு .

    7. சதானந்த ரூபன் - எப்பவும் ஆனந்தமாக இருப்பவன் ஆனந்தத்தை மற்றவர்களுக்கும் அள்ளி அள்ளித் தருபவன் என்பதால் பெயர் "கிருஷ்ணன் . "

    8. பரமாத்மாவானவன் என்பதால் கிருஷ்ணன்

    அவனை பூஜிக்கிறேன் .


    பதிவு 2

    யாம் ஆமா? நீ ஆம் ஆம்; மாயாழீ! காமா! காண் நாகா!
    காணா காமா! காழீயா! மா மாயா! நீ, மா மாயா!

    இந்த வரிகள் திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பில் , கௌசிகம் , மூன்றாம் "திருமுறையில் " வருகிறது .

    யாம் - ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால்.

    ஆமா - அதுபொருந்துமா?

    நீ : நீயே கடவுளென்றால்.

    ஆம் ஆம் - முற்றிலும் தகுவதாகும்.

    மாயாழீ - பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே.

    காமா - யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே.!

    காண் - (தீயவும் நல்லவாம் சிவனைச் சேரின் என்பதை யாவரும்) காணுமாறு பூண்ட---

    நாகா - பாம்புகளையுடையவனே. !

    காணா காமா - கை, கால் முதலிய அவயவங்கள் காணாதனவாச் செய்தகாமனையுடையவனே. (காமனை யுருவழித்தவனே.)

    காழீயா! : சீர்காழிப் பதியில் எழுந்தருளியிருப்பவனே!!

    மாமாயா - இலக்குமிக்குக் கணவனான திருமாலாகவும் வருபவனே (நான்க னுருபும்பயனும் தொக்க தொகை) “நாரணன்காண் நான்முகன்காண்” என்பது திருத்தாண்டகம்.

    மா - கரியதாகிய.

    மாயா - மாயை முதலிய மலங்களினின்றும். நீ - எம்மை விடுவிப்பாயாக.
    Last edited by g94127302; 9th October 2015 at 08:04 AM.

  18. Thanks madhu thanked for this post
    Likes Russellmai, madhu liked this post
  19. #480
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    நன்றி ரவி ஜி..

    முக்கியமாக அந்த சம்பந்தரின் பதிகம் மாலை மாற்று என்பார்கள்... அதாவது கடைசியில் இருந்து திருப்பிப் படித்தாலும் அதேதான் வரும்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •