Page 176 of 337 FirstFirst ... 76126166174175176177178186226276 ... LastLast
Results 1,751 to 1,760 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1751
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr C K Sir,

    தவறுக்கு மன்னிக்கவும். அந்த நட்சத்திரத்தை நீங்களே கூறிவிட்டால் இந்த தவறு இனிமேல் நடக்காது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1752
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //நான் தேடியது பழைய உயிர் படப் பாடல்களை..ம்ம் இதுவரை சிக்கவில்லை..//

    ம்ஹூம்....இப்போதைக்கு சான்ஸ் இல்லை.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #1753
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அதெல்லாம் முடியாத்..எஸ்.வி.டி. சார்.. இதெல்லாம் தவறே அல்ல.. அப்புறம் உங்கள் - மனதிலிருக்கும் நட்சத்திரம் எனக்கெப்படித் தெரியும்?

    Quote Originally Posted by s.vasudevan View Post
    Mr C K Sir,

    தவறுக்கு மன்னிக்கவும். அந்த நட்சத்திரத்தை நீங்களே கூறிவிட்டால் இந்த தவறு இனிமேல் நடக்காது.

  5. #1754
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ம்ஹூம்....இப்போதைக்கு சான்ஸ் இல்லை//அப்படி எல்லாம் விட்டுட ஏலாது

  6. #1755
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எதையோ தேடப் போய் சிக்கியது மு.மேத்தா எழுதிய முதல் பாடல்..காத்து வீசுதே இளங்க் காத்து வீசுதே இங்கே கதிர்கள் கூட காதல் பேசுதே..அபபடியே தொடர்ந்திருந்தால் இன்னுமொரு இனிய பாட்லகிடைத்திருக்கும்..செல்லமமா சின்னம்மா என ம்ம்ம்

    அதிலும் கவி வன்மை.. ஆத்தங்கரையில் மஞ்சக்குளிச்சு உன் ஆசையை உடம்பில் பூசிக் குளீச்சேன்.. நைஸ்




  7. Likes Russellmai liked this post
  8. #1756
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மலையோரம் மயக்கிய கானங்கள்
    *
    இளமை. அழகு. வாலிபன், வாலிபி.. புதிதாக மணம் புரிந்தவர்கள்..புதிதாக மனதைப் புரிந்து கொள்ள விரும்புபவர்கள்..

    பசுமை.. இயற்கைக் காட்சிகள். பனி. அழகு. உடன் அழகிய நங்கை.. இளமை. சொர்க்கம் வாலிபனுக்கு.. திரும்புகையில் ஒருவழியில் சத்தம்..

    என்ன சத்தம்ங்க..

    இந்த மலைஜாதிக்காரங்க பாட் பாடறாங்க திருவிழாவோ என்னவோ

    போய்ப் பார்க்கலாமா.. தோகை மயிலின் மையிட்ட மையலிட்ட கண்கள் பேசுவதை இதழ்களும் திறந்து கேட்க வாலிபனால் மறுக்கவா முடியும்..

    போகிறான்..கிறாள்.. கிறார்கள்..

    ஏலேல்லாலா ஏலேலலா.. தோட்டம் கொண்ட ராசாவே சூடிக்கொண்ட ராசாத்தி..

    இந்த மலைஜாதி மக்கள் பார்த்ததில்லை..ஆனால் தமிழ் சினிமாப் பாடல்களில் – அந்தக்கால- கட்டாயம் இடம்பெற்றுவிடுவார்கள்.. கோரஸிற்காகவும் பாக்ஸ் ஆஃபீஸிற்காகவும்..

    இந்த தோட்டம் கொண்ட ராசாவே – பகலில் ஒரு இரவு – இளையராஜா. விஜயகுமார்… ஸ்ரீதேவி..


  9. Likes Russellmai liked this post
  10. #1757
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மலையில் மயக்கிய கானங்கள் – 3
    ஹீரோ குடும்பம் பணக்காரர் எனக் காட்ட வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்.. அவர்களுக்கு மலை வாசஸ்தலத்தில் எஸ்டேட் இருக்க வேண்டும்.

    ஆப்வியஸ்லி.. ஒரு திருவிழா வரும்.. ஹீரோ பாடுவார் முடிந்தால் ஹீரோயின் கும்பலோடு கும்பலாக.. அப்படி இல்லை எனில் ஹீரோவின் சகோதரன் பாடுவார்.. என்பதான விதி உண்டில்லையா தமிழ் சினிமாவில்..

    மலைஜாதி மக்களின் பாடல்களில் கோரஸ் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.. எத்தனை பாடல்கள் வந்தாலும் இந்த – இப்போது கேட்கப் போகும் பாட் இருக்கே.. ஹோ ஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹோ ஹோ…

    மென்மையாய்ப் பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆரம்பிப்பார்

    நல்லவன் எனக்கு நானே நல்லவன்ன்ன்ன் என இழுத்து சொல்லிலும் செயலிலும் வல்லவன் ( தம்பிக்குப் பார்க்க ப் போன பொண் தனக்கே பிடித்துவிட உண்மையைச் சொல்லாமல் லெட்டர் எழுதி – ஸிம்ப்பிள் மேட்டரை காம்ப்ளிகேட் ஆக்கிய கள்ளத்தனம் கொண்டவர்..பாத்திரத்தில் பாலாஜி.. கண்ணாடிக்குப் பின்னால் உள்ள கண்களில் அது மின்னும்)

    அடுத்து வரும் சரணத்தில் ந.தி – அப்பாவி- படிக்காதவர் – முரடர்- ஆனால்வெகுளி.. முகத்தில் அவ்வளவு பாவங்கள்..ரசித்துப் பாடலில் இறங்குவார்..

    உள்ளம் சொன்னதை மறைப்பவனில்லை
    ஊருக்குத் தீங்கு செய்தவனில்லை
    வல்லவன் ஆயினும் நல்லவன்..

    அங்கே பி.பி.எஸ் மென்மை என்றால் கொஞ்சம் ஸ்ட்ராங்க்கான வாய்ஸில் டி.எம்.எஸ் பச்சக்கென்று பாடல் காட்சி மனசுக்குள் ஒட்டிக் கொள்ளும்

    பள்ளம் மேடு சென்றால் பார்த்துச் செல்லும் பிள்ளை
    நான் பாசம் என்ற நூலில் சேர்த்துக் கட்டிய முல்லை..

    என அவர் சொல்ல

    இல்லை இல்லை என்றே என்றும் சொன்னவன் இல்லை
    என் கண்ணை நானே கண்டேன் அதில் என்னை நானே கண்டேன் என பாலாஜி சாவித்ரியைப் பார்த்துப் பாட சூடு பிடிக்கும் பாடல்..
    வெள்ளை மனது கொண்ட, வேட்டையில் வீரம் மிக்க, அண்ணன் மீது பாசம் மிகக் கொண்ட முரட்டுப் பிள்ளை ( ந.தி) என்ன சொல்கிறது

    சிட்டு போல வானில்
    துள்ளிச் செல்ல வேண்டும்
    கீரிப் பிள்ளை போலே
    ஊர்ந்து செல்ல வேண்டும்

    எனச் சொல்ல பாலாஜி – ஸ்மார்ட் அண்ட் கோழை..

    தொல்லை என்ற பாம்பை
    கவ்விக் கொல்ல வேண்டும்
    தூய உள்ளம் வேண்டும் என்றும்
    சேவை செய்ய வேண்டும்

    எனச் சொல்லும் பதில்- எனக்குப்பிடிச்ச பொண் நான் கைபிடிக்க பொய் சொல்லிட்டேன்.. என்று முதல் வரியிலும் இதிலெல்லாம் பெரியவர்களுக்கோ மற்றவர் மீதோ பாசமெல்லாம் குறையாது என இரண்டாவது வரியிலும் சொல்வது அவரது பாத்திரத்தையும் பளிச்சிட வைத்து பார்ப்பவருக்கும் புரிய வைக்கும்..

    கோரஸ் நடனமும் வெகு அழகு பாடல் முடிந்தபின் தொடரும் ஆட்டமும் அழகு.. முழுக்க முழுக்க உற்சாக டானிக் அருந்தி முகம் முழுக்க குஷியுடன் வெள்ளந்தி மனசை வெளிக்காட்டும் ந.தி,,, கொஞ்சம் கள்ளப்பார்வையை மறைத்த நல்ல பார்வை கொண்ட பாலாஜி என வெகு எழிலாய்க் காட்சி..ஒவ்வொரு தடவை கேட்கும் போதும் அட சட்னு முடிஞ்சுடுச்சே என எண்ண வைக்கும் பாடல்..

    படித்தால் மட்டும் போதுமா.. ஸ்ரீ தேவியில் பார்த்த படம்.. ரீ ரன்னில்.. க்ளைமாக்ஸ் மட்டும் செதுக்கியிருந்தால் – அனாவசியமாக பாலாஜியைச் சாகடிக்காமல்- இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.ம்ம்

    இப்போ பாட்..


  11. Likes JamesFague, Russellmai liked this post
  12. #1758
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Vanakkam

  13. #1759
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ஒரு நல்ல பாடல்
    ஒண்ணா இருக்க கத்துக்கனும் திரையில் ராஜாவின் இசையில் மனோவின் குரலில் அழகான பாடல்


  14. #1760
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசு ஜி....

    உ.இ.உ.வா வுக்கு நன்றியோ நன்றி...

    ராகவ்ஜி...

    இன்னைக்கு ஞாயிறு என்பதால் கண்ணுக்குள்ளே ஒரு பாடல் காட்சியே போட்டுக் காண்பித்து விட்டீர்கள்,.... சூப்பர் சூப்பர் சூப்பரே..

    வாத்தியாரையா...
    ஹவாயில் ஹாயாக இருந்து விட்டு திரும்பியாச்சா ? கடல் பார்த்தாச்சு... எப்போ ஏரி பார்க்க வரீங்க ? சென்னை முழுக்க எல்லா ஏரியாவும் ஏரியாதான் இருக்கு..

    வாசுதேவன் ஜி..
    தமிழிலும் உலகத் தரம் வாய்ந்த படங்கள் எடுக்கும் திறமை உள்ளவர்கள் உண்டு. ஆனால் அந்த வைரங்களைப் பட்டை தீட்டி ஜொலிக்க வைக்க தயங்கும் திரைப்பட உலகம் இங்கிருப்பதால்தான் இன்னும் மங்கியே இருக்கிறது. விரைவில் நாமும் மின்னுவோம்.

    சிக்கா...
    என்ன புரியலை ? வாசுஜி கேட்டது மதுதான் அரவிந்த கார்த்திக்கா என்று !! அட.. ஆமாம்பா ஆமாம்.

  15. Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •