Page 154 of 337 FirstFirst ... 54104144152153154155156164204254 ... LastLast
Results 1,531 to 1,540 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1531
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    உங்களது 'மோகமுள்' இப்போதுதான் படித்து முடித்தேன். கதைச் சுருக்கமும், விளக்கங்களும், வசனங்களும் உங்களுக்கே உரித்தான பாணியில் ஜோர். உங்களுக்கு நாவல் பித்து அதிகம் என்று எனக்குத் தெரியும். அதன் விளைவாக 'மோகமுள்' தங்களுக்கு மோகத்தை ஏற்றி கலர் பதிவை இடும் அளவிற்கு கொண்டு வந்தும் விட்டது.

    நானும் ஒருதடவை மோகமுள் பார்த்தேன். நாவலும் வாசித்திருக்கிறேன். எனக்கு கதையை சிதைத்தார்களா என்றெல்லாம் தெரியாது. ஆனால் அர்ச்சனா அன்னியோன்யமாகப் படாமல் அன்னியமாகப் பட்டார். நம் தமிழில் இல்லாத திறமைசாலிகளா? அதே போல அபிஷேக் அன்றுமுதல் இன்றுவரை தொலைகாட்சி நடிகராகவே தெரிகிறார். அவர் எப்போதும் டிஸ்டர்ப் ஆகவே நடிப்பார். அது போல நெடுமுடிவேணு மலையாளியாகவே தெரிவார்.

    அதே போலத்தான் பாரதியாரும் வேற்று மாநில நடிகராக (ஷாயாஜி ஷிண்டே) வந்து நன்கு செய்திருந்தும் மனதில் ஓட்டாமல் போனார். கமல் இல்லாமல் நாசருக்குக் கொடுத்திருந்தால் கூட ஜோராக இருந்திருக்கும். இது என் சொந்தக் கருத்து என்று தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறேன்.

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று பாலா பாடல் ஒன்றையும் துணிவாக போட்டுவிட்ட உங்கள் துணிச்சலுக்கு என் பாராட்டுக்கள். முத்து முத்துப் புன்னகை புரியும் நாயகி சரோஜா. 'வடைமாலை' புகழ் நடிகை.

    'சேற்றில் ஒரு செங்கழனி' அருமையான பாடல். எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த நடிகை வான் நிலா நிலா அல்ல புகழ் சொர்ணா. அண்ணன் ஒரு கோவில் படத்தில் குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட என்ற வாணியின் பாடலுக்கு நடித்து பேய் போல பயமுறுத்துபவர். நல்ல பாடலுக்கு நன்றி. ஆனால் நன்றியை திரும்ப வாங்கிக் கொள்கிறேன் விஜயகுமாரின் பாடலைப் போட்டதற்கு.

    அடித்த மழை, புயல், வெள்ளத்தில் பக்கெட் அடித்துக் கொண்டு போய் விட்டது. அதனால் தற்போது இமேஜஸ் நோ. இப்போதுதான் படித்து முடித்தேன். கதைச் சுருக்கமும், விளக்கங்களும், வசனங்களும் உங்களுக்கே உரித்தான பாணியில் ஜோர். உங்களுக்கு நாவல் பித்து அதிகம் என்று எனக்குத் தெரியும். அதன் விளைவாக மோகமுள் தங்களுக்கு மோகத்தை ஏற்றி கலர் பதிவை இடும் அளவிற்கு கொண்டு வந்தும் விட்டது.

    நானும் ஒருதடவை மோகமுள் பார்த்தேன். நாவலும் வாசித்திருக்கிறேன். எனக்கு கதையை சிதைத்தார்களா என்றெல்லாம் தெரியாது. ஆனால் அர்ச்சனா அன்னியோன்யமாகப் படாமல் அன்னியமாகப் பட்டார். நம் தமிழில் இல்லாத திறமைசாலிகளா? அதே போல அபிஷேக் அன்றுமுதல் இன்றுவரை தொலைகாட்சி நடிகராகவே தெரிகிறார். அவர் எப்போதும் டிஸ்டர்ப் ஆகவே நடிப்பார். அது போல நெடுமுடிவேணு மலையாளியாகவே தெரிவார்.

    அதே போலத்தான் பாரதியாரும் வேற்று மாநில நடிகராக (ஷாயாஜி ஷிண்டே) வந்து நன்கு செய்திருந்தும் மனதில் ஓட்டாமல் போனார். கமல் இல்லாமல் நாசருக்குக் கொடுத்திருந்தால் கூட ஜோராக இருந்திருக்கும். இது என் சொந்தக் கருத்து என்று தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறேன்.

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று பாலா பாடல் ஒன்றையும் துணிவாக போட்டுவிட்ட உங்கள் துணிச்சலுக்கு என் பாராட்டுக்கள். 'முத்து முத்துப் புன்னகை' புரியும் நாயகி சரோஜா. 'வடைமாலை' புகழ் நடிகை.

    'சேற்றில் ஒரு செங்கழனி' அருமையான பாடல். எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த நடிகை 'வான் நிலா நிலா அல்ல' புகழ் சொர்ணா. 'அண்ணன் ஒரு கோவில்' படத்தில் 'குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட' என்ற வாணியின் பாடலுக்கு நடித்து பேய் போல பயமுறுத்துபவர். நல்ல பாடலுக்கு நன்றி. ஆனால் நன்றியை திரும்ப வாங்கிக் கொள்கிறேன் விஜயகுமாரின் பாடலைப் போட்டதற்கு.

    அடித்த மழை, புயல், வெள்ளத்தில் பக்கெட் அடித்துக் கொண்டு போய் விட்டது. அதனால் தற்போது இமேஜஸ் நோ.
    Last edited by vasudevan31355; 15th November 2015 at 07:14 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1532
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வாசு சார்,



    பானுமதி பற்றிய தினமணி தகவல்கள் மிகவும் சுவையானவை. இதுவரை நான்கு முறை படித்து ரசித்து விட்டேன். அருமையான தகவல்கள்.

    'எனது உயிர் உருகும் நிலை - சொல்லுவாய் வான்மதி' பாடலையெல்லாம் நான் எத்தனை முறை கேட்டு ரசித்திருக்கிறேன் என்று எனக்கே தெரியாது.

    நாகேஸ்வரராவ், பானுமதி 'லைலா மஜ்னுவு' க்குப் போட்டியாக டி.ஆர்.மகாலிங்கம், எம்.வி.ராஜம்மா நடித்த இன்னொரு 'லைலா மஜ்னு' படம் வந்து மண்ணைக் கவ்வியது.



    அதே போல பானுமதி குறிப்பிட்டிருக்கும் ராணி திரைப்படம் 1952-ல் வெளிவந்தது. இப்படத்திலிருந்து ஒரு காட்சி. இதில் இளமையான அழகு பானுமதியுடன் இருக்கும் நடிகர் 'குறவஞ்சி' படத்தின் வில்லனான வஹாப் காஷ்மீரி என்ற நடிகர்.



    'சேலம் பக்கம் ஏதோ வேலையாக வந்த சிவாஜி, அன்றைக்கு மாடர்ன் தியேட்டர்ஸில் அலிபாபா ஷூட்டிங்கில் இருந்தார். அங்கே தான் அவரை முதன் முதலாக நேரில் பார்த்தேன்'.

    என்று பானுமதி பேட்டியில் கூறி இருக்கிறார். அது அனேகமாக 'திரும்பிப் பார்' பட ஷூட்டிங்காக இருந்திருக்க வேண்டும் அல்லது 'இல்லற ஜோதி'யாகவும் இருந்திருக்கலாம்.
    Last edited by vasudevan31355; 15th November 2015 at 07:46 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Thanks JamesFague thanked for this post
    Likes Russellmai liked this post
  6. #1533
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //இம்முறை லாரென்ஸ் ஆலிவரின் ‘ஹாம்லெட்’ படத்தில் இருந்து கிடைத்த மெட்டை, ‘பிரேமை தான் பொல்லாதது’ என்கிற டூயட்டாக உயிர்ப்பித்தார்.//

    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes madhu, Russellmai liked this post
  8. #1534
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //‘எனது உயிர் உருகும் நிலை - சொல்லுவாய் வான்மதி’,//

    அடடா! என்ன மாதிரிப் பாடல்! பானுமதியின் வாய்ஸ் அப்படியே இதயத்தை உருக்கிப் பிசைகிறதே!

    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes madhu, Russellmai liked this post
  10. #1535
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுண்ணா!

    'எனது உயிர் உருகும் நிலை' பாடலை பாடிக் கொண்டே வந்தால் தேவதாஸின் 'உறவுமில்லை பகையுமில்லை ஒன்றுமே இல்லை' பாடலைப் பிடித்து விடலாம். ம்ஹூஹூஹூம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Likes madhu liked this post
  12. #1536
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //ஜெமினியின் ‘மங்கம்மா சபதம்’ பானுமதி- ரஞ்சன் மீண்டும் இணைந்து நடிக்க இந்தியில் ‘மங்களா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது.//

    Last edited by vasudevan31355; 15th November 2015 at 08:37 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes Russellmai liked this post
  14. #1537
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'மங்களா' இந்திப் படத்தில் ரஞ்சன் மிருதங்கம் வாசிக்க அதற்கு பானுமதி ஆடும் அற்புதமான இசையோடு கூடிய நடனம்.



    தமிழில் வசுந்தராதேவி 'மங்கம்மா சபத'த்தில் ஆடியதை சமீபமாக பார்த்தோம். இங்கே அதே டியூனில் பானுமதி 'அய்யய்யா' பாடுவதைக் காணலாம். இதுதான் 'அலிபாபாவும் 40 திருடர்களு'க்கும் முன்னோடி.


    Last edited by vasudevan31355; 15th November 2015 at 08:15 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. Likes Russellmai liked this post
  16. #1538
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //நானும் ஒருதடவை மோகமுள் பார்த்தேன். நாவலும் வாசித்திருக்கிறேன். எனக்கு கதையை சிதைத்தார்களா என்றெல்லாம் தெரியாது. ஆனால் அர்ச்சனா அன்னியோன்யமாகப் படாமல் அன்னியமாகப் பட்டார். நம் தமிழில் இல்லாத திறமைசாலிகளா? அதே போல அபிஷேக் அன்றுமுதல் இன்றுவரை தொலைகாட்சி நடிகராகவே தெரிகிறார். அவர் எப்போதும் டிஸ்டர்ப் ஆகவே நடிப்பார். அது போல நெடுமுடிவேணு மலையாளியாகவே தெரிவார். //

    வாஸ்ஸூ.. ஒம்ம யாரு அர்ச்சனாவைப் பார்க்கச் சொன்னா.. பட் யமுனா காரெக்டர் என்றால் வயதேறும் போது முதிர்கன்னியாகவும் காட்ட வேண்டும்..கொஞ்சம் இள மையாகவும் இருக்க வேண்டும் என நினைத்திருப்பார்களோ என்னவோ.. அபிஷேக் அப்போதெல்லாம் தொ.கா வில் நடிக்கவில்லை என நினைக்கிறேன்.. நெமுவே நீர் சொன்னது சரியே..பட் ஏழை வித்வானுக்கு கஷ்க்முஷ்க் சோமயாஜுலு பொருந்தியிருக்க மாட்டார்..அப்புறம் வேறு யாரைத்தேடுவது எனத் திணறியிருப்பார்கள் என நினைக்கிறேன்..

    ம பா கேட் ரசித் தாங்க்ஸ்..வி கு பாட்கு சாரி..

    மதுண்ணா தேடிப்பார்த்தேன் ஜெ.சித் நா மகளின் வா ஜெ பாட்..கிடைக்கலை..

    வாஸ்ஸூ அதே தினமணியில் சாவித்திரி, பத்மினி பற்றி தீன தயாளன் எழுதியிருக்கிறார். படித்துப்பாருங்கள்..
    Last edited by chinnakkannan; 15th November 2015 at 08:47 PM.

  17. Likes Russellmai liked this post
  18. #1539
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    மாதமோ ஆவணி பாடலைப் பற்றி இதற்கு மேல் யாரும் சிறப்பாக எழுதி விட முடியாது.

    'நாளிலே நல்ல நாள்' என்று இழுத்துப் பாடியபடி பாடும் 'நாயகன் பாலா' வென்ற படம். சுசீலா, பாலா முதல் சரணம் முன் கலக்கி எடுக்கும் அந்த,

    'டாண் டாண் டாண் டாண் டாண் டாண் டாண்
    டாண்டர டண்ட டாண்டர டண்டடா'....

    'டாண் டாண் டாண் டாண் டாண் டாண் டாண்
    டாண்டட டண்ட டாண்டட டட்டடா'
    இந்தப் பகுதி இசைத்தட்டில் கிடையாது. அதனால் முதன் முதலில் படத்தில் பார்த்த பொழுது பரவசம் அதிகமானது.

    எத்தனை காலங்கள் ஆனாலும் அத்தனையையும் வென்று தனித்து நின்று ராஜாங்கம் நடத்தும் ரசனைக்குரிய பாடல்.
    சத்தியமான உண்மை.

    உளமார்ந்த பாராட்டுக்கள் வாசு சார்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  20. #1540
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நினைத்துப் பார்க்கிறேன்

    தமிழ்த் திரையுலகில் எத்தனையோ பாடல்கள்... நம் நெஞ்சில் அன்றாடம் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் சிலவோ காலம் காலமாய் மனதில் ஆழமாய்ப் பதிந்து நமக்குள் பலவிதமான எண்ணங்களையும் கற்பனைகளையும் உருவாக்கும்.

    ஒரு சிவாஜி ரசிகனாய், ஏராளமான மற்ற திரைப்படப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் இதில் நடிகர் திலகம் நடித்திருக்கக் கூடாதா என்கிற ஏக்கம் ஏற்படும். சில பாடல்களில் சில இயக்குநர்கள் காட்சியமைப்பையே நடிகர் திலகத்தை மனதில் வைத்து எடுத்திருப்பார்களோ என்று தோன்றும் வண்ணம் படமாக்கியிருப்பார்கள்.

    அப்படி என்னுடைய கனவுப் பாடல்களாய், அதில் நான் நடிகர் திலகத்தை உருவகப்படுத்தி நினைத்துப் பார்த்து மகிழ்ந்த பாடல்களாய், இந்தத் தொடரில் என் எண்ணங்களில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    இதே எண்ண ஓட்டத்தில் நம்முடைய மற்ற நணபர்களும் இருந்திருக்கலாம். அவ்வாறு எண்ண ஓட்டத்தை இங்கே பகிர்ந்து கொண்டால் நம் மனதில் உள்ள ஆசைகளை வெளிப்படுத்தி மகிழ்ந்த திருப்தி கிட்டும் என்பது திண்ணம்.

    தொடக்கமாக எனக்கு மிக மிக பிடித்த பாடல், சிறு வயதில் முதன் முதலில் படம் வந்த புதிதில் கேட்ட போதே ஈர்த்து விட்ட பாடல், பரிசு திரைப்படத்தில் இடம் பெற்ற பட்டு வண்ண சிட்டு பாடலாகும்.



    மாமா என அன்போடு அழைக்கப்படும் திரை இசைத் திலகம் கே.வி.எம். அவர்களின் சிறப்பு அவருடைய படைப்புகளில் இருக்கக் கூடிய இழையோடக் கூடிய மெலடி, அதில் உள்ளே புதைந்திருக்கும் ஜீவன். இந்தப் பாட்டைக் கேட்கும் போது யாராக இருந்தாலும் தங்களை மெய் மறந்து விடுவார்கள். அதுவும் கே.வி.எம். மின் இன்னொரு சிறப்பு, பல்லவியை மிஞ்சும் வண்ணம் சரணத்தில் அவர் புகுத்தியிருக்கக் கூடிய உட்கரு, பாடலின் பொருளை முழுதும் கொண்டு வந்து விடும்.

    இந்தப் பாட்டில் மிகவும் குறிப்பிட வேண்டிய விஷயம், படமாக்கல். அந்தப் பாட்டின் ஜீவனை, அந்தப் பாட்டின் மென்மையை, அந்தப் பாட்டின் நளினத்தை, ஒரு சதவீதம் கூட கெடுக்காமல் மிகச் சிறப்பாக படமாக்கியிருக்கக் கூடிய விதமே.

    இரண்டு இடங்களில் எம்.ஜி.ஆரின் நடன அசைவுகள் அவ்வளவு நளினமாக கொண்டு வந்திருப்பார். இயக்குநர் யோகானந்த் நல்ல ரசனைக்கார். இந்தப் பாட்டில் வழக்கமான எம்.ஜி.ஆரைப் பார்க்க நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள்.

    சாவித்திரி அன்ன நடை போடும் போது இவரும் அதே போல அன்ன நடை போட்டு கையையும் காலையும் நளினமாக வைத்து நடக்கும் போதெல்லாம் மனம் துடிக்கும், நம்முடைய தலைவருக்கு இந்தப் பாட்டு கிடைத்திருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கும்.

    பொண்ணாப் பொறந்தா ஒரு புருஷனுக்கு நேரே வரிகளின் போதும் எம்.ஜி.ஆரின் நளினமான அசைவுகள் சிறப்பாக இருக்கும்.

    காலைப் பார்த்து நடந்த பொண்ணு காட்டுதம்மா பாவம் வரியின் போது கால்களை முயல் போல் தத்தி தத்தி வைத்து நடப்பது இயக்குநரின் சமயோசித புத்திக்கு சான்று. எம்.ஜி.ஆர். இந்த இடத்தில் தியேட்டராக இருந்தால் கரகோஷங்களை அள்ளிக்கொண்டு போய் விடுவார்.

    பார்ப்பதும் யாரையடி அன்ன நடை போட்டு வரியின் போது இரு கைகளையும் தலைக்குப் பின்னால் கட்டிக்கொண்டு கால்களை மெதுவாக வைத்து அன்ன நடை போடுவது அட்டகாசமாக இருக்கும்.

    பரிசு படத்தில் சாவித்திரிக்கு பல புதிய ரசிகர்கள் உருவானார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு ஒரு காரணம் இந்தப் பாடல் காட்சியுமாகும்.

    ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர் திலகத்தை மனதில் உருவகப் படுத்த வைக்கும் இனிமையான பாடல்.

    பாடகர் திலகத்தின் குரல் ஏன் இன்றும் மக்களிடம் இந்த அளவிற்கு வரவேற்பு பெறுகிறது என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு சான்று.

    கவியரசரின் பாடல் வரிகள் இலக்கியம் வாய்ந்தவையாக இப்பாடலில் பரிமளிக்கும்.

    Last edited by RAGHAVENDRA; 16th November 2015 at 12:24 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  21. Thanks Richardsof thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •