Page 57 of 337 FirstFirst ... 747555657585967107157 ... LastLast
Results 561 to 570 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #561
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    From GG Island with Love!

    காதல்மன்னரின் பிறந்தநாள் நினைவோட்டம் !
    மிஸ்ஸியம்மா மதுர கான நினைவலைகள் !
    ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படமே இக்கணம் வரை மிகச்சிறந்த தமிழ் நகைச்சுவைப் படமாகக் கொண்டாடப் படுகிறது !
    அருமையான வண்ணக் குழைவில் அற்புதமான விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை இணைவில் தேனினும் இனிய பாடல்களோடு இளமை பொங்கும் நாயக நாயகியர் நகைச்சுவை ஜாம்பவான்கள் பாலையா நாகேஷ்! ...சிவாஜி எம்ஜியார் ஜெமினி மூவேந்தர் திரையாண்ட காலகட்டத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து வெள்ளிவிழா கண்டது சாதைனையே!

    இருந்தாலும் அதற்க்கு முன்னரே கருப்புவெள்ளை காலகட்டத்தில் வழவழ கொழகொழ வசன இழுவைகளும் தடுக்கி விழுந்தால் பாடல்களும் இல்லாமல் யதார்த்தமான மெல்லிய நகைச்சுவை இழையோடும் கதையமைப்பில் சிரிப்பு விருந்தாக வெளிவந்து இன்றும் தியேட்டர்களுக்கு குடும்பங்களை ஈர்க்கும் தரமான நகைச்சுவை காவியம் மிஸ்ஸியம்மா !

    பணி நிமித்தம் வெவ்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் ஜெமினி கிறித்துவப் பெண்ணான சாவித்திரி தங்க இடமின்றி கணவன் மனைவியாக நடித்து ரங்காராவ் வீட்டில் வாடகைக்கு ஒன்றாகத் தங்க நேர்ந்த சூழலில் நடக்கும் சிரிப்புக் கூத்துகளும் கூத்திலே கோமாளியாக இரண்டுங்கெட்டான் ஜமுனா இடைசெறுகலாக அடிக்கும் லூட்டிகளும் துப்பறியும் தங்கவேலு வேடிக்கை வில்லனாக.. நம்பியார்..... டைமிங் காமெடியில் அந்தக்கால தம்பி ராமையா மைண்ட் வாய்ஸ் சாரங்கபாணி ....

    தமிழின் மிகச் சிறந்த ஆபாசஅருவருப்பில்லாத மனதை லேசாக்கும் நகைச்சுவைக் காவியத்தில் இசையும் பாடல்களும் அபாரமான வரவேற்பு கண்டன !




    என்னவொரு பொசசிவ் காதலி சாவித்திரி !
    இரண்டுங்கெட்டான் ஜமுனாவை ஜெமினி வலையில் விழாமல் ஒதுக்கி தனது மன்னரைத் தக்கவைக்க எப்படியெல்லாம் ஜமுனாவுக்கு எச்சரிக்கை மணியடிக்கிறார் !!


    [url]https://www.youtube.com/watch?v=h7nBY1PLC14

    ஜெமினி ஏ எம் ராஜாவின் தேன்குரலில் பாடலைத் தொடங்கும்போது அவர்மேல் கொண்ட கோபம் கதிரவனைக் கண்ட பனிபோல மறைந்து என்னவொரு பெருமிதமான ஆழ்மனக் காதல் லுக் விடுகிறார் நடிகையர்திலகம் !

    [url]https://www.youtube.com/watch?v=Em1dcjlhnt4
    Last edited by sivajisenthil; 10th October 2015 at 09:01 AM.

  2. Thanks rajeshkrv thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #562
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    சிவாஜி செந்தில் ஜி
    நீங்கள் சொன்னது 100%உண்மை
    காதலிக்க நேரமில்லைக்கு முன்னரே வந்த அருமையான நகைச்சுவை சித்திரம் மிஸ்ஸியம்மா

  5. Thanks eehaiupehazij thanked for this post
  6. #563
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நேற்றைய கேஷவ்வின் ஓவியம்..

    https://scontent-ams3-1.xx.fbcdn.net...16117600_o.jpg

    நான் எழுதிப் பார்த்த பாடல்..

    மாயக் கிருஷ்ணன் மடியினை மஞ்சமென
    தூயதாம் கன்றெண்ணித் துஞ்சியதோ – பாலகனும்
    பார்த்துத்தான் கால்மடித்துப் பக்குவமாய்க் கண்மூடி
    ஈர்க்கின்றான் நம்மையிங் கே

  7. #564
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    சிக என்ன தைரியம் இருந்தால் கன்னடத்து பைங்கிளிக்கு புடவை பாந்தமில்லை என்று சொல்லியிருப்பீர். உம்மை என்ன செய்தால் தேவலை
    இதோ என்ன அழ்காக இருக்கிறது பாரும் பார்த்து தீரும்..



















    இதுமட்டுமல்ல சுடிதார் மார்டன் ட்ரெஸ் என எல்லாமே கன கச்சிதமாக பொருந்தும் ..

  8. #565
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like







  9. Likes madhu liked this post
  10. #566
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

    வாசு,

    நாடகப் பாடல்களில் சபாஷ் மீனா பாட்டு நைஸ்..(சில நாட்களுக்கு முன் இதைப் போடலாம் என்று செலக்ட் செய்து விட்டிருந்தேன்) பட் அதுலயே இன்னொருட்ராமா ரிகர்ஸல்.. ஆசைக்கிளியே கோபமா.. நன்றாக இருக்கும்

    சினிமாவுக்குள் நாடகம் என்றால் நினைவுக்கு வருவது

    சோவின் ஆலாலங்கடிசோ - விளையாட்டுப் பிள்ளை
    நாகேஷ் ஒய்.ஜி மகேந்திரா - நூற்றுக்கு நூறு
    சுப்ரபாதம் - ஆர் எஸ் மனோகர்
    சிம்லா ஸ்பெஷல் 0 சந்திர மண்டலத்தில் சங்கர சாஸ்த்ரி

    கொஞ்சம் முழுமையான நாடகம்..ஆனால் ஒற்றை வரிக் கதை.. காதலன் காதலித்து மணந்தவளின் அழகில் மயங்கி இன்பத்திலெயே மூழ்கி எழுந்து கடலுக்குச் செல்ல மறுக்கிறான்..யோவ் இப்படில்லாம் இருக்கப் படாது..போய் வேலையைப் பார்க்கப் போ என அனுப்புகிறாள் அவள்..விதிவசத்தில் அவன் இறக்க அதை அறிந்த அவள் சோகத்தில் சிலையாகிறாள்..

    புலமைப் பித்தனின் வரிகள் பானுப்ரியாவின் நடனம், கிழி கிழி கிழி டான்ஸ் மாஸ்டர் கலாவின் கொரியோக்ராபி + நடன அமைப்பு என பார்க்கையிலேயே ஈர்த்த பாடல்

    கோழி கூவும் நேரமாச்சு தள்ளிப் போமாமா
    ஓட மங்கை காத்திருப்பாள் ஓடிப் போ மாமா
    விளையாடி விளையாடி பொழுதாகிப் போச்சு.. என இந்த வரியே அவள் சொல்வது போல வரும்படி எழுதியிருப்பார் கவிஞர்..

    பானுப்ப்ரியாவின் கண்கள்..சொல்லியே தீரவேண்டும்..அந்த ஓடத்தையே அதில் விடலாம்..அவவளவு அழகாகப்பெரியதாக ஆழமான பாவங்களுடன் இருக்கும்..


  11. #567
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //சிக என்ன தைரியம் இருந்தால் கன்னடத்து பைங்கிளிக்கு புடவை பாந்தமில்லை என்று சொல்லியிருப்பீர். உம்மை என்ன செய்தால் தேவலை
    இதோ என்ன அழ்காக இருக்கிறது பாரும் பார்த்து தீரும்..// ராஜேஷ் கண்ணா உணர்ச்சி வசப் பட்டு நிர் சர்ரூ பாட்டாத் தருவீங்கன்னு தெரியும் எல்லா சமயத்திலும் இருக்கா என்பது கேள்வி.. மெல்ல மெல்ல பாட்டில் பார்த்தீர்கள் என்றால் நாலு உடை மாற்றுவார்..ப்ளாக் அண்ட் ஒய்ட்லயே நல்லாத்தான் இருக்கும் சரி சரி.. நல்லாத் தான் இருக்குங்க..அழாதீர்

  12. #568
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    சூழல் ஒன்று பார்வை இரண்டு: உன் பார்வை ஒரு வரம்


    ஒரு அழகான பெண்ணின் விழிகளும் பார்வைகளும் ஈடிணையற்ற அழகு கொண்டவை எனக் கருதும் ஆண்கள் இருக்கிறார்கள். தன் காதலியின் விழிகளை உயிர்த் துடிப்பு மிக்க சக்தியாக, கடலைவிடவும் ஆழமானதாகக் கருதும் இந்தித் திரைப் பாடலையும் காதலியின் பார்வையை மலர் வனமாக, ஒரு வரமாகக் காணும் தமிழ்த் திரைப் பாடலையும் பார்ப்போம்.

    இந்திப் பாட்டு

    படம்: சஃபர் (பயணம்)

    பாடலாசிரியர்: இந்திவர்

    இசை: கல்யாண்ஜி ஆனந்த்ஜி

    பாடியவர்: கிஷோர் குமார்.

    ஜீவன் ஸே பரீ தேரி ஆங்க்கே

    மஜ்பூர் கரே ஜீனே கேலியே ஜீனே கேலியே

    சாகர் பீ தர்ஸத்தே ரஹத்தே ஹைன்

    தேரா ரூப் கா ரஸ் பீனேகேலியே பீனேகேலியே

    பொருள்:

    உயிர்த் துடிப்பு மிக்க உன் விழிகள்

    நான் வாழ்வதைக் கட்டாயப்படுத்துகின்றன.

    ஆழ்கடலும் அலைபாய்கிறது உன்

    அழகைப் பருகுவதற்கு

    ஓவியன் வரைந்த ஓவியமோ

    காவியம் படைக்கும் கவிஞனின் ஆக்கமோ

    எதுகையும் மோனையும் இழைந்தது போல

    எப்படி வந்தது இப்படி ஒரு அழகு

    இதயத்தில் எழும் இனியதொரு துடிப்பு நீ

    இயக்கத்தின் ஏதுவாய் இருக்கும் இன்னுயிர் நீ

    நந்தவனத்தின் நறுமணம் உன் சுவாசத்தில்- உன்

    அங்கத்திலோ தாமரையின் பரிசுத்தம்.

    நன் கிரணங்களின் வீச்சு உன் முக வடிவில்

    மான் இனங்களின் மருட்சி நின் இயல்பில்.- உன்

    மேலாடையின் நூலிழைகள் அறுந்த இதய

    நூலாடை எதையும் தைக்கும் எளிதில்.

    இந்தி மொழியில் சாகர் என்ற சொல்லின் பொருள் கடல். அதே சொல்லின் உருது மொழிப் பொருள் மயக்கம் தரும் மது நிரம்பிய கோப்பை. இந்த இரு பொருளும் பொருந்தும் வண்ணம் இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது. நாயகியின் அழகைப் பருகுவதற்கு ஆழ்கடல் தாகத்துடன் தவிக்கிறது என்று பொருள் கொள்ளலாம். அவள் அழகைப் பருகுவதற்கு ஒரு மதுக் கோப்பையே தவிக்கிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

    இந்த அளவு ஆழ்ந்த மரபில் ஊறிய இலக்கிய நயமான வர்ணனை தமிழ்ப் பாடலில் சேர்க்கப்படவில்லை. ஆனால், நவீன வாழ்வோடு ஒட்டிய, இளம் தலைமுறையின் எதிர்பார்ப்புக்கேற்ப எழுதப்பட்டுள்ளது இந்தத் தமிழ்ப் பாடல். கற்பனை வளம் மிகுந்த பாடல் வரிகளுக்காகவும் இனிமையான இசைக்காகவும் இன்றும் விரும்பிக் கேட்கப்படும் பாடல் இது. வரம், கனிமரம், இளமையின் கனவுகள் துளிர்விடும் விழியோரம் என்றெல்லாம் காதலியின் விழிகள் வர்ணிக்கப்பட்டுள்ளதைப் பாருங்கள்.

    தமிழ்ப் பாட்டு

    படம்: நினைவெல்லாம் நித்யா

    இசை: இளையராஜா

    பாடல்: வைரமுத்து

    பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

    பனிவிழும் மலர்வனம்

    உன் பார்வை ஒரு வரம்

    இனி வரும் முனிவரும்

    தடுமாறும் கனிமரம்

    சேலை மூடும் இளஞ்சோலை

    மாலை சூடும் மலர்மாலை

    இருபது நிலவுகள்

    நகமெங்கும் ஒளிவிடும்

    இளமையின் கனவுகள்

    விழியோரம் துளிர்விடும்

    கைகள் இடைதனில் நெளிகையில்

    இடைவெளி குறைகையில்

    எரியும் விளக்கு சிரித்துக் கண்கள் மூடும்

    காமன் கோயில் சிறைவாசம்

    காலை எழுந்தால் பரிகாசம்

    தழுவிடும் பொழுதிலே

    இடம் மாறும் இதயமே

    வியர்வையின் மழையிலே

    பயிராகும் பருவமே

    ஆடும் இலைகளில்

    வழிகிற நிலவொளி இருவிழி

    மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

  13. #569
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    காற்றில் கலந்த இசை 25 - தரை மீது சிணுங்கும் மெல்லொலி

    சமூக அமைப்பின் கரடுமுரடான அடுக்குகளாலும், குடும்பச் சிக்கல்களாலும் காயப்பட்டு, உள் சுருங்கும் மனதுடன் தங்கள் வட்டத்துக்குள்ளேயே முடங்கிவிடும் பாத்திரங்களைத் திரைப்படங்களில் மிக நுட்பமாகச் சித்தரித்தவர் மகேந்திரன். அன்பு நிறைந்த உலகின் பிரஜைகளைத் தனது பிரதான பாத்திரங்களாக அவர் உருவாக்கியிருப்பதை, அவரது எல்லாப் படங்களிலும் உணர முடியும்.

    ‘சாவி’ இதழில் தான் எழுதிய தொடர்கதையை அடிப்படையாக வைத்து அவர் இயக்கிய படம் ‘மெட்டி’ (1982). செந்தாமரை, விஜயகுமாரி, சரத்பாபு, ராஜேஷ், வடிவுக்கரசி, ராதிகா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சாமிக்கண்ணு போன்ற திறமையான கலைஞர்கள் பங்கேற்ற படம் இது. மகேந்திரன் உருவாக்கும் உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு உயிர் தரும் கலைஞரான இளையராஜாவின் இசையில் வெளியான படம்.

    படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் ‘மெட்டி ஒலி காற்றோடு’ பாடல், இளையராஜா ஜானகி பாடிய பாடல்களில் மிகச் சிறப்பானது. இப்பாடலில் ஆண்-பெண் குரல்கள் ஒலித்தாலும், பாடல் காட்சியில் இடம்பெறுவது ஆதரவற்ற தாயும் அவரது இரு மகள்களும்தான். கடலலைகளுக்கு அருகே பிரத்யேக உலகத்தை உருவாக்கிக்கொண்டு, அன்பின் திளைப்பில் மூழ்கும் அப்பெண்களைத்தான் பாடலில் காட்டியிருப்பார் மகேந்திரன். திருமணமான பெண்களின் அடையாளமான மெட்டியை இப்படத்தில் ஒரு குறியீடாகவே பயன்படுத்தியிருக்கும் மகேந்திரன், பாடலின் ஒலிவடிவத்தைக் கடந்த காலத்திலிருந்து ஒலிக்க விட்டிருப்பார்.

    எழுந்துகொண்டிருக்கும் அல்லது மறைந்துகொண்டிருக்கும் சூரியனின் மஞ்சளும் சிவப்புமான கதிரொளியில் வானில் உருவாகியிருக்கும் பிரம்மாண்டமான ஓவியத்தின் கீழே பரவிச் செல்லும் இப்பாடலை, ஜானகியின் இனிமையான முணுமுணுப்பு தொடங்கிவைக்கும். மற்றொரு அடுக்கில், ஏகாந்தமான குரலில் இளையராஜாவின் ஆலாபனை ஒலிக்கும். இளையராஜாவின் சற்றே கணகணப்பான குரலில் காதலும் பாந்தமும் நிரம்பித் ததும்பும்.

    பல்லவியையும் சரணத்தையும் இணைக்கும் இசைப் பாலத்தின் இழைகளை வயலினால் நெய்திருப்பார் இளையராஜா. 16 வினாடிகள் நீளும் அந்த ஒற்றை வயலின் இசையில், உலகின் சவுந்தர்யங்கள் அனைத்தையும் அடக்கி வைத்திருப்பார் மனிதர். அறியாத தீவு ஒன்றில், நாணல்கள் அடர்ந்த கடற்கரையில் உலவும் உணர்வைத் தரும் நிரவல் இசை அது.

    முதல் நிரவல் இசையில் வயலின் இசை என்றால், இரண்டாவது நிரவல் இசையில் 13 வினாடிகளுக்கு நீளும் ஜானகியின் ஹம்மிங் நம்மை இருந்த இடத்திலிருந்து சில அடிகள் உயரத்தில் மிதக்கச் செய்துவிடும். தமிழ் தெரிந்த தேவதை ஒன்றின் வருகையை உணர்வது போல் தோன்ற வைக்கும் ஹம்மிங் அது. பாடலின் இடையே அவ்வப்போது சிணுங்கும் கணங்களிலும் ஜானகியின் குரல் சிலிர்ப்பூட்டும். ‘பார்வை பட்ட காயம்… பாவை தொட்டு காயும்’ எனும் கங்கை அமரனின் கற்பனை அலாதியானது.

    திருமணம் செய்து கொள்வதாகக் கூறிக்கொண்டு தன் பின்னே சுற்றும் எழுத்தாளர் ராஜேஷிடம், ‘நிபந்தனை’களுடன் ராதிகா பாடும் பாடல், ‘கல்யாணம் என்னை முடிக்க’. மனதுக்கு மிக நெருக்கமான குரலில் இப்பாடலைப் பாடியிருப்பார் ஜென்ஸி. இடையிடையே, ரயிலில் திருமணம், ‘நொச்சிக்குப்பம் பச்சையப்பன் குரூப்’பின் நாதஸ்வர இசை என்று கலகலப்பான கற்பனைகளைக் கொண்ட பாடல் இது. அழுத்தங்களுக்கு இடையே சற்று சிரிக்கவும் தெரிந்திருக்கும் பெண்களின் மெல்லிய குறும்புகளை இப்பாடல் பதிவுசெய்திருக்கும்.

    அதே படத்தில் மிக முக்கியமான மற்றொரு பாடல், கே.பி. பிரம்மானந்தன் பாடிய ‘சந்தக் கவிகள் பாடிடும் மனதினில்’. தனது தங்கையின் திருமணம் பற்றிய கனவுகளுடன் அண்ணனும், அண்ணனின் அளவற்ற அன்பில் திளைக்கும் தங்கையும் தோன்றும் இப்பாடல், ஒரு பாடலின் இனிமை குலையாமல் படமாக்குவது எப்படி என்பதற்கான பாடம் எனலாம். மெல்லிய மாலைப் பொழுதின் கடலலைகள், அடர் மரங்களின் நிழலால் போர்த்தப்பட்ட நிலங்கள், சூரிய ஒளியில் மின்னும் சில்வர் குடங்கள் என்று அசோக்குமாரின் மேன்மையான ரசனையின் துணையுடன் இப்பாடலைப் படமாக்கியிருப்பார் மகேந்திரன்.

    வெல்லத்தின் பாகைக் குழைத்து இழையாக நீட்டிச் செல்வதுபோன்ற உச்சபட்ச இனிமை கொண்ட வயலின் இசையுடன் இப்பாடல் தொடங்கும். ‘…மனதினில் இன்பக் கனவுகளே’ எனும் வரிகளை ரசித்தபடி ஆமோதிக்கும் வகையில், வீணை இசையின் சிறு துணுக்கை ஒலிக்கவிடுவார் இளையராஜா. அந்த ஒற்றைக் கணத்தில் மனம் நிறைந்துவிடும். தொடர்ந்து ஒலிக்கும் பாடல் முழுவதும் அந்த இனிமையின் நீட்சிதான்.

    மதுக்கூர் கண்ணன் எழுதிய ‘ராகம் எங்கேயோ… தாளம் எங்கேயோ’ பாடல், பிரம்மானந்தன், உமா ரமணன், சசிரேகா பாடியது. அழுத்தமான கஜல் பாடல் பாணியில் அமைந்த இப்பாடலில், தாயின் இழப்பு தரும் தாங்க முடியாத துயரத்தை இசைத்திருப்பார் இளையராஜா. மலையாளத்தில் மிக நுட்பமான பாடல்களைப் பாடியிருக்கும் பிரம்மானந்தன் தமிழில் பாடிய படம் அநேகமாக ‘மெட்டி’ மட்டும்தான். அந்த வகையில் அற்புதமான அந்தப் பாடகனுக்குத் தமிழ் மண் செலுத்திய மரியாதை தான், அவரது குரலில் ஒலிக்கும் இந்த இரண்டு பாடல்களும்!

    

  14. Likes madhu liked this post
  15. #570
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    அனைவருக்கும் காலை வணக்கம் - இந்த நாளும் ஒரு இனிய நாளாகவே இருக்கட்டும் ..



Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •