Page 192 of 337 FirstFirst ... 92142182190191192193194202242292 ... LastLast
Results 1,911 to 1,920 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1911
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    இந்தப் பாட்டு கேட்டிருக்கேனான்னு தெரியலை..லிரிக்ஸ் பாத்தேன் பிடிச்சூ..

  2. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1912
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நீள வண்ண ஆகாயமும்
    பசுமையாய் பரந்து விரிந்த மலைப்பிரதேசங்களும் கொண்ட பிரதேசம்.
    கரு நீல வண்ணகோட்டும் வெள்ளை பேன்ட்டும் அணிந்து
    மன்மதனாய் நம் நடிகர்திலகம்.
    சரிந்த அந்த மலைச்சரிவில் மெல்ல இறங்கி ஆகா ஓஓ ஓஓ என்று ஹம்மிங் செய்தபடி வருவது அழகு.அந்த இயற்கையும் நடிகர்திலகம் வாணிஸ்ரீயின் உடையலங்காரமும் கண்களுக்கு விருந்து.வாணிஸ்ரீயும ஹ்ம்மிங
    செயதபடி ஸைடைலாக திரும்புவதை காமிராபின்னோக்கி நகர்ந்துஇயற்கையை அள்ளிக்கொண்டு வரும்.
    இனியவளே என்று பாடியபடி வருவார் பாருங்கள்.அடேங்கப்பா என்ன ஒரு ஸ்டைலிஷ்மேன்.தோள்களை மெல்ல அசைத்து தலையை ஆட்டியபடி வரும் அழகுக்கு நிகரேது.நடிகர்திலகம் பாடி முடித்ததும் வாணி ஸ்ரீ இனியவனே என்றுதொடங்கும் போது ஒலிக்கும் ட்ரம்ஸ் அடி கலக்கலோ கலக்கல்.
    இதழால் உடல் அளந்தாள் என்ற வரிக ளின் போது வரும் இசையும் நடிகர்திலகத்தின் ஆட்டமும் வெகு ஜோர்.ரம்மியமான இயற்கை காட்சிகளின் ஊடே அருமையான ஒரு காதல் பாடலை படம்பிடித்த விதம் அருமை.இயற்கையும் இசையும் நம்மை மெய் மறக்கச் செய்யும்.

    ஓ.*ஓ... ஏ... ஆ...

    ஆஹா ஆ... ஹா...*
    எஹேஹேஹே அஹஹாஹா ( இசை )
    ஓஹோ... ஓஹொஹோ ஹோ

    ஏஹே ஏஹே ஏஹே ஏஹே*
    இனியவளே என்று பாடி வந்தேன்

    ம்... ம்... ஆஹா ஹா ஹா ஹா...


    இனியவளே என்று பாடி வந்தேன்
    இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
    இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
    இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

    ஆஹா ஹா ஹா ஹா...
    இனியவனே என்று பாடி வந்தேன்
    இனி அவன் தான் என்று ஆகி விட்டேன்
    ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன் ஆ...
    ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன்*


    ஓராயிரம் காலம் இந்த உள்ளம் ஒன்றாக

    ஒன்றானவர் வாழ்வில் இன்ப வெள்ளம் என்றாக

    துணை தேடி வரும் போது*
    கண்ணில் என்ன நாணமோ

    குணம் நாட்டில் உருவான*
    பெண்மை என்ன தோணுமோ

    திரு நாள் வரும் அதோ பார்

    தருவார் சுகம் இதோ பார்

    திரு நாள் வரும் அதோ பார்

    தருவார் சுகம் இதோ பார்

    பொன் மாலையில்

    பூ மாலையாய்

    நெஞ்சில் சூடவோ

    சூடவோ

    சூடவோ

    இனியவனே என்று பாடி வந்தேன்
    இனி அவன் தான் என்று ஆகி விட்டேன்

    தாலாட்டிடும் நெஞ்சம் தன்னை தங்கம் என்றாளோ

    பாராட்டிடும் இன்பம் தன்னை மங்கை கொண்டாளோ

    நினைத்தாலும் சுகம் தானே இந்த நெஞ்சின் காவியம்

    கொடுத்தாலும் நலம் தானே எனை கொஞ்சும் ஓவியம்

    இதழால் உடல் அளந்தால்

    இவளோ தன்னை மறந்தாள்

    இதழால் உடல் அளந்தால்

    இவளோ தன்னை மறந்தாள்

    ஏன் என்பதை

    நான் சொல்வது

    இன்னும் மௌனமேன்

    மௌனமேன்

    மௌனமேன்

    இனியவளே என்று பாடி வந்தேன்
    இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
    இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

    ஆ... லாலலலா ஓஹொஹொஹோ
    ஒஹொஹோ ஓஹொஹோ...
    ஒஹொஹோ ஓஹொஹோ...

  5. Likes Russellmai, madhu liked this post
  6. #1913
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    பிரேமா பாசம் இனிமே தான் போய் பார்க்கணும் மதுண்ணாவ்.. ஆமா ப்ரேமா யாரு
    வேற யாரு ? நம்ம ஆஷா கேளுண்ணிதான்...

  7. Likes chinnakkannan liked this post
  8. #1914
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    செந்தில்வேல் ஜி...

    இனியவளே பாடல் அன்றும் இன்றும் என்றுமே .... கேட்கும்போது எங்கோ மலைச்சாரலில் இருக்கும் உணர்வைக் கொடுக்கும்.

  9. Likes Russellmai liked this post
  10. #1915
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நான் மதுண்ணாவை வழி மொழிகிறேன் செந்தில்வேல்..அதுல பாருங்கோ உற்சாகத் துள்ளல் இருக்கே அப்படியே பார்ப்பவரிடம் ஒட்டிக் கொண்டு விடும்..ம்ம்

    பாட் போடவேணாம்னு விட்டீங்களா.. ஹிந்தியோட சேர்த்துப் பார்ப்போமா..








    Quote Originally Posted by madhu View Post
    செந்தில்வேல் ஜி...

    இனியவளே பாடல் அன்றும் இன்றும் என்றுமே .... கேட்கும்போது எங்கோ மலைச்சாரலில் இருக்கும் உணர்வைக் கொடுக்கும்.

  11. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  12. #1916
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    konjum mozhi peNgaLukku anjaa nenjam veNumadi
    vanjakarai ethirthidave vaaLum yendha veNumadi
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  13. Likes chinnakkannan liked this post
  14. #1917
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    konjum mozhi peNgaLukku anjaa nenjam veNumadi
    vanjakarai ethirthidave vaaLum yendha veNumadi
    நீலமலைத்திருடன் !!!


  15. Likes Russellmai liked this post
  16. #1918
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கொஞ்சம் பழைய மதுரகானம் முதல் பார்ட் பார்த்துக்கினு இருந்தேனா..விட் போன கேக்காத பாட் இருக்கான்னு பார்த்தேனா..இது சிக்கிச்சு..

    நெய்வேலி அன்பர் நம் நண்பர் வாசுவின் உரையும்...அந்த்த்தப் பாடலும்.....(இதுல வேற எந்தெந்த வெர்ஷன் எந்தெந்த லாங்க்வேஜ்ல இருக்கு..தமிழ் தெலுகு தவிர)

    **

    //ராஜேஷ் சார் இந்தப் பாடலைப் பாருங்கள். பாலாவும், இசையரசியும் பாடுவார்கள்.

    என்.டி.ஆரின் 'சிம்ஹ பாலுடு' படத்தில் அவரும், வாணிஸ்ரீயும் நம் 'வான் நிலா நிலா அல்ல' பாடலை 'ஓ..செலி சலி' என்று பாடுவதைப் பாருங்கள். திரும்ப அது 'சிம்மக் குரல்' என்று தமிழில் 'டப்' செய்யப்பட்டு மூலம் திரும்ப 'ஓர் கனி கனி' என்று நம்மகிட்டேயே எதிரொலித்தது. (நம் கிருஷ்ணா சாருக்கு ரொம்பப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்).

    தெலுங்கில் இசையரசி அற்புதமாகப் பாடியிருக்கிறார். ஸோ.. 'வான் நிலா'வையும் விட்டு வைக்கவில்லை இசையரசி //


  17. Likes rajeshkrv liked this post
  18. #1919
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ச்சின்னதாய் அரும்பாய் வளர்ந்து பின் செடியாகிக் கொடியாகி மலர்ந்து மணம் பரப்பி பின் மரமாகி நெடு நாளிருந்து கிளை பரப்பி பின்ன்ன்ன் இயற்கையாயோ அல்லது செயற்கையாயோ வெட்டப்பட்டு வீழ்ந்து பின் அதே இடத்தில் மறுபடி முளைக்கிறதைப் பார்க்கும் போது என்ன தோன்றும்..

    ஸிம்ப்பிள்..வியப்பு தான்.. இயற்கை சுழற்சி தான் என்றாலுமே கூட அது அதிசயம் தான்.. ஆச்சர்யம் தான்..அதையே வார்த்தையில் எப்படிச் சொல்வது..ம்ம் இருக்கே..தமிழ்ல.. ஆத்தாடி…கிராமிய வார்த்தை தானோ..

    ஆத்தாடி...நேத்துத் தான் பார்த்தா மாதிரி இருக்கு புள்ள ..இம்பூட்டு வளந்துட்ட..என்ன பண்ற..

    போ ஆத்தா..எப்போதும் கிண்டல் பண்ணிகிட்டு..இப்பதான் ப்ளஸ் ஒன்

    அ..

    ஒன் பாஷைல பதினொண்ணாப்பு..

    ஓ..அது சரி புள்ள.. கொஞ்சம் அடக்கமொடுக்கமா இருக்கக்கூடாதாங்காட்டியும்..இதப்பாரு டி.பில இப்படியா டைட்டா உசரத்தப் போடுவ…

    ஒசரம்? ஓ.. டாப்பா…ஆத்தா..சரி..பாட்டீ பேசறது வாட்ஸப்ல..இப்படியா அட்வைஸ் பண்ணனும்.. நா அப்புறம் வாரேன்..

    என்றெல்லாம் உரையாடல் நடந்து கொண்டு தானிருக்கிறது..

    எனில் இந்த ஆச்சர்ய விளி..ஆத்தாடி..எம்பூட்டு பாட்டு இருக்குன்னு பாக்கலாமா.. ஸாரி எத்தனை பாடல்கள் இருக்கின்றன எனப் பார்க்கலாமா

    ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டு தான்
    கூத்தாட தூறல்கள் நீர் விட்டு தான்
    உருகுதோ மருகுதோ
    குழந்தை மனமும் குறும்பு தனமும் இனிமையே
    கொடியிலே அரும்பு தான்
    குளிரும் மழையில் நனையும் போது
    சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
    ஏதேதோ வந்தாச்சோ எண்ணத்திலே

    ம்ம் குதித்துக் குதித்து மழையில் நனைந்து படிப் பாடும் கிரிஜா இதயத்தைத் திருடாதே வில்.. அதற்கப்புறம் படங்களில் நடிக்கவே இல்லியோ..

    ஹப்புறம்..

    ஆத்தாடி இள மனசொன்னு ரெக்கைகட்டி பறப்பது சரிதானா
    அடி அம்மாடி

    ரேகா..கொஞ்சம் ஓரக்கண், கொஞ்சம் தெற்றுப்பல் கொஞ்சம் ஒல்லியான தேகம் இருந்தாலும் முகத்தில் கொஞ்சம் ரஸ்ட் இருக்கும்..துருதுரு இல்லியோ..கடலோரக் கவிதைகள் என நினைவு..
    *

    கொஞ்சம் பூசினாற்போல இருந்த குயிலியின் அழகைக்கண்டு முரளி வியந்து பாடுவதாக வைரமுத்து எழுதியது என்னவாம்

    ஆத்தாடி பாவாடை காத்தாட
    ஆவாரம் பூ நெஞ்சு கூத்தாட
    குளிக்குது ரோஜா நாத்து
    ஹே தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

    அதே குயிலியை வைத்து இளையராஜா என்ன எழுதியிருக்கார்..

    அடி ஆத்தாடி நான் பாட்டாளி ஒன் கூட்டாளி..ம்ம் ஜனகராஜ் பாடறா மாதிரி அமைந்த இந்தப்பாட்டு குயிலியின் கரியர்ல ஒரு டர்னிங்க் பாய்ண்ட்டாக்கும்..இல்லியோ..

    *

    அந்தக் காலத்துல பட்டணம் தான் போகலாமடி ந்னு சீர்காழி கோவிந்தராஜன் பாடினாரோன்னோ..ஜமுனாராணிகிட்ட.. எங்க வீட்டு மஹாலஷ்மில்ல..

    ராத்திரி பகலா ரிக்சா இழுப்பேன் நைஸா பேசி பைசா இழுப்பேன்
    ட்ராமா சினிமா சர்க்கஸ் பார்ப்பேன் ராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்
    வேத்துப் புடுங்கினா பீச்சுக்குப் போவேன் மீந்தப் பணத்திலே மீனு வாங்குவேன்
    ஆத்தாடி உன் கையில குடுப்பேன் ஆக்கச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்

    மேல இதுக்கு மேல சொல்ல மாட்டேண்டி பொம்பள இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி - நான்
    இப்போதே போவணும் உங்கொப்பாவைக் கேட்டு ஏதாச்சும் வாங்கி வாடி

    (ம் அந்தக்காலத்தில் அப்பாவைக்கேட்டு துட்டு வாங்கியா என்பது இந்தக்காலத்தில் இருக்கிறதா என்ன..பெர்ஸண்டேஜ் குறைந்திருக்கும் என்று தான் சொல்லவேண்டும்)

    *

    ஜேசு தாஸூம் உமா ரமணனும் மனைவி சொல்லே மந்திரத்துல மைக் மோகன் குதிரை நளினி மூலமா என்ன சொல்றாங்க..

    ஆத்தாடி அதிசயம்
    பார்த்தாலே பரவசம்
    என் வீட்டில் இந்நேரம்
    எல்லாமே பொன்னாகும்
    இனிமேலும் நகை வேண்டாம்
    என் மேனி என்னாகும்

    ம்ம் பாட்டோட மூவ்மெண்ட்ஸ் பார்த்தா புலியூர் சரோஜா மூவ்மெண்ட்ஸ் போல இருக்கே..



    *

    இந்தக் காதலர்கள் பாருங்க..காதல்னாலே மனசு மயங்கும்..கொஞ்சூண்டு வாழ்க்கை வெறுக்கும் இல்லையோ.. அப்படியே பல கேள்விகள் எழும்பும் தத்துவமாகக் கூட.. என்ன கேக்கறாங்க.. நான் பூவா நீ காத்தா..ம்ம் கேள்வி கேட்கும் நேரமல்ல இதுன்னு வேற பாட்டை கேட்டிருக்க மாட்டாங்க போல..

    காத்தோடு பூ உரச
    பூவை வண்டுரச
    உன்னோடு நான்
    ஆஆஆஆஆஆஆஆ என்னோடு நீ
    பூவாக் காத்தா உரச


    ஆறாதோ தாகம் வந்தா
    ஆசை மோகம் வந்தா
    ஆத்தாடி ஆளாகி நாளாச்சுதோ



    ரஜினிகாந்த் ரத்தி அக்னிஹோத்ரி.. நன்னாத் தான் இருக்கு காம்பினேஷன் இல்லியோ..

    *

    அடி ஆத்தாடி..ஜஸ்ட் லைக் தட் ட்ரை பண்ணா இம்பூட்டு ப் பாட் வந்துடுச்சே.. சரி.. விட்டுப் போன பாட்ஸ் சொல்வீங்க தானே..

    அம்மாடி யும் ஆச்சர்ய விளி தான்..அப்படி வரும் போது பெண் என்பதும் பெண்ணை அழைப்பதும் குறிப்பதும் வந்துவிடும் என நினைக்கிறேன்..அதுபற்றி அப்புறம் சொல்லலாமா..

    பின்ன வாரேன்..

  19. Likes Russellmai liked this post
  20. #1920
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu


    திரையில் மிளிரும் வரிகள் 2: அமுதமும் மோகமுள்ளும்


    தி. ஜானகிராமனின் ‘மோகமுள்' நாவல் திரைப்படமாக்கப்பட்டபோது இளையராஜா இசையமைத்த ‘சொல்லாயோ வாய் திறந்து' என்ற பாடல் பிரிவின் ஏக்கத்தைப் பாடுகிறது. சண்முகப்பிரியாவின் ரசத்தை அப்படியே பிழிந்து கொடுத்துவிட்டார் இசைஞானி. பொதுவாக பக்தியை வெளிப்படுத்தும் பாடலுக்குத்தான் சண்முகப்பிரியாவை எடுத்துக்கொள்வார்கள். அந்த ராகம் பக்தியை வெளிப்படுத்தும் அளவுக்கு இன்னொரு ராகத்தால் முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் நிறைய திரைப்படங்களில் காதல் பாடல்கள் சண்முகப்பிரியாவில் இடம் பெற்றிருக்கின்றன. பக்தியின் ஒரு வெளிப்பாடுதானே காதலும் காமுமும்.

    சொல்லாயோ வாய் திறந்து வார்த்தையொன்று சொல்லாயோ வாய் திறந்து

    நில்லாயோ நேரில் வந்து நான் அழைக்க நில்லாயோ நேரில் வந்து

    ஊஞ்சல் மனம் அன்றாடம் உன்னோடு மன்றாடும் வேளை...

    மனத்தை ஊஞ்சலோடு ஒப்பிடும் பாடல் வரிகள் ஏற்கெனவே ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் இடம் பெற்றது. ‘ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போன்றதடி நாளும் மாறுகின்ற உன் மனம்' என்று தன்னைக் கைவிட்ட கதாநாயகியைச் சாடுகிறான் கதாநாயகன். ஆனால் மோகமுள் கதாநாயகியின் மனமும் கதாநாயகனின் மனமும் ஒருவரை ஒருவர் தாலாட்டவே ஊஞ்சலாய் அலைந்து மன்றாடுகின்றன.

    வாலி எழுதிய இந்தப் பாடலை எஸ். ஜானகியும் மலையாளப் பாடகர் எம்.ஜி. ஸ்ரீகுமாரும் பாடியிருக்கிறார்கள். இளையராஜாவின் ஆஸ்தான புல்லாங்குழல் கலைஞரான அருண்மொழியும் இப்பாடலைப் பாடியிருக்கிறார். ஆனால் திரைப்படத்தில் அது இடம் பெறவில்லை.

    ஆகாய சூரியன் மேற்கினில் சாய

    ஏகாந்த வேளையில் மோகமுள் பாய

    தூண்டிலில் புழுவாக திருமேனி வாட

    தாமதம் இனி ஏனோ இருமேனி கூட

    அந்தி வரும் தென்றல் சுடும் ஓர் விரகம் விரகம் எழும்

    என்று வரும் இன்ப சுகம் ஊன் உருகும் உருகும் தினம்

    நாள் முழுதும் ஓர் பொழுதும் உன் வண்ணங்கள் எண்ணங்கள் நெஞ்சுக்குள் நிறைந்திடும்.

    சொல்லாயோ வாய் திறந்து



    அழகு கொட்டிக் கிடக்கும் இளம் பெண் தங்கம்மாவின் கதறலே இவ்வரிகள். வறுமையின் காரணமாகக் கிழவன் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். கிழவனோ வாயில் சளுவாய் ஒழுக உறங்கிக்கொண்டிருக்கிறான். கதாநாயகன் பாபு ஏற்கெனவே அவளோடு உறவு கொண்டிருந்தாலும், தற்போது அவளைக் கண்டுகொள்ளாமல் விட்டு விலகி நிற்கிறான். அவன் மனமோ யமுனாவை நினைத்து “சொல்லாயோ வாய் திறந்து” எனப் பாடுகிறது.

    ‘மாலையும் வந்தது மாயன் வாரான்' என்கிறார் பராங்குசநாயகியாகத் தன்னை வரித்துக்கொள்ளும் நம்மாழ்வார். பிரிந்திருக்கும் காதலர்களுக்கு வாழ்க்கையின் எல்லா சிறந்த விஷயங்களுமே துயரத்தையே தருகின்றன. மாயன் வராததால் மாலை வந்ததற்கான அறிகுறிகளாக பசுக்களும் காளையும் அணைந்து நடக்கையில் தோன்றும் மணி ஓசையும் குழலோசையும், மல்லிகை முல்லை மலர்களில் தேனுண்ட வண்டுகளில் ரீங்காரமும் கடல் ஓதத்தின் ஒலியும் பாரங்குசநாயகிக்குப் பிறிவாற்றாமையை மேலிடச் செய்கின்றன.

    தங்கம்மாவோ மோகமுள் தைத்துக் கிடக்கிறாள். தூண்டிற் புழுவைப் போல் துடிக்கிறாள். காதலனின் உருவமும் ஞாபகமும் எந்நேரமும் அவள் நினைவில் அப்பிக் கிடக்கின்றன.

    நாள்தோறும் பார்வையில் நான் விடும் தூது.

    கூறாதோ நான் படும் பாடுகள் நூறு.

    நானொரு ஆண்டாளோ திருப்பாவை

    பாட

    ஏழையை விடலாமோ இதுபோல வாட

    வெள்ளிநிற வெண்ணிலவில் வேங்குழலின் இசையும் வரும்

    நள்ளிரவில் மெல்லிசையில் தேன் அலைகள் நினைவில் எழும்

    ஓர் இதயம் உன்னால் எழுதும் இந்நேரத்தில் கண்ணா உன் மவுனத்தை தவிர்த்து

    சொல்லாயோ வாய் திறந்து

    பார்வையால் தூது விட்டு விட்டு ஓய்ந்துபோய், “நானொரு ஆண்டாளோ திருப்பாவை பாட” என்று கேட்கிறாள். கிணற்றில் இருந்து தண்ணீரை இரைத்துத் தன் மேல் ஊற்றிக்கொண்டு காமத்தைத் தணிக்கப்பார்க்கிறாள். கடைசியில் ஊர்க்குளத்தில் அவள் உடல் மிதக்கிறது. அம்பின் வாய் பட்டுத் துடிப்பவர்களைப் போல் காதல் அதன் வயப்பட்டவர்களை வதைக்கிறது. இந்த வேதனை ஆண்டாளுக்கும் உண்டு. அவள் வாயாலே இப்படிக் கூறுகிறாள்:

    ஆரே உலகத் தாற்றுவார் ஆயர்பாடி கவர்ந்துண்ணும்

    காரேறுழக்க வுழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும்

    கிடப்பேனை

    ஆராவமுத மனையான் தன் அமுத வாயிலூறிய

    நீர்தான்

    கொணர்ந்து புலராமே பருக்கி யிளைப்பை

    நீக்கிரே

    ஆயர்பாடி முழுவதும் கொள்ளைகொண்டு அனுபவிக்கிற கறுத்த எருது போன்ற கண்ணன் மீது காதல் கொண்டு துன்பப்பட்டுக் கிடப்பதாகப் புலம்புகிறாள் ஆண்டாள். ஏங்கி ஏங்கித் தளர்ந்து முறிந்து கிடக்கும் அவள் இடும்பையைத் தீர்க்க யார் இருக்கிறார்கள்? அதனால் அவளே அதற்கான மருந்தையும் சொல்கிறாள். உண்ண உண்ணத் திகட்டாத அமுதமாகிய ஆராவமுதனின் வாயில் ஊறிய அமுதத்தை எடுத்து வந்து, அது உலர்வதற்கு முன்னதாகவே கொண்டு வந்து பருகக் கொடுத்தால் அவளுடைய வலி அகலுமாம்.

    ஒருவேளை கண்ணன் வாயமுது கிடைக்கவில்லையென்றால் அவன் ஊதும் வேய்ங்குழலின் துளையில் ஒழுகும் நீரைக் கொண்டுவந்தாவது முகத்தில் தெளியுங்கள் என்கிறாள் இன்னொரு பாசுரத்தில்.

    ஒருவேளை ஆண்டாள் போல் தங்கம்மாவும் திருவாய்மொழியோ நாச்சியார் திருமொழியோ திருப்பாவையோ பாடியிருந்தால் அவளுக்கு பாபு கிடைத்திருப்பானோ?

  21. Likes madhu, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •